சிவஞானம் பரவச்செய்த சந்தானக் குரவர்கள்! - மும்பை ராமகிருஷ்ணன்

/idhalgal/om/santhanam-kuravas-who-spread-knowledge-shiva-mumbai-ramakrishnan

ண்ணன் பகவத்கீதையில், "மாஸானாம் மார்கசீர்ஷோ ஹம்'- மாதங்களில் நான் மார்கழி என்றார். அவர் அவதரித்த மாதத் தைக் குறிப்பிடவில்லை. மார்கழியில்தான் வைணவர்களுக்கு முக்கியமான வைகுண்ட ஏகாதசி வருகிறது. பெரியாழ்வார் கண்டெ டுத்த கோதை ஆண்டாள் மார்கழியில் திருப்பாவை பாடி ஸ்ரீரங்கத்தில் ஐக்கியமானாள்.

மார்கழியில்தான் ஆருத்ரா தரிசன் வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப் பாக விழா நடக்கும். ஆனால் கார்த்தி கைப் பௌர்ணமியே சிறப்பாகக் குறிப்பிடப் படுகிறது. ஏன்? சிவன் அடி, முடி காணா ஜோதிப்பிழம்பாக நின்றாரல்லவா? "அருணா சல' நாமமே முக்தியளிக்க வல்லதல்லவா? எனவே கார்த்திகையும் உன்னதமான மாதம் எனலாம்.

பெரும்பாலான சிவாலயங்களில் தேவாரம் பாடிய மூவர், திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர் என நால்வர் திருவுருவங்களைக் காணலாம். மேலும் பல கோவில்களில் 63 நாயன்மார்களின் விக்ரகங்களைக் காணலாம்.

ஆனால் சில ஆலயங்களில்தான் சந்தானக் குரவர்களின் சிலைகள் உள்ளன. சிவஞான தத்துவத்தைப் பரவச் செய்தவர்கள் இவர்கள். இவர்களை அகச் சந்தானக் குரவர், புறச் சந்தானக் குரவர் என இருவிதமாகப் பிரிப்பார்கள்.

வைணவத்தில் ஆதிகுரு என்றால் குதிரை முகம்கொண்ட ஹயக்ரீவர்தான். வேதத்தைக் கவர்ந்த குதிரைமுக அசுரனை அழித்து வேதத்தை மீட்டவர். லலிதா சகஸ்ரநாமம், த்ரிசதி ஆகியவற்றை அகத்தியருக்கு உபதேசித்தவர்.

சைவத்தில் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி. அவர் மௌனகுரு. சிவன் கோவில்களில் கோஷ்ட தெய்வமாகக் காணலாம். அவருக்குக் கீழே பிரம்மாவின் மானச புத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரைக் காணலாம்.

சைவ சித்தாந்தப்படி அகச் சந்தானக் குரவர்களாக திருநந்திதேவர், சனத்குமாரர், சத்யஞானதர்சினி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் அறியப்படுகின்றனர்.

புறச் சந்தானக் குரவர்களாக மெய் கண்டார், அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகிய நால்வர் விளங்குகிறார்கள். மெய்கண்டார் தலைமை குரு. அவரது சீடர் அருள்நந்தி சிவம்; அவரது சீடர் மறைஞான சம்பந்தர்; அவரது சீடர் உமாபதி சிவ

ண்ணன் பகவத்கீதையில், "மாஸானாம் மார்கசீர்ஷோ ஹம்'- மாதங்களில் நான் மார்கழி என்றார். அவர் அவதரித்த மாதத் தைக் குறிப்பிடவில்லை. மார்கழியில்தான் வைணவர்களுக்கு முக்கியமான வைகுண்ட ஏகாதசி வருகிறது. பெரியாழ்வார் கண்டெ டுத்த கோதை ஆண்டாள் மார்கழியில் திருப்பாவை பாடி ஸ்ரீரங்கத்தில் ஐக்கியமானாள்.

மார்கழியில்தான் ஆருத்ரா தரிசன் வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப் பாக விழா நடக்கும். ஆனால் கார்த்தி கைப் பௌர்ணமியே சிறப்பாகக் குறிப்பிடப் படுகிறது. ஏன்? சிவன் அடி, முடி காணா ஜோதிப்பிழம்பாக நின்றாரல்லவா? "அருணா சல' நாமமே முக்தியளிக்க வல்லதல்லவா? எனவே கார்த்திகையும் உன்னதமான மாதம் எனலாம்.

பெரும்பாலான சிவாலயங்களில் தேவாரம் பாடிய மூவர், திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர் என நால்வர் திருவுருவங்களைக் காணலாம். மேலும் பல கோவில்களில் 63 நாயன்மார்களின் விக்ரகங்களைக் காணலாம்.

ஆனால் சில ஆலயங்களில்தான் சந்தானக் குரவர்களின் சிலைகள் உள்ளன. சிவஞான தத்துவத்தைப் பரவச் செய்தவர்கள் இவர்கள். இவர்களை அகச் சந்தானக் குரவர், புறச் சந்தானக் குரவர் என இருவிதமாகப் பிரிப்பார்கள்.

வைணவத்தில் ஆதிகுரு என்றால் குதிரை முகம்கொண்ட ஹயக்ரீவர்தான். வேதத்தைக் கவர்ந்த குதிரைமுக அசுரனை அழித்து வேதத்தை மீட்டவர். லலிதா சகஸ்ரநாமம், த்ரிசதி ஆகியவற்றை அகத்தியருக்கு உபதேசித்தவர்.

சைவத்தில் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி. அவர் மௌனகுரு. சிவன் கோவில்களில் கோஷ்ட தெய்வமாகக் காணலாம். அவருக்குக் கீழே பிரம்மாவின் மானச புத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரைக் காணலாம்.

சைவ சித்தாந்தப்படி அகச் சந்தானக் குரவர்களாக திருநந்திதேவர், சனத்குமாரர், சத்யஞானதர்சினி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் அறியப்படுகின்றனர்.

புறச் சந்தானக் குரவர்களாக மெய் கண்டார், அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகிய நால்வர் விளங்குகிறார்கள். மெய்கண்டார் தலைமை குரு. அவரது சீடர் அருள்நந்தி சிவம்; அவரது சீடர் மறைஞான சம்பந்தர்; அவரது சீடர் உமாபதி சிவம். இவர்களது வரலாறு, சிவஞானம் பரப்பியவிதம் குறித்து சுருக்க மாகக் காணலாம்.

மெய்கண்டார்

இவரது காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண் டென்பர். திருமுனைப்பாடிக்கு அருகில் திருப்பெண்ணாடம் என்னும் தலம் உள்ளது. அங்கு வாழ்ந்த அச்சுத களப்பாளர் என்னும் சிவபக்தருக்கு பலகாலமாக மகப்பேறில்லை. எனவே தனது குலகுருவான சகல ஆகம பண்டிதர் என்னும் அருள்நந்தி சிவாச்சாரியாரை (பின்னாளில் மெய்கண்டாரின் சீடர்) பணிந்து வேண்டினார்.

அதற்கு அவர், "உனக்கு குழந்தை பாக்கிய மில்லை. ஆயினும் தேவாரத் திருமுறைச் சுவடி யில் நூல் சாற்றிப் பார்க்கலாம்'' என்று சொல்லி, திருமுறைச் சுவடிகளுக்கு இடையே நூலைச் செலுத்தி, நூல் சென்ற சுவடியைப் பிரித்துப் பார்த்தார். அதில் ஞானசம்பந்தரின் திருவெண் காடு தேவாரப் பாடல் இருந்தது.

அதைக்கண்ட குரு, "நீ திருவெண்காடு தலம் சென்று, அங்குள்ள சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்களில் நீராடி ஈசனைத் தொழுதால், சிவனருளால் ஆண்மகவை அடைவாய்'' என்றார்.

அவ்வாறே அவர் செய்ய, ஆண்மகவு பாக்கியம் கிட்டியது. அந்தக் குழந்தைக்கு, திருவெண்காடு ஈசனின் "ஸ்வேதவனப் பெருமான்' என்னும் பெயரையே வைத்தார்.

குழந்தை வளர்ந்தது. ஒருசமயம் அது விளையாடிக்கொண்டிருந்தபோது வானில் பரஞ்சோதி முனிவர் விமானத்தில் கயிலை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது விமானம் தடைப்பட்டு நிற்க, அவர் காரணம் உணர்ந்து கீழிறங்கி வந்தார். குழந்தையைக் கொஞ்சி சிவதீட்சையளித்து "சத்யஞான சத்குரு' என பெயரிட்டார். அதுவே தமிழில் மெய்கண் டார் என்றானது.

குழந்தை வளர்ந்து வார்த்ததே "சிவஞான போதம்' என்னும் அரிய நூல். இது 40 அடிகளில் 12 சூத்திரங்களாக அமைந்தது. ஆழ்ந்த பொருள் கொண்டதையே சூத்திரம் என்பர். இதில் புராணக் கதைகளோ மதச்சடங்குகளோ கூறப் படவில்லை. சிவ தத்துவமே உள்ளது. "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்னும் கருத்து கொண்டது. சைவ சித்தாந்தக் கொள்கையான பதிலி பசு- பாசம் என்பதை சுருங்கச் சொல்லி விளக்கும் செய்யுள் வடிவில் அமைந்த நூல்.

sdaf

சிவனுக்கு பசுபதி என்னும் பெயருண்டு.

"அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி, பிரக்ஞானாம் பிரம்ம, அயம் ஆத்மா பிரம்ம' என்னும் அத்வைதத் தத்துவம் கொண்டது.

நாம்- பசு- ஜீவாத்மா;

நாம்- பதி- பரமாத்மா.

ஆயினும் "பாசம்' என்னும் அவகுணங்கள், மாயையில் உழல, நாம் நம்மை உணர்வதில்லை. "நான் யார் என்று உனக்குள் ஆழ்' என்றார் ரமணர். அதுபோல ஆழ்ந்திட இரண்டற்ற நிலையான முக்தியை எய்தலாம் என்பதை விவரிக்கிறது சிவஞான போதம்.

மெய்கண்டாருக்கு 48 சீடர்கள் இருந்தன ராம். இவர் முக்கியடைந்த இடம் திருவெண் ணெய் நல்லூர் என்பர்.

அருள்நந்தி சிவம்

மெய்கண்டாரின் பிறப்புக்கே காரணமாக இருந்தவர் அருள்நந்தி சிவம் என்பதை முன்னர் பார்த்தோம். ஆயின் அவருக்கே இவர் சீடரான விநோதம் குறித்து சிந்திப்போம்.

சிதம்பரம் அருகே ஆதிசைவ குலத்தில் தோன்றியவர் சகல ஆகம பண்டிதர். எனவே ஆணவம் மிகுந்த பண்டிதராக விளங்கினார். திருவெண்ணெய் நல்லூரில் சிறு பாலகனான மெய்கண்டார் உபதேசம் செய்கிறார் என்பதை யறிந்து அங்குவந்தார். மெய்கண்டார் தன்னிடம் வருவார் என எதிர்பார்த்தார். ஆனால் வரவில்லை. எனவே இவர் அவ்விடம் சென்றார்.

அப்போது மெய்கண்டார் ஆணவம் குறித்து உபதேசம் செய்துகொண்டிருந்தார். வந்தவர் "ஆணவத்தின் வடிவம் என்ன?' என்று கேட்க, பாலகன் தனது சுட்டுவிரலால் பண்டிதரை சுட்டிக் காட்டியது. வியந்து நெகிழ்ந்த பண்டிதர் பரஞானம் பெற்றார்.

ஒரு தீட்சையும் இல்லை. பாலகன் பாதம் பணிந்தார். பின்னர் பாலகன் அவருக்கு சிவதீட்சை தந்து, திருநீறு பூசி, "அருள்நந்தி சிவம்' என்று பெயர் சூட்டினார். மெய்கண்டாரின் 48 சீடர்களில் முதன்மையானவர் இவரே. மெய்கண்டாரின் சிவஞானபோதம் போலவே "சிவஞான சிந்தியார்' என்னும் செய்யுள் வடிவ சூத்திரங்களை இயற்றினார். மிக ஆழ்ந்த தத்துவங்களைக் கொண்டது அந்த நூல். "சிவனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை; சித்தியாருக்கு மிஞ்சிய சாத்திரமுமில்லை' என்பது பழமொழி. இதுவன்றி மேலும் சில நூல்களையும் அருள்நந்தி சிவம் இயற்றினார்.

மறைஞான சம்பந்தர்

இவர் அருள்நந்தி சிவத்தின் சீடர். வேறு சூத்திரமோ நூலோ எழுதவில்லை.

அடியார்களுக்கு சிவதீட்சை செய்தார்.

சிவஞானம் பரவச்செய்தார்.

உமாபதி சிவம்

இவரது சரிதம் வினோதமானது. தில்லைக் கோவிலில் பூஜிக்கும் தீட்சிதர்களில் ஒருவர். எனவே வேதாகமங்கள் அனைத்தும் உணர்ந்தவர்.

ஒருசமயம் அவர் சிதம்பரம் வீதியில், தீவர்த்தி கள் முன்னே செல்ல பின்னே சிவிகையில் அமர்ந்து வந்துகொண்டிருந்தார். அச்சமயம் அங்கிருந்த மறைஞான சம்பந்தர், "பட்ட கட்டையில் பகல் குருதி வருது பார்' என்று கூறினார். இதைக்கேட்ட உமாபதி சிவம் சிவிகை யிலிருந்து கீழே இறங்கிவந்து, "நீர் கூறியதன் பொருள் என்ன?'' என்று கேட்டார். "உச்சி வெயில் சமயம் தீவர்த்தி செல்கிறது'' என்றார் அவர்.

உடனே உமாபதி சிவம் அவர் பாதம் பணிந்து, "சிவஞான உபதேசம் அருளவேண்டும்'' என்றார். அவர் எதுவும் கூறாமல் நடந்துசெல்ல, இவரும் அவர் பின்னாலேயே சென்றார். மறைஞான சம்பந்தர் ஒரு வீட்டிற்குச் சென்று, நெசவு நூலுக்குப் பயன்படுத்தும் கூழைக் கையில் வாங்கி உண்டார். அவரது கையிலிருந்து சிந்திய கூழை உமாபதி சிவம் தன் நாவால் அருந்தினார். அதைக்கண்ட சம்பந்தர், சிவம் செருக்கற்றவர் என்றறிந்து, சிவதீட்சை தந்து சிவஞானமும் போதித்தார்.

இதனையறிந்த சிதம்பரம் தீட்சிதர்கள் வெறுப்புற்று, சிதம்பரம் கோவிலில் பூஜைசெய்ய உமாபதி சிவத்தை அனுமதிக்கவில்லை. அவர் தனியே சிவ வழிபாடு செய்தார்.

உமாபதி சிவத்தின் பெருமையை உணர சில சம்பவங்களை சிந்திப்போமா...

முள்ளிச்செடிக்கு முத்தி பெற்றான் சாம்பன் என்பவர் புலையர் குலத்தைச் சார்ந்தவர்; சிவபக்தர். தன் மனைவியுடன் சிவனை ஆராதித்து வந்தார். சிவனுக்கு "ஆசுதோஷி' என்றொரு பெயருண்டு. அதாவது எளிதில் மகிழ்ந்து அருள்புரிபவர். ஒருநாள் சிவபெருமான் சாம்பனின் கனவில் தோன்றி, "இதோ, இந்த சீட்டைப் பெற்றுக் கொள். உமாபதி சிவத்திடம் சென்று இதைக் காட்டினால் உனக்கு முக்தியளிப்பார்' என்று கூறி மறைந்தார். திடுக்கிட்டுக் கண்விழித்த சாம்பன் உண்மையிலேயே தன் கையில் ஒரு சீட்டிருப்பதைக் கண்டு வியந்து நெகிழ்ந்தார்.

காலை விடிந்ததும் உமாபதியாரை சந்தித்து, ஈசன் கனவில் கூறியதைத் தெரிவித்து சீட்டையும் காட்டினார். அதைக் கண்டவர் சாம்பனுக்கு சிவதீட்சை தர, சாம்பன் முக்தி யடைந்தார். இதுகண்டு சாம்பவனின் மனைவி அரசரிடம் சென்று, உமாபதி சிவம் தன் கணவரைக் கொன்றுவிட்டதாக புகார் செய்தாள். அரசர் உமாபதி சிவத்தை அழைத்து விசாரிக்க, அவர் நடந்த நிகழ்வைக் கூறினார். "இதை நான் எவ்வாறு நம்புவது?'' என அரசர் கேட்க, "இங்கிருக்கும் எவருக்கும் முக்தியடையத் தகுதியில்லை. எனினும் உங்களை நான் நம்பவைக்கிறேன்'' என்றார்.

சிவனுக்குச் செய்யப்பட்ட அபிஷேக நீரில் வளர்ந்த முள்ளிச் செடியின் கிளையைக் கொணர்ந்து அதற்கு சிவதீட்சையளித்தார் சிவம். உடனே செடி ஒளிவடிவம் பெற்று மேல்நோக்கிச் சென்று மறைந்ததாம். இதைக்கண்டு வியந்து நெகிழ்ந்த அரசர் உமாபதி சிவத்தின் பாதம் பணிந்தார்.

கொடிக்கவி

சிதம்பரம் நடராஜருக்கு பிரம்மோற்சவம் தொடங்கியது. தீட்சிதர்கள் எவரும் உமாபதி சிவத்தை அழைக்கவில்லை. கொடியேற்ற முயன்றபோது அது உயரவில்லை. அப்போது அசரீரி வாக்கு, "உமாபதி சிவம் வந்தாலன்றி கொடி ஏறாது' என்று கூறியது. எனவே சில தீட்சிதர்கள் உமாபதியை அணுகி விவரத்தைக் கூறினர். அப்போது அவர் "கொடிக்கவி' என்று சிவ சித்தாந்தம் பாட, கொடி மேலேறியதாம். அவரது "சிவப்பிரகாசம்' என்னும் நூலும் சிவ சித்தாந்தம் போதிக்கும்.

ஸ்படிகலிங்கம் மறைவு

உமாபதி சிவம் செய்துவந்த, சிதம்பரம் ஸ்படிகலிங்க பூஜை நாள் வந்தது. உமாபதி சிவத்தை நீக்கிவிட்டதால், மற்றொரு தீட்சிதரை அபிஷேக ஆராதனைகள் செய்ய நியமித்தனர்.

அவர் ஆராதனை செய்வதற்காக ஸ்படிகலிங் கம் வைக்கப்பட்டிருந்த சம்புடத்தைத் திறந்தார். அதில் ஸ்படிகலிங்கம் இல்லை. அனைவரும் அஞ்சினர். அப்போது அசரீரி, "உமாபதி சிவம் வந்தாலன்றி ஸ்படிகலிங்கம் உங்களுக்குக் கிட்டாது' என்றுரைத்தது. உடனே சில தீட்சிதர்கள் உமாபதி சிவத்திடம் சென்று பணிந்து அழைத்தனர். அவரும் முறைப் படி வந்து சம்புடத்தைத் திறக்க, அதில் ஸ்படிகலிங்கம் இருந்தது. மகிழ்வுடன் அவர் ஆராதனைகள் செய்தார்.

சிவ மகிமையைப் பரப்பிய சந்தானக் குரவர்களின் பெருமையுணர்ந்து அவர்களைப் போற்றுவோம்.

om011224
இதையும் படியுங்கள்
Subscribe