ழகு முருகன் கந்தப்பெருமான் அருளாட்சி புரியும் பல பிரசித்திபெற்ற கோவில்களுக்குச் சென்று வழிபட்டுவருகின்றோம். முருக பக்தர்கள் அடிக்கடி செல்லாத பல அபூர்வ ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பற்றிய குறிப்புகள்...

m

வள்ளிமலை

காட்பாடி- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவலம் உள்ளது. இங்கிருந்து 12 மைல் தொலைவில் உள்ளது வள்ளிமலை. முருகப்பெருமாள் வேடனாக உருமாறி வள்ளியைக் கடிமணம் செய்துகொண்டதாக வரலாறு. மலைக்கோவில் குகையில் அமர்ந்து முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையோடு காட்சிதருகிறார். ஆண்டுதோறும் இங்கு "வேடர்பறித் திருவிழா' சிறப்புடன் நடைபெற்று வருகிறது. திருப்புகழ் சச்சிதானந்த அடிகள் இங்கு வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

Advertisment

இளையனார் வேலூர்

காஞ்சிபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் செய்யாற்றின் வடகரையிலுள்ளது இத்திருத்தலம். கருவறையில் முருகனின் வேலினை நிலைநாட்டி வணங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் இளமைக் கோலத்துடன் அழகாகக் காட்சிதருவது சிறப்பு! கருவறைக்குப் பின்னால் சிவலிங்கம் அமைந்திருப்பது வெகு சிறப்பு.

மயிலம்

Advertisment

திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் பத்து மைல் தொலைவிலுள்ளது மயிலம் எனும் திருத்தலம். இங்குள்ள சிறிய குன்றின்மீது குமரப்பெருமான் அமர்ந்து ஆட்சிபுரிகிறார். இங்கு கல்யாணக் கோலத்தில் முருகன் காட்சிதருவதால், இத்தல முருகனை வணங்கிட திருமணத்தடை நீங்கும். கள்ளிப் பாலை மட்டும் அருந்தி வாழ்ந்ததாக சொல்லப் படும் பாலயோகி அடிகளாரின் சமாதி இங்குள்ளது. இந்த மலை மயில் வடிவில் அமைந்திருப்பதால் மயிலம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப் படுகிறது.

mm

திருவிடைக்கழி

சூரனை சம்ஹாரம் செய்ததால் உண்டான பாபம் நீங்க முருகப் பெருமான் பாவநாச லிங்கத்தை உருவாக்கி வணங்கிய தலமிது என்பது வரலாறு. அருணாகிரிநாதர் தான் பாடிய வேல் விருத்தத்தில் இத்திருத்தலத்தை "முருகப்பெருமானின் ஏழாவது படை வீடு' என்று குறிப்பிட்டிருக்கிறார் என்பது சிறப்பு!

சிக்கல்

இங்குள்ள முருகப்பெருமானை "சிக்கல் சிங்கார வேலர்' என்று போற்றுவர். இங்கு குடிகொண்டு விளங்கும் சிவபெருமானின் திருப் பெயர் வெண்ணையிலிங்கீஸ்வர். இறைவிலி வேல் நெடுங்கண்ணியம்மை என்ற திருப்பெயருடன் விளங்குகி றாள். இச்சிவாலயத்திலுள்ள முருகப்பெருமான் சந்நிதியை பன்னிரண்டு படிகள் ஏறிச்சென்று வழிபடவேண்டும். முருகன் சூரனைவெல்ல தன் அன்னையிடம் சக்திவேல் பெற்ற பெருமைக்குரிய திருத்தலம் சிக்கல். கந்தசஷ்டி முதல்நாளன்று இங்கு வேல் வாங்கும் விழா சிறப்பாக நடைபெறும்.

எண்கண்

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது இத்திருத்தலம். பேருந்துமூலமாக செல்லலாம். தஞ்சையை ஆண்ட ஒரு மன்னனின் ஆணையால் கண்ணிழந்த சிற்பி ஒருவன், தன் மனதையே கண்ணாக பாவித்து. இம்முருகனின் சிலையை வடித்தான். இதனால் இத்தலத்துக்கு "எண்கண்' எனும் பெயர் வந்ததாக வரலாறு.

எட்டுக்குடி

"எட்டுக்குடி வேலவனே... அவ்வைக்கு சுட்ட பழம் தந்தவனே...' பெங்களூர் ரமணியம்மாள் பாடிய பாடல் வரிகள் இவை. நாகை மாவட் டத்தில் பிரசித்தபெற்ற முருகன் திருத்தலமாக எட்டுக்குடி திகழ்கிறது. அக்காலத்தில் விசுவகுல சிற்பி ஒருவன் விசேஷமான கல்லைத் தேடிக்கொணர்ந்து முருகப் பெருமான் சிலையை வடிவமைத்தானாம். ஆறுமுகங்களும். பன்னிரு கரங்களும் கொண்டு மயில்மேல் அமர்ந்து முருகன் காட்சி தரும் வண்ணம் சிலை வடித்தான். "காஞ்சிரங் குடி' என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.

வயலூர்

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இத்தலத்து முருகப் பெருமானை சிலர்சித்து வணங்கினார். கந்தப் பெருமான் தன் வேலைக் கொண்டு உருவாக்கிய சக்தி தீர்த்தம் இங்குள்ளது. வயல்களுக்கும் சோலைகளுக் கும் நடுவில் இத்திருத்தலம் அமைந்ததால் வயலூர் என்று பெயர் விளங்கலாயிற்று.

bb

சென்னிமலை

ஈரோட்டிலிருந்து திருப்பூர் செல்லும் பாதையில் ஈங்கூர் எனுமிடத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. மலைகள் பல சூழ்ந்த இப்பகுதியில் மற்ற மலைகளைக் காட்டிலும் சற்று பெரிய மலையாக இருந்ததால் சென்னிமலை என்ற பெயர் ஏற்பட்டதாம். இந்த மலையிலுள்ள முருகன் பழனி ஆண்டவர். கோலத்தில் காட்சி தருகிறார். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல்கேட்டு மனமுவந்த இத்தலத்து முருகன், அவருக்கு படிக்காசு தந்தருளியதாக வரலாறு.

பண்பொழில் திருமலை

நெல்லை மாவட்டம், தென்காசியிலிருந்து சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்திருத்தலம். இங்குள்ள மலையின் மீது சிவகாமி பரதேசியார் எனும் பெண் பக்தை ஒருவர் கலைநயத்தோடு முருகனுக்கு ஆலயம் எழுப்பினார் என்பது தல வரலாறு. மயிலோடு சேவற்கொடி தாங்கி முருகப் பெருமான் தனித்து நின்று அருள்தருகிறார். திருமலைக் குமாரசாமி என்று திருப் பெயரிட்டு முருகனை வணங்குகிறார்கள்.

திருமுருகன் பூண்டி

திருப்பூரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அவினாசிக்கு அருகில் அமைந்துள்ளது இத்திருத்தலம். இங்கு ஐந்து வேல்களைப் பூஜித்து வணங்குவதால் "பஞ்சவேல் முருகன் தலம்' என்றும் அழைக் கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் தீராத நோய்களைத் தீர்க்கும் என்று நம்பப்படுகிறது.

குமரன் மலை

புதுக்கோட்டையிலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். குருபாததாசர் எனும் முனிவர் இத்தல முருகன்மீது தீராத பக்திகொண்டு "குமரேச சதகம்' என்ற பாமாலையைப் பாடி வணங்கியதாக சொல்லப்படுகிறது. தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோவில்கள் ஏராளம். அவற்றையெல்லாம் தரிசிக்க நமது ஆயுள் போதாது. வாய்ப்பு கிடைத்தால் பல அபூர்வ கோவில்களை தரிசித்து கந்தப் பெருமானின் திருவருளைப் பெறலாம்.