"குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.'
-திருவள்ளுவர்
குற்றமற்றவனாகவும், தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச்செய்து வாழ்பவனே உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்துகொள்வர்.
பஞ்சபாண்டவர்களும் திரௌபதியும் வனவாசம் முடித்து, மறைந்து வாழ வேண்டிய ஒரு ஆண்டுகாலம், விராடநகரில் வசித்தனர்.
அப்பொழுது அவர்கள் வடிவங்களையும், பெயர்களையும் மாற்றிக்கொண்டிருந்தனர்.
ஒருநாள் பகைவர் சிலர் விராடநகரி-ருந்த பசுக்கூட்டங்களைக் கவர்ந்து போயினர்.
அதை மீட்க படைகளுடன் போனார் மன்னர்.
அச்சமயம் பாண்டவர்கள் விராடநகரில் இருப்பதாக சந்தேகப்பட்ட துரியோதனன், மற்றொரு பக்கமாக விராடநகரில் நுழைந்து அங்கிருந்த பசுக்கூட்டங்களைக் கவர்ந்தான்.
காவலர்கள் ஓடிப்போய் இளவரசனான உத்தரனிடம் தகவலைச் சொல்லி, "பசுக்கூட்டங்களைக் காப்பாற்றுங்கள்...' என்று வேண்டினர்.
அதைக்கேட்ட இளவரசன் "திறமைசாலியான தேரோட்டி ஒருவன் இருந்தால் போதும், அர்ஜுனனைப்போல பகைவரை வென்று, பசுக்கூட்டங்களை மீட்டு வருவேன்' என்றான்.
பிருகன்னளை என்ற பெயரில் திருநங்கை வடிவில் இருந்த அர்ஜுனனை பற்றிய உண்மை தெரியாமல் அரைகுறை மனசுடன் பசுக்கூட்டங்களை மீட்கப் புறப்பட்டான் இளவரசன்.
போர்க்களத்திற்குப் போனதும் அங்கிருந்த துரியோதனன், பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் முதலான மாவீரர்களைப் பார்த்ததும், பயந்து நடுங்கிப்போய் தேரி-ருந்து குதித்து அரண்மனை நோக்கி ஓடத் துவங்கினான். அதைப் பார்த்ததும் திருநங்கை வடிவில் இருந்த அர்ஜுனனும் தேரை நிறுத்தி, குதித்து ஓடிப்போய் இளவரனைப் பிடித்தான்.
"இளவரசரே.... பயப்படதே, நீ தேரை ஓட்டு. நான் பகைவருடன் போரிட்டு பசுக்கூட்டங்களை மீட்டுவருவேன்' என்றான்.
"எதிரில் இருப்பவர்கள் எல்லாம் பெரும் வீரர்கள். அவர்களைப் போய் நீ வெல்வதாவது? என்னை விட்டுவிடு. நான் அரண்மனைக்கு ஓடிவிடுகிறேன். உனக்கு வேண்டிய செல்வம் தருகிறேன்' என்று கெஞ்சினான் இளவரசன்.
பயந்து நடுங்கிக்கொண்டிருந்த இளவரசனிடம் தான் அர்ஜுனன் என்பதை நிரூபித்து உண்மை வடிவை வெளிப்படுத்தினான். உண்மையை அறிந்ததும், இளவரசனைப் பிடித்திருந்த பயம் விலகியது. துரியோதனன் முதலானவர்களை வென்று பசுக்கூட்டங்களை மீட்டுத் திரும்பினர்.
அர்ஜுனனின் உண்மை வடிவை, இளவரசன் உணரவில்லை. போர்க்களத்தில் எதிரில் இருப்பவர் களைப் பார்த்து பயந்து ஓடினான். அதேசமயம் தன்னுடன் இருப்பது அர்ஜுனன் என்ற உண்மையை உணர்ந்ததும், அவனைப் பிடித்த பயம் தானாகவே விலகிப் போனது. அதுபோல தெய்வம் நம்முடன் பலவிதமான வடிவங்களில் இருக்கிறது. தகுந்த நேரத்தில் தைரியம் ஊட்டி, தன்னை வெளிப்படுத்தி நம்மைக் காக்கிறது.
மலர்வளம் காட்டில் வைத்தியர் முயல், பேத்திகள் கிள்ளி, விள்ளியுடன் வசித்துவந்தது. காட்டில் விலங்குகளுக்கு காயம்பட்டால் வைத்தியம் பார்க்க ஓடோடி வரும். ஒருநாள் குரங்கு மந்திமை, குட்டியை தூக்கியபடி ஓட்டமும், நடையுமாக வந்து, "வைத்தியரே... மரத்தில் தாவி விளையாடியபோது தவறி விழுந்துட்டான்; விரைந்து என்னவென்று பாருங்கள்...' என அழுதது.
மூலிகைச் செடிகளை ஆராய்ந்தபடி இருந்த முயல், குட்டி குரங்கைப் பார்த்தது. அருகில் நின்ற முயலின் பேத்தியர் கிள்ளியும், விள்ளியும் வருத்தத்துடன், அந்த குட்டிக் குரங்கைப் பார்த்துக்கொண்டிருந்தன. "ஹும்... காயம் ஆழமாக இருக்கு; குணப்படுத்த முடியும்; ஆனால் வைத்தியத்துக்குத் தேவையான மூ-கைச் செடியின் இலை தற்போது தீர்ந்துவிட்டது...' என்றது தாத்தா முயல். "அவை எங்கு முளைத்திருக்கும் என்று கூறுங்கள்; பறித்து வருகிறேன்...' என்றது மந்திமை.
"காட்டின் மேற்குப் பகுதியில் பரவிக்கிடந்தன; மனிதர்கள் மரங்களை வெட்டும்போது அழிந்துவிட்டன... இப்போது தெற்குப் பகுதியில் மட்டும் இருக்கின்றன;
ஆனால் அந்த இடம் சிங்கராஜாவின் குகை அருகில் அல்லவா இருக்கிறது...' "அரும்பாடுபட்டாவது மூ-கையைப் பறித்துவருகிறேன்...' புறப்படத் தயாரானது மந்திமை. அதைத் தடுத்து நிறுத்திய பேத்தியர் மூ-கையை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம்; நாங்களே சிரமப்பட்டு எடுத்து வருகிறோம்; சிங்கராஜாவின் கண்ணில்படாமல் இருக்க சிறிய உருவம்தான் சரியாக இருக்கும்; நாங்கள் செல்கிறோம்...' எனக்கூறின.
மந்திமையிடம், "பேத்த
"குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.'
-திருவள்ளுவர்
குற்றமற்றவனாகவும், தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச்செய்து வாழ்பவனே உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்துகொள்வர்.
பஞ்சபாண்டவர்களும் திரௌபதியும் வனவாசம் முடித்து, மறைந்து வாழ வேண்டிய ஒரு ஆண்டுகாலம், விராடநகரில் வசித்தனர்.
அப்பொழுது அவர்கள் வடிவங்களையும், பெயர்களையும் மாற்றிக்கொண்டிருந்தனர்.
ஒருநாள் பகைவர் சிலர் விராடநகரி-ருந்த பசுக்கூட்டங்களைக் கவர்ந்து போயினர்.
அதை மீட்க படைகளுடன் போனார் மன்னர்.
அச்சமயம் பாண்டவர்கள் விராடநகரில் இருப்பதாக சந்தேகப்பட்ட துரியோதனன், மற்றொரு பக்கமாக விராடநகரில் நுழைந்து அங்கிருந்த பசுக்கூட்டங்களைக் கவர்ந்தான்.
காவலர்கள் ஓடிப்போய் இளவரசனான உத்தரனிடம் தகவலைச் சொல்லி, "பசுக்கூட்டங்களைக் காப்பாற்றுங்கள்...' என்று வேண்டினர்.
அதைக்கேட்ட இளவரசன் "திறமைசாலியான தேரோட்டி ஒருவன் இருந்தால் போதும், அர்ஜுனனைப்போல பகைவரை வென்று, பசுக்கூட்டங்களை மீட்டு வருவேன்' என்றான்.
பிருகன்னளை என்ற பெயரில் திருநங்கை வடிவில் இருந்த அர்ஜுனனை பற்றிய உண்மை தெரியாமல் அரைகுறை மனசுடன் பசுக்கூட்டங்களை மீட்கப் புறப்பட்டான் இளவரசன்.
போர்க்களத்திற்குப் போனதும் அங்கிருந்த துரியோதனன், பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் முதலான மாவீரர்களைப் பார்த்ததும், பயந்து நடுங்கிப்போய் தேரி-ருந்து குதித்து அரண்மனை நோக்கி ஓடத் துவங்கினான். அதைப் பார்த்ததும் திருநங்கை வடிவில் இருந்த அர்ஜுனனும் தேரை நிறுத்தி, குதித்து ஓடிப்போய் இளவரனைப் பிடித்தான்.
"இளவரசரே.... பயப்படதே, நீ தேரை ஓட்டு. நான் பகைவருடன் போரிட்டு பசுக்கூட்டங்களை மீட்டுவருவேன்' என்றான்.
"எதிரில் இருப்பவர்கள் எல்லாம் பெரும் வீரர்கள். அவர்களைப் போய் நீ வெல்வதாவது? என்னை விட்டுவிடு. நான் அரண்மனைக்கு ஓடிவிடுகிறேன். உனக்கு வேண்டிய செல்வம் தருகிறேன்' என்று கெஞ்சினான் இளவரசன்.
பயந்து நடுங்கிக்கொண்டிருந்த இளவரசனிடம் தான் அர்ஜுனன் என்பதை நிரூபித்து உண்மை வடிவை வெளிப்படுத்தினான். உண்மையை அறிந்ததும், இளவரசனைப் பிடித்திருந்த பயம் விலகியது. துரியோதனன் முதலானவர்களை வென்று பசுக்கூட்டங்களை மீட்டுத் திரும்பினர்.
அர்ஜுனனின் உண்மை வடிவை, இளவரசன் உணரவில்லை. போர்க்களத்தில் எதிரில் இருப்பவர் களைப் பார்த்து பயந்து ஓடினான். அதேசமயம் தன்னுடன் இருப்பது அர்ஜுனன் என்ற உண்மையை உணர்ந்ததும், அவனைப் பிடித்த பயம் தானாகவே விலகிப் போனது. அதுபோல தெய்வம் நம்முடன் பலவிதமான வடிவங்களில் இருக்கிறது. தகுந்த நேரத்தில் தைரியம் ஊட்டி, தன்னை வெளிப்படுத்தி நம்மைக் காக்கிறது.
மலர்வளம் காட்டில் வைத்தியர் முயல், பேத்திகள் கிள்ளி, விள்ளியுடன் வசித்துவந்தது. காட்டில் விலங்குகளுக்கு காயம்பட்டால் வைத்தியம் பார்க்க ஓடோடி வரும். ஒருநாள் குரங்கு மந்திமை, குட்டியை தூக்கியபடி ஓட்டமும், நடையுமாக வந்து, "வைத்தியரே... மரத்தில் தாவி விளையாடியபோது தவறி விழுந்துட்டான்; விரைந்து என்னவென்று பாருங்கள்...' என அழுதது.
மூலிகைச் செடிகளை ஆராய்ந்தபடி இருந்த முயல், குட்டி குரங்கைப் பார்த்தது. அருகில் நின்ற முயலின் பேத்தியர் கிள்ளியும், விள்ளியும் வருத்தத்துடன், அந்த குட்டிக் குரங்கைப் பார்த்துக்கொண்டிருந்தன. "ஹும்... காயம் ஆழமாக இருக்கு; குணப்படுத்த முடியும்; ஆனால் வைத்தியத்துக்குத் தேவையான மூ-கைச் செடியின் இலை தற்போது தீர்ந்துவிட்டது...' என்றது தாத்தா முயல். "அவை எங்கு முளைத்திருக்கும் என்று கூறுங்கள்; பறித்து வருகிறேன்...' என்றது மந்திமை.
"காட்டின் மேற்குப் பகுதியில் பரவிக்கிடந்தன; மனிதர்கள் மரங்களை வெட்டும்போது அழிந்துவிட்டன... இப்போது தெற்குப் பகுதியில் மட்டும் இருக்கின்றன;
ஆனால் அந்த இடம் சிங்கராஜாவின் குகை அருகில் அல்லவா இருக்கிறது...' "அரும்பாடுபட்டாவது மூ-கையைப் பறித்துவருகிறேன்...' புறப்படத் தயாரானது மந்திமை. அதைத் தடுத்து நிறுத்திய பேத்தியர் மூ-கையை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம்; நாங்களே சிரமப்பட்டு எடுத்து வருகிறோம்; சிங்கராஜாவின் கண்ணில்படாமல் இருக்க சிறிய உருவம்தான் சரியாக இருக்கும்; நாங்கள் செல்கிறோம்...' எனக்கூறின.
மந்திமையிடம், "பேத்தியர் சென்று வருவதுதான் நல்லது என்றது முயல். தாத்தாவின் அனுமதி கிடைத்தும் சிங்கராஜா வின் இருப்பிடத்தை நோக்கி ஓடின. குகை வாச-ல் நின்று சத்தத்தை கவனித்த விள்ளி, "சிங்கராஜா உறங்குகிறது; சீக்கிரமாக மூ-கை இலைகளைப் பறித்து சென்றுவிடலாம்..' என்றதும். விரைந்து செயல்பட்டு முள் செடிகளை ஒதுக்கி பாதை அமைத்தன.
அப்போது, "யார் நீங்கள்... இங்க என்ன செய்துகொண்டு இருக்கிறீர்...' என்றது சிங்கராஜா. இரண்டும் அதிர்ந்து நின்றன. "பு-, சிறுத்தை கால் எடுத்து வைக்க அஞ்சும் என் எல்லைக்குள், சிறு முயல்கள் நுழைவதா...' கர்ஜித்தது சிங்கராஜா. அப்போது, "காட்டில் வசிக்கும் வைத்தியரின் பேத்தியர் நாங்கள்; காடு முழுவதும் பரவிவரும் நோயில் இருந்து, உங்களை காப்பாற்ற இங்கு வந்தோம்...' என தைரியமாக பேசியது விள்ளி.
"என்ன உளறுகிறாய்...' என்றது சிங்கராஜா. உண்மைதான் இங்கே இருக்கும் விஷச்செடிகளைப் பாருங்கள்; இவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் நிச்சயம் தீமை விளையும்...' என்றது கிள்ளி. "நம்ப முடியவில்லையே...' என்றது சிங்கராஜா.
சாமார்த்தியமாக, "கைகளில் விஷமுறிவு மூ-கையைத் தடவி இருக்கிறோம்; இதன் தன்மையை கண்களால் பார்க்க இயலாது; சந்தேகம் இருந்தால் நீங்களே இச்செடியை தொட்டுப் பாருங்களேன்...' என்றது விள்ளி. புதரை ஒதுக்கி வழி அமைத்திருப்பதைப் பார்த்தால், செய்தி உண்மைபோல் இருக்கிறது; நமக்கு ஏன் வம்பு' என எண்ணிய சிங்கராஜா, "சரி... சரி... எடுத்துச்செல்லுங்கள்; இனி இங்கே வரக்கூடாது; வந்தால் தொலைத்துவிடுவேன்...' என்று கூறி சமாளித்தது. சரியான நேரத்திற்குள் மூ-கையை எடுத்து சென்றன. நிம்மதி அடைந்தது மந்திமை. குட்டிக்குரங்கை காப்பாற்றியது வைத்தியர் முயல்.
முயலைப்போன்று அன்பு, தைரியம், சமயோசித புத்தியால் எதையும் வெல்லமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும்; இளவரசனுக்கு தெய்வம் தகுந்த நேரத்தில் தைரியம் ஊட்டி தன்னை வெளிப்படுத்தி காத்ததுபோல்; பிணியகற்றி, நோய்க்கு மருந்தாய் அருள்கின்றதொரு அற்புதமான திருத்தலம் தான் ராதா நல்லூர் வைத்திய நாத சுவாமி திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீவைத்தியநாதசுவாமி.
இறைவி: அ/மி தையல் நாயகி.
சிறப்பு: செவ்வாய் தோஷ பரிகாரத் தலம்.
விசேஷமூர்த்தி: செல்வமுத்துக் குமாரசுவாமி.
புராணப் பெயர்: விருதாங்க நல்லூர்.
ஊர்: ராதா நல்லூர், மணல்மேடு (அஞ்சல்).
தலவிருட்சம்: வில்வ மரம்.
தீர்த்தம்: மண்ணித் தீர்த்தம்.
சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்தலம் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. காவிரி வடகரை ஸ்தலங்களில் தேவார வைப்புத் தலமாகவும், பஞ்ச வைத்தியநாத தலங்களில் ஒன்றாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புக்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் ராதாநல்லூர் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்.
சிவனை நாம் ஏன் பிணி நீக்குபவன் என்ற பொருளில் "வைத்தியநாதன்' என்கிறோம். காரணம் அவன் பிறவிப் பிணியை நீக்குபவர். அதனால்தான் நாம் அவரை வழிபடும் போது-
"த்ரயம்பகம் யஜாமஹேஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷயீ மா அம்ருதாத்'
என்று அவரை வாயாரப் புகழ்ந்து வழிபடுகிறோம். ஸ்ரீருத்ரம் பத்தாவது
அனுவாகத்தில் வரும் ஓர் ஸ்லோகம் பின் வருமாறு கூறக்கிறது.
"யா தே ருத்ர சிவாதநூ: சிவா விச்வரஹ பேஷஜி!
சிவா ருத்ரஸ்ய பேஷஜி தயா நோ ம்ருட ஜவி ஸே!!''
இதன் பொருள் என்னவென்றால்-
"ஓ ருதரபகவானே!
உன்னுடைய வடிவத்தால் என்னுடைய அமைதியும் மங்களமும், எல்லா நாட்களும் மனித நோய்களுக்குப் பரிகாரமாக இருக்கிறது. அதிக மங்களகரமானது என்றால், ஞானம் மற்றும் ஒளியின் அருளால், அது அறியாமையையும், சம்சாரத்தின் முழுத்துன்பத்தையும் முற்றிலுமாக அகற்றும் உமது கருணை வடிவமே எங்களை நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழச் செய்வாயாக' என்பதாகும்.
"ஜன்மாந்த்ர க்ருதம் பாபம்
வ்யாதி ரூபனே பாததே!
தத்சாந்தி, ஔஷதை தானை;
ஜபஹோம ஜுரார் சனை!!''
முற்பிறவியில் ஒருவன் செய்த பாபம் இப்பிறவியில் நோய் வடிவில் துன்பறுத்துகிறது. இது மருந்து, ஜெபம், தானம், ஹோமம், தேவதா ஆராதனம் ஆகியவற்றால் நீங்குகிறது.
பல ரிஷிகளாலும், மகான்களாலும் அருளப்பட்ட பல்வேறு நித்தியகர்ம அனுஷ் டானங்கள், சாந்திகளை தவறாது செய்துவதால் மட்டுமே இத்தகைய நோய்கள்; துன்பங்கள் நீங்கி நீண்ட ஆயுளும் உடல் ஆரோக்கியமும் மனநிம்மதியுடன்கூடிய எல்லா வளங்களும் கிடைக்கும்.
தலக்குறிப்பு
தமிழ் நாட்டிலுள்ள எண்ணற்ற சிவாலயங் கள் இருந்தபோதிலும் அவர் வைத்தியநாதர் அல்லது வைத்தீஸ்வரன் என்று வணங்கப்படுகி றார். அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி இம்மாநிலத்தில் மூன்று முக்கிய கோவில்கள் உள்ளன. அவை 1. வைத்தீஸ்வரன் கோவில் 2. காட்டூரிலுள்ள (மாமல்லபுரத்திற்கு அருகில்) உத்தரவைத்திய -ங்கேஸ்வரர் கோவில் 3. மாதவர் விளாகத்தில் (ஸ்ரீ வில்லிப்புத்தூருக்கு அருகில்) உள்ள வைத்தியநாதர் கோவில்.
ஆனால் வைத்தீஸ்வரன் கோவிலிலுள்ள வைத்தியநாதர் கோவில்விட பழமையானவை என்று கருதப்படும் ஐந்து சிவன் கோவில்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகிலுள்ளது. இவை ஐந்தும் பஞ்ச வைத்தியநாத தலங்கள் என்று போற்றப்படுகிறது.
1. மண்ணிப்பள்ளம் (வைத்தீஸ்வரன் கோவில்- பந்தநல்லூர் சாலை)
2. ராதா நல்லூர் (மணல் மேடு அருகே ஒரு கிலோமீட்டர்)
3. வரகடை (மணல்மேடு தெற்கே ஐந்து கிலோமீட்டர்)
4. ஐவநல்லூர் (கொற்கை அருகில்)
5. பாண்டூர் (கொற்கை அருகில்)
இந்த ஐந்து கோவில்களிலும் உள்ள இறைவன் ஆதி வைத்தியநாத சுவாமி. இறைவி: தையல் நாயகி என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வைந்தும் செவ்வாய் தோஷப் பரிகார தலமாக விளங்குகிறது.
இவற்றில் முதன்மையானது பண்ணிப் பள்ளத்தி லுள்ள ஆதி வைத்தியநாதர் கோவில். இரண்டாவதாக ராதா நல்லூரி லுள்ள ஆதிவைத்தியநாத சுவாமி கோவில். இக்கோவில் மேற்கு நோக்கி உள்ளதால் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் இது சூரிய பூஜைக்கு பிரபலமானது.
இத்திருத்தலங்கள் 5-ம் மகாபாரதத்திற்கு தொடர்புடையவை என்று தலபுராணம் சொல்கிறது.
தல வரலாறு
மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது அவர்கள் ஐவரும் நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் கிருஷ்ணரை அணுகினர். அவர் குணமுடைய சிவபெருமானுக்கு வைத்தியநாதராக ஒரு -ங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு அறிவுறுத்தினார். அதே நேரத்தில் கைலாசத்தில் கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேட்ட சிவபெருமான் கைலாசத்திலுள்ள வில்வமரத்தை அசைக்கிறார். மரத்திலிருந்து ஐந்து வில்வ இலைகள் பிரிந்து பாண்டவர்கள் தங்கியிருந்த இடங்களிலும் அதைச் சுற்றியும் குறிப்பிட்ட இடங்களில் பூலோகத்தில் விழுந்தன.
பாண்வர்கள் தலா ஒரு -ங்கத்தை நிறுவ ஒரு இடத்தைத் தேட முடிவுசெய்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தவுடன் ஏற்கெனவே காந்தாரி பாண்டவர்களுக்கு நீங்கள் பாண்டூ என்ற ரோகத்தால் அவதிப்படுவீர்கள் என்று சாபம் இட்டதன் விளைவாக அவர்களால் எழுந்துகூட நிற்கமுடியாமல் போனது. அவர்கள் ஒவ்வொருவரும் வானவில்வம் இலைகள் விழுந்த ஐந்து இடங்களில் ஒன்றைக் கண்டுபிடித்தனர். இந்த தலங்களில் பாண்டவர்கள் ஐவரும் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டைசெய்து அதில் பிரார்த்தனை செய்தனர். இதனால் அவர்கள் அனைவரும் குணமடைந்தனர். இந்த ஐந்து தலங்களே இன்று பஞ்ச வைத்தியநாத தலங்களாக விளங்குகின்றன.
பாண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மண்டலம் தங்கி பூஜை வழிபாடுகள் மேற்கொண்டு ரோகம் நீங்கப்பட்டதால் அவ்விடம் பாண்டூர் என்றழைக்கப்படுகிறது. பாண்டவர்கள் தங்கிய ஊர் என்ற அர்த்தத்திலுள்ளது.
அதேபோல் அதனருகில் ஐவநல்லூர், அதே சொற்பிறப்பியல் கொண்டது. ஐவர் என்பது பஞ்சபாண்டவர்கள் 5 பேரைக் குறிப்பது. ஐவரும் நோயி-ருந்து நலம் பெற்றதால் (ஐவர்+நல்லூர்) ஐவநல்லூர் என்றானது.
மேலும் பாண்டவர்கள் தங்கள் தாய் குந்தி மற்றும் மனைவி திரௌபதியுடன் ராதாநல்லூர் உள் ளிட்ட வேறு சில கோவில்களிலும் (பொன்னூர், இலுப் பைப்பட்டு, திருப் புண்கூர்) வழிபட்டுள்ள தாக தருமை ஆதீன செய்திகள் கூறுகின்றன.
பஞ்சவைத்தியநாத தலங்களில் மேற்கு நோக்கிய ஒரே சன்னதி தான் ராதா நல்லூரிலுள்ள தலம். மேற்கு நோக்கிய தலத்திற்கு வ-மை அதிகம் என்பதால் கடுமையான நோய்களி-ருந்து குணமடைய பக்தர்கள் இத்தலத்திற்கு வருகை தந்து நலம் பெறுவதாக ஆலய அர்ச்சகர் கூறுகிறார்.
தருமபுர ஆதீனம் முதல் குருமகா சந்நிதி தானம் வைத்தீஸ்வரன் கோவி-ல் கும்பா பிஷேகம் நடத்துவதற்கு முன்னர் அங்கிருந்த பழைய சிலைகளை ராதா நல்லூரில் பிரதிஷ்டை செய்ததால் இத்தல மூலவர் ஆதிவைத்தியநாத சுவாமி என அழைக்கப்படுகிறார். இத்தல மண் சக்திவாய்ந்ததும், மகத்துவம் வாய்ந்ததாகவும் கூறுப்படுகிறது. அதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
சூரபத்மனுடன் யுத்தம் செய்யக் கிளம்பிய முருகப் பெருமானுக்கு அவருடைய தாயார் பார்வதிதேவி சக்திவாய்ந்த வேல் ஒன்றைத் தந்தது அனைவருக்கும் தெரியும். யுத்தம் முடிந்து சூரபத்மனை அழித்துவிட்டு வெற்றி வாகை சூடியபின் முருகப் பெருமான் தனது பெற்றோர்களை சந்தித்து யுத்த விவரத்தைக் குறித்து கூற வந்தாராம். அப்போது சிவனும் பார்வதிதேவியும் ராதாநல்லூர் ஆலய பகுதியில்தான் இருந்தார்களாம்.
யுத்தத்தில் இருந்து வந்ததினால் முதலில் குளித்துவிட்டு பெற்றோரை சந்திக்க விரும்பிய முருகப்பெருமான் தனது வேலை பூமியிலே பாய்ச்ச மாயவரம் கும்பகோணம் பகுதியில் பெரிய ஆறு வெளியாயிற்று. அதுவே மணிமுத்தாறு என்பது. முத-ல் அதன் பெயர் சுப்பிரமணிய ஆறு என்பதாகும். நாளடைவில் மருவி சொல்வழக்கில் "மண்ணியாறு' ஆனது.
அதில் குளித்தபின் தனது பெற்றோர்களை சந்தித்து யுத்த விவரங்களைக் கூறிக்கொண்டு இருந்தபோது பார்வதிதேவிக்கு தாகம் ஏற்பட அவளுக்கு தண்ணீர் தருவதற்காக மீண்டும் தனது வேலை ஆலய பகுதியில் பூமியில் செலுத்த அங்கு தண்ணீர் குளம் தோன்றியதாம். அதி-ருந்து தண்ணீர் தந்து பார்வதிதேவியின் தாகத்தை முருகப்பெருமான் தனித்தாராம். அந்த தண்ணீர் குளமே இன்றைய ஆலயத் தீர்த்தக்குளம். மண்ணியாறு என்பதுபோல் சுப்பிரமணியரால் தோற்று விக்கப்பட்ட தீர்த்தம் ஆதலால் மண்ணித் தீர்க்கம் எனப்படுகிறது. அதில் வெல்லக்கட்டி களைப் போட்டு தமது நோய்தீர பக்தர்கள் பிரார்த்தனைசெய்து வைத்தீஸ்வரப் பெருமானை வேண்டுகிறார்கள்.
வைத்தீஸ்வரன் கோவி-ல் தனது பிணியை நீக்குமாறு சிவபெருமானை வேண்டி அங்காரக பகவான் தவத்தில் அமர்ந்த இடத்தில் உருவமற்ற நிலையில் தோன்றிய சிவபெருமான் அவருக்கு மேலும் சில இடங்களை கூறி (பஞ்ச வைத்தியநாத தலங்கள்) அங்கெல்லாம் சென்று அமர்ந்து தவத்தில் இருந்தால் தக்க நேரத்தில் தான் அவருக்கு காட்சிதந்து அவரது நோயை தீர்ப்பேன் எனக் கூறினாராம். அதே நேரத்தில் அவருக்கு சிவபெருமான் உறுதி அளித்தப்படி அங்காரக பகவான் தவமிருந்தபோது அவரது தவத்தை மெச்சி அவருக்கு உருவமற்ற முறையில் காட்சிதந்ததும் அல்லாமல் அடுத்த இடத்துக்கு செல்லவும் வழிகாட்டினாராம். இப்படியாக சிவபெருமான் தன்னை நோக்கி தவத்தில் இருந்த அங்காரக பகவானுக்கு அவர் தவம் இருந்த அனைத்து இடங்களிலும் உருவமற்ற நிலையில் காட்சிதந்து அருள்புரிந்தாராம். முடிவாக அங்காரக பகவான் தவம் இருந்த இடத்தில் வைத்தீஸ்வரனாக சிவபெருமான் காட்சிதந்தார். முத-ல் தான் யார் என்பதைக் கூறாமல் மருத்துவர் உருவில் மானிடராக வந்த சிவபெருமான் தன்னுடன் தனது மனைவியையும் மருத்துவச்சியாக அழைத்து வந்திருந்தார். அதே நேரத்தில் மனித உருவமெடுத்து தவத்தில் அமர்ந்திருந்த அங்காரக பகவானின் பிணியும் தீர்ந்தது. அதற்குப் பின்னர்தான் சிவபெருமான் வைத்தியநாத சுவாமியாக காட்சிதர அந்த நேரத்தில்தான் அங்காரக பகவான் சிவபெருமானிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது தான் தவமிருந்த இடங்களில் சிவபெருமான் வைத்தியநாத சுவாமியாகவும், அவருடன் பார்வதி தேவியும் தையல் நாயகியாக அமர்ந்து அருளவேண்டும் என்றும், தங்களை வழிபடுவோர்க்கு செவ்வாய் தோஷத்தை விலக்கும்வகையில் தனக்கும் விசேஷ சக்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதையும் சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்.
சிறப்பம்சங்கள்
ப் இறைவனின் திருநாமம் ஸ்ரீவைத்திய நாத சுவாமி. இறைவியின் திருநாமம் தையல் நாயகி. விசேஷமூர்த்தி; முத்துக்குமாரசாமி.
ப் கந்த சஷ்டிப் பெருவிழா ஆறு நாட்கள் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. சூரசம்ஹாரம் மற்றும் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக் கல்யாண வைபவம் நடைபெறும். முன்ன தாக திருக்கல்யாணத்திற்குரிய புனித சடங்கு கள் மேற்கொள்ளப்பட்டு, மாங்கல்ய தாரண்யம் செய்யப்பட்டு பின்னர் சுவாமிக்கு மகாதீபாராதனை காட்டு வார்கள். இதில் ராதா நல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமவாசிகள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் திருக் கல்யாண வைபவத்தை தரிசனம் செய்வார் கள். செவ்வாய்க்கு அதிபதியாக முத்துக் குமாரசுவாமி உள்ளதால் திருக்கல்யாண வைபோகம் வெகுவிமரிசையாக நடப்பது கண்கொள்ளாக் காட்சி.
ப் சிவனுக்குரிய அனைத்து விசேஷங் களும் முறைப்படி நடக்கின்ற இவ்வாலயத் தில் 27 நட்சத்திர -ங்கங்கள் இருந்தால் எப்படி பலன் அளிக்குமோ அவற்றின் ஒட்டு மொத்த உருவமாய் மேற்கு நோக்கி அருட் காட்சிதரும் ராதாநல்லூர் வைத்திய நாத சுவாமி திருத்தலத்தில் 27 நட்சத்திர அன்பர் கள் கர்ம வினைகள், பாவங்கள் நீங்கி வாழ்வில் சகல விதமான சம்பத்தும், ஐஸ்வர்யமும் பெற்று நலமோடும் வளமோடும் வாழ செய்யவேண்டிய தானங்கள்.
அஸ்வினி- எலுமிச்சை சாதம்
பரணி- நெல்-ப்பொடி சாதம்
கிருத்திகை- வத்தல்குழம்பு சாதம்
ரோகிணி- தயிர் சாதம்
மிருகசீரிடம்- பருப்பு சாதம்
திருவாதிரை- களி
புனர்பூசம்- பால் சாதம்
பூசம்- சாம்பார் சாதம்
ஆயில்யம்- மோர் வத்தல் குழம்பு சாதம்
மகம்- கீரை சாதம்
பூரம்- பலாப்பழ சாதம்
உத்திரம்- புளியோதரை சாதம்
அஸ்தம்- தேங்காய் சாதம்
சித்திரை- சர்க்கரைப் பொங்கல்
சுவாதி- பருப்புப் பொடி சாதம்
விசாகம்- கருவேப்பிலை சாதம்
அனுஷம்- வெண் பொங்கல்
கேட்டை- மாங்காய் சாதம்
மூலம்- சாம்பார் சாதம்
பூராடம்- இனிப்புப் போளி
உத்திராடம்- கடலைமாவு சாதம்
திருவோணம்- கேசரி
அவிட்டம்- அவல் சாதம்
சதயம்- ரவை சேமியா
பூரட்டாதி- பூட்டு மாவு
உத்திரட்டாதி- உளுந்துப் பருப்பு சாதம்
ரேவதி- கொத்திமல்- சாதம்
மேற்சொன்ன (விஷயங்கள்) தானம் செய்தால் காரியத்தடை நீங்கி காரியசித்தி உண்டாகும் என்று ஆலயப்பிரதான அர்ச்சகரான பிரபாகர சிவாச்சார்யார் கூறுகி றார். மேலும் அவர் கூறுகையில் செவ்வாயன்று தரிசனம் செய்வோர் நற்தருணத்துடன் வருவாய் உயர்வதுடன் வளமும் உண்டாகும் என்கிறார்.
செவ்வாய் தோஷத்தினால் திருமணத் தடையா; நாட்பட்ட நோயால் அவதியா; பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினையா; உடன்பிறப்பு களுக்குள் மனஸ்தாபமா; காதல் திருமணம் செய்து இப்போது கருத்து வேற்றுமையா; எதுவாயினும் ராதாநல்லூர் வைத்தியநாத சுவாமியிடம் செவ்வாயன்று விண்ணப்பம் வையுங்கள். ஏழு செவ்வாய்க்கிழமை வருவதற் குள் தங்கள் பிரச்சினையைத் தீர்த்து பிரகாச வாழ்வு வாழவைப்பார் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார் மற்றொரு ஆலய அர்ச்சகரான விக்னேஷ் சிவாச்சார்யார்.
திருக்கோவில் அமைப்பு
பச்சைப்பசேல் என காட்சியளிக்கின்ற வயல்வெளிகள் சுற்றிலும் சூழ கிராமத்தின் மையப்பகுதியில் மேற்கு நோக்கியபடி ஒரு சுற்று பிராகாரத்துடன் திருக்கோவில் அமைந்துள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தால் நந்தி, ப-பீடம், அர்த்தமண்டபம் உள்ளது. மேற்கு பார்த்தபடி கருவறையில் வைத்தியநாதரும், தனி விமானத்தின் கீழ் தெற்கு பார்த்தபடி தையல் நாயகியும் அருட்காட்சி அளிக்கின்றனர். மேற்கு பகுதியில் கிழக்கு பார்த்தபடி வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி, கஜலட்சுமி சந்நிதி உள்ளது. கோஷ்ட தெய்வங்கள் துர்க்கை, -ங்கோத்பவர், தட்சிணாமூர்த்தியும், சண்டிகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. ஈசான்யதிக்கில் நவகிரகமும் சனீஸ்வரன், பைரவர், சூரியன், சந்திரன் மேற்கு பார்த்தபடி அருள்கின்றனர். மடப்பள்ளி மற்றும் தலவிருட்சம் வில்வமரம், பூந்தோட்டம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியில் மண்ணித்தீர்த்தம் என்கிற தீர்த்தக்குளம் உள்ளது. நிருதிமூலையில் க்ஷேத்திர விநாயகர் அருள்கிறார்.
நடைதிறப்பு: காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.
பிறவிப் பிணியகற்றி நோய்க்கு மருந்தாயருளும் ராதாநல்லூர் வைத்தியநாத சுவாமியை செவ்வாயன்று வழிபடுவோம். செழுமையான வாழ்வை ஈசன் அருள்வார் என்பது உள்ளூர் வாசிகளின் ஒருமித்த கருத்து என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அதிகாரியான செயல் அலுவலர் அவர்கள்.
ஆலயத் தொடர்ப்புக்கு: செயல் அலுவலர் அவர்கள், ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவில், ராதாநல்லூர் மணல்மேடு (அஞ்சல்), மயிலாடுதுறை மாவட்டம்- 609 202. பிரபாகர சிவாச்சாரியார் அலைபேசி: 95430 86322, விக்னேஷ் சிவாச்சாரியார் அலைபேசி: 63808 09119.
அமைவிடம்: தமிழ்நாட்டில் மயிலாடு துறை மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவில்- பந்தநல்லூர் சாலையில் மணல்மேடு அருகே மணல் மேட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது ராதாநல்லூர் மயிலாடுதுறையிலிருந்து நீடூர் வழியாகவும் மணல்மேடு வந்து ராதாநல்லூர் வரலாம். பேருந்து வசதி உள்ளது.
படங்கள்: போட்டோ கருணா