புரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த வழிபாடு பற்றிய சிறப்பு மிக்க குறிப்புகளை இங்கு பார்க்கலாம். புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததுமாகும்.
ஜாதக அமைப்பின்படி சனி, புதன் தசை நடப்பவர்கள் எள், நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடிவரும்.
புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பதுபோலவே, பல பெருமாள் கோவில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
திருப்பதி வேங்கடாசலபதியை குல தெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில், புரட்டாசி மாதம் மாவிளக்கேற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டுமென்பது இந்து மதத்தின் மரபுவழி நம்பிக்கை.
விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாகப் புரட்டாசி திகழ்கிறது.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடு கிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் இந்த மாதத்தில் காக்கும் கடவு ளான விஷ்ணுவை வணங்கவேண்டும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது; கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறைய செய்யலாம்.
சனிக்கிழமையன்று காகத்திற்கு ஆல இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமையில் சிவாலயங் களுக்குச் சென்று சனிபகவானை வணங்கி னால், சனி தோஷம் நீங்கும்.
புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணியப் பலனை அதிகம் தருமென்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம், கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.
புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனு மொரு நாளில் திருப்பதிக்குச் சென்று காணிக்கையைச் செலுத்தி வரவேண்டும்.
சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம், சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றி னான் என்பது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.
புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களை யும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக் களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி ஆகியவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.
பெருமாளின் அம்சமாகக் கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள், பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால் தான் புரட்டாசி மாதத் தில் வரக்கூடிய சனிக் கிழமைகள் விஷேசமாகக் கொண்டாடப்படுகின்றன.
புரட்டாசி மாதத் திரு வோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக்கொண்ட தினமென்றால், புரட்டாசி சனிக்கிழமையில் சனி பகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத் துவம் தந்துவிட்டார். அதன்காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத் தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழிவழியாகக் கடைப்பிடிக்கின்றனர்.
புரட்டாசி மாதத்தில் ஒருநாள்கூட மனிதன் உபயோகப்படுத்த முடியாமல் அல்லது உபயோகப்படுத்தக் கூடாத நாளாக இருந்து, விரதத்திற்காக மட்டும் அமைந்திருக்கிறது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு "தளியல்' போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1-ஆவது, 5-ஆவது சனிக் கிழமையில் போடுவார்கள். பெருமாள் பாயசப் பிரியர் என்பதால் பாயசம் செய்வது முக்கியமானதாகும்.
ஒவ்வொரு மாதமும் அஷ்டமி தினத்தன்று உண்ணா நோன்பிருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா வளமும் பெறமுடியும். புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். அன்று தயிர் மட்டும் அருந்தி சிவபூஜை செய்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறமுடியும்.
புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயகர் விரதமிருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய்விடும்.
புரட்டாசி மாதம் எந்த விரதமிருந்தாலும் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றிக் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அறுகம்புல் சாற்றி அர்ச்சித்து வழிபட்டால் உடல்வலிமை உண்டாகும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும்போது, "திருவேங்கட மலையில் வாசம்செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிடமுடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளைப் பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்' என்று மனமுருக சொல்லி வழிபடவேண்டும். இந்த துதியைச் சொல்லச் சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்துசேரும்.
புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத் தக்கவர். அவர் கடலூர் மாவட்டம் மருதூரில் ராமையா- சின்னம்மை தம்பதிக்கு 1823-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 21-ஆம் தேதி மகனாகப் பிறந்தார்.
சென்னையிலிருந்து திருப்பதிலி திருமலைக்குப் புனித பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. இந்த ஆண்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பல ஆயிரம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு நான்கு வண்ணங்களில் ஆடையும், ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபடவேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்கவேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்குத் தேவையான செல்வங்கள் வந்துசேரும் என்பது ஐதீகம்.
புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைப்பிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.
கடவுளுக்குக் காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் பள்ளிகொண்டி ருக்கும் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீரங்க நாச்சியார் தாயார் சந்நிதியில் நவராத்திரி விழா நடைபெறும்.
தென்மேற்கு திசை கன்னிமூலை என்று கூறப்படுவதால், கோவிலில் இந்தக் கன்னி மூலையில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் மிகவும் போற்றப்படுகிறார். புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மூலையில் அமைந்திருப்பதால் இம்மாதத்தில் செய்யப்படும் விநாயகர் வழிபாடு கூடுதல் பலன்களைத் தரும்.
புரட்டாசி மாதத்தில் சுக்கிலபட்ச சதுர்த்தசியில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேகங்கள் மிகச்சிறப் பாக நடைபெறுவதை தரிசிக்கலாம். மேலும் புரட்டாசி மாத சுக்லபட்ச திரிதியை பலராமர் அவதார தினமாகவும், சுக்லபட்ச துவாதசி வாமன ஜெயந்தி தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி, மலர்களால் அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்துசேரும்.
புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கையிலிருந்து வேல் எடுத்து கங்கைக்கு எடுத்துச்செல்லும் விழா நடந்துவருகிறது.
புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்தவேண்டிய மாதமாகும். புரட்டாசியில் வீடுகட்டும் பணியைத் தொடங்கினால் உடல்நலம் பாதிக்குமென்று வாஸ்து குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாத அமாவாசை தினத்தன்று பிறந்தவர்கள் ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமை மட்டு மின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும்.
அன்றைய வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சியடையச் செய்யும்.
கல்வித் தடை, திருமணத் தடை, நோய், பணப் பிரச்சினை உள்ளவர்கள் புரட்டாசி திருவோண தினத்தன்று பெருமாளை வழிபட்டால் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும்.