ஞாயிறு போற்றும் பண்டிகையே பொங்கல்! - ஆர்.மகாலட்சுமி

/idhalgal/om/pongal-festival-celebrating-sunday-r-mahalakshmi

மது நாட்டில் வருடம் முழுவதும், அனேக பண்டிகைகள் கொண்டாடப்படு கின்றன. இதில் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதத்தில் சிறப் பாகவும், குறிப்பிட்ட பண்டிகைகள், குறிப்பிட்ட தெய்வங்களை குறித்த வழிபாடாகவும் திகழ்கிறது.

இதில், சூரியன் ஒவ்வொரு மாதமும் நகரும் தமிழ் மாதங்களும் இதில் பங்கு பெறுகிறது.

சூரியன் மேஷத்தில் இருக்கும்போது, அது சித்திரை மாதம் எனப்படும். அப்போது சித்திரை வருடப் பிறப்பும், அழகர் ஆற்றில் இறங்கும் சித்ரா பௌர்ணமி விழாவும் கொண்டாப்படும். இதில் அழகரும் மற்றும் மீனாட்சியும் சுந்தரேஸ்வரமும் முக்கிய வழிபாட்டு தெய்வங்கள் ஆவர்.

சூரியன் ரிஷபத்தில் இருக்கும் வைகாசி மாதம், முருகனை முன்னிலைப்படுத்தும் வைகாசி விசாகம் விழாவாக அமையும்.

சூரியன், மிதுனத்தில் செல்லும் ஆனி மாதம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் செய்வர்.

சூரியன் கடக ராசியில் கடக்கும் மாதம் ஆடிமாதம் எனப்படும். இதில் அம்மன் சார்ந்த விழாக்களுக்கு குறைவே இராது.

சூரியன் சிம்மத்தில் செல்லும் மாதம் ஆவணி ஆகும். இதில் மகாலட்சுமியை போற்றி வணங்கும் வரலட்சுமி விரதம் முக்கியமானதாக கொண்டாடப்படும்.

சூரியன் கன்னியில் செல்லும்போது, புரட்டாசி மாதம் பிறக்கும். இதில் அம்பாளை, விதவிதமாக அலங்கரித்து வணங்கும் நவராத்திரி விழா ஜொலிக்கும்.

சூரியன் துலா ராசி எனும் ஐப்பசி மாதம் நரகாசுரன் கொன்ற, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை முன்னிறுத்தி, தீபாவளி கொண்டாடப்படும்.

dd

சூரியன் விருச்சிகம் எனும் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் கார்த்தி

மது நாட்டில் வருடம் முழுவதும், அனேக பண்டிகைகள் கொண்டாடப்படு கின்றன. இதில் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதத்தில் சிறப் பாகவும், குறிப்பிட்ட பண்டிகைகள், குறிப்பிட்ட தெய்வங்களை குறித்த வழிபாடாகவும் திகழ்கிறது.

இதில், சூரியன் ஒவ்வொரு மாதமும் நகரும் தமிழ் மாதங்களும் இதில் பங்கு பெறுகிறது.

சூரியன் மேஷத்தில் இருக்கும்போது, அது சித்திரை மாதம் எனப்படும். அப்போது சித்திரை வருடப் பிறப்பும், அழகர் ஆற்றில் இறங்கும் சித்ரா பௌர்ணமி விழாவும் கொண்டாப்படும். இதில் அழகரும் மற்றும் மீனாட்சியும் சுந்தரேஸ்வரமும் முக்கிய வழிபாட்டு தெய்வங்கள் ஆவர்.

சூரியன் ரிஷபத்தில் இருக்கும் வைகாசி மாதம், முருகனை முன்னிலைப்படுத்தும் வைகாசி விசாகம் விழாவாக அமையும்.

சூரியன், மிதுனத்தில் செல்லும் ஆனி மாதம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் செய்வர்.

சூரியன் கடக ராசியில் கடக்கும் மாதம் ஆடிமாதம் எனப்படும். இதில் அம்மன் சார்ந்த விழாக்களுக்கு குறைவே இராது.

சூரியன் சிம்மத்தில் செல்லும் மாதம் ஆவணி ஆகும். இதில் மகாலட்சுமியை போற்றி வணங்கும் வரலட்சுமி விரதம் முக்கியமானதாக கொண்டாடப்படும்.

சூரியன் கன்னியில் செல்லும்போது, புரட்டாசி மாதம் பிறக்கும். இதில் அம்பாளை, விதவிதமாக அலங்கரித்து வணங்கும் நவராத்திரி விழா ஜொலிக்கும்.

சூரியன் துலா ராசி எனும் ஐப்பசி மாதம் நரகாசுரன் கொன்ற, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை முன்னிறுத்தி, தீபாவளி கொண்டாடப்படும்.

dd

சூரியன் விருச்சிகம் எனும் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் கார்த்திகை எனப்படும். இதில் சிவனை முன்னிட்டு, திருக்கார்த்திகை என வணங்கப்படும்.

சூரியன் தனுசு மாதம் என செல்லும்போது அதனை மார்கழி என்கிறோம். அதனை ஆண்டாளை முன்னிறுத்தி விரதமும், பெருமாளை முதன்மையாகக் கொண்டு வைகுண்ட ஏகாதசியும் கொண்டாடப்படும்.

சூரியன் கும்பத்தில் செல்லும் மாதம் மாசி மாதம் எனப்படும். இந்த மாதத்தில், மாசி மகம் எனும் பெரும் வைபவமும் மற்றும் அனைத்து தெய்வங்களும் கடல் மற்றும் நதிகளில் புண்ணிய நீராடுவதும் நடக்கும்.

சூரியன் மீன ராசியில் செல்லும் மாதம், பங்குனி என்போம். இம்மாதத்தில் அனைத்து குலதெய்வ வழிபாடும் நடக்கும்.

மேற்கண்ட மாதத்தில் தை மாதம் மட்டும் விடுபட்டுள்ளதே என நீங்கள் நினைக்கலாம். சரிதான் சூரியன் மகர ராசியில் செல்லும் மாதமே தை மாதம் ஆகும். இங்கு கவனியுங்கள் எல்லா மாத பண்டிகைகளும், ஏதோ ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை முன்னிறுத்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் தை மாதம் கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு மட்டும் குறிப்பிட்ட தெய்வத்தை பொதுவாக குறிப்பிடப்படவில்லை. ஆம். பொங்கல் விழா மட்டுமே, சூரிய பகவானை முதன்மையாக, அவரை முன்னிறுத்தியே பொங்கல் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் முழுக்க முழுக்க, சூரிய பகவானுக்கே உரியது.

யோசியுங்கள். நாம் நிதர்சனமாக தினமும் கண்ணால் காணும் தெய்வம் ஒன்று உண்டெனின் அது சூரியபகவான் மட்டுமே. அவர் காலையில் உதிப்பதையும், மாலையில் மறைவதையும் உணர்ந்து மகிழ்கிறோம். எனவேதான் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும் என்கின்றனர். சூரியனுக்கு வணக்கத்துடன் நீர் வார்க்கச் சொல்கின்றனர்.

சூரியன் இல்லையெனில் உலகில் ஒரு ஜீவனும் பிழைத்திருக்க முடியாது. அது ஓரறிவு அல்லது ஆறறிவு ஜீவன் என எதுவாகவும் இருக்கலாம்.

தை மாத, மகர ராசியின் தன்மை சூரிய பகவான், மகர ராசியில் அமர்ந்து பயணிக்கும் மாதம் தை மாதம் எனப் பார்த் தோம். மகர ராசியின் அதிபதி சனிபகவான். இந்த சனிக்கும், சூரியனுக்கும் ஆகவே ஆகாது, மேலும் மகர ராசியில் உத்திராடம், திரு வோணம், அவிட்டம் எனும் நட்சத்திரங்கள் உள்ளது. இதில் உத்திராடம் என்பது ஒரு சூரிய சார நட்சத்திரம். ஏற்கெனவே இங்கு சனிக்கும், சூரியனுக்கும வாய்க்கா வரப்பு தகராறு. இதில் சூரிய சாரத்தில், சூரியன் செல்லும்போது கேட்க வேண்டுமா. சனி கடுங்கோபம் கொள்வார்.

அடுத்து, திருவோணம் எனும் சந்திரன் நட்சத்திரம். ஒரு சனியின் வீட்டில் சந்திர சார நட்சத்திரத்தில், சூரியன் செல்வது ஏற்புடையதல்ல. அடுத்து, சூரியபகவான், அவிட்டம் எனும் செவ்வாய் சாரம் எடுப்பார்.

ஒரு சனியின் வீட்டில், அவரின் எதிரியின் காலில், சூரியபகவான் செல்லும்போது, சனி பல்லைக் கடித்து குதறி எடுப்பார். ஆக, மொத்தத்தில் சூரியன் மகர ராசியில் செல்லும்போது, ரொம்பவே கலவரமாகி, பலமிழந்து, சொய்ங் என்றாகிவிடுவார். எப்போதும் உலகில் சூரியன் மட்டும் தீர்க்கமாக இருக்க வேண்டும். மற்ற கிரகங்கள் நீசமாக, வலு குறைந்தாலும் அவ்வளவு பாதகம் தராது. ஆனால், சூரியன் மட்டும் மிக பலமாக இருப்பது அவசியம்.

எனவே அவரை, சந்துஷ்டி படுத்தும் விதமாக, மகர ராசி, சூரியனை தை பொங்கல் விழா எடுத்து கொண்டாடுகிறோம்.

மகர ராசியில், சூரியன் நுழைந்தவுடன், சூரிய உதயத்தில் வீட்டு முற்றம் போன்ற இடங்களில் அடுப்பு வைத்து, புதுப் பானையில், புது அரிசியிட்டு, நிறைய காய்கறிகள், பழங்கள், கரும்பு, கிழங்கு வகைகள், வெல்லம், பனங்கிழங்கு என பெரிய இலையில் சமர்பித்து, சூரியனுக்கு காணிக்கையாக்கி, அவருக்கு தீபம் காட்டி, மிக பக்தி சிரத்தையாக வணங்குகின்றனர். இது நமது இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களுடன் கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக தென்னிந்தியாவில், தென் தமிழக பகுதிகளில், வீட்டிற்கு கட்டாயமாக வெள்ளையடிப்பர். (அப்போதைய காலத்தில், பொங்கலுக்கு வெள்ளையடிக்காத வீடுகள் எள்ளி நகையாடி, இதுக்குகூட துப்பு கெட்ட வீடு என சிரிப்பர்) பழையன எல்லாம் கழித்துவிடுவர். புதுப்பானை, புது அரிசி என பயன்படுத்தும் அத்தனை பொருட்களையும் பார்த்து பார்த்து வாங்குவர். மிக பயபக்தியுடன் இன்னும் சொல்லப்போனால், மிஞ்சிய பயத்துடன் பொங்கலை கொண்டாடுவர்.

பொங்கல் கூறும் சகுனம்

பொங்கல் பொங்கும் திசையைக் கொண்டு, அவ்வருட நிகழ்வை அனுமானிப் பர். பொங்கல் கிழக்கு வடக்கில் முதலில் பொங்கினால் சுபிட்சம் என்றும், மேற்கில் எனில் பரவாயில்லை என்றும் கொள்வர். பொங்கல் தெற்கு தசையில் பொங்கக்கூடாது. அதாவது, பொங்கல் பொங்கி வரும்போது, அது முதலில் வெளியே விழும் தசை தெற்காக இருக்கக்கூடாது. அவ்விதம் பொங்கினால், அவ்வருடம், அவ்வீட்டில் ஒரு கெடுதல் நடக்கும் எனப் பொருள்படும். இதனை உணர்ந்த மக்கள் பெரும் மனக் கிலேசம் கொள்வர்.

பொங்கல் அன்று, தங்களின் மூதாதையர்களை, பயபக்தியுடன் வணங்கும் வழக்கம் பெரும்பாலோரிடம் உள்ளது.

பொங்கலின் உள்ளீடான தாத்பார்யம்

பொங்கல் என்பது, நிறைய பொருட்களை புதிதாக வாங்கவேண்டும் என விதியுள்ளது. இக்காலம் வயலில் அறுவடையாகி, நெல் விற்பனைக்கு வரும் நேரமாகும். அதுபோல் நிறைய காய்கறிகளும் விளையும் பருவமாகும். இந்த விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து தொழிலாளர்களுக்கும் விற்பனை மேம்படுத்தும் பண்டிகையை, பொங்கல் விழா என தேர்ந்தெடுத்தனர். எனவே பயிருக்கு ஆதாரமான, சூரியபகவானை இதன் கர்த்தாவாக வடிவமைத்தனர்.

ஆக, எல்லா விழாக்களும் ஏதோ ஒரு தெய்வத்தை முன்னிறுத்த, பொங்கல் பண்டிகை மட்டுமே, ஒரு கிரக அரசனை, சூரியனை முன்னிலை படுத்துகிறது. இது விவசாயிகள், மண் பாண்டம் செய்வோர், கரும்பு, காய், கனி, கிழங்கு பயிரிடுவோர் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்போர் என சூரியன் பார்வையில் வாழும் அனைத்து மக்களும் பயன்பெறும்விதமாக அமைந் துள்ளது.

சில பகுதிகளில், வீட்டில் எந்த பண்டிகையை கொண்டாட முடியாத சூழ்நிலை இருப்பினும், பொங்கல்விட்டு விடக்கூடாது என அதனை மட்டும் எளிமையாக கொண்டாடிவிடுவர். அத்தனை முக்கிய விழா இந்த பொங்கல் பண்டிகை ஆகும்.

எனக்குத் தெரிந்து, ஜோதிடர்கள் அனைவரும் கட்டாயமாக, பொங்கல் விழாவை கொண்டாட வேண்டும். ஏனெனில் ஜோதிடத்தின் தந்தை, கிரக அரசனின், சூரியனின் முக்கிய விழாவல்லவா!

பொங்கல் அன்று, சூரிய காய்த்ரி ஆதித்ய ஹ்ருதயம் கூறி வழிபடுங்கள்.

om010124
இதையும் படியுங்கள்
Subscribe