விநாயகர் சதுர்த்தி 18-9-2023
கடவுள்களில் முதல்வனும் முழுமுதற்- கடவுளும் சங்கரன் புதல்வனுமாகிய விநாயகப் பெருமானுக்கு உகந்த தினம் சதுர்த்தி தினம் என்பது எல்லாரும் அறிந்ததே... சரி "சங்கடஹர சதர்த்தி' என்பது என்ன?
அது எவ்வாறு தோன்றியது என்பதை பார்ப்போம்!
பரத்வாஜ முனிவருக்கு மகனாகப் பிறந்து பூமாதேவியிடம் வளர்ந்தவன் அங்காரகன் எனும் செவ்வாய். பூமாதேவியிடம் இருந்த அங்காரகன் தன் தந்தை பரத்வாஜ முனிவரைப
விநாயகர் சதுர்த்தி 18-9-2023
கடவுள்களில் முதல்வனும் முழுமுதற்- கடவுளும் சங்கரன் புதல்வனுமாகிய விநாயகப் பெருமானுக்கு உகந்த தினம் சதுர்த்தி தினம் என்பது எல்லாரும் அறிந்ததே... சரி "சங்கடஹர சதர்த்தி' என்பது என்ன?
அது எவ்வாறு தோன்றியது என்பதை பார்ப்போம்!
பரத்வாஜ முனிவருக்கு மகனாகப் பிறந்து பூமாதேவியிடம் வளர்ந்தவன் அங்காரகன் எனும் செவ்வாய். பூமாதேவியிடம் இருந்த அங்காரகன் தன் தந்தை பரத்வாஜ முனிவரைப் பார்க்க ஆசைப்பட்டான். தாயின் அனுமதிபெற்று பரத்வாஜ முனிவரைப் பார்க்கச் சென்றான்.
நெடுநாளைக்குப்பிறகு மகனைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்துபோனார் பரத்வாஜமுனிவர், அவரிடம் அங்காரகன் "தந்தையே உயர்ந்த சிறந்த முனிவரான தங்களுக்கு மகனாகப் பிறந்த நான் தங்களைப்போன்று உயர்வான நிலையை பெறவிரும்புகிறேன். அதற்கு என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டான்.
"என் அருமைப் புதல்வனே. உன் எண்ணம் நிறைவேற முழு முதற் கடவுளான கணபதியை வணங்குவதே அதற்கேற்றவழி'' என்று கூறியதுடன் மூல முழுப் பொருளின் மந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார். தந்தை சொன்னபடி அங்காரகனும் விநாயகரை பூஜித்து தவமிருந்தான்.
அங்காரகனின் தவத்தை மெச்சிய ஆனைமுகன் அவன்முன் தோன்றி "அங்காரகா உனது தவம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். நீ (நவ) கிரகங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து பெரும் புகழ்பெறுவாய் என்று அருளினார்.
அவரிடம் அங்காரகன். "முழுமுதற்கடவுளே... நீ எனக்கு காட்சிதந்தருளிய இன்றைய தினம் சதூர்த்தி தினம். இந்நாளை "அங்காரக சதுர்த்தி' என்று என் பெயரால் அழைக்கவேண்டும். இந்த அங்கார சதுர்த்தி தினத்தில் விநாயகரை வணங்கிடும் பத்தர்களின் சங்கடங்கள் தீரவேண்டும் என்று வேண்டினான். அவன் வேண்டியபடி வரம்தந்து அருளினார் விநாயகர்.
பூமாதேவி புதல்வனான அங்காரகன் எனும் செவ்வாய் வரம் வாங்கியபடி செவ்வாய்க்கிழமை களில் வரும் சதர்த்தி தினம் மிகச் சிறப்பானது என்று புராணங்கள் கூறுகின்றன.
"அங்காரக சதுர்த்தி சங்கடங்கள் போக்குகின்ற சதுர்த்தியாக இருக்க வேண்டும் என்று செவ்வாய் வரம் கேட்டபடியால் "சங்கடஹர சதுர்த்தி' என்று அன்றுமுதல் போற்றப்பட்டு வருகிறது.
"மகா சங்கடஹர சதுர்த்தி' நாளானலி "விநாயக சதுர்த்தி' நாளில் வேழமுகத்து விநாயகப் பெருமானை ஆழ்ந்த பக்தியோடு பூஜித்து வணங்கி வாழ்வில் வளமும், நலமும் பெறுவோமாக!
"தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீ மஹி
தந்நோ தந்தி பிரசோதயாத்.''