பெருவழிப்பாதையில் ஔவை பயணத்தைத் தொடங்கவிருக்கும் நாளையும் நேரத்தையும், சுற்றியிருக்கும் ஊர்களில் குருமடத்தார் பறைசாற்றி அறிவித்திருந்தனர். அவ்வூர்களிலிருந்து ஔவை செல்லும் பெருவழிப்பாதைக்கு அருகிலுள்ள ஊர்களில் திருமணம் செய்துகொடுத்த தங்கள் மகள்களைக் காண விரும்புபவர்களும், உறவினர் களைக் காணச் செல்லவிருப்பவர் களும், ஔவையாரோடு சேர்ந்து பயணம் மேற் கொண்டால் பாதுகாப்பாக இருக்குமென விரும்பி, ஔவையார் புறப்படும் நேரத்திற்குள் குரு மடத்திற்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.
பாதுகாப்பான கானகப் பயணம்!
ஆதிகாலத்தில் குரு மடத்தின் வடக்கு வாயில் வழியாகத்தான் ஔவையாரை வழியனுப்பும் வழக்கம் இருந்துவந்தது. (இதன்காரணத்தைப் பிறகு பார்ப்போம்.) ஆகவே, குரு மடத்தின் வடக்கு வாயில் அழகிய தோரணங்களுடன் குளிர்ந்த பந்தல் வேயப்பட்டு வாசனைத் திரவியங்கள் தெளிக்கப்பட்டிருக்கும். ஔவையாரோடு பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் காலை உணவு குரு மடத்தாரால் வழங்கப்பட்டுவிடும். ஔவையாருக்குத் தேவையான பொருட் கள் யாவும் பத்திரமாக மிகப்பெரிய கூட்டுவண்டியில் ஏற்றப் பட்டுவிடும். மேலும் வணிகர்கள், பயணிகள் போன்றவர்களின் கூட்டு வண்டிகளும் வரிசையாக நிற்கும்.
வணிகர்கள் பெரும்பாலும் இது போன்ற அரசுமுறைப் பயணத்தின் போது ஔவையாரோடுதான் செல்ல விரும்புவார்கள். ஏனெனில், வாணிகப் பொருட்கள் ஏற்றப் பட்ட கூட்டுவண்டிகள் கானகப் பகுதிகளில் செல்லும்போது, அங்கு வாழும் கள்வர்களால் இடைமறித்துக் கொள்ளையடிக்கப்படும். இவ்வாறு கொள்ளையடிப்பவர்களை மழவர்படை என்றழைத்தனர். ஔவையின் அரசுப் பயணத்தோடு சென்றால், வணிகர் குழுவும் பயணிகளும் பாதுகாப்பாகத் தலைநகருக்குச் சென்று சேர்ந்துவிடலாம்.
மேலும், ஔவையின் பயணத்தில் கானகப் பெருவழிப்பாதையில் செல்லும்போது யானைகள், காட்டெருமைகள், கரடிகள், ஓநாய்கள் கழுதைப்புலிகள், சிறுத்தைகள், புலிகள், குரங்குகள் இடைமறித்து துன்புறுத்தக்கூடும். இந்த இடையூறுகளைத் தடுப்பதற்கு ஒவ்வொரு மிருக இனங்களுக்கு ஏற்றவாறு அவற்றை விரட்டியடிக்கும் வழிமுறைகளைத் தெரிந்த அனுபவமுள்ள வீரர்களை குரு மடத்தார் துணைக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் பெரும்பாலும் பெரு வேட்டையர்கள்தான் இருப்பார்கள். பெருவேட்டையர் குறிந்து முந்தைய அத்தியாயங்களில் படித்திருப்போம். புலிகள், காட்டெருமைகள் போன்றவற்றை விரட்ட தீப்பந்தங்களைப் பயன்படுத்துவர். யானைகளை
பெருவழிப்பாதையில் ஔவை பயணத்தைத் தொடங்கவிருக்கும் நாளையும் நேரத்தையும், சுற்றியிருக்கும் ஊர்களில் குருமடத்தார் பறைசாற்றி அறிவித்திருந்தனர். அவ்வூர்களிலிருந்து ஔவை செல்லும் பெருவழிப்பாதைக்கு அருகிலுள்ள ஊர்களில் திருமணம் செய்துகொடுத்த தங்கள் மகள்களைக் காண விரும்புபவர்களும், உறவினர் களைக் காணச் செல்லவிருப்பவர் களும், ஔவையாரோடு சேர்ந்து பயணம் மேற் கொண்டால் பாதுகாப்பாக இருக்குமென விரும்பி, ஔவையார் புறப்படும் நேரத்திற்குள் குரு மடத்திற்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.
பாதுகாப்பான கானகப் பயணம்!
ஆதிகாலத்தில் குரு மடத்தின் வடக்கு வாயில் வழியாகத்தான் ஔவையாரை வழியனுப்பும் வழக்கம் இருந்துவந்தது. (இதன்காரணத்தைப் பிறகு பார்ப்போம்.) ஆகவே, குரு மடத்தின் வடக்கு வாயில் அழகிய தோரணங்களுடன் குளிர்ந்த பந்தல் வேயப்பட்டு வாசனைத் திரவியங்கள் தெளிக்கப்பட்டிருக்கும். ஔவையாரோடு பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் காலை உணவு குரு மடத்தாரால் வழங்கப்பட்டுவிடும். ஔவையாருக்குத் தேவையான பொருட் கள் யாவும் பத்திரமாக மிகப்பெரிய கூட்டுவண்டியில் ஏற்றப் பட்டுவிடும். மேலும் வணிகர்கள், பயணிகள் போன்றவர்களின் கூட்டு வண்டிகளும் வரிசையாக நிற்கும்.
வணிகர்கள் பெரும்பாலும் இது போன்ற அரசுமுறைப் பயணத்தின் போது ஔவையாரோடுதான் செல்ல விரும்புவார்கள். ஏனெனில், வாணிகப் பொருட்கள் ஏற்றப் பட்ட கூட்டுவண்டிகள் கானகப் பகுதிகளில் செல்லும்போது, அங்கு வாழும் கள்வர்களால் இடைமறித்துக் கொள்ளையடிக்கப்படும். இவ்வாறு கொள்ளையடிப்பவர்களை மழவர்படை என்றழைத்தனர். ஔவையின் அரசுப் பயணத்தோடு சென்றால், வணிகர் குழுவும் பயணிகளும் பாதுகாப்பாகத் தலைநகருக்குச் சென்று சேர்ந்துவிடலாம்.
மேலும், ஔவையின் பயணத்தில் கானகப் பெருவழிப்பாதையில் செல்லும்போது யானைகள், காட்டெருமைகள், கரடிகள், ஓநாய்கள் கழுதைப்புலிகள், சிறுத்தைகள், புலிகள், குரங்குகள் இடைமறித்து துன்புறுத்தக்கூடும். இந்த இடையூறுகளைத் தடுப்பதற்கு ஒவ்வொரு மிருக இனங்களுக்கு ஏற்றவாறு அவற்றை விரட்டியடிக்கும் வழிமுறைகளைத் தெரிந்த அனுபவமுள்ள வீரர்களை குரு மடத்தார் துணைக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் பெரும்பாலும் பெரு வேட்டையர்கள்தான் இருப்பார்கள். பெருவேட்டையர் குறிந்து முந்தைய அத்தியாயங்களில் படித்திருப்போம். புலிகள், காட்டெருமைகள் போன்றவற்றை விரட்ட தீப்பந்தங்களைப் பயன்படுத்துவர். யானைகளை விரட்ட முரசுகளையும், ஓநாய்களுக்கு வில் அம்புகளையும், கழுதைப்புலிகள், கரடிகளை விரட்ட நீண்ட ஈட்டிகளையும் கொண்டு விரட்டுவார்கள்.
மனிதகுலத்தின் அமிர்த சஞ்சீவினி!
ஔவை புறப்பாடு வைபவம் வெகு விமர்சையாக நடைபெறும். சிறுவயது முதலே தங்களிடம் வளர்ந்துவந்த ஔவை, தங்களிடம் எத்துணை துறைகளில் எல்லாம் பயிற்சி பெற்றிருக்கிறாள் என்பதை அனைவரும் அறியும்வண்ணம், குரு மடத்தார் வடக்கு வாயில் பந்தலில் பெரிய திரைச்சீலைகளில் ஓவியமாக வரைந்து தொங்கவிட்டிருப்பார்கள். அவள் இந்நாட்டு மக்களுக்காகத் தொண்டாற்ற ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக உருவெடுத்து வந்திருக்கின்றாள் என்பதை எல்லாருக்கும் பறைசாற்றும் வண்ணம் அவ்வோவியங்கள் அமைந்திருக்கும்.
வடக்கு வாயில் பந்தலின்கீழ் அழகான பெரிய முத்துக்குடை அமைத்து, அங்கே வெண்பருத்திக் கலிங்கம் உடுத்திய ஔவையார் அழைத்துவரப்படுவாள். அவள், தனது வலக்கையில் சீந்தில் கொடியும், இடக்கையில் செங்குமரி என்றழைக்கப்படும் சோற்றுக் கற்றாழையும் ஏந்தி வருவாள். ஔவையின் கைகளில் இருக்கும் கற்றாழையும் சீந்தில் கொடியும், தான் வளர்ந்த தாய்மண்ணைவிட்டு வேரோடு பிடுங்கியபின்பும் வாடாமல் தளிர்க்கக் கூடிய இயல்புடையவை. இவ்விரண்டும் தமிழகத்தைத் தாய் மண்ணாகக்கொண்ட அமிர்த சஞ்சீவினிகளாகும்.
இவற்றைப்போலவே ஔவையானவள், தான் வளர்ந்த குரு மடத்திலிருந்து வெளியே வந்தபின்பும் வாடாமல் தளிர்த்து, மனித குலத்திற்கு அமிர்த சஞ்சீவினியாகத் திகழப்போகிறவள் ஆவாள். மக்கள் எத்துறையில் துன்பப்பட்டாலும், அத்துறை யின் இடர்ப்பாடுகளிலிருந்து தப்பித்து, அத்துறையினைத் திறம்பட ஆளுமைப்படுத்தி வென்றெடுக்கும் உத்திகளைக் கற்றுக் கொடுக்கும் அளவுக்குப் பேரறிவினளாக இருக்கும் ஆற்றல் கொண்டவள் என்பதன் அடையாளச் சின்னமே. அவள் இரு கைகளிலும் ஏந்திவந்த கற்றாழையும் சீந்தில் கொடியுமாகும்.
நோய் பரவுதலைத் தடுக்கும் நுண்ணுயிரிகள்!
ஔவையார் முத்துக் குடைக்குக் கீழ் அழைத்துவரப்பட்டபின், அவளைச் சுற்றிலும் ஏழு கரகங்கள் வைக்கப்படும். கரகங்கள் என்பது ஆதித்தமிழர்கள் கண்டறிந்த மிகச்சிறந்த அறிவியல் (மருத்துவ) தொழில்நுட்பமாகும். எழுவகை நீர்நிலைகளிலிருந்து, அவற்றின் அடிப்பகுதிகளிலிருந்து, ஒரு கடத்தில் பாதியளவு நீரை எடுத்துக் கொள்வார்கள். எழுவகை என்பது சுனை, குட்டை, குளம், கண்மாய், ஏரி, தெப்பம், பொய்கை போன்றவை. இவ்வாறான நீர்நிலைகளில் விலங்கு களும் மனிதர்களும் புழங்குவார்கள். பருவமாற்றங்கள் நிகழும்போது பறவை களாலோ, விலங்குகளாலோ, மனிதர் களாலோ தொற்றுநோய்கள் பரவும். அதில் பாதிக்கப்பட்டவர்கள் புழங்குகிற நீர்நிலைகளால், மற்றவர்கள் அனைவரும் அத்தொற்றுநோயால் பாதிக்கப் படுவர். நீர் எடுக்கப்பட்ட கடத்தின் வாய்தனை, தென்னம்பூ பானைகளைச் செருகி, அவற்றின் நடுவே ஒரு நீண்ட வேப்பங்குச்சியைச் செருகி அதன் அடிப்பகுதி கடத்தினுடைய நீருள்ள பகுதியைத் தொடுகின்றவாறு செருகுவார்கள். வேப்பங்குச்சியின் மேல்பகுதியில் ஒரு எலுமிச்சம்பழத்தைக் கோர்ப்பார்கள். கடத்தின் வாயிலிருந்து மேல்நோக்கி, தென்னம்பூ பாளையைச் சுற்றிலும் நூலால் தொடுக்கப்பட்ட முல்லைப் பூக்களைக் கட்டுவார்கள்.
முல்லைப்பூ பெண்களின் கர்ப்பப் பையோடு சம்பந்தப்பட்ட மலராகும். தமிழகத்தில் முல்லைவனநாதர் என்ற சிவபெருமானுக்குரிய கோவிலைச் சுற்றி முல்லைவனம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு செல்பவர்கள் அம்முல்லை மலர்களின் வாடையை நுகர்ந்தாலே கரு உண்டாகும். முல்லை மலர்கள் அப்பேர்ப்பட்ட தன்மையுடையவை. அத்தகைய முல்லை மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையை, தென்னம்பாளையைச் சுற்றி மேல்நோக்கிச் செல்லுமாறு சுற்றி அலங்கரிப்பார்கள். இவ்வாறு உருவாக்கப் பட்ட கடங்களுக்கு உள்ளேயிருக்கும் காற்றுள்ள பகுதியில், கடத்தில் எடுத்த, ஏழு நீர்நிலைகளிலிருந்து எடுத்துவரப்பட்ட நீருக்குள், நோய் பரப்பும் நுண்கிருமிகளை உணவாக உண்டு அழிக்கக்கூடிய பெரு நுண்ணுயிரிகள் ஏராளமாக உருவாகி விடும். மூன்று நாட்களில் கடத்தின் உட்பகுதி முழுவதும் இவ் வகை நுண்ணுயிரி கள் பல்கிப்பெருகி நிறைந்துவிடும்.
இந்தக் கரகங் களை மூன்று நாட்களுக்குப் பிறகு தாங்கள் நீர் எடுத்துவந்த நீர் நிலைகளில் கொட்டிவிடுவர். இவ்வாறு கடத் திலுள்ள நீரும் காற்றும் அந்த நீர்நிலைகளில் கலக்கும்போது, கடத்திற்குள் பல்கிப் பெருகி யிருந்த கிருமி களைச் சாப்பிடும் நுண்ணுயிரிகள் நீர்நிலைகள் எங்கும் பரவி, அவற்றில் உருவாகி யிருந்த நோய்க் கிருமிகள் அனைத்தையும் அழித்துவிடும். அந்தப் பகுதிகளில் நோய் பரவுதலையும் தடுத்துவிடும்.
இவ்வளவு பெரிய மருத்துவ அறிவியல், கரகம் எடுக்கும் நிகழ்வால் நிகழ்த்தப்படுகிறது. இதன்மூலம், அந்த நீர்நிலைகளைப் பயன்படுத்தும் ஆடுகள், மாடுகள், மனிதர்கள் நோயிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். இதேபோல், ஔவையாரின் ஒவ்வொரு செயல்பாடும், சமுதாயத்தில் நிகழும் அவலங்கள் போக்கப் பயன்படவேண்டும் என்பதுதான். இதன் அடையாளம்தான் ஔவைக்கு மரியாதை தருவதன் மூலம் விளக்கப்படுகிறது.
கொல்லையில் வழிபடப்படும் ஏழு செங்கற்கள்!
தமிழரின் இந்தக் கரகவழிபாடு, பின்னா ளில் ஆரியச் சடங்குகளில் பின்பற்றப் பட்டது. ஆரியர்கள் நெருப்பை வழிபடும் பழக்கமுடைய வர்கள். தமிழர்கள் நீரினை வழிபடும் பழக்க முடையவர்கள். இன்றைய தமிழர் களின் பெண் தெய்வங்கள், குலதெய்வங்கள் ஆற்றுநீரில் மிதந்து வந்ததாக பெரும் பாலும் கூறப்படு கிறது. இக்கருத்து நீர்வழிபாட்டின் முக்கியத்துவத் தைக் காட்டுகிறது. தமிழர்களின் இந்த நீர் வழிபாட்டு வழக் கத்தை, ஆரியர்கள் பின்னாளில் யாகங் களில் கும்பங்கள் வைத்து வழிபடும் வழக்கங்களாகச் செய்துவரலானார் கள்.
தமிழரின் கரகங் கள் பெண் தெய்வங் களின் குறியீடுகளாகவே கருதப்பட்டு வந்துள்ளன. சுனைகளிலிருந்து நீர் எடுத்து வரும் கரகங்கள் பழையோள் என்றழைக்கப் பட்ட பழமையான பெண் தெய்வத்தைக் குறியிடும் குறியீடாகத் திகழ்ந்தது. பழங்காலங்களில் புஞ்சை நிலங்களில் குடியேறியவர்கள், தங்கள் வீடுகளின் பின்வாசலி-ருந்து தங்கள் பயிர் விளையும் பகுதிக்குச் செல்வதற்கு வசதியாக, தங்கள் வீடுகளை அமைத்திருப்பார்கள். புஞ்சைப் பயிர் விளையும் இடத்திற்குக் கொல்லை என்று பெயர். ஆதலால், தமிழகத்தில் வீடுகளின் பின்வாசலைக் கொல்லைவாசல் என்று அழைக்கும் வழக்கம் வந்தது. அந்தக் கொல்லை, பெண்களின் மறைவிடமாகச் செயல்படும்.
அந்தக் கொல்லைவாசலில் புழங்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக, ஏழு செங்கற்களை வைத்து வணங்கும் பழக்கம் இன்றளவும் மானாவாரி விவசாயக் குடும்பத்தில் நிலவிவருகிறது. அப்படிப்பட்ட காட்டு விவசாயம் பார்க்கும் இடங்களில், ஆங்காங்கே மழைநீர் சேமிப்பதற்கு குட்டைகள் அமைக்கப்பட்டி ருக்கும். அதிலிருந்து எடுத்துவரப்படும் கரகங்கள் எந்தப் பெண் தெய்வத்தைக் குறிக்குமென்றால், காட்டுப்பன்றி முகத்துடன் கையில் கலப்பையையும் மண் கொத்தியையும் வைத்திருக்கும் வேளாண் தெய்வத்தையே குறிக்கும். ஏழு செங்கற்கள் வைத்து வணங்கும் முறை, ஆதித் தமிழர்களின் பெண் தெய்வ வழிபாட்டு முறையிலிருந்து வந்ததுதான்.
ஏழு பெண் தெய்வங்களின் வடிவில் ஔவை!
மலைத்தொடருக்கு அடுத்துள்ள சமதள காட்டுப் பகுதிகளில் பொய்கைகள் இருக்கும். அவை மான்கள், மயில்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதிகளில் இருக்கும் நீரில் எடுத்துவரப்படும் கரகம் மான், மழு ஏந்திய கொடிச்சி வழிபாட்டிலிருந்து வந்த பெண் தெய்வத்தைக் குறிக்கும். துறைமுகங்களற்ற கடற்கரைப் பகுதிகளில், நதி கடலில் கலக்கின்ற இடத்தில், குடிநீருக்காக ஊர் மத்தியில் ஆதித்தமிழர்கள் தெப்பம் கட்டி வைத்திருந்தனர். அதிலிருந்து எடுக்கும் கரகம், தன் கையில் சங்கினையும் சுறாமீன் எலும்பினையும் ஆயுதமாக ஏந்திய மழைக் கான பெண் தெய்வத்தைக் குறிக்கும். தொல் காப்பிய காலத்திற்குமுன்பு ஆண் தெய்வம் இல்லை. அனைத்துவகை நிலங்களிலும் பெண்தெய்வ வழிபாடே இருந்துவந்தது. இதேபோல், வேட்டை சமுதாயத்தின் பெண் தெய்வமாக, கையில் சூலாயுதத்தையும், மண்டை ஓட்டையும் ஏந்திய ஆதிப் பெண் தெய்வத்தை, சுரங்கங் களிலிருந்து எடுத்துவந்த கரகத்தில் வழிபட்டார்கள்.
ஆற்று நீர்ப்பாசன வளமான பகுதிகளில், ஏரிகளில் நிரப்பப்பட்ட நீரிலிருந்து எடுத்துவரப்பட்ட கரகத்தில் இருக்கும் பெண் தெய்வமானது, ஒரு கையில் கரகத்தையும் மறுகையில் தாமரையையும் வைத்திருக்கும், நோயற்ற வளமான வாழ்க்கையைத் தரும் ஆதிப்பெண் தெய்வமாக வழிபடப்பட்டது. மலையில் தினை விளையும் இடத்தை தினைப் புனம் என்று அழைப்பார்கள். அப்பகுதியில் மலை ஊற்றிலிருந்து எடுத்துவரப்பட்ட நீர்க்கரகத்தை வள்ளியம்மையின் நினைவாக வணங்குவார்கள்.
இதுபோன்று அனைத்துப் பெண் தெய்வங்களின் வடிவாக, ஔவை மக்கள் பணியில் செயல்படவேண்டும் என்பதற் காகவே ஔவையைச் சுற்றி ஏழுகரகங்கள் வைத்து, ஔவையை அதன் நடுநாயகியாக வழிபடுவர். அனைத்து குருநாதர்களும் ஏழு கரகங்களால் ஔவைக்கு ஆராதனை செய்து, இந்த எழுவகைப் பெண் தெய்வங்களின்மூலம் ஔவை செயல்படவேண்டும் என வாழ்த்துவர். ஆசீவகத்தின் அடையாளமாக இரண்டு யானைகளை வடக்கு வாசலின் இருமருங்கிலும் நிறுத்தி, நடுவே தாமரைமீதமர்ந்த பெண் தெய்வத்தை கொடியில் ஓவியமாக வரைந்து, எழுவகைக் கும்பங்கள் புடைசூழ, எழுதெய்வத்தின்மூலம், குரு மட குருநாதர்கள் ஔவையை மக்களிடம் ஒப்படைப்பார்கள் வடக்கு வாசல் செல்லியாக ஔவை வெளியே அடியெடுத்து வைக்கும்போது, மஞ்சள் கடம்பினால் செய்யப்பட்ட பாதரட்சைகளை, ஔவையின் பாதங்களில் மஞ்சள் நீராட்டி குரு மடதச்சர் அணிவிப்பார். மக்கள் மத்தியில் இரு யானைகளுக்கு நடுவிலிருந்து மங்கள இசை முழங்க, ஐவகை மாலைகளைக் கழுத்தில் அணிந்தவாறு அதீத கம்பீரத்துடன், பயணியர் புடைசூழ ஔவைப் பிராட்டியார், ஐவகை மாலைகள் அசைந்தாட புற உலகில் அடியெடுத்து வைப்பாள்.
ஔவையோடு பயணத்தைத் தொடர்வோம்.