சிறிய கோவில்... பெரிய சக்தி! - விஜயாகண்ணன்

/idhalgal/om/small-temple-big-power-vijayakannan

துரை மாநகரில் வடக்குமாசி வீதி, மேலமாசி வீதி ஆகியவை சந்திக்கும் இடத்தில், கடந்த 150 ஆண்டுகளாக பக்தர் கüன் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தரும் அற்புத சக்திவாய்ந்த புகழ்பெற்ற மகாகணபதி அருள் பாலித்து வருகிறார். மகத்தான கோவில் இது. இந்த முத்தான முதன்மை தெய்வத் தின் சத்தான முழு விவரங்களை நம்மிடம் கூறினார் இத்திருக்கோவில் பூசாரிகüல் ஒருவரான முருகன்.

“இந்த அபார சக்திவாய்ந்த ஆனைமுகன் திருக்கோவில் துவங்கப்பட்டது யாரால், பிரதிஷ்டை செய்தது யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், மதுரை யில் பிறந்த எல்லாரும் வழிபடும் விநாயக ராக இவர் விளங்குகிறார். அனைவரும் அறிந்த இக்கோவில் 150 ஆண்டுகளாக இருந்து வருகிறது. பரம்பரை பரம்பரை யாக பலரும் தொடர்ந்து இங்கே வந்து மெய்சிலிர்க்க வணங்கி வருகிறார்கள். குறிப்பாக மதுரையில் பல ஆண்டுகளாக பிறந்து, வளர்ந்து வாழ்ந்துவரும், இங்கு பிறந்து வெüயூர்கள், வெü மாநிலங்கள், வெüநாடு கüல் வாழும் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர் களுக்கும் நன்கு தெரிந்த- பெரிதும் மதித்து வணங் கும் அற்புத சக்தி வாய்ந்த அபூர்வ கோவில் இது.

இதன் அருகிலுள்ள மக்கான் தோப்பு பகுதி மக்களுக்கு ப

துரை மாநகரில் வடக்குமாசி வீதி, மேலமாசி வீதி ஆகியவை சந்திக்கும் இடத்தில், கடந்த 150 ஆண்டுகளாக பக்தர் கüன் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தரும் அற்புத சக்திவாய்ந்த புகழ்பெற்ற மகாகணபதி அருள் பாலித்து வருகிறார். மகத்தான கோவில் இது. இந்த முத்தான முதன்மை தெய்வத் தின் சத்தான முழு விவரங்களை நம்மிடம் கூறினார் இத்திருக்கோவில் பூசாரிகüல் ஒருவரான முருகன்.

“இந்த அபார சக்திவாய்ந்த ஆனைமுகன் திருக்கோவில் துவங்கப்பட்டது யாரால், பிரதிஷ்டை செய்தது யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், மதுரை யில் பிறந்த எல்லாரும் வழிபடும் விநாயக ராக இவர் விளங்குகிறார். அனைவரும் அறிந்த இக்கோவில் 150 ஆண்டுகளாக இருந்து வருகிறது. பரம்பரை பரம்பரை யாக பலரும் தொடர்ந்து இங்கே வந்து மெய்சிலிர்க்க வணங்கி வருகிறார்கள். குறிப்பாக மதுரையில் பல ஆண்டுகளாக பிறந்து, வளர்ந்து வாழ்ந்துவரும், இங்கு பிறந்து வெüயூர்கள், வெü மாநிலங்கள், வெüநாடு கüல் வாழும் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர் களுக்கும் நன்கு தெரிந்த- பெரிதும் மதித்து வணங் கும் அற்புத சக்தி வாய்ந்த அபூர்வ கோவில் இது.

இதன் அருகிலுள்ள மக்கான் தோப்பு பகுதி மக்களுக்கு பாத்தியமான இந்த ஆலயத்திற்கு தற்போது தலைவராக என். தம்பிபாலன் உள்ளார். 21 கமிட்டி உறுப்பினர்கள் பக்தி சிரத்தையுடன் நடத்தி வரும் கோவில் இது.

முன்னாள் இந்தியப் பிரதமர் நேரு அவர்கள் மதுரை வந்தபோது இந்த இத்திருக்கோவிலின் சக்தி, சிறப்புகளை அறிந்து நேரில் வந்து, இந்த விநாயகரை லழிபட்டுச் சென்றது முதல் இத்திருக்கோவில் ஸ்ரீநேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோயில் என்று பெயர் பெற்றுவிட்டது.

நாயகா... விநாயகா... அன்பு சக்தி நாயகா... உண்மை சக்தி நாயகா... வேண்டி நின்றால் போதும்; வெற்றி வந்து சேரும். நாடிவிட்டால் போதும்; நலங்கள் யாவும் கூடும்... நாயகா... விநாயகா... என்று பக்தர்கள் இங்கே பாடிப் பரவசமடைந்து வருகிறார்கள்.

எந்த பிள்ளையாருக்கும் முதுகிற்குப் பின்னால் விக்ரகம் பார்க்க முடியாது. ஆனால், இந்த பிள்ளையாருக்கு மட்டுமே முதுகிற் குப் பின்னால் நாகலிங்கம் இருக்கி றது.

இந்த கோவில் விநாய கரை- பிரம்மாண்டமான அரச மரத்தின்கீழ் அமர்ந்து அருள் பாலிக்கும் பிள்ளையாரை கும்பிட்டு சுற்றிவரும்போது, சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்ட வாராகியம்மன், கால பைரவரை”யும் வணங்கி பரிபூரண திருப்தியடையலாம்.

ss

இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி” வரும் தினம் பிரம்மாண்டமாக விழா நடைபெறும். இந்தப் பகுதி போக்குவரத்து ஸ்தம்பித்துப் போகுமளவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட வந்துவிடுவார்கள்.

அதுபோல் மார்கழி மாதம் முழுக்க ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் குவித்து, நெற்றி நிறைய திருநீறு பூசி, நேரு ஆலால சுந்தர விநாயகா... உன் பாதங்களே சரணம் என்று விழுந்து வணங்க வந்துவிடுவார்கள்.

மார்கழி மாதத்தில் இத்திருக் கோவிலில் ஒலிக்கும் சீர்காழி கோவிந்தராஜனின் விநாயகனே... வினை தீர்ப்பவனே பாடலை அதிகாலையில் கேட்டு மெய்சிலிர்த் துப் போவது இக்கோவிலைச் சுற்றி யுள்ள மக்கüன் பல ஆண்டுகளாகத் தொடரும் பக்திப் பரவசப் பழக்கமாகிவிட்டது.

வைகாசி பால்குட விழாவும், மார்கழி மாதம் முழுக்க சிறப்புப் பூஜைகளும், ஐய்யப்ப பக்தர்கள் வழிபட்டுக் கிளம்பும் பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

வெள்üக்கிழமைகüல் திருமணமாகாத- திருமணம் தடைப்படும் பெண்களும் ஆண்களும் மஞ்சள் மாலைகட்டி, இந்த விநாயகருக்கு 108 நாட்கள் தொடர்ந்து அணிவித்து வந்தால் விரைவில் திருமணம் நடந்துவிடும். அப்படி திருமணமான பலர் தம்பதியாய் இங்கு வந்து ஆனந்தக் கண்ணீர்” வடித்து, இந்த நேரு ஆலால சுந்தர விநாயகருக்கு மனமுருக நன்றி சொல்லிவருவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவருகிறது.

எந்தவிதமான வியாதிகள், மனநல- உடல் நல பிரச்சினைகளையும் இந்த விநாயகர் தீர்த்து ஆயுள், ஆரோக்கிய, ஐஸ்வர்யமான கௌரவ வாழ்வை அüக்கிறார். நாடிவந்து மனமார வேண்டி நீயே கதியென்று பரிபூரண சரணாகதி அடையும் பக்தர்களுக்கு அருள் பாலித்து அற்புதம் நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

வழக்கு சம்பந்தமாக நியாயம் கிடைப்பதில் இழுபறி இருந்தால் இந்த விநாயகரை வணங்கி, 108 சிதறு தேங்காய், 1008 சிதறு தேங்காய் உடைக்கிறேன் என்று விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு வேண்டும் பக்தர்களுக்கு இந்த ஆலால சுந்தர விநாயகர் நேர்மை யான வெற்றிகளைத் தந்துவருகிறார்.

ஏதேனும் ஒரு பக்தர் நன்றிகூறி தினமும் சிதறு தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்துவதைக் கண்டு மகிழலாம். மூன்றுமுறை இந்த விநாயகரை சுற்றிவந்து வேண்டிச் சென்றால் வெற்றி உறுதி என்பது இந்த கோவிலின் நிரந்தர பக்தர்கüன் நம்பிக்கையாகும்.

சந்தனகாப்பு செய்து வழிபடுவது, பூக்கள் அலங் காரம் செய்து வழிபடுவது வெள்üக்கவசம், கிரீடம் சாற்றி வழிபடுவது இந்த மாபெரும் சக்தி வாய்ந்த விநாயகருக்கு பக்தர்கள் செய்துவருகிறார்கள். விபூதி காப்பும் உண்டு.

எல்லா துறை நீ வந்து முக்கியஸ்தர்களும் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்ற னர். குறிப்பாக அரசியல்வாதிகள், பிரபல திரைப்பட நடிகர்கள் மதுரை வரும்போது இந்த விநாயகர் கோவிலின் பெருமைகள், அற்புத அருள்சக்தி அறிந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

இத்திருக்கோவில் பக்தர்கள் வழி பாட்டிற்காக அதிகாலை ஐந்து மணிமுதல் மதியம் பன்னிரெண்டு மணிவரையும்; மாலை நான்கு மணிமுதல் இரவு ஒன்பது மணிவரையும் திறந்திருக்கும்.

குறிப்பாக இந்த விநாயகர் கோவிலுக்கு முன்பக்கம் உள்ள இடத்தில் மேடை அமைத்து தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற அனைத்து அரசியல் தலைவர்களும் பேசிச் சென்றது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

அந்தக் காலத்தில் குதிரை வண்டி ஸ்டாண்டட் இந்த கோவிலின் முன்புதான் இருந்தது" என்று கூறினார்.

மதுரை நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவிலுக்கு நாமும் சென்று வழிபடுவோம். நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.

இத்திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்ய தொடர்பு கைபேசி எண்: 6381748890

om010723
இதையும் படியுங்கள்
Subscribe