பெருமாளுக்குப் பல்லாண்டு பாடிய சித்தர்! முனைவர் இரா. இராஜேஸ்வரன்

/idhalgal/om/siddhar-sang-perumal-many-years-dr-ira-rajeswaran

ம் உறவினர்கள், நண்பர்களின் திருமணம், பிறந்தநாள் போன்ற சுப காரியங்கள் நடக்கும் சமயத்தில், "வாழ்க பல்லாண்டு!' என வாழ்த்துவது மரபு. முழு முதற்கடவுளான ஸ்ரீமந் நாராயணனை பல்லாண்டு பல்லாண்டு என்ற மங்கலச் சொல்லாலே வாழ்த்தும்விதமாக "திருப் பல்லாண்டு' பாடியவர்தான் பெரியாழ்வார்.

"மங்களாசாசனத்தில் மற்றுள்ள வாழ்வார்கள்

தங்களார்வத்தளவுதானன்றி பொங்கும்

பரிவாலே வில்லிபுத்தூர்ப்பட்டர் பிரான் பெற்றான்

பெரியாழ்வாரென்னும் பெயர்'

என உபதேசரத்தின மாலையில் மண வாள மாமுனிகள் பாடியுள்ளார். ஸ்ரீமந் நாராயணன் எனும் திருமாலை வழிபடும் வைணவ சமய பெரியவர்களை ஆழ்வார் கள், ஆச்சார்யர்கள் என இருவகையாகப் பார்க்கலாம். செந்தமிழால் பக்திப் பரவசத் துடன் பாசுரங்களைப் பாடியவர்கள் ஆழ்வார்கள். ஆச்சார்யர்கள் என்பவர்கள் ஆழ்வார்களின் வழியில் நின்று வைணவ சித்தாந்தத்தை வைதீக நெறியுடன் வளர்ப்பவர்கள்.

"ஆழ்வார்' எனும் சொல்லுக்கு திருமாலின் திருக்கல்யாண குணங்களைப் பற்றி ஆழ்ந்த பக்தியுடன் ஈடுபடுவோர் என்கிற பொருளுண்டு. இங்ஙனம் ஆழ்வார் கள் பன்னிருவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பே "நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்' எனும் வைணவ சித்தாந்த தமிழ் நூல். ஆழ்வார்களால் பக்தி இயக்கமும் வளர்ந்தது. தமிழும் வளர்ந்தது. நம்மாழ் வார், ஆண்டாள் போன்று பெரியாழ் வார் கண்ணபிரான் மீது மிகுந்த பக்தி யும், அன்பும் கொண்டதால், கண்ணனின் குழந்தைப் பருவ நிகழ்வுகளை பெரியாழ்வார் திருமொழியில் மிக அழகாக காப்பு, செங்கீரை, தால், சப்பாணி போன்ற பத்துப் பருவங்களைப் பிரித்து பருவத்திற்கு பத்துபாடல் வீதம் பாடும் பிள்ளைத் தமிழுக்கு முன்னோடியாக பெரியாழ்வார் திகழ்ந்தார்.

தென்பாண்டி நாடு என்று அழைக்கப்படும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) சமேத ரங்கமன்னா

ம் உறவினர்கள், நண்பர்களின் திருமணம், பிறந்தநாள் போன்ற சுப காரியங்கள் நடக்கும் சமயத்தில், "வாழ்க பல்லாண்டு!' என வாழ்த்துவது மரபு. முழு முதற்கடவுளான ஸ்ரீமந் நாராயணனை பல்லாண்டு பல்லாண்டு என்ற மங்கலச் சொல்லாலே வாழ்த்தும்விதமாக "திருப் பல்லாண்டு' பாடியவர்தான் பெரியாழ்வார்.

"மங்களாசாசனத்தில் மற்றுள்ள வாழ்வார்கள்

தங்களார்வத்தளவுதானன்றி பொங்கும்

பரிவாலே வில்லிபுத்தூர்ப்பட்டர் பிரான் பெற்றான்

பெரியாழ்வாரென்னும் பெயர்'

என உபதேசரத்தின மாலையில் மண வாள மாமுனிகள் பாடியுள்ளார். ஸ்ரீமந் நாராயணன் எனும் திருமாலை வழிபடும் வைணவ சமய பெரியவர்களை ஆழ்வார் கள், ஆச்சார்யர்கள் என இருவகையாகப் பார்க்கலாம். செந்தமிழால் பக்திப் பரவசத் துடன் பாசுரங்களைப் பாடியவர்கள் ஆழ்வார்கள். ஆச்சார்யர்கள் என்பவர்கள் ஆழ்வார்களின் வழியில் நின்று வைணவ சித்தாந்தத்தை வைதீக நெறியுடன் வளர்ப்பவர்கள்.

"ஆழ்வார்' எனும் சொல்லுக்கு திருமாலின் திருக்கல்யாண குணங்களைப் பற்றி ஆழ்ந்த பக்தியுடன் ஈடுபடுவோர் என்கிற பொருளுண்டு. இங்ஙனம் ஆழ்வார் கள் பன்னிருவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பே "நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்' எனும் வைணவ சித்தாந்த தமிழ் நூல். ஆழ்வார்களால் பக்தி இயக்கமும் வளர்ந்தது. தமிழும் வளர்ந்தது. நம்மாழ் வார், ஆண்டாள் போன்று பெரியாழ் வார் கண்ணபிரான் மீது மிகுந்த பக்தி யும், அன்பும் கொண்டதால், கண்ணனின் குழந்தைப் பருவ நிகழ்வுகளை பெரியாழ்வார் திருமொழியில் மிக அழகாக காப்பு, செங்கீரை, தால், சப்பாணி போன்ற பத்துப் பருவங்களைப் பிரித்து பருவத்திற்கு பத்துபாடல் வீதம் பாடும் பிள்ளைத் தமிழுக்கு முன்னோடியாக பெரியாழ்வார் திகழ்ந்தார்.

தென்பாண்டி நாடு என்று அழைக்கப்படும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) சமேத ரங்கமன்னார் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை வடபெருங்கோவில் என்றும் அழைப்பர். இன்றைக்கு தமிழக அரசின் அரசு முத்திரையில் இடம்பெற்றிருக்கும் ராஜகோபுரம் இக்கோவிலின் அழகான ராஜகோபுரம்தான்.

இத்தலத்தில் முகுந்தபட்டர், பதுமவல்லி என்கிற, வைணவ சமயநெறியைப் பின்பற்றும் தம்பதியினர் வாழ்ந்துவந்தனர். இறைவன் ரங்கமன்னார் அருளால் கலியுகம் பிறந்த 47-ஆவது ஆண்டான குரோதன வருடம், ஆனி மாதம் சுக்லபட்ச ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம்கூடிய ஞாயிற்றுக்கிழமை நன்னாளில் கருடாழ்வார் அம்சமாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பெற்றோர் விஷ்ணுசித்தர் என்கிற பெயரைச் சூட்டினார்கள். ஸ்ரீ வைணவ நெறியில் கருடாழ்வாரை "பெரிய திருவடி' என மரியாதையுடன் அழைப்பார்கள். காரணம் திருமாலுக்கு கருடன் வாகனமாக இருக்கும்போது, திருமாலின் பொற் திருவடிகளைத் (பாதம்) தம் கைகளால் தாங்கிக்கொண்டு அவரை தம் தோளில் தாங்கிக்கொண்டு பறப்பதால் பெரிய திருவடி எனும் பெயர் வந்தது. கருடனின் அங்கங்கள் யாவும் வேத பாகங்கள் என வேதமே பெருமையாக கூறுகிறது.

பெரியாழ்வார் வாழ்ந்த காலம் பற்றி சரியான தகவல் கிட்டாததால், சில வரலாற்று ஆசிரியர்கள் கி.பி. 850 அளவில் இருக்கலாம் என்றும், கி.பி. 690-கி.பி. 775 வரை வாழ்ந்து இருக்கலாம் என மகாவித்துவான் மு. இராகவையங்கார் ஒரு கருத்தைக் கூறுகிறார்.

dd

குழந்தைப் பருவம் முதற்கொண்டே திருமாலிடம் மிகுந்த பக்தியைக் கொண்டவராக விஷ்ணு சித்தர் திகழ்ந்தார். வேத வடிவான கருட பகவான் அம்சம் என்பதால் அனைத்து வேதங்கள், சாஸ்திரங்கள், கலைகளை சிறுவயதிலேயே கசடறக் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதில் மாலா காரர் (இறைவனுக்கு பூமாலை கட்டுபவர்) பற்றிய கதையைக் கேட்டதால், அவரைப் போன்று தானும் கண்ணபிரானுக்கு மாலையைக் கட்டி அழகு பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் உதித்தது. இதற்காக கோவில் அருகே அழகிய நந்தவனத்தை ஏற்படுத்தி அதில் விதவிதமான நறுமணம்கொண்ட மலர்ச் செடிகளையும் நறுமணமுள்ள திருத்துழாய் (துளசி) செடியை யும் வளர்த்துவந்தார். தினமும் கிடைக்கும் மலர்களைக்கொண்டும், துளசி இலையைக் கொண்டும் விதவிதமான வடிவில் மாலையைத் தயாரித்து வடபெருங்கோவிலுடையானுக்கு சாற்றி மகிழ்வார். இதுவே அவரது நித்யபணி.

அந்த காலகட்டத்தில் மதுரை மாநகரை ஸ்ரீவல்லபதேவன் என்கிற பாண்டிய மன்னர் (ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்) ஆட்சி புரிந்து கொண்டிருந்தார். இம்மன்னன் காலம் கி.பி. 835-862 எனக் கூறுவதுண்டு. ஒருநாள் நள்ளிரவில் மன்னர் நகர சோதனையைச் செய்தபோது ஒரு ஏழை பிராமணன் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்பி யார் என மன்னர் வினாவினார். தான் ஒரு யாத்திரீகன் என்றும், காசியிலிருந்து வந்திருப்பதாகவும் கூறினான். உடனே மன்னன் அவனிடம் "உனக்குத் தெரிந்த ஒரு நல்ல செய்தியைச் சொல்'' என கேட்க, அந்த ஏழை பிராமணன், மறுமை யிலும் (அடுத்த பிறவி) இன்பத்துடன் வாழ இப்பிறவியிலிருந்தே முயற்சிக்க வேண்டும்' என்கிற பொருளில் ஒரு சுலோகத்தைச் சொல்லி, அதன் பொருளை விளக்கினான். இதைக்கேட்டு மன்னர் சற்று அதிர்ச்சியடைந்தார். காரணம், மறுமை பற்றி அவர் யோசிக் கவே இல்லை. அன்றிரவு முழுவதும் அதே சிந்தனையில் இருந்த மன்னர் மறுநாள் காலையில் அரசவையில் "மறுமையில் பேரின்பம் பெறுவதற்கு என்ன வழி'' என அரசவை அறிஞர்கள், பண்டிதர்களிடம் கேட்டார். மன்னரின் தலைமை புரோகிதர் செல்வ நம்பியிடம் தன் சந்தேகத்தின் விளக்கம் பெறும் பொறுப்பை மன்னர் ஒப்படைத்தார்.

அன்றைக்கு அவையில் வீற்றிருந்தவர்கள் பலரும் பலவாறு வேதாந்த கருத்துக்களை கூறியும் மன்னர் சமாதானம் அடையவில்லை. பொதுமக்களிடம் விளக்கம் கேட்டு பெரிய பரிசுத் தொகை என செல்வநம்பி சொன்ன யோசனையை மன்னர் ஏற்றார். அதன்படி பொதுமக்களுக்கு மன்னரின் சந்தேகம் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டது. பொற்கிழி ஒன்று அரசவையின் தோரணத்தில் பரிசுப் பொருளாகக் கட்டப்பட்டது. பல வித்வான்கள், வேத பண்டிதர்கள், சான்றோர்கள் முயற்சி செய்தும் ஏந்தவிதமான பயனும் இல்லை.

பாண்டிய மன்னரின் சந்தேகம் பற்றிய தகவல் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த விஷ்ணு சித்தருக்கு தெரியவந்தது. சாதாரண மனிதனான தனக்கும் வேதாந்த சர்ச்சைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என எண்ணி புஷ்ப கைங்கர்யம் செய்யும் வேலையில் ஈடுபட்டார். அன்றிரவு விஷ்ணு சித்தரின் கனவில் திருமால் தோன்றி, மன்னரின் சந்தேகத்தைத் தீர்த்து, பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறி ஆசீர்வதித்தார். தனக்கு இதில் உடன்பாடு இல்லாவிடிலும் பெருமாளின் உத்தரவு என்பதால் சற்று பயத்துடன் தன்னுடைய நண்பர்களுடன் மறுநாள் அரசவைக்கு விஷ்ணு சித்தர் சென்றார்.

அரச அவையில் வீற்றிருந்த பல அறிஞர் கள், வேத பண்டிதர்கள் கேட்ட கேள்விகளுக் கும், சந்தேகங்களுக்கும் வேதம், உபநிஷத்து, இதிகாசம், புராணங்கள் போன்றவற்றிலிருந்து மேற்கோள்காட்டி தக்க பதிலை உடனுக் குடன் அளித்தார். அவையில் குடியிருந்த அனைவரின் பாராட்டையும் பெற்றார். முடிவில் மறுமையில் பேரின்பம் தருவது "மால் நெறியே மேல் ஒரு நெறியும் இல்லாத மெய்ந்நெறி' என்று, திருமாலை சரணடைந் தால் நிச்சயம் பேரின்பம் கிட்டும் எனவும் தெளிவுபடக் கூறினார். இந்த பதிலை மன்னர் ஏற்க சபையோர் அனைவரும் மகிழ்ந்தனர்.

உடனே அரசவையில் கட்டி இருந்த பொற்கிழியும் விஷ்ணு சித்தரை நோக்கி கீழே விழுந்தது. இது இறைவனின் தீர்ப்பு என அனைவரும் ஏற்றனர்.

மனமகிழ்வு பெற்ற மன்னர் அவருக்கு "பட்டர்பிரான்' (அறிஞர்களுக்கு எல்லாம் தலைவர்) என்கிற சிறப்புப் பட்டத்தை சூட்டி, மாலை மரியாதையை மன்னர் செய்தார்.

பின்னர், தன் பட்டத்து யானைமீது விஷ்ணு சித்தரை உட்காரவைத்து அரசப் பணியாட் களைக்கொண்டு குடை, கொடி, சாமரம், விசிறி முதலியவற்றால் மரியாதைசெய்து நகர்வலம் வரும்படி செய்தார். பட்டத்து யானைமீது இராஜ மரியாதையுடன் வரும் தன் பக்தனைக் காண ஸ்ரீவைகுண்டத்திலிருந்து பெருமாள் கருட வாகனத்தில் தோன்றினார். வானில் பெருமாள் தோன்றியதை விஷ்ணு சித்தர் உட்பட பலரும் கண்டுகளித்து பெருமாளை வணங்கினார்கள். இந்த நிகழ்வை ஸ்வாமி தேசிகன், "வாரணமேல் மதுரை வலம் வரவே வானில் மால் கருடவாஹனனாய்த் தோன்ற வாழ்த்தும்' என பாடினார். விஷ்ணு சித்தர் வானில் தோன்றிய திவ்ய மங்கள சொரூபமான பெருமாளைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அடுத்த நொடியே, பெருமாள்மேல் கொண்ட அளவில்லா பக்தியின் காரணமாக ஒரு தாய் தன் குழந்தையை காப்பது போன்று, இப்படி அழகாக காட்சிதரும் பெருமாளுக்கு கண்ணேறு (கண் திருஷ்டி) பட்டு விடுமோ என்கிற பயத்தில்-

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம் மல்லாண்ட

திண்தோள் மணிவண்ணா- உன் சேவடி

செவ்வி திருக்காப்பு (காப்பு)

எனத் தொடங்கும் திருப்பல்லாண்டு பாடி மங்களா சாஸனம் செய்தார். தன்முன்பு இறைவன் தோன்றியபோது, தனக்கு அல்லது தன் குடும்பத்திற்கு ஏற்றவண்ணம் வரம் கேட்காமல், இறைவன்மீது கண் திருஷ்டி பட்டுவிடுமோ என அஞ்சி பல்லாண்டு பல்லாண்டு பெருமாள் வாழவேண்டும் என்கிற நோக்கில் பாடியதால், மற்ற ஆழ்வார் களைவிட பக்தியிலும், இறைவன்மீது கொண்ட பெருத்த அன்பிலும் பெரியவராக திகழ்ந்ததால் பின்னாளில் விஷ்ணு சித்தர் "பெரியாழ்வார்' என மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.

தனக்கு பரிசாக கிடைத்த பொற்கிழியையும், மன்னர் அளித்த வெகுமதிகளையும், பட்டாடை களையும் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோயி லுடையானுக்கே நன்றியுடன் சமர்ப்பித்தார். நாமும் பெரியாழ்வார் காட்டிய வழியில் இறைவன்மீது தூயபக்தி செய்ய தொடங்குவோமாக!

ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளே சரணம்!

om010623
இதையும் படியுங்கள்
Subscribe