சூரியன்
எல்லா வருடமும் சூரியன் வைகாசி மாதத்தில் ரிஷப ராசியில்தான் இருப்பார். சூரியனுக்கு இடம் கொடுத்த சுக்கிரன் உச்சம். சூரியன் அரசாங்கத்தையும், உடனிருக்கும் புதன் எதிர்கட்சியையும் குறிக்கும்.
இந்த மாதம் மக்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் கிரக அமைப்பு உள்ளது.
திருக்கணிதப்படி சனி, மீன ராசியில் அமர்ந்து, சூரியனை பார்ப்பார். இதனால் அரசாங்கம் பண விஷயமான, வெகு நெருக்கடிகளை சந்திக்க வேண்டும்.
ஆனால், வாக்கியப்படி, சனி, கும்ப ராசியில் உள்ளார். எனவே, சூரியனுக்கு சனி பார்வை கிடைக்காது. இதனால் அரசாங்கம், தனது எதிரிகளின் கூப்பாடு, கூட்டணி கட்சிகள் செய்யும் மிக அதிக அடாவடித்தனம் இவற்றை ஜஸ்ட் லைக் தட் சமாளித்துவிட்டு, அசால்ட்டாக போய்க்கொண்டே இருக்கும்.
எது எப்படியிருப்பினும், அரசாங்கமும், அரசும், எதிர் கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
செவ்வாய்
இவர் இந்த வைகாசி மாதம் 25-ஆம் தேதிவரை (ஜூன் 8-ஆம் தேதி) கடக ராசியில் நீசமாக உள்ளார். செவ்வாய் ஆளும் கட்சியைக் குறிப்பார். ஒரு ஆளும் கட்சியைக் குறிக்கும் கிரகம் நீசமாகி இருப்பது நல்ல பலன் கொடுக்காது. பலமற்ற நிலையில், மங்கி, மறைந்து உள்ளது என்று அர்த்தம். எனவே இந்த மாதம், ஆளும் கட்சி, எதிர் கட்சிகளின் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பேயாட்டத்திற்கு பதில் கூறமுடியாமல் தவிக்கும். சகித்துக் கொள்ளும், மௌனம் காக்கும். மனம் குமையும். ஆனால் இந்த மாத கடைசியில் சிம்ம ராசிக்கு நகர்ந்தவுடன், தனது முழுக்கோபத்தையும் ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும்.
புதன்
இது எதிர்கட்சிகளைக் குறிக்கும். புதன், ரிஷப ராசியில் சூரியனோடு உள்ளார். இதனால் நிறைய எதிர்கட்சி ஆட்கள் அரசு அதிகாரிகளுடன் நல்ல நட்பில், அணுசரணையான தொடர்பில் இருப்பர். எனவே அரசு சம்பந்தமான பண விஷயம், கோப்புகள், தரவுகள், தகவல்களை அறிந்து கொண்டு, "என் கேள்விக்கென்ன பதில்?'' என அவ்வப் போது ஆர்ப்பாட்டம் செய்வர். இவர்களை கூட்டணி கட்சியினர், பின்னா-ருந்து கீ கொடுத்து ஆடச்செய்வர்.
சுக்கிரன்
வைகாசி 17-ஆம் தேதி (மே 31) வரை சுக்கிரன் எனும் கூட்டணிக் கட்சி கிரகம் உச்சம். நாங்கதான் இப்போ உசந்தி. நாங்க என்ன வேணும்னாலும் பண்ணுவோம். யாரையும் மிரட்டுவோம். எங்க சொல்தான் அம்பலம் ஏறும் என ஏகப்பட்ட பம்மாத்து வேலைகளை, எதிர்கட்சிகள் செய்யும். பின், ஜூன் 1-ஆம் தேதி, மேஷத்துக்கு நகன்றவு டன், ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுத்து, பம்மி நிற்கும்.
குரு
குருபகவான் மிதுன ராசியில் சஞ்சாரம், இவர் காலபுருசனின் 3-ஆம் வீட்டில் அமர்ந்துள்ளதால், தங்க பத்திரங்கள் தங்க முதலீட்டு ஃபண்ட், கோல்ட் இன்வெஸ்ட் மெண்ட் என நேரிடையாக தங்கம் வாங்காமல், பத்திர டாக்குமெண்ட்மூலம் தங்க விற்பனை நடக்கும். குரு சாரம் வாங்கிய செவ்வாய் நீசமாகி உள்ளார். எனவே தங்க கடத்தல், நகை திருட்டு, தங்கத்துக் காக சம்பவம் செய்வது, பயணங்களில் செயினை அறுப்பது என தங்கம் சம்பந்தமான குற்றங்கள் அதிகரிக்கும். தங்க நகை கடன் அதிகரிக்கும். தங்கத்தின் விலை அதிக மானால் ரொம்ப அதிகரிக்கும். குறைந்தால் ரொம்பவும் குறையும். ஒரு நிலையற்ற தன்மை இருக்கும். இது நீசமான சாரநாதரைக்கொண்டு கூறப்பட்டுள்ளது.
சனி
சனிபகவான் திருக்கணிதப்படி மீனத்திலும், வாக்கியப் படி கும்பத்திலும் நிற்கிறார். அரசியல்வாதிகள், குறுகிய பயணம், அல்லது நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வர். கொஞ்சமும் பொருந்தி வராத நபர்களை அரசியல்வாதி கள் சந்திப்பர். நிறைய லாப- நஷ்டக் கணக்குகளை போட்டு குழம்புவர். மாறுதல்கள் சம்பந்தமாக கையெழுத்து போடுவர்.
ராகு
கும்ப ராசியில் உள்ளார். இவர் காலபுருச தத்துவப்படி, 11 எனும் அரசியல் வீட்டில் அமர்ந்துள்ளார். இப்போது ராகுவிற்கு, அரசியல்வாதிகளை அங்கும் இங்குமாக பந்தாடுவது மிகவும் பிடிக்கும். அரசியல்வாதிகளிடையே நிறைய வதந்தி, கோள் சொல்வது என அதிரடியாக உண்டாக்கி, செம சண்டை மூட்டிவிடுவார். நிறைய மாற்றங்கள் ஏற்படும். கொஞ்சமும் எதிர்பார்க்காத அரசியல்வாதிகள், தலைவர்கள் இரகசியமாக சந்தித்துக் கொள்வர். ராகுபகவான், குரு சாரத்தில் செல்வதால் ஏற்படும் விளைவாகும்.
கேது
சிம்ம ராசியில், சூரிய சாரம் எடுத்து, காலபுருசனின் 5-ஆமிடத்தில் நகர்கிறார். இவர் மந்திரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்குமிடையே மனஸ்தாபம், சண்டை உண்டாக்குவார். இதனால் நம்ம ஆபிசர்ஸ் "வேலை செய்யணுமா, பைல் பாக்குணுமா, எந்த முடிவும் எடுக்கலாமா பிரச்சினை ஆகிவிடுமா'' என்றெல்லாம் மிக யோசிப்பர். அதுவும் பண விஷயத்தில் பயப்படுவார்கள். இது கேது பகவான் சூரியனின் கா-ல் செல்லும் விளைவாகும்.
சந்திரன்
வைகாசி 6, 7, 8-ல் கும்ப ராசியில் ராகுவுடன் சஞ்சாரம். அரசியல்வாதிகள் மிக குழப்பம் அடைவர். வாக்கியப்படி இங்கு சனியும் இருப்பார். எனவே வெளிநாட்டு, உள்நாட்டு அரசிய-ல் மிக பதட்டமான சூழ்நிலை உருவாகும். வதந்தி மிக பரவும். காற்று அதிகமாக இருக்கும். வைகாசி 8, 9, 10-ல் மீன ராசியில் உச்ச சுக்கிர னுடன் பயணம். இது, ஒரு நீர் ராசியில், சந்திரன் என்ற நீர் கிரகம், சுக்கிரன் என்ற உச்சம்பெற்ற நீர் கிரகத் துடன் சேர்ந்து நகர்வு எனக் கொள்ளலாம். மீன ராசி வடக்கு திசையைக் குறிக்கும். சந்திரன் வடமேற்கு திசையைக் குறிக்கும். சுக்கிரன் தென்கிழக்கு திசையைக் குறிப்பார். எனவே இந்த திசையில் இருக்கும் ஊர்கள் மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடும். மேற்கண்ட நாட்களில், சுக்கிரன் எனும் கூட்டணிக் கட்சி கிரகத்துடன் சந்திரன் நகர்வதால், கூட்டணி கட்சிகள் மிக மனமாற்றம், படபடப்பு, நிதானமின்மை இவற்றால் அலைக்கழிப்படும். வைகாசி 12, 13, 14 (மே 26, 27, 28) இந்த நாட்களில் ரிஷப ராசியில், சூரியன்+புதனுடன் சஞ்சாரம். இது ஒரு நிலம் ராசியான ரிஷபத்தில், வெப்ப கிரகம் சூரியன் காற்றுக் கிரகம் புதனோடு செல்வதால் வெப்பம் குறைந்து காணப்படும். காற்றில் மிதமான ஈரப்பதம் இருக்கும்.
இந்த நாட்களில், எதிர்கட்சி புதன், அரசு கட்சி கிரகம் சூரியனோடு சேர்ந் திருப்பதால், அரசு சார்ந்த முக்கியமான விஷயங்களை, எதிர்கட்சிகாரர்கள் பொதுவெளியில் காரசாரமாக, உரக்க விவாதிப்பர்.
வைகாசி 14, 15, 16 (மே 28, 29, 30) மிதுன ராசியில் குருவுடன் ஓட்டம். ஒரு காற்று ராசியில் ஒரு வாயு கிரகம் குருவுடன், சந்திரன் ஓட்டம். எனவே சில மேற்கு திசை ஊர்களில், மழை பெய்யக்கூடும்.
இந்த நாட்களில் ஒரு மதக்குரு சுகவீனம் அடைவார். வெளிநாட்டு செய்திகள் கலங்கடிக்கும். தங்க பத்திரம் சார்ந்த செய்திகள் வரும்.
வைகாசி 16, 17, 18 (மே 30, 31, ஜூன் 1) சந்திரன் கடக ராசியில் சஞ்சாரம். இங்கு செவ்வாய் நீசமாகி உள்ளார். வடக்கு திசையில் உள்ள ஊர்களில் மழை பெய்யக்கூடும். நெருப்புக்கிரகம் செவ்வாய், ஒரு நீர் ராசியில் நீசமாகி பலமற்று இருப்பதால் நீர் ஆதிக்கமும் பெருக்கமும் மிகும்.
இந்நாட்களில் நீச செவ்வாயுடன், சந்திரன் செல்வதால், செவ்வாய் நீச பங்கமாகிறார். எனவே ஆளும் கட்சியைக் குறிக்கும் செவ்வாய் இந்நாட்கள், நீசபங்க ராஜ யோகம் பெறுவதால், ஆளுங்கட்சி தெளிவாக இருக்கும். சில முக்கியமான முடிவுகளையும் எடுக்கும்.
வைகாசி 19, 20, 21 (ஜூன் 2, 3, 4) தேதிகளில் சந்திரன் சிம்ம ராசியில் கேதுவுடன் செல்கிறார். நெருப்பு ராசியில், கேது என்னும் நெருப்பு மற்றும் காற்று கிரகத்துடன், நீர் கிரகம் சந்திரன் பயணிக்கும் போது, ஓரளவு வெப்பம் குறையும்.
அரசு வகையை குறிக்கும். சிம்ம ராசியில் கேதுவுடன், சந்திரன் ஓடும்போது, அரசு அதிகாரிகள் நிறைய குழப்பத்திற்கு ஆளாவார்கள். சில மந்திரிகள் பண பதுக்கல், கள்ளப்பணம் போன்ற விஷயங்களில் விதிர் விதிர்த்து போய்விடுவர்.
வாக்கியப்படி, கும்பம் எனும் ஆகாயத் தத்துவம் கொண்ட ராசியில் சனி, ராகு சேர்க்கை உள்ளது. இந்த கும்ப ராசியில் சந்திரன் செல்லும்போது, சூழல் காற்று வீசக்கூடும். கும்ப ராசியை செவ்வாய் தனது எட்டாம் பார்வையாலும், குரு தனது 9-ஆம் பார்வையாலும் பார்க்கின்றனர். எனவே சேதாரமில்லாத காற்று வீசும்.
திருக்கணிதப்படி, மீன ராசியில், சுக்கிரன், சனியும் உள்ளனர். எந்த கிரக பார்வையும் இல்லை. மீன ராசியில் சந்திரன் செல்லும்போது, கட-ல் பெருங்காற்றும், கொந்தளிப்பான அலைகளும் இருக்கும். சில இடங்களில் கடல் உள் வாங்கும். இந்த நாட்களில் மீனவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.