மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் சஞ்சாரம். 6-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும் தொடக்கத்தில் சந்திரன் சாரத்திலும் (ஹஸ்தம்). பிறகு சுயசாரத்திலும் சஞ்சாரம் (சித்திரை). எனவே மறைவு தோஷம் பாதிக்காது. மேலும் 3, 6, 11-ஆமிடங்கள் செவ்வாய்க்கு நல்ல இடங்கள். 8-க்குடைய செவ்வாய் 6-ல் மறைவது "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்ற அடிப்படையில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். 18-ஆம் தேதிவரை 5-க்குடைய சூரியன் ஆட்சி. திட்டங்களில் முன்னேற்றமும் செயல்பாடுகளில் வேகமும் தென்படும். கடந்த மாதம் முதல் சனி 10-ல் ஆட்சி. வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். உத்தியோகத்தினருக்கு மேலதிகாரிகளிடையே நிலவிய மனக்கசப்பு மாறும். 2-க்குடைய சுக்கிரன் 11-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தி. பொருளாதாரத்தில் சில நேரம் சங்கடம் தோன்றினாலும் சில நேரம் திருப்தி தரும்வகையில் பற்றாக்குறையுடன் செயல்படுவது நல்லது. பயணங்கள் ஆதாயம் தரும். ஜென்ம ராசியில் நிற்கும் குரு 12-ஆம் தேதிமுதல் வக்ரம் பெறுவதால் தேகநலத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். 7-ல் கேது. கணவர்- மனைவியிடையே வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தி ஆகிறார். 6-ஆமிடத்துக்கு அதிபதி 3-ல் மறைவது (கடக சுக்கிரன்) நன்மைதான் என்றா லும் ராசிநாதன் மறைவது நல்லதல்ல. உங்கள் செயல்பாடுகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். மற்றவர்களிடையே வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். 12-ஆம் தேதிமுதல் 12-ஆமிடத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் ஆரம்பமாகிறார். வீண் அலைச்சல், ஆரோக்கியக் குறைவு, தேவையற்ற விரயங்களை சந்தித்தல் போன்ற பலன்கள் ஏற்படலாம். விரயங்களில் இருவகை உண்டு. சுபவிரயம், வீண் விரயம். திருமணம், காது குத்து, கிரகப் பிரவேசம் மனை வாங்குதல் போன்றவை சுபவிரயம். மருத்துவச்செலவு, வாகனத்தில் பழுது செலவு, தண்டம் தீர்வை கட்டுவது என்பது வீண் விரயம். ஜனன ஜாதகத்தில் தசாபுக்திகளை அனுசரித்து சுபவிரயங்களை செயல்படுத்தலாம். 12-ஆமிடத்து குரு 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் மனை, வாகன யோகத்திற்கு இடம் உண்டு. அலைச்சலுக்கும் இடமுண்டு. எனவே எதிலும் நிதானத் துடன் யோசித்து செயல்படவும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். என்றாலும் சனி வக்ரமாக இருப்பதால் தந்தைவழி உறவினர்களால் சங்கடத்தை சந்திக்க நேரலாம். தந்தையின் உடல்நிலையில் அக்கறை செலுத்தவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு கடந்த மாதம் 24-ஆம் தேதிமுதல் மீண்டும் அட்டமத்துச்சனி ஆரம்பமானது. டிசம்பர் 20-ஆம் தேதிவரை அட்டமத்துச் சனி நடைபெறும். விலகிய சனி மீண்டும் வருவதால் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் தேவையில்லை. 9-க்குடைய பாக்கியாதிபதி 8-ல் மறைந்தாலும் மகரம் சனியின் வீடு என்பதால் பெரிய பாதிப்புகளைத் தரமாட்டார் என்று நம்பலாம். ஏனெனில் கடந்த இரண்டரை
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் சஞ்சாரம். 6-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும் தொடக்கத்தில் சந்திரன் சாரத்திலும் (ஹஸ்தம்). பிறகு சுயசாரத்திலும் சஞ்சாரம் (சித்திரை). எனவே மறைவு தோஷம் பாதிக்காது. மேலும் 3, 6, 11-ஆமிடங்கள் செவ்வாய்க்கு நல்ல இடங்கள். 8-க்குடைய செவ்வாய் 6-ல் மறைவது "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்ற அடிப்படையில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். 18-ஆம் தேதிவரை 5-க்குடைய சூரியன் ஆட்சி. திட்டங்களில் முன்னேற்றமும் செயல்பாடுகளில் வேகமும் தென்படும். கடந்த மாதம் முதல் சனி 10-ல் ஆட்சி. வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். உத்தியோகத்தினருக்கு மேலதிகாரிகளிடையே நிலவிய மனக்கசப்பு மாறும். 2-க்குடைய சுக்கிரன் 11-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தி. பொருளாதாரத்தில் சில நேரம் சங்கடம் தோன்றினாலும் சில நேரம் திருப்தி தரும்வகையில் பற்றாக்குறையுடன் செயல்படுவது நல்லது. பயணங்கள் ஆதாயம் தரும். ஜென்ம ராசியில் நிற்கும் குரு 12-ஆம் தேதிமுதல் வக்ரம் பெறுவதால் தேகநலத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். 7-ல் கேது. கணவர்- மனைவியிடையே வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தி ஆகிறார். 6-ஆமிடத்துக்கு அதிபதி 3-ல் மறைவது (கடக சுக்கிரன்) நன்மைதான் என்றா லும் ராசிநாதன் மறைவது நல்லதல்ல. உங்கள் செயல்பாடுகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். மற்றவர்களிடையே வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். 12-ஆம் தேதிமுதல் 12-ஆமிடத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் ஆரம்பமாகிறார். வீண் அலைச்சல், ஆரோக்கியக் குறைவு, தேவையற்ற விரயங்களை சந்தித்தல் போன்ற பலன்கள் ஏற்படலாம். விரயங்களில் இருவகை உண்டு. சுபவிரயம், வீண் விரயம். திருமணம், காது குத்து, கிரகப் பிரவேசம் மனை வாங்குதல் போன்றவை சுபவிரயம். மருத்துவச்செலவு, வாகனத்தில் பழுது செலவு, தண்டம் தீர்வை கட்டுவது என்பது வீண் விரயம். ஜனன ஜாதகத்தில் தசாபுக்திகளை அனுசரித்து சுபவிரயங்களை செயல்படுத்தலாம். 12-ஆமிடத்து குரு 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் மனை, வாகன யோகத்திற்கு இடம் உண்டு. அலைச்சலுக்கும் இடமுண்டு. எனவே எதிலும் நிதானத் துடன் யோசித்து செயல்படவும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். என்றாலும் சனி வக்ரமாக இருப்பதால் தந்தைவழி உறவினர்களால் சங்கடத்தை சந்திக்க நேரலாம். தந்தையின் உடல்நிலையில் அக்கறை செலுத்தவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு கடந்த மாதம் 24-ஆம் தேதிமுதல் மீண்டும் அட்டமத்துச்சனி ஆரம்பமானது. டிசம்பர் 20-ஆம் தேதிவரை அட்டமத்துச் சனி நடைபெறும். விலகிய சனி மீண்டும் வருவதால் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் தேவையில்லை. 9-க்குடைய பாக்கியாதிபதி 8-ல் மறைந்தாலும் மகரம் சனியின் வீடு என்பதால் பெரிய பாதிப்புகளைத் தரமாட்டார் என்று நம்பலாம். ஏனெனில் கடந்த இரண்டரை வருடம்தான் படாதபாடு படுத்திவிட்டாரே! இனி விலகும் நேரத்தில் சில நன்மைகளைச் செய்வார். அட்டமத்துச்சனி நடந்த காலத்தில் பொன், பொருள் சேர்க்கை, வேலை, தொழில் இவற்றில் முன்னேற்றம் போன்றவற்றை சந்தித்தவர்களுக்கு சனி சங்கடங்களையும், விரயங்களையும் தருவார். குடும்பத்தில் குழப்பம், பொருளாதாரப் பற்றாக்குறை, இடமாற்றத்தால் நிம்மதியின்மை இவற்றைச் சந்தித்தவர் களுக்கு சனி கருணை காட்டி நற்பலன்களை தருவார் என்பதில் சந்தேகமில்லை. 11-ஆமிடத்துக் குரு 12-ஆம் தேதிமுதல் வக்ரம் பெறுவதால் போட்டி, பொறாமைகள் விலகும். 12-க்குடைய சுக்கிரனும் 2-ல் வக்ர நிவர்த்திக்குப்பின் பற்றாக்குறை நிலை விலகி தனவரவும் உண்டாகும். தேகநலத்தில் தெளிவு ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். பிள்ளைகள்வகையில் கவனமும் அக்கறையும் காட்டுவது நல்லது.
கடகம்
கடக ராசியில் 4, 11-க்குடைய சுக்கிரன் சஞ்சாரம். 11-ஆம் தேதிவரை வக்ரமாக இருக்கிறார். தேகநலம் நன்றாக இருக்கும். எனினும் அலைச்சல்களைத் தவிர்க்கமுடியாது. ஆதாயம் பெரிதளவில் இல்லையென்றாலும் ஏதோ முதலுக்கு மோசம் இல்லாதவகையில் அமையும். ஒருசில ஒப்பந்தங்கள் தள்ளிப் போகலாம். ஆனால் தடைப்படாது. தாமதம் என்பது வேறு தடை என்பது வேறு. தடை என்றால் கிடைக்காமலேயே போவதுதான். 18-ஆம் தேதிவரை 2-க்குடைய சூரியன் 2-ல் ஆட்சி. 10-ஆமிடத்துக் குரு பார்வை 2-ஆமிடத்துக்கு கிடைக்கிறது. எனவே குடும்பத்தில் நிம்மதி நிலவும். 12-க்குடைய புதனும் 2-ல் சஞ்சாரம். அவரையும் குரு பார்க்கிறார். சின்னச்சின்ன விரயங்களும் வந்துவிலகும். 9-க்குடைய குரு 10-ல் 12-ஆம் தேதிமுதல் வக்ரம் பெறுகிறார். வேலையில் ஒருசிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். அந்த மாற்றம் விருப்பமில்லாதவகையிலும் அமைவதால் மனரீதியாக கவலை நேரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் சாதகமற்ற நிலைகள் உண்டாகும். 3-ல் செவ்வாய் சஞ்சாரம். சகோதர சகாயமும், உறவில் ஒற்றையும் ஏற்படும். உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். தாயின் உடல்நலம் பெறும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் 18-ஆம் தேதிவரை ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 2, 11-க்குடைய புதனும் சஞ்சாரம். இவர்களுக்கு 9-ஆமிடத்தில் இருக்கும் குருபார்வை கிடைக்கிறது. கழுவின் மீனில் நழுவின மீன்போல- உங்களைச் சுற்றி பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றில் இருந்து சுலபமாக தப்பித்துவிடுவீர்கள். 3, 10-க்குடைய சுக்கிரன் 11-ஆம் தேதிவரை 12-ஆமிடத்தில் வக்ரமாக இருக்கிறார். உத்தியோகத்தினருக்கு உத்தியோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. என்றாலும் திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிக்கலாம். விரும்பிய இடமாற்றத்தையும் சந்திக்கலாம். தொழில்துறையினருக்கு விரயத்தின்மூலம் ஆதாயம் ஏற்படும். அதாவது முதலீடுசெய்து பலன் பெறலாம். குருவின் வக்ரம் உங்களுக்கு சாதகமாக அமையும். 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாகும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கன்னி ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் தனவரவைத் தருவார். பூமி, கட்டடம் சம்பந்தப்படட துறையினருக்கு முன்னேற்றமும் உண்டாகும். அரசுத்துறை பணியாளர்களுக்கு நீண்டநாள் எதிர்பார்த்த பதவி உயர்வுக்கும் இடமுண்டு.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் இந்த மாத இறுதிவரை 12-ஆமிடமான விரய ஸ்தானத்தில் இருக்கிறார். வீண் விரயங்கள் அதிகமாக காணப்படும். உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்கள் என மாறி மாறி அலைச்சல்கள் ஏற்படும். புதன் 10-க்குடையவருமாவதால் வேலை, உத்தியோகம், தொழில் இவற்றுக்கான அலைச்சல்களாக அமையும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதிலும் தாமதமாகும். என்றாலும் ராசிநாதனை குரு பார்ப்பதால் மனதில் ஏதோ ஒரு தைரியத்துடன் போராடலாம். 7-க்குடைய குரு 8-ல் மறைவது நல்லதல்ல. 12-ஆம் தேதிமுதல் குரு வக்ரம் பெறுகிறார். கணவன அல்லது மனைவிக்கிடையேயான ஒற்றுமையில் சங்கடம் கவலைகளைச் சந்திக்க நேரும். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்திகள் நடைபெற்றால் பிரிவினைக்குக்கூட இடமுண்டு. எதிலும் பொறுமையும் நிதானத் தையும் கடைப்பிடிக்க வேண்டும். செவ்வாய் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் காலம் மனக்கலக்கமும் அதிகரிக்கும். 2-ஆமிடத்துக் கேது தனவரவிலும் பற்றாக்குறை நிலைகளை உருவாக்கினாலும் குரு பார்ப்பதால் கடைசி நேரத்தில் சமாளிக்கலாம். 4-க்குடைய குரு 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். வக்ரகதியில் பார்ப்பதால் வாகனவகையில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் வக்ரமாக இருக்கிறார். இம்மாதம் 11-ஆம் தேதிவரை வக்ரத்தில் வக்ரபலம். வேலையில் பளு அதிகரிக்கலாம். கை நழுவிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும் அமைப்புகள் ஏற்படும். உத்தியோகத்துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். ஆபரண பொருட்களின் மேல் நாட்டம் அதிகமாகும். 12-ஆம் தேதிமுதல் குரு வக்ரம் ஆரம்பமாகிறார். ராகுவும் சேர்க்கை. வக்ர குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் தேக ஆரோக்கியத்தில் மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரும். அர்த்தாஷ்டமச் சனியும் தாயார் உடல்நலனிலும் சௌகரியக் குறைவை உண்டாக்குவார். 2-க்குடைய செவ்வாய் 12-ல் இருக்கிறார். 12-க்குடையவர் 2-ல் இருந்தால் அந்நியதனம் உங்கள் கையில் புரளும். 2-க்குடையவர் 12-ல் இருந்தால் உங்கள் பணம் அந்நியர் வசம் புரளும். எனவே நம்பிக் கொடுத்த பணமும் வரவேண்டிய காலத்தில் வராமல் இழுபறி நிலைகளை சந்திக்கலாம். விரயங்களும் அதிகரிக்கலாம். 18-ஆம் தேதிமுதல் 11-க்குடைய சூரியன் 12-ல் மறைவு. சுயதொழிலில் கூட்டணி முறையில் செயல்பட்டு வருபவர்களுக்கு கூட்டணியில் சில சங்கடங்களை எதிர்கொள்ளலாம். ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தினாலும் 7-ல் உள்ள குரு ஒற்றுமை யையும் ஏற்படுத்துவார்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் கன்னியில் 11-ஆமிடத்தில் இருக்கிறார். ராசிநாதன் 11-ல் பலம் பெறுவது நன்மைதான். 10-ஆமிடத்தில் சூரியன் ஆட்சி. 18-ஆம் தேதிமுதல் 11-ஆமிடத்துக்கு மாறுகிறார். அரசு சம்பந்தமாக செய்த முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அரசுத்துறை பணியாளர்களுக்கு இடமாற்றமும் ஏற்படும். ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்தி நடைபெற்றால் விரும்பிய இடமாற்றமாக அமையும். பாதகமான தசாபுக்தியாக நடந்தால் விருப்பமில்லாத இடமாற்றமாகவும் நிகழும். அதை அனுசரித்துச் செயல்படவும். 12-க்குடைய சுக்கிரன் 9-ல் வக்ரம் நிவர்த்தி பெறுகிறார். (11-ஆம் தேதி முதல் வக்ரநிவர்த்தி). சுபச் செலவுகள் ஏற்படலாம். மொய்ச் செலவுகளும் வந்துசேரும். 5-க்குடைய குரு 6-ல் மறைவாக இருப்பதால் பல நேரங்களில் உங்கள் திட்டங்களில் உங்களுக்கே சந்தேகம் எழலாம். ஒரு செயல்பாட்டை செய்துமுடிப்பதற்குள் பல குழப்பங்களைச் சந்திக்கலாம். 12-ஆம் தேதிமுதல் குரு வக்ரம் பெறுவதால் போட்டி, பொறாமைகள் விலகும். உடல்நலத்தில் வைத்தியச் செலவு குறையும். மனநிலையிலும் ஒரு மாற்றம் தென்படும். சனி 3-ல் ஆட்சிபெறுவதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும்.
தனுசு
தனுசு ராசிக்கு கடந்த மாதம் கும்பத்தில் இருந்த சனி ஆகஸ்ட் 24 முதல் மீண்டும் 2-ஆமிடத்திற்கு மாறியிருக்கிறார். எனவே ஏழரைச்சனியில் இருந்து தற்காலிகமாக நிவாரணம்பெற்ற நீங்கள் மீண்டும் ஏழரைச்சனியின் கட்டுக்குள் வருகிறீர்கள். டிசம்பர் 20-ஆம் தேதிவரை தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடப்பு. குடும்பத்தில் குழப்பம், எதிலும் தெளிவற்ற நிலைகளை சந்தித்தல், தான் குழம்பியது மட்டுமின்றி தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் குழப்பி சங்கடத்திற்கு ஆளாகுதல் போன்ற பலன்கள் நடைபெறும். 5-ல் குரு திரிகோணம் பெற்றாலும் ராகுவும் அங்கு இருப்பதால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் வாக்குவாதம் சச்சரவு, நம்பிக்கையில்லாத் தன்மை போன்றவற்றால் நிலை தடுமாறி காணப்படுவீர்கள். 11-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். மேலதிகாரிகளிடையே மனக்கிலேசம் ஏற்படலாம். காரிய ஜெயம் என்பதும் தாமதமாகும். 12-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பதால் ஒருசிலருக்கு உத்தியோகரீதியாக பணி இடமாற்றம் உண்டாகும். ஒருசிலர் ஊர்மாற்றத்தையும் சந்திக்கலாம். 10-க்குடைய புதன் 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம். அது எப்படியாவது உங்களை சமாளிக்க வைக்கும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி கடந்த மாதம் 24-ஆம் தேதிமுதல் மீண்டும் மகர ராசிக்கு மாறியிருக்கிறார். வக்ரகதியாகவும் செயல்படுகிறார். 2-ல் சனி இருந்தபோது நன்மைகள் நடக்கும் என்று நம்பி ஏமாந்ததுதான் மகர ராசிக்காரர்களின் நிலை. இப்போது மீண்டும் ஜென்ம ராசிக்கு மாறியது மட்டுமல்லாமல் வக்ரகதியாகவும் அல்லவா இருக்கிறார்? உண்மைதான். வக்ர சனி அவ்வளவு நல்லதல்ல. நவம்பரில் சனி வக்ரநிவர்த்தி. கணவன்- மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகலாம். அல்லது கணவன் அல்லது மனைவிக்கு வைத்தியச் செலவு ஏற்படலாம். டெஸ்டுகள் எல்லாம் எடுத்துப் பார்த்தால் எல்லாம் நார்மல்தான் என்று டாக்டர் ரிசல்ட் சொல்லுவார். எனினும் நோய்க்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. மனதில் உண்டாகும் கற்பûன் பயம்தான் நோய்க்கும் காரணமாக அமைகிறது. தொழில் அல்லது வேலையில் போட்டி, பொறாமைகளைச் சந்திக்க நேரும். ஒருசில நேரம் ஓய்வில்லாத அலைச்சலும், ஒருசில நேரம் வேலையே இல்லாமல் இருக்கும் நிலைகளும் ஏற்படும். சனி 3-ஆமிடத் தைப் பார்ப்பதால் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் வாழ்க்கையை ஓட்டவேண்டிய நிலை!
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி 12-ல் வக்ரமாக இருக்கிறார். 12-ஆமிடம் விரய ஸ்தானம். அங்கு ஆட்சி பெற்றாமலே வீண் விரயம், அலைச்சல், ஆதாயமற்ற சூழல் போன்றவற்றைச் சந்திக்க நேரும். இப்போது சனி வக்ரமாகவும் 12-ல் சஞ்சரிப்பதால் விரயங்கள் அதிகமாகும். திடீர் பயணத்தினால் அலைச்சல், திரிச்சல்கள் உண்டாகும். ஒருசிலர் குடியிருப்புவகையில் இடமாற்றத்தைச் சந்திக்கலாம். 2-க்குடைய குரு 3-ல் மறைவு. தனகாரகன் தனஸ்தானாதிபதி மறைவதால் பொருளாதாரத்தில் சங்கடங்கள் ஏற்படும். சுகஸ்தானாதிபதி சுக்கிரன் 6-ல் மறைவு. உடல்நலம், மனநலம் இரண்டிலும் பிரச்சினைகளையும் மருத்துவச் செலவுகளையும் சந்திக்கலாம். 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால் கணவரால் ஆறுதலும் ஆதரவும் பெறலாம். உற்ற துணையினால் பக்கபலம் பெறலாம். 12-ஆம் தேதிமுதல் குரு வக்ரம். அவர் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தகப்பனார் வழியே வரவேண்டிய தொகைகள் வந்துசேரும். எவ்வளவுதான் வரவு வந்தாலும் சேமிப்புக்கு இடமில்லாதவாறு செலவுகளும் சூழ்ந்து கவலை தரும். பிள்ளைகளால் மனவருத்தமும் சங்கடமும் ஏற்படலாம்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 2-ல் நிற்கிறார். உடன் ராகுவும் நிற்பதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படலாம். உங்கள் பேச்சுக்கும் செயலுக்கும் மதிப்பு இருக்காது. 12-ஆம் தேதிமுதல் குரு வக்ரம் பெறுகிறார். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படலாம். மதிப்பு, மரியாதை அந்தஸ்தில் பாதிப்புகள் உண்டாகலாம். அது மனநிம்மதியைக் குலைக்கும். வரவு வந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதை சமாளிக்க முடியாமல் திணறலாம். 6-க்குடைய சூரியன் ஆட்சி. என்றாலும் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் தகப்பனாருக்கு தேக நலன்கள் பாதிக்கப்படலாம். அடிக்கடி மருத்துவச்செலவுகளும் உண்டாகும். 3-க்குடைய சுக்கிரன் 5-ல் வக்ரமாக இருக்கிறார். பிள்ளைகளை விட்டு பிரிந்து வாழும் சூழலும் அமையும். அல்லது புள்ளைகள் உங்களைவிட்டு பிரிந்து வெளியூர் அல்லது வெளிமாநிலத்தில் வேலை பார்க்கலாம். 11-ல் சனி வக்ரமாக இருக்கிறார். அவர் ஜென்ம ராசியைப் பார்க்கிறார். டிசம்பர் 20-ஆம் தேதிமுதல் ஏழரைச்சனி ஆரம்பம். விரயமும் அலைச்சலும் அதிகமாகும். தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பணிபுரியும் இடத்தில் பொறுமையும் நிதானமும் தேவைப்படும்.
அலைபேசி: 99440 02365