வையின் கண்களில் நீர் ததும்பியது. இளவல் பேரரச பட்டமேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பாசத்துடன் அழைக் கப்பட்ட மன்னர்கள், தங்களுக்குள் பகைமை உள்ளத்துடன் இருப்பதை அறிந்தபோது, ஔவையின் உள்ளம் குமுறியது. தன் நிலையைப் பிறர் அறியாதிருக்க, தன் கூடாரத்திலிருந்த திரைச் சீலைகளை விலக்கி, வானில் குளிர்ந்த ஒளியினைப் பொழிந்துகொண்டிருந்த பால் வண்ண முழு நிலவைப் பார்த்தார். அது நீர்க்கோட்டம் அகன்ற வட்ட வடிவத்தில் கோட்டை கட்டியிருப்பதைப் பார்த்தார்.

தமிழகத்தில் சங்க காலங்களில் அறிவன், கணியன் என்ற இருவகை அறிஞர்கள் இருந்துள்ளனர். அறிவன் என்பவர்கள், வான்நிலை ஆய்வு களை ஆராய்ந்து, மழை வரப் போவதை மிகத் துல்லியமாக அறிந்து கூறும் ஆற்றல் பெற்றவர்கள்.

அவர்களது கூற்றுப்படி, முழுநிலவு நாளில் நிலவைச் சுற்றிலும் நிலவின் அருகிலேயே வெண்வட்டம் தோன்றியிருந்தால், இரவு விடிவதற்குள் பெருமழை பெய்யப்போகிறது என்றும் நிலவுக்கு அப்பால் வெண்வட்டம் இருந் தால், இதுவரை பெய்த மழை நின்று விட்டது, இனி உறுதியாக மழையே வராது எனவும் கூறுவர்.

முத்திறன்கொண்ட காடுவெட்டிப்படை!

Advertisment

ஆகவே, இன்று அதிகாலைப்பொழுதில் தொடரவிருக்கும் பெருவழிப் பயணத் திற்கு ஏற்ற மழையற்ற சூழல் இருப்பதை ஔவை உணர்ந்தார். இன்று இரவுப் பொழுது முழுவதும் கண்ணுறக்கம் வரப் போவதில்லை. எனவே கருங்குருவி கத்தும் கருக்கல் வேளையிலேயே தங்களது பயணத் தைத் தொடரவேண்டுமென முடிவெடுத் தார். கண்காணிகளிடம் இதைத் தெரிவித்து ஆயத்தப்படுத்திவிட்டு, மடவைப் பெண் களை அழைத்து, சந்தையூரில் வேறு என்ன செய்திகள் கிடைத்தன என்று வினவினார். அதில் ஒரு மடவை ஔவையி டம், தான் கண்டதைக் கூறலானாள்.

"உணவுச் சத்தி ரத்தில் சோழநாட்டு காடுவெட்டிப் படைத் தலைவனைப் பார்த் தேன். அவன் சத்திரத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தான். என்னிடமிருந்த மூங்கில் அரிசிச் சோற்றை சுவைத்துப் பார்க்கும்படி இலவசமாக அவனுக்குப் பரிமாறினேன். அப்போது அவன் அதைச் சாப்பிட்டு சுவைத்துவிட்டுக் கூறினான். "சுவைமிகுந்த உணவு தந்தமைக்கு நன்றி. நாங்கள் சோழநாட்டு காடுவெட்டிகள். நாங்கள் வெட்டுகிற பாதைகளில் இருக்கும் மூங்கில் அரிசி, தினை, சாமை அரிசிகள், தேன், மான் கொம்புகள், புலி நகங்கள், புலிப் பற்கள், மான் இறைச்சி வற்றல், யானைத் தந்தங்கள் போன்றவை நிறைய இருக்கின்றன. உனக்கு என்ன வேண்டுமோ, பண்டமாற்றின்றி இலவசமாக வாங்கிக் கொள்' என்றான். அப்போது நான் அவனைப் பற்றி விசாரித்தபோது, அவன் உறையூரில் வசித்துவரும் சோழர்களின் காடுவெட்டிப் படைத்தலைவன் என்றும்,இவனது படை முதிரமலையானின் யானைப்படை செல்வதற்கு, தடம் ஏற்படுத்தித்தர வந்திருப் பதாகவும் கூறினான்'' என்றாள்.

சங்ககாலத்தில் ஒரு நாட்டின்மீது போர் தொடுக்க போர்ப்படைகள் செல்வதற்கு முன் காடுவெட்டிப்படை முன்செல்லும். சங்ககாலத்தில் ஒரு நகருக்கும் இன்னொரு நகருக்கும் இடைப்பட்ட நிலங்கள் கடும் கானகப் பகுதிகளாகவே இருந்துள்ளன. படைகள் தடையின்றி செல்வதற்கு, அக் காடுகளின் வழியே சுத்தம்செய்து யானைகள், குதிரைகள், காலாட்படைகள், உணவுப் பொருட்கள், பாசறைக்குத் தேவையான பொருட்களை எடுத்துச்செல்ல தடம் ஏற்படுத்தித் தருவதில், இவர்கள் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். கரிகாலச்சோழன் தன்னிடம் இப்படிப் பட்ட பெரும் படையை வைத்திருந்தான் எனக் கூறுவர். தற்போது வளமிக்க நஞ்சை நிலமாகக் காட்சியளிக்கும் தஞ்சை டெல்டா பகுதிகள் ஆதிகாலத்தில் முத்தரையர் களுக்குச் சொந்தமான மேய்ச்சல் நிலங் களாகத்தான் இருந்திருக்கிறன. ஆடு, மாடுகள் மேய்க்கும் தொழில் செய்பவர் களாகத்தான் அப்பகுதி மக்கள் இருந்துள்ள னர். தற்போது மூப்பனார் என்று அழைக்கப் படுகின்றனர்.

Advertisment

vv

கரிகால் சோழனும், அவனது வழித் தோன்றல்களும்தான், தங்களது காடு வெட்டிப் படைகளைக்கொண்டு அங்கு வாழ்ந்த முத்தரையர்களை அகற்றிவிட்டு, முப்போகமும் நெல்விளையும் இடமாகவும், வாழை, தென்னை, கரும்பு, வெற்றிலை பயிர் செய்யக்கூடிய வளமிக்க நன்செய் நிலமாகவும் மாற்றினார்கள். சோழர்கள் நீர் மேலாண்மை செய்வதில் கைதேர்ந்த பெருவேளான்குடி மக்களாகவே இருந்துள் ளனர். காடுவெட்டிகளால் அழிக்கப்பட்ட காட்டுப்பகுதிகள் அனைத்தையும் கரிகால் சோழன், தனது நீர் மேலாண்மைத் திறத்தால் வளமாக்கியதால், கரிகால் பெருவளத்தான் என சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டான். ஆனால், தஞ்சைப் பகுதியில் வாழ்ந்த ஆதிகுடிமக்கள், அவனை காடுவெட்டிச் சோழன் என்றே அழைத்தனர்.

காடுவெட்டிப் படையானது, முத்திறன் படைத்த மூன்றுவித படைகளின் கூட்ட மைப்பாகச் செயல்பட்டது. மிக உயரமாக வளர்ந்த பெருமரங்களை, எந்தவித உயிர்ச் சேதமுமின்றி இலகுவாக வெட்டிச்சாய்க்கும் வல்லமை படைத்தவர்களும், பெரிய கடும் முற்புதர்களை, இருந்த இடமே தெரியாத வகையில், அவற்றை அழித்தொழிக்கும் திறன் படைத்தவர்களும், செல்லும் வழியில் தகர்க்கமுடியாத பெரும்பாறைகள், மேடு, பள்ளங்களை விரைந்து சமதளமாக்கும் புத்திக் கூர்மையுள்ளவர்களுமாகிய, முத்திறன்கொண்ட கூட்டுப்படையே காடுவெட்டிப் படையாகும்.

சங்ககாலச் சோழர்களின் கீழ் செயல் பட்ட இப்படையினர், ஆறு பாயாத இடங்களில் பல பிரிவு களாகப் பிரிந்துசென்று, தங்களால் செப்பனிடப்பட்ட காட்டு நிலப்பரப்புகளில், ஆங்காங்கே இருந்து புஞ்சைப் பயிர் வேளாண்மை செய்யலாயி னர். இவர்கள் சோழர்களுக்கு நில வரியாக, அரச கருவூலத்திற்கு தானிய மூட்டைகளையும், உயர மான மரங்கள் மற்றும் காடு களில் கிடைத்த அரிய பொருட் களையும் கப்பமாகக் கொடுத்து வந்தனர். இதன்மூலம் நீண்ட மரங்கள் சோழர் களுக்குக் கிடைத்ததால், அவற்றைக் கொண்டு கடலில் செல்லும் பெரிய மரக் கலன்கள் செய்யத் தொடங்கினர். இதனால் தான் சோழர்களுக்குக் கப்பல் படையை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன. பூம்புகாரில் துறைமுகத்தில் நிற்கும் அயல்நாட்டுக் கப்பல்களை செப்பனிடு வதற்கான மரங்கள் நிறைவாகக் கிடைத்த தால், தச்சர்களின் வாழ்கைத்தரம் சிறக்கலா யிற்று. காடுகளில் கிடைக்கும் பொருட்களின் ஏற்றுமதியும் அதிகமாயின. உலக வணிகர்கள் வியக்கும்வண்ணம் சோழர்களின் பூம்புகார் துறைமுகத்தில் கட்டுமானப் பணிகள் சிறக்க லாயின.

நினைவுச் சின்னமான பன்றி குத்திக்கல்!

புஞ்சை நிலங்களில் ஒரு காத தூரத்திற்கு ஒரு வீடாக, ஆங்காங்கே விவசாய நிலங்களில் காடுவெட்டிகள் குடியிருக்கத் தொடங்கினர்.

அதேசமயத்தில், அருகே யிருக்கும் காட்டுப் பகுதி களிலிருந்து வரும் காட்டுப் பன்றிகள், விவசாயப் பயிர் களைச் சேதம் செய்ததோடு, குறுக்கிடுபவர்களை முட்டிக் கொல்லவும் செய்தன. தங்கள் குழந்தை களைத் தாக்க வந்த பன்றி களை இடைமறித்து, தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக்கொண்டு, அவற்றைக் கொல்ல முற்படும்போது ஏற்பட்ட படுகாயங்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்கமுடியாமல் உயிர் பிரிந்த குடும்பத் தலைவனைப் புதைத்த இடத்தில் நடுகல் வைத்து வணங்கினர்.

இந்நடுகல், பன்றி குத்திக்கல் என்று இன்றளவும் வணங்கப்படுகிறது. இவ்வகை நடுகற்கள் ஐந்தடி உயரமும், மூன்று அடி அகலமும் கொண்டவையாக இருக்கும். இதில் பன்றியைக் கொன்றவரது உருவம், அவர் பன்றியை ஈட்டியால் குத்தியிருப்பது போலவும், அவருக்குப் பின்புறம் அவரது மனைவி, குழந்தைகள் இருப்பதுபோலவும் புடைப்புச் சிற்பங்களாக இருக்கும். ஒரு சில பன்றி குத்திக்கல்லில் காவலுக்காக அவர்கள் செல்லமாக வளர்த்துவந்த நாயின் சிற்பமும் காணப்படும்.

இவ்வாறான இழப்புகள் நடைபெறாமல் இருப்பதற்காக, அம்மக்கள் பன்றி முகத்துடன் கூடிய ஒரு தாய் தெய்வத்தை உருவகித்து வழிபடலாயினர். ஆதித்தமிழ்க்குடிகள் தாய்வழிச் சமுதாயமாக இருந்ததால், பெண் வடிவத்தைக் கொடுத்தனர். அதைக் காவல் தெய்வமாகக் கருதினர். அத்தெய்வத்தின் ஒரு கையில் புஞ்சைநிலக் கலப்பை, ஒரு கையில் கோடாரி, காக்கும் கரம், அருள்பாலிக்கும் கரம் ஆகிய நான்கு கரங்களுடன் சேர்ந்த வடிவத்தைக் கொடுத்து வணங்கினர். இதுவே தற்போது "வராகி' என்ற பிரசித்தியான தெய்வமாய் உள்ளது. இத்தெய்வத்துக்கு, மேய்ச்சல் நிலப் புல் வெளியை அழித்ததற்கான பாவங்கள் போவதற்கு கோரைக் கிழங்கையும், மரம் வெட்டியதால் அம் மரத்திலிருந்த தேன் கூடு களைக் கலைத்த பாவம் போவதற்கு தேனை அதில் கலந்துவைத்தும், தங்கள் வாழ்வில் வளமை செழித் தோங்க மஞ்சளை அரைத் தும், அறிவு நுணுக்கத்தை மேம்படுத்த ஞானப்பழம் என்றழைக்கப்படும் மாது ளம் பழவிதைகளை வைத்தும் வணங்கினார் கள். இது பகைவர் அழிக்கும் காவல் தெய்வமாக வும் கருதப்பட்டது. பின்னாளில் அனைவரும் வணங்கக்கூடிய, எதிரிகளை அழிக்கக் கூடிய காவல் தெய்வமாக வராகி கொண்டா டப்பட்டாள்.

விண்ணுலக சொர்க்கமான பூம்புகார்!

பூம்புகாரில் நாவாய்கள் என்று சொல்லக் கூடிய கப்பல்களில் சென்று வணிகம் செய்யும் பெருநாயக்கன் அல்லது மாநாய்கன் என்ற பெருவணிகர்கள் உருவாகினர். காடு வெட்டிகளால் தரப்பட்ட சந்தனம், அகில், தேக்கு, தேன் போன்றவை ஏற்றுமதி செய்யப் பட்டன. அவர்கள் கடலில் செல்லும் போது புயல், மழைச் சீற்றங்களால் கப்பலில் செல்பவர்களின் உயிர், பணமதிப்புமிக்க பொருட்கள் பேரிழப்பைச் சந்தித்துவிடக் கூடாது என அஞ்சி, பெருநாயக்கன் வீட்டு உறுப்பினர்கள், பௌத்த மத மழைக் கடவுளான இந்திரனை சிரத்தையோடு வழிபடத் தொடங்கலானார்கள். இது பின்னாளில் கடல் வாணிபம் சென்று நல்ல முறையில் மீண்டு வந்ததற்கு நன்றிக் கடனாக, காவிரி ஆற்றங்கரையில் வாணிபக் குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இன்னிசையோடு இணைந்த பெருவிழாவாகக் கொண்டாடப் பட்டது. பின்னாளில் அது, சோழ மன்னர் கள் குடும்பங்களும் வெளிநாட்டு வணிகர் களும் சேர்ந்து கொண்டாடும் உலகப் புகழ் மிக்க விழாவாக மாறியது. பூம்புகார் பணம் செழிக்கும் இடமாகவும், மன்னவனுக்கு சுங்க வரியால் கருவூலமே நிரம்பிவழியும் இடமாகவும், ஒரு விண்ணுலக சொர்க்க நகரமாகவும் மாறிக்கொண்டு வந்ததால், சோழன் அவ்வூரை இரண்டாம் தலை நகரமாக, வாழ்வின் வசந்தத்தை வெளிநாட்டு கலைப்பொருட்களோடு சேர்ந்த மாளிகை அமைத்துக் கொண்டாட ஆரம்பித்தான். இந்திர விழாவில் இன்னிசை, நடனம், பரத்தை யர்களின் வளர்ச்சி, அரிய மதுவகைகளின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போனது.

இந்த மாற்றங்கள் காடுவெட்டிகளின் கடின உழைப்பால் கிடைத்த செல்வத்தால் அடைந்த பலன்கள்.

சோழர்களின் கப்பல் படை!

சோழ மன்னர்களுக்குக் கீழ் பணியாற்றி வந்த காடுவெட்டித் தலைவர்கள் மெல்ல மெல்ல சோழர்படைத் தளபதிகளாகவும், கருவூலக் காப்பாளர்களாகவும் மாறினர். அவர் களால் காடுகள் அழித்து செப்பனிடப்பட்ட பகுதிகளின் குறுநில மன்னர்களாக, சோழர் களுக்குக் கீழ் கப்பம் கட்டி. ஆட்சி செய்யத் தொடங்கினர். காலப்போக்கில் சங்க காலச் சோழர்களின் வாரிசுகள் ஆளுமைத்திறன் குன்றியிருந்த சமயத்தில், படிப்படியாகச் சோழ நாட்டை, தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து காஞ்சியைத் தலைநகரமாகக்கொண்டு ஆட்சிசெய்த பல்லவ மன்னர்களாக மாறினர்.

இவர்கள் காலத்தில்தான், ஞானத்தைத் தரும் வராகி இருக்கும் இடத்தில், பௌத்தக் கடவு ளான சரசுவதியை, ஞானத்தைத் தருபவளாக, இந்து மதப் புராணங்களில் சேர்த்து எழுதப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இதேபோல், பல்லவர்கள் ஆட்சியில் குறுநில மன்னர்களாக மாறிய சோழ வம்சத்தினர், பல்லவ வாரிசுகள் ஆளுமை குறைந்த நேரம் பார்த்து வெகுண்டெழுந்து, சோழ சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவி, வளமிக்க தஞ்சையை மையமாகக்கொண்டு விரிவுபடுத்தலானார்கள். உலகம் வியக்கும் கப்பல் படையை உருவாக்கினர். இம்மாற்றங் களுக்கு, பலவகைகளில் காடுவெட்டிகளும் ஒரு காரணமாக இருந்தனர். இப்படிப்பட்ட காடுவெட்டிப்படைத் தலைவனின் வருகையை அறிந்த ஔவை, தன் அறிவுக் கூர்மையுடன் யோசித்தபோது, எவ்வளவு விரைவில் பாண்டிய இளவலின் காதலியைச் சந்திக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் அங்கு சென்றாக வேண்டும், போரைத் தடுத்தாகவேண்டும் என உறுதிபூண்டார்.

ஔவையின் பெருவழிப் பயணம் தொடரும்...

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்