"அரியும் ஓம் நமசிவாய' என்று ஜெபம் செய்தால் நோய்கள் நம்மைவிட்டு அகலும்.

"அங்கிவாய நம' என்று ஜெபித்தால் புத்திர செல்வம் உண்டாகும். (ஜாதகத்தில் 5-ஆமிடம் பாழ்பட்டவர்கள் இதனை ஜெபிக்கலாம்.) "அம்கிலி சிவாய நம' என்னும் மந்திரத்தை ஜெபித்தால் யோகத்தில் சித்தியடையலாம்.

"லங்சிவாய நம' என்ற மந்திரத்தை ஜெபிக்க ஆயுள் விருத்தியாகும்.

(ஜாதகத்தில் 8-ஆமிடம் பாழ்பட்டுக் காணப்பட்டால் இதனை ஜெபித்தல் நன்று.) "யிமமே சிவாய நம' என்று ஜெபித்தால் பேய், பிசாசு, பூதங்கள் போன்ற மனபயம் அவர்களைவிட்டு அகன்றுவிடும்.

Advertisment

"ஓம் சிங்கிலியும் நமசிவாய' என ஜெபம் செய்தால் பெரும் பதவியில் இருப்போர், பிரமுகர்கள், அரசு சார்ந்த எல்லாம் வசியமாகும்.

"ஆயி பஞ்சாட்சரம்' மானிடர்க்குத் தேவை யான ஒன்று. இதில் பயங்கரமான அசுர சக்திகள் யாவும் கட்டுக்குள் அடங்கும்.

"றீயும் ஓம் நமசிவாய' என்று சத்திய நிலையில் நின்று ஜெபிக்க வேண்டும். மன பேதங்கள் நீங்கி பல நன்மைகள் வந்தடையும்.

Advertisment

"அய்யும் நமசிவாய' என்று ஜெபித்தால் நல்ல புத்தியும், மனோபலமும், வித்தைகளும் வந்தடையும்.

மானிடருக்கு மெய்ஞ்ஞான நிலை அடைவதற்கு உதவும் புகழ் மிக்கது அமுத பஞ்சாட்சரம்.

"சிவ நமசிவாய' என்பதுதான் அது. அதாவது ஈஸ்வரனுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. 1. தத்புருஷமுகம், 2. அகோரமுகம், 3. வாமதேவமுகம், 4. சத்தியோ ஜாதமுகம், 5. ஈசான்ய முகம். இதன் பலனை உணர இயலும்.

சிவனின் தத்புருஷ முகத்தில் உருமந்திரத்தில் வரும் பஞ்சாட்சரம் அதன் நல்வினை- தீவினை சார்ந்தது.

"நமசிவாய' என்று ஜெபித்தால் அது அமிர்தமாக விளையும். அதை ஜெபிப்பவர்கள் நியாயமான கோரிக்கைகள் அத்தனையும் கிடைக்கப்பெறும்.

"நமசிவாய ஊம் நமசிவாய' என ஜெபித்தால் குளிர் தோஷங்கள் யாவும் அகலும்.

"நமசிவாயம் சூலிங்க நமசிவாய' என்று ஜெபித்தால், பூமி நன்றாக விளைச்சலைத் தரும். தானியங்கள் தன்னிறைவு நிலைக்கு உயரும். விவசாயத்திற்குப் பேருதவி தரும்.

"நமசிவாய மவ்வும் நமசிவாய' என்று ஜெபித்தால் நாக தோஷம் போகும்.

ஜாதகத்தில் ராகு- கேது பிடியில் சிக்கியோர் மனதை நல்வழிப்படுத்தும்.

"ஓம் குசம்பிரேம் சிவாய நம' என்று மானசீகமாக ஜெபித்தால் பிறரின் பரிவும் ஆதரவும் கிடைக்கப்பெறும்.

ss

"கண் சிமறிவாய நம' என்று ஜெபிக்க திருட்டுபயம், திருடர்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

"ஓம் ஆம் ரும் சிவாய நம' என்று ஜெபித்தால் நம் உணர்வுக்கு எட்டாத மோட்ச நிலையை அடையலாம்.

"அரிகர நமசிவாய ஓம்' என ஜெபித்தால் தேக ஆரோக்கியம், தேக சித்தி பெறலாம்.

"அவ்வும் நமசிவாய' என ஜெபித்தால் கயிலாய சித்தி காணலாம்.

"ஓம் நமசிவாய' என்ற புகழ்மிக்க மந்திரத்தால் உலகை வென்று நற்கதி அடையலாம்.

"லங்கிரியும் சிவாய நம' என்று ஜெபம் செய்தால் விவசாயத்தில் தன்னிறைவு பெறலாம்.

"ஓம் சிரியும் ஓம் நமசிவாய நம' என்று ஜெபித்தால் எல்லா வரங்களும் நன்றாக பலிதமாகும்.

"ஓம் ஊம் சிவாய நம' என்று ஜெபித்தால் 18 வகையான தொழுநோய் அகலும்.

"கிலியும் சிவாய நம' என்று ஜெபிக்கும்போது செல்வச் செழிப்பு ஏற்படும். லட்சுமி கடாட்சம் கிடைக்கப்பெறும். தனவரவு பெருகும்.

"லிங்க நமசிவாய' என்று ஜெபித்தால் தேகத்திற்கு வரும் ஆபத்துகள் நீங்கிவிடும்.

"ஓம் மங்கிஷ சிவாய நம' என்று ஜெபித்தால் தீயால் வரும் கேடுகள் அத்தனை யும் நீங்கப் பெறும். தீயினால் ஏற்படும் நஷ்டங்கள் தவிர்க்கப்படும்.

சில முக்கிய பஞ்சாட்சரத்தை இங்கு காண்போம்.

சிவபெருமானின் இரண்டாவது முகம் அகோர முகம் எனப்படும். அகோரமுகம் என்றால் அண்ட பகிரண்டம் என்று பொருளாகும். அதற்கு எரித்துவிடும் தன்மையும் உண்டு.

அகோரமுகத்தின்முன் ஜெபிக்கவேண்டிய சில பஞ்சாட்சரங்கள் நல்வினைகள், தீவினைகட்கு உட்பட்டவையாகும்.

"ஓங்கம வயநசி' என்று ஜெபித்தால் இந்த உலகில் எட்டு மகா சித்திகளும் கைவல்யமாகும்.

"ஓம் மங்சிவாய நம' என்று ஜெபித்தால் நதிகள் ஏழும் வற்றிப் போகுமாம்.

"செங் செங் செங் சிவாய' என்று ஜெபித்தால் பூமியிலுள்ள எல்லாரும் வசியமாவார்கள்.

"ஓம் மங் செங் சிவாய நம' என்று ஜெபிக்க கடுமையான விஷயங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

"அங்கிஷ ஓம் சிவாய நம' (பிரவேச சங்கிராய பஞ்சாட்சரம்) என ஜெபித்தால் கடலின்மேல் நடக்கலாம். உத்தமர்களுக்கு எதிர்காலத்தில் என்னென்ன வரவேண்டுமோ அவையாவும் தெரியும்.

"ஓம் சங் சிவாய நம' என்று ஜெபித்தால் தீமைகள் அகலும். தேவ கன்னிகள் தானாக வந்துசேர்வார்கள்.

"சிரியுங் சிரியுங் சிவ சிவ ஓம்' என்று ஜெபித்தால் இப்புவியில் கேட்டதெல்லாம் கிடைக்கும்.

"பிறங் பிறங்குசாய சிங் சிவாய நம' என்று ஜெபித்திடில் என்னென்ன தேவையோ அத்தனையும் இயற்றலாம்.

"வங்லங் சிவாய நம' என்று ஜெபித்தால் உடல் நனையாமல் மழையில் நடக்கலாம்.

"பிறிங் சிரிங் சிவாய நம' என்று ஜெபித்தால் நதியில் தண்ணீர் பெருக் கெடுக்கும்.

"சவ்வும் ஓங் சிவாய சுந்தராயி' என ஜெபித்தால் பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவார்கள்.

"சிவ ஓம் செயஞ் சிவாய ஓம் நம' என்று ஜெபிக்க சமர்த்தர்கள் ஊமையாவார்கள்.

"ஏத்தாமல் சிவாய பேதனமே' என்று சொன்னால் விரோதிகள் அடங்குவார்கள்.

"உங் உங் சிவாய நம' என்று ஜெபித்தால் காரியசித்தி கிடைக்கும்.

"லங் அங்கிஷ ஊங் சிவாய நம' என்று ஓதினால் நினைத்த இடத்திற்குச் சென்றிடலாம்.

"யெங் இங் ஓங் சிவாய நம' என்று ஓதினால் கண்நோய் தீரும்.

"கலல் சிவாய நம' என்று ஜெபித்தால் நல்ல பெயரும் புகழும் பொருளும் கிடைக்கும்.

"ஓங் ஓங் சிவாய சிங் சிங்கோ' என்று ஜெபித்தால் வெளியே கூறமுடியாத நற்பலன் கிடைக்குமாம்.

"இங் குருங் கிலியும் சிவாய ஓம்' என்று ஜெபித்தால் தேவேந்திரன் வந்து ஏவல் புரிவானாம்.

ஈஸ்வரனின் ஐந்தாவது முகமான ஈசான்ய முகத்தில் ஜெபிக்கும் பஞ்சாட்சரத்தின் நல்வினை- தீவினைகள் இன்ப முத்தருக்கு அரிய ஒரு அச்சாரமுண்டு. அதை, "கிலாங் கிலியும் கில வங் கிலியும் கீலரா சிவாய நம' என்று ஓதவேண்டும்.

பஞ்சாட்சரத்தின் ரகசியங்கள் பழமை வாய்ந்தவை. இதிலும் பல ரகசியங்கள் மறைக்கப்பட்டும் காலத்தின் கோலத்தால் மறைந்தும்விட்டன.

மேற்கண்ட மந்திரங்கள் குருமுகமாக முறையாக உபதேசம் பெற்று நியமத்துடன் கடைப்பிடிக்கப்படவேண்டியவை!

"தவம் செய்வோர் சிவயோகியாவார்கள்.'