76-ஆவது சர்க்கம்
சம்பூக வதம்
செயற்கரிய செயல்களையும் எüதாக செய்து முடிக்கும் இராமனு டைய சொற்களைக் கேட்டு தலை கீழாக் தூங்கிக் கொண்டிருந்தவர், "பெரும் புகழ் படைத்த இராமனே, நான் நான்காவது வர்ணத்தில் வேளார்க் குளத்தில் பிறந்தவன். இந்த உடல் உடனையே தேவத்தன்மை அறிந்திட விரும்பி கடுமையான இந்த தவத்தை மேற்கொண்டு இருக்கிறேன். நான் பொய்யாக கூறவில்லை. நான்காம் வர்ணத்தை சேர்ந்த நான் தேவலோகத்தை அடைய விரும்பியே கடுமையான இந்த தவத்தை மேற்கொண்டேன்" என்று கூறினார்.
அந்த வேளாளர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது இராமபிரான் தக தகவென்று மின்னும் தனது கத்தியை உறையிலிருந்து உருவியெடுத்து அவருடைய தலையை வெட்டி வீழ்த்தினார். அந்த வேளாண் கொல்லப்பட்டதும் இந்திரன், அக்னி முதலான தேவதைகள், நல்ல காரியம் செய்தாய் என்று இராமபிரானை மிகவும் புகழ்ந்தனர்.
விண்ணுலகத்திலிருந்து மிகவும் நறுமணம் மிக்க மலர்மாரி பொழிந்தது. அந்த பகுதியில் இருந்த மரங்கüன் மணம் மிகுந்த மலர்களை அனைத்து பக்கங்கüலிருந்தும் திரட்டிக்கொண்டு வந்து அவர்மீது கொட்டியது.
சத்திய பராக்கிரமம் படைத்த இராமபிரானைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த தேவர்கள், "பேரறிவாüயே, செல்வனே, நீ தேவர்களுக்கு ஒப்பான இந்த நல்ல பணியை செய்திருக்கிறாய்" என்று கூறினார்கள்.
"ரகுந்தனா, எதிரிகளை அடக்குபவனே, நீ விரும்பும் வரத்தை பெற்றுக் கொள்வாயாக. தவம் முற்றுபெறாத நிலையில் இந்த வேளாணனை நீ வெட்டிக் கொன்றுவிட்டதால் இவன் தேவலோகத்தை அடையமாட்டான்" என்றனர்.
தன்நிலை தவறாக மனக்கட்டுப்பாடுடைய இராமன் தேவதைகüன் சொற்களைக் கேட்டு, இந்திரனை நோக்கி, கைகூப்பிய வண்ணம் வணக்கத்துடன், "தேவதைகள் என் செயலால் திருப்தி அடைந்திருப்பார்களேயானால் அந்தணரின் மகன் உயிர் பிழைக்கட்டும். இந்த வரம்தான் நான் விரும்பும் மிக உயரிய வரம். என்னுடைய குற்றத்தால் அந்தணரின் ஒரே மகன் இளம் வயதிலேயே கால்னுடைய வீட்டிற்குப் போக நேரிட்டது. அவனை உயிர்ப்பித்துத் தாருங்கள். உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் கூறிய சொல் பொய்யாகக் கூடாது. நான் உங்களுடைய மகனைப் பிழைக்க வைக்கிறேன் என்று அந்தணருக்கு வாக்கு தந்திருக்கிறேன்" என்றார்.
இராமனுடைய சொற்களைக் கேட்ட தேவதைகüன் தலைவர்கள் இராமனிடம் ப்ரீத்தி கொண்டிருந்த தேவதைகள் மகிழ்ச்சியோடு, "காகுத்தரே, கவலை வேண்டாம். அந்த சிறுவன் இன்றைய தினமே உயிர் பெற்று தன் உற்றார்- உறவினரோடு சேர்ந்துவிட்டான். எந்த நிமிடத்தில் தவம் செய்துகொண்டிருந்த வேளாண் வெட்டி வீழ்த்தப்பட்டனோ அதே நிமிடத்தில் சிறுவன் உடலில் உயிர் புகுந்துகொண்டது. ஆண்மை மிக்கவனே, உனக்கு நன்மைகள் உண்டாகட்டும். இராமா, நாங்கள் அகத்தி யருடைய ஆசிரமத்தைக் காண விரும்பு கிறோம். 12 ஆண்டுகள் தண்ணீரில் மிதந்து படுத்துக்கொண்டிருப்பது என்று அவர் மேற்கொண்ட விரதம் நிறைவடைந்து விட்டது.
ரகுநந்தனா, நாங்கள் அந்த முனிவருக்கு வாழ்த்து கூறுவதற்காக போய்க்கொண்டி ருக்கிறோம். உனக்கு நன்மை உண்டாகட்டும். தலைசிறந்த அகத்திய முனிவரை காண்பதற்கு நீயும் வருவாயாக" என்றார்கள்.
"அவ்வாறே செய்கிறேன்" என்று தேவதையிடம் கூறிவிட்டு பொன்னால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டார் இராமன். அதையடுத்து கணக்கில்லாத விமானங்கüல் தேவதைகள் ஏறிக்கொண்டு புறப்பட்டு சென்றார்கள். அவர்களைத் தொடர்ந்து இராமனும் அகத்தியர் ஆசிரமத்திற்குச் சென்றார்.
தவ நிதியான தர்மாத்மா அகத்தியர், தேவதைகள் வந்திருப்பது கண்டு மகிழ்ந்து எல்லாருக்கும் சமமாக உபச்சாரம் செய்தார். மாமுனிவரின் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு மறு மரியாதை செய்த தேவர்கள் தங்களுடன் வந்தவர்களையும் அழைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் தேவலோகம் சென்றார்கள்.
அவர்கள் எல்லாரும் சென்றபிறகு, புஷ்பகத்தில் இருந்து இறங்கிய இராமன், சிறந்த முனிவராகிய அகத்தியரை வணங்கி னார். தன் தவ வலிமையினால் கொழுந்து விட்டு பிரகாசிக்கும் மாமுனிவரை வணங்கியபின் அவர் அüத்த உபசாரங்களை ஏற்றுக்கொண்டு இராமன் ஒரு இருக்கையில் அமர்ந்தார்.
தவச்செலலரும் மகா தேஜஸ்வியுமான அகத்தியர் இராமனைப் பார்த்து, "மன்னனே, இராகவனே, உமக்கு நல்வரவு கூறுகிறேன். அதிர்ஷ்டவசமாக நீ இங்கு வந்திருக்கிறாய்" என்று கூறினார்.
"இராமா, ஏராளமான உயர்குணங்களால் நீ என் மனதில் இடம்பெற்று விட்டாய். இப்போது நீ ஒரு விருந்தினராக வந்திருக்கி றாய். கௌரவத்திற்கு உரியவன் நீ. எப்போதும் என் உள்ளத்தில் இருந்துகொண்டிருக்கிறாய். அறம் தவறிய வழியைப் பின்பற்றி தவத்தில் ஈடுபட்ட மேளாணனைக் கொன்ற இராமன் வந்துகொண்டிருக்கிறார் என்று தேவர்கள் கூறினார்கள். உன்னிடம் தர்ம பலம் இருந்ததால் அந்தணரின் இறந்துபோன மகனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தாய்.
இராகவா, இன்று முழுதும் என் அருகில் இங்கேயே இரு. பொழுது புலர்ந்ததும் புஷ்பகத்தில் ஏறி நகரத்திற்கு செல்லலாம். நீயே ஸ்ரீமத் நாராயணன். பிரபஞ்சம் அனைத் தும் உன்னிடம் நிலைகொண்டிருக்கிறது. எல்லா உயிர்ப் பிராணிகளுக்கும் நீயே தலைவன். நீயே பரம புருஷன். தொடக்கம் காண முடியாத தொன்மையன்.
திருவருட்செல்வனே, விஸ்வகர்மாவினால் செய்யப்பட்ட ஆபரணம் இது. தகதகக்கும் ஒüயாலும் மனம் கவரும் வடிவமைப்பினா லும் சிறந்து விளங்கும் இந்த அணிகலனை ஏற்றுக்கொள். காகுத்தனே, இராகவா, நீ எனக்குப் பிரியமான காரியத்தை செய்தவன் ஆவாய். ஒருவரால் கொடுக்கப்பட்ட ஒரு பொருளை தானே வைத்துக் கொள்ளாமல் பிறருக்குக் கொடுத்துவிட்டால் அளவற்ற புண்ணியம் கிடைக்குமென்று சொல்லப் பட்டுள்ளது. இந்த அணிகலனை அணிந்து கொள்வதற்கு இந்திரன், மருக்கணங்கள் முதலான தேவதைகளைக் காட்டிலும் நீயே தகுதி உடையவன். இந்திரன் முதலான தேவதைகளைக் காக்கும் வல்லமை உனக் குண்டு. மன்னனே, அதனால் சூரியனைப் போல ஒü வீசுவதும், மிக அழகானதும், தெய்வத்தன்மை பெற்றதுமான இந்த அணிகலனை முறைப்படி பெற்றுக் கொள்வாயாக" என்றார்.
இக்ஷவாகு பரம்பரையில் தோன்றியவரும், மிகச் சிறந்த தேர்வீரரும், அறிஞர்களுள் சிறந்த வருமான இராமன் சத்திரிய நெறியை நினைவில் கொண்டு, மகாத்மா அகத் தியரை பார்த்து," பகவானே, தானம் ஏற்பது என்பது அந்தணர்களுக்கு இழிசெயல் அன்று. அந்தண உத்தமரே, சத்ரியனான நான் இந்த பொருளை தானமாகப் பெற்றுக்கொள்வது எவ்வாறு நியாயமாகும்? குறிப்பாக அந்தணரால் கொடுக்கப்படும் பொருளை எவ்வாறு ஏற்பது என்று தாங்கள் கூறுங்கள்" என்றார் இராமன்.
இவ்வாறு இராமன் கூறியவுடன் மாமுனிவர் அகத்தியர், "பிரம்மதேவரால் படைக்கப்பட்ட முதலாவது கிருத யுகத்தில் மண்ணுலக மக்கள் அனைவருக்கும் தலைவ னாக எவரும் இருக்கவில்லை. தேவர்களுக்கோ இந்திரன் இருந்தான். அப்போது மக்கள் அனைவரும் தேவதேவரான பிரம்மாவிடம் சென்று ஒரு அரசனை நியமிக்கும்படி வேண்டினார்கள். "தேவரே, அமரர் களுக்கு தலைவனாக இந்திரன் நியமிக்கப் பட்டார்.
அதுபோலவே ஒரு சிறந்த மனிதரை நாடாளும் மன்னனாக எங்களுக்கு கொடுங்கள். அவரை நாங்கள் மிக்க மரியாதை உடன் நடத்தி பாவம் நீங்கியவர்களாக வாழ்வோம். மன்னன் இல்லாமல் நாங்கள் இருக்க மாட்டோம். இதுவே எங்களது உறுதியான முடிவு என்றனர்.
குடிமக்களது இந்த முடிவை கேட்ட பிரம்மா தான் செய்ய வேண்டிய காரியத்தையும் நிச்சயத்துக் கொண்டு உலக காவலர்களான இந்திரன் முதியோரை அழைத்து, "நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றிலில் ஒரு பகுதியை தாருங்கள் என்று கூறினார்."
அப்போது உலக நாயகர்கள் அனைவரும் தங்களது சிறப்பு சக்தியின் ஒரு பகுதியை தந்தனர். அந்த சமயத்தில் திசை காவலர்கüன் சக்திகளும் ஒருங்கே வந்ததால் பிரம்மாவுக்கு தும்மல் உண்டாயிற்று. அந்த தும்மலிலிருந்து மன்னன் பிறந்தான். அவனை திசை காவலர்கள் கொடுத்த ஆற்றல் பகுதிகளுடன் இணைத்தார். தும்பலில் தோன்றிய மன்னனை பிரம்மா மக்கள் தலைவனாக அவர்கüடம் கொடுத்தார். மன்னன் இந்திரனிடமிருந்து பெற்ற சக்தியால் பூவுலகில் ஆணையை செலுத்தினான். வருணனிடம் இருந்து பெற்ற சக்தியால் மக்கüன் உடலை போசித்தான். குபேரனுடைய தேஜஸ் இன் அம்சத்தால் செல்வத்திற்கு அதிபதி ஆனான். எமனிடமிருந்து பெற்ற சக்திகள் குற்றவாüகளுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரத்தைப் பெற்றான்.
மன்னனே, இராமா இந்திரனுடைய ஒரு அம்சம் உன்னிடம் இருப்பதால் என்னை உய்விப்பதற்காக
இதனை தானமாக ஏற்றுக் கொள். உனக்கு மங்களம் உண்டாகட்டும்."
உயர் அற நெறிக்கு உகந்த அகத்திய முனிவர் சொற்களைக் கேட்ட இராமன் மிக சிறந்ததான அந்த ஆபரணத்தை அகத்தியர் முனிவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். உத்தமமான அந்த ஆபரணத்தை பெற்றுக் கொண்ட இராமன், 'பேரொü வீசும் இந்த ஆபரணம் முனிவருக்கு எவ்வாறு கிடைத்தது?" என்று கேட்டார்.
"மிக ஆச்சரியமாக விளங்கும் இது தெய்வீகத்தன்மை பொருந்தியது. அழகு மிக்கது. உயர்வானது. தங்களுக்கு இது எவ்வாறு கிடைத்தது? எங்கிருந்து யாரால் கொண்டு வரப்பட்டது? உத்தமரே, தெரிந்துகொள்ள வேண்டும் என்ற மனத் துடிப்பினால் கேட்கிறேன். தாங்கள் பெரும் புகழ் பெற்றவர். வியப்பூட்டும் ஏராளமான விஷயங்களுக்கு கருவூலம் போன்றவர் தாங்கள்."
இவ்வாறு இராமன் கேட்டதும், "இராமா, முன்னர் ஒரு திரேதா யுகத்தில் நடந்தவற்றைக் கேள்" என்று கூறினார் அகத்தியர்.
"மிக எழிலுடன் விளங்கிய இந்த பிரதேசத்தில் தானம் வழங்கு
வது சம்பந்தமாக நான் எதைக் கண்டேனோ கேட்டேனோ
ஆச்சரியமான அந்த தகவலைக் கேள்."
(தொடரும்)