நமது பாரத தேசம் புண்ணிய பூமி. இங்கு நம்மை பாதுகாத்து வாழ வழிகாட்டியாக இருந்து வருகிறார்கள். திருக்கூட்டத்தினர். அவர்கள் தான் சித்தர்கள், யோகிகள், ஞானிகள், அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று அழைக்கப்படுகி றார்கள். அவர்கள் போகங்களுக்கு மத்தியில் ஞானி களாக உள்ளனர். அப்படிப்பட்டவர்களை நாம் அடையாளம் காண்பது மிகுந்த சிரமம். அப்படி அவர்களை கண்டுவிட்டால் அவர்களால் நம் வாழ்க்கை வளம் பெறும். மன அமைதி கிடைக்கும். அப்படிப்பட்ட ஞானிகள் சித்தர்கள் அன்றும், இன்றும், என்றும் உள்ளனர். அப்படிப்பட்டவர்களை நம்மில் பெரும்பாலான மனிதர்கள் பிச்சைக்காரர்கள் என்று ஒதுக்குகின்றோம், ஏளனமாக பார்க்கிறோம்.
காரணம் அவர்களை அடையாளம் காண்பதில் ஏற்படும் சிரமம். இப்படிப்பட்டவர்களில் கடவுளை நேரில் கண்டு தெளிந்தவர்கள் ஏராளம் உள்ளனர். இவர்கள் மறைந்தும் மறையாமல் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள் என்பதே உண்மை.
ஆம்; அப்படிப்பட்ட சித்தர்கள், ஞானி கள் இவர்களின் ஜீவன் அடங்கி அடக்கம் செய்யப்பட்ட ஜீவசமாதிகள் மக்களின் வழிபாட்டுத் தலங்களாக உள்ளன. அங்கு சென்று வணங்கினால் சித்தர்கள் அருளால் மக்கள் தங்கள் உள்ளப்பிணிகளையும் உடற்பிணிகளையும் போக்கி அருள்கிறார் கள், இப்படிப்பட்ட சித்தர்கள் உருவாக் கிய ஆலயங்கள் ஏராளம்... ஏராளம்..! சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஆலயங் களுக்கு என பிரத்தியேகமான இறைசக்திகள் உள்ளன. மனத்தூய்மை, கருமத்தூய்மை நீக்குவதற்கு சித்தர்களை வழிபடுவது மிகச்சிறப்பு. சித்தர்களை வேண்டி அழைத்த வர்களுக்கு அவர்கள் ஏதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே, ஒவ்வொருவரும் தினந்தோறும் சில நிமிடங் களையாவது சித்தர்கள் வழிபாட்டிற்கு செலவிடவேண்டும். சித்தர்களை பூஜை செய்பவர்கள் நீத்தார் சடங்குகளை திதி பார்த்து செய்யமறந்தாலும் தவறில்லை என்கிறார்கள் ஆன்மிக ஞானிகள்.
சித்தர்கள் என்ற சொல்லுக்கு "சித்தி பெற்றவர்' என்று பொருள். சிவத்தை நினைத்து கண்கொண்டு தியானித்து தரிசனம் செய்து ஆத்ம சக்தியை எழுப்பி தெய்வீக செயல்களை செய்தவர்கள்தான் சித்தர்கள்.
இதையேதான் நாம் பேச்சு வழக்கில் "சித்து விளையாட்டு' என்று அழைக்கிறோம். சித்தர் களின் ஜீவாதார சக்தியை உணர்ந்தவர்கள், தற்போது சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ள இடங்களையும் அவர்கள் உருவாக்கிய ஆலயங்களையும் தேடித்தேடிச் சென்று வழிபடுகிறார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு புகழும் அளவிலா செல்வமும் உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.
உதாரணத்திற்கு தமிழகமக்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநில மக்களும் சித்தர்களின் ஜீவசமாதியை தேடிச்சென்று தரிசனம் செய்வது அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரும் சித்தர்கள் பிறந்த நட்சத்திரத்தில் அல்லது அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர நாளில் சித்தர்களின் ஜீவசமாதி களை சென்று வணங்கி னால் நமக்கு வாழ்வு சிறக் கும், முழுவேண்டுதல் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தடைகள் விலகி சுபநிகழ்வு கள் நடக்கும் அதற்கு உதாரணமாக சித்தர்கள் ஒவ்வொருவரும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று சென்று வழிபடலாம்.
உதாரணத்திற்கு நாம் அனைவரும் முதன்மை சித்தர்களாக குறிப்பிடுவது 18 பேர்களைத் தான். அவர்களில், அகத்திய முனிவர், ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தார். நாலுயுகம் 48 நாட்கள் வாழ்ந்து திருவனந்தபுரத்தில் ஜீவசமாதி அடைந்துள்ளார். போகர் பிறந்த நட்சத்திரம் பரணி. இவர் 300 வருடங்கள் 18 நாட்கள் வாழ்ந்து திருவாவினன்குடி (பழனி)யில் ஜீவசமாதி அடைந்துள்ளார். கமலமுனி சித்தர் பிறந்த பூச நட்சத்திரம். இவர் 4,000 வருடங்களும் 48 நாட்களும் வாழ்ந்து திருவாரூரில் ஜீவசமாதி அடைந்துள்ளார். திருமூலர் பிறந்தது அவிட்ட நட்சத்திரத்தில் இவர் 3,000 வருடம் 13 நாட்கள் வாழ்ந்து சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்துள்ளார். குதம்பைச் சித்தர் விசாக நட்சத்திரத்தில் பிறந்து 1,800 வருடங்களும் 16 நாட்களும் வாழ்ந்து மறைந் தார். இவரது ஜீவசமாதி மயிலாடுதுறையில் உள்ளது. பதஞ்சலி முனிவர் மூல நட்சத் திரத்தில் பிறந்தவர். இவர் ஐந்து யுகம் ஏழு நாட்கள் வாழ்ந்து ராமேஸ்வரத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளார். கோரக்க சித்தர் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் 880 வருடம் 11 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரது சமாதி பேரூரில் அமைந்துள்ளது.
தன்வந்திரி சித்தர் பிறந்தது புனர்பூச நட்சத்திரத்தில். இவர் 800 வருடம் 32 நாட்கள் வாழ்ந்தவர். இவரது ஜீவசமாதி வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் அமைந்துள்ளது. சுந்தரானந்த சித்தர் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் 800 வருடம் 28 நாட்கள் வாழ்ந்து மதுரையில் ஜீவசமாதி அடைந்துள்ளார். கொங்கண சித்தர் பிறந்தது உத்திராட நட்சத்திரம். இவர் 800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்து திருப்பதியில் ஜீவசமாதி அடைந்துள்ளார். சட்டமுனி சித்தர் பிறந் தது மிருகசீரிஷ நட்சத்திரம். இவர் 800 வருடம் 14 நாட்கள் வாழ்ந்து ஸ்ரீரங்கத்தில் ஜீவசமாதி அடைந்துள்ளார். வான்மீக சித்தர் பிறந்த நட்சத்திரம் அனுஷம். இவர் 700 வருடம் 32 நாட்கள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்துள்ளார். இவரது ஜீவசமாதி எட்டுக்குடியில் உள்ளது. ராமதேவர் பூர நட்சத்திரத்தில் பிறந் துள்ளார். இவர் 700 வருடம் ஆறு நாட்கள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்துள்ளார். இவரது ஜீவசமாதி மெக்கா வில் உள்ளது. இவரது "ஒளி' தோற்றம் மதுரை அழகர் மலையில் தெரிகிறதாம்.
நந்தீஸ்வரர் சித்தர் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் 700 வருடம் 3 நாட்கள் வாழ்ந்து காசியில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இடைக்காட சித்தர் பிறந்தது, திருவாதிரை நட்சத்திரத்தில் இவர் 600 வருடம் 18 நாட்கள் வாழ்ந்து திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்துள்ளார். மச்சமுனி சித்தர் பிறந்தது ரோகிணி நட்சத்திரத்தில் இவர் 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்து சமாதி நிலை அடைந்துள்ளார். இவரது ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
கருவூர் சித்தர் பிறந்தது அஸ்த நட்சத்திரத்தில் இவர் 300 வருடம் 42 நாட்கள் வாழ்ந்து மறைந்துள்ளார். இவரது ஜீவசமாதி கரூரில் உள்ளது. பாம்பாட்டி சித்தர் மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் 123 வருடம் 14 நாட்கள் வாழ்ந்து சங்கரன் கோவிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். புலிப்பாணி சித்தர் நட்சத்திரம் சித்திரை. இவரது சமாதி பழனியில் உள்ளது. சித்தர் போகரின் சீடர் புலிப்பாணி என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர் காலங்கிநாத சித்தர். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் ரோமரிஷி சித்தர். இவர் காற்றோடு கலந்துவிட்டாராம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சிவவாக்கிய சித்தர். இவரது ஜீவசமாதி கும்பகோணத்தில் உள்ளது. உத்திரநட்சத்திரத்தில் பிறந்தவர் காகபுஜண்டர். இவரது ஜீவசமாதி திருச்சி உறையூரில் உள்ளது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர் புண்ணாக்கீசர் சித்தர். இவரது ஜீவசமாதி நன்னாசேர் என்ற ஊரில் உள்ளது. கேட்டை நட்சத் திரத்தில் பிறந்தவர் வியாசர்.
இவரை நினைத்தாலே போதும் அனைத்து அருளும் கிடைக்கும். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர் தட்சிணாமூர்த்தி சித்தர். இவரது ஜீவசமாதி புதுச் சேரி பகுதியில் உள்ள பள்ளித்தென்னல் பகுதியில் உள்ளது. சதய நட்சத்திரத் தில் பிறந்தவர் கவுபால சித்தர். இவரை நினைத் தாலே அருள் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் ஜோதிமணி சித்தர். இவரை நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டாலே வளமான வாழ்வு அமையும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் டமகரர் சித்தர். இவரும் காற்றோடு கலந்தவராம். இவரை நினைத்து வணங்கினாலே போதும்.
இப்படிப்பட்ட சித்தர்கள் மட்டுமல்ல, நம்முடைய பாரத தேசத்திலும் தமிழகத்திலும் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்து உள்ளனர். அவர்களின் ஜீவசமாதிகள் பல்வேறு ஊர்களில் உள்ளன. இப்படிப்பட்ட சித்தர்கள் பூமியில் வாழ்ந்து மக்களுக்காக எத்தனையோ நன்மைகளை செய்துள்ளனர். யாரும் நேரடியாகப் பார்க்க முடியாத இறைவனை சித்தர் கள்மூலம் நமக்கு அருள்வழி காட்டியுள்ளனர். இப்படிப் பட்ட சித்தர்களின் ஜீவசமாதி களை சென்று வழிபடுவதன் மூலம் ஏராளமான நன்மை களைப் பெறலாம். ஜீவசமாதி களை சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளைத்துணி விரிப் பின் மீது அமர்ந்து சித்தர் களின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவர்களுக்கான மந்திரங்களைக் கூறி விளக் கேற்றி தியானம் செய்தால் நல்லதே நடக்கும். நாம் ஒவ்வொருவரும் திதியில் பிறந்தவர்களே. எனவே திதி இல்லாமல் விதி அமையாது. எனவே நமது ஜென்ம நட்சத் திரநாளில் சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கு சென்று மாலை வணங்கினால் இறையருள் அனைத்தும் கிடைக்கும்.
மேலும் குலதெய்வம் இருப்பது தெரியாத வர்கள் குலதெய்வத்தை வணங்க மறந்தவர் கள் சித்தர்கள் ஜீவசமாதிக்கு சென்று வழிபாடு செய்வதன்மூலம் அதற்குப் பரிகார மாக அமையும். ஒவ்வொரு ஆலயத்திலும் பிரத்தியேகமான இறை சக்தி உண்டு. அதற்கு முக்கியக் காரணம் அங்கே சித்தர்கள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்துள்ளனர். ஜீவசமாதிக்கு சென்று வணங்குபவர்கள் அசைவ உணவை விட்டுவிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள் ஆன்மிகவாதிகள். இந்திய அளவில் அதுவும் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு பிரசித்த பெற்ற ஆலயத்திலும் சித்தர்களின் ஜீவசமாதி கள் நிச்சயம் இருக்கும். அவர்கள்தான் ஆலயம் உருவாக காரணமாக இருந்துள்ளனர்.
அப்படி உருவான ஆலயங்கள்தான் தற்போது மக்கள் வழிபாட்டில் உள்ளன. அதற்கு உதாரணமாக சித்தர் பெயரால் உருவான செந்துறை சிவாலயம் குறித்து ஆன்மிக அன்பர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.
வரலாற்றில் தடம் பதித்த ஊர்களில் ஒன்று அரியலூர் மாவட்டம் செந்துறை. இந்த ஊரில் மெய்வரத் தம்பிரான் என்ற சித்தர் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளார். அப் போது சிறிய கிராமமாக இப்பகுதி இருந்துள்ளது. சித்தர் மெய்வரத் தம்பிரான் வாழ்ந்து மறைந்த இந்த ஊர் சித்தர் துறை என்று அழைக்கப்பட்டு வந்துள் ளது. காலப்போக்கில் மக்கள் பேச்சு வழக்கில் மருவி சித்தர் துறை செந்துறையாக தற்போது அழைக்கப் படுகிறது. இப்பகுதி செம்மண் பூமி. இங்கு மழை பெய்தால் செந்நிறமாக ஓடும். இதனால் "தன் பொழில் செந்துறை'' என்றும் இந்த ஊரை குறிப்பிடுகிறார்கள். இப்பகுதி காரைச் செடி கள், புளி, இலுப்பை, கருங்காலி, வன்னி, விளா போன்ற மரங்கள் சூழ்ந்த வனக் காடாக இருந்துள்ளது. இதன் காரணமாக "காரைக்காட்டு தாண்டநாடு' என்று அழைக் கப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டு செய்திகள் இந்த விவரங்களை எடுத்துக் கூறுகின்றன. காலப்போக்கில் இந்த ஊருக்கு "நெய் வனம்' என்ற பெயரும் இருந் துள்ளது. இவ்வூரில் வாழ்ந்த சித்தர் மெய்வரத் தம்பிரான் மக்களுக்கு ஆன்மிகப் பாதைக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இவரது பெயர் சுற்றுப்பட்டு பகுதிகளுக்கும் பரவியது.
மாமன்னன் ராஜராஜ சோழர் ஆட்சிக் காலத்தில் இப்பகுதி சிற்றரசர் பழுவேட்டறையர் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. சிற்றரசர் பபழுவேட்டறையருக்கு திருமணமாகி நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளார். இதனால் மிகுந்த கவலையில் இருந்த சிற்றரசரிடம் இப்பகுதியில் வாழ்ந்த அரசு அதிகாரிகள் சித்தர் மெய்வரத் தம்பி ரான் குறித்து சிற்றரசுக்கு தெரிவித்துள்ளனர்.
சித்தரிடம் சென்றால் தங்களுக்கு வாரிசு உருவாக வழிவகை கூறுவார் என்று கூறியுள்ள னர். இதைக் கேட்ட சிற்றரசர் உடனடியாக கிளம்பி இங்கு வந்து சித்தரை சந்தித்தார்.
சித்தர் பழுவேட்டரையரிடம், "இப்பகுதி யில் சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் எழுப்புங் கள், உங்களுக்கு நிச்சயம் குழந்தைப்பேறு கிடைக்கும்'' என்று கூறினார். சித்தரின் வாக்கை ஏற்றுக்கொண்ட பழுவேட்டரையர். சிவாலயம் எழுப்ப முடிவுசெய்த தோடு இதற்காக சோழ சக்கரவர்த்தி ராஜராஜனின் சகோதரி குந்தவை நாச்சியாரை சென்று சந்தித்து அனுமதி கேட்டுள்ளார். குந்தவை நாச்சியார் பலவேட்டரை யரின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்டதோடு அரசரிடம் அனுமதி பெற்று இங்கு ஆலயம் எழுப்ப அனுமதி அளித்தார். இதற்காக பழுவேட்டரையர் ஆட்சி செய்யும் பகுதி மக்களிடமிருந்து வரி வசூல் செய்து பேரரசுக்கு வரி செலுத்துவதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டு அந்த வரியை கொண்டும் மக்களின் ஒத்துழைப் போடும் இங்கு சிவாலயம் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த ஆலயம் கட்டி முடித்து குடமுழுக்கு நடத்துவதற்குள் பழவேட்டரையர் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இறைவனின் சக்தியையும் சித்தரின் வாக்கையும் எண்ணி அகமகிழ்ந்தார் சிற்றரசன். அதன் பிறகு கோவில் கட்டும் பணி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று ஆலயத்திற்குள் சிவலிங்கத்தை வைத்து குடமுழுக்கு நடத்தினார்கள். இந்த சிவலிங்கத்திற்கு சித்தரின் நினைவாக மகா சிவன் என்று பெயர் சூட்டினார்கள். இக்கோவிலுக்கு அருகிலேயே சித்தர் உருவாக்கிய ஏரி தற்போது சித்தேரி என்ற பெயரில் சாட்சியாக உள்ளது. மேலும் சித்தரின் வாக்கு பலித்ததை எண்ணி மகிழ்ந்த குந்தவை நாச்சியார் இங்குவந்து சித்தர் மெய்வரத் தம்பிரான் அவர்களை சந்தித்து ஆசி பெற்று சென்றுள்ளார். இவ்வாலய இறைவன் பழுவேட்டரையரின் கவலையை தீர்த்துவைத்ததால் தீர்த்தபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். இங்குள்ள தாயார் பிரசன்னநாயகி. தஞ்சைப் பெரிய கோவிலுக்கு முன்பாகவே இவ்வாலயம் உருவானதாக கூறப்படுகிறது.
அதனால் இவ்வாலைய இறைவனுக்கு செந்துறை தீர்த்த புரீஸ்வரர் ஆலயம் மற்றும் "சிவதாண்டேஸ்வரர்'' என்ற பெயரும் உண்டு. சித்தர் உருவாக்கிய இவ்வாலயம் மக்களின் இன்றியமையாத இறைவழிபாட்டுத் தலமாக தற்போது விளங்கி வருகிறது.
இவ்வாலயம் உருவாகக் காரணமாக இருந்த சித்தரின் ஜீவசமாதி இவ்வாலயத்திற்கு பின்புறம் உள்ளது. மக்கள் வழிபட்டு வருகிறார் கள். மேலும் மன்னர்கள் காலத்தில் கட்டப் பட்ட பெரும்பாலான கோவில்கள் அந்தந்த பகுதியில் உள்ள பாறை கற்கள், மண், ஆகிய வற்றை கொண்டு கட்டியுள்ளனர். அதன்படி கி.பி. 999-ல் கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று செய்திகள் குறிப்பிடுகின்றன. இப்படி வரலாற்று சிறப்பும் பழமையும் பெருமையும் கொண்டதான இக்கோவில் பற்றி பல்வேறு கல்வெட்டு குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் செந்துறையை சுற்றியுள்ள ராயபுரம், சென்னிவனம், பொன்பரப்பி, சிறுக்களத்தூர், இலங்கைச் சேரி, ஓட்டக் கோவில், தாமரைப்பூண்டி, பெரியாக்குறிச்சி, கொடுக்கூர் ஆகிய கிராமப் பகுதிகளில் உள்ள கோவில்களில் உள்ள கல்வெட்டு செய்திகளில் செந்துறை கோவில் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஒரு தாலுகா தலைநகரமாக தற்போது விளங்கி வருகிறது.
சித்தர் உருவாக்கிய தீர்த்தபுரீஸ்வரர் மக்களின் தீராத பிரச்சினைகளை தீர்த்து வைத்து வருகிறார். மகப்பேறு கிட்டாத தம்பதிகள், நோய்நொடியால் பாதிக்கப்பட்ட வர்கள், கருத்துவேற்றுமை உள்ள கணவன்- மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ, குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளில் ஏற்படும் தடைகள் விலக இவ்வாலய இறைவனையும் அம்பாளையும் வந்து வழிபட்டு நலம் பெற்று வருகிறார்கள் இப்பகுதி மக்கள். நாமும் ஒருமுறை செந்துறை சிவாலயம் சென்று இறைவனைத் தரிசிக்கவேண்டும் அல்லவா? அமைவிடம்: சென்னை- திருச்சி ரயில் பாதையில் அமைந்துள்ளது. செந்துறை ரயில்நிலையத்திலிருந்து ஒருகிலோமீட்டர், ஜெயங்கொண்டத்திலிருந்து 24 கிலோ மீட்டர், அரியலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.