கோபேஸ்வர் மந்திர்...

இந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலத் திலுள்ள கோலாப்பூருக்கு அருகில் இருக் கிறது. இந்த ஆலயம் இருக்கும் இடத்திற் குப் பெயர் கித்ராபூர். இது ஒரு சிவன் ஆலயம்.

மகாராஷ்ட்ர மாநிலத்திலுள்ள சாங்க்லி என்ற ஊரிலிருந்தும் இந்தக் கோவிலுக்குச் செல்லலாம். இந்த ஆலயம் 12-ஆம் நூற்றாண்டில் ஷிலஹாரா வம்சத்தைச் சேர்ந்த கண்டாராதித்யா என்ற மன்னரால் கட்டப்பட்டது. 1109-1178 காலகட்டத்தில் இது கட்டப்பட்டதாக வரலாறு. கோலாப் பூரின் கிழக்கு திசையில்... கிருஷ்ணா நதியின் கரையில் இந்தக் கோவில் இருக்கிறது.

ஷிலஹாரா வம்சத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய ஆலயங்களைக் கட்டியிருக்கிறார் கள். புதுப்பிக்கவும் செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைத்து தர்மங்களின்மீதும் ஈடுபாடு கொண்டவர்கள்.

ss

இந்த ஆலயத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

தட்ச பிரஜாபதிக்கு தன் மகள் பார்வதி, சிவனைத் திருமணம் செய்தது பிடிக்கவில்லை. அதனால் அவர் ஒரு யாகம் நடத்தினார். கோபம் காரணமாக அவர் அதற்கு சிவனையும் பார்வதியையும் அழைக்கவில்லை.

யாகத்தைப் பற்றி கேள்விப்பட்ட பார்வதி நந்தியின்மீது ஏறி, தன் தந்தையைப் பார்ப்பதற்காகச் சென்றாள். அங்கு தன் மகளைக் கோபமாக பேசி, அவமானப் படுத்தி விடுகிறார் தட்சன். அதைத் தொடர்ந்து கவலைக்குள்ளான அன்னைபார்வதி அங்கிருந்த யாக குண்டத்தில் குதித்துவிடுகிறாள். அதையறிந்த பகவான் சிவனுக்கு அளவற்ற சினம் உண்டாகிறது.

அவர் தட்சனின் தலையைத் துண்டித்து விடுகிறார். பின்னர் அவரின் கோபம் தணிய, அவர் ஒரு ஆட்டின் தலையை தட்சனின் கழுத்தில் பொருத்துகிறார். சிவனின் கோபத்தைக் குறைப்பதற்கான பல முயற்சிகளையும் அப்போது செய்கிறார் விஷ்ணு. சிவனின் கோபம் தணிந்த இடமிது.

அந்த இடத்தில்தான் இந்த ஆலயம் இருக்கிறது. அதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு "கோபேஸ்வர் மந்திர்' என்ற பெயர் உண்டாகிவிட்டது.

இந்த இடத்தில் இரண்டு போர்கள் நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது.

முதலாவது போர் 1058-ஆம் வருடத்தில் சாளுக்கிய மன்னனான அகவமல்லாவுக்கும் முதலாம் ராஜேந்திர சோழனுக்கும் இடையே நடைபெற்றது. அதில் ராஜேந்திர சோழன் மரணத்தைத் தழுவ, அவனின் மகன் இரண்டாம் ராஜேந்திர சோழன் முடி சூடியிருக்கிறான்.

இரண்டாவது போர் போஜ் வம்ச மன்னனுக்கும் தேவகிரி யாதவ வம்சத்தைச் சேர்ந்த சிங்கன் என்ற அரசனுக்கும் இடையே நடை பெற்றது. அதில் போஜ் வம்ச அரசன் தோல்வி அடைந்திருக்கிறான்.

இந்த ஆலயத்தில் சொர்க்க மண்டபம் என்ற பெயரில் ஒரு மண்டபம் இருக்கிறது. அது வட்ட வடிவத்தில் இருக்கிறது. அதில் விநாயகர், கார்த்திகேயன், குபேரன், எமராஜன், பிரம்மா, இந்திரன் ஆகியோரின் சிலைகள் இருக்கின்றன.

சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்பு பவர்கள், கோலாபூருக்குப் பயணிக்க வேண்டும். சாலை வழியாக பயணிக்கும் தூரம் 960 கிலோமீட்டர். அங்கிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் உள்ளது. ஹூக்லி வழியாகவும் செல்லலாம்.

சென்னையிலிருந்து ஹூக்லிக் குப் பயண நேரம் 14 மணிகள். அங்கிருந்து சாலை வழியாக பயணிக்க ஆகும் நேரம் நான்கரை மணிகள்.

ஆலயத்திற்கு அருகிலிருக்கும் ரயில் நிலையம் சாங்க்லி. அங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது.