மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் 3-ல், ராகுவின் சாரத்தில் (திருவாதிரை) சஞ்சரிக்கிறார். ஒருசிலர் தேகநலனில் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி போன்ற சங்கடங்களை சந்திக்க நேரும். 2-க்குடைய சுக்கிரன் 6-ல் நீசம்பெறுவது ஒருவகையில் பொருளாதாரத்தில் பற்றாக்குறை சூழ்நிலைகள் காணப்பட்டாலும், கடைசி நேரத்தில் தேவைகள் நிறைவேறும். காரணம் 2-ல் குரு நின்று 2-க்குடையவரைப் பார்ப்பதுதான்! 5-ல் சூரியன் ஆட்சியாக நிற்பதால் உங்கள் எண்ணங்களிலும் திட்டங்களிலும் சில முன்னேற்றத்தைக் காணலாம். 11-ல் சனி வக்ரகதியில் செயல்பட்டு உங்கள் ராசியைப் பார்க்கிறார். சில நேரம் உடல்நலத்தில் கால் சம்பந்தப் பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரும். அதனால் வைத்தியச் செலவுகளும் வந்துவிலகும். அதேநேரம் காரிய அனுகூலத்தையும் எதிர்கொள்ளலாம். 10-ஆமிடத்தை ராசிநாதன் செவ்வாயே பார்க்கிறார். வேலை, உத்தியோகத்தில் பிரச்சினைகளுக்கு இடமில்லை. திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானை வழிபடவும். அருகில் சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. அங்கும் சென்று வழிபடவும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் மாதத் தொடக்கத்தி-ருந்து 5-ல் நீசம் பெறுகி றார். மாதப் பிற்பாதிவரை நீசம். உங்கள் செயல்பாடுகளில் நீங்கள் நினைத்தது ஒன்று; ஆனால் நடப்பது வேறொன்றாக அமைவதால் மனதில் நிம்மதியற்ற சூழ்நிலை! சுக்கிரன் ராகு- கேதுக்களுடன் சம்பந்தம். வீண் அலைச்சல், தேவையற்ற பிரச்சினைகளை சந்தித்தல், மனக்குழப்பம் போன்ற பலன்கள் ஏற்படலாம். என்றாலும் குரு ஜென்மத்தில் நின்று ராசிநாதனைப் பார்ப்பதால் "தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது' என்பதுபோல் கடைசி நேரத்தில் காப்பாற்றப்படலாம். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குருவால் கணவன்- மனைவிக்குள் சங்கடங்கள் தோன்றினாலும் ஒற்றுமையில் பாதிப்புகளுக்கு இடமில்லை. ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்தி நடந்தால் தற்கா-கப் பிரிவுகள் நேரலாம். 2-க்குடைய புதன் மாதப் பிற்பாதியில் கன்னியில் ஆட்சி, உச்சம் பெறுகிறார். குரு வின் பார்வையைப் பெறுகிறார். தனவரவுகள் தாராளமாக வந்துசேரும். கொடுக்கவேண்டிய பாக்கிகள் படிப்படி யாக அடையும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடு வதோடு, ஆதிசங்கரர் அருளிய கனகதாரா பாமாலை யைப் பாராயணம் செய்யவும். மதுரை யில் மாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதிக்குச் சென்று வழிபடவும்.

Advertisment

aa

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் மாத முற்பாதிவரை 3-ல் சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். 3-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும் புதனுக்கு அந்த மறைவு தோஷம் பாதிக்காது. அரசு சார்ந்த காரியங்களில் நிலவிய இழுபறி நிலைகள் மாறி காரியங்கள் கைகூடும். நண்பர்கள் வகையில் சகாயங்கள் உண்டாகும். 12-ல் நிற்கும் குரு அவ்வப்போது விரயங்களைத் தருவார். 12-க்குடைய சுக்கிரனும் 4-ல் நீசம்பெற்று 12-ல் நிற்கும் குருவின் பார்வையைப் பெறுகிறார். வீடு, மனை சார்ந்தவகையில் முதலீடும் உண்டு; சுபவிரயமும் உண்டு. காரணம் குரு 4-ஆமிடத்தைப் பார்ப்பது! தாய் அல்லது தன் சுகத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். 11-க்குடைய செவ்வாய் ஜென்மத்தில் நின்று அவரும் 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். வீடு கட்டுமானப் பணி முயற்சியில் தடைப்பட்டுவந்த செயல்பாடுகள் மீண்டும் நடைபெறும். வங்கிக் கடன்கள் துரித முயற்சியில் கிடைக்கும். மாதப் பிற்பாதியில் ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சி, உச்சம்பெறுவது ஒருவகையில் பலம். செவ்வாய்க்கிழமைதோறும் சக்கரத்தாழ்வாரை வணங்கவும். திண்டுக்கல்- மலைக்கோட்டை பின்புறம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

கடகம்

கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் மாத முற்பாதிவரை ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 12-க்குடைய புதனும் சேர்க்கை. தொடக்கத்தில் கேது சாரத்திலும், பிறகு சுக்கிரன் சாரத்திலும் சஞ்சாரம். ஒருபுறம் தனவரவு ஏற்பட்டாலும், அதைக்காட்டிலும் செலவு அதிகமாக ஏற்படுவதை சமாளிக்க சற்று போராட வேண்டிய சூழ்நிலை. 8-ல் சனி ஆட்சிபெற்று வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால், ஒருசில காரியங்கள் உங்களையறியாமலேயே நன்மையில் முடியும். ஒருசில காரியங்கள் அதிக அலைச்சலையும் ஏற்படுத்தும். என்றாலும் குரு 11-ல் நின்று 3-ஆமிடத்தைப் பார்ப்பதால், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் விடாமல் முயற்சி செய்வீர்கள். மாதப் பிற்பாதியில் சுக்கிரன் 4-ல் ஆட்சிபெற்று 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில்வகையில்- அதிலும் பூமி, கட்டடத் தொழில் சார்ந்த வகையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 9-ல் உள்ள ராகு தந்தைவழியில் சங்கடங்களை உண்டு செய்யலாம். சந்திர தசா புக்திகள் நடப்பவர்களுக்கு தந்தைவழியில் இழப்பு களையும் சந்திக்க நேரும். குலதெய்வ வழிபாட்டிலும் தடை ஏற்படலாம். நாகப்பட்டினம் அருகில் வடக்குப் பொய்கை நல்லூரில் கோரக்கர் சித்தர் ஜீவசமாதியை வழிபடவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு 7-ல் சனி வக்ரமாக சஞ்சரித்து ராசியைப் பார்க்கிறார். சூரியனும் ஜென்ம ராசியில் ஆட்சி. கணவன் அல்லது மனைவி வகையில் தேக சௌக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு விலகும். 10-க்குடைய சுக்கிரன் 2-ல் நீசம்பெறுகிறார். தனவரவில் பற்றாக்குறைக்கு இடமில்லை என்றாலும், செலவும் அதிகமாகவே காணப்படும். அதேசமயம் 5-க்குடைய குரு 10-ல் கேந்திரம் பெற்று 2-லும் இடத்தைப் பார்ப்ப தால் நிலைமைகளை சமாளிக்கலாம். 2-ல் உள்ள கேது குடும்பத்தில் அவ்வப்போது சில சலசலப்புக்களை ஏற்படுத்துவார். வாக்குவாதங்களும் தோன்றி மறையும். மாதப் பிற்பாதியில் ராசிநாதன் சூரியனுக்கு குருபார்வை கிடைக்கிறது. பிள்ளைகள்வகையில் நல்லவை எதிர்பார்க்கலாம். சுபகாரிய நிகழ்வுகள் உண்டாகும். பிற்பாதியில் 10-க்குடைய சுக்கிரன் 3-ல் ஆட்சி. தொழில்துறையில் சில புதிய மாற்றங் களை ஏற்படுத்தலாம். அது முன்னேற்றத்திற்குரிய மாற்றமாகவும் அமையும். நண்பர்களினால் சகாயமும் உண்டாகும். ஞாயிறுதோறும் விநாயகருக்கு செம்பருத்திப் பூ சாற்றி வழிபடலாம். திருவாரூர் மாவட்டம், மடப்புரம் பகுதியில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடலாம்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் தொடக்கத் தில் 12-ல் மறைந்திருந்தாலும், 12-க்குடைய சூரியன் ஆட்சியாக இருக்கிறார். உங்களது எண்ணமும் திட்டமும் ஒருமாதிரி இருந்தாலும் செயல்பாடுகள் வேறு மாதிரி அமையும். அது சற்று மனக்குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஜென்ம கேது. அலைச்சல்கள் அதிகம்- ஆதாயம் குறைவாகக் காணப்படும். உங்களையறியாமலேயே டென்ஷன், கோபம் உண்டாகும். 7-ல் ராகு- தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு, சச்சரவு ஏற்படும். கன்னி, மீன ராசிக்கு 7-ஆமிடம் என்பதாலும், 7-க்குடைய குரு கன்னி ராசியைப் பார்ப்பதாலும் பிரிவினைக்கு இடமிருக்காது ஆனால் "நித்திய கண்டம்- பூரண ஆயுசு' என்ற பழமொழிக்கேற்ப உங்களது நிலைகள் அமையும். 6-ஆமிடத்து சனி நோய் நொடி, சத்ருவகையில் விமோசனம் ஏற்படுத்துவார். மாதப் பிற்பாதியில் புதன் ஜென்ம ராசியில் ஆட்சிபெற்று குருவின் பார்வையைப் பெறுவதால், உங்கள் திறமை வளம்பெறும். கருதிய காரியங்களில் உத்வேகம் உண்டாகும். புதன்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மரையும், நாராயணரையும் வழிபடவும். கரூர் அருகில் நெரூர் சென்று ஸ்ரீ சதாசிவப் பிரம்மேந்திராள் ஜீவசமாதியை வழிபடவும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் தொடக்கத்தில் கன்னியில் நீசம்; 12-ல் மறைவென்றாலும் 10-க்குடைய சந்திரன் சாரத்தில் சஞ்சரிக்கிறார். (அஸ்தம்). உத்தியோகரீதியாகவோ அல்லது தொழில் துறையினருக்கோ கருதிய காரியங்களில் சில தாமதங்கள் ஏற்படலாம். 11-ல் சூரியன் ஆட்சியென்பதால், தாமதமா னாலும் அனுகூலம் உண்டாகும். மாதக்கடைசி வாரத்தில் ஜென்மத்தில் ஆட்சியாக அமர்கிறார். 2-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சஞ்சாரம்; 2-ஆமிடத்துக்கு குருபார்வை. எனவே, வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வந்து சேரும். 3, 6-க்குடைய குரு 8-ல் மறைவது ஒருபுறம் நல்லதென்று எடுத்துக்கொண்டாலும் தனகாரகன் மறைவது நல்லதல்லவே! 5-ல் சனி வக்ரமாக இருப்பதால் சில நேரம் உங்கள் திட்டங்களில் மந்தத் தன்மை தென்படும். 6-ல் உள்ள ராகு போட்டி, பொறாமைகளை விரட்டியடிப்பார். எனினும் கண் திருஷ்டி தொல்லைகள் மட்டும் விட்டபாடில்லை. கணவன்- மனைவிக்குள்ளும் சிறுசிறு சச்சரவு ஏற்படலாம். வெள்ளிக்கிழமைதோறும் துர்க்கையம்மனை வழிபடவும். திருவள்ளூர்- திருத்தணி பாதையில் ஆற்காடு குப்பம் பகுதியில் ஸ்ரீ அனுமந்த ராய சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைவு. ராசிநாதன் மறைவது நல்லதல்லதான்! என்றாலும் குரு 7-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் ஓரளவு சமாளிக்கலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு விலகும். அதே நேரம் 8-ல் உள்ள செவ்வாய் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். 2-க்குடைய குரு 7-ல் செவ்வாய் சாரத்தில் சஞ்சாரம். (மிருகசீரிடம்). தனவரவுக்கு இடமுண்டு. கொடுக்கல்- வாங்கல் சீராக இயங்கும். 12-க்குடைய சுக்கிரன் 11-ல் நீசம். வீண் அலைச்சலும் உண்டாகும்; திடீர்ப் பயணமும் ஏற்படும். ஆனால் ஆதாயமற்ற பயணமாக அமையும். குரு 11-ஆமிடத்தையும் பார்க்கி றார்; 3-ஆமிடத்தையும் பார்க்கிறார். சகோதரவகையில் உதவி ஒத்தாசை கிடைக்கும். தைரியமும் தன்னம் பிக்கையும் அதிகரிக்கும். 5-ல் ராகு. பிள்ளைகள் பற்றிய கவலையும் பிள்ளைகளால் தொந்தரவும் ஏற்படலாம். 10-க்குடைய சூரியன் 10-ல் ஆட்சி. உத்தியோகத்தில் வேலை உயர்வுக்குக் காத்திருப்போருக்கு இக்கால கட்டம் நற்பலன் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் இடமுண்டு. சனிக்கிழமைதோறும் ஆஞ்சனேயரை வழிபடவும். திருச்சி அருகில் திருவெள்ளறை சென்று சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 6-ல் மறைவு. பொதுவாக ராசிநாதனோ லக்னநாதனோ மறைவு பெற்றால் அவ்வளவு சிறப்பாகச் செயல்படமுடியாது என்பது ஜோதிடவிதி. அப்படி மறையும் கிரகத்துக்கு குரு பார்வை இருந்தால் அது விதிவிலக்காகும். ஆனால் இங்கு ராசிநாதனே குருதானே! அவர் மறைந்தால் என்ன செய்வது? குருவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 10-ல் நீசம். ஒருசிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம். அதிக உழைப்பிருந்தும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காதது ஒருபுறம் மனவருத்தம். இப்படி பல சங்கடங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை. 4-ல் உள்ள ராகு தேக சுகத்தில் மருத்துவச் செலவுகளை உண்டாக்குவார். 9-ல் உள்ள சூரியனை சனியும், சனியை சூரியனும் பார்க்கிறார்கள். சகோதரவகையில் மனக்கசப்பு, தந்தைவழியில் சச்சரவு, பூர்வீக சொத்து சம்பந்தப்பட்டவகையில் பிரச்சினைகள் ஏற்படலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வுண்டு. அவரவர் அணுகுமுறையில்தான் அவை நல்லதாகவோ கெட்டதாகவோ அமையும். பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியையும், அருகில் செம்பூதியில் சிவந்தி-ங்க, ஏகம்மையார் ஜீவசமாதியையும் வழிபடவும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 2-ல் வக்ரகதியில் செயல்படுகிறார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழிக்கேற்ப, நெருங்கி வரும் தனவரவு கைக்கு கிடைக்காமல் ஏமாற்றமடைய வேண்டிய சூழ்நிலை! உங்களது காரியங்களிலும் தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்படலாம். 8-ல் ஆட்சிபெற்ற சூரியனும், 2-ல் வக்ரம்பெற்ற சனியும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். பத்து ரூபாயில் முடியவேண்டிய வேலைக்கு இருபது ரூபாய் செலவு செய்யும் நிலைகளும் உருவாகும். அதாவது ஒட்டிக்கு ரெட்டியாக செலவுசெய்வது என்பார்கள். மனதில் சஞ்சலமும் கலக்கமும் தோன்றலாம். 10-க்குடைய சுக்கிரன் 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகமென்று எடுத்துக்கொண்டாலும், அவர் நீசமாகி விடுகிறார். வரவுக்கு மீறிய செலவு, தகப்பனாரிடையே கலகம் போன்றவை உண்டாகும். சொத்துப் பிரச்சினைகளையும் சந்திக்கலாம். 3-ல் உள்ள ராகு மேற்கண்ட பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியத்தையும் ஆற்றலையும் தருவார். எல்லா வற்றுக்கும் மேலாக குரு ராசியைப் பார்ப்பதால், மலைபோல வரும் பிரச்சினை சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும். நவகிரகத்திலுள்ள குருபகவானை வழிபடவும். சனிக்கிழமை காலபைரவரை வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் சஞ்சாரம். என்னதான் சனி ராசிநாதன் என்றாலும் தற்போது வக்ரகதியில் சஞ்சரிக்கிறாரல்லவா! எனவே உங்களை செயல்படவிடாமல் தொல்லைகள் தருவார். அது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தொல்லையாகவும் இருக்கலாம்; தொழில், உத்தியோகம் சம்பந்தப்பட்ட தொல்லைகளாகவும் இருக்கலாம் அல்லது பொருளாதாரப் பிரச்சினைகளாகவும் இருக்கலாம். அடுத்தவருக்காக நல்லது செய்யப்போய் பொல்லாப்பாக மாறி வீண் பழியைச் சுமப்பதாகவும் இருக்கலாம். இப்படி மாறி மாறி ஏதேனும் ஒரு தொல்லைகளை சந்திக்கும் படியாக அமையும். 7-ல் சூரியன் ஆட்சிபெற்று, சனி- சூரியன் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதால் கணவன்- மனைவிக்குள் அல்லது தொழிற்கூட்டாளிகளுக்குள் சங்கடங்கள், வாக்கு வாதங்கள் உண்டாகும். 2-க்குடைய குரு 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். வீண் அலைச்சல், வீண் விரயம் போன்றவற்றையும் சந்திக்க நேரும். 8-ல் சுக்கிரன் நீசம். பூமி, மனைவகையில் சில தடை, தாமதங்கள் ஏற்படும். சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும். பொன்னமராவதி அருகில் குழிபிறை பனையூரிலுள்ள ஞானி சாதுபுல்லான் சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

மீனம்

மீன ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி. அதிலும் சனி வக்ரகதியில் சஞ்சாரம். உப்பு விற்கப் போனால் மழை பெய்வது, மாவு விற்கப் போனால் காற்றடிப்பது மாதிரியான நிகழ்வுகள் ஏற்படலாம். ஜென்ம ராகு- மனக்குழப்பம், தெளிவில்லாத சூழ்நிலை போன்றவற்றை சந்திக்க நேரும். வீண் விரயம், தேவையற்ற அலைக்கழிப்புகள், ஒரே வேலையை இரண்டு முறை செய்வதால் காலநேர விரயம் ஆகியவை உண்டாகும். 2-க்குடைய செவ்வாய் 4-ல் ராகு சாரத்தில் சஞ்சாரம். வரவேண்டிய பணம் வந்துசேராமல் தாமதமாவதால் அவஸ்தைக்குள்ளாக நேரிடும். 7-ல் கேது. கணவன்- மனைவிக்குள் காரணமில்லாத சச்சரவுகள், மனஸ்தாபங்கள் ஏற்படும். யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுப்பதால் மட்டுமே சங்கடங்கங்களைளத் தவிர்க்க முடியும். என்றாலும் 3-ல் உள்ள குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிரிவினைக்கு இடமிருக்காது. 19-ஆம் தேதிமுதல் 4-க்குடைய புதன் 7-ல் ஆட்சி, உச்சம். அது உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும். வீட்டைப் பழுது பார்க்கும் வேலைகளும் நடக்கும். காலபைரவருக்கு மிளகு தீபமும், ஆஞ்சனேயருக்கு நெய்தீபமுமேற்றி வழிபடவும்.