வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயண உத்தரகாண்டம்!(37) தொகுப்பு: மலரோன்

/idhalgal/om/srimad-ramayana-uttarakhandam-by-valmiki-maharishi37-compilation-malaron

100-ஆவது சர்க்கம்

பரதன், கந்தர்வ நாட்டின்மீது படையெடுத்தல்

இவ்வாறு, காலம் சென்று கொண்டிருக்கும்போது. ஒருசமயம், கேகய நாட்டின் மன்னன் யுதாஜித், பேரரசர் இராமனிடம் தன் ஆசார்யரை அனுப்பிவைத்தார்.

ஆசார்யர் கார்க்யர், அங்கிரசின் புதல்வர்; பிரம்மரிஷி, தேசு மிக்கவர் இராமபிரானிடம் தனக்கிருந்த பேரன்பை வெளிக்காட்டும் வகையில், பத்தாயிரம் குதிரைகள், சால்வைகள், இரத்தினங்கள், அழகிய வேலைப்பாடமைந்த ஆடைகள், கண்கவர் அணிகலன்கள் முதலியவற்றையும் ஆசார்யர்மூலம் அனுப்பிவைத்தார் யுதாஜித்.

பேரறிஞரான இராமன், மாமன் அசுவபதியின் குமாரரான யுதாஜித்தால் அனுப்பப்பெற்ற கார்க்யர், கணக்கில்லாத அன்புக் காணிக்கைகளுடன் வந்து கொண்டி ருக்கிறார் என்பதைக்கேட்டதும், தன் சகோதரர்களுடன்கூட அயோத்தி யிலிருந்து ஒரு கோச தூரம் முன்னே சென்று, பிருஹஸ்பதியை இந்திரன் கோலாகலமாக வரவேற்பதைப் போன்று, மாமுனிவர் கார்க்கியரை விமரிசையாக வரவேற்றார்.

முனிவரைத் தக்க முறையில் கௌரவித்து, அவர் அளித்த அன்புக் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு, மாமனுடைய குடும்பத்தினரின் நல்வாழ்வு பற்றி விசாரித்துவிட்டு, தக்கதொரு ஆசனத்தில் அமர்ந்துகொண்ட மாமுனிவரை நோக்கி, இராமன் கேட்கத் தொடங்கினார். "சிறந்த முறையில் பேசுவதற்கு, சாட்சாத் பிருஹஸ்பதி போன்றவர் தாங்கள். தேவரீரிடம் மாமா என்ன செய்தி சொல்லியனுப்பி இருக்கிறார்?''

இராமன் கேட்டதும், மாமுனிவர் வினோதமான ஒரு செயலைப் பற்றி, இராமனிடம் விளக்கமாகச் கூறத்தொடங்கினார்.

"தோள்வலி மிக்கவரே! மன்னரே!

உங்களுடைய மாமன் யுதாஜித் பேரன்புடன் சொல்லியனுப்பியதை, நீங்கள் விரும்பினால் கேட்கலாம்.

(அவர் சொல்லியனுப்பிய செய்தி) கந்தர்வர்களுடைய நாட்டில் கனி- கிழங்குகள் ஏராளம்; சிந்து நதியின் இரு கரைகளையும் ஒட்டியுள்ள நாடு; மிகவும் வளமானது.

(நமது நாட்டை ஒட்டினாற்போல் இருக்கிறது.)

வீரரே! கந்தர்வ மன்னன் சைலூஷனுடைய குமாரர்கள் மூன்று கோடிப் பேர்கள்; மகா பலசாலிகள்; போர்க் கலையில் வல்லவர்கள்; ஆயுதம் தரித்தவர் கள். இவர்கள் அந்த நாட்டைப் பாதுகாத்து வருகிறார்கள்.

காகுத்தரே! அவர்களை வென்று அழகான கந்தர்வ நகரத்தை உங்கள் வசப்படுத்திக் கொண்டு, அதில் எழுந்தருள்வீராக.

மிகவும் பாதுகாப்புடன் விளங்கும் அந்த நாட்டிற்குள், தங்களைத் தவிர வேறு எவராலும் உள்ளே செல்லமுடியாது. பெருந்தோளரே! இதுபற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நான், உங்களுக்குப் பாதகமான யோசனையைக் கூறமாட்டேன்.''

இராமன் அதைக்கேட்டு, முனிவர்- மன்னர் செய்தியால் உவகையடைந்து, "அவ்வாறே செய்யலாம்'' என்று பதில் கூறிவிட்டு, பரதனைக் கண்களால் நோக்கினார்.

அந்தணர்முன் கைகளைக் கூப்பிக் கொண்டு, நிறைந்த மனத்துடன் இராமன் கூறினார். "பிரம்மரிஷியே! இவ்விரு குமாரர் களும் பரதனுடைய புதல்வர்களான தட்சன்- புஷ்கலன் என்பவர்கள்: மாமனால் நன்றாகப் பாதுகாக்கப்பட்டவர்கள்; அறநெறியில் உறுதியாக நிற்பவர்கள் இவர்கள், அந்த கந்தர்வ நாட்டைச் சுற்றிப் பார்

100-ஆவது சர்க்கம்

பரதன், கந்தர்வ நாட்டின்மீது படையெடுத்தல்

இவ்வாறு, காலம் சென்று கொண்டிருக்கும்போது. ஒருசமயம், கேகய நாட்டின் மன்னன் யுதாஜித், பேரரசர் இராமனிடம் தன் ஆசார்யரை அனுப்பிவைத்தார்.

ஆசார்யர் கார்க்யர், அங்கிரசின் புதல்வர்; பிரம்மரிஷி, தேசு மிக்கவர் இராமபிரானிடம் தனக்கிருந்த பேரன்பை வெளிக்காட்டும் வகையில், பத்தாயிரம் குதிரைகள், சால்வைகள், இரத்தினங்கள், அழகிய வேலைப்பாடமைந்த ஆடைகள், கண்கவர் அணிகலன்கள் முதலியவற்றையும் ஆசார்யர்மூலம் அனுப்பிவைத்தார் யுதாஜித்.

பேரறிஞரான இராமன், மாமன் அசுவபதியின் குமாரரான யுதாஜித்தால் அனுப்பப்பெற்ற கார்க்யர், கணக்கில்லாத அன்புக் காணிக்கைகளுடன் வந்து கொண்டி ருக்கிறார் என்பதைக்கேட்டதும், தன் சகோதரர்களுடன்கூட அயோத்தி யிலிருந்து ஒரு கோச தூரம் முன்னே சென்று, பிருஹஸ்பதியை இந்திரன் கோலாகலமாக வரவேற்பதைப் போன்று, மாமுனிவர் கார்க்கியரை விமரிசையாக வரவேற்றார்.

முனிவரைத் தக்க முறையில் கௌரவித்து, அவர் அளித்த அன்புக் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு, மாமனுடைய குடும்பத்தினரின் நல்வாழ்வு பற்றி விசாரித்துவிட்டு, தக்கதொரு ஆசனத்தில் அமர்ந்துகொண்ட மாமுனிவரை நோக்கி, இராமன் கேட்கத் தொடங்கினார். "சிறந்த முறையில் பேசுவதற்கு, சாட்சாத் பிருஹஸ்பதி போன்றவர் தாங்கள். தேவரீரிடம் மாமா என்ன செய்தி சொல்லியனுப்பி இருக்கிறார்?''

இராமன் கேட்டதும், மாமுனிவர் வினோதமான ஒரு செயலைப் பற்றி, இராமனிடம் விளக்கமாகச் கூறத்தொடங்கினார்.

"தோள்வலி மிக்கவரே! மன்னரே!

உங்களுடைய மாமன் யுதாஜித் பேரன்புடன் சொல்லியனுப்பியதை, நீங்கள் விரும்பினால் கேட்கலாம்.

(அவர் சொல்லியனுப்பிய செய்தி) கந்தர்வர்களுடைய நாட்டில் கனி- கிழங்குகள் ஏராளம்; சிந்து நதியின் இரு கரைகளையும் ஒட்டியுள்ள நாடு; மிகவும் வளமானது.

(நமது நாட்டை ஒட்டினாற்போல் இருக்கிறது.)

வீரரே! கந்தர்வ மன்னன் சைலூஷனுடைய குமாரர்கள் மூன்று கோடிப் பேர்கள்; மகா பலசாலிகள்; போர்க் கலையில் வல்லவர்கள்; ஆயுதம் தரித்தவர் கள். இவர்கள் அந்த நாட்டைப் பாதுகாத்து வருகிறார்கள்.

காகுத்தரே! அவர்களை வென்று அழகான கந்தர்வ நகரத்தை உங்கள் வசப்படுத்திக் கொண்டு, அதில் எழுந்தருள்வீராக.

மிகவும் பாதுகாப்புடன் விளங்கும் அந்த நாட்டிற்குள், தங்களைத் தவிர வேறு எவராலும் உள்ளே செல்லமுடியாது. பெருந்தோளரே! இதுபற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நான், உங்களுக்குப் பாதகமான யோசனையைக் கூறமாட்டேன்.''

இராமன் அதைக்கேட்டு, முனிவர்- மன்னர் செய்தியால் உவகையடைந்து, "அவ்வாறே செய்யலாம்'' என்று பதில் கூறிவிட்டு, பரதனைக் கண்களால் நோக்கினார்.

அந்தணர்முன் கைகளைக் கூப்பிக் கொண்டு, நிறைந்த மனத்துடன் இராமன் கூறினார். "பிரம்மரிஷியே! இவ்விரு குமாரர் களும் பரதனுடைய புதல்வர்களான தட்சன்- புஷ்கலன் என்பவர்கள்: மாமனால் நன்றாகப் பாதுகாக்கப்பட்டவர்கள்; அறநெறியில் உறுதியாக நிற்பவர்கள் இவர்கள், அந்த கந்தர்வ நாட்டைச் சுற்றிப் பார்ப்பார்கள்.

பரதனை முன்னிட்டுக்கொண்டு, படை வீரர்களும் ஏவலர்களும் உடன்செல்ல, இவ் விருவரும் கந்தர்வ மன்னனின் புதல்வர்களைக் கொன்று, அந்த நாட்டை இரண்டு நகரங் களாக வகுத்துக்கொள்வார்கள்.

சிறந்ததான அந்த நகரங்களில் தன் புதல்வர் களை ஆட்சியில் அமர்த்திவிட்டு, பரம தார்மிகனான பரதன் என்னிடம் மீண்டும் வந்துசேருவான்.''

பிரம்மரிஷியிடம் இவ்வாறு கூறிவிட்டு, இரு குமாரர்களுக்கும் அப்போதே பட்டம் சூட்டி, படைவீரர்- பணியாட்களுடன் செல்லு மாறு பரதனுக்கு ஆணையிட்டார்.

சுபமான தாரகை கூடியநாளில், அங்கிரசின் குமாரர் கார்க்யரை முன்னிட்டுக் கொண்டு, படைகளுடனும் தன் இரு புதல்வர் களுடனும் பரதன் புறப்பட்டுச் சென்றான்.

அந்தப்படை, இந்திரனால் ஏவிவிடப்பட்ட சேனைபோல் மிகவும் உற்சாகத்துடன் அயோத்தியிலிருந்து வெளியே புறப் பட்டுச் சென்றது. தேவர்களாலும் வெற்றி கொள்ளமுடியாத அந்த சைன்யத்துடன் இராமன் சிறிது தூரம் சென்றார்.

மாமிசம் உண்ணும் பிராணிகளும், பேருருவம் படைத்த இராக்கதர்களும், போர்க் களத்தில் இரத்தம் குடிக்கும் பேராசையுடன் பரதனைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.

பயங்கரமானவைகளும், புலால் உண்பவை களுமான பூதங்களின் ஏராளமான கூட்டங் களும் கந்தர்வ மன்னனின் புதல்வர்களுடைய உடல்களைப் புசிக்கும் பேராசையுடன் ஆயிரக்கணக்கில் சென்றன.

அநேக ஆயிரக்கணக்கான சிங்கம், புலி, பன்றி, வானத்தில் பறக்கும் (கழுகு முதலான) பறவைகள் சேனையின் முன்னதாகச் சென்றன.

மனவளமும் உடல்வளமும் நிரம்பப் பெற்ற ஆரோக்கியமான வீரர்களைக்கொண்ட அந்த சேனை போகும் வழியில் ஒன்றரை மாதங்களைக் கழித்தபின், கேகய நாட்டைச் சென்றடைந்தது.

101-ஆவது சர்க்கம்

கந்தர்வர் வீழ்ச்சியும், தட்ச- புஷ்கலன் ஆட்சியும்

முனிவர் கார்க்யரோடுகூட, படைத் தலைமை ஏற்று பரதனே வந்திருக்கிறான் என்பதைக் கேட்டதும் கேகய மன்னன் யுதாஜித் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

கேகய மன்னர், மக்கள் கூட்டத்தோடு விரைவாக வெளியே வந்து, விருப்பம்போல் உருவம் ஏற்கக்கூடிய கந்தர்வர்களை எதிர்த்துச்சென்றார்.

பரதனும் யுதாஜித்தும், தத்தம் படை வீரர்களுடனும் பணியாட்களுடனும்கூட ஒன்றுசேர்ந்து வெகுவேகமாகச் சென்று, கந்தர்வ நகரத்தை முற்றுகையிட்டார்கள்.

பரதன் வந்திருப்பதைக் கேட்டு, மகாவீரர் களுடன் போர்புரியும் விருப்பமுடைய சுந்தர்வர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, எல்லாப் பக்கங்களிலும் நின்று கர்ஜனை செய்தார்கள்.

பின்னர், உரோமச் சிலிர்ப்பை உண்டாக்கு வதும் பெரும் சத்தமும் களேபரமும் கூடியது மான போர் நிகழ்ந்தது. ஏழு நாட்கள் தொடர்ந்து நடந்த பயங்கரமான சண்டைக் குப் பிறகும், வெற்றி எந்தப் பக்கத்தினருக்கும் கிடைக்கவில்லை.

எண் திசையிலும் இரத்த ஆறுகள் ஓடின; கத்தி, வேல், வில் முதலிய முதலைகள் அவற்றில் மிதந்தன; மனிதச் சடலங்கள் இரத்தப் பிரவாகத்தில் அடித்துச் செல்லப் பட்டன.

அப்போது, இராமனின் தம்பியான பரதன், மிகவும் கோபம்கொண்டு, காலனை அதிதேவதையாகக் கொண்டதும் மிகவும் பயங்கரமானதுமான சம்வர்த்தம் என்ற பெயர் கொண்ட அஸ்திரத்தைச் செலுத்தினான்.

காலபாசத்தினால் பிணைக்கப்பட்ட மூன்று கோடி கந்தர்வர்களும், சம்வர்த்தத்தி னால் துளைக்கப்பட்டு, நொடிப்பொழுதில் மாய்க்கப்பட்டார்கள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் மகா பராக்கிரமசாலிகளான அப்பேர்ப் பட்ட கந்தர்வர்கள் கொல்லப் பட்டதைப் போன்ற பயங்கர மான ஒரு காட்சியை, இதற்கு முன் பார்த்திருப்பதாக, தேவர் களுக்குக்கூட நினைவே இல்லை.

கந்தர்வர்கள் எல்லாரும் மடிந்த பின்னர், கைகேயியின் புதல்வன் பரதன், வளம் மிகுந்த இரண்டு பட்டணங்களை உருவாக்கி னான்.

அழகான கந்தர்வ நாட்டில் தட்சசீலா என்ற நகரை நிர்மாணித்து, அதில் தட்சனை அரசனாக்கினான். காந்தார நாட்டில் புஷ்கலா வதம் என்ற பட்டணத்தை ஏற்படுத்தி, புஷ்கலனிடம் அதை ஒப்படைத்தான்.

(அந்த நகரங்கள்) செல்வம். இரத்தினக் குவியல்கள் நிறைந்து, சிறு வனங்கள் அழகு செய்ய, குடிமக்களுக்கு நற்பயன்களைத் தருவதில் போட்டி போடுவதுபோல் விளங்கின.

இரண்டு நகரங்களும் அழகாக இருந்தன; மக்களின் பழக்கவழக்கங்கள் குற்றமில்லாமல் இருந்தன: பூங்காக்களும் வாகனங்களும் நிறைவாக இருந்தன; கடைவீதிகள் ஆங்காங்கே உரிய முறையில் நிறுவப்பட்டிருந்தன.

கண்கவர் பட்டணங்கள் இரண்டும், அதிசயமான பொருள்களால் மேலும் அழகைக் கூட்டின; எழில்மிகு மாபெரும் மாளிகைகள், தேவதைகளின் இருப்பிடங் களைப்போல் அழகும் விஸ்தாரமும் கொண்டு விளங்கின; பனைமரம், தமாலம், திலகம், மகிழ மரம் முதலியன அழகு சேர்த்தன.

இராமனுடைய தம்பி, அவ்விருவரையும் இரு பட்டணங்களிலும் ஆட்சியில் அமர்த்தி விட்டு, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அயோத்திக்குத் திரும்பி வந்தான். இந்திரன், பிரம்மாவை வணங்கி ஆசிபெறுவதைப் போல, அறக்கடவுளே இன்னோர் உருவம் ஏற்று வந்தாற்போன்ற மகாத்மா இராமனை, திருநிறை செல்வனான பரதன் வணங்கி னான்.

பின்னர், கந்தர்வர்களை அழித்து, இரண்டு நாடுகளை உண்டாக்கிய செய்தியை, நடந்தவாறே பரதன் கூறினான். அதைக்கேட்ட இராமன் மிகவும் மகிழ்ச்சி யடைந்தார்.

tt

102-ஆவது சர்க்கம்

அங்கதனுக்கும் சந்திரகேதுவுக்கும் அரசு அளித்தல்

கந்தர்வதேசம் சம்பந்தமாக பரதன் சொன்னதைக்கேட்ட இராமனும் மற்ற சகோதரர்களும் மகிழ்ச்சி அடைந்தார் கள். அப்போது, இலக்குவனை நோக்கிப் புதுமையான ஒரு விஷயத்தை இராமன் கூறினார்.

"லட்சுமணா! உன்னுடைய இந்த இரண்டு குமாரர்களான அங்கதனும் சந்திரகேதுவும் அறநூல்களை முற்றிலும் கற்றறிந்தவர்கள்; ஒரு நாட்டை ஆட்சி செய்யும் வலிமையும் உறுதியும் படைத்தவர்கள்.

இவர்களை நான், மன்னர்களாக பட்டாபிஷேகம் செய்விக்கப் போகிறேன். சிறப்பான நாட்டைக் கண்டுபிடி. அந்த நாடு, அழகானதாகவும் விசாலமானதாகவும், வில்லாளிகளான இவர்கள் சுகமாக வாழக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.

தம்பி! எந்தப் பிரதேசத்தை, நாம் கைப்பற்றுவதனால் பிற மன்னர்களுக்குத் துன்பமும் கோபமும் உண்டாகாதோ, முனிவர்களின் ஆசிரமங்களை அழிக்க வேண்டியிருக்காதோ, நாம் மற்றவர்களுக்குக் கேடு செய்ததாக ஆகாதோ, அப்படிப்பட்ட இடத்தைக் கண்டுபிடிப்பாய்.''

இராமபிரான் இவ்வாறு கூறிமுடித்ததும், பரதன் கூறினான். "மன்னா! காருபதம் என்ற நாடு அழகானது, நோய், நொடியற்றது. மாவீரனான அங்கதனுக்காக அங்கே ஒரு புதிய நகரம் உண்டாக்கப்படலாம். அதேபோல், சந்திரகேதுவுக்காக எழில்மிக்கதும் நோய், நொடிகள் அண்டாததுமான சந்திரகாந்தம் என்ற பட்டணத்தை நிர்மாணிக்கலாம்.''

பரதன் கூறிய ஆலோசனையை இராமன் ஏற்றுக்கொண்டார். காருபத நாட்டைக் கைப்பற்றி, அங்கதனை அங்கே அரசன் ஆக்கினார்.

அரிய செயல்களை எளிதில் செய்து முடிக்கும் இராமன், அங்கதன் வசிப்பதற்காக அங்கதீயா என்னும் நகரை நிர்மாணித்தார். அந்த நகரம் எழில்மிக்கதாகவும் பாதுகாப்பு டனும் விளங்கியது.

மகா உத்தமனான சந்திரகேதுவுக்கு, மல்ல நாட்டின் வடக்கில், தேவலோகப் பட்டணத்திற்கு நிகரான, சந்திரகாந்தா என்ற பெயருடைய நகரம் நிர்மாணிக்கப்பட்டது.

இதனால், இராம, லட்சுமண, பரதர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். போரில் எவராலும் வெற்றிக்கொள்ள முடியாத அவர்கள், இரு குமாரர்களுக்கும் பட்டா பிஷேகம் செய்வித்தார்கள்.

இரு குமாரர்களுக்கும் பட்டம் சூட்டிய பின் அங்கதனை மேற்கு திசையிலும், சந்திரகேதுவை வடக்கு திசையிலும் இராமன் அனுப்பிவைத்தார்.

அங்கதனுடன் சுமித்திரையின் புதல்வனான இலக்குவன் சென்றான்; சந்திரகேதுவுக்குப் பாதுகாவலாக பரதன் சென்றான்.

இலக்குவன். அங்கதீயா நாட்டில் ஓர் ஆண்டுக்காலம் தங்கினான். அவனுடைய மைந்தன், ஆட்சி நிர்வாகத்தைத் தனியே நடத்தும் திறன் பெற்றவுடன் அயோத்திக்குத் திரும்பிவந்து, இராமன் திருவடிகளை வணங்கினான்.

அவ்வாறே, சந்திரகாந்த நகரில், ஓர் ஆண்டுக்குச் சற்று அதிகமாகவே தங்கியிருந்த பிறகு, அயோத்திக்குத் திரும்பிவந்து, இராமன் திருவடிகளை வணங்கினான் பரதன்.

இலக்குவனும் பரதனும் இராமபாத சேவையில் குறைவிலாப் பற்றுக் கொண்டிருந்தார்கள். அறநெறியாளர்களான அவர்கள், இராமபாத சேவையில் வெகுகாலம் ஈடுபட்டிருந்தாலும், அந்தப் பணியில் முழுமுனைப்போடு இருந்ததால் காலம் கழிந்ததை உணரவில்லை.

அறச்செயல்களில் ஊக்கமும், மக்கள் பணிகளில் கவனமும் செலுத்திய அவர்கள், பத்தாயிரம் ஆண்டுகளைக் கழித்துவிட்டார் கள்.

தரும காரியங்களின் நிலைக்கள னாக, செல்வச்செழிப்புமிக்க நகரமாக விளங்கிய அயோத்தியில் நிறைந்த மனத் துடன் வாழ்ந்த அந்த மூவரும், வேள்விச் சாலையில் நிறைய ஆகுதி பெற்ற மூன்று அக்னிகளும் கொழுந்துவிட்டு ஜொலிப் பதைப்போல, மிகவும் பிரகாசத்துடன் விளங்கினார்கள்.

103-ஆவது சர்க்கம் இராமனைச் சந்திக்க, காலன் வந்தான்!

இராமன், அறநெறியில் நின்று செங்கோலோச்சிக் கொண்டிருக்கையில், கால தேவன் ஒரு தவசியின் வடிவமேற்று, அரச மாளிகையின் நுழைவாயிலுக்கு வந்தான்.

வாயிற்புறத்திலிருந்த புகழ்மிக்கவனும் தைரியமிக்கவனுமான இலக்குவனைக் கண்டு, "ஒரு முக்கிய காரியம் பற்றி, இராமனுடன் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன் என்பதை அவரிடம் தெரிவிப்பாயாக'' என்றான்.

"மிகவும் ஆற்றல் மிக்கவனே! நான், மாமுனிவர் அதிபலர் என்பவரின் தூதன்.

முக்கியமான ஒரு செய்தியுடன், இராமச்சந்திர னைக் காண வந்திருக்கிறேன்.''

அவனுடைய சொற்களைக்கேட்ட இலக்குவன், வேகமாக உள்ளே சென்று, ஒரு தவசி வந்திருக்கும் செய்தியை இராமனிடம் கூறினான். "பேரொளி வீசுபவரே! அரச நீதியிலிருந்து ஒரு சிறிதும் பிறழாமல் ஆட்சிபுரியும் தங்களுக்கு இவ்வுலகிலும் அவ்வுலகிலும் வெற்றி உண்டாவதாகுக. தவத்தின் பேராற்றலால் சூரியனைப்போல் ஒளிவீசும் ஒரு முனிவர், தூதன் என்ற பணியை ஏற்று, தங்களைக் காண வந்திருக்கிறார்.''

இலக்குவன் கூறியதைக் கேட்டபின், "அன்பனே! தன்னுடைய குருவின் செய்தியைக் கொண்டு வந்திருக்கும். தவப் பேரொளி வீசும் முனிவரை உடனே உள்ளே அனுப்பு'' என்று இராமன் கூறினார்.

"அப்படியே'' என்று பதில் கூறிய லட்சுமணன், தபோபலத்தினால் ஒளி வீசுபவரும், செங்கதிர்களால் சுட்டு விடுபவர் போல் விளங்கியவருமான அந்த முனிவரை உள்ளே அனுப்பிவைத்தான்.

தன்னுடைய ஆன்மவொளியினால் பிரகாசிக்கும் ரகுகுல திலகமான இராமனை நெருங்கி. "வாழ்க! வளர்க!' என்று இனிய குரலில் முனிவர் ஆசி கூறினார். மகா தேஜஸ்வியான இராமன், அர்க்ய- பாத்ய உபசாரங்களைச் செய்து அவரை வரவேற்றபின், தெளிவான மனத்துடன், முனிவரின் நலன் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

இராமன் அவ்வாறு கேட்டதும், பேச்சில் வல்லவரும் கீர்த்தி பெற்றவருமான முனிவர் திவ்வியமான பொன் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். பின்னர், அவரைப் பார்த்து, "மாமுனிவரே! தங்கள் வரவு நல்வரவா குக. நீங்கள் ஒரு தூதராக வந்திருப்பதால், உங்களிடம் சொல்லி அனுப்பிய செய்தியை என்னிடம் கூறுங்கள்'' என்றார் இராமன்.

சிங்கம் நிகர் வலிமைமிக்க மன்னரான இராமன், இவ்வாறு தூண்டிவிட்டதும், முனிவர் கூறினார். "நம்முடைய நலனை கருத்தில்கொண்டு பார்த்தால், நான் சொல்ல வந்த ரகசியம், நாம் இருவர் மட்டும் தனித்து இருக்கும்போதுதான் சொல்லப்பட வேண்டும்.

மாமுனிவருடைய ரகசியச் செய்தியை நீங்கள் கேட்க விரும்பினால், ஒரு நிபந் தனைக்கு உட்படவேண்டும். எவனொருவன் நாம் இருவரும் பேசுவதைக் கேட்கிறானோ அல்லது பார்க்கிறானோ அவன் உங்களால் கொல்லத்தக்கவன்.''

இராமன், "அவ்வாறே நடக்கும்'' என்று உறுதி கூறிவிட்டு, லட்சுமணனைப் பார்த்து, பெருந்தோளனே! வாயிற்காப்போனை அனுப்பிவிட்டு, நீயே வாயிற்படியில் நின்று காவல் செய்வாயாக'' என்றார்.

"லட்சுமணா! எவனொருவன் நாங்கள் இருவரும் தனித்துப் பேசிக்கொண்டிருப்ப தைக் கேட்கிறானோ அல்லது பார்க்கிறானோ அவன் நிச்சயமாகக் கொல்லப்படுவான்.''

இலக்குவனை, வாயிற்படியில் கவனமாக இருக்கும்படி நியமித்துவிட்டு, தூதரைப் பார்த்து, "முனிவர் சொல்லியனுப்பிய செய்தி யைக் கூறுங்கள்'' என்று இராமன் சொன்னார்.

"முனிவரே! தாங்கள் எதைச் சொல்ல விரும்புகிறீர்களோ, எதைச் சொல்வதற்காக இங்கே வந்திருக்கிறீர்களோ, அந்த ரகசியத்தை, எவ்விதத் தயக்கமும் இல்லாமல் இப்போது கூறலாம். அதைக் கேட்பதற்கு நானும் துடித்துக்கொண்டிருக்கிறேன்.''

(தொடரும்)

bala010224
இதையும் படியுங்கள்
Subscribe