சத்ருக்னனைப் பார்த்து மெல்ல சிரித்த லவணன், ஒரு மரத்தைப் பிடுங்கி அவன் தலைமீது வீசினான். அதன் தாக்கத்தால் அவன் உடல் நடுங்கியது; மயக்கமும் அடைந்தான். சத்ருக்னன் கீழே விழுவதைக் கண்ட முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரர்கள் ஆகியோர் உரத்த குரலில் புலம்பினார்கள்.
தரையில் விழுந்த சத்ருக்னன் இறந்து விட்டான் என்று எண்ணிய அரக்கன், வாய்ப்பு கிடைத்தும் தன் இருப்பிடம் செல்லவில்லை. தெய்வீக ஆற்றல் படைத்த சூலத்தை கையில் பற்றிக் கொள்ளவில்லை. இனி என்ன கவலையென்று, ஓரிடத்தில் வைத்திருந்த உணவுப் பொருட்களைக் கையில் எடுத்தான்.
சிறிது நேரம் கழித்து உணர்வுபெற்ற சத்ருக்னன் முனிவர்களின் வாழ்த்துகளுடன் நகரத்தின் நுழைவாயிலில் கையில் ஆயுதம் ஏந்தியவனாக வந்து நின்றான். வீண் போகாததும், பத்து திசை களையும் பயங்கரமான ஒளிப்பிழம்பினால் பிரகாசிக்கச் செய்வதும், தெய்வீக ஆற்றல் படைத் ததுமான மிகச்சிறந்த ஒரு அம்பை எடுத்தான். அதன் தோற்றமும் வேகமும் வஜ்ராயத்தைப் போலிருந்தது மேரு, மந்திர மலைபோல் அது பிரகாசமாக இருந்தது. கணுக்களில் வளைந்திருந் தது. எந்த வகையான போர்களிலும் பிறரால் வெற்றிகொள்ள முடியாததாக இருந்தது.
முழுவதும் ரத்தமே சந்தனமாகப் பூசப்பட்டிருந் தது. அழகிய சிறகு பொருத்தப்பட்டிருந்தது. அரக்கர்கள், மாபெரும் மலைகள், அசுரர் கள் ஆகியோரைப் பிளந்து வீழ்த்தியது போலிருந்தது. பிரளயகால காலாக்னி யைப்போல ஒளியைக் கக்கியது. அதைப் பார்த்த உயிர் பிராணிகள் நடுநடுங்கின.
தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் அனைவரும் அச்சம் கொண்டு பிரம்மாவிடம் சென்று சேர்ந்தனர். தேவர்களின் தலைவரும், வரமளிப்பவருமான பிரம்மாவைப் பார்த்து, "உலகத்திற்கு அழிவு வந்துவிட்டதா அல்லது ஊழிக்காலம் வந்துவிட்டதா? ஐயனே, தேவர்களுக்கு அச்சத்தை யும், மனக்குழப்பத்தையும், மக்களுக்கு அழிவையும் கொடுக்கக்கூடிய இந்த அம்பை இதற்கு முன்னர் நாங்கள் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை'' என்றனர்.
அவர்கள் கூறியதைக்கேட்டு, உலகங்களுக்கு அபயம் அளிப்பவரும் உலக பிதாமகருமான பிரம்மா அப்போது ஏற்பட்ட பயத்திற்குக் காரணத்தை விளக்கினார். "தேவதைகளே, கேளுங்கள். போர்க்களத்தில் லவணனைக் கொள்வதற் காக சத்ருக்கனன் ஒரு அம்பை ஏந்திக் கொண்டு நிற்கிறான். அந்த அம்பினுடைய பேரொளியினால் அமரர்கள் அனைவரும் மயங்கிப்போய் இருக்கிறார்கள். அன்புக்குரியவர்களே, ஒளிப்பிழம்பாக விளங்கும் இந்த அம்பு, முன்னர் சனா தன பெருந்தெய்வமும் உலகைப் படைப்ப வருமான- காப்பவருமான விஷ்ணுவிடம் இருந்தது.
சக்திவாய்ந்த மாபெரும் இந்த அம்பு மது- கைடபன் என்னும் இரண்
சத்ருக்னனைப் பார்த்து மெல்ல சிரித்த லவணன், ஒரு மரத்தைப் பிடுங்கி அவன் தலைமீது வீசினான். அதன் தாக்கத்தால் அவன் உடல் நடுங்கியது; மயக்கமும் அடைந்தான். சத்ருக்னன் கீழே விழுவதைக் கண்ட முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரர்கள் ஆகியோர் உரத்த குரலில் புலம்பினார்கள்.
தரையில் விழுந்த சத்ருக்னன் இறந்து விட்டான் என்று எண்ணிய அரக்கன், வாய்ப்பு கிடைத்தும் தன் இருப்பிடம் செல்லவில்லை. தெய்வீக ஆற்றல் படைத்த சூலத்தை கையில் பற்றிக் கொள்ளவில்லை. இனி என்ன கவலையென்று, ஓரிடத்தில் வைத்திருந்த உணவுப் பொருட்களைக் கையில் எடுத்தான்.
சிறிது நேரம் கழித்து உணர்வுபெற்ற சத்ருக்னன் முனிவர்களின் வாழ்த்துகளுடன் நகரத்தின் நுழைவாயிலில் கையில் ஆயுதம் ஏந்தியவனாக வந்து நின்றான். வீண் போகாததும், பத்து திசை களையும் பயங்கரமான ஒளிப்பிழம்பினால் பிரகாசிக்கச் செய்வதும், தெய்வீக ஆற்றல் படைத் ததுமான மிகச்சிறந்த ஒரு அம்பை எடுத்தான். அதன் தோற்றமும் வேகமும் வஜ்ராயத்தைப் போலிருந்தது மேரு, மந்திர மலைபோல் அது பிரகாசமாக இருந்தது. கணுக்களில் வளைந்திருந் தது. எந்த வகையான போர்களிலும் பிறரால் வெற்றிகொள்ள முடியாததாக இருந்தது.
முழுவதும் ரத்தமே சந்தனமாகப் பூசப்பட்டிருந் தது. அழகிய சிறகு பொருத்தப்பட்டிருந்தது. அரக்கர்கள், மாபெரும் மலைகள், அசுரர் கள் ஆகியோரைப் பிளந்து வீழ்த்தியது போலிருந்தது. பிரளயகால காலாக்னி யைப்போல ஒளியைக் கக்கியது. அதைப் பார்த்த உயிர் பிராணிகள் நடுநடுங்கின.
தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் அனைவரும் அச்சம் கொண்டு பிரம்மாவிடம் சென்று சேர்ந்தனர். தேவர்களின் தலைவரும், வரமளிப்பவருமான பிரம்மாவைப் பார்த்து, "உலகத்திற்கு அழிவு வந்துவிட்டதா அல்லது ஊழிக்காலம் வந்துவிட்டதா? ஐயனே, தேவர்களுக்கு அச்சத்தை யும், மனக்குழப்பத்தையும், மக்களுக்கு அழிவையும் கொடுக்கக்கூடிய இந்த அம்பை இதற்கு முன்னர் நாங்கள் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை'' என்றனர்.
அவர்கள் கூறியதைக்கேட்டு, உலகங்களுக்கு அபயம் அளிப்பவரும் உலக பிதாமகருமான பிரம்மா அப்போது ஏற்பட்ட பயத்திற்குக் காரணத்தை விளக்கினார். "தேவதைகளே, கேளுங்கள். போர்க்களத்தில் லவணனைக் கொள்வதற் காக சத்ருக்கனன் ஒரு அம்பை ஏந்திக் கொண்டு நிற்கிறான். அந்த அம்பினுடைய பேரொளியினால் அமரர்கள் அனைவரும் மயங்கிப்போய் இருக்கிறார்கள். அன்புக்குரியவர்களே, ஒளிப்பிழம்பாக விளங்கும் இந்த அம்பு, முன்னர் சனா தன பெருந்தெய்வமும் உலகைப் படைப்ப வருமான- காப்பவருமான விஷ்ணுவிடம் இருந்தது.
சக்திவாய்ந்த மாபெரும் இந்த அம்பு மது- கைடபன் என்னும் இரண்டு அரக்கர்களைக் கொல்வதற்காக மகா விஷ்ணு உருவாக்கினார். ஒளிப்பிழம்பாக சுடர்விடும் இந்த அம்பை விஷ்ணு மட்டுமே அறிவார். ஏனென்றால் இந்த அம்பு அந்த மகாவிஷ்ணுவின் மூல வடிவமாகவே விளங்குகிறது. நீங்கள் அனைவரும் இப்போது இங்கிருந்து புறப் பட்டு இராமச்சந்திர மூர்த்தியின் தம்பியும் மாவீரனுமான சத்ருக்னனால் அரக்கர் தலைவன் லவணன் கொல்லப்படுவதைக் கண்டு மகிழுங்கள்'' என்றார்.
தேவர்களுக்கும் தேவனான பிரம்மா இவ்வாறு கூறியதைக்கேட்ட அவர்கள் லவணன்- சத்ருக்னன போர்செய்யும் இடத் திற்கு வந்துசேர்ந்தார்கள். ஊழிக்கால அக்னி போல் நெடிதுயர்ந்து நிற்பதும், தெய்வீகப் பொலிவுடன் திகழ்வதும், சத்ருக்னன் கையில் விளங்குவதுமான அந்த அன்பினை அனைவரும் பார்த்தனர்.
ரகு நந்தனான சத்ருக்னன் ஆகாயம் தேவர் களால் சூழப்பட்டிருப்பதைக் கண்டான். உடனே உரத்த குரலில் சிம்மநாதம் செய்து லவணனைப் பார்த்தான். மீண்டும் போர் செய்ய அறைகூவல் விடுப்பதைக் கண்ட லவணன் மிகவும் கோபத்தோடு போர்செய்ய ஆயத்தமானான். வில்லாளிகளில் முதன்மை யானவனான சத்ருக்னன் காதுவரை நாண் கயிற்றை இழுத்து, மகா ஆற்றல் படைத்த அந்த அன்பினை லவணனுடைய அகன்ற மார்பை குறிவைத்து செலுத்தினான்.
அந்த அம்பு லவணனுடைய மார்பைப் பிளந்துகொண்டு ரசாதலத்தைச் சென்றடைந்தது. தேவர்களால் வணங்கப்படும் அந்த அன்பு ரசாதலம் சென்று, பின் மறுபடியும் சத்ருக்னனை வந்தடைந்தது. அவனது அம்பினால் சிதைக்கப்பட்ட அரக்கன் லவணன் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட பெரிய மலைபோல் பூமியில் விழுந்தான்.
அரக்கன் லவணன் கொல்லப்பட்டவுடன் அவன் வசமிடமிருந்த மேன்மைமிகு சூலம், அனைத்து தேவர்களும் பார்த்துக்கொண்டி ருக்கும்போதே ருத்ர பகவானைச் சென்றடைந்தது.
மிகச்சிறந்த வில்லையும் அம்பையுமுடைய சத்ருக்னனின் ஒரே பானத்தால், மூவுலக மக்களின் அச்சத்தைப் போக்கி இருளைப் போக்கிவிட்டு சுடரொளி வீசும் சூரியனைப் போல பிரகாசித்தான்.
"சர்ப்பத்தின் உயிர் பறிக்கப்பட்டதும், அது வாழ்ந்த இடத்தில் மக்கள் பயமில்லாமல் நடமாடுவார்கள். அதேபோல் நல்வினையின் காரணமாக சத்ருக்னனுக்கு வெற்றி கிடைத்துள்ளது' என்று மகிழ்ச்சியடைந்த தேவர்கள், முனிவர்கள் போன்றோர் அனைவரும் சத்ருக்னனை வாழ்த்திப் போற்றினர்.
70-ஆவது சர்க்கம்
மதுராபுரி பிரவேசம் லவணன் கொல்லப்பட்ட பின், அக்னி பகவானை முன்னிட்டு இந்திரன் முதலான தேவர்கள், எதிரிகளை வாட்டிவதைக்கும் சத்ருக்னனிடம் வந்து, "ஆண் புலி போன்றவனே, பேரன்புக்கு உரியவனே, தெய்வத்தின் அருளால் உனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. அரக்கன் கொல்லப்பட்டான். நல்ல விரதங் களை அனுஷ்டிப்பவனே, நீ விரும்பும் வரத்தைக் கேள். தோள்வலிமை மிக்கவனே, நாங்கள் அனைவரும் உனக்கு வரம் கொடுப் பதற்காகவே வந்திருக்கிறோம். நீ இந்தப் போரில் வெற்றியடைய வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம். நாங்கள் இங்கே வந்திருப்பது வீண் தரிசனமாகப் போய்விடக் கூடாது'' என்று இனிய குரலில் கூறினர்.
புலன்களின் வசப்படாமலிருந்த சத்ருக் னன் தேவர்கள் கூறியதைக் கேட்டதும் தலைக்குமேல் கரங்களைக் கூப்பிக்கொண்டு, "இந்த மதுராபுரி நகரம் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்டது. உடனடியாக நான் இதில் குடியேறவேண்டும். இதை தலைநகராகக்கொண்டு ஆட்சிசெய்ய வேண்டுமென்பதே என் வேண்டுகோள்; கேட்கும் வரம்'' என்றான்.
மகிழ்ச்சியடைந்த தேவர்கள் சத்ருக்னனைப் பார்த்து, "அவ்வாறே ஆகட்டும். சூரர்களான படைவீரர்களைக்கொண்ட உனக்கு இந்த அழகிய நகரம் தலைநகரமாக விளங்கட்டும்'' என்று கூறினர். இவ்வாறு கூறிவிட்டு தேவர்கள் அனைவரும் வானுலகம் சென்றனர்.
மிகுந்த பராக்கிரமசாலியான சத்ருக்னன், கங்கைக் கரையில் தங்கியிருந்த தன் படைவீரர்களை அழைத்துவரச் செய்தான். அவனுடைய ஆணையைக் கேட்ட அந்த மாபெரும் சேனை விரைவில் அவ்விடம் வந்துசேர்ந்தது.
சத்ருக்னன் சிராவண மாதத்தில் அந்த நகரத்தில் புகுந்து வசிக்கத் தொடங்கினான். அந்த நகரத்தில் சூரர்களான படைவீரர்கள் முழுமையாக 12 ஆண்டுகள் தங்கியிருந்தனர். தேவ நகரம்போல் விளங்கிய அந்த நகரத்தில் எல்லா சுக சாதனங்களும் அமைந்திருந்தன. பயமென்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்திரன் தேவையான காலங்களில் மழை பொழிவித்தான். அதனால் பயிர் நிலங்கள் பச்சைப் பசேலென்று விளங்கின. சத்ருக்னனுடைய தோள் வலிமையால் பாதுகாக்கப்பட்ட அந்த நகரத்தில் நோய் நொடிகள் இல்லை. மக்கள் வீரர்களாகத் திகழ்ந்தார்கள். முன்னொரு காலத்தில் லவணனால் எமுனைக் கரையை ஒட்டினாற் போல் பிறைநிலா வடிவத்தில் அமைக்கப் பட்ட அந்த நகரத்தில் கணக்கற்ற மாளிகை களும், நாற்சந்திக்ளும், வணிக வீதிகளும், தெருக்களும் இருந்தன. அங்கு நான்கு வர்ணத் தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்துகொண்டி ருந்தார்கள். பற்பல வியாபார நிலையங்கள் செல்வச் செழிப்பை சுட்டிக்காட்டின. பற்பல வண்ண ஓவியங்களால் சத்ருக்னன் அந்த நகரை மேலும் அழகு படுத்தினான்.
நற்புறங்களிலும் பூங்காக்களையும், உல்லாசமாக விளையாடித் திரிவதற்கான இடங்களையும் ஏற்படுத்தினான். தேவலி மானுடர் சம்பந்தப்பட்ட மற்றும் பல அழகிய பொருட்கள் அந்த நகரின் பொலிவை மேலும் கூட்டின. தெய்வீக அழகுகொண்ட அந்த நகரில் கொள்முதல்- விற்பனைப் பொருட்கள் ஏராளமாக இருந்தன. பற்பல நாடுகளிலிருந்து வந்த வணிகர்களால் அந்த நகரம் மிகவும் ஏற்றத்துடன் விளங்கியது.
தன்னுடைய குறிக்கோள் நிறைவேற்றப் பட்டதனால் அகம் மகிழ்ந்த மகிழ்ந்த பரதன், தன் தம்பி சத்ருக்னன் செல்வச் செழுமையுடன் சீரும் சிறப்புமாக ஒளிவீசும் நகரத்தை ஆட்சிபுரிவது கண்டு பேரானந்தம் அடைந்தான்.
மதுராபுரியில் வசிக்கத் தொடங்கி 12 ஆண்டுகள் நிறைந்தவுடன், அயோத்தி சென்று இராமச்சந்திர மூர்த்தியின் தாமரைத் திருவடிகளை வணங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பலவகையான மக்கள் நிரம்பியதும், தேவ நகரம்போல் சோபை தருவதுமான அந்த நகரத்தை மேன்மைப்படுத்திய அரசன் சத்ருக்னன் ரகுகுல மாணிக்கமான இராமபிரானைக் கண்டு வணங்குவதில் மனதை செலுத்தி னான்.
71-ஆவது சர்க்கம்
சத்ருக்னன் அயோத்தி புறப்படுதல் சத்ருக்னன் மதுராபுரியில் பன்னிரண்டு ஆண்டுகள் வசித்தபின்னர் இராமனால் பரிபாலிக்கப்படும் அயோத்திக்குச் செல்வதற்காக குறைந்த அளவு பணியாட்கள், படைவீரர்களுடன் புறப்பட்டான்.
அமைச்சர்கள் மற்றும் படைத் தலைவர்களை நகர பாதுகாப்புக்கு நியமித்துவிட்டு, சிறந்த குதிரைகள் பூட்டிய நூறு தேர்களுடன் மட்டும் சென்றான். பயணம் செல்லும்வழியில் ஏழெட்டு இடங்களில் படைகளுடன் தங்கிய சத்ருக்னன் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். ஆணேறு போன்ற அவன் ஆசிரமத்திற்குள் சென்றதும் வால்மீகியின் பாதங்களில் பணிந்தான்.
அவர் அளித்த பாத்யம், அர்க்கியம் முதலிய விருந்து உபசாரங்களை ஏற்றுக் கொண்டான். சில நாட்கள் அங்கேயே தங்கினான். பெரிய மனம்படைத்த சத்ருக்னனுக்கு சுவைமிக்க ஆயிரங்கணக்கான கதைகளைப் பல வடிவங்களில் எடுத்துக் கூறினார் வால்மீகி மாமுனிவர். லவணனை வதம் செய்ததுபற்றிக் கூறுகையில், "லவணனை மாய்ப்பதென்பது அரும்பெரும் செயல். அதை நீ செய்திருக்கிறாய்'' என்று பாராட்டினார். "செல்வனே, தோள்வலிமை மிக்கவனே, பெரும் பலசாலியான அனேக மன்னர்கள் படை, வாகனங்களுடன் லவணனால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். புருஷோத்தமனே, மகா பாவியான அவன் மிக எளிதாக உன்னால் கொல்லப்பட்டான். அதன்காரணமாக உலகத்தைக் கவ்வியிருந்த பயம் நீங்கிப்போய்விட்டது.
செயற்கரிய இராவணனுடைய வதம் பயங்கரமான பல நிகழ்வுகளுக்குப்பின் பெருமுயற்சி எடுத்து நடைபெற்றது. ஆனால் இந்த மாபெரும் செயல் உன்னால் எளிதில் நிறைவேற்றப்பட்டது. லவணன் இறந்த தில் தேவதைகளுக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. எல்லா உலகங்களிலுமுள்ள எல்லா உயிர்ப் பிராணிகளுக்கும் நன்மையும் செய்ததாயிற்று.
மனிதருள் மாணிக்கம் போன்றவனே, நீயும் லவணனும் செய்யும் போரைக் காண்பதற்காக இந்திரனுடைய சபா மண்டபமே இடம்பெயர்ந்து போர் முனைக்கு வந்திருந்தது. அப்போது அந்த அவைக் களத்தில் இருந்த நான் போர்க்களக் காட்சி களைக் கண்களாலேயே கண்டேன்.
சத்ருக்னா, உன் செயலால் நானும் மிகவும் திருப்தியடைந்தேன். அதனால் என் அருகில் வா, உன் சிரசை முகர்கிறேன். இப்படி செய்வது ஆழமான அன்பின் உயர்ந்த அடையாளமாகும்.''
இவ்வாறு கூறிய மாமுனிவர் அவனை உச்சி முகர்ந்து, அவனுக்கும் அவனுடன் வந்திருந்தவர்களுக்கும் விருந்துபசாரம் செய்தார். உணவருந்திய பின்னர் ஓய்வான அந்த நேரத்திற்கேற்ற, செவிக்கினிய இசையும் சுவையும் பொருந்திய இராமனுடைய வரலாற்றைக் கேட்டு மகிழ்ந்தான் சத்ருக்னன்.
அப்பொழுது அவன் கேட்ட இராம கதை செய்யுள் இலக்கியமாக முன்னரே இயற்றப் பட்டிருந்தது. இராம கதை என்னும் குரலிசை, வீணை ஒலியோடு ஈழுந்து வந்தது. குரலிசையில் சொற்கள் எழவேண்டிய இதயம், கழுத்து மற்றும் தலைப்பகுதியிலிருந்து மந்தரம்- மத்தியமம்- தாரம் முதலான ஸ்வர பேதங்களுடன், தெளிவான உச்சரிப்புடன் சொற்கள் வெளிப்பட்டன. தனது செம்மைப்பட்ட மொழியில் இலக்கணம், சந்தஸ், இலக்கிய விதி, இசை விதி ஆகியவற்றுக்கேற்ப அமைக்கப்பட்டு உரிய தாளங்களுடன் பாடப்பட்டது.
அந்த காவியத்தின் ஒவ்வொரு சொல்லும் முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நிகழ்ந்த வாறே எடுத்துரைத்தது. ஆண் புலியான சத்ருக்னன் தன் நினைவிழந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினான். சிறிது நேரம் அவன் உணர்விழந்து அடிக்கடி பெருமூச்சுவிட்டான். கடந்தகால நிகழ்ச்சிகளை விவரிக்கும் குரலிசையாக இருந்தாலும், நிகழ்காலத்தில் நடப்பதுபோலவே அவனுக்குத் தோன்றியது. அவனுடன் வந்திருந்தவர்களும், இசையாக வழங்கும்விதத்தில் அமைக்கப்பட்டிருந்த அதைக் கேட்டு பேச்சிழந்து போனார்கள். மனமுருகினார்கள். என்ன ஆச்சரியமான படைப்பென்று போற்றினார்கள்.
வந்திருந்த படைவீரர்கள், "என்ன இது? நாம் எங்கே இருக்கிறோம்? இது வெறும் கனவுக்காட்சியா? நாம் முன்னர் ஒருசமயம் கண்ணால் பார்த்த நிகழ்ச்சிகளை அப்போது நடந்ததுபோலவே இப்போது இந்த ஆசிரமத் தில் இசைவடிவில் கேட்டுக்கொண்டிருக் கிறோமே'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
அவர்கள் சத்ருக்னனிடம் வந்து, "நாம் இந்த இசைக் காவியங்களைக் கனவிலா கேட்டுக்கொண்டிருக்கிறோமா?'' என்று கூறினார்கள். "மன்னரே, தாங்கள் இந்த விஷயம்பற்றி முனிவரிடம் விசாரியுங்கள்'' என்றனர் மிகவும் உற்சாகத்துடன் இருந்த அவர்கள்.
"முனிவருடைய ஆசிரமத்தில் இது போன்ற பிரம்மிப்பூட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெறும் விஷயத்தை முற்றிலுமாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற பேராவலினால், அதைப் பற்றியெல்லாம் முனிவரிடம் விசாரிப்பது முறையானதாகாது'' என்று கூறினான். இவ்வாறு படை வீரர்களுக்கு பதில் கூறிவிட்டு, முனிவரை வணங்கியபின்னர் தன் இருப்பிடத்திற்குள் நுழைந்தான் சத்ருக்னன்.
(தொடரும்)