36-ஆவது சர்க்கம்
அனுமனுக்கு வரம் தருதல் தனது மகன் இறந்துபோனதால் துயரத் திலிருந்த வாயுதேவன், தன்னை நோக்கிவந்த பிரம்மதேவரைக் கண்டதும் குழந்தையை எடுத்துக்கொண்டு அவரெதிரில் போய் நின்றான். அவருடைய காதுகளில் குண்டலங் கள் அசைந்துகொண்டிருந்தன. தலையில் மகுடம், கழுத்தில் மாலைகள், பொன் அணிகலன்கள் அழகுசெய்தன.
வாயுதேவன் பிரம்மதேவரின் திருவடி களில் மூன்றுமுறை வணங்கி எழுந்தான். வேத வித்தகரான பிரம்மா தனது நீண்ட கரங்களால் வாயுதேவனைத் தூக்கி நிறுத்தி னார். குழந்தையைத் தன் கரங்களால் தடவிக் கொடுத்தார். தாமரையில் பிறந்தவரான அவர் மென்மையாகத் தொட்டவுடனேயே, காய்ந்துபோன பயிரானது தண்ணீர் வார்த்தவுடன் பசுமைபெறுவதுபோல, அந்தக் குழந்தை மீண்டும் உயிர்பெற்றது.
அதுகண்டு வாயுதேவன் மிகவும் மகிழ்ந்து, எல்லா உயிர்களுக்குள்ளும் அடக்கிவைக்கப் பட்டிருந்த உயிர்மூச்சை விடுவித்து உள்ளும் புறமும் இயங்கச் செய்தான். உள்ளேயே அடை பட்டுக் கிடந்த வாயு விடுபட்டவுடன், குளிர் காற்று தாக்குதலி-ருந்து விடுபட்டு மலர்ந்த தாமரைகள் நிறைந்த நீர்நிலைபோல உயிர்ப் பிராணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தன.
அப்போது செல்வச்செழிப்பு, அறம், புகழ், மேன்மை, அறிவு, வைராக்கியம் ஆகிய ஆறுவித மகிமை பொருந்தியவரும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களின் வடிவானவரும், மூன்று உலகங்களையும் இருப்பிடமாகக் கொண்டுள்ளவரும், குழந்தைப் பருவம், இளமை, வாலிபம் என மூன்றுவித வளர்ச்சி நிலையையேடைய தேவர்களால் வணங்கப்படுபவருமான பிரம்மதேவர் வாயுவுக்கு நலம்புரியும் நோக்குடன் தேவர்களைப் பார்த்துக் கூறலா னார்.
"இந்திரன், பரம சிவன், வருணன், எமன், குபேரன் ஆகியோரே! உங்களுக்கெல்லாம் தெரியும். என்றாலும் அனைத்து விஷயங்களையும் சொல்கிறேன்; கேளுங்கள். இந்தக் குழந்தை யின்மூலம் எதிர்காலத்தில் பல நன்மைகள் ஏற்படவிருக்கின்றன. எனவே நீங்கள் அனைவரும் வாயுவின் திருப்திக்காக இந்தக் குழந்தைக்கு வரம் தாருங்கள்.''
அப்போது ஆயிரம் கண்கள் உடையவனும் அழகிய திருமுகம் உடையவனுமாகிய இந்திரன் மனமகிழ்ந்து, ஒரு தாமரை மாலையை அணிவித்துவிட்டுக் கூறலானான்:
"எனது கரத்தினால் ஏவப்பட்ட வஜ்ராயுதத் தால் இவனுடைய ஹனு (முகவாய்) சேதப்படுத்தப்பட்டது. இந்த வானரப் புலி இனி அனுமன் என்று பெயர் பெறுவான்.
இவனுக்கு அற்புதமான உயர்ந்த வரமொன் றையும் தருகிறேன். இனி என்னுடைய வஜ்ராயுதம் தாக்கினாலும் இவன் உயிரிழக்க மாட்டான்.''
அடுத்து இருளைப் போக்கும் சூரிய பகவான், "எனது ஒளியில் நூற்றில் ஒரு பங்கை இவனுக்களிக்கிறேன். இவன் அறநூல் களைப் படிக்கும் வளர்ச்சிபெற்றவுடன் நானே இவனுக்கு சாஸ்திர அறிவைக் கொடுக்கிறேன். அதனால் இவன் சிறந்த பேச்சுத்திறனுடைய வனாகத் திகழ்வான். சாஸ்திர ஞானத் தில் இவனுக்கு ஈடாக வேறெவரும் இருக்க மாட்டார்கள்'' என்றார்.
அடுத்து வருணன், "பத்து லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தபிறகும் என்னுடைய பாசத்தினாலோ தண்ணீராலோ இவனுக்கு மரணம் நேராது'' என்றார்.
எமன், "எனது தண்டத்தின் தாக்குதலால் இவனது உயிர் போகாது; எப்போதும் நோயில்லாதவனாக இருப்பான்'' என்னும் வரத்தைக் கொடுத்தார்.
பிங்கள வண்ணமான ஒரு கண்ணையு டை
36-ஆவது சர்க்கம்
அனுமனுக்கு வரம் தருதல் தனது மகன் இறந்துபோனதால் துயரத் திலிருந்த வாயுதேவன், தன்னை நோக்கிவந்த பிரம்மதேவரைக் கண்டதும் குழந்தையை எடுத்துக்கொண்டு அவரெதிரில் போய் நின்றான். அவருடைய காதுகளில் குண்டலங் கள் அசைந்துகொண்டிருந்தன. தலையில் மகுடம், கழுத்தில் மாலைகள், பொன் அணிகலன்கள் அழகுசெய்தன.
வாயுதேவன் பிரம்மதேவரின் திருவடி களில் மூன்றுமுறை வணங்கி எழுந்தான். வேத வித்தகரான பிரம்மா தனது நீண்ட கரங்களால் வாயுதேவனைத் தூக்கி நிறுத்தி னார். குழந்தையைத் தன் கரங்களால் தடவிக் கொடுத்தார். தாமரையில் பிறந்தவரான அவர் மென்மையாகத் தொட்டவுடனேயே, காய்ந்துபோன பயிரானது தண்ணீர் வார்த்தவுடன் பசுமைபெறுவதுபோல, அந்தக் குழந்தை மீண்டும் உயிர்பெற்றது.
அதுகண்டு வாயுதேவன் மிகவும் மகிழ்ந்து, எல்லா உயிர்களுக்குள்ளும் அடக்கிவைக்கப் பட்டிருந்த உயிர்மூச்சை விடுவித்து உள்ளும் புறமும் இயங்கச் செய்தான். உள்ளேயே அடை பட்டுக் கிடந்த வாயு விடுபட்டவுடன், குளிர் காற்று தாக்குதலி-ருந்து விடுபட்டு மலர்ந்த தாமரைகள் நிறைந்த நீர்நிலைபோல உயிர்ப் பிராணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தன.
அப்போது செல்வச்செழிப்பு, அறம், புகழ், மேன்மை, அறிவு, வைராக்கியம் ஆகிய ஆறுவித மகிமை பொருந்தியவரும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களின் வடிவானவரும், மூன்று உலகங்களையும் இருப்பிடமாகக் கொண்டுள்ளவரும், குழந்தைப் பருவம், இளமை, வாலிபம் என மூன்றுவித வளர்ச்சி நிலையையேடைய தேவர்களால் வணங்கப்படுபவருமான பிரம்மதேவர் வாயுவுக்கு நலம்புரியும் நோக்குடன் தேவர்களைப் பார்த்துக் கூறலா னார்.
"இந்திரன், பரம சிவன், வருணன், எமன், குபேரன் ஆகியோரே! உங்களுக்கெல்லாம் தெரியும். என்றாலும் அனைத்து விஷயங்களையும் சொல்கிறேன்; கேளுங்கள். இந்தக் குழந்தை யின்மூலம் எதிர்காலத்தில் பல நன்மைகள் ஏற்படவிருக்கின்றன. எனவே நீங்கள் அனைவரும் வாயுவின் திருப்திக்காக இந்தக் குழந்தைக்கு வரம் தாருங்கள்.''
அப்போது ஆயிரம் கண்கள் உடையவனும் அழகிய திருமுகம் உடையவனுமாகிய இந்திரன் மனமகிழ்ந்து, ஒரு தாமரை மாலையை அணிவித்துவிட்டுக் கூறலானான்:
"எனது கரத்தினால் ஏவப்பட்ட வஜ்ராயுதத் தால் இவனுடைய ஹனு (முகவாய்) சேதப்படுத்தப்பட்டது. இந்த வானரப் புலி இனி அனுமன் என்று பெயர் பெறுவான்.
இவனுக்கு அற்புதமான உயர்ந்த வரமொன் றையும் தருகிறேன். இனி என்னுடைய வஜ்ராயுதம் தாக்கினாலும் இவன் உயிரிழக்க மாட்டான்.''
அடுத்து இருளைப் போக்கும் சூரிய பகவான், "எனது ஒளியில் நூற்றில் ஒரு பங்கை இவனுக்களிக்கிறேன். இவன் அறநூல் களைப் படிக்கும் வளர்ச்சிபெற்றவுடன் நானே இவனுக்கு சாஸ்திர அறிவைக் கொடுக்கிறேன். அதனால் இவன் சிறந்த பேச்சுத்திறனுடைய வனாகத் திகழ்வான். சாஸ்திர ஞானத் தில் இவனுக்கு ஈடாக வேறெவரும் இருக்க மாட்டார்கள்'' என்றார்.
அடுத்து வருணன், "பத்து லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தபிறகும் என்னுடைய பாசத்தினாலோ தண்ணீராலோ இவனுக்கு மரணம் நேராது'' என்றார்.
எமன், "எனது தண்டத்தின் தாக்குதலால் இவனது உயிர் போகாது; எப்போதும் நோயில்லாதவனாக இருப்பான்'' என்னும் வரத்தைக் கொடுத்தார்.
பிங்கள வண்ணமான ஒரு கண்ணையு டைய குபேரன், "நான் மகிழ்ச்சியுடன் இந்த வரத்தைத் தருகிறேன். போர் புரியும்போது இவனுக்கு ஒருக்காலும் சோகம் ஏற்படாது. என்னுடைய கதாயுதம் இவனை வதைக்காது'' என்று வரமருளினார்.
"என்னாலோ எனது ஆயுதங்களாலோ இவன் கொல்லப்படமாட்டான்'' என்னும் மிக உயர்ந்த வரத்தை பரமேஸ்வரன் அருளி னார்.
"எல்லாவிதமான பிரம்மாஸ்திரங்களாலும் இவன் கொல்லப்படமாட்டான். மேலும் பேருள்ளம் கொண்டவனாகவும் நீண்டகாலம் வாழ்பவனாகவும் இருப்பான்'' என்று பிரம்மா கூறினார்.
பாலசூரியன்போல செவ்வண்ணத்துடன் விளங்கும் குழந்தையைப் பார்த்து தலைசிறந்த சிற்பியான விஸ்வகர்மா, "போர்க்களத்தில் என்னால் உருவாக்கப்பட்ட தெய்வீக ஆற்றல் கொண்ட சஸ்திரங்களால் இவன் கொல்லப் படமாட்டான். நெடுங்காலம் வாழ்வான்'' என்றார்.
இவ்வாறு குழந்தைக்கு தேவர்கள் ஏராளமான வரங்களைக் கொடுத்ததும், உலக நாயகரான நான்முகன் மகிழ்ச்சியடைந்து வாயுதேவனைப் பார்த்து, "உன்னுடைய மகன் நண்பர் அல்லாதவர் களுக்கு அச்சம் தருபவனாகவும், நண்பர்களின் அச்சத்தைப் போக்குபவனாகவும், போரில் எவராலும் வெல்லமுடியாதவனாகவும் இருப்பான். விருப்பம்போல் உருவமெடுத்து, விரும்பும் இடங்களுக்கு விருப்பமான வேகத்தில் செல்லக்கூடியவனாகவும் இருப்பான். இவனை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இவன் பெரும் புகழை அடையப் போகிறான். இவன் போர்க்களத்தில் இராவணனைக் கொல்வதற்காக இராம னுக்கு திருப்தியை அளிக்கக்கூடியவனாக வும், சிலிர்ப்பை உண்டாக்கும் அற்புதச் செயல்களைச் செய்யக்கூடியவனாகவும் விளங்குவான்'' என்று கூறினார்.
அதன்பின்னர் வாயுதேவனிடம் அனுமதிபெற்று பிரம்மா முதலிய அனைத்து தேவர்களும் திரும்பிச் சென்றனர். வாயுதேவன் தன் குழந்தையை எடுத்துக்கொண்டு இல்லத்திற்கு வந்து அஞ்சனாதேவியிடம் கொடுத்து, அவன்பெற்ற வரங்களைப்பற்றி கூறி விட்டுச் சென்றுவிட்டார்.
(அகத்தியர் இராமருக்குக் கூறி வருகிறார்.)
"இராமா, இவன் பலவித வரங்களைப் பெற்றும், தன்னிடம் இயல்பாக அமைந் திருந்த வலிமையினால், நிறைவடைந்து முழுமையாக விளங்கும் கடல்போல திகழ்ந்தான். ஆற்றல் நிரம்பிய அவன் முனிவர்களின் குடிலுக்குள் அச்சமில்லாமல் புகுந்து அவர்களுக்குத் தொல்லைகொடுக்கத் தொடங்கினான்.
அமைதியான குணம்கொண்ட அவர் களது குடில்களிலிருந்த வேள்விக் கரண்டிகள், அக்னிஹோத்ரம், மரவுரி, மான்தோல் போன்றவற்றை சேதப்படுத்தி அழித்தான்.
பெரும்பலம் பெற்றவனான அவன் இதுபோன்ற தொல்லைகளை செய்து கொண்டே இருந்தான். எந்தவகையான பிராமண சாபங்களாலும் இவனுக்கு அழிவு ஏற்படாது என்று பிரம்மா வரம் கொடுத்திருந்ததை அறிந்ததால், அவனுடைய எல்லையற்ற சக்தி யைத் தெரிந்துகொண்ட முனிவர்கள் அவனது குற்றங்களைப் பொறுத்துக் கொண்டிருந்தார்கள்.
கேசரியும் வாயுதேவனும் அஞ்சனை மகனான இவனுக்கு நல்லுரைகூறி தடுக்க முயன்றபோதிலும், இவன் அவர்கள் சொல்லை எப்போதும் மதித்ததில்லை. பிருகு, ஆங்கிரச முனிவர்களின் பரம்பரையில் தோன்றிய மாமுனிவர்கள் கோபம் கொண்டார்கள். என்றாலும் அந்த கோபத் தையும் வெறுப்பையும் வெளிக்காட்டாமல் சாபம் கொடுத்தார்கள்.
"தேவதைகள் கொடுத்த வரம் மற்றும் உனது இயல்பான உடல்வலிமையின் காரண மாக எங்களுக்கு இன்னல் விளைவிக்கிறாய். எங்கள் சாபத்தினால் உனது அறிவு மயங்கி நீண்டகாலம் உன் சக்தியை மறந்திருப்பாய். பின் வேறொருவர் உன் பெருமைகளை வெளிப்படுத்தி நினைவூட்டும்போது உன்னுடைய ஆற்றல் பெருகும்' என்று கூறினர். இவ்வாறு மாமுனிவர்கள் கூறியதன் விளைவாக அறிவும் ஆற்றலும் அடங்கிப்போன அனுமன், முனிவர்களின் ஆசிரமங்களில் அமைதியுடன் சென்றுவரத் தொடங்கினான்.
வாலி, சுக்ரீவனின் தந்தை ரிக்ஷரஜஸ் என்பவன் எல்லா வானரங்களும் மன்னனாக இருந்தான். அவன் சூரியனுக்கு நிகரான தேஜஸ் கொண்டவன். அவன் நீண்டகாலம் வானரங்களின் அரசனாக அரசு செலுத்தினான்.
பின்னர் அவன் மரணமடைந்ததும், அரசு நிர்வாகத்தில் சிறந்தவர்களான அமைச்சர்களால் தந்தையின் இடத்தில் மன்னனாக வாலி நியமிக்கப்பட்டான். சுக்ரீவன் இளவரசு பட்டத்தை அடைந்தான்.
அக்னிக்கும் வாயுவுக்குமிடையே இயற்கை யாகவே நட்புறவு அமைந்திருப்பதைப்போல சுக்ரீவன், அனுமன் ஆகியோரிடையே குழந்தைப் பருவம் முதலே நட்பு இருந்து வந்தது. சிறிதும் மன வேற்றுமையில்லாமல் இருந்தனர்.
இராமா, பிறகு வாலி, சுக்ரீவனுக்கிடையே பகைமை தோன்றியபோது, சாபத்தின் காரணமாக அனுமன் தன் பேராற்றலை அறிந்துகொள்ளவில்லை. சுக்ரீவன் வாலியி னால் துரத்தப்பட்டு சுற்றியலைந்தபோது, அவனுக்கு அனுமனின் பேராற்றல் நினைவுக்கு வரவில்லை. அனுமனுக்கும் தன் ஆற்றலைப் பற்றிய ஞாபகமில்லை. முனிவர்களின் சாபத்தால் தன் ஆற்றலையறியாமல் போனதால் வாலி, சுக்ரீவன் ஆகியோருக்கிடையே போர் நிகழ்ந்தபோது கூண்டில் அடைபட்ட சிங்கம்போல சோர்ந்து நின்றான் அனுமன்.
பராக்கிரமம், ஆர்வம், அறிவு, பிரதாபம், நற்பண்பு, வாக்கில் இனிமை, அரசு நிர்வாகம், பெருமிதம், திறமை, மனவுறுதி, ஆபத்தில் கலங்காத திண்மை போன்றவை இவ்வுலகில் அனுமனைக் காட்டிலும் வேறெவரிடமும் அதிகமாக இல்லை.
நிகரற்ற வலிமைகொண்ட இவன் இதை மறுபடியும் கண்டறியவேண்டும் என்னும் விருப்பத்துடன் சூரியனுக்கு எதிரில் அவரைப் பார்த்து பின்பக்கமாகவே, உதயகிரிலிருந்து அஸ்தமனகிரிவரை நூலைக் கையினால் ஏந்தியபடி சென்றான்.
இவன் சூத்திரம், விருத்தி, வார்த்திகம், மகாபாஷ்யம், சங்க்ரஹம் ஆகிய எல்லாவற்றையும் நன்றாகக் கற்றறிந்துள்ளான். மற்ற அறநூல்கள் ஆகியவற்றிலும் இவனுக்கு நிகரான புலமை பெற்றவர் எவருமில்லை. அனைத்து கலைஞானத்திலும், தவத்தை அனுஷ்டிப்பதிலும் தேவகுருவான பிரகஸ்பதியுடன் போட்டியிடும் அளவுக்கு உள்ளான். பொருளறிந்த இவன் உன்னருளினால் பிரம்மாவைப்போல மரியாதைக்கு உரியவனாகிறான்.
ஊழிக்காலத்தில் உலகம் முழுவதையும் தண்ணீரில் மூழ்கச் செய்வதற்காக கரை கடந்து பாயும் பெருங்கடல், உலகத்தையே எரிப்பதற்காக எழுந்துள்ள நெருப்பு, உயிரினங் களின் உயிரைப் பறிப்பதற்கு முனைந்துள்ள காலதேவன் போன்றவர்களுக்கு நிகரான அனுமனை எதிர்த்துநிற்க எவரால்தான் முடியும்?
இராமனே, இவனும் இவனைப்போன்று மகாவீரம் படைத்த வானர்களான சுக்ரீவன், மைந்தன், த்விவிதன், நீலன், தாரன், ரம்பன், அங்கதன், நளன் ஆகியோரும் உனக்கு உதவி செய்வதற்காகவே தேவர்களால் படைக்கப் பட்டார்கள்.
நீங்கள் என்னைக் கேட்ட எல்லா விஷயங் களையும் கூறிவிட்டேன். அனுமனுடைய இளவயதில் நடந்த நிகழ்ச்சிகளையும் கூறிவிட்டேன்'' என்றார்.
லட்சுமணனும் இராமனும் மற்றுமுள்ள வானரர், அரக்கர்களும் அகத்தியர் கூறியதைக் கேட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தார்கள்.
பின்னர் அகத்தியர், "இராமபிரானே, உங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை விரிவாகக் கூறிவிட்டேன். முனிவர்களாகிய எங்களுக்கு உங்கள் தரிசனமும், உங்களுடன் உரையாடும் நல்வாய்ப்பும் கிடைத்தன. நாங்கள் இப்போது புறப்படுகிறோம்'' என்றார்.
அகத்தியர் இவ்வாறு கூறியதைக்கேட்ட இராமபிரான் கைகளைக் கூப்பி பணிவுடன் மாமுனிவரிடம், இன்றுதான் தெய்வங்களும் பிதுரர்களும் பாட்டனார்களும் என்னிடம் தனியே அன்பு கொண்டுள்ளார்கள். தங்களைப்போன்ற மகாத்மாக்கள் தரிசனத் தினாலேயே நாங்களும் உறவினர்களும் மகிழ்ச்சியாக எப்போதும் இருக்கிறோம்.
என் மனதில் ஓர் ஆசை தோன்றியிருக்கிறது. அதைத் தங்களிடம் கூறுகிறேன். தாங்கள் அருள்கூர்ந்து அதை நிறைவேற்றித் தர வேண்டும். நகர மக்களையும் புறநகரில் உள்ள மக்களையும் அவரவர் கடமைகளில் நிலைநிறுத்திவிட்டு, தங்களைப்போன்ற சான்றோர்களின் அருளால் பல வேள்விகள் செய்யவேண்டும். அவற்றில் உங்களைப் போன்ற தவ வலிமைமிக்க மேலோர் எனக்கு அருள்புரிவதாக எப்போதும் இருக்கவேண்டும். தாங்கள் தவம்செய்து மாசற்றவராக விளங்குகிறீர்கள். உங்களை அண்டிநின்று எப்போதும் மகிழ்ச்சி கொண்டவனாகவும் முன்னோர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் ஆவேன். வேள்வியின் தொடக்ககாலத்தில் நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி இங்கேவர வேண்டும்'' எனக் கூறினார்.
கடுமையான நியமங்களைக் கடைப் பிடிக்கும் அகத்தியர் முதலான மாமுனிவர்கள், "அவ்வாறே ஆகட்டும்'' என்று கூறி புறப் பட்டனர். இவ்வாறு முனிவர்கள் அனைவரும் வந்தவழியே திரும்பிச் சென்றனர். இராமபிரான் அகத்தியர் கூறிய வரலாற்றை எண்ணிப் பார்த்து வியப்படைந்தார். சூரியன் மறைந்ததும் கூடியிருந்த அரசர்களையும் வானரர்களையும் அனுப்பிவிட்டு, புருஷோத்தமரான இராமன் முறைப்படி அந்திமக் கடமைகளைச் செய்தார். இரவு வந்ததும் அந்தப்புரத்துள் நுழைந்தார்.
37-ஆவது சர்க்கம்
அரச சபையில் இராமன் காகுத்த வம்சத்தில் தோன்றிய ஆத்ம ஞானியான இராமனுக்கு முறைப்படி முடிசுட்டுவிழா முடிந்ததும், நகர மக்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும் அந்த முதலாவது இரவானது நல்லவிதமாகக் கழிந்தது. காலை விடிந்ததும் இராமபிரானைத் துயிலெழச் செய்வதற்காக பாடகர்கள் அரண்மனையில் கூடினர். அவர்கள் அனைவரும் இனிமையான குரல்வளம் கொண்டவர்கள். தேவலோகப் பாடகர்களான கின்னரர்கள்போல முதன்மை யான இசை வல்லுநர்கள். அவர்கள் மிகவும் மகிழ்வுடன் மன்னரை வழக்கமான முறையில் இசையால் ஆனந்தம்கொள்ளச் செய்தார்கள்.
"வீரரே, ஆணழகரே, கௌசல்யாவுக்கு ஆனந்தத்தை வளர்ப்பவரே, அருள்கூர்ந்து கண் விழிப்பீராக! மன்னரே, தாங்கள் உறங்கினால் இந்த உலகமே உறக்கத்தில் ஆழ்ந்துவிடும்.
தங்களுடைய வீரம் மகாவிஷ்ணுவைப் போன்றது. அஸ்வினி தேவர்களைப்போல பேரழகு, அறிவில் தேவகுரு, பிரகஸ்பதிக்கு நிகரானவர், குடிமக்களைக் காப்பதில் பிரம்மதேவர், பொறுமையில் பூமி போன்றவர், ஒளியில் சூரியன் போன்றவர், வேகத்தில் வாயு பகவான், பெருமிதத் தோற்றத்தில் பெருங்கடல் போன்றவர்.
மாமன்னரே, போர்க்களத்தில் பரமசிவன் போல சலிக்காமல் தூண்போல உறுதியாக நிற்பவர். தங்களிடமுள்ள குளிர்ச்சியான பேரழகு சந்திரனிடம் மட்டுமே இருக்கிறது. தங்களைப்போன்ற மிகச்சிறந்த மன்னர் இதற்கு முன்பும் இருந்ததில்லை; இனி இருக்கப் போவதுமில்லை. ஆண்மக்களில் சிறந்தவரே, போரில் எவராலும் வெல்ல முடியாதவரே, நீங்கள் எப்போதும் அறநெறியில் நிற்பவர். மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். அதனால் செல்வச் செழிப்பும் புகழும் தங்களைவிட்டு அகலப் போவதே இல்லை. திருமகளும் அறக்கடவுளும் தங்களிடம் நிரந்தரமாக இருக்கிறார்கள்.''
இவ்வாறு அவரது குணநலன்களைப் பாடல்கள்மூலம் இசையில் எடுத்துக் கூறினார்கள்.
பாணர்கள், சிறந்த பாடல்களால் இராகவ னைக் கண்மலரச் செய்தனர். அவர்கள் பாடிய துதிகளைக் கேட்டவண்ணம் இராம பிரான் கண்விழித்தார்.
ஸ்ரீ ஹரியான நாராயணன் பாம்பணை யிலிருந்து எழுந்திருப்பதுபோல வெண்ணிற விரிப்பு போடப்பட்டிருந்த படுக்கையிலிருந்து எழுந்து நின்றார். அவர் எழுந்துவிட்டதைக் கண்ட ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பாத்திரங்களில் தூய்மையான நீரை வைத்துக்கொண்டு வணக்கத்துடன் காத்து நின்றனர். நீராடி, உடல் தூய்மை பெற்று, உரிய காலத்தில் மூன்று அக்னிகளிலும் ஆகுதி கொடுத்துவிட்டு, இக்ஷ்வாகு பரம்பரை வணங்கும் புனிதமான ஆலயத்திற்கு விரைந்து எழுந்தருளினார்.
அங்கு தேவதைகளையும் முன்னோர்களை யும் வேத வித்தகர்களையும் அவரவர்க் குரிய முறைப்படி பூஜித்துவிட்டு, ஏராள மான பணியாளர்கள் புடைசூழ வெளி மண்டபத்திற்குச் சென்றார். அங்கு கொழுந்து விட்டெரியும் நெருப்புபோல ஜொலிக் கும் வசிஷ்டர் முதலான புரோகிதர்கள், அறிவாற்றல் மிக்க அமைச்சர்கள் கூடியிருந்தனர். பின்னர் தேவேந்திரனின் அருகில் தேவர்கள் சூழ்ந்து அமர்வதுபோல, பேராற்றல் கொண்ட க்ஷத்திரியர்களும் பல நிலைகளிலுள்ள மக்கள் தலைவர்களும் இராமரின் அருகில் அமர்ந்துகொண்டனர்.
வேள்விச் சாலையில் மூன்று வேதங்களும் சிறப்பாக விளங்குவதுபோல, புகழ்மிக்க பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகிய மூவரும் முகமலர்ச்சியுடன் இராமரின் ஆணையை எதிர்பார்த்து நின்றார்கள்.
அப்போது எப்போதும் மலர்ந்த முகம் கொண்ட முதிதா என்னும் பெயருடைய பல பணியாளர்கள் அங்குவந்து இராமபிரானின் அருகில் அமர்ந்தார்கள்.
பின்னர், எல்லையற்ற ஆற்றலும் ஆண்மையும் பெற்றவர்களும், விருப்பம்போல் உருவமெடுக்கக் கூடியவர்களுமான சுக்ரீவன் முதலான இருபது வானரத் தலைவர்கள் அங்குவந்து அமர்ந்தனர்.
குபேரனிடம் குஹ்யர்கள் பணிந்து நிற்பதைப்போல நான்கு அரக்கர்கள் சூழ்ந்து நிற்க விபீஷணன் பணிவுடன் வந்தமர்ந்தான்.
நற்குலத்தில் பிறந்தவர்களும், நீதி நூல்களை ஐயந்திரிபறக் கற்றவர்களுமான அறிஞர்கள் தலைதாழ்த்தி மன்னரை வணங்கிவிட்டு அமர்ந்தனர்.
தேவேந்திரன் எப்போதும் மாமுனிவர் களால் சூழப்பட்டிருப்பதைப்போல, தவச் செல்வர்களான முனிவர்களாலும் பேராற்றல்கொண்ட அரசர்கள், வானரர்கள், அரக்கர்களாலும் சூழப்பெற்ற சபா மண்டபத்தில் வீற்றிருந்த ராஜாராமன், இந்திரனைவிட அதிகமாக பிரகாசித்தார். அனைத்து மக்களும் வசதியாக தங்களுக்குரிய இடங்களில் அமர்ந்துகொண்டதும், புராணங்களைக் கற்றறிந்த பெரியவர்கள் தர்ம விளக்கமான இனிய கதைகளை எடுத்துக் கூறத் தொடங்கினார்கள்.
(தொடரும்)