கிண்ணிமங்கலம்

சந்தையூர் திருவிழாக்களின்போது நடன நிகழ்வுகளில் முத்தாய்ப்பாய் மிளிரும் நடன மாதர்கள் ஔவையின் வருகை யைக் கேள்விப்பட்டு அவரைக் காண வந்திருந்தனர். ஆடல் மகளிர்களுக்கு உடல் சம்பந்தமான, பிறரிடம் சொல்லமுடியாத சில பிரச்சினைகள் ஏற்படும். இவற்றிற்கான தீர்வுகாண தங்களின் தாயாக, தோழியாக ஔவையாரைப் பாவித்து, அவரைக் காணவந்தனர்.

நோய்களால் அவதிப்பட்ட நடன மாதர்கள்! ஔவையைக் கண்டவுடன் அவர்களுக்கு அழுகை பீறிட்டு வந்தது. ஔவை அவர்களை அருகில் அழைத்து என்ன வேண்டுமென பாசத்துடன் வினவினார்.

ss

Advertisment

அப்போது அவர்கள் கூறலாயினர். நாங்கள் பல ஊர்களுக்குச் சென்று இரவு- பகல் பாராமல் ஆடலரங்குகளில் நடனமாடுகிறோம். இதனால் உடல் வெப்பம் அதிகரித்து பெரும்பாட்டு நோயினால் அவதியுறுகிறோம். நடன நிகழ்வு முடிந்து எங்கள் இடத்திற்கு வந்து இரவு தூக்கம் தூங்குவதற்கு வெகு நேரமாகி விடுகிறது. இதனால் உடல் சூடு அதிகமாகி விடுகிறது. நடனமாடும் போது நுணுக்க மான அசைவுகளை உருவாக்க இயலாத அளவிற்கு கால் தசைகள், மூட்டுகள் பிடித்துக்கொள்கின்றன. மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. சுழன்று நடனமாடும்போது தன்னிலை தடுமாறுகிறது. சில ஆடல் மகளிர் வெட்டை நோயினால் அவதியுறுகிறார்கள். இதற்கான நல்ல தீர்வினைத் தருவீகள் என்று தான் தங்களைக் காணவந்தோம் எனக் கூறினர்.

எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன தீர்வு!

நடன மாதர்கள் கூறிய அனைத்துப் பிரச் சினைகளையும் மிகக்கவனமாக கேட்டறிந்த பின் ஔவை அவர்களிடம் பேசலானார். நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். பெண்ணானவள், தன் முப்பத்தைந்து அகவை வரும்போது, தன் உடல் நிலை இளமையிலிருந்து மாற்றமடைவதை உணர்கிறாள். நீங்களோ ஆடல் கலைஞர்கள். நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று, பல சூழல்களில் பலதரப்பட்ட உணவு, நீர் மற்றும் பல பழக்க- வழக்கங்களுக்குள் உங்கள் உடம்பை ஆட்படுத்துகிறீர்கள். நான் சொல்வதை நன்றாகக் கேளுங்கள். உங்கள் குளிக்கும் அறைக்குள் ஐந்து முழ நீள, அகலமுள்ள பலகைக் கல்லில், உங்களது கையில் ஒரு சாண் அளவு விட்டம் மற்றும் ஆழமுடைய குழியை கல்தச்சரிடம் செய்யக்கூறி, தரையில் பொருத்தி வைத்துக்கொள்ளுங்கள். மாதம் இருமுறை, அதாவது முழுநிலவு நாளுக்கு முந்திய நாளுக்கு முந்திய நாளிலும், மறைநிலவு நாளுக்கு முந்திய நாளுக்கு முந்திய நாள் காலையிலும், நீங்கள் பள்ளியறையிலிருந்து எழுந்தவுடன், குளியலறையில் மேற்கண்ட குழி நிறையும் அளவு சிறுநீர் கழிக்கவேண்டும். அதன் நடுவே மூன்று துளி எள் எண்ணெய்யை விடுங்கள்.

Advertisment

அது பாம்புபோல் நீண்டு நெளிந்து எண்ணெய்த் துளிகள் மாறியிருப்பின், உங்கள் உடம்பில் வாத நோய் உருவாகி விட்டது என்று பொருள். அந்த எண்ணெய்த் துளிகளுக்கு நடுவில் இடைவெளி விட்டு மோதிர வளையம்போல் மாறினால் உடம்பில் பித்த நோய் உருவாகி விட்டது என்று பொருள். எண்ணெய்த் துளிகள் சிறுநீரில் விரவாமல் நடுவே ஒன்றுசேர்ந்து நன்முத்து போன்று காணப்படுமாயின் உடம்பில் கபநோய் வந்துவிட்டது என்று பொருள். அந்த எண்ணெய்த்துளிகள் சிதறி குழியின் சுற்றுவட்டத்திற்குள் அனைத்து திசைகளி லும் ஓடினால் முக்கூட்டு நோய் உருவாகி விட்டது என்று பொருள். கழித்த சிறுநீரில் நுரை பொங்கி உயரே எழும்புமாயின் மேக நோய் வந்துவிட்டது (சர்க்கரை சத்து) என்று பொருள். சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்து அக்குழியில் சிறுநீர் உலர்ந்த பின் மஞ்சள் நிற படிமம் அக்குழியில் தெரிந்தால் காமாலை நோய் வந்துவிட்டது என்று பொருள்.

உடல் அசைந்தாடும்போது மூட்டுப்பகுதி களில் வலி அதிகமாக இருந்து மெல்லிய வீக்கத்தோடு காணப்பட்டால் முடக்கு வாதம் ஏற்பட்டுவிட்டது எனப் பொருள்.

முடக்கு வாதம் என்பது நடனக் கலைஞர் களின் பேர், புகழ், திறமை அனைத்தையும் அழித்து வாழ்வைச் சீர்குலைத்துவிடும். இந்த நிலை ஆடல் வல்லுநர்களின் வாழ்நாள் முழுவதற்கும் நேராதிருப்பதற்கு உழிஞை இலைகளைப் பறித்து நிழலுணர்த்திப் பொடிசெய்து வைத்துக்கொண்டு, இரவு நேரத்தில் அதனை அடைமாவினில் சேர்த்துக் கலக்கி அடைதோசைகள் சுட்டுச் சாப்பிட வேண்டும். இது எவ்வகை மூட்டு இறுக்கத் தையும் உடைத்தெறியும் வல்லமை பெற்றது. இதனால்தான், கடினமான கோட்டைக் கதவு களை உடைத்தெறியச்செய்யும் போருக்குச் செல்லும் வீரர்கள் உழிஞை மாலை அணிந்துசெல்வார்கள்.

ss

மேகநோய் அறிகுறி கண்டால் உங்களது முற்றத்து நிழற்பந்தலில் கோவங்கொடிகளை வளர்த்துப் படரவிடுங்கள். கோவங்காய்களை பொரியல் செய்து சாப்பிட்டுவந்தால் மேக நோய் மேலும் உருவாகாது. இதைவிட பெண்களுக்கான ரகசிய அமிழ்த நீர் மருந்தொன்றைப் பகர்கிறேன். கவனமாகக் கேளுங்கள். ஒரு அகன்ற மண் பானையில் நன்னீரை அதன் கழுத்தளவு ஊற்றுங்கள். அதாவது கொள்ளளவையில் முக்குறுணி அளவு நீர் ஊற்றி, அதில் மூன்று கையளவு நீர்த்த சுண்ணாம்புக் கற்களைப் போடுங்கள். சுண்ணாம்புக் காளவாசலில் நீர்த்தவுடன், அதனை எடுத்துவந்து சேர்க்கவேண்டும். ஒரு கை நிறைய மூன்றுமுறை நீரில் சேர்த்தவுடன் நீர் கதகதவென்று கொதிக்கும். கொதிப்பு அடங்கியவுடன் ஒரு கையளவு சிறுஞ்சீரகமும் ஒரு கையளவு பெருஞ்சீரகமும் அதில்சேர்த்து, அதன்மீது பருத்தித்துணிகொண்டு மண் பானையின் வாயை இறுக்கமாக மூடிக் கட்டிவிடவேண்டும். நான்கு நாட்கள் இம்மண் பானை அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நான்கு நாட்களுக்குப்பின் மூடிய துணியை அவிழ்த்துப் பார்த்தால், மண் பானையில் பாதிக்குமேல் சுத்தமான தெளிந்த நீர் படிக நிறத்தில் சுத்தமாகக் காணப்படும். சீரகங்களிலிருந்து ஒருவித எண்ணெய் வெளிப்பட்டு சுண்ணாம்பிலிருந்த காரத்தன்மையைச் சமனப்படுத்தி அமிழ்தமாக மாற்றியிருக்கும். இந்த அமிழ்த நீரை மற்றொரு கலத்தில் வடித்து எடுத்துக் கொண்டு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளியூருக்குச் செல்லும்போது இந்த அமிழ்த நீர்கலனை எடுத்துச்செல்லவேண்டும். அப்பகுதியில் கிடைக்கும் குடிநீருடன் ஐந்தில் மூன்று பங்கு இந்நீரைச் சேர்த்துதான் நீங்கள் பருகவேண்டும்.

இந்த நீரை மேற்கண்ட வண்ணம் பருகி வந்தால் பெண்களுக்கான இரத்தப்போக்கு நின்றுவிடும். எலும்பு பலவீனமானபின் உருவாகும் எலும்பு முறிவு ஏற்படாமல் எலும்பை வலிமைப்படுத்தும். நீரிழிவு நோயால் ஏற்படும் பாத எரிச்சலை நிறுத்தி விடும். பாத எரிச்சல் நடன மாதர்களுக்கு நீண்ட நேரம் நின்றாடுதலுக்கு இடையூறாக இருக்கும். உடலில் நடனமாதர்களுக்கு உருவாகும் ரத்த அடைப்புகளை எடுத்து விடும். உடற்காயங்களை உடனுக்குடனே தழும்பின்றி உலர்த்திவிடும்.

நடனமாடும்போது இடையிலும் தலையிலும் ஏற்படும் எலும்பு விரிசலை ஒட்டிவிடும். நடனத்தால் ஏற்படும் பெண் களுக்கான அதிஉதிரப்போக்கு இதை அருந்தியவுடன் நின்றுவிடும். உடலுக்குள் புண்களால் ஏற்படும் இரத்தகசிவு நின்று விடும். வயதாகும்போது எலும்பு மஜ்ஜை வறண்டுவிடும். அப்போது ஏற்படும் மாறாத கை, கால்வலிகள் நின்றுவிடும். மேக நோயால் ஆடல் மாந்தர்களின் கால்விரல்கள் உணர்வற்று சூம்பி உதிர்ந்துவிடும். அத்தகைய கொடூர நோய்கள் வராது, பெண்களின் சிறுநீர்த்துவார எரிச்சலைக் குறைத்துவிடும். மன அழுத்தத்தால் உண்டாகும் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவைச் சரிப்படுத்தும். கலைஞர்களுக்கு மூளை ரத்தக்கசிவு நோய் அதிக அளவு ஏற்பட வாய்ப்புண்டு. நடன மாந்தர்களுக்கு ஏற்படும் முடக்குவாதம், திருகுவாதம், முருக்குவாதம், தொங்கு வாதம் ஆகிய அத்துனைக்கும் உண்டான உயிர் மருந்து இதுவேயாகும். நீரில் பரவும் அத்துனை தொற்றுகளுக்கும் இது அருமருந்தாகும்.

எனவே இதனை நீங்கள் அருந்திவந்தால் எண்பது வயதுவரை எவ்வித உடற் சிரமமு மின்றி உங்கள் வழித்தோன்றல்களுக்கு கலை களைக் கற்றுக்கொடுக்கலாம் என ஔவை கூறக்கேட்டதும், மகிழ்ச்சிப் பெருக்கில் அவர் கள் ஔவையை ஆரத்தழுவி, தங்கள் கழுத்தி லிருந்த முத்துமாலைகளைக் கழற்றி ஔவை யின் காலடியில் சமர்ப்பித்தனர்.

ஆதித்தமிழர்கள் ரகசியமாக வைத்திருந்த ஔவை மருந்தை வாசகர்களுக்காகவே இங்கு விவரித்துள்ளோம். இது நடன மாந்தர் களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான அருமருந்தாகும். இதனைப் பயன்படுத்தி மகிழ்வீராக! ஆய்ந்தறிதல் தொடரும்.

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்