சில நேரங்களில் கழுத்தை நெரிக்கும் துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி யென்று புரியாமல் நாம் தவித்திருக்கிறோம். அவை நீங்க சில பரிகாரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையுடன் செய்யுங்கள்; நலம் பெறுங்கள்.
வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல்விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய்தீபமேற்றி வழிபட, கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
இரண்டு சர்ப்பங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 மணிவரையிலான ராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிஷேகம் செய்து நெய்தீபமேற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்யோன்யமாக வாழ்வார்கள்.
குடும்பத்தில் தாங்கமுடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகிலுள்ள ஆலயங்களில் தீபமேற்றி வழிபடுவது ரிஷிகள் சொன்ன பரிகாரம்.
கொடிய கடன் தொல்லைகளுக்கு யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரமாகும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமணத் தடை விலகி நன்மை பெறலாம்.
ஆலய திரிசூலத்தில் குங்குமமிட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்திருந் தால், பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபமேற்றி 12 முறை சுற்றிவந்து 48 நாட்கள் வழிபட தொழில், வழக்கு சாதகமாகும். பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபமேற்றி வழிபட கொடுத்த கடன் வசூலாகும்.
கொடுத்த கடன் வசூலாக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபமேற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்யவேண்டும்.
ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட்கிழமைகளில் சிவ பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்யவேண்டும். சனிக்கிழமை களில் சனிபகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண் ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபமேற்றவும்.
சிவன் கோவிலில் காலபைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம்வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதைக் கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகமுண்டு.
பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய் மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1,000 அஸ்வமேத யாகங்கள் செய்த பலனைப் பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்குக் காட்டப்படும் தீபாராதனையைப் பார்த்தால் எல்லா நோய்களும் வறுமையும் நீங்கும்.
மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று, சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பாலாபிஷேகம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு- அதுவும் ராகு காலத்தில் செய்வது சிறந்தது. ராகு காலத்தில் கடைசி அரைமணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கேற்றவும் உகந்த நேரம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 மணிவரையிலான ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரைத்தண்டு திரிபோட்டு நெய்விளக்கேற்றி வழிபட தெய்வக்குற்றம், குடும்ப சாபம் நீங்கும்.
ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிவப்புப் பட்டுத்துணி சாற்றி, சிவப்புத் தாமரையை பாதத்தில் வைத்து, 27 எண்ணிக்கைகொண்ட எலுமிச்சை மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துவர விரைவில் திருமணம் நடைபெறும்.
சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அறுகம்புல் மாலைசாற்றி அர்ச்சனை செய்துவழிபட சங்கடங்கள் தீரும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரிபோட்டு விளக்கேற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக்காப்பு செய்துவழிபட கடன் பிரச்சினை தீரும்.
செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய்தோறும் நெய் விளக்கேற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
விபத்துகளிலிருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை செருகி அர்ச்சனை செய்யவும்.
ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் உள்ள இடத்திலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு செய்வினை அணுகாது.
பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒருமுறை வீடுகளில் தெளிக்க தோஷம், தீட்டு நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
புத்திர பாக்கியம் இல்லாதோர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
வியாழக்கிழமைகளில் ஒருநேரம் விரதமிருந்து, மாலையில் ஆலய தட்சிணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கேற்றிவர, விரதமேற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்புண்டு.
பெருமாள் கோவிலிலுள்ள கருடாழ்வார் சந்நிதியைச் சுற்றிவந்து நெய்விளக்கேற்றி வழி பட சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்கும்.
வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில் களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங் களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.
தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்குதல், வாழ்வில் நலம்பெறுதல், வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றிபெறுதல் போன்ற நல்ல காரியங்கள் நடைபெற பௌர்ணமிதோறும் நடைபெறும் சத்திய நாராயண பூஜையில் கலந்துகொள்வது நற்பலன்களைத் தரும்.
எத்தகைய கிரக தோஷமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிகமிக நன்மை தரும்.
வாழைத்தண்டுத் திரியினால் வீட்டில் தீபமேற்றினால் குலதெய்வக் குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.
உயிரையும் உடலையும் பாதுகாக்கும் உடனடி நிவர்த்திப் பரிகாரங்கள்: மகா மிருத் யுஞ்ஜய ஹோமம் திருக்கடையூரில் செய்வது, ஸ்ரீவாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது, லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மரை வழிபடுவது, ஆஞ்சனேயரை வழிபடுவதாகும்.
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, அதற்குரிய மந்திரங்களைச் சொல்லிவந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரத்தன்று அகத்தியரிடம் ஆசிபெற்று, அகத்திக்கீரையை எருமை மாடுகளுக்குக் கொடுக்க மரணபயம் நீங்கும்.
இராமேஸ்வரம் ஆலயத்திலிருக்கும் 22 தீர்த்தங்களில் தீர்த்தமாட இயலாதவர்கள், கடல்நீரின் ஒரு பகுதியாக இருக்கும் அக்னி தீர்த்தம், ஸ்ரீ ராமர் உருவாக்கிய கோடி தீர்த்தத் தில் நீராடினாலே பாவங்கள், தோஷங்கள், பித்ரு தோஷங்கள் நீங்கும்.
அமர்ந்த திருக்கோலத்தில் காட்சிதரும் பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக் கிரீவர் ஆகியோரை தரிசித்து, கேசரி, பாயசம் நைவேத்தியம் செய்ய தொழில், வியாபார விருத்தி, நிரந்தர வேலை, மற்றும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, எறும்புப் புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும்போது, அவற்றின் வயிறு வாழ்த்துவதால் நாம் புண்ணியம் பெறலாம்.