சீதை இராவணின் புதல்வியா? - மும்பை ராமகிருஷ்ணன்

/idhalgal/om/sita-daughter-ravana-mumbai-ramakrishnan

சீதா நவமி 14-4-2023

"இராம' என்று கூட

சொல்ல முடியாத

வேடனுக்கு "மரா'

என்று கூறும்படி நாரதர் சொல்ல, அவன் அதில் லயிக்க புற்றும் எழும்பி, வால்மீகி மகரிஷியாகி வால்மீகி இராமாயணம் 24,000 துதிகள் எழுதினானே!

கம்பர் கூத்தனூர் சரஸ்வதி அருளால் கம்ப இராமாயணம் என தமிழில் எழுதினார்.

துளசிதாசர் காசியில் அனுமன் அருளால் இராமாய ணம் எழுதினார். இராமாயணம் பல மொழிகளில் வந்துள்ளது! கிருபானந்தவாரியார் சீதாயணம் என்பார்.

இராமர் சத்ய தர்மசீலர். ஏகபத்தினி விரதம் கொண்டவர். தான் விஷ்ணு அவதாரம் என்று அவர் சொரூபம் காட்டவில்லை. மனித அவதாரம்!

கிருஷ்ணரோ பொய்யும் பேசுபவர்! பட்டத்தரசிகள் எட்டுபேர். 16,000 மனைவிகளும் உண்டு. குழந்தையாய் இருந்தபோதே விஸ்வரூபம் பலருக்கும் காட்டியுள்ளார்.

இராமர் செய்தபடி செய்; கண்ணன் சொன்னபடி செய் என்பதே தத்துவம்.

வினோதமாக அத்யாத்ம இராமாயணம். சிவன் உமைக்கு கூறியது உள்ளது. 4,200 சுலோகங்கள். இதனில் இராமர் தான் விஷ்ணுவின் அவதாரம் என உணர்த்தியே வாழ்ந்துள்ளார்.

சிவ- இராம இணக்கம் வினோதம்!

இராவணன் சிவ பக்தன். ஆக பிரம்மஹத்தி தோஷம் போக்க இராமேஸ்வரத்தில் சீதை மண்ணால் லிங்கம் பிடிக்க, இராமர் பூஜை செய்தார்.

அந்த சிவனோ காசியில் இறப்பவர் காதில் இராம நாமம் ஓதி முக்தியடையச் செய்கிறார். இதைக் கண்ணாரக் கண்டவர் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர். ஆக நம்பவேண்டிய விஷயம்!

உமை தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் துதிப்பவராம். ஒருசமயம் நேர அவசரமானதால் சிவனிடம் கூற, அவர்.

ஸ்ரீ ராம ராமேதி ராமே ராமே மனோரமே சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே.

ராம ராம என இருமுறை கூறுவதே ஆயிரம் விஷ்ணு நாமங்களுக்கு சமம் என்றார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 394 நாமம் "ராம' என்பதே.

காமத்திற்கு கண்ணில்லை. வயதும் இல்லை என்பர். காமத்தினாலேயே மகா சிவபக்த இராவணன், சிவனிடம் கயிலையில் ஆத்மலிங்கம் பெற்ற இராவணன், (அது பிள்ளையாரால் கோகர்ணத்தில் ஸ்தாபிக்கப்பட்டது) தன் உயிர் துறந்தான். விபீஷணனின் வாக்குகள் உணர்ந்தானா? (விபீஷணன் இராமரை சரணம் அடைய அவன் இலங்காதிபதி ஆனான்.

விஷ்ணுவுக்கு ஸ்ரீதேவி, பூதேவி என இரண்டு மனைவிகள். பூதேவியின் மறு அவதாரம் சீதாதேவி. இராம நவமிக்கு அடுத்த நவமி சீதா நவமி. சீதா ஜெயந்தி வடநாட்டில் கொண்டாடுகிறார்கள். சீ

சீதா நவமி 14-4-2023

"இராம' என்று கூட

சொல்ல முடியாத

வேடனுக்கு "மரா'

என்று கூறும்படி நாரதர் சொல்ல, அவன் அதில் லயிக்க புற்றும் எழும்பி, வால்மீகி மகரிஷியாகி வால்மீகி இராமாயணம் 24,000 துதிகள் எழுதினானே!

கம்பர் கூத்தனூர் சரஸ்வதி அருளால் கம்ப இராமாயணம் என தமிழில் எழுதினார்.

துளசிதாசர் காசியில் அனுமன் அருளால் இராமாய ணம் எழுதினார். இராமாயணம் பல மொழிகளில் வந்துள்ளது! கிருபானந்தவாரியார் சீதாயணம் என்பார்.

இராமர் சத்ய தர்மசீலர். ஏகபத்தினி விரதம் கொண்டவர். தான் விஷ்ணு அவதாரம் என்று அவர் சொரூபம் காட்டவில்லை. மனித அவதாரம்!

கிருஷ்ணரோ பொய்யும் பேசுபவர்! பட்டத்தரசிகள் எட்டுபேர். 16,000 மனைவிகளும் உண்டு. குழந்தையாய் இருந்தபோதே விஸ்வரூபம் பலருக்கும் காட்டியுள்ளார்.

இராமர் செய்தபடி செய்; கண்ணன் சொன்னபடி செய் என்பதே தத்துவம்.

வினோதமாக அத்யாத்ம இராமாயணம். சிவன் உமைக்கு கூறியது உள்ளது. 4,200 சுலோகங்கள். இதனில் இராமர் தான் விஷ்ணுவின் அவதாரம் என உணர்த்தியே வாழ்ந்துள்ளார்.

சிவ- இராம இணக்கம் வினோதம்!

இராவணன் சிவ பக்தன். ஆக பிரம்மஹத்தி தோஷம் போக்க இராமேஸ்வரத்தில் சீதை மண்ணால் லிங்கம் பிடிக்க, இராமர் பூஜை செய்தார்.

அந்த சிவனோ காசியில் இறப்பவர் காதில் இராம நாமம் ஓதி முக்தியடையச் செய்கிறார். இதைக் கண்ணாரக் கண்டவர் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர். ஆக நம்பவேண்டிய விஷயம்!

உமை தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் துதிப்பவராம். ஒருசமயம் நேர அவசரமானதால் சிவனிடம் கூற, அவர்.

ஸ்ரீ ராம ராமேதி ராமே ராமே மனோரமே சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே.

ராம ராம என இருமுறை கூறுவதே ஆயிரம் விஷ்ணு நாமங்களுக்கு சமம் என்றார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 394 நாமம் "ராம' என்பதே.

காமத்திற்கு கண்ணில்லை. வயதும் இல்லை என்பர். காமத்தினாலேயே மகா சிவபக்த இராவணன், சிவனிடம் கயிலையில் ஆத்மலிங்கம் பெற்ற இராவணன், (அது பிள்ளையாரால் கோகர்ணத்தில் ஸ்தாபிக்கப்பட்டது) தன் உயிர் துறந்தான். விபீஷணனின் வாக்குகள் உணர்ந்தானா? (விபீஷணன் இராமரை சரணம் அடைய அவன் இலங்காதிபதி ஆனான்.

விஷ்ணுவுக்கு ஸ்ரீதேவி, பூதேவி என இரண்டு மனைவிகள். பூதேவியின் மறு அவதாரம் சீதாதேவி. இராம நவமிக்கு அடுத்த நவமி சீதா நவமி. சீதா ஜெயந்தி வடநாட்டில் கொண்டாடுகிறார்கள். சீதை பிறந்த இடம் ஸ்தாமடி என்று, பீகார் பாட்னாவில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஜனகன் மாளிகை அங்கிருந்து 15 கிலோமீட்டரில் நேபாளத்தில் உள்ளது.

சீதை இராவணன் மகளா? சாபத்தால் அவ்வாறு நேர்ந்து மறைந் தாளா? விநோதமாக உள்ளதா? புராண, தல கதை என்ன கூறுகிறது?

வேதவதி சாபம்

குசத்வஜ மஹாராஜா வேதம் ஓதி பூதேவியே தன் மகளாக உதிக்க வேண்டும் என வேண்டினார்.

அவ்வாறு உதித்தவளுக்கு வேதவதி என்று பெயரிட்டார். அவள் மஹாவிஷ்ணுவை கணவனாக அடைய தவம் செய்தாள். விஷ்ணு வும் தவத்தில் மகிழ்ந்து, "நமது மணம் உனது அடுத்த அந்த பிறவியில்' என்றார்.

அவள் இருந்த ஆசிரமத்தின் மேலே ஆகாயத்தில் போய்க் கொண்டிருத்த இராவணன், அவளைக்காண, அழகில் மோகிக்க, அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

அவளோ சபித்தாள். "நீ எந்த பெண்ணையாவது பலாத் காரம் செய்தால் உன்தலை நூறு துண்டுகளாகச் சிதறும்; மேலும் நானே உனக்கு பெண்ணாக உதித்து உன் வம்சமே அழியக் காரணமாவேன்' என்று கர்ஜித்தாள். ஒரு வருட காலம் சீதை இராவணனது அசோக வனத்தில் இருந்தாலும் பலாத்காரம் செய்யவில் லையை) அவள் தீயில் குதித்து ஐக்கியமானாள்.

சீதை வினோத அவதாரம்

இராவணன் தினமும் 1,008 தாமரை மலர்களால் சிவனைப் பூஜை செய்பவன். ஒருசமயம் ஒரு பூவில் புழு இருக்க, அதனைப் பூஜிக்காமல் பக்கத்தில் வைத்தான். சிறிது நேரத்தில் அந்தப் புழு சிறு பெண் குழந்தையாயிற்று. குழந்தையின் முக லாவண்யம் கண்டு வியந்தான்; மகிழ்ந்தான். அச்சமயம் அவனுடைய மந்திரி எதேச்சையாக வந்தான்.

அவனுக்கு சாமுத்திரிகா லட்சணம், ஆழ்ந்த ஜோதி டம், உதித்த நேரப் பலன்கள் யாதும் அறிந்தவன்.

இராவணன் மந்திரியிடம் "குழந்தை மிக அழகாக உள்ளது அல்லவா?' என்றான்.

மந்திரியோ, "அரசே! இந்த பெண்மீது அதிக பாசம் வைக்காதீர். அவளே உமக்கு மிருத்யு (சாக காரணம்) ஆவாள்' என்றான். அவ்வாக்குக்கு மதிப்புக் கொடுத்து, குழந்தையை ஒரு தங்கப் பெட்டியில் வைத்து கங்கையில் விட்டுவிட் டான். அது கங்கையில் உருண்டு ஓடியது.

ஜனக மகாராஜா தனக்குப் பெண் வாரிசு தேவை என ஒரு யாகம் செய்ய நினைத் தார். அதற்கு கலப்பையால் நிலம் உழுது சீர்செய்தார். ஒரு தங்கப் பெட்டி தடுத்தது. (இராவணன் கங்கையில் இட்ட தங்கப் பேட்டியே) அதிசயித்து பெட்டியைத் திறந் தால் அழகிய பெண் குழந்தை- யாகம் செய்ய நினைத்த போதே கிடைத்து விட்டாளே என மிக மிக மகிழ்ச்சி அடைந்தான்.

கலப்பைக்கு வடமொழிப் பெயர் ஸீதா. ஆக அவள் சீதா. ஜனகர் புத்ரி. ஆக ஜானகி. மிதிலாபுரி, விதேக தேச இளவரசி. ஆக மைதிலி, வைதேகி.

அந்த இடமே ஸீதாமடி. இன்றும் சிறிய கோயிலில் ராம, சீதா, லட்சுமனருடன் காணலாம். ஜனகர் உழுவது போன்ற படங்கள் காணலாம். சீதை ஜனகரிடம் வளர்ந்தாள். ஜனகரிடம் சிவனது வில் ஒன்று இருந்தது. அது கனமானது. பலராலும் அசைக்கக்கூட முடியாது. சீதை சிறு பெண். தன் விளையாட்டு பந்து அந்த வில் பெட்டியின்கீழே புக, அவள் தனது இடது கையால் பெட்டியை நகர்த்தி எடுத்தாள். இதனை எதேச்சையாகக் கண்ட ஜனகர் அந்த வில்லை எடுத்து நாணேற்று பவனுக்கே சீதையுடன் மணம் என நிச்சயித்தார். பல் அரசர்கள் வந்து பார்த்தும் இயலவில்லை.

ramanavami

இராவணனும் வந்தான். அவனால் தூக்க முடியவில்லை. கை கீழே நசுங்க ஹா என்று அலறினான். சீதை இதனைக் கண்டு உரக்க சிரித்தாள். "சிரிக்கிறாயா? உன்னைக் கவர்ந்து சென்று அழவைக்கிறேன் பார்' என்று உறுமி னான். (பஞ்ச பாண்டவர் நகர அரண்மனைக்கு துரியோதனன் வந்தான். ஓரிடம் சாதாரணத் தரை என்று நினைத்தான். அது சிறிய குளம். ஆக அவன் உடை நனைந்தது. பாஞ்சாலி சிரித் தாள். மற்றொரு இடம் நீர்த் தரை என நினைத்து உடைகளைத் தூக்கினான். ஆனால், அது சாதாரண தரைபாஞ்சாலி மீண்டும் சிரித்தாள். துரியோதனன் உறுமினான் "சிரிக்கிறாயா உன்னை அழ வைக்கிறேன் பார்' என்றான்.

ஆகவேதான் பெண்கள் உரக்க சிரிக்கக் கூடாது என்பர்) விசுவாமித்திரர், ராம இலட்சுமணர்களை ஜனகன் அரண்மனைக்கு அழைத்து வர, அவர் கூறி இராமன் வில்லை எடுத்து நாண்பூட்ட வில் ஒடிந்தது. சீதை மாலையிட்டாள். தசரதர் பரிவாரங்களுடன் வர, ராமர்- சீதை, இலட்சுமணன்- ஊர்மிளா, பரதன் - மானஸ்வி, சதருக்கனன்- ஸ்ருத கீர்த்தி என நான்கு திருமணங்கள்.

இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய தசரதர் விரும்பினார். கைகேயிக்கு முன்னர் தந்த இரு வரத்தால், இராமர் காட்டுக்கு 14 வருடம் போக நேர்ந்தது. இராமர் தடுத்தாலும் சீதையும் காட்டுக்கு வந்தாள். (இராவண வதம் ஆகவேண்டுமே) இலட்சுமணனும் தொடர்ந் தான். (14-வருடம் கல்யாணமானவன் பிரமச் சரியம் அனுஷ்டித்தால்தான் இந்திரஜித் வதம் ஆகும்) 13 வருடங்கள் சீதை, இராமர் வனவாசம் ரிஷி முனிவர்களுடன் சுகந்த வசந்தமே. இராமர் அழகில் மயங்கினாள் சூர்ப்பனகை. இராமன் "இலட்சுமணனை நாடு' எனக் கூற, அவன் அவள் மூக்கை அறுத்தான். அவள் இராவணனிடம் ஜானகியின் அழகைக் கூற, இராவணன் சீதையை மாரீசன் உதவியால் சீதையை அபகரித்தான். அசோகவனத்தில் வைத்தான். பலாத்காரம் செய்யவில்லை. செஞ்சினான். பயமுறுத்தினான். தோழிகளிடம் அவளை இசைய வையுங்கள் என்றான்.

ஸ்ரீலங்காவில் துவார எலியா என்ற இடமே அசோக வனம் என்கின்றனர். அனுமன் இலங்கையில், கால்வைத்த இடத்தில் சின்மயானந்தா மிஷன் அனுமனுக்கு ஒரு கோவில் கட்டியுள்ளனர். சீதை இருந்த இடம் ஒரு இராமர் கோவில் உள்ளது விக்ரகம் முழுவதாக இல்லை. காரணம் கேட்டால் "ஒரு கல்லில் சீதை, இராமர் உருவம் கையால் எழுதி வரைத்து தொழுதாள்' என்கின்றனர். அருகே ஒரு ஓடை உள்ளது. ஒரு சிறிய பாதம், பெரிய பாதம் உள்ளது. சிறியது அனுமனது. சீதை, அனுமன் உருவத்தில் இராவணனா என்று சந்தேகிக்க, அனுமன் தன் விஸ்வரூபம் காண்பித்தாராம். பெரிய பாதம் அதுவாம்.

அங்குள்ள மண் கருப்பாக பிசுக்கற்றது போல் உள்ளது. அசோக மரம் தவிர வேறு எந்த செடி, மரம் வளராதாம். காரணம் கேட்டால் அனுமன் இலங்கையை எரித்ததின் அடையாளம் என்கின்றனர்.

இலட்சுமணனுக்கு உயிர்ரூட்ட அனுமன் கொணர்ந்த சஞ்சீவி மலை பெரிய வனமாக உள்ளது. (அங்கு இலங்கை அரசின் ஆயுர்வேத மருந்துகள் செய்ய பலவித மரங்கள் உள்ளன. அதற்கு மருத்துவர் கோயமுத்தூர்க்காரரே! இவ்விடங்கள் யாவும் நான் தரிசித்துள்ளேன்) சீதைக்கு ஏன் அக்கினிப் பரீட்சை?

இராவணவதம் முடிய, சீதை இராமனை அச்சமயம் இருந்த நிலையுடன் இராமனைக் காண விரும்பினாள். ஆனால் இராமரோ இலட்சுமணனை தீமூட்டச் சொல்லி, சீதையை அக்கினியில் புடம்செய்ய வைத்தார். என்ன காரணம்? சீதையின் கற்பில் சந்தேகமா? அந்தக் கோவிலும் சீதை விக்ரகத்துடன் உள்ளது. பௌத்த மட சந்நியாசி மேற்பார்வையில் உள்ளது.

காரணம் இருவிதம்: மாரீசனைத் தேடி இராமர் சென்றார். அவனோ, "லட்சுமணா' என்று ராமர் குரலில் இறந்தான். சீதை இலட்சுமணனை "குரல் வந்த திசையை நோக்கிப் போ தேடு' என்றாள். அவனோ மறுத்து "அண்ணியைக் காக்கவே இராமனது ஆக்ஞை' என்றான். சீதையோ குமுறி, நான் தனியாயிருக்கும் சமயம் என்னைச் சுகித்திடத்தான் எங்களுடனே காட்டுக்கு வந்தாயா' என்றாள். அச்சமயம் இலட்சுமணன் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும்!

மற்றது: இலட்சுமணன் இராமரைத் தேடிச் செல்லும் முன் பர்ணசாலை முன் ஒரு கோடு கிழித்து, "இதனைத்தாண்டி வெளிவர வேண்டாம்' என்றான். இராவணன் வர, அதைத் தாண்ட, அக்னி ஜுவாழையால் தகித்தது. ஆக, அதனைத் தாண்டி பிச்சையிட வேண்டினான்.

சீதை உள்ளே அக்னி மூட்டி அதனுள் பிரவேசித்தாள். வேதவதியே மாயா சீதையாக வெளிவர, இராவணன் கடத்தியது மாயா சீதையையே! இராவண சம்காராமாக! ஆக அந்த மாயா சீதை அக்னியில் புக, அசல் சீதை வந்தாள்.

வேதவதியான மாயா சீதை "என் திருமணம்' என வேண்ட, இராமர் "நீ ஆகாசராஜா மகள் பத்மாவதியாக உதிக்க, நான் வேங்கடேசனாக வர, நமது திருமணம்' என்றார்.

சீதையால் இராவண வதம்!

வால்மீகிக்கு சீதையின் பிரபாவம் முழுதும் விளங்கவில்லை என்கிற வருத்தமாம். ஆக வால்மீகி பரத்வாஜ சம்வாதமாக எழுந்தது அற்புத இராமாயணம்.

அதனில் அற்புத உத்தர காண்டத்தில், சீதையின் மகிமையை ஆதிபராசக்தி, காளி போன்று உக்ர மூர்த்தியாய் சக்தி பொருந்திய வள் என்று இராமர் சீதையை சகஸ்ரநாமங் களால் புகழ்கிறார். ஏன்? இராவண சம்ஹாரம் ஆனதும், யாவரும் இராமரை வெகுவாகப் புகழ்ந்தனராம்.

சீதை சொன்னாள்: "இராமர் கொன்றது பத்து தலை இராவணனை, நான் கொன்றது ஆயிரம் தலை இராவணனை!'

எப்படி?

மானசோத்தாரண தீவில் கைகசி என்ற பெண். அவள் விஸ்ரவஸை மணந்து இரு புதல்வர்களைப் பெற்றாள். ஒருவன் பத்து தலை இராவணன். மாற்றவன் ஆயிரம் தலை இராவணன். பத்து தலை இராவணன் வதமானது தெரிந்து ஆயிரம் தலை இராவணன் புஷ்கர் என்னும் தீவிலிருந்து வெளியேறி, இராமர் சைன்யங்களுடன் பலத்த போர் புரிந்தான். பலர் இறந்தனர். இராமர் சக்தியற்றுப் போனார்.

இதனைக் கண்டு சீதை ஆதிபராசக்தி காளியாக உதித்து, மகா வக்ர சக்தி தேவியாகி ஆயிரம் தலை இராவணனை வதைத்தாள். தன் சக்தியால் இராமர் சைன்யங்களைக் காத்து யாவருக்கும் உயிர்பிச்சை தந்தாள்.

இதனால், மனம் மகிழ்ந்த இராமர் சீதாதேவியை ஆயிரம் நாமங்களில் துதித்தார். ஆதி, அனாதி, சர்வ சக்திமயி, பிரானேஸ்வரி என்றெல்லாம் போற்றும். பலஸ்ருதிக ஏழு.

அதில் ஒன்று-

யத்ர ஓதத் பட்யதே, ஸம்யஜ் ஸீதா, நாம

ஸஹஸ்ரஹம், மஹா பாபாதி பாபானி விலயம்யாந்தி

ஸுவிரதம்.

இந்த ஸஹஸ்ர நாமம் துதிக்க, மஹா உன்னத பாவங்களும் தீரும்.

சீதா ராம தரிசனம் கிடைப்பதில் சந்தேகம் இல்லை.

om010423
இதையும் படியுங்கள்
Subscribe