"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமு மின்றித் தீருமே
இன்மையே ராமாவென் றிரன் டெழுத்தினால்.'
என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கனிவுமிகு வாக்கியமாகும்.
கார்முகில் நிறத்தவன், காண்டீபம் கொண்டவன், சீதையின் நாயகன், சிலிர்த்தி டும் தூயவன், ராமன், ஸ்ரீ ராமன், அந்த ஆளுமை யின் அற தோற்றம் அவதரித்த திருநாளே! ஸ்ரீராம நவமி ஆகும்.
மனிதனாக அவதரித்து, மேற்கொண்ட அனைத்து கடமைகளையும் செவ்வனே நடக்கச்செய்து, வாழ்வியலுக்கும், அறத்திற் கும், வழி அமைத்த அவதாரபுருஷன், மண்ணில் மாரியாய் பொழிந்த திதியே நவமி திதி.
மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் ஒதுக்கத் துணிந்த திதியில், மலர்வண்ணன் தசரதனுக்கும், கோசலைக்கும், திருவாகவும், குழந்தையின் உருவாகவும் அவதரித்து நவமி திதியின் மகிமையை பறைசாற்றியுள்ளார்.
இறை வடிவின் பத்து அவதாரங்களில் ஏழாவது அவதாரம் இந்த ராம அவதாரமாகும்.
இந்துக்களின் வாழ்வியல் கொண்டாட் டங்களில் இந்த நாள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நாளாகும்.
இது வசந்தகால சைத்திரன்ய நவராத்திரி யின் ஒரு பகுதியாகும்.
சுக்கிலபட்சம் வளர் பிறையில், சித்திரை மாதத்தில், ஒன்பதாம் நாள் வரும் நவமி திதியில் இந்த கொண்டாட் டம் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்தநாளில் அயோத்தி மற்றும் இந்திய மாநிலங்கள் பலவற்றில் இராமன் கோவில் களில் பெரும் திருவிழாவாகவும், கொண்டாட் டங்களாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
திருமாலின் அவதாரங்களிலேயே மானிடத்திற்கு அறம் சார்ந்த வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து உணர்த்தியது ராம அவ தாரமே.
மனிதன் ஒழுக்கப் பண்பை அலட்சியம் செய்யாது உறுதி மனப்பான்மையுடன் இருப்பதற்கு இந்த அவதாரம் ஒரு அளவு கோலாக அமைந்துள்ளது.
குடும்பத்துப் பெண் பிள்ளைகளும் அறம் வழுவாது ஆண்ம நெறியை கையால இந்த அவதாரம் எடுத்துரைக்கும் வழிவகைகள் ஆயிரம் ஆயிரம்.
விடியில் தொடங்கிய கணம் முதல் ராம நாமம் கூறிக்கொண்டிருக்க, நிகழும் அற்புதங் கள் எண்ணிலடங்காதவை. ரா மா என்று வாய் திறந்து கூறும்பொழுது அடி தொண்டை மூலம் சிறு காற்றின் சுழற்சி ஏற்படுவதை உணரமுடியும்.
மேலும் இந்த ராமா என்று இழுத்துக் கூறும்பொழுது நாசி வழியே மூச்சுக்காற்று செல்லாமல் இருப்பதை கவனிக்கமுடியும்.
இதுவே வாசி யோகத்தின் அதி சூட்சம மான நிலையாகும். வாசி செய்து அடையும் அற்புத சித்தியான பலன்களை இந்த ராம நாமத்தின்மூலமே எளிய மக்களும் அடைந்து விட இந்த நாமம் வழிவகை செய்யப்பட் டுள்ளது.
ஒரு மூச்சுப் பயிற்சியாக மாறி ஆயுள், ஆரோக்கியம், சிந்தனை திறன், போன்றவற்றை மனித உடலியல் அறிவியலின்மூலம் நிகழ்த்தி பல சாகசங்களை நடத்த செய்கின்றது இந்த ராம நாமம்.
காலநிலை மாற்றங்களுக்கு பழகிய நமது உடலும் மனமும் சில நோயின் தாக்கத்திற்கு பழகிவிடும். வெயிலின் உக்கரத்தினால் ஏற்படும் நோய்களின் காலத்தில் ராம நவமி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த விரதத்தின் படையில் முறைகளை உற்று நோக்குங்கள், மோர், பானகம் என்று குளிர்ச்சி அளிக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு இருக்கும்.
இது வெயிலினால் ஏற்படும் நோயின் தாக்கத்தை குறைப்பதற்காகவே உருவாக்கிய முறையாகும்.
அதோடு யோகம் மூச்சுப் பயிற்சி தெரிந்த வர்களுக்கு தெரியும் உடலின் சூட்டை வாயிலுள்ள காற்றின் அசைவால் மாற்றி அமைக்க முடியும் என்பது இதுவும் இணைந்து இந்த ராம ராம நவமியில் நடந்தேறுகின்றது என்பது சிறப்பிலும் சிறப்பு. ராம நவமி மொத்தம் பத்து நாட்கள் கொண்டாடப் படும். பங்குனி மாதத்தில் வரும் புனர்பூச நட்சத் திரத்தில் இந்நிகழ்ச்சி கையாளப்படுகின்றது.
இந்த வழிபாட்டின் நிறைவாக ஸ்ரீ ராமர் சீதை திருக்கல்யாண வைபவம், ஸ்ரீராமர் பட்டாபிஷேகமும் நடத்தப்படும். இந்த நேரங்களில் இராமாயணம், சுந்தரகாண்டம் போன்றவற்றை வாசித்து நவமியின் நாயகனை வழிபட்டால் அனைத்துவிதமான நல் பயன்களையும் பெறமுடியும்.
ஒரு மனிதன் தன்னிலை இழக்காமல் இருப்பதையும், மனதானது சூழ்நிலைக்கு ஏற்றார்போல் மாறும் என்பதையும், சமூகம் சார்ந்த நட்பு உறவையும், மனிதனுடனும், விலங்குகளுடனும், பறவைகளுடனும்மான, பேரன்பை பறைசாற்றும் பொக்கிஷமாக இந்த அவதாரத்தின் நோக்கம் நம்மிடையே அறியப்படுகின்றது.
அசுரன் இராவணனின் அதீத கொடுமை களால் மனம் நொந்து தேவாதிமார்கள் மகாவிஷ்ணுவிடம் தங்களின் கோரிக்கைக் காக பிரார்த்திக்க அந்த பெருங்கருணை பேராற்றல், தேவர்களிடம் அயோத்தி மன்னன் தசரதன் திரேதா ரியேதா யுகம் தாயுகம் யுகத்தில் பெற்ற வரத்தின் பயனாக தசரத மகாராஜா விற்கும், கோசலைக்கும், மகனாக பிறக்கும் நோக்கம் உடையதை உணர்த்தி, அந்தக் கால கட்டத்தில் அதர்மத்தை அழிக்க ஆயுதம் கொண்டு இராவணனை அழித்து உங்களின் துயர் துடைப்பேன் என்று நடக்கவிருக்கும் நிகழ்வினை உரைத்து தேவர்களுக்கு உணரச் செய்தார்.
"ஸ்ரீ ராம ராம ராம ராம ராம ராமேத்தி
மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம
வரானனே.'
ஆதியும் அந்தமுமான ஐயன் ஈசன், ரகு குல நாயகன் ராமனை போற்றி புகழ்ந்து, ஜகமாலும் மாதாவான உமையாளுக்கு, உபதேசம்செய்து, மகிழ்ந்த மந்திரம் ராமா என்னும் ஈரெழுத்து மந்திரம் ஆகும்.
அன்பிற்கினியவளே, அமுத அழகிய முகத்தவளே, நான் ராமா ராமா என்று இனிய வனாகிய ராமனிடத்தில் ஆனந்தத்தை அனு பவிக்கின்றேன். என்றும், இந்த நாமம் ஆயிரம் முறை அனுஷ்டிக்கப்படும் சகஸ்ர நாமத் திற்கு ஒப்பானது என்றும், ஜெகன் மாதாவி டம் அம்மையுமான அப்பன் கூறியதாக புராணங்கள் சிலிர்ப்படைந்து கேட்போரை யும் சிலிர்ப்படையச் செய்கின்ற உண்மையாகும்.
ராம நாமம் கேட்கும் கணமே அங்கு உதயமாகிவிடும் அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன் ஆனந்த கூத்தாட்டம் ஆடி அரும்பாளித்து விடுவார். மனதில் ஏற்றிய நாயகனின் நாமத்தை யாரேனும் வாயால கூறினாலும் வளமான வாழ்வளித்து விடுவான் வாயுவின் மைந்தன்.
இந்த ராமன் நவமி விரதமுறையும் அதன் பயனும் காலையில் நீராடி, பானகமும், நீர் மோரும் கூடிய பலகாரங்களுடனும் காய், கனி, கிழங்கு, தேன், திணை போன்றவற்றுட
னும், பொங்கல் மற்றும் பருப்பு வடை ஆகிய பச்சனங்களுடன், நறுமணம் வழங்கும் நல் மலரை அணிவித்து லட்சுமனின் அண்ணனை ஆசையுடன் அழைத்திட சீதையின் கரம் பற்றி, அனுமனின் அணுக்கத்தில் நம் படி யேறி வந்து பலனளிப்பான்.
மழலை வரம்வேண்டி மனதார வேண்டு கையில் மன்னவனே தவழ்ந்திடுவான் மங்கையரின் மடிமீது. நங்கையாக தவறச்செய்வான் சீதை என்னும் திரு முகத்தாலை.
கணவன்- மனைவி ஒற்றுமைக்காகவும், குழந்தை வரம் வேண்டியும், பொருளாதார முன்னேற்றம் வேண்டியும், இந்த ஸ்ரீராம நவமியை அவரவர் இருப்பிற்கு ஏற்றதுபோல் வழிபட்டுவர வாழ்வில் வளம் பொங்கும் என்பதில் எள்ளளவு மையம் இல்லை.
அர்ப்பணிப்புடன் துளசி மாலையை ஐயனின் பதம் சேர்த்து இம்மையும், மறுமை யும் செழிப்படைய செய்வோம் ராம ராம.