பகவத் உபாசனைகள் பலவிதம். பல பாகவத உத்தமர்கள் இந்தியா முழுவதிலும் அவதரித்துள்ள னர். தங்கள் மனம் கவர்ந்த இறைவடிவின் லீலா வினோதங்களை இதயப்பசி தீர பாடியுள்ளனர். இதுவே நாமலீலா பஜனை, உபாசனை.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் உத்தம- உன்னத மாதங்கள் என்றே கூறவேண்டும். பல நாத உபாசகர்கள் அவதரித்த தினங்கள் உள்ளன.
பங்குனி கிருத்திகை முத்துஸ்வாமி தீக்ஷிதர் (1775-1834).
சித்திரை கிருத்திகை- ஸ்யாமா சாஸ்திரிகள் (1762-1827).
சித்திரை பூசம்- தியாகையர் (1767-1847).
சித்திரை ஸ்வாதி- ஸ்வாதித் திருநாள் (1813-1848).
வைகாசி விசாகம்- தாள்ளப்பாக்கம் அன்னமய்யா (1408-1503).
இவ்வருடம் வைகாசி மாதத்தில் இரு விசாகங்கள் உள்ளன. 16-5-2022 மற்றும் 12-6-2022-ல் வருகின்றன. இரண்டாவதாக வரும் விசாகமே கந்தப் பெருமானின் அவதார தினம். அன்னமய்யா (வேங்கடேச பக்தர்) ஆந்திராவில் பிறந் திருந்தாலும் கந்தனை மறவாமல், பாடியுள்ளாராம். ஆந்திராவில் முருகனை "நாகராஜா' என்றே வழிபடுவர்.
அன்னமய்யாவின் தாத்தா, தனக்கு அறிவு குறைவென்று மனம் வெதும்பி, பாம்புப் புற்றில் கைவிட்டாராம். அப்போது கிராம தேவதை சீத்தலம்மா தோன்றி, "உனது பேரன் திருப்பதி வேங்கடேசரைப் பாடி பெருமையடைவான்; தைரியமாக இரு' என்று காப்பாற்றினாளாம்.
அருணகிரிநாதரும், முத்துஸ்வாமி தீட்சிதரும் திருப்பதி பெருமாளை முருகனாக தரிசித்துப் பாடியுள்ளனரே! சர்வம் பிரம்ம மயம்!
இந்தியாவில் மூன்று இடங்களில்தான் அனேகமாய் வருடம் முழுவதுமே பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.
ஒன்று- திருப்பதி வேங்கடாசலபதி கோவில்.
இரண்டு- வட இந்திய வைஷ்ணவி கோவில்.
மூன்று- சீரடி சாய்பாபா சமாதி கோவில்.
மற்ற இடங்களில் அந்தந்த வருடாந்திர விசேட நாட்களில் மட்டுமே அதிக கூட்டம் இருக்கும். பக்தர்கள் காணிக்கை அளிப்பதிலும், திருப்பதி பாலாஜியே முதல் ஸ்தானம். தங்க, நவரத்தின நகைகளும் பல கோடிக்கணக்கில்!
அது வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ஆழ்வார்கள் தலமூர்த்தி யைப் பாடியிருந்தால் திவ்யதேசம் என்பர்.
திருப்பதி பாலாஜி- பாலா திரிபுரசுந்தரியா, பாலசுப்பிரமணியனா, விஷ்ணுதானா அல்லது சிவனா? வேங்கடேசனாயிற்றே!
வேங்கட என்றால் என்ன அர்த்தம்? துன்பங் களைப் போக்குபவர். கருவறையிலுள்ள பெருமாளின் உருவத்தில் சங்கு, சக்கரம் கிடையாது! சிலையில் பொருத்தப்பட் டுள்ளன. முருகனுக்கு வேல், சேவல் கொடி பொருத்துவதுபோல, சிவனுக்கும் அம்பிகைக் கும் திரிசூலம் பொருத்துவதுபோல வைக்கப்பட்டுள்ளது. அபிஷேகம் செய்யும் போது இது நன்கு விளங்கும்!v ஆழ்வார்கள், பெருமாளுக்கு சடைமுடி உண்டு என்று பாடியுள்ளனர். சிவன் தலை முடிதான் கங்கை தாங்கிய சடை! ஆக அவர் சிவ ஸ்வரூபம்தானா? கருவறை மூர்த்திக்குரிய வாகனத்தை கர்ப்பக்கிரக கோபுரத்திலும், பிராகார மதில்களிலும் காணலாம். திருப்பதி கோவிலில் இருப்பது சிங்கம். சிவனுக்கு நந்தி, விஷ்ணுவுக்கு கருடன், முருகனுக்கு மயில், கணபதிக்கு எலி. அம்பாளுக்குதான் சிங்கம். அப்படியானால் அவ்விக்ரகம் அம்பாளா!
திருப்பதி பிரம்மோற்சவம் நவராத்திரி சமயத்தில் நடக்கிறது. அது மஹிஷாசுரமர்த்தி னியான அம்பாளுக்கு அல்லவா விசேடம்! கர்ப்பக்கிரக மூர்த்தி அணிவது 18 கஜ புடவை. வேட்டி அல்ல!
பெருமாளின் கைகளிலும் கால்களிலும் நாகாபரணம் உள்ளது. சிவனுக்கும் தேவிக்கும் தான் நாகாபரணம். ஒரு சில கணபதிக்கு நாகாபரணம் உண்டு.
சிவனுக்கு வில்வம்
(அம்பாளுக்கும் வில்வம் உண்டு); விஷ்ணுவுக்கு துளசி. இங்கு வில்வமும் சமர்ப்பிக்கிறார்கள். அப்படி யானால் மூர்த்தி சிவசக்தியா? அங்கு வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், லட்டு என்று பிரசாத மாக நமக்குக் கிடைக்கிறதே. அது சமர்ப்பிக் கப்படும் நிவேதனம் அல்ல. புது மண் சட்டியில், விறகில் சமைத்த தயிர்சாதமே அவருக்கு நிவேதனம்.
"ஏகம் ஸத்; விப்ரோ பஹூதா வதந்தி'- உண்மை ஒன்றே; அதை வெவ்வேறாகக் கூறுகிறார்கள். வேங்கடேச சஹஸ்ரநாமத் தைப் பார்த்தால், எல்லா தெய்வ உருவ நாமங்களையும் காணலாம். ஆகவேதான் ஆதிசங்கரர் ஷண்மதம், அத்வைதம் என வகுத்தார்.
திருப்பதியில் ஏன் பணவரவு அதிகம்? ஜனவரவு அதிகம்? அருகேயுள்ள காளஹஸ்தி யில், பஞ்சபூத வாயுஸ்தலத்தில், சிறந்த திசையில் நதி செல்லும் கோவிலில், கயிலாயத்திற்கு சமமான தலத்தில் மக்கள் வருகை மிகக் குறைவே! ஏன்?
திருப்பதியில் ஆதிசங்கரர் (சிவ அவ தாரம்) தனாகர்ஷண, ஜனாகர்ஷண சக்கரம் பதித்துள்ளார். ஆக, அவர் சிவசக்தி, குக, விஷ்ணு ஒன்றிய வினோத தெய்வம்!
அருணகிரிநாதர் திருப்புகழ், முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடல்கள் குகனாகப் பாடும்.
அப்படியானால் சங்கு, சக்கரம் பார்க்கி றோமே! ஆம்; அது சிவ- விஷ்ணு பேதக் கூக்குரல்.
ஸ்ரீராமானுஜாச்சாரியார் (ஆதிசேஷ, லட்சுமண அம்சம் இரவில், கோவில் அபிஷேக வாயிலின் உட்புகுந்து, சங்கு, சக்கரம் பொருத்திவிட்டாராம்! காலையில் கதவு திறந்தால், சங்கு, சக்கரம் ஏந்திய பெருமாளாகி விட்டார்! சிவசக்தி பெருமான், விஷ்ணு பெருமாளாகிவிட்டார்! ஆக, அவர் பெருமாளானது 1000 வருடங்களுக்குள் ளேயே!
இனி அன்னமய்யாவுக்கு வருவோம்.
30 வருங்களாகத்தான் தாள்ளப்பாக்கம் அன்னமய்யாவின் பாடல்கள் பிரபலமாகி யுள்ளன. எம்.எஸ்.சுப்புலட்சுமியும் பாடியுள் ளார். யாதும் கோவிந்தன்மீதே! கோவிந்தன் என்றால் என்ன பொருள்? கோ- பசுக்களை, விந்தன்- காப்பவன். அதாவது பசுபதி. அது சிவன் நாமமும்தானே! சர்வம் பிரம்ம மயம். பிரம்மத்திற்கு உருவமில்லை. லீலைக்காக விதவித உருவங்கள் எடுக்கிறது.
திருப்பதி பாலாஜி பக்தர் அன்னமய்யாவின் முன்னோர்கள் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை வட்டம், கொத்திபியில்- தாள்ளப்பாக்கம் வந்து குடியேறினராம். அந்த வம்சத்தில் வந்த நாராயணசூரி- லக்மம்மா தம்பதியர் பாலாஜி பக்தர்கள்.
லக்மம்மா திருப்பதி வந்து பாலாஜியை புத்திரபாக்கியம் வேண்டினார். விஷ்ணுவின் வாள்- கட்கம்- நந்தகம் ஜோதிமயமாக அவர் கனவில், கர்ப்பத்தில் புக, அவர் கர்ப்பவதியா னார்! ஆக, அன்னமய்யா தாம்பத்திய உறவில் பிறவாதவர்! ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சைதன்ய மகாப்ரபு அவதாரமும் அவ்வாறே! மஹனீயர்கள் வினோதமாகவே பிறக்கின்ற னர். அவர்கள் செயல்களும் ஆச்சரியமாக நிகழ்கின்றன.
அவர் வைகாசி விசாகம்- முருகன் அவதார தினத்தில் 9-5-1408-ல் பாரத்வாஜ கோத்ரத்தில், ஆஸ்வலாயா சூத்ரத்தில் பிறந்தார்.
நாராயணசூரி சிறந்த கவியாம். லக்மம்மா மாபெரும் பக்தை! அன்னமய்யா வுக்கு ஐந்து வயதில் உபயநயனம் செய்விக் கப்பட்டது. "ஏகசந்த க்ராகி'. ஒருமுறை கேட்டால் மனதில் பதிந்துவிடும். ஊரிலுள்ள கேசவன் கோவிலில் தகப்பனாருடன் பாட ஆரம்பித்தார். பகவத் கத்தி அம்சமா யிற்றே. தானே பாடல் செய்து, உருகவும், பாடவும், ஆடவும் செய்தார். மக்களையும் வியக்கவைத்தார்.
யாத்திரிகர்களுடன் திருப்பதி வந்து கிராம தேவதை தங்கம்மாவை தரிசித்தார்.
அம்மன் தரிசனம் ஈந்து சர்க்கரைப் பொங்கல் அளித்து, காலணி இல்லாமல் மலை ஏறச் சொன்னாள். மேலே சிரமப்பட்டு வந்து புத்துயிர்பெற்று, ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி, வராஹரை தரிசித்து பின்பு வேங்கடே சரை தரிசித்து நெகிழ்ந்தார்.
"பொடகண்டிமையா மிம்மு புருஷோத் தமா'லி "புருஷோத்தமா, உன்னைக் கண்டேன்' என்று ஆனந்தப் பரவசமாய்ப் பாடினார்.
16 வயதில் வேங்கடேசன் தரிசனம் தந்து, மெய்மறந்து பாடப்பணித்தார். ஒரு முதிர்ந்த வரிடம் வைணவ தீக்ஷை பெற்று பல வருடங்கள் திருமலையில் தங்கினார். பெற்றோர் கள் வற்புறுத்தலுக்கு உட்பட்டு மீண்டும் தாள்ளப்பாக்கம் வந்தார். திருமாளம்மா, அக்காலம்மா என்னும் இருவரை மணந்தா லும், அவர் மனம் கோவிந்தன் நாம வைபவம் பாடுவதிலேயே திளைத்தது. அஹோபில மட ஸ்ரீசடகோப யதீந்த்ரரிடம் வைணவ கிரந்தங்கள், வழிபாடுகள் நன்கு கற்று, ஆண்டவனைப் பாடுவதிலேயே மனம் செலுத்தினார்.
ஸாஸ்வ நரஸிம்மையா என்னும் விஜய நகர அரசரிடம் ஆஸ்தான வித்வானாக இருந்தார். அன்னமய்யாவின் பாடல்களை ரசித்த மன்னர், தன்னையும் புகழ்ந்தும் பாடச் சொன்னார். மறுத்த அவரை சிறையிலிட் டார். "ஆகடி வேளை அலைனபன வேள தெக்குவ ஹரி நாமமே திக்கு மாலேதுலி "ஆபத்து சமயத்தில் ஆண்டவன் நாமமே கதி' என்று பாட, கைவிலங்கு விடுபட்டது. அரசரும் மன்னிப்புக் கேட்டார்! அரசர்மீது பாடியிருந்தால் நிறைய வெகுமதி கிடைத்திருக் குமே! அத்தகைய விவேகமும், வைராக்கியமும், ஆழ்ந்த பக்தியும் கொண்டவர் அன்னமய்யா.
சங்கீதப் பிதாமகர் என கூறப்படும் புரந்தரதாசர் இவரைச் சந்தித்து அளவளாவி, "இவர் கோவிந்தன் அவதாரமே' என்றாராம்!
வேங்கடேச- அலுமேலு மங்கை காதல்- ஊடல் ஈடுபாடாக, ஸ்ருங்கார ரஸ மாதுர்ய பக்திப்பாடல்களும் அதிகமாகவே பாடியுள்ளார். அதனில் தன்னை ஒரு சகியாக அமைத்தும் பாடியுள்ளார். ஜயதேவரின்ஸ் ருங்கார ரஸ கீத கோவிந்தம் (12-ஆவது நூற்றாண்டு) ஞாபகம் வரும்.
பக்தியில் ஆழ்ந்து உழன்று, அத்யாத்மமாக வும் பாடியுள்ளார். சகாவாகவும், தொண்ட னாகவும் பாடியுள்ளார். தயைகேட்டு உருகின பாடல்களும் உண்டு. தயை தராது போக, நிந்தாஸ்துதி பாடல்கள், ஆனந்த ரஸ, ஹாஸ்ய பாடல்கள் என நவரசங்களும் அவர் பாடல்களில் மிளிர்கின்றன.
விதவித ஆபரணங்களுடன் கூடிய கோவிந்தன் அழகை மெய்ம்மறந்து, "ஸ்ரீவேங்க டேச சதகம்' பாடியுள்ளார். மடப்பள்ளி, வகுளமாதா, யாகசாலை, ஆனந்தநிலைய விமானம், குமார தாரை, ஆகாசகங்கை, பாபவினாசினி என எல்லாவற்றையும் தரிசித்து மெய்சிலிர்க்கப் பாடியுள்ளார்.
அவ்வப்போது அவர் பாட, அவரது சங்கீர்த்தனைகளில் மெய்ம்மறந்த அவர் சீடர்கள் பாடல்களை எழுதி வைத்தனர்.
பாடல்களை ராகத்தில் பாடாமல், பதங்களை வாசித்தாலே மனது நெகிழும்!
கடைசிக் காலங்களில் திருமலையிலேயே, கோவில் அருகிலுள்ள மருலுங்கு எனும் கிராமத்தில் வசித்தாராம். 95 வருட காலம் வாழ்ந்து, பல்குன பகுள துவாதசி, பிப்ரவரி 23, 1503 அன்று பரமபதம் எய்தினார்.
தெலுங்கு மட்டுமின்றி வடமொழியிலும் கீர்த்தனைகள் பாடியுள்ளார். அக்காலத்திற்கு ஒப்ப, தெலுங்குப் பாடலாயிருந்தாலும், வடமொழி, தமிழ், கன்னட சொற்களும் கலந்துள்ளன. ச்ருங்கார மஞ்சரி 12 சதகங்கள் (100) பாடியுள்ளாராம். அவர் பாடியது மொத்தம் 32,000 கீர்த்தனைகள். அவற்றுள் 12,000 பாடல்களை அவரது மைந்தன் பெத்த திருமலாச்சார்யார் செப்புத் தகட்டில் பொறித்து கோவிலில் அடைத்தார். அவை 20-ஆவது நூற்றாண்டில்தான் வெளிவந்தன. அலெக்ஸாண்டர் கேம்ப பெல் என்பவர், தெலுங்கு இலக்கணம், பாடல்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்து, செப்புத்தகடுகள் விவரம் புரிந்து, 1816-ஆம் வருடம் தனது புத்தகத்தில் பதித்தாராம். ப்ரயாகதாஸ் என்னும் மஹந்த் அந்த செப்புத்தகடுகளை உணர்ந்து, வெளிக்கொணர்ந்தாராம். இதற்கு சாது சப்ரமன்ய ஸாஸ்திரி, ஸ்ரீவேதுரி பிரபாகர சாஸ்திரி, நல்லபள்ளி அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் ஆழ்ந்த உதவி செய்தனர். இல்லா விடில் அந்த தெய்வீகப் புதையல் மறைந்தே போயிருக்கும். அதில் 1686 செப்புத்தகடுகளை ஸ்ரீவேங்கடேசா அருங்காட்சியகத்தில், நாராயணகிரி வனத்தில் தரிசிக்கலாம்.
இக்கால சுலபத் தேடலுக்கு கணினியில் பெறலாம். இதற்கு தேவஸ்தானத்தாரை நாம் பாராட்ட வேண்டும். முக்கிய நாட்களில், அன்னமய்யாவின் பாடல்களை பாடர்கள் மூலம் பாடவைக்கிறார்கள்.
அவர் பாடல்களில் 100 ராகங்கள் உள்ளன. அதில் சில முகாரி, ஆஹிரி, காம்போதி, பைரவி, சங்கராபரணம், தேவகாந்தாரி, ஆபலி, அமரஸந்து, கொடை, சௌராஷ்டிர குர்ஜரி.
அவரது வம்சாவளிகள் இன்றும் திருப்பதி கோவிலில் பணி செய்கின்றனர் என்பதும் மகிழ்ச்சியான விஷயம்.
அன்னமய்யா, இசையால் இறைவனைக் கண்டவர்!