வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயண உத்தரகாண்டம்! தொகுப்பு: மலரோன் 34

/idhalgal/om/srimad-ramayana-uttarakhandam-by-valmiki-maharishi-collection-malarone-34

ப்போது, பார்வதிதேவி யுடன் இருந்தவரும் அடியார் வேண்டும் வரம் அளிப்பவரு மான மகேசுவரன் மெல்ல நகைத்து, பிரஜாபதியின் மைந்தரான இளனை நோக்கிக் கூறினார்- "ராஜரிஷியே! எழுந் திராய்! கர்தமரின் புதல்வனே! மகாபலம் கொண்டவனே! எழுந்திராய். செல்வனே! ஆணாக மாற்றுவது என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள்.'

பெண்ணாக மாறிவிட்டதால் மிகவும் துக்கத்திலிருந்த மன்னன், பரமேசுவரன் இவ்வாறு பதில் கூறியதும், அவரிடமிருந்து வேறு எந்த வரத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.

மிகவும் சோகத்திலிருந்த மன்னன், மலையரசன் மகளான உமாதேவியை மனதாரப்பணிந்து. "தாங்கள்தான் எல்லா உலகங்களுக்கும் தலைவி; எல்லாருக்கும் வரம் அளிப்பவர்; தேவி! தங்கள் தரிசனம், பயனைக் கொடுக்காமல் இருக்காது. கருணை நிறைந்த பார்வையால் என்னைப் பாருங்கள்' என்று வேண்டினார்.

ராஜரிஷியின் அந்தரங்கத் தைத் தெரிந்துகொண்ட பார்வதிதேவி, ருத்ரபகவான் அருகில் இருக்கும்போதே மனதிற் கினிய பதிலைக் கூறினார்-

"நீ எதிர்பார்க்கும் வரத்தில், ஒரு பாதியை மகாதேவரும், மறுபாதியை நானும் கொடுப்பதாக ஆகும். (ஆண் பாதியும் பெண் பாதியும் சேர்ந்து ஓர் உருக்கொண்ட அர்த்தநாரீஸ்வரர் ஆயிற்றே?) அதனால், என்னால் கொடுக்கக்கூடிய பாதி வரத்தைப் பெற்றுக்கொள். ஆண்- பெண் என்ற இரண்டில் எவ்வாறு, எவ்வளவு காலம் இருக்க விரும்புகிறாயோ, அதைக் கூறு.'

தேவியினுடைய மிக ஆச்சரியமான, உத்தமமான அந்த வரத்தைக்கேட்டு, மனமகிழ்ந்த மன்னர் பின்வருமாறு கூறினார்-

"அன்னையே! தாங்கள் என்னிடம் கருணை காட்ட விரும்பினால், ஒப்புவமையில்லாத பேரழகு கொண்ட பெண்ணாக ஒரு மாத காலமும், பின்னர் ஒரு மாத காலம் ஆணாகவும் இருக்கும் வரத்தை அருளுங்கள்.' எழில்மிக்க முகமுடைய அன்னை பார்வதி, அவர் கருத்தை அறிந்துகொண்டு. "அவ்வாறே ஆகுக' என்ற இனிய மொழி களைக் கூறினார்.

"மன்னனே! நீ பெண்ணாக இருக்கும் காலத்தில் ஆணாக இருந்தபோது நடந்த செயல்களை நினைவு கொள்ளமாட் டாய்; ஆணாக மாறியவுடன், பெண் காலச் செயல்களை நினைவில் வைத்திருக்க மாட்டாய்.'

இவ்வாறு, கர்தமரின் புதல்வரான இளன் ஒரு மாத காலம் ஆணாக இருந்துவிட்டு, அடுத்த ஒருமாதம் மூவுலகப் பேரழகியான இளா என்ற மங்கையாக மாறி வந்தார்.''

88-ஆவது சர்க்கம் இளா- புதன் சந்திப்பு

இராமன் சொன்ன, இளன் சம்பந்தப்பட்ட அந்தக் கதையைக் கேட்ட பரத- லட்சுமணர்கள் மிகவும் வியப்பை அடைந்தார்கள்.

அவர்கள் இருவரும். இராமன் எதிரில் கைகளைக் கூப்பிக்கொண்டு மகாத்மாவான மன்னன் இளனின் ஆண்- பெண்ணாக மாறும் விருத்தாந்தத்தை விரிவாகக் கேட்க விரும்பி, மறுபடியும் கேட்டார்கள்.

"பெண்மை என்ற தாழ்ந்த நிலையில் அந்த மன்னன் எவ்வாறு நடந்துகொண்டார்? ஆணாக மாறிய நிலையில் என்ன காரியங்களைச் செய்தார்?''

ஆர்வத்தோடு கூடிய அவர்களுடைய பேச்சைக் கேட்ட காகுத்த இராமன், இளன் மன்னன் செயல்பட்ட விதத்தை நடந்தவாறே கூறத்தொடங்கினார்.

"முதல் மாதத்தில் உலகப் பேரழகியாக மாறிய தாமரைக் கண்ணாளாகிய அவள்.

அவருடன் வந்த பணியாட்களும் பெண்ணுரு வம் பெற்று, அவர்கள் பின்தொடர, மரங்கள், புதர்கள், கொடிகள் நிறைந்த ஒரு காட்டுக்குச்சென்று கால்களால் நடந்தவாறே சஞ்சரிக்கத் தொடங்கினாள்.

வாகனங்களையெல்லாம் ஆங்காங்கே விட்டுவிட்டு, விசாலமான பர்வதங்களின் இடைப்பகுதிகளில் இளா நடைபயின்றாள்.

அந்தப் பிரதேசத்திலிருந்த காட்டில், மலைக்கு அண்மையில், பல்வகையான பறவைக் கூட்டங்கள் வசிப்பதும் அழகானது மான ஓர் ஏரியில், சோமனின் புதல்வரான புதன், உதயமான முழுநிலவைப் போன்ற தன்னுடைய சரீர காந்தியினால் ஒளிவீசிக் கொண்டு. தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாள் இளா.

யாராலும் சென்றடைய முடியாத நீர்ப்பரப்பினிடையே, புகழ்பெற்றவரும் காமத்தைத் தூண்டுபவரும் வாலிபத்தில் நிலைபெற்றிருப்பவரும் தீவிரமான தவத்தில் ஈடுபட்டிருந்தவருமான அவரைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிய இளை, முன்னர் ஆண்களாக இருந்து, இப்போது பெண்களாகிவிட்டிருந்த தன் பணியாட் களோடு சேர்ந்து, அந்த ஏரியைக் கலக்கினாள்.

புதன், அவளைக் கண்டதுமே காம வசப்பட்டார். தவத்தில் மனம் செல்லவில்லை. நீர்ப்பரப்பில் தவித்து நின்றார்.

மூன்று உ

ப்போது, பார்வதிதேவி யுடன் இருந்தவரும் அடியார் வேண்டும் வரம் அளிப்பவரு மான மகேசுவரன் மெல்ல நகைத்து, பிரஜாபதியின் மைந்தரான இளனை நோக்கிக் கூறினார்- "ராஜரிஷியே! எழுந் திராய்! கர்தமரின் புதல்வனே! மகாபலம் கொண்டவனே! எழுந்திராய். செல்வனே! ஆணாக மாற்றுவது என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள்.'

பெண்ணாக மாறிவிட்டதால் மிகவும் துக்கத்திலிருந்த மன்னன், பரமேசுவரன் இவ்வாறு பதில் கூறியதும், அவரிடமிருந்து வேறு எந்த வரத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.

மிகவும் சோகத்திலிருந்த மன்னன், மலையரசன் மகளான உமாதேவியை மனதாரப்பணிந்து. "தாங்கள்தான் எல்லா உலகங்களுக்கும் தலைவி; எல்லாருக்கும் வரம் அளிப்பவர்; தேவி! தங்கள் தரிசனம், பயனைக் கொடுக்காமல் இருக்காது. கருணை நிறைந்த பார்வையால் என்னைப் பாருங்கள்' என்று வேண்டினார்.

ராஜரிஷியின் அந்தரங்கத் தைத் தெரிந்துகொண்ட பார்வதிதேவி, ருத்ரபகவான் அருகில் இருக்கும்போதே மனதிற் கினிய பதிலைக் கூறினார்-

"நீ எதிர்பார்க்கும் வரத்தில், ஒரு பாதியை மகாதேவரும், மறுபாதியை நானும் கொடுப்பதாக ஆகும். (ஆண் பாதியும் பெண் பாதியும் சேர்ந்து ஓர் உருக்கொண்ட அர்த்தநாரீஸ்வரர் ஆயிற்றே?) அதனால், என்னால் கொடுக்கக்கூடிய பாதி வரத்தைப் பெற்றுக்கொள். ஆண்- பெண் என்ற இரண்டில் எவ்வாறு, எவ்வளவு காலம் இருக்க விரும்புகிறாயோ, அதைக் கூறு.'

தேவியினுடைய மிக ஆச்சரியமான, உத்தமமான அந்த வரத்தைக்கேட்டு, மனமகிழ்ந்த மன்னர் பின்வருமாறு கூறினார்-

"அன்னையே! தாங்கள் என்னிடம் கருணை காட்ட விரும்பினால், ஒப்புவமையில்லாத பேரழகு கொண்ட பெண்ணாக ஒரு மாத காலமும், பின்னர் ஒரு மாத காலம் ஆணாகவும் இருக்கும் வரத்தை அருளுங்கள்.' எழில்மிக்க முகமுடைய அன்னை பார்வதி, அவர் கருத்தை அறிந்துகொண்டு. "அவ்வாறே ஆகுக' என்ற இனிய மொழி களைக் கூறினார்.

"மன்னனே! நீ பெண்ணாக இருக்கும் காலத்தில் ஆணாக இருந்தபோது நடந்த செயல்களை நினைவு கொள்ளமாட் டாய்; ஆணாக மாறியவுடன், பெண் காலச் செயல்களை நினைவில் வைத்திருக்க மாட்டாய்.'

இவ்வாறு, கர்தமரின் புதல்வரான இளன் ஒரு மாத காலம் ஆணாக இருந்துவிட்டு, அடுத்த ஒருமாதம் மூவுலகப் பேரழகியான இளா என்ற மங்கையாக மாறி வந்தார்.''

88-ஆவது சர்க்கம் இளா- புதன் சந்திப்பு

இராமன் சொன்ன, இளன் சம்பந்தப்பட்ட அந்தக் கதையைக் கேட்ட பரத- லட்சுமணர்கள் மிகவும் வியப்பை அடைந்தார்கள்.

அவர்கள் இருவரும். இராமன் எதிரில் கைகளைக் கூப்பிக்கொண்டு மகாத்மாவான மன்னன் இளனின் ஆண்- பெண்ணாக மாறும் விருத்தாந்தத்தை விரிவாகக் கேட்க விரும்பி, மறுபடியும் கேட்டார்கள்.

"பெண்மை என்ற தாழ்ந்த நிலையில் அந்த மன்னன் எவ்வாறு நடந்துகொண்டார்? ஆணாக மாறிய நிலையில் என்ன காரியங்களைச் செய்தார்?''

ஆர்வத்தோடு கூடிய அவர்களுடைய பேச்சைக் கேட்ட காகுத்த இராமன், இளன் மன்னன் செயல்பட்ட விதத்தை நடந்தவாறே கூறத்தொடங்கினார்.

"முதல் மாதத்தில் உலகப் பேரழகியாக மாறிய தாமரைக் கண்ணாளாகிய அவள்.

அவருடன் வந்த பணியாட்களும் பெண்ணுரு வம் பெற்று, அவர்கள் பின்தொடர, மரங்கள், புதர்கள், கொடிகள் நிறைந்த ஒரு காட்டுக்குச்சென்று கால்களால் நடந்தவாறே சஞ்சரிக்கத் தொடங்கினாள்.

வாகனங்களையெல்லாம் ஆங்காங்கே விட்டுவிட்டு, விசாலமான பர்வதங்களின் இடைப்பகுதிகளில் இளா நடைபயின்றாள்.

அந்தப் பிரதேசத்திலிருந்த காட்டில், மலைக்கு அண்மையில், பல்வகையான பறவைக் கூட்டங்கள் வசிப்பதும் அழகானது மான ஓர் ஏரியில், சோமனின் புதல்வரான புதன், உதயமான முழுநிலவைப் போன்ற தன்னுடைய சரீர காந்தியினால் ஒளிவீசிக் கொண்டு. தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாள் இளா.

யாராலும் சென்றடைய முடியாத நீர்ப்பரப்பினிடையே, புகழ்பெற்றவரும் காமத்தைத் தூண்டுபவரும் வாலிபத்தில் நிலைபெற்றிருப்பவரும் தீவிரமான தவத்தில் ஈடுபட்டிருந்தவருமான அவரைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிய இளை, முன்னர் ஆண்களாக இருந்து, இப்போது பெண்களாகிவிட்டிருந்த தன் பணியாட் களோடு சேர்ந்து, அந்த ஏரியைக் கலக்கினாள்.

புதன், அவளைக் கண்டதுமே காம வசப்பட்டார். தவத்தில் மனம் செல்லவில்லை. நீர்ப்பரப்பில் தவித்து நின்றார்.

மூன்று உலகங்களிலுமிருந்த அழகான பெண்களைக் காட்டிலும் மிக அழகாக விளங் கிய இளையைக் கண்டு, "தேவலோகத்துப் பெண்களைவிட அதிக சோபையுடன் பிரகாசிக்கும் இவள் யார்?' என்று சிந்திக்கத் தொடங்கினார்.

தேவலி நாக- அசுர- அப்சரப் பெண்டிர் களில் இவ்வளவு சோபையுடன் விளங்கும் மங்கை எவளையும் நான் இதுவரை கண்டதேயில்லை.

இவளுக்குத் திருமணம் ஆகாமல் இருந்தால், என் மனைவியாகத் தக்கவள் என்று நிச்சயித்து நீர்ப்பரப்பிலிருந்து எழுந்து ஏரிக்கரையை அடைந்தார்.

பின்னர், தன் ஆசிரமத்தை அடைந்த அவர் பெருங்குரல் கொடுத்து, அந்தப் பேரழகிகளை அழைத்தார். அவர்கள் அவ்விடம் வந்து தருமாத்மாவான அவரை வணங்கினார்கள்.

அறநெறியாளனான அவர், அவர்களைப் பார்த்து, "உலக அழகியாக விளங்கும் அவள் யார்? இங்கு ஏன் வந்திருக்கிறாள்? என்ற விவரங்களை தாமதமில்லாமல் கூறுங்கள்' என்று கேட்டார்.

இனிய சொற்களோடு, மனங்கவரும் முறையில் கூறப்பட்ட அந்த உரையைக் கேட்ட பெண்கள் எல்லாரும் செவிக்கினிய மொழியில் பதில் கூறினார்கள்.

"பேரழகியான இவர் எங்களுடைய நிரந்தரத் தலைவியாக இருந்து வருகிறார். கணவரை அடையாத இவர், காட்டின் உட்புறங்களில் எங்களுடன் சுற்றி வருகிறார்.

பெண்கள் கூறிய தெளிவான பதிலைக் கேட்ட க்ஷத்திரியரான புதன், (உடனடியாகத் தன் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கக்கூடிய) ஆவர்த்தினீ என்ற மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினார்.

rr

அந்த மன்னனுடைய (இளனுடைய) முழு வரலாற்றையும் நடந்தவாறே அறிந்து கொண்ட முனிவர் (புதன்), அந்தப் பெண் களைப் பார்த்துக்கூறினார். நீங்கள் எல்லா ரும் கிம்புருஷி (கின்னரி)களாக மாறி மலையடிவாரத்தில் வசித்துக்கொண்டிருங் கள். இந்த மலையடிவாரத்தில் நீங்கள் குடியிருப்பதற்கான (குடிசை அமைத்தல் போன்ற) ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுங் கள்.

கிழங்கு, பழம், இலைகள் முதலியனவே எப்போதும் உங்கள் உணவாகும். கிம்புருஷன் (கின்னரன்) என்ற ஆண்களைக் கணவர்களாக அடைவீர்கள்.'

சோமனுடைய புதல்வர் புதனுடைய சொற்களைக்கேட்ட, கிம்புருஷிகளாக மாற்றப்பட்ட அவர்கள் மலையில் வசிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

89-ஆவது சர்க்கம் புரூரவன் பிறப்பு

கிம்புருஷர்கள் தோன்றிய வரலாற்றைக் கேட்ட பரத- லட்சுமணர்கள், மக்கட் தலைவராகிய இராமனைப் பார்த்து. "இது மிகவும் வினோதமாக இருக்கிறது!' என்று கூறினார்கள்.

பின்னர், பெரும்புகழ் கொண்ட இராமன், பிரஜாபதி கர்தமருடைய புதல்வன் இளன் பற்றிய மேலும் விபரங்களைக் கூறத் தொடங்கினார்.

"கின்னரிகள் எல்லாரும் மலையடி வாரத்திற்குச் சென்றபின், பேரழகு நிறைந்த அந்த மங்கை இளையைப் பார்த்து, மெல்லிய புன்சிரிப்புடன், மாமுனிவர் கூறினார். "எழில் திகழ் முகத்தாளே! நான், சோமனுடைய பேரன்புக்குரிய புதல்வன். பெண்ணரசியே! நட்பும் அன்பும் கொண்ட பார்வையால் என்னைப் பார். என்னை, உன்னுடையவனாக ஆக்கிக்கொள்.'

தன்னுடன் வந்தவர்கள் யாருமில்லாமல் தனித்துவிடப்பட்ட அவள், கண்கவர் அழகுடன் விளங்கிய சிறந்த கிரகத்தை (புதனை)ப் பார்த்துப் பதில் சொன்னாள்.

"சோமனின் புதல்வரே! எழிலரசரே! நான் விருப்பம்போல் சுற்றித்திரிபவள். இப்போது உங்கள் வசத்தில் இருக்கிறேன். நான் என்ன செய்யவேண்டும்? என்று ஆணையிடுங்கள். தங்கள் விருப்பப்படி செய்யலாம்.''

இளையினுடைய அற்புதச் சொற்களைக்கேட்ட சந்திரனின் புதல்வரான புதன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். காம வசப்பட்ட அவர் அவளுடன் கூடிக்களித்தார்.

கவின்மிகு முகமுடைய இளையுடன், காமக்களியாட்டத்தில் மூழ்கித் திளைத்ததில், புதனுக்கு வைகாசி மாதம் முழுவதும் ஒரு நொடிப் பொழுதாக ஓடிப்போயிற்று.

ஒரு மாதம் நிறைவடைந்ததும், கர்தமப் பிரஜாபதியின் மைந்தன் இளன், ஆணாக மாறி படுக்கையிலிருந்து விழித்தெழுந்தார். சந்திரனின் புதல்வனான புதன், நீர்ப்பரப்பில் இருகைகளையும் மேலே தூக்கிக்கொண்டு, எவ்விதப் பிடிப்புமில்லாமல் தவம் செய்து கொண்டிருப்பதைப்பார்த்து. அவரைக் கேட்டார்.

"ஐயனே! என் ஏவலர்களுடன்கூட நுழையமுடியாத மலையை அடைந்தேன். இப்போது என்னுடன் வந்த படைவீரர்களைக் காணவில்லை. என்னுடைய மக்கள் எங்கே சென்றிருக்கிறார்கள்?

முந்தைய நினைவுகளை இழந்திருந்த ராஜரிஷி இளன் கூறியதைக்கேட்டு, அவரைச் சமாதானம் செய்யும்வண்ணம், தெளிவான சொற்களால் புதன் பதில் கூறினார்.

"உன் ஏவலர்கள் எல்லாரும் பலமான கல்மாரியினால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் கள். காற்று- மழைக்கு அஞ்சி, ஆசிரமத்திற்குள் வந்த நீ, அங்கேயே படுத்து உறங்கிவிட்டாய்.

வீரனே! இப்போது நீ தைரியமாக இருக்க வேண்டும். அச்சமும் கவலையுமில்லாமல், கனி, கிழங்குகளைப் புசித்துக்கொண்டு இங்கேயே சுகமாகக் காலங்கழிப்பாய்.'

மகாபுத்திசாலியான மன்னன் இளன், புதனின் சொற்களைக் கேட்டு ஆறுதல டைந்தார். என்றாலும், பணியாளர்கள் அனைவரும் அழிந்துபோனதால் மனம் நொந்துபோன அவர் (பின்வருமாறு) கூறினார்.

"ஐயனே! என்னுடைய வேலைக் காரர்கள் உயிர் துறந்துவிட்டார்கள் என்பதால், நான் என் ராஜ்யத்தைத் துறக்கமுடியாது. இனி, ஒரு நொடிப் பொழுதுகூட இங்கே இருக்கமாட்டேன். தயவுசெய்து எனக்கு விடைகொடுங்கள்.

பெருந்தகையீர்! என்னுடைய மூத்த புதல்வன் சசபிந்து என்ற பெயரால் பெரும்புகழ் பெற்றவன். நான், என் நாட்டிற்குச் சென்று, அவனுக்கு முடிசூட்டியபின் அவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்பான்.

பேரொளி வீசும் முனிவரே! நாட்டில் என்னுடைய மனைவி, மக்கள், வேலைக் காரர்கள் சுகமாக இருந்துகொண்டிருக்கிறார் கள். அவர்களை விட்டுப் பிரிந்து, நான் இங்கேயே தங்கிவிடமுடியாது. நான், தங்கள் சொல்லை மீறிச் செல்லாதபடிக்கு, எனக்கு உகந்த ஆணையை அருளவேண்டும்.'

இவ்வாறு, மன்னன் இளன் கூறியதைக் கேட்ட புதன், அவருக்கு ஆறுதலளிக்கும் விதமாக, "நீ இங்கே தங்கியிருப்பதே நல்லது' என்ற இனிய சொற்களைக் கூறினார்.

"கர்தமர் புதல்வனே! மகாபலசாலியே! நீ துக்கப்படவேண்டாம். ஓர் ஆண்டுக்காலம் இங்கே வசித்தாயேயானால், உன் நலனுக் கான சில வழிகளைக் கூறுவேன்.'

நற்றவம் புரிபவரும் வேதவல்லுநருமான புதன் கூறியதைக்கேட்ட இளன், அவர் சொற்படியே நடக்கத் தீர்மானித்தார்.

ஒரு மாதம் முழுவதும் பெண்மையை அடைந்து. (புதனுடன்) காமநுகர்ச்சியில் ஈடுபட்டு, பின்னர், அடுத்தமாதம் ஆண் தன்மையை அடைந்து அறச்செயல்களைச் செய்துவந்தார்.

ஒன்பதாவது மாதத்தில், அழகியான இளை, சந்திரனின் மைந்தனான புதன் மூலமாக, ஆற்றலும் அழகும் மிக்க ஒரு மகனை ஈன்றெடுத்தாள். அவன் பெயர், புரூரவஸ்.

அழகியான இளை, புதனுடையதைப் போன்று தண்ணொளி வீசுபவனும் மகாபலம் பொருந்தியவனுமான அவன் பிறந்தவுடனேயே (வைதிகச் சடங்குகள் செய்விப்பதற்காக. அவனுடைய தந்தையின் கையில் ஒப்படைத்தாள்.

ஓர் ஆண்டு நிறைவுபெறும் வரையில், எந்தெந்த மாதங்களில் இளை இளனாக மாறினாளோ அப்போதெல்லாம், மனவடக்கமுடைய புதன் அறநெறிக் கதைகளைக் கூறி சமாளித்து வந்தார்.'

90-ஆவது சர்க்கம் இளா, ஆணாகவே மாறினாள்!

இராமன், புரூரவஸின் பிறப்பைப் பற்றிய கதையைக் கூறிமுடித்ததும். பெரும்புகழ் கொண்ட பரத- லட்சுமணர்கள் மீண்டும் கூறினார்கள்.

"மனிதரேறே! புதனுடன்கூட இளா ஓர் ஆண்டுக்காலம் வசித்த பின்னர், அவள் என்ன செய்தாள்? என்பதைக்கூற வேண்டு கிறோம்.'

கேள்வி கேட்ட அவர்களுடைய சொற்களின் இனிய சுவையை ரசித்த இராமன், கர்தம பிரஜாபதியின் மைந்தன் இளனுடைய கதையைத் தொடர்ந்தார்.

"பெரும்புகழ் பெற்றவர்களே! இளன், ஆணாக இருக்கும் ஒரு மாதத்தில், மிகவும் அறிவாளியான புதன், மிக்க கருணையுள்ள சம்வர்த்தகரைக் கூப்பிட்டார். பிருகுவின் மைந்தரான சியவனர், அரிஷ்டநேமி, பிரமோதனர், மோதகர் மற்றும் துர்வாசர் ஆகியோரை அழைத்தார்.

பேச்சில் வல்லவரான புதன், ஆத்ம தத்துவம் அறிந்தவர்களான இவர்கள் எல்லாரையும் அழைத்து, மனசஞ்சல மில்லாத தைரியத்துடன் விளங்கும் அந்த நண்பர்களையெல்லாம் பார்த்து, பின்வருமாறு கூறினார்.

"வலிமைமிக்க இந்த மன்னன் இளன், கர்தமருடைய புதல்வன். இவனுக்கு நேர்ந்துள்ள கதியை நீங்கள் எல்லாரும் அறிவீர்கள். இவனுக்கு நலம் ஏற்படக்கூடிய ஒரு வழியைக்காட்டுங்கள்.'

அவர்கள் இவ்வாறு சம்பாஷித்துக் கொண்டிருக்கும்போதே, மகாதேஜஸ்வியான கர்தமர், வேதவித்தகர்களுடன்கூட அந்த ஆசிரமத்தை வந்தடைந்தார்.

புலஸ்தியர், க்ரது, வஷட்காரம் மற்றும் பேராற்றலுடைய ஓங்காரம் முதலியன (உடல் உருவேற்று) ஆசிரமத்தை அடைந்தார்கள்.

ஒருவரையொருவர் சந்திக்க முடிந்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட அவர்கள் எல்லாரும், பாஹ்லீக மன்னனின் நலனை விரும்பி, தத்தம் கருத்துக்களைக் கூறத் தொடங்கினார்கள்.

கர்தமர், மைந்தனுக்கு மிகவும் மேலான நலன் ஏற்படவேண்டும் என்ற கருத்துடன், "வேதோத்தமர்களே! மன்னனுடைய பரம மங்களத்தை முன்னிட்டு, நான் சொல்லப்போவதைக் கேளுங்கள்' என்று சொல்லத்தொடங்கினார்.

"காளைக் கொடியோன் பரமேசுவரனைக் காட்டிலும் மேலான இன்னொரு மருத்துவரை நான் காணவில்லை; அவருக்கு மிகவும் பிரியமானவற்றுள் அசுவமேத யாகத்தைக் காட்டிலும் வேறு எதுவுமில்லை.

மன்னன் நலன் அடையவேண்டும் என்பதற்காக, செயற்கரிய அந்த யாகத்தை நாம் நடத்துவோம்.' கர்தமர் இவ்வாறு கூறியதும், அங்கு கூடியிருந்த அந்த ணோத்தமர்கள் அனைவரும் ருத்ரனைத் திருப்தி செய்விப்பதற்காக, அந்த யாகத்தைச் செய்வது சாலச்சிறந்தது என்று தீர்மானித்தார்கள்.

ராஜரிஷி சம்வர்த்தகரின் சீடனும், ராஜரிஷியும், எதிரிகளின் நகரங்களைக் கைப்பற்றுபவனுமான மருத்தன் என்றுபெயர் பெற்றவன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

புதனுடைய ஆசிரமத்திற்கு அருகிலேயே மகத்தான அந்த வேள்வி நடைபெற்றது. மகிமை மிக்கவரான ருத்ரதேவன் மிகவும் திருப்தி அடைந்தார்.

வேள்வி நிறைவடைந்ததும், மிகவும் மகிழ்ச்சியுடனிருந்த உமாகாந்தரான பரமசிவன், இளன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே எல்லா வேதோத்தமர்களையும் பார்த்துக்கூறினார்.

"அந்தணோத்தமர்களே! நீங்கள் பக்தியுடன் செய்த அசுவமேத யாகத்தினால், நான் மனமகிழ்ச்சி அடைந்துள்ளேன். பாஹ்லீக மன்னனின் நன்மைக்காக நான் என்ன செய்யவேண்டும்?' இவ்வாறு, தேவதேவனான பரமேசுவரன் கேட்டவுடன், அந்தணோத்தமர்கள் எல்லாரும் மனமொன்றிய நிலையில், "இளா (மங்கை) ஆணாகவே மாறவேண்டும்' என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

திருப்தியுடனிருந்த மகாதேவர். இளாவுக்கு மீண்டும் ஆண்தன்மையைக் கொடுத்தார். கொடுத்துவிட்டு, மகாதேஜஸ்வியான அவர் மறைந்தருளினார்.

அசுவமேதம் நிறைவடைந்து, சங்கரன் தரிசனமும் கிடைத்த பின்னர், தொலைநோக்குடைய அந்தணர்கள் அனைவரும் வந்தவாறே திரும்பிச் சென்றார்கள்.

மன்னன் (இளன்), பாஹ்லீக நாட்டை விட்டுவிட்டு கங்கை, யமுனை நதிகளுக்கிடையில், உத்தமமானதும் புகழ்தரக் கூடியதுமான பிரதிஷ்டானம் என்ற நகரை நிர்மாணித்து, அதில் வசிக்கத் தொடங்கினார்.

எதிரிகளின் நகரத்தை வெற்றி கொள்பவனும் ராஜரிஷியுமான சசபிந்து, பாஹ்லீகத்தில் ஆட்சி செய்தான்; பலம் மிக்கவரும் கர்தமரின் மைந்தருமான மன்னன் இளன், பிரதிஷ்டானத்தில் ஆட்சி செய்தார்.

இறுதிக்காலம் வந்ததும், மிக உயர்ந்ததான பிரும்மலோகத்தை இளன் அடைந்தார். (பின்பு) அவர் மைந்தன் புரூரவஸ் பிரதிஷ்டானத் தின் அரசனானான்.

ஆண்காளைகளே! அசுவமேத யாகத்தின் மகிமையால், பெண்ணாக மாறியிருந்தவர் ஆணாக மாறிவிட்டார்! மேலும், கிடைத்தற்கரிய பல அரிய பொருள்களையும் அடைந்தார்.''

91-ஆவது சர்க்கம் அசுவமேதம் செய்ய இராமன் ஆணையிடுதல்

எல்லையில்லா ஒளிவீசும் காகுத்த இராமன், சகோதரர்களிடம் மேற்கண்டவாறு கூறிவிட்டு, இலக்குவனை நோக்கி அறத் தோடிணைந்த பின்வரும் சொற்களைக் கூறினார்.

"லட்சுமணா! அசுவமேத யாகம் செய்விக்கும் அந்தணர்களில் முதன்மையானவர்களாகவும், மற்ற எல்லா வைதிகச் சடங்குகளிலும் கைதேர்ந்தவர்களாகவுமுள்ள வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காசியபர் முதலிய எல்லா வேதவித்தகர் களையும் அழைத்து, அவர்களிடம் ஆலோசனை கேட்டு, மிக்க கவனத்துடன், மங்கள லட்சணங்கள் பொருந்திய குதிரை யைத் தேர்ந்தெடுத்து, அதன் கால்போன போக்கில் சஞ்சரிப்பதற்கு விடப் போகிறேன்.'

இவ்வாறு இராகவன் சொன்னதைக்கேட்டு, செயல்களை விரைவாகச் செய்துமுடிக்கும் இலக்குவன் எல்லா அந்தணர்களையும் அழைப்பித்து, இராமனைச் சந்திக்கச் செய்தான்.

தேவர்களைப்போல் பிரகாசிப்பவரும், எவராலும் வெல்லமுடியாதவருமான இராமன், தங்கள் பாதங்களில் வணங்கிவிட்டு நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அவர்கள், நல்லாசிகள் கூறிப் போற்றினார்கள்.

இராமன், அந்தணோத்தமர்களுக்கு எதிரில் கைகளைக் கூப்பிக்கொண்டு, அசுவமேதம் செய்யவேண்டும் என்ற தன் எண்ணத்தை வெளியிட்டார்.

இராமனுடைய சொற்களைக்கேட்ட அந்தணோத்தமர்கள், பரமேசுவரனை மனத் தால் வணங்கி, அசுவமேதத்தின் அளவற்ற பெருமையைப் பலவகையாலும் விளக்கத் தொடங்கினார்கள்.

அசுவமேதம் சம்பந்தமாக மிகவும் நுட்பமான ஞானத்தைப் பெற்றிருந்த அந்தணப் பெரியோர்களின் மொழிகளைக் கேட்ட இராமன் மிகவும் திருப்தி அடைந்தார்.

அந்த யாகத்தைச் செய்விப்பதில் அவர்கள் இசைவைத் தெரிந்துகொண்ட இராமன் லட்சுமணனை நோக்கி, "பேருடல் கொண்ட வனவாசிகளான வானரர்களுடன்கூட வந்து, வேள்வி என்ற பெருநிகழ்ச்சியைக் கண்டு களிப்பாயாக; வாழ்க, நீ- என்று. மகாத்மா சுக்ரீவனுக்குத் தூதர்கள்மூலம் விரைவில் செய்தி அனுப்புவாயாக'' என்று கூறினார்.

"அத்துடன், இணையற்ற பராக்கிரமம் கொண்ட விபீஷணனுக்கும், "மனம்போல் செல்லக்கூடிய அநேக அரக்கர்களோடுகூட, மாபெரும் அசுவமேதப் பெருவிழாவிற்கு எழுந்தருளவேண்டும்' என்று செய்தி அனுப்பு.

மேலும், எனக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பும் பாக்கியசாலிகளான மன்னர்கள் மிக உயர்ந்த வேள்வியைக் காண்பதற்கு, தம் பரிவாரங்களுடன் விரைவில் வந்து சேரட்டும்.

லட்சுமணா! வேறு வேலை நிமித்தமாக, பிற நாடுகளுக்குச் சென்றுள்ள அறம் தவறாத வர்களான அந்தணர்கள் அனைவருக்கும், அசுவமேதத்திற்கு வந்தருளும்படி அழைப்பு விடுப்பாயாக.

பெருந்தோளனே! தவச்செல்வர்களான முனிவர்களையும், வேறு நாடுகளுக்கு மனைவியுடன் சென்றுள்ள இருபிறப் பாளர்களையும் அழைப்பாயாக.

நாடக அரங்குகளில், கையில் தாளம் வைத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்தும் சூத்திரதாரர்கள், நடிகர்கள், நாட்டியம் ஆடுவோர் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பு, நைமிசாரண்யத்தில், கோமதி ஆற்றின் கரையில் மிக விசாலமான வேள்விச்சாலை அமைப்பதற்கு உத்தரவு போடு. அந்த இடம் மிகவும் புனிதமானது; உயர்ந்தது. இடையூறில்லாமல் வேள்வி நிறைவேறுவதற்காக எல்லா இடங்களிலும் சாந்தி கர்மாக்கள் செய்யப்படட்டும்.

ரகுநந்தனா! நைமிசாரண்யத்தில் நடைபெறவுள்ள இணையில்லாத பெருமைகொண்ட வேள்வியை நூற்றுக்கணக்கான அறநெறியாளர்கள் கண்டுகளித்து, முறைப் படி மரியாதை செய்யப்பட்டு, உடலும் மனமும் மகிழ்ந்து திருப்தி அடையும்படி ஏற்பாடுகளைச் செய். அறம் அறிந்தவனே! (நாட்டு) மக்கள் எல்லாருக்கும் அழைப்பு அனுப்பு.

மகாபலசாலியே! லட்சக்கணக்கான பொதிமாடுகள் உயர்தர அரிசி மூட்டை களையும், பத்தாயிரம் பொதிகாளைகள் எள், பருப்பு ஆகியவற்றையும் சுமந்துகொண்டு முன்னதாகச் செல்லட்டும்.

கொத்துக்கடலை, கொள்ளு, உளுந்து, உப்பு முதலியனவும், (ஆயிரக்கணக்கான மக்களின் போஜனத்திற்குத்) தேவையான அளவு எண்ணெய் பொருள்களும், அறைக்கப் படாத சந்தனமும் முன்னால் போகட்டும்.

பரதன், கோடிக்கணக்கான தங்கம், வெள்ளி நாணயங்களை எடுத்துக்கொண்டு, மிகவும் கவனத்துடன் முன்னே செல்வானாக.

போகும்வழியில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கி விற்பதற்காகக் கடைவீதிகள் நிறுவப்படவேண்டும்; நடிகர்கள்- நடனமாடுவோர் எல்லாரும் செல்லவேண்டும்; சமையற்காரர்களும், எப்போதும் இளமையோடு இருக்கும் பெண்பாலரும் செல்லவேண்டும்.

பரதனுக்குமுன் அணியில் படைவீரர்கள் செல்லட்டும். சாஸ்திர வல்லுநர்கள். இளமையிலேயே மெய்ஞ்ஞானம் பெற்றவர்கள், மனம் ஒருமைப்பட்ட அந்தணர்கள், பல்வகைத் தொழில்புரியும் தொழிலாளர்கள், தச்சர்கள், கருவூலக்காப்பாளர்கள், வேத விற்பன்னர்கள், என்னுடைய எல்லாத் தாய்மார்கள், அந்தப்புரத்திலுள்ள (பரதன் முதலியோரின்) மனைவியர், என்னுடைய மனைவி சீதையின் தங்கப்பதுமை, வேள்வியை நடத்தும்முறை தெரிந்த அந்தணர்கள் முதலியோர் பரதனுடன்கூட முன்னதாகச் செல்வார்களாக.

மாட்சிமை மிக்கவர்களும் கௌரவத்திற்கு உரியவர்களுமான சிற்றரசர்கள் மற்றும் அவர்களுடன் வருவோர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். குடிதண்ணீர், உணவு, உடை போன்றவைகளும் அவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைக்க வேண்டும்'' என்று மகாபலம் பொருந்திய இராமன் கட்டளையிட்டார். இதைக் கேட்டு, பரதனும் சத்ருக்னனும் முன்னதாகச் சென்றனர்.

சுக்ரீவனுடன் வந்திருந்த பக்தி- சிரத்தையுள்ள வானரர்கள், முக்கிய ஸ்தர்களுக்கும் விப்ரர்களுக்கும் உணவு பரிமாறினார்கள்.

ஏராளமான அரக்கர்களுடனும் பெண்மணிகளுடனும் வந்திருந்த விபீஷணன், கடுமையான தவம் செய்துவரும் மகாத்மாக்களை வரவேற்று உபசரிக்கும் பணியைச் செய்தான்.

(தொடரும்)

om011123
இதையும் படியுங்கள்
Subscribe