ரதத்தர் என்பவர் சிவபக்தர். தத்தம் என்றால் சமர்ப்பணம் செய்தல் என்று பொருள். சிவனுக்கு அர்ப்பணிக் கப்பட்டதால் இவர் ஹரதத்தர் எனப்பட்டார். அவரது ஆராதனை நாள் இவ்வாண்டு 5-2-2022 வசந்த பஞ்சமி தினம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.

வசந்த பஞ்சமி தினம் வங்காளத் தில் சரஸ்வதி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. தென்னாட் டில் நவராத்திரியின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை என்று கொண்டாடப்பட்டாலும், சரஸ்வதி ஜெயந்தி என்று கொண்டாடுவதில்லை. கவிஞர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு சரஸ்வதியின் கருணை வேண்டுமென்றாலும் சரஸ்வதி வழிபாடு குறைவுதான். தமிழகத்தில் கூத்தனூரில் மட்டுமே சரஸ்வதிக்கு தனிக் கோவில் உள்ளது. வேறெங்கும் தனிக் கோவிலைக் காண்பதரிது. மூன்று அரசர்களுக்கு அவைப் புலவராக விளங்கியவர் ஒட்டக்கூத்தர். இவர் பெயராலேயே இது கூத்தனூர் எனப்பட்டது. இந்த சரஸ்வதியின் அருளால்தான் கம்பர் இராமாயணம் எழுதினார் என்பர். சரஸ்வதி அந்தாதியும் பாடியுள்ளார்.

குமரகுருபரர் காசிக்குச் சென்றபோது, அவருக்கு உருது மொழி தெரியாததால், கூத்தனூர் சரஸ்வதி தேவியை வணங்கி "சகலகலாவல்- மாலை' என்னும் துதியைப் பாடி, சிம்மவாகனம் பெற்று, இஸ்லாமிய அரசருடன் உருது மொழியில் பேசி, காசியில் மடம் அமைக்க இடம்பெற்றார்.

Advertisment

dd

அந்த பத்து துதிகளில் ஒரு துதியை இங்கு காண்போம்.

"நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கய ஆசனத்தில்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே சகலகலா வல்லியே.'

லலிதா சகஸ்ர நாமத்தின் 948 நாமங்கள் பஞ்சமியே. பஞ்சமியன்று பஞ்சமி தேவியின் நாமம் சொன்னால்-

தஞ்சமடைந்தால் "அஞ்சாதே'

என்பாள்.

வங்காளத்தில் வசந்த பஞ்சமியை ஜெயதேவர் ஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர். சுமார் 800 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர். பஜனை செய்பவர்கள் மார்கழி, தை, மாசியில் பஜனைப் பூர்வமாக ராதா கல்யாணமும் செய்வார்கள். கண்ணன் லீலைகளை விரிவாகக் கூறும் ஸ்ரீமத் பாகவதம் 18,000 பாடல்கள் கொண்டது.

ஆனால் அதில் ராதா என்னும் நாமம் ஓரிடத் திலும் இல்லை. அது ஏன்? சுக முனிவர் ராதாவின் பெயர் சொன்னால் ஆறு மாதங்கள் சமாதி நிலையை அடைந்துவிடுவார். அதனால் பரீக்ஷித்து மகாராஜாவுக்கு அவர் உபதேசிக்கும் போது ராதா என்னும் நாமத்தைப் பயன்படுத்த வில்லை. அதுவே நாமத்தின் மகிமை!

ஜெயதேவர் கீத கோவிந்தம் என்று ரஸமய மாதுர்ய கிரந்தம் எழுதினார். எட்டு சரணங்கள், 24 பாடல்கள். எனவே அது அஷ்டபதி எனப் பட்டது. மேலோட்டமாகப் பார்த்தால் காமக் கேளிக்கைகள் போன்று தோன்றும். ராதா- கிருஷ்ணனின் பிரேமை, அன்பு, பிரிவு, விரகம் ஆகியவற்றை விவரிக்கும் பாடல்கள். ஆனால் அவற்றின் உட்பொருளை உணர்ந்தால் மெய்சிலிர்க்கும்; மனம் உருகும். பூரி ஜெகந்நாதர் உவந்து ஏற்ற பாடல்கள். ஒடிசி நடனத் தில் முக்கியமாகப் பாடப்படுகின்றன. பரதம், கதகளி நடனங்களிலும் பரவியுள்ளது. இந்தப் பாடல்களைப் பாடியே ராதா கல்யாணம், பஜனை சம்பிரதாயமாகச் செய்வர்.

வைணவ திவ்ய தேசங்களிலோ ஆழ்வார் களின் திவ்யப் பிரபந்தத்திலோ ராதையைக் காணமுடியாது. ருக்மிணி, சத்யபாமாவைதான் காணலாம். வடநாட்டில் கண்ணனுடன் ராதையைதான் காணமுடியும். ராஸலீலை யிலுள்ள தேவி என்பதால் அவள் பெயர் ராஸேஸ்வரி. ஜெயதேவரின் கீதகோவிந்தம்தான் ராதையின் மகிமையை வெளிப்படுத்தியது எனலாம்.

இனி ஹரதத்தர் வரலாற்றுக்கு வருவோம். சுதர்சனம் என்னும் வைணவ சிறுவன் சிவபெருமான்மீது ஆழ்ந்த பக்தி செய்ததால் அவன் பெயரே ஹரதத்தர் என்றாயிற்று.

திருக்கஞ்சனூர் என்னும் சிவத்தலம் கும்பகோணம்- பந்தனைநல்லூர் அருகே உள்ளது. அப்பர் திருத்தாண்டகம் பாடிய தலம். சிவபெருமான் அக்னீஸ்வரர்; அம்பாள் கற்பக நாயகி, கற்பகாம்பிகை என்னும் பெயர்களில் வழங்கப் பெறுகின்றனர். அக்னி, நான்முகன், பராசரர், சந்திரன், கம்சன், சுரைக்காய் பக்தர், மானக்கஞ்சாற நாயனார், கலிக்காம நாயனார் போன்றோர் வழிபட்ட தலம்.

பொதுவாக நடராஜரை பஞ்சலோக விக்ரக வடிவில்தான் காணலாம். சிதம்பரத் திலும் அப்படியே. உத்தரகோசை மங்கைத் தலம்போல, இங்கு நடராஜர் சிவகாமியுடன் கல் விக்ரகத்துடன் இணைந்துள்ளார். சுரைக்காய் பக்தரிடம் சிவன் அசைவ உணவு உண்டார் என்பர். கண்ணப்பரிடம் உண்டதுபோல!

சுதர்சனன் என்னும் சிறுவன் வைணவ மதத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு இத்தல சிவன்மீது மிகுந்த ஈடுபாடு. வைணவர்கள் மகாவிஷ்ணுவைதான் வணங்குவார்கள்; சிவனை வணங்க மாட்டார்கள். அதேசமயம் சிவன் கோவில்களில் மகாவிஷ்ணுவை நாம் தரிசிக்கலாம். பெருமாள் கோவில்களில் சிவனைக் காணமுடியாது. வடநாட்டில் சிவ- விஷ்ணு பேதமில்லை. இருவரையும் ஒன்றா கவே காணலாம்.

சுதர்சனனின் பெற்றோரும் உறவினர் களும் "சிவன் கோவிலுக்குப் போகாதே' என்று கண்டித்தனர். சிறுவனோ அதைக் கேட்பதில்லை. அடிக்கடி சிவதரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அந்த தட்சிணாமூர்த்தியே சிறுவனின் கன்னத்தை வருடி பஞ்சாட்சர உபதேசம் செய்தாராம். ருத்ராட்சம் தந்தாராம். அதனால் சிறுவனது சிவ ஈடுபாடு மேலும் அதிகரித்தது. சிவனே "ஹரதத்தா' என்று அழைத்தாராம். ஆக, அதுவே பெயராக நிலைத்தது. (தனிக் கோவிலும் அருகே உள்ளது.)

வைணவர்களுக்கு இது பொறுக்கவில்லை. எனவே அவனிடம், "நீ சிவபக்தி அதிகம் செய்கிறாய். அறுகம்புல் தந்தால் கல் நந்தி உண்ணுமா?' என்று மிரட்டினர். சிறுவனோ அஞ்சாமல், "அப்படியே நடக்கும்' என்றான்.

அனைவரது முன்னிலையிலும், "சிவ வாகனனே, நந்திகேஸ்வரா, சிவசிவா... இதோ இந்த அறுகம்புல்லை உண்க' என கொடுக்க, கல் நந்தியானது அந்த அறுகம்புல்லை உண்டது. அனைவரும் வியந்து நின்றனர்!

அவன் சிவ பக்தன்தான் என்று பாராட்டினார்களா என்றால் இல்லை. இரும்பைக் பழுக்கக் காய்ச்சி, "இதன்மேல் அமர்ந்து சிவனே பரம்பொருள் என்று நீ கூறவேண்டும்; உன் உடலில் தீக்காயம் ஏதும் ஏற்படக்கூடாது' என்று கூறினர்.

சிறுவனோ, "அதுவே சிவனது சித்த மெனில் நடக்கட்டும்' என்றான்.

அவ்வாறே செய்ய, பழுத்த இரும்பு அவனைச் சுடவில்லை. ஆனந்தமாய் அதிலமர்ந்து சிவ ஜெபம் செய்தான்.

குற்றாலத்தில் பெருமாளையே அகத்தியர் சிவனாக்கினார். தத்துவம் என்ன? ஹரி- ஹரன் என்னும் பேதம் கூடாது. எந்த வடிவம் எவருக்குப் பிடிக்கிறதோ அதை வணங்கலாம். மற்ற இறை உருவின்மீது வெறுப்பு கூடாது. சங்கரர் சிவனது அவதாரமே. அவர் ஷண்மத வழிபாடுகளை ஏற்படுத்தினார். திருவண்ணாமலை தல வரலாறு பிரம்மா, விஷ்ணுவைவிட சிவன் மேலானவர் என்று கூறுகிறது. சிவபக்தனான இராவணனை அழிக்க, சிவ அம்சமான அனுமன் உதவி இல்லாவிட்டால் இராமனால் அவனை அழித்திருக்க முடியாது.

"ராம' என்கிற நாமமே ஹரிஹர நாராயணா- நமச்சிவாய சேர்ந்ததுதான். ஹரதத்தருக்கு சிவன் கோவில் அருகிலேயே தனிச்சந்நிதி உள்ளது. வசந்த பஞ்சமி ஆராதனை விழா வெகு விமரிசையாக நடைபெறும். ஹரிஹர புத்திரன் ஐயப்பன் மாதத்தில் ஹரதத்தரையும் நினைப் போம்; சிவசிவ ஹரஹர குரு திருவடி சரணமடைவோம்.