* புராதன காலங்காலிருந்தே கோலம் வீட்டிற்கு அத்தியாவசியமாக கருதப்பட்டதால் 64 கலைகüல் கோலமும் ஒன்றாக இடம்பெறுகிறது.

* பெரியாழ்வார் திருமொழி, ஆண்டாள் பாசுரங்கள், பெருங்கதை, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்கüல் வாசலிலும், மணவறையிலும் கோலங்கள் போடப்பட்டதற்கான செய்திகள் உள்ளன.

* தினமும் அதிகாலையில் வாசலைப் பெருக்கிக் கோலமிடுவதால் வீட்டில் மகாலட்சுமி வந்து குடியேறுகிறாள்.

* கோலக்கோடுகளை படிகüன் குறுக்கே வரையக்கூடாது. தலைவாசல் படிகள் தெய்வம்சம் நிறைந்தவை. லட்சுமி படியேறி வீட்டிற்குள் நுழைவதை அந்த குறுக்குக் கோடுகள் தடுக்கும் என்பார்கள்.

* அரிசி மாவினால்தான் கோலமிட வேண்டும். அதை காக்கை, எறும்புகள் வந்து சாப்பிடும்போது, அவைகள் நாம் அரிசி நிறைய பெற வேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் என்பது ஐதீகம்.

ss

* வெள்ளை நிற மாவில் கோலமிடும் வழக்கம் எப்படி வந்தது தெரியுமா? சுறுசுறுப்பை அதிகப்படுத்தும் தன்மை வெள்ளை நிறத்திற்கு உண்டு. கூடவே, குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சியாகும்.

* "இறைவா! இக்கோலத்தை தாண்டி வெüயில் செல்லும் செய்திகள் நன்மை தரக் கூடியவனாக அமைய வேண்டும்' என்று வேண்டிக்கொண்டு கோலம் போட்டால் வீட்டில் நன்மையே நடக்கும்.

* முப்பத்து மூன்று புள்üகள் கொண்ட கோலம் தெய்வ சக்தி வாய்ந்த கோலமாகக் கூறுவர்.

கோலத்தைச் சுற்றி செம்மண் இடுவது கடவுளுக்குக் கோயில் கட்டுவதற்கு சமம். எனவே, வாசலில் கோலமிடுவதால் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையாது.

* சாதாரணமாக கோலம் அழியக்கூடாது என்பார்கள். ஆனால் கோலத்தைக் குழந்தைகள், மழை, சுவாமி ஊர்வலம் அழிப்பதை நல்ல சகுனமாகக் கொள்வர்.

கோலம் போடும்போது ஆள்காட்டி விரலை நீக்கியே கோலமிட வேண்டும். கோலத்தைத் தாண்டுவது கொடும் குற்றம். கோலமிடுவதை வேலையாட்கள் செய்யக்கூடாது. அமாவாசை, திவசம் ஆகிய நாட்கüல் வாசலில் கோலம் போடக்கூடாது. கோலமிடும்போது சுப காரியங்களுக்கு ஒரு கோடு கோலம் போடக்கூடாது. அசுப காரியங்களுக்கு இரட்டைக் கோடு கோலம் போடக்கூடாது. தெற்கு பார்த்து அமர்ந்து கோலம் போடக்கூடாது. போடும் கோடு தெற்கில் முடியக்கூடாது.

* பூஜையறையில் பெயிண்ட் பயன்படுத்தி கோலம் போடக்கூடாது. நவகிரக கோலம் வீட்டு வாசலில் போடக்கூடாது. அதை பூஜை அறையில் மட்டுமே போடலாம். பண்டிகை நாட்கüல் அதற்குரிய தெய்வ வடிவங்களை வாசலில் கோலமாக இடுகி றார்கள். உதாரணமாக சிவராத்திரி அன்று வாசலில் சிவலிங்கத்தை கோலமாக வரைகிறார்கள். இது தவறாகும். அதை கவனக்குறைவாக யாரும் செருப்பு காலோடு மிதிக்க வாய்ப்பாகும். எனவே, இறை உருவங்களை கோலமாக வரைய விரும்பினால் அதனை பூஜை அறையில் வரையலாம்.

* கோலம் அழகாகவும் சரியாகவும் அமைவது ஒரு நல்ல சகுனமாகும்.