மதுரை புறநகர் கே.புதூர் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் புதூர் மாரியம்மன் கோவில். இந்த மாரியம்மனின் சக்தியால் புதுவாழ்வு, புத்துணர்ச்சி பெற்றோர் பலர். அதில் ஒருவர்தான் "டெம்பிள் சிட்டி குமார்' என்று அனைவராலும் அழைக்கப்படும் லட்சுமணகுமார். இவர் மதுரை மாவட்ட ஹோட்டல் கள் சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் துணைத் தலைவராகவும், திரைப்பட, குறும்பட நடிகராகவும் இருக்கிறார். தனது "டெம்பிள் சிட்டி' ஹோட்டல்களில் அந்தந்த சமயங்களில் பிரபலமான விஷயங் களை வைத்து "மஞ்சள்பை பரோட்டா', "சந்திராயன் ராக்கெட் தோசை' போன்றும், தனது பேக்கரி மூலம் கள்ளழகர் ஆற்றில் இறங்கு வது போன்ற கேக் மற்றும் ஒலிம்பி யாட் செஸ் போன்ற விதவிதமான வித்தியாசமான கேக்குகள் செய்து வழங்கி தொடர்ந்து புதுமைகளைச் செய்துவருபவர். இவர் தமது வாழ்வில் புதூர் மாரியம்மன் நிகழ்த்திய அற்புதங்களை மெய்சிலிர்த்துக் கூறினார்...
"முதலில் இந்த மதுரை புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் பற்றிய விவரங் களைக் கூறுகிறேன். இந்த கோவில் தோன்றி 170 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த புதூர் பகுதியில் அந்தக் காலத்தில் விவசாய நிலங்கள் இருந்ததால் ஆண்கள், பெண்கள் கதிர் அறுக்கத் தனியாகச் செல்லும்போது, வயக்காடு போகும்போது பயந்து நடுங்கிப் போனதால், அந்த பயத்தைப்போக்க கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில். கர்ப்பிணிப் பெண்களும், வயதானவர்களும் அச்சமின்றி இப்பகுதியில் வாழ உருவானதே இந்த மிக சக்திவாய்ந்த மாரியம்மன் கோவில்.
அன்று இந்த கோவில் முன்னாலிருந்த மைதானத்தில் கபடி போட்டிகள் நடந்தது. சீனாவிலிருந்து வரும் வீரர்களை வைத்து மல்யுத்த போட்டிகள் இங்கே நடந்தது. இங்கே 21 நாட்கள் தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் சாதனைகள் நடந்துள்ளது. முன்னால் அமைச்சர் கக்கனின் தம்பி வடிவேலு இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தை 1981-ஆம் ஆண்டில் நடத்தினார். 1991-ஆம் ஆண்டில் குன்றத்தூர் அடிகளார் தலைமையில் வி.என். சிதம்பரம், ய.ட. ராஜூ கும்பாபிஷேகம் செய்தனர். 2010-ஆம் ஆண்டில் மூன்றாவது கும்பாபிஷேகம் நடந்தது. 2023-ஆம் ஆண்டில் இப்போதுள்ள கோவில் பூசாரி பத்மநாபன் கும்பாபிஷேகம் நடத்த முயன்று வருகிறார்.
அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி, குழந்தை பாக்கியம் தரும் சக்தி, திருமணமாகாத ஆண்- பெண்களுக்கு திருமணம் நடத்திவைக்கும் சக்தி, எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சக்தி இந்த மாரியம்மனுக்கு இருக்கிறது.
இந்த திருக்கோவில் எளிமைக் கும், நேர்மைக்கும் முன்னுதாரண மாகத் திகழ்ந்த முன்னாள் அமைச் சர் "அமரர்' கக்கன் அவர்களின் பரம் பரையினர் அறங்காவலர்களாக இருந்துவருகிறார்கள்.
ஆடி அமாவாசை போன்ற திருவிழாக்களை இந்த கோவிலின் தீவிர பக்தர்களாக உலகமெங்கும் உள்ளவர்கள் வந்திருந்து நடத்திவருகிறார்கள்.
இந்த மகாசக்தி மதுரை புதூர் ஸ்ரீ மாரியம்மன் என் வாழ்வில் நடத்திய அற்புதங்களைக் கூறுகிறேன்.
என் மனைவியின் பெயர் ராஜகுமாரி. பொதுவாக எனக்கு இறைவழிபாடு அதிகம் கிடையாது. ஆனால், என் மனைவிக்கு இறைவழிபாடு மிக அதிகம். 1994-ஆம் ஆண்டில் எங்கள் திருமணம் நடந்தது. ஒன்பது ஆண்டுகளாக எங்களுக்கு குழந்தை பிறக்க "வில்லை. என் மனைவிக்கு ஆறு முறை அபார்ஷன் ஆனதால், மிகவும் மனம் நொந்து வேதனையடைந்து போனோம். ஏழாவது முறை என் மனைவி கர்ப்பவதி ஆனபோது எங்கள் குடும்ப டாக்டர் கண்மணி என்பவரின் மருத்துவமனை புதூர் மாரியம்மன் கோவில் எதிரில் இருந்ததில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தோம். டாக்டர் கண்மணி என் மனைவியை மருத்துவமனையில் தங்கச்சொல்லி, "முழுநேர ஓய் வெடுத்தால் மட்டுமே "அபார்ஷன்' ஆகாமல் குழந்தை பிறக்கலாம்' என்று கூறிவிட்டார்.
அப்படியே என் மனைவி அங்கு தங்கி முழுநேர ஓய்வெடுத்த போதிலும், ஆறுமுறை அபார்ஷன் ஆன அச்சுறுத்தல் இந்த ஏழாவது முறையும் அப்படி ஆகிவிடுமோ என்று பயந்து நடுங்கி நம்பிக்கை யிழக்கச் செய்துவிட்டது. இந்த ஏழாவது முறையும் "அபார்ஷன்' ஆகி விட்டால் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் விபரீத அபாய முடிவை யாருக்கும் தெரியாமல் செய்துவிட்டார். மருத்துவமனை மாடியறையில் என் மனைவி ஓய்வெடுத்தபோது, ஜன்னலைத் திறந்து எதிரே அற்புதக் காட்சிதந்த புதூர் மாரியம்மனிடம், "அம்மா மாரியம்மா... எத்தனையோ மக்களின் பயத்தை நீக்கி அவர்கள் கேட்கும் வேண்டுதல்களை நிறைவேற்றி வரும் நீ, எனக்கு இந்த ஏழாவது முறையாக எழுச்சிமிகு உன் அருளால் குழந்தை நல்லபடியாக பிறக்க வைத்துவிடு! இல்லையென்றால் உன் கோவில் உள்ளே வந்து விஷம் குடித்து என் உயிரை மாய்த்துக்கொள்வேன்! உன் சந்நிதி முன்பே என் உயிர் பிரிந்து விடும்' அன்று கண்ணீர்விட்டுக் கதறி அழுது, மனமார வேண்டி பரிபூரண சரணாகதி அடைந்தார்.
என் மனைவி வேண்டிக்கொண்ட சில நொடிகளிலேயே ஒரு வயதான மூதாட்டி என் மனைவி தங்கியிருந்த அறைக் குள்ளே வந்து. "கொஞ்சம்கூட கவலைபடாத. நீ பயப்படும்படி எதுவும் நடக்காது. உனக்கு அழகான ஆண்குழந்தை கண்டிப்பாக பிறக் கும். எதிரிலுள்ள மாரியம்மன் கோவில் வேப்பிலையை, தினமும் ஒரு வேப்பிலை குழந்தை பிறக்கும்வரை சாப்பிட்டுவா. மருந்து, மாத்திரை எதுவும் தேவையில்லை. உனக்கு நல்லபடியாக பிறக்கும் ஆண் குழந்தைக்கு காவல் தெய்வமான "பாண்டி' அய்யா பெயரை வைத்துவிடு!'' என்று சொல்லிவிட்டு, இறங்கி கீழேபோய் எதிரிலிருந்த புதூர் மாரியம்மன் கோவிலுள்ளே சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து நர்ஸ் உள்ளே வர "யார் அந்த பாட்டி?' என்று என் மனைவி கேட்டிருக்கிறார். நர்ஸ் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.
"பாட்டியா... அப்படி யாரும் ஆஸ்பத்திரி உள்ளே வரவே இல்லையே'' என்று கூறி, "நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள்'' என்று சொல்லி சென்றுவிட்டார். நிஜமாக பாட்டி வந்ததை நம்பாத நர்ஸ் பற்றி என் மனைவி கவலைபடவில்லை. அந்த மூதாட்டி சொன்னதுபோல் வேப்பிலை பறித்து வரச்சொல்லி தினமும் சாப்பிட்டு, வேறு மருந்து மாத்திரைகள் சாப்பிடாமலும் இருந்துவிட்டார். குழந்தை பிறக்கும் நாளும் வந்தது. என் மனைவியும் நானும் வியந்து பிரமித்து சந்தோஷத்தின் எல்லையைப் பார்க்கும்படி அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போதுதான் எனக்கும், என் மனைவிக்கும் நேரில் வந்து, "ஆண் குழந்தை உறுதியாகப் பிறக்கும்' என்று அருள்வாக்கு தந்தது சாட்சாத் அந்த புதூர் மாரியம்மன் என்ற உண்மை தெரிந்தது. மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்து புதூர் மாரியம்மன் கோவிலில் அவள் சந்நிதி எதிரே விழுந்து கும்பிட்டு நன்றி சொல்லி, எங்கள் மகனுக்கு மாரியம்மன் இட்ட கட்டளைப்படி "பாண்டி' என்ற பெயர் சூட்டினோம்.
செல்ல பெயராக "அபிகாஸ்'' என்ற பெயரும் சூட்டினோம்.
எங்கள் மகனை புதூர் மாரியம்மனுக்கு தத்துக்கொடுத்து பிறகு பெற்றுக் கொண்டோம்.
தெய்வம் நேரில் வேறு உருவத்தில் வரும் என்று புராணக் கதைகளில்தான் படித்திருக்கிறோம். எங்களுக்கு வாக்கு கொடுத்து வரம் தந்து நிறைவேற்றியது அதிசயம். ஆனால், உண்மை. நேரில் வந்த புதூர் மாரியம்மன் எங்கள் வாழ்வில் புத்துணர்ச்சி தரும் புதுவாழ்வு தந்துவிட்டார் என்றுதான் பய பக்தியோடு பணிவாகக் கூறுவோம். இன்று எங்கள் மகன் அபிகாஸ் எங்கள் பேக்கரி பொறுப்பேற்று பல புதுமைகள் செய்துவருகிறார்.
இன்னொரு சம்பவம். இந்த புதூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக சமயத்தில் கோவிலில் தேக்கில் நிலைவைக்க நிதி உதவியை என்னிடம் கேட்க சொல்லி கோவில் பூசாரி என் மனைவியிடம் சொல்லிவிட்டு, பிறகு நிதி கேட்க என் இல்லம் வந்த சமயம் நான் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருந்தேன். அதனால் நிதி கேட்க வந்தவர்கள் வெறும் கையோடு திரும்பிச் சென்றனர். நான் தற்செயலாக கோவில் வாசல்பக்கம் செல்ல, பூசாரி மாரியம்மன் என்னை கோவிலுக்கு வரவழைத்து விட்டதாக உணர்ச்சி பொங்க கூறியதும், அவர்கள் கேட்ட நிலை தேக்குக் கதவு செலவை நான் ஏற்பதாக கூறி, அதன் படி செய்து, நானும் என் மனைவியும் ஆத்ம திருப்பதியடைந்தோம். ஏன் நான் மட்டும் அந்த கோவிலுக்கு தானாகவே சென்றேன் என்று இன்றும் வியப்புடன் என்னிடமே கேட்டுக்கொள்கிறேன்.
மற்றொரு மகத்தான சம்பவம். ஒருசமயம் அம்பாளுக்கு ஆடிப்பெருக்கிற்காக சிறப்பான விலை உயர்ந்த பட்டுப்புடவை என் மனைவி வாங்கி வைத்திருந்தார். ஆனால், எங்கள் கார் டிரைவர் மகளுக்கு மறுநாள் வளைகாப்பு என்று தெரிந்ததும் அந்த பெண்ணுக்கு அம்பாளுக்கு வைத்திருந்த பட்டுப் புடவையை அளிக்க என் மனைவி முடிவு செய்தார்.
அடுத்த வருடம் அம்பாளுக்கு பட்டு வாங்கித்தருவோம் என்று நினைத்து விட்டார். ஆனால், அன்றிரவு அம்பாள் என் மனைவியின் கனவில் மட்டுமன்றி என் கனவிலும் வந்து, "எனக்காக எடுத்த பட்டுப்புடவையை யாருக்கும் தரக்கூடாது. எனக்குத்தான் தர வேண்டும்'' என்று கட்டளையிட்டு மறைந்துவிட்டார்.
நாங்கள் இருவரும் சட்டென்று ஒன்றுசேர கண்விழித்து, அம்மனின் கட்டளையை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்தபடியே உறங்கினோம். மறுநாள் அதிகாலை புதூர் மாரியம்மன் பூசாரி எங்களுக்கு போன் செய்து, "அம்மா உங்களிடம் பட்டு கேட்டு என் கனவில் வந்து சொன்னாள்'' என்றதும், பக்தி உணர்வால் எங்களுக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. உடனே புதூர் மாரியம்மன் கோவில்சென்று அந்த பட்டுபுடவையைத் தந்து கும்பிட்டு வீடு திரும்பி, "டிரைவர் மகளுக்கு எந்த புடவையை தருவது'' என்று குழம்பியபடி பீரோவை திறக்க, அங்கே இன்னொரு பட்டுப்புடவை இருந்ததைப் பார்த்து "அம்மா மாரியம்மா... என்னே உன் அற்புதம். உனக்கும் தரவைத்து எங்கள் டிரைவர் மகளுக்கும் தருவதற்கு பட்டுப்புடவை தந்துவிட்டாயே. இது என்ன மாயம்! ஓ... இதுதான் புதூர் மாரியம்மனின் புத்துணர்ச்சி அற்புதமோ!
மனமார எங்கள் குலத்தையே குழந்தை தந்து குதூகலிக்க வைத்த மதுரை புதூர் மாரியம்மனை அனுதினமும் சரண் அடைந்து வணங்கி வெற்றிமேல் வெற்றிபெற்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம்.''
மதுரை டெம்பிள் சிட்டி குமார் தொடர்புக்கு: 98942 33332