யாழிசை மீட்டும் சுரத்திற்கேற்ப மதங்கம் தொடர, குழலிசை அதைப் பின் தொடர, மெல்லிய சதங்கை ஒலியுடன் அரங்கத்திற்குள் தங்களது இடை அசைத்து, மெல்லுடல் நடன மாதர்கள் அடியெடுத்துவைத்தனர். கூட்டத்தில் ஆரவாரங்கள் சிறிது சிறிதாக அடங்க அடங்க, அரங்கத்தில் ஒளியும் ஒலியும் அதிகரிக்கத் தொடங்கின. ஔவைக்கும் ஔவையைச் சார்ந்தவர்களுக்கும், பனை மரத்திலிருந்து புதிதாக இறக்கப் பட்ட சுண்ணாம்பு சேர்க்காத பதநீர் குவளைகளில் வழங்கப்பட் டன. அதை அருந்தும்போது, பயணக் களைப் பின் உடல் வலியில்லாமல், மெல்லிய மயக்கத்துடன் இரவில் நிம்மதியாகத் தூங்கலாம்.

நடன அரங்கேற்றம் உச்ச கதியில் இருக்கையில், அரங்கத்தின் பின்புறம் தொங்கும் வெண்ணிற திரைச் சேலைகளுக்குப் பின்னால், அகில் மரத்து நறுமணப் புகை ஏற்றப்பட்டு, முழு நிலவு வானத்தில் வெண் புகை மேகங்களாய் காற்றில் தவழ்ந்து, மக்கள் கூட்டத்தில் நறுமணம் பரப்பிக் கொண்டிருந்தது. அப்போது ஔவையுடன் வந்திருந்த மடவைப் பெண்கள், தங்களது உடலில் கவச உடை தரிக்க ஆரம்பித்தனர். தாங்கள் ஏற்றுவந்த பணியை ஆரம்பிக்கத் தொடங்கினர். கவசத்தின் மேல் மட வைக்குரிய ஆடை, அலங்காரம் செய்துகொண்டனர். கானை ரசம் கலந்த மூங்கில் அரிசிச் சோறும், கானைப்பயறு துவையலும் கொண்ட மண் கலயங்கள் அடுக்கி வைக்கப் பட்ட மூங்கில் கூடையை, தலையில் தூக்கிக்கொண்டு மக்கள் கூட்டத் திற்குள் அவர்கள் நுழைந்தனர்.

நெடுந்தூரப் பெருவழிப்பாதை பயணத்தில் வருபவர்களுக்கு உடல் சூடு அதிகரித்து, வயிற்றுப்புண், வயிற்று வலி உருவாகும். அதற்கு மிகச்சிறந்த மருந்தாக மூங்கிலரிசிச் சோறு, கானை ரசம் மற்றும் கானைப்பயறு துவையலை இரவில் சாப்பிடுவது பழந்தமிழர்களின் மரபாக இருந்தது.

மடவைப் பெண்கள், மக்கள் கூட்டங் களில் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று, இந்தச் சோற்றுக்கலயத்தை விற்பதுபோல், தீவெட்டி வெளிச்சத்தில் மக்களின் முகங்களை உற்று நோக்கத் தொடங்கினர். தங்களது உளவுப் பார்வை யால் அவர்களது மனங்களை ஆராய்ந் தனர். கூட்டங்களுக்கு அப்பாலும் அவர்களது கழுகுப் பார்வைகள் சென்றன.

Advertisment

ஒரு காத தொலைவில், குதிரைகளின் கனையச் சத்தங்களும், யானைகளின் பிளிறல் ஓசைகளும் கேட்டன. அவர்கள் அல்லங்காடி பக்கம் திரும்பியபோது, ஒரு யவன வீரன் கரும்பு வெல்லமும் கொள்ளும் வாங்கிக்கொண்டிருந்தான். இரவு நேரத்தில் இரண்டு யாமங்கள்வரை நடத்தப்படும் கடைகளுக்கு அல் அங்காடிகள் என்று பெயர். விரைந்து அவனுக்கு அருகில் சென்ற மடவை, யவன பாஷையில் நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே செல்கிறாய்? எனக் கேட்டாள். அவள் யவன மொழியில் பேசியதைக் கேட்டவுடன், அவன் முகம் மலர்ந்து பேச ஆரம்பித்தான். நான் போருக்குத் தேவையான குதிரைகளில் 10 குதிரைகளைப் பராமரிப்பேன். என்னைப் போன்ற பலபேர் குதிரைலாயப் பாசறை யில் இருக்கிறார்கள் என்றான்.

dd

மடவைப் பெண்களைப் பற்றி கடந்த அத்தியாயங்களில் விளக்கியிருந்தோம். இவர்கள் பருவமடையாத முதிர்வயதுப் பெண்கள். இவர்கள் பணிப்பெண்களாக இருந்து உளவு வேலை செய்வதற்காக, கூரிய அறிவாற்றலுடன் இருக்குமாறு பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். இவர்கள், தம் மன்னருக்கு எதிர் வினையாற்றும் மக்களை அடை யாளம் காணும் கழுகுப் பார் வையைக் கொண்டவர் கள். சந்தை யூரில் கலை நிகழ்வுகளில் கவனம் செலுத் தாமல் வேறு நிகழ்வுகளில் ஈடுபடுபவர்களைத் துல்லியமாகக் கவனித்தனர்.

அதில் அவன் கூறிய வார்த்தை அதிர்ச்சி தரக் கூடியதாக இருந்தது. மேலும், அவன் இன்னொரு வனைக் காட்டி, அவன் என்னோடு வந்த யானைப் பாகன். தன் யானைக்குத் தேவையான கரும்புக் கட்டுகளை வாங்கிவிட்டு, அதனை தன் யானை இருக்கும் இடத்திற்கு எடுத்து செல்ல இயலாமல் இருக்கிறான் என்றான். அவன் சொன்னவுடன் மடவை அவனுக்கு அருகில்சென்று, நாங்கள் பொதி மாட்டு வண்டிகள் வைத்திருக்கின்றோம். அதில் கரும்புக்கட்டுகளை ஏற்றிச் செல்லலாம். ஒருமுறை ஏற்றி இறக்கினால், ஒரு கள்ளு கலயம் தர வேண்டும் என்றாள். சரி, உன் யானை என்ன விலைபோகும்? என்றாள். அதற்கு பாகன், என்ன யானை விலைக்கு வேண்டுமா? அது என்ன வீட்டு யானை என நினைத்துவிட்டாயா? அது போன்ற நூறு யானைகள் எங்களிடம் உள்ளன. அவையனைத்தும் யாருக்கும் அடங்கா போர்க்குணம் படைத்தவை. ஒவ்வொன்றும் கோட்டை கதவுகளை உடைக்கும் திமிசு மரங்களைச் சுமந்து வந்திருக்கின்றன. ஊரே சேர்ந்தாலும் என் யானை என்னைத் தவிர யாருக்கும் அடங்காது. அதுபோல்தான் அனைத்து யானைகளும் அதனதன் பாகனைத் தவிர யாரையும் அருகே நெருங்கவிடாது என்று கூறியவுடன், மடவை சுதாரித்தாள். அவர் களிடம், "நீங்கள் இங்கேயே இருங்கள். நான் பொதி மாட்டு வண்டியைப் பூட்டிவருகிறேன்' எனக் கூறிவிட்டு ஔவையிடம் விரைந்தாள்.

அப்போது அவள் தலைக்குள் சுளீரென ஒரு வலி ஏற்பட்டு உடல் நடுக்கமுற்றது.

Advertisment

adff

ஔவையிடம் அவள் நடந்தவற்றை காதருகில் நடுக்கத்துடன் கூறினாள். ஔவை இவள் கூறியதைக் கேட்டுவிட்டு, "முதலில் நீ பதட்டப்படாமல் இரு' எனக் கூறிவிட்டு, அவளிடம் நம் நாவிதன், ஏகாளி, பணிக்கர் இருவர்கள் போன்றவர்களை விரைவாக அழைத்துவா எனக் கூறினார். அவர்கள் வந்தவுடன், அவர்களிடம் ஔவை சிறிது நேரம் பேசிவிட்டு, ஊர் சபையோர்களை அழைத்தார். நான் இந்த நாவிதனையும் நீர் உலர்த்தியாகிய ஏகாளியையும் உங்கள் ஊருக்கு தானமாகத் தருகின்றேன். இவர்களுக்கு இடமளித்துப் பார்த்துக்கொள்ளுங்கள் என விழா நிகழ்விலேயே தானமளித்தார். இரண்டு பனையேறிகளையும் தானமளித்தார். குடும்பாரை அழைத்து இவர்கள் நன்றாக சமைக்கத் தெரிந்தவர்கள். இங்கு உணவுச் சத்திரம் அமைப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்ற விண்ணப் பத்தை அவர்களிடம் கேட்டுக் கொண்டவு டன், சபையோர் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டனர்.

பின், குருமடத்திலிருந்து அழைத்துவந்தி ருந்த ஒரு மருத்துவ நிபுணரை அவர்களிடம் அறிமுகப்படுத்தி, இவர்கள் வேளவனப்பு என்ற யானைகளுக்கான மருத்துவம், பரிவனப்பு என்ற குதிரைகளுக்கான மருத்து வம், எருதுகளுக்கான மருத்துவம் மற்றும் மனிதர்களுக்கான அனைத்து மருத்துவங் களையும் எங்கள் குருமடத்தில் கற்றுத் தேர்ந்தவர்கள். இவர்கள் மூவரையும் பல பகுதி மக்கள் சந்திக்க, இந்த சந்தையூருக்காக, சேவைக்காக, குருமடத்தார் தந்த கொடை எனச் சபையோர்களிடம் ஒப்படைத்தார். கரும்புக் கட்டுகளை ஏற்ற பொதிமாட்டு வண்டி உடனுக்குடனே தயாரானது. திறம் மிக்க இரண்டு உளவாளிகள் வண்டியை ஓட்டிச்செல்லத் தயாரானார்கள். தன்னிடம் ஆலோசனைக்காக வந்த ஆடல் முதுமகளிரி டம், தான் அழைத்துவந்திருந்த ஒரு பெண்ணை ஔவை அறிமுகப்படுத்தினார். இவளுக்கு நடனக் கலைகளை சிறப்பாகக் கற்றுத் தந்துள் ளோம் இவள், தம் தாய்- தந்தையரை இழந்தவள். இவளுக்கு நீங்கள் தாயாக இருந்து, உங்கள் கலை வாரிசாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஔவை கூறியதைக் கேட்ட ஆடல் மகளிர், நான் அதற்குக் கொடுத்து வைத்தவளாக உள்ளேன். என் உயிராக நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி, அகமகிழ்ந்து ஏற்றுக்கொண்டாள். பாண்டிய இளவலுக் காக குரு மடத்தார் செய்யும் முதற்கடமை நிறைவுற்றது என ஔவை ஆறுதல் பெருமூச்சிறைத்தார்.

ஔவையாரால் தானமாகக் கொடுக்கப் பட்ட அனைவருமே ஒற்றர்கள். திமிசு மரக் கட்டைகளை போர் யானைகள் சுமந்து வருகின்றதென்றால், போர் மூளும் சூழல் உறுதியாகிவிட்டது என்று பொருள். இது பாண்டியரை நோக்கியோ அல்லது அவருக் குப் பெண் கொடுக்கப்போகிறவரை நோக்கியோ இருக்கலாம். எப்படியோ போர் மூள்வதை முறியடித்தாக வேண்டும்.

ஒரு பெருவழிப் பாதையில் இருக்கும் சந்தை யூரானது, ஒற்றர்களால் கண்காணிக்கப்பட வேண்டிய முக்கிய இடமாகத் திகழும். ஒரு நகரத்தில் நிகழும் அத்துணை நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் யாவும் முடிதிருத்துபவர் களுக்கும், மக்களின் வாழ்வுத் திறன்கள் நீர் உலர்த்திகளாலும், நன்கு அறியப்பட்டிருக் கும். அதுபோல மருத்துவ சேவைகள் அனைவருக் கும் தேவைப்படும். எதிரிகளுக்கும் தேவைப் படும். எனவே உளவு பார்ப்பதற்கு மருத்துவப் பணி அதிகமாகக் கை கொடுக்கும். பெரிய அரண்மனைகள், அதிலுள்ள அதிகாரி களைப் பற்றி நடன மாந்தர் அதிகமாக அறிந்து கொள்ள வாய்ப்புண்டு.

போர்த் தொழில்புரியும் அடிமட்ட வீரர்கள் மற்றும் திருடர்கள், தாங்கள் கள் உண்டபின் உண்மைகளை உளறிக் கொட்டிவிடுவார்கள். உணவுச் சத்திரங்களில், பலதரப்பட்ட பகுதிகளிலுள்ள விவரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம். ஆகவே சந்தையூருக்கு ஔவை வந்த நோக்கம் நிறைவுற்றது.

ஔவையார் தன்னோடு குருமடத்திலிருந்து வந்தவர்களிடம் உங்களுக்கு வழங்கப் பட்ட பானங்களை அருந்த வேண்டாம். நம் உணவுப் பட்டறையில் தயாரித்த உணவை மட்டுமே உட்கொள்ளுங்கள். இன்று இரவு முடிவதற்குள் இங்கு முகாமிட்டிருக்கும் யானை, குதிரைப் படைகளைப் பற்றிய செய்திகளை குருமடத்தாருக்கு விரைவில் அனுப்பிவைக்க வேண்டும் என்றபடி, அமைதி யாக நடன நிகழ்வுகளை நிறைவு செய்தார்.

தன் உணர்வுகளை ஊர்ச்சபையோர்களிடம் காட்டிக்கொள்ளாமல் அவர்களுக்கு நன்றி கூறி விடையளித்தார்.

யானைபாகன்கள் அணிந்திருக்கும் அடையாள முத்திரையை அறிந்து கொண்டு, நடு யாமப் பொழுதில் ஒரு சிறந்த குதிரை வீரனை குருமடத்திற்கு அனுப்பிவிடுமாறு கண்காணியரிடம் கட்டளையிட்டார்.

வரும் இதழில் ஔவையின் அறிவாற்றலை வியந்து பார்ப்போம்..