வைணவத்தில் ஸ்ரீரங்கத்தை "பூலோக வைகுண்டம்' என்று பெருமையாகச் சொல்வதுண்டு. வைகுண்டத்திலுள்ள விரஜா நதியின் புண்ணியத்திற்கு ஒப்பானது காவேரி நதி என்றும், வைகுண்டத்திற்கு ஒப்பானது ஸ்ரீரங்கம் என்பதை- "காவேரி விரஜா சாயே வைகுண்டம் ரங்கமந்திரம்

ஸ்ரீவாசுதேவோ ரங்கேச பிரத்யக்ஷம் பரமம் பதம்'

என்ற சுலோகத்தின்மூலம் அறியலாம்.

ஸ்ரீரங்கநாதப் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சிதரும் மற்றொரு புண்ணியத் தலம்தான் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில், காவேரி நதிக்கரையில் அமைந் துள்ள ஸ்ரீரங்கப்பட்டணம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருக்கோவில். கௌதம முனிவர் வழிபட்டதால் இந்த இடத்தை கௌதம க்ஷேத்திரம் என்றும் அழைப்பதுண்டு.

Advertisment

தென்னிந்தியாவின் கீழ்திசையில் திருச்சி ஸ்ரீரங்கத் திலும், தென்திசையில் கர்நாடக மாநில சிவசமுத்திரத்திலும், மேற்கு திசையில் ஸ்ரீரங்கப் பட்டணத்திலும் சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் எனும் திருப்பெயரில் எழுந்தருளி யுள்ளார்.

ff

தமிழ்நாட்டில் திருவரங்கத்தில் ஸ்ரீமந் நாராயணன் பள்ளி கொண்டுள்ளதையும், அங்கு நடைபெறும் விழாக்களைப் பற்றியும் சங்க இலக்கிய நூலான சிலப்பதிகாரத்தில், மதுரைக் காண்டம் காடுகாண் காதையில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோன்று உறையூர் முதுகூத்தனார் எனும் புலவர் அகநானூறு (பாடல் எண் 137) நூலில் எழுதிய பாடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர 11 ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு பாடல் பெற்ற ஒரே கோவில் என்கிற பெருமை ஸ்ரீரங்கத்திற்கு மட்டுமே உண்டு.

இக்ஷ்வாகு வம்சத்தில் (ஆரிய வம்சம்)

இராமபிரானுக்கும், ரங்கநாதப் பெருமாளுக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றி பெரியாழ்வார்-

"மன்னுடைய விபீடணற்கா

Advertisment

மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த

என்னுடைய திருவரங்கற் கன்றியும்

மற்றொருவர்க்கு ஆளாவரே'

என "திருவாய் மொழி'யில் பாடியுள்ளார்.

ஸ்ரீரங்கப்பட்டணம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருக்கோவிலை முற்காலத்தில் பிரம்மதேவன் உட்பட பல தேவர்கள் வழிபட்டுள்ளனர். மேலும் அவரே நாரத முனிவருக்கு பாஞ்சராந்திர வழிபாட்டு முறைகளை உபதேசித்தார் எனவும் கோவில் தல புராணம் தெரிவிக்கிறது.

முற்காலத்தில் ஸ்ரீமந் நாராயணனின் அருள்வேண்டி காவேரி ஆற்றங்கரை யிலுள்ள இவ்விடத் தில் சப்தரிஷிகளில் ஒருவரான கௌதம முனிவர் தவம் புரிந்தார். முனிவரின் தவத்தை மெச்சி ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீ சங்கநாதப் பெருமாள் வடிவில் காட்சியளித்தார். இதனால் மனமகிழ்ந்த கௌதம முனிவரும், மற்றவர்களும் பலவாறு ஸ்தோத்திரம் செய்தனர். காவேரி ஆற்றங் கரையிலுள்ள துளசி வனத்திலிருக்கும் எறும்புப் புற்றின்கீழ் சிலை வடிவில் தான் இருப்பதாக அசரீரியாகத் தெரிவிக்க, அதன் படி கௌத மகரிஷி மேஷமாதம், வளர்பிறை சப்தமி திதியன்று புற்றின்கீழிருந்து சிலையை வெளியே எடுத்தார்.

நாரத முனிவர், கௌதம முனிவருக்கு பாஞ்சராத்திர வழிபாட்டு முறையைக் கற்றுக் கொடுத்து, அதன்படி தொடர்ந்து வழிபாடு நடக்க ஏற்பாடு செய்யுமாறு கூற, இன்றளவும் அதே பாணியில் பூஜைகள் நடப்பது சிறப்பம்சமாகும். நாரத முனிவர் உபதேசித்த நாள் "ஸ்ரீரங்கஜெயந்தி' எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது.

மிகப் பழமையும் புனிதமும் வாய்ந்த இக்கோவிலை சுமார் ஒன்பதாம் நூற்றாண் டில், இப்பகுதியை ஆண்ட கங்க வம்சத் தைச் சேர்ந்த திருமலையா என்னும் சிற்றரசர் முதன்முதலில் கோவிலுக்கான திருப்பணியைச் செய்ததாகத் தெரிகிறது. அதன்பின்னர் இப்பகுதியை ஆண்ட- குறிப்பாக விஜயநகர, ஹொய்சாள, நாயக்கர் மன்னர்கள், முஸ்லிம் மன்னர்களான ஹைதர் அலி, திப்புசுல்தான், மைசூர் ஒடையார் மன்னர் கள் பல்வேறு வகையில் திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

வேற்று மதத்தைச் சார்ந்த ஹைதர் அலி, ஸ்ரீரங்கநாதப் பெருமாள்மீது அளவுகடந்த பக்தியும், மரியாதையும் வைத்திருந்தனர்.

மேகத்தை ஒத்த கருணைக் கடலான ஸ்ரீ இராமானுஜர் மைசூர் சீமையைச் சார்ந்த தொண்டனூ ருக்கு முதலில் தம் சீடர்களுடன் வந்தார்.

அதன்பின்னர் திரு நாராயணபுரம் (மேல்கோட்டை) யாத்திரையை முடித்துக்கொண்டு ஸ்ரீரங்கப்பட்டணம் வந்தார். அந்த சமயத்தில் ஹொய் சாள வம்ச மன்னரான விட்டலதேவன் (விஷ்ணு வர்த்தனன்) ஜைன மதத்தைச் சார்ந்தவர். இருப்பினும் இம்மன்னர் இராமானுஜருக்கு தானமாக வழங்கிய பொன், பொருள், எட்டு கிராமங்களை ஸ்ரீரங்கப்பட்டணம் பெருமாள் கோவில் கைங்கரியத்திற்காக முழுவதையும் கொடுத்தார்.

ஸ்ரீரங்கப்பட்டணம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவிலில் அழகிய சிற்பத்துடன் பெரிய துளசி மாடம் ஒன்று அமைந்துள்ளது. இதன் தெய்வீகத்தன்மை காண்போரை பிரம்மிக்க வைக்கிறது. அதற்கு சற்று எதிரே கல்யாணி எனும் பெயரில் சிறிய குளம் போன்ற சதுர வடிவிலான நீர்த்தொட்டி இருக்கிறது. இது அன்றைய தொழில் நுட்பத்திற்குச் சான்றாக சொல்லப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க திப்பு சுல்தான் வாழ்ந்த அரண்மனை, இருட்டு மாளிகை (பாதாளச்சிறை) போன்ற இடங்கள் கோவில் வளாகத்திலேயே உள்ளன. இவை யாவும் சுற்று லாப் பயணிகளுக்கும் வரலாற்று ஆர்வலர் களுக்கும் பக்தர்களுக்கும் சிறந்த இடமென்றே கூறலாம்.