வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயண உத்தரகாண்டம்!(36) தொகுப்பு: மலரோன்

/idhalgal/om/srimad-ramayana-uttarakhandam-by-valmiki-maharishi36-compilation-malaron

ந்தச் சமயம், இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லாருடைய உள்ளத்திலும் துக்கம் தோன்றி, சோகத்தால் தவித்தார்கள். அவர்களுடைய மனத் துயரத்தின் வெளிப்பாடாக "அடாடா!' என்ற ஒ- எங்கும் எழுந்தது.

"இராமன் பாக்கியசா-!' என்றார்கள் சிலர்;

வேறு சிலர், "சீதை பாக்கியசா-' என்றார்கள்.

பார்வையாளர்களான மற்றும் சிலர், "இருவ ருமே பாக்கியசா-கள்!' என்று கூவினார்கள்.

மக்களின் பெருங்கூட்டத்தினிடையே சீதையோடு சென்ற மாமுனிவர், இராகவனைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார். "தசரத குமாரா! இந்த சீதை, நல்விரதங்களை அனுஷ்டிப்பவள்; அறநெறியில் செல்பவள். உங்களுக்கு ஏற்பட்ட பழிச்சொல்--ருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக, என் ஆசிரமத் தின் அருகில் உங்களால் கைவிடப்பட்டவள்.

இராமா! பண்பாளரே! உலகத்தின் பழிச்சொல்லுக்குப் பயந்த உங்களுக்குத் தன் தூய்மையை நிலைநாட்டும் சாட்சியத்தைக் காட்டப் போகிறாள் சீதை. அதற்கு நீங்கள் அனுமதி அளிக்கவேண்டும். இவ்விருவரும், சீதையின் புதல்வர்கள்; இரட்டையாகப் பிறந்த வர்கள்; உங்களுடைய குமாரர்கள்; எளிதில் வெல்லமுடியாதவர்கள். நான், உங்களிடம் சத்தியமாகக் கூறுகிறேன்.

ரகுநந்தனா! நான், பிரசேதஸின் பத்தாவது மைந்தன். நான், இதுவரை பொய் சொன்னதாக எனக்கு நினைவே இல்லை. (நான் பொய் பேசியதே இல்லை.) இவ்விருவரும் உங்கள் புத்திரர்கள்தான்.

நான், அநேக ஆயிரமாண்டுகள் தவம் செய்திருக்கிறேன். மைதி- மாசுபடிந்தவள் என்பது உண்மையானால், என் நீண்ட தவத் தின் பலன் எனக்குக் கிடைக்காமல் போகட்டும்.

நான் மனம், மொழி, மெய்களால் இதுவரை பாவம் செய்ததில்லை. சீதை குற்றமற்றவள் என்பது நிரூபிக்கப்பட்டால், நான் செய்துள்ள புண்ணியச் செயல்களின் பயனை அடைவேனாக. காட்டுப்பகுதியில் ஓர் அருவியின் அருகில் காணப்பட்ட இவளை, ஐந்து புலன்களாலும் ஆறாவதாக மனத்தினா லும் சோதித்துப் பார்த்து, "சீதை தூய்மையானவள்' என்று உறுதியடைந்ததால், இவளை என் பொறுப்பில் வைத்துக்கொண்டேன்.

இவள் தூய நடவடிக்கை உடையவள்; பாவம் செய்யாதவள்; கணவனையே தெய்வ மாகக் கொண்டவள். மக்களின் பழிச்சொல் லைக் கேட்டு அச்சமடைந்த உங்களுக்குத் தன் தூய்மையை நிரூபிக்கப் போகிறாள்.

மாமன்னரின் மைந்தரே! இவள் சுத்தமானவள் என்பதை என் ஞானக்கண்ணால் அறிந்து கொண்டேன். அதனால்தான், என் ஆசிரமத்திற் குள் அனுமதிக்கப்பட்டாள். மக்களின் பழிச்சொல்லைக் கேட்டதால் கலங்கிப்போன நீங்கள், எந்த மாதரசியைத் துறந்தீர்களோ, அவள் உங்களுக்கு மிகவும் பிரியமாளவள். அவள் தூய்மையானவள் என்பது உங்களுக்கும் தெரியும்.''

97-ஆவது சர்க்கம் சீதை ரஸாதலம் புகுதல்

வால்மீகி இவ்வாறு கூறி முடித்தவுடன், குணவதியான சீதையின்மேல் பார்வையைச் செலுத்திவிட்டு, மக்களவையில் கைகளைக் கூப்பிக்கொண்டு இராமன் பதில் கூறினார்.

"பேரருளாளரே! தாங்கள் அறம் அறிந்தவர். தாங்கள் கூறியதெல்லாம் உண்மையே. பிரும்ம ஞானியே! குற்றமற்ற சாட்சியமான தங்கள் சொற்களைக் கேட்டதும், சீதையின் தூய்மை பற்றி எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

முன்னொரு தடவை, தேவர்களுக்கு முன்னிலையில் சீதைத் தன் கற்பை நிரூபித்துச் சபதம் செய்தாள். அதனால்தான், (அவள் மாசற்றவள் என்பதை உறுதி செய்துகொண்டபின்,) என் மாளிகைக்குள் அவளை அனுமதித்தேன்.

மக்களின் குற்றச்சாட்டு என்பது மிகவும் வ-மை யுடையது. அதனால்தான், நான் சீதையைத் துறந்தேன். பிரம்மஞானியே! இவள் குற்ற மற்றவள் என்பது எனக்குத் தெரியும். என்றாலும்,

ந்தச் சமயம், இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லாருடைய உள்ளத்திலும் துக்கம் தோன்றி, சோகத்தால் தவித்தார்கள். அவர்களுடைய மனத் துயரத்தின் வெளிப்பாடாக "அடாடா!' என்ற ஒ- எங்கும் எழுந்தது.

"இராமன் பாக்கியசா-!' என்றார்கள் சிலர்;

வேறு சிலர், "சீதை பாக்கியசா-' என்றார்கள்.

பார்வையாளர்களான மற்றும் சிலர், "இருவ ருமே பாக்கியசா-கள்!' என்று கூவினார்கள்.

மக்களின் பெருங்கூட்டத்தினிடையே சீதையோடு சென்ற மாமுனிவர், இராகவனைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார். "தசரத குமாரா! இந்த சீதை, நல்விரதங்களை அனுஷ்டிப்பவள்; அறநெறியில் செல்பவள். உங்களுக்கு ஏற்பட்ட பழிச்சொல்--ருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக, என் ஆசிரமத் தின் அருகில் உங்களால் கைவிடப்பட்டவள்.

இராமா! பண்பாளரே! உலகத்தின் பழிச்சொல்லுக்குப் பயந்த உங்களுக்குத் தன் தூய்மையை நிலைநாட்டும் சாட்சியத்தைக் காட்டப் போகிறாள் சீதை. அதற்கு நீங்கள் அனுமதி அளிக்கவேண்டும். இவ்விருவரும், சீதையின் புதல்வர்கள்; இரட்டையாகப் பிறந்த வர்கள்; உங்களுடைய குமாரர்கள்; எளிதில் வெல்லமுடியாதவர்கள். நான், உங்களிடம் சத்தியமாகக் கூறுகிறேன்.

ரகுநந்தனா! நான், பிரசேதஸின் பத்தாவது மைந்தன். நான், இதுவரை பொய் சொன்னதாக எனக்கு நினைவே இல்லை. (நான் பொய் பேசியதே இல்லை.) இவ்விருவரும் உங்கள் புத்திரர்கள்தான்.

நான், அநேக ஆயிரமாண்டுகள் தவம் செய்திருக்கிறேன். மைதி- மாசுபடிந்தவள் என்பது உண்மையானால், என் நீண்ட தவத் தின் பலன் எனக்குக் கிடைக்காமல் போகட்டும்.

நான் மனம், மொழி, மெய்களால் இதுவரை பாவம் செய்ததில்லை. சீதை குற்றமற்றவள் என்பது நிரூபிக்கப்பட்டால், நான் செய்துள்ள புண்ணியச் செயல்களின் பயனை அடைவேனாக. காட்டுப்பகுதியில் ஓர் அருவியின் அருகில் காணப்பட்ட இவளை, ஐந்து புலன்களாலும் ஆறாவதாக மனத்தினா லும் சோதித்துப் பார்த்து, "சீதை தூய்மையானவள்' என்று உறுதியடைந்ததால், இவளை என் பொறுப்பில் வைத்துக்கொண்டேன்.

இவள் தூய நடவடிக்கை உடையவள்; பாவம் செய்யாதவள்; கணவனையே தெய்வ மாகக் கொண்டவள். மக்களின் பழிச்சொல் லைக் கேட்டு அச்சமடைந்த உங்களுக்குத் தன் தூய்மையை நிரூபிக்கப் போகிறாள்.

மாமன்னரின் மைந்தரே! இவள் சுத்தமானவள் என்பதை என் ஞானக்கண்ணால் அறிந்து கொண்டேன். அதனால்தான், என் ஆசிரமத்திற் குள் அனுமதிக்கப்பட்டாள். மக்களின் பழிச்சொல்லைக் கேட்டதால் கலங்கிப்போன நீங்கள், எந்த மாதரசியைத் துறந்தீர்களோ, அவள் உங்களுக்கு மிகவும் பிரியமாளவள். அவள் தூய்மையானவள் என்பது உங்களுக்கும் தெரியும்.''

97-ஆவது சர்க்கம் சீதை ரஸாதலம் புகுதல்

வால்மீகி இவ்வாறு கூறி முடித்தவுடன், குணவதியான சீதையின்மேல் பார்வையைச் செலுத்திவிட்டு, மக்களவையில் கைகளைக் கூப்பிக்கொண்டு இராமன் பதில் கூறினார்.

"பேரருளாளரே! தாங்கள் அறம் அறிந்தவர். தாங்கள் கூறியதெல்லாம் உண்மையே. பிரும்ம ஞானியே! குற்றமற்ற சாட்சியமான தங்கள் சொற்களைக் கேட்டதும், சீதையின் தூய்மை பற்றி எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

முன்னொரு தடவை, தேவர்களுக்கு முன்னிலையில் சீதைத் தன் கற்பை நிரூபித்துச் சபதம் செய்தாள். அதனால்தான், (அவள் மாசற்றவள் என்பதை உறுதி செய்துகொண்டபின்,) என் மாளிகைக்குள் அவளை அனுமதித்தேன்.

மக்களின் குற்றச்சாட்டு என்பது மிகவும் வ-மை யுடையது. அதனால்தான், நான் சீதையைத் துறந்தேன். பிரம்மஞானியே! இவள் குற்ற மற்றவள் என்பது எனக்குத் தெரியும். என்றாலும், மக்கட் சமுதாயத்தின் வ-மைக்கு அஞ்சியே இவளைக் கைவிட நேர்ந்தது.

அருளாளரே! நான் சீதையைத் துறந்தேன். (அதை மறுக்க முடியாது.) அதற்காகத் தாங்கள் என்னை மன்னிக்கவேண்டும். குச, லவர்களான இந்த இரட்டையர் என் புதல்வர்கள் என்பதை அறிவேன்.

என்றாலும் மக்களுக்கு, சீதையின் தூய்மை நிரூபிக்கப்பட்டால்தான், மைதி-யிடம் எனக்கு அன்பு உண்டாகும்.'' இராமனுடைய உள்ளக் கிடக்கையைப் புரிந்துகொண்ட இந்திரன் முதலான முக்கிய தேவதைகள் பிரம்மாவை முன்னிட்டுக்கொண்டு, சீதையின் சபதத்தைக் கேட்பதற்காக அங்கே வந்து கூடினார்கள்.

பன்னிரு ஆதித்யர்கள், அஷ்ட வசுக்கள், பதினோரு ருத்ரர்கள், அஸ்வினீ தேவர்கள், மருத்கணங்கள், கந்தர்வர்கள், அப்சரசுகள் ஆகிய எல்லாரும் வந்து சேர்ந்தார்கள்.

ஸாத்யர்கள், விசுவேதேவர்கள், எல்லா மாமுனிவர்கள், நாகர்கள், கருடர்கள், ஸித்தர்கள் ஆகிய எல்லாரும், சீதை சபதம் செய்யும் காட்சியைக் காணும் பதற்றத்துடன் மனக்களிப்புடன் வந்திருந்தார்கள். அப்போது தேவர்களையும் முனிவர்களையும் பார்த்து, இராமன் மறுபடியும் கூறினார்.

"தேவோத்தமர்களே! முனிவர் வால்மீகியின் அப்பழுக்கற்ற சொற்களால் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. என்றாலும், மக்கள் எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போது, வைதேகி, தன் தூய்மையை நிரூபித்தால் எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படும்.''

அப்போது, திவ்வியமான நறுமணம் நிறைந்தவரும், மனத்திற்கு ஆனந்தத்தைக் கொடுப்பவரும், உத்தம தேவதையுமான வாயு பகவான் மென்மையாக வீசி, அங்கு கூடியிருந்த எல்லாருக்கும் மகிழ்ச்சி யைக் கொடுத்தார்.

முன்னர், கிருதயுகத்தில் நடப்பதுபோல், எல்லா நாடு களி-ருந்தும் வந்திருந்த மக்கள், இதற்குமுன் நிகழ்ந்திராததும் எண்ணிப் பார்க்க முடியாதது மான, அந்தக் காட்சியைக் கண்ணால் கண்டார்கள்.

அப்போது, காவி உடை அணிந்த சீதை, அங்கே கூடியிருந்தவர்கள் முன் பாகக் கைகளைக் கூப்பிக்கொண்டு, தலை குனிந்து, பார்வை கீழ்நோக்கியிருக்கக் கூறினாள்.

"நான், பிரபு இராமனைத் தவிர வேறு எந்த ஆடவனையும் மனத்தால் சிந்தித்துக்கூடப் பார்த்ததில்லை என்பது சத்தியமானால், பூமாதேவி எனக்கு அடைக்கலம் தருவாளாக.

நான் மனம், மொழி, செயல்களால் இராம னையே போற்றிவந்தேன் என்பது உண்மை யானால், பூமாதேவி எனக்கு அடைக்கலம் தருவாளாக.

பகவான் இராமனைத் தவிர வேறு எந்த ஆடவனையும் நான் அறியேன் என்பது சத்திய மானால், பூமாதேவி எனக்கு அடைக்கலம் தருவாளாக.'' இவ்வாறு, வைதேகி சபதம் செய்து முடித்த தும், மிக அழகான, திவ்வியமான, விசால மான ஒரு சிம்மாசனம் தரையி-ருந்து வெளி வந்தது.

t

உயர்ந்த இரத்தினங்களால் அலங்கரிக்கப் பட்ட, ஒப்பற்ற பலம் பொருந்திய நாகர்கள் தெய்விக உடல்பெற்று, தங்கள் தலைமேல் அதனைச் சுமந்து கொண்டிருந்தார்கள்.

சிம்மாசனத்தில் வீற்றிருந்த பூமாதேவி, தன் இரு கைகளாலும் மைதி-யை அனைத்து, வரவேற்கும் முறையில் பாராட்டுக்கூறி, அவளை ஆசனத்தில் அமர்த்திக்கொண்டாள்.

சிம்மாசனத்தில் அமர்ந்து, ரஸாதலத்திற்குச் செல்லும் சீதையை (தேவதைகள்) பார்த்தார் கள். சீதையின்மேல் வானத்தி-ருந்து இடை விடாது மலர்மாரி பொழிந்தது.

தேவர்கள், "ஆகா! என்ன பேறு பெற்றாள், சீதை!'' என்று வாழ்த்தினார்கள். "அம்மா, சீதே! உன் குணம் எவ்வளவு போற்றத்தக்கது! நன்று... நன்று!'' என்று பாராட்டினார்கள்.

சீதை, ரஸாதலத்திற்குள் செல்வதை, ஆகாயத் தில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்த தேவதை கள், இவ்வாறான பாராட்டு மொழிகளைக் கூறி மகிழ்ந்தார்கள்.

வேள்விச்சாலையில் வீற்றிருந்த முனிவர் களும் ஆற்றல்மிக்க அரசர்களும் அடைந்த வியப்புக்கு அளவேயில்லை.

விண்ணிலும் மண்ணிலுமிருந்த எல்லா சராசரப் பிராணிகளும், பாதாளத்தி-ருந்த பேருடல்கொண்ட தானவர்களும், நாகத் தலைவர்களும் ஆச்சரியம் அடைந்தார்கள்.

சிலர் மனக்களிப்புடன் குரல் கொடுத்தார் கள்; சிலர் செய்வதறியாது தியானத்தில் ஆழ்ந்து போனார்கள்; சிலர் கண்கொட்டாமல் இராமபிரானையே நோக்கினார்கள்; சிலர் உணர்விழந்து சீதையைப் பார்த்தார்கள்.

சீதை ரஸாதலத்திற்குள் செல்லும் காட்சி யைக் கண்ட மக்கள் எல்லாரும் ஆனந்தம், சோகம் முதலான பற்பல உணர்வுகளை ஒன்றா கப் பெற்றார்கள். சிறிதுநேரத்திற்கு, அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் மயக்கத்தில் மூழ்கியதைப்போல் செயலற்றுப் போனார்கள்.

98-ஆவது சர்க்கம் இராமன் சாந்தம் அடைந்தார்!

வைதேகி ரஸாதலம் புகுந்தவுடன், இராமனின் அருகில் அமர்ந்திருந்த வானரர் களும் முனிவர்களும், "ஆகா! சீதே! என்ன பேறு பெற்றாய்!'' என்று வாயார வாழ்த்தினார்கள்.

ஆனால், இராமனுடைய நிலை வேறாக இருந்தது. ஒரு கைத்தடியை ஊன்றி அதைப் பற்றுக்கோடாகக்கொண்டு (நின்ற நிலையில்) கண்களில் நீர் பெருக, தலைகுனிந்து, மனம் வெதும்பி மிகவும் துயரத்தை அடைந்தார், இராமன்.

வெகுநேரம் வரை கண்ணீர் பெருக்கி அழுதுவிட்டு. கோபமும் சோகமும் சேர்ந்த நிலையில் இராமன் (பின்வருமாறு) கூறினார்.

"என்னுடைய கண்களுக்கு எதிரிலேயே மகாலட்சுமியே உருவெடுத்து வந்தாற்போன்ற சீதை (பூமிக்குள் சென்று) மறைந்தாள் என்ப தால், இதற்கு முன் அனுபவித்திராத வேத னையை, என் மனம் அடைகிறது.

முன்னர், பெருங்கடலுக்கு அப்பால், ஒரு தடவை என் கண்ணி-ருந்து மறைந்து போனாள். (இராவணனால் களவாடிச் செல்லப் பட்டாள்.) கடந்து செல்லமுடியாத கடலையும் கடந்துசென்று, நான் அவளை மீட்டுக் கொண்டு வந்தேன் என்னும்போது, இதோ கண்ணுக்குத் தெரிகிற பூமியின் அடியி-ருந்து மீட்டுக்கொண்டு வரமாட்டேனா, என்ன? (இனி, பூமியை நோக்கிப் பேசுகிறார்.) அம்மா, பூமிப்பிராட்டியே! நீ வாழ்க! சீதையை எனக்குத் திரும்பக் கொடுத்துவிடு. நீ, என் வேண்டு கோளை அலட்சியப்படுத்தினால், நான் என் கோபத்தை வெளிக்காட்டுவேன்.

நீ என்னுடைய மாமியார் அல்லவா? முன்பு, ஜனகர், கலப்பைகொண்டு நிலத்தை உழுத போது, உன்னிடமிருந்து தோன்றியவள்தானே, ஜானகி, அதனால், சீதையைத் திரும்பக் கொடுத்துவிடு. அல்லது என்னையும் உன் மடியில் ஏற்றுக்கொள். ஏனென்றால், பாதா ளமோ தேவலோகமோ? எதுவாக இருந்தாலும் நான் சீதையுடன் கூடவே வாழ விரும்புகிறேன்.

மைதி-யைக் காணாமல் நான் பித்தனாகி விட்டேன். என்னுடைய சீதையை உடனே கொண்டுவா. பூதேவியே! அவள் பூமிக்குள் மறைந்தபோது எவ்வாறு இருந்தாளோ, அதேபோல சீதையை என்னிடம் கொடுக்கா விட்டால், உன்மீது நிலைத்திருக்கும் மலைகள், காடுகள் முத-யவைகளைப் பாழாக்கி விடுவேன்; பூமியை நான் அழித்து, எல்லா இடங்களையும் நீரில் மூழ்கடித்துவிடுவேன்.''

கோபமும் சோகமும் கூடிக்கலந்து, இராமன் மேற்கண்டவாறு சொல்-க் கொண்டி ருக்கும்போது, தேவர்கள் கூட்டத்தோடு வந்த பிரம்மா, அவரிடம் பின்வருமாறு கூறினார்.

"இராமனே! நீங்கள் வருத்தம் அடைய

வேண்டாம். நல்விரதங்களை அனுஷ்டிப்ப

வரே! பகைவர்களை அழிப்பவரே! உங்களு

டைய பழமையான உருவத்தையும், தேவர்

களோடு செய்த ஆலோசனையையும் நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

பெருந்தோளரே! ஒப்பற்ற உங்கள் அநாதி வடிவத்தை, நான் நினைவூட்டுவதாகக் கருதவேண்டாம். வெற்றிகொள்ளமுடியாத மாவீரரே! இந்த நேரத்தில், தாங்கள் விஷ்ணு வின் அம்சமாகத் தோன்றியவர் என்பதை நினைத்துப் பாருங்கள்.

சீதை அப்பழுக்கற்றவர்; முத--ருந்தே தங்களைச் சார்ந்திருப்பவர்தானே? தங்களை அண்டியிருந்த பலத்தினால், சுகமாக நாக லோகம் போய்ச் சேர்ந்தார். (அதை, ஒரு காரண மாகக்கொண்டு, பரமபதம் போய்ச்சேர்ந்தார்.) தாங்கள், மீண்டும் அவரை வைகுண்டத்தில் சந்திப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இப்போது, இந்தப் பேரவையில் நான் கூறப் போவதை, தாங்கள் செவிகொடுத்துக் கேட்கவேண்டும்.

தங்களுடைய இந்த வரலாற்றுக் காவியம், இலக்கியங்களில் ஈடு- இணையற்றது. இராமா! தங்கள் வரலாறு முழுவதையும் விஸ்தாரமாகக் கூறுகிறது.

வீரரே! தாங்கள் (தசரதன் புதல்வராகப்) பிறந்ததி-ருந்து அனுபவித்த சுக- துக்கங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் (சீதை, ரஸாதலம் செல்லுதல் போன்ற) சம்பவங்கள் எல்லாம் வால்மீகியினால் கூறப்பட்டுள்ளன. இராமனே! இது, எல்லாவற்றுக்கும் முதன்மையான காவியம் இதில் காணப்படுவனவெல்லாம் தங்களையே பிடிமானமாகக் கொண்டுள்ளன. ரகுகுலத்தில் தோன்றிய தங்களைத் தவிர, வேறு யாரும் மகாகாவிய நாயகனாகும் தகுதி பெற்றாரில்லை.

இந்தக் காவியத்தை, தேவதைகளோடுகூட நான் முன்னரே கேட்டிருக்கிறேன். இது, தெய்விகமானது; அற்புதமானது. இதில், எந்த விஷயமும் மூடி மறைக்கப்படவில்லை; அனைத் தும் உண்மையே.

பு-நிகர் ஆண்மையாளரே! அறவழியில் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, மீதியுள்ள இராமாயண காவியத்தைக் கேளுங்கள். இந்தக் காவியத்தின் எஞ்சிய பகுதி உத்தர காண்டம் என்று சொல்லப்படுகிறது. பெரும்புகழ் பெற்றவரே! மகாதேஜஸ்வியே! உத்தமமான அந்தப் பகுதியை முனிவர்களோடுகூடத் தாங்களும் கேளுங்கள்.

காகுத்தரே! உத்தமமான இந்தக் காவியத்தை, ராஜரிஷியான தாங்கள்தான் முத-ல் கேட்கவேண்டும்; பிறர், பின்னர்கூடக் கேட்டுக்கொள்ளலாம்.''

மூன்று உலகங்களுக்கும் அதிபதியான பிரம்மா, இவ்வாறு கூறிவிட்டு, தேவர்களோடும் உற்றார்களோடும் விண்ணுலகம் சென்றார்.

பிரம்மலோகத்தி-ருந்து அங்கு வந்திருந்த மகாத்மாக்களான முனிவர்கள், பிரம்மாவின் அனுமதிபெற்று, இராமனின் எதிர்காலம் பற்றிக்கூறும் உத்தரகாண்டத்தைக் கேட்பதற்காக (பிரம்மலோகம் போகாமலே) திரும்பி வந்தனர்.

தேவதேவரான பிரம்மா புகன்ற மங்களமான உரையைக்கேட்ட இராமன், தவ ஆற்றல்மிக்கவரான வால்மீகியைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார்.

''ஐயனே! பிரம்மலோகவாசிகளான முனிவர் கள், என்னுடைய எதிர்கால நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும் உத்தரகாண்டத்தைக் கேட்க விரும்புகிறார்கள். எனவே, அதனை நாளைக் காலையில் தொடங்கலாம்.''

இவ்வாறு, தீர்மானம் செய்துவிட்டு, குச, லவர்களை உடன் அழைத்துக்கொண்டு, கூடி யிருந்த மக்களுக்கு விடைகொடுத்து அனுப்பி விட்டு (வேள்வி நிறைவடைந்துவிட்டதால்), வால்மீகி தன் குடிலைச் சென்றடைந்தார். உத்தமியான சீதையைப்பற்றி நினைத் துக்கொண்டே இரவைக் கழித்தார். இராமன்.

99-ஆவது சர்க்கம் கௌசல்யை முதலியோரின் இறுதிக்காலம்

இரவு சுழிந்து பகல் வந்ததும், இராமன் எல்லா மாமுனிவர்களையும் ஓரிடத்தில் கூடவைத்து, தன் குமாரர்களைப் பார்த்து, "நீங்கள் மனச்சஞ்சலமில்லாமல், இராமாயணத் தின் எஞ்சியுள்ள பகுதியைப் பாடுங்கள்'' என்று கூறினார்.

மகாத்மாக்களான பிரம்மரிஷிகள் சௌகரியமாக அமர்ந்துகொண்ட பிறகு, இராமனின் எதிர்காலத்தை எடுத்துரைக்கும் உத்தரகாண்டத்தை, குச, லவர்கள் இசையுடன் பாடத் தொடங்கினார்கள்.

தன்னுடைய சத்திய பலத்தினால், பூமிக்குள் சீதை சென்றுவிட்ட பிறகு, வேள்வி நிறைவடைந்தும்கூட மிகவும் துக்கத்தி-ருந்த இராமன், சீதையைக் காணாததால் இந்த உலகமே சூன்யமாகிவிட்டதாக எண்ணினார்.

மிகுந்த வருத்தத்தின் தாக்குதலால், மனம் அமைதியை அடையவில்லை.

வேள்வியைக்காண வந்திருந்த குறுநில மன்னர்கள், கரடிகள், வானரர்கள், அரக்கர்கள் மற்றும் மக்கட்கூட்டத்தினருக்கும். வேதோத்த மர்களுக்கும் ஏராளமான செல்வத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார். இவ்வா றாக, முறைப்படி வேள்வியை நிறைவு செய்தார், இராமன். பின்னர், எஞ்சி யிருந்தவர்களையும் அனுப்பி விட்டுத் தாமரைக் கண்ணராகிய இராமன், சீதையை நெஞ்சில் நினைத்துக்கொண்டே, அயோத்தியில் புகுந்தார்.

வேள்வியை முடித்துக் கொண்ட இராமன், தன் இரு புதல்வர்களோடும்கூட வசிக்கத் தொடங்கினார். ரகுநந்தனர்,

சீதையைத் தவிர வேறு எவரையும் மணந்துகொள்ளவில்லை. அதனால், ஒவ்வொரு வேள்வியின்போதும் சீதையின் தங்கப்பதுமையை உடன் வைத்துக்கொண்டார்.

கணக்கில்லாத அசுவமேத யாகம், அதைப் போல் பத்து மடங்கு வாஜபேய யாகம் ஆகியவற்றை ஏராளமான பொற்காசுகளைத் தட்சிணையாக வழங்கி, பத்தாயிரம் ஆண்டுக்காலம் வேள்வி செய்தார்.

திருநிறைசெல்வரான இராமன், அக்னிஷ்டோமம், அதிராத்ரம், கோஸவம் மற்றும் உயர்வான வேள்விகளை, வேண்டிய அளவு தட்சிணை கொடுத்து, அதிக பொருட்செலவுடன் செய்துமுடித்தார்.

இவ்வாறாக, மாமன்னராகிய இராமன் மிக நீண்டகாலம் அறநெறி தவறாது ஆட்சி செலுத்தினார்.

இராமனுக்குச் சேவை செய்வதற்காக அயோத்தியில் அவர் ஆணைப்படி தங்கியிருந்த கரடி, வானர, அரக்கர்கள் நாள்தோறும் இராகவனுக்கு உகந்தவாறு பணி செய்து, அவரை மகிழ்வுடன் வைத்திருந் தார்கள்.

தேவைப்பட்ட காலங்களில் மேகம் மழையைப் பொழிந்தது; எல்லாத் திசைகளும் குற்றங்குறை இல்லாமல் செழிப்பாக இருந்தன. நகரமும் புறநகர்ப் பகுதிகளும் மனநிறைவும் உடல்வளமும் பெற்ற மக்களால் நிறைந் திருந்தன.

இராமன் அறநெறி வழுவாமல் ஆட்சிபுரியும் காலத்தில், குறைந்த வயதில் யாரும் மரணமடையவில்லை; உயிர்ப் பிராணிகளுக்கு உடல்நோய் வந்ததில்லை; யாருக்கும் எவ்விதத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை.

பின்னர், இராமனுடைய தாயாரும் புகழ் மிக்கவளுமான கௌசல்யை, மகன்- பேரன் களோடு சுகமாக வாழ்ந்தபின், வாழ்க்கையின் இறுதியை அடைந்தாள்.

சுமித்திரையும், கீர்த்திமிக்க கைகேயியும் மூத்த அரசியின் வழியைத் தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் பலவகையான அறப் பணிகளைச் செய்தார்கள். கடைசியில், புண்ணியப் பயனாக சுவர்க்கத்தை அடைந் தார்கள்.

அங்கே (சுவர்க்கத்தை). மன்னர் தசரதனை அடைந்து எல்லாரும் மனமகிழ்ச்சி அடைந்தார்கள். பெரும் பாக்கியசா-களான அவர்களனைவரும், அவரவர் செய்த அறச் செயல்களின் புண்ணியப் பயன்களைப் பெற்றார்கள்.

இராமன், அவரவர்களுக்கு உரிய திதி நாட்களில், அவர்களிடையே எவ்வித வேற்றுமையும் பாராட்டாமல், தவசிகளுக்கும் வேத வித்தகர்களுக்கும் ஏராளமாக தானம் கொடுத்துவந்தார்.

அறத்தின் நாயகனான இராமன், அளவில்லாத செல்வங்களை வேதியர்களுக்குக் கொடுத்து, முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய, செயற்கரிய பிண்டபித்ரு- அக்னி காரியங்களையும் நீர்க்கடன்களையும் செய்து, பித்ரு தேவதைகளை மனமகிழச் செய்தார்.

இவ்வாறு, இராமன் வேள்விகளின் வாயிலாகப் பலவித தருமங்களை நடத்திக்கொண்டு, சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கையில் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன.

(தொடரும்)

om010124
இதையும் படியுங்கள்
Subscribe