1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சூரியனை எண்ணின் நாயகனாக கொண்டவர்கள். அதனால் எப்போதும் எதிலும் முதன்மை வேண்டுமென விரும் பும் மனிதர்கள் இவர்கள். இந்த புரட்டாசி மாதம், உங்களின் பண வரவு அபிரிமிதமாக அமையும். அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பணம் இப்போது கைக்கு வந்துசேரும். உங்கள் சொற்கள் காத்ரம் பெறும். வாக்கு வன்மை அடையும். வாக்கினால் தொழில் புரியும், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மேடை பேச்சாளர்கள், ஜோதிடர்கள் இவர்கள் பணச் செழிப்பு பெறுவர். சில ஆசிரிய, பேராசிரியர்கள் அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். உங்களில் அரசு பணிக்கு செல்ல விரும்புவர்கள், இப்போது முழு முயற்சியுடன் முயலவும். மனை லாபம் கண்டிப்பாக உண்டு. அது அனேகமாக, உங்கள் சொத்தை, அரசு கையகப்படுத்தியதால் கிடைக்கும் தொகையாக இருக்கும். உங்களின் பெற்றோர், சொத்தைப் பிரித்துக் கொடுப்ப தால், மனை, வீடு, பணம் இவை கிடைக்கும். ஆரம்பக் கல்வி குழந்தைகள் பள்ளிகூடம் போகமாட்டேன் என அடம் பிடிக்கக்கூடும். அரசியல்வாதிகள் முன்னர் மனை, பூமி, விஷயமாக நிறைய சம்பாதித்த விதத்தில், இப்போது சற்று இன்னல் காண்பர். உங்கள் மூத்த சகோதரன், உங்கள் பெற்றோரு டன், மனை, பண விஷயமாக கருத்து மோதல் கொள்வார். உங்களுக்கு வீட்டோடு இருந்து பணி செய்யும் பெண் பணியாள் கிடைப்பாள். புது மருமகன் வருவார். பழைய மருமகன் சற்று முறுக்கிக் கொள்வார். குலதெய்வ கோவிலுக்கு, அலைபேசி மூலம் காணிக்கை செலுத்து வீர்கள். உங்களில் சிலர் திருமணத்திற்கு பெண் பார்க்கச்செல்வீர்கள். உங்களில் சிலர் இப்போது ஆரம்பிக்கும் தொழிலில் அழகு கலையுணர்வு நிறைந்திருக்கும். தம்பதிகளுள் ஒருவர் வேலை விஷயமாக வேறிடம் செல்வர்.
புரட்டாசி 14, 15, 16-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: கல்வி, மனை சம்பந்த விஷயங்களில் கவனம் தேவை. நரசிம்மருக்கு விளக்கேற்றி வணங்கவும். கல்வி கூடங்களுக்கு முடிந்த பண உதவி செய்யவும்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்காரர்கள் சந்திரனை நாயகனாக கொண்டவர்கள். அமைதியான குணம், பெரும்பாலரிடம் இருக்கும். இந்த 2023 புரட்டாசி மாதம் உங்களின் அலைச்சல் மாதம் எனலாம். ஆட்டோ, பஸ், ரயில், விமானம் என எல்லாவகை விதவித மான அலைச்சல் உண்டு. அரசு பணிபுரிபவர் கள் இடமாற்றத்தால் அலைவீர்கள். வாரிசுகள் விஷயமாக பயணம் வரும். தொழில் சார்ந்து வெளியூர், வெளிநாட்டு பயணம் ஏற்படும். குலதெய்வ கோவிலுக்கு செல்லவேண்டிவரும். உங்கள் இளைய சகோதரன் விஷயமாக பயணம் கிடைக்கும். தொழிலுக்குரிய சரியான வேலையாள் தேடி அலையவேண்டிவரும். குழந்தைகளின் சரியான ட்யூசன் டீச்சரை தேடி அலைவீர்கள். ரியல் எஸ்டேட் சார்ந்த மனிதர்கள் தங்களின் மனையை பிரிக்கவும், விற்கவும் அலைச்சல் இருந்துகொண்டே இருக்கும். சிலர் பணம் வசூலிக்க அங்குமிங்கும் அலைவர். அரசு சார்ந்த தரவுகள், பத்திரங்கள், பெயர் மாற்றம், பட்டா, சிட்டா, ரசீது என இவை போன்ற இனங் களுக்கு அலைய வேண்டிவரும். கைபேசி பழுது சரிபார்க்க அலைய வேண்டிய இருக்கும். இந்த எண்காரர்கள், டி.வியில் பங்கெடுப்பது, பத்திரிகையில் பணிபுரிவது, வாகன டிரைவிங் வேலை, கணக்கு பாடத்தில் நிபுணத்துவம் பெறுவது என இவை போன்ற ஆசைகள் இருப்பின், இந்த மாதம் சிறுமுயற்சி செய்தா லும், பெரு முன்னேற்றம் கிடைக்கும். பெண் அரசியல்வாதிகள், வீடு, பணம் விஷயமாக சற்று சர்ச்சைக்கு உள்ளாவார்கள். உங்கள் தொழிலில் வேலைப்பளு அதிகமாகும். இதில் சிலருக்கு லஞ்சப் பணம் கொடுக்கல்- வாங்கல் நிறைய வேலை கொடுக்கும். நிறைய பேரின் வேலை, தொழிலில் வெளிநாட்டு சம்பந் தம் உண்டு. சொற்களில் கவனம் தேவை.
புரட்டாசி 16, 17, 18-ஆம் தேதிகளில் நன்மை வரலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: உங்களின் பணியாளர்கள், கைபேசி தகவல் இவற்றில் அதிக கவனமாக இருக்கவேண்டும். தோள்பட்டை வலிவரக்கூடும். நரசிம்மரின் அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை காணிக்கை செலுத்த வும். செவித்திறன் குறைவான பள்ளிக் குழந்தை களின் தேவை கேட்டறிந்து உதவவும்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் குரு ஆவார். அறிவின் ஆதிக்கம் அதிகம் அமையும் மனிதர்களாக இருப்பீர்கள். இந்த மாதம் வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அது உங்கள் பூர்வீகம் சம்பந்தம் கொண்ட தாக இருக்கும். சிலர் இப்போதுள்ள வேலையைவிட்டு விட்டு, அதிக சம்பளம் உள்ள வேலைக்கு மாறுவீர்கள். சிலர் பூர்வீக மனையை விற்றுவிட்டு, புதிய அடுக்கு மாடி குடியிருப்பு வாங்க முதலீடு செய்வீர்கள். இந்த மாதம், இந்த எண்ணில் பிறந்த, திருமண வயதுடையோருக்கு, திருமணம் நடக்கும். நடக்கும் திருமண வைபவம், மிகச் சிறப்பாக, பெரும் பொருட்செலவில், ஊரே பார்த்து ஆச்சர்யப்படும் வகையில் நடக்கும். வேறு சிலர், உங்களின் வணிக வளாக திறப்பு விழாவை, மிக கோலாகலமாக பிறர் வியக்கும்வகையில் கொண்டாடுவீர்கள். இப்போது கிடைக்கும் வியாபார பங்குதாரர், மிக பிரபலமான வெகு அறிமுகமான நபராக இருப்பார். அரசியல்வாதிகள், ஒரு மாற்றத்தினால், மிகப்பெரிய பதவியை பிடித்துவிடுவர். சிலர் செயற்கை முறை கருத்தரிப்பு குறித்து ஆலோசிப்பீர்கள். புதிய தொழில், புதிய ஆடிட்டிங் ஆபிஸ், வியாபாரம், கணக்கு சம்பந்த கல்வி இவை இந்த மாதம் ஆரம்பிக்க இயலும். வருமான வரித்துறை சார்ந்த நிலுவைப் பணங்களை, அபராதங்களை கட்டி கணக்கை நேர் சீர் செய்துவிடுவீர்கள். பூர்வீக இடத்திலிருந்து வேலை செய்ய பணியாளர்களை அழைத்து விடுவீர்கள். சிலருக்கு வெகுநாளாக எதிர் பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அது, அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் என்பது கூடுதல் செய்தி. கல்வி, திருமணம், தொழில் சார்ந்து வெளிநாட்டு பயணம் உண்டு.
புரட்டாசி 20, 21, 22 தேதிகள் நலம் தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 4, 13 22, 31.
பரிகாரம்: கர்ப்பஸ்திரிகள் கவனமாக இருக்கவேண்டும். வாரிசுகளின் பழக்க வழக்கம், நட்பு பற்றி கவனமாக இருக்க வேண்டும். நரசிம்மருக்கு வஸ்திரமும், மலர்களும் காணிக்கை செலுத்துவதோடு, நெய் விளக்கும் ஏற்றவும். அரசு பள்ளிகளுக்கு, ட்யூப் லைட் போன்றவற்றை தேவை கேட்டறிந்து வாங்கிக் கொடுக்கவும். அல்லது உட்காரும் பென்ச், நாற்காலி வாங்கி கொடுங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் ராகு. எனவே எப்போதும் மாறுபாடான சிந்தனை உடையவர்கள் நீங்கள் இந்த மாதம் பழமையான வழிபாட்டு ஸ்தலங்களை தேடி தேடி வணங்குவீர்கள். இதற்கு ஒரு காரணம் உள்ளது. இப்போது, உங்கள் எதிரிகள் மிக பலமாக, வலுவுடன் காணப்படுவர். பின்னும் சிலருக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படும். வேறு சிலர் கண்டுபிடித்த நோய் தாக்கத்தால் வெகு அல்லல்பட நேரிடும். நிறைய பேர் கடன் தொல்லையால் முழி பிதுங்கி நிற்பர். ஆனால் இவ்வளவு இக்கட்டான நேரத்திலும், ஒரே ஆறுதல் தம்பதிகள் மன இணக்கத்துடனும், தைரியத்துடனும் இருந்து, இந்த பிரச்சினைகளிலிருந்து வெளியே வர மிக போராடுவர். எந்த குடும்பத்தில், தம்பதிகள் மனம் ஒற்றுமையாக, இணைந்து நிற்கிறார்களோ, அங்கு துன்பங்கள் தூர ஓடிவிடும். உங்கள் பூர்வீக வீட்டை விற்றோ அல்லது கடனை ஒரு வங்கியிலிருந்து, வேறு வங்கிக்கு மாற்றி கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். இவ்வளவு களேபரங்களிலும், சிலருக்கு அரசு வேலை அல்லது கல்வி சம்பந்தமான வேலை கிடைக்கும். வேலை செய்பவர்கள், அரசு துறையில் இருப்பின், வருமானமும் வரும். சங்கடங்களும் சேர்ந்தே வரும். இந்த மாதம் மனை விஷயங்களில் அதிக கவனம் தேவை.
புரட்டாசி மாதம் 2-ஆம் தேதி நன்மை வரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.
பரிகாரம்: இந்த மாதம் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை. எச்செயலை யும் ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்து செயலாற்றவும். நரசிம்மருக்கு பானகம் கொண்டு வணங்கி, விநியோகம் செய்யவும். அரசு குழந்தைகள்நல மருத்துவமனையில், மருந்துக்களை, தேவை உடையவர்களுக்கு வாங்கிகொடுங்கள். சிலரின் அறுவை சிகிச்சைக்கு உங்களால் முடிந்த பண உதவி செய்யுங்கள்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்ணின் நாயகன் புதன் ஆவார். இவர்களின் எச்செயலிலும், ஒரு புத்திக்கூர்மையும், அறிவு நுணுக்கமும் தென்படும். இந்த புரட்டாசி மாதம் கலவை யான பலன் தரும். நல்ல விஷயங்கள் நடந்தாலும் மிகப்பெரிய அளவில் நல்லவை நடக்கும். அதுபோல் கெட்டது நடந்தாலும், மிக அதிக அளவில் கெட்டது நடக்கும். இந்த மாதம் தொழிலில் வெகு வேகம் விற்பனை அதிகரிப்பு, பண ரொட் டேஷன் என சும்மா தூள் பறக்கும். அதே பொழுதில் அரசு துறைகள், பின்னா டியே வந்து, ஹலோ வரி கட்டினாயா என புடுங்கி எடுக்கும். உங்களுக்கு வியாபாரத் தொழிலை நினைத்து மகிழ்வதா அல்லது அரசு இம்சையை எண்ணி கலங்குவதா என நொந்து குழம்பி போவீர்கள். சில உயர் கல்வி மாணவர்கள். மேற் கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்வீர்கள். அது சமயம் உங்கள் பாஸ் போர்ட்டில், ஒரு புள்ளி தள்ளி இருக்கிறது என நோகடிப் பர். அரசு உதவித்தொகை, அரசு பணி மாற்றம், அரசு வீடு என இவைபோன்ற அரசு உதவி இனங்களில் உங்கள் பெயரை சேர்த்து விட்டு, பின்பு அதில் நொள்ளை, இதில் நொட்டை என நூறு காரணம் சொல்லி வெறுப்பேத்துவர். தம்பதிகளுக்குள். வீடு மாற்றுவது மற்றும் குடும்ப விசேஷங் களுக்கு மொய், பரிசுப் பணம் விஷயமாக மனச்சடவு ஏற்படும். இந்த மாதம் பிறர் பொறாமைக் கொள்ளும் அளவிற்கு நல்ல செயல்கள் நடக்கும். அதன் பின்விளைவாக, பல சங்கடங்களையும் அனுபவிக்க வேண்டிவரும். இது சிலருக்கு பயணத்தில் அடிபடவும் செய்துவிடும். எனவே சந்தோஷ மகிழ்ச்சிகளை ரொம்பவும் வெளிப்படுத்தாமல் அடக்கி வாசிக்கவும்.
புரட்டாசி 26, 27, 28-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: திருஷ்டி தோஷமும், வேண்டாத செயல்களின் தாக்கமும் ஏற்படும் வாய்ப்புள்ளதால், வெகு கவனம் தேவை. நரசிம்மருக்கு, துளசி மாலை மற்றும் தீபத்திற்கு நெய், எண்ணெய் வாங்கிக்கொடுக்கவும். அரசு பள்ளிகள், அரசு மழலை காப்பகம் இவற்றில் முதலுதவி உபகரணம் வாங்கி கொடுங்கள். உங்கள் தொழில் நடக்கும் இடத்தில் அடிபடும் பிற இன, பிறமத தொழிலாளர்களின் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்து உதவுங்கள்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகர் சுக்கிரன் ஆவார். ஒரு சின்ன விஷயத்தையும் அழகுபட செய்யும் திறமையுண்டு. இந்த எண்ணில் பிறந்த குழந்தைகளின் தந்தையருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். உங்களுக்கு பணவரவு அதிகமாக வந்தாலும், செலவும் அதைவிட பல மடங்கு வரும். உங்களில் சிலர் திருமணமாகி, வெளிநாடு செல்வர். திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு, அது பற்றிய செய்தியும் தரவுகளும் கிடைக்கும். அரசியல்வாதிகள் இதுவரையில் இருந்து வந்த இலாகாவில் இருந்து மாறி, அதைவிட மேன்மையான பதவி நாற்காலி பெறுவர். உங்களில் பலர் எதிர்பாராத பதவி உயர்வும், இடமாற்றமும் பெறுவீர்கள். இந்த மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தால், வரன் வீடு நல்ல செல்வ நிலையில் இருக்கும். அதன்பொருட்டு, நீங்களும் நிறைய செலவுசெய்ய வேண்டிவரும். வியாபார, வணிகத்தில் வெளிநாட்டு சம்பந்தம் அமையும். சிலர் கடையை கிளை பரப்பு வதற்காக, முதலீடு செய்வீர்கள். இதன் பொருட்டு அரசு சார்ந்து தொகை செலவு இருக்கும். கலைஞர்கள் வாய்ப்பும், லாபமும் அதிகம் பெறுவர். ஆன்மிக பயணம் உண்டு. உங்கள் மூத்த சகோதரர் இடம் மாறுவார். உங்களில் சிலருக்கு, வேறு மத ஆட்களுடன் காதல் துளிர்க்கும். என பேரவா உள்ளவர் கள் இந்த மாதம் முயற்சி செய்யுங்கள். சிறு முயற்சியும் நல்ல பயணம் தரும். பயணங் களில் கொஞ்சம் இடையூறு வந்தாலும் சமாளித்துக்கொள்வீர்கள்.
புரட்டாசி 26, 27, 28-ஆம் தேதிகள் நன்மை வரலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: இந்த மாதம் பயணங்களின் போது கவனமாக இருக்கவும். பணம் திருடு போகும் அல்லது வீண் விரயமாகும். அல்லது அரசு சார்ந்து தொந்தரவு வரும். நரசிம்மருக்கு சர்க்கரைப் பொங்கல் கொண்டும் நெய் விளக்கேற்றியும் வணங்குங்கள். வாகனம் அதிலும் குறிப்பாக பள்ளி குழந்தைகளின் ஆட்டோ, வேன் ஓட்டுனர்களின் தேவை கேட்டறிந்து, முடிந்த உதவிசெய்யுங்கள்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் கேது. நிறைய ஆழ்ந்த சிந்தனையும், கொஞ்சம் சந்தேகப்புத்தியும் உடையவர்கள். இப்போது முடிவாகும் திருமண விஷயம், கொஞ்சம் கலப்பு, கொஞ்சம் கலாட்டா கலந்து இருக்கும். இதற்கு உங்கள் உறவினர் களின் வதந்தி பேச்சும் ஒரு காரணமாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு தெரிந்தவர்கள்மூலம், வெளிநாட்டு சம்பந்த வேலை கிடைக்கும். பணவரவு நிறைய வந்தமாதிரி இருக்கும். ஆனால் கடைசியில் கையில் ஒரு பைசா இல்லாத நிலைமையில் நாட்கள் நகரும். உங்களில் சிலர், ஒரு இடத் தில், குறிப்பிட்ட தொகையை கட்டியபிறகு, பின் அது வேண்டாம் என முடிவெடுத்து, வேறு ஒன்றை வாங்குவீர்கள். இதனால் முதலில் கட்டிய பணம் திரும்ப கிடைக் காமல் போகும். இதன்மூலம் ஒரே செயலுக்கு இருமுறை செலவளிக்கும் நிலை ஏற்படும். இது உயர்கல்வி சீட், கல்யாண மண்டபம், வாகனம், வீடு என இவைபோன்ற இனங் களில் மதி மயங்கி, இரட்டைச் செலவு செய்வீர் கள். இது இந்த மாதம் தவிர்க்க முடியாதது ஆகும். நீங்கள் இந்த மாதம் வாயு புத்திரன் ஆஞ்சனேயரை நன்கு வணங்குங்கள். அவர் மட்டும்தான், புத்தி நிலைப்பாட்டை, உறுதியான சிந்தனையை கொடுக்க முடியும். இந்த குழப்பத்திலும், உயர்கல்வி, வியாபாரம், ரியல் எஸ்டேட், மருத்துவத் துறையாளர்கள், வெகு உயர்வாக செயல் ஆற்றுவர் என்பது மிக மகிழ்ச்சியான செய்தி தானே.
புரட்டாசி 6-ஆம் தேதி நற்செய்தி கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: இந்த மாதம் மனம், புத்தி, சிந்தனை, எண்ணம் இவை நிலையில்லாமல் அலைபாயும். கட்டுப்படுத்துவது வெகு கஷ்டம். எனவே முக்கியமான முடிவுகளை வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசிப் பது நல்லது. நரசிம்மருக்கு பானகம் வைத்து, நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். நரசிம்மர் சன்னதி பட்டருக்கு, தேவையான மூலிகை களை வாங்கிக்கொடுங்கள். அரசு பள்ளி களில், குழாய்களை பழுது நீக்கி கொடுங்கள்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சனி ஆவார். அமைதியும் அழுத்தமும் நிறைந்தவர் நீங்கள். இந்த மாதம் பண வரவு பற்றி கவலைப் படவேண்டாம். வரவேண்டியது, கிடைக்க வேண்டியது என சீராக வந்துகொண்டிருக் கும். இந்த மாதம், இந்த எண்ணில் பிறந்த வர்கள், சில விஷயங்களில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். உங்கள் எதிரிகள் மிக பலமாக இருப்பர். அதனால் கூடியமட்டும் வாலை சுருட்டிக்கொண்டு, அமைதியாக இருப்பது உங்களுக்கு நல்லது. இதேபோல் உங்கள் ஆரோக்கிய விஷயத்திலும் மிகுந்த சரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். நேரத் துக்கு மருந்து, மாத்திரைகளை சாப்பிடவும். நீங்கள் வீடு, மனைமேல் கடன் வாங்கியிருந் தால், அவை இப்போது மிகுந்த சிரமும், நெருக் கடியும் கொடுக்கும். எனவே இவ்விஷயங் களில், கடன் கொடுத்த வங்கி அல்லது தனியார்களிடம் முன்கூட்டியே பேசி, நிலைமையை சீர் செய்துகொள்ளுங்கள். அரசு வேலைக்கு, லஞ்சப் பணம் கொடுத்த மிகச் சிலருக்கு மட்டுமே, இந்த மாதம் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேறு சிலருக்கு அரசு பணி நியமனம், பிறகு வரும் என்று கூறுவர். உங்கள் தந்தையின் உடல்நிலையை கவனிக்கவும். உங்களின் பெண் வாரிசு சற்று சிரமம் தருவார். உங்கள் தொழிலில், ஒரு பெண்ணின் தலையீடு இன்னல் கொண்டுவரும். அரசியல்வாதிகள், இந்த மாதம் சற்று உண்மையாகவே சேவை செய்யவேண்டி இருக்கும். நடிப்பது எல்லாம் உதவாது. இந்த எண்ணில் பிறந்த இளம் பெண்கள், தொழில் கூடங்களில் வேலை பார்த்தால், சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கண்டிப்பாக வீடு மாற்றும் சூழ்நிலை உருவாகும். எல்லா எண்களிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். நரசிம்மருக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வணங்கவும். மேலும் விஷ்ணு, துர்க்கைக்கு குங்குமம் கொண்டு வணங்கவும். அருகிலுள்ள கோவிலின் அர்ச்சகர்களின் நோயறிந்து, அதற்குரிய மருந்து வாங்கிக் கொடுக்கவும். நீங்கள் இந்த தடவை வேளாவேளைக்கு மாத்திரை, மருந்து சாப்பிட வேண்டும். அப்படி வாங்கும்போது, மருந்து வாங்க பற்றாக்குறை உள்ள நபர்களுக்கு முடிந்த பணம் கொடுத்து உதவுங்கள்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய் ஆவார். இவர்கள் கோபத்தோடு பிறந்தது போல எப்போதும் கடுமையாகவே இருப்பர். இந்த மாதம் தெய்வ வழிபாடு நிறைய செய்வீர்கள். உங்கள் கைச் செலவுக்கு, பிறர் பணம் தருவர். அது மனைவியாகவும் இருக்கலாம். காதலியாகவும் இருக்கலாம். இதுவரை காதல் பண்ணாதவர்களுக்கு, இந்த மாதம் காதல் துளிர்க்கும். உங்கள் இளைய சகோதரனுக்கு வேலை கிடைக்கும். இந்த மாதம் இனிய அதிர்ச்சியாக, உங்களில் சிலருக்கு, லஞ்சம் கொடுக்காமலேயே, அரசு வேலை கிடைக்கும். அரசு கடன் கிடைக்கும். கடன் வாங்கி மனை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளில் சிலருக்கு, கைவிட்டு போன, கிடைக்கவே கிடைக்காது என நினைத்திருந்த, அரசு பதவி, அரசு நாற்காலி என்று உங்களை தேடிவரும். இந்த மாதம் ஒரு எதிர்பாரத ராஜயோகம் என்று, இந்த எண்காரர்களுக்கு கிடைக்கும். கல்யாணம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும். புது கைபேசி வாங்குவீர்கள். உங்களில் பலர் தகவல் தொடர்பு சம்பந்தம் பெறுவீர்கள். திருமணங்களில் சற்று, கலப்பு இருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சில மாணவர்கள், உயர்கல்வி விஷயமாக, வெளிநாடு செல்வீர்கள். உங்களின் சில மாமனார்கள். மிகப்பெரிய புகழ் பெறுவார்கள். உங்களின் சில வாரிசுகள் வேலை கிடைக்கப் பெறுவர். சிலரின் வாரிசுகள் திருமணம் நடக்கப் பெறுவர். புரட்டாசி, 8, 9, 10-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: ஆரோக்கியம் பற்றி வழிப்போடு இருங்கள். நரசிம்மருக்கு, தாம்பூலம் வைத்து வணங்கவும். துவரம் பருப்பு தானம் கொடுக்கவும். உங்களுக்கு மிகுந்த அதிர்ஷ்ட நிகழ்வுகள் கைகூடும் போது, நரசிம்மர் சன்னதிக்கு, தேவை கேட்டறிந்து செம்பு பாத்திரம் காணிக்கை செலுத்தவும்.
செல்: 94449 61845