பேரருள் புரியும் ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீசர்! - கோவை ஆறுமுகம்

/idhalgal/om/pererarul-buri-othakakal-mandapam-putitangkandisar-coimbatore-arumugam

"வாள்போல் பகைவரை அஞ்சற்க

அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.'

-திருவள்ளுவர்

வாளைப்போல வெளிப் படையாகப் பகைமை காட்டும் பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் உறவினர்போல கூடவே இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு கட்டாயம் அஞ்சத் தான் வேண்டும்.

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த பழங்குடி'யினரா கிய தமிழர்களின் வீரத்தின் சின்னமாக விளங்குவது வாள். நம் இதிகாசங்களிலும் புராணங்களிலும் பழைய இலக்கியங்களிலும் பல இடங்களில் வாள் இடம்பெறுகிறது.

இராவணன் சிறந்த சிவபக்தன். "சந்திர ஹாசம்' என்ற வாளை சிவனிடமிருந்து பெற்றான். பறவையான ஜடாயுவுடன் போரிடும்போது போருக்குரிய அறநெறியைத் தன்னையறியாமல் மீறினான் இராவணன். உடலுறுப்பான அலகுகொண்டு போரிட்ட ஜடாயுவின் சிறகுகளைத் தன் சந்திரஹாச வாளால் வெட்டி வீழ்த்தினான். அவ்வகையில் அறம்தவறிப் போரிட்டதால் அதன்பின் அந்த வாள் தன் சக்தியை இழந்துவிட்டதென்று இராமாயணம் சொல்கிறது.

சிவபெருமான் இராவணனிடம் வாளைக் கொடுக்கும்போது, "தர்ம நியாயங்களுக்கு உட்பட்டுப் போரிடும் வரையில்தான் இந்த வாள் சக்தி உடையதாக இருக்கும்; என்றேனும் அதர்ம நெறியில் வாளைப் பிரயோகித்தால் அதன்பின் அதன் ஒளி மங்கி சக்தியை இழந்துவிடும்' என்று சொல்லியே கொடுத்தாராம்.

விக்ரமாதித்தன் கதையில் ஒரு சம்பவம். நள்ளிரவு வேலையில் வேதாளத்தை சுமந்து நடந்துகொண்டிருந்த விக்ரமாதித்தனிடம் வேதாளம் இந்தக் கதையை சொல்ல ஆரம்பித்தது.

"சந்திரசேனன் என்ற மன்னன் நாகபுரி என்ற நாட்டை ஆண்டுவந்தான். அவனுடைய மகளும் இளவரசியுமான ரூபாவதிக்குத் திருமணம் செய்துவைக்க ஒரு இளவரசனைத் தேடிக்கொண்டிருந்தான். இதையறிந்த ரூபாவதி தந்தை தேர்ந்தெடுக்கும் இளவரசனைத் திருமணம் செய்துகொள்ள முடியாதென்றும், எந்த இளவரசன் தன் திறமையை நிரூபிக்கி றானோ அவனையோ மணந்துகொள்வேன் என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டாள். அவளின் முடிவையேற்று சந்திரசேனன் மற்ற நாட்டு இளவரசர்களுக்கு தன் மகளின் சுயம் வரத்தில் பங்கேற்கும் அழைப்புவிடுத்தான்.

அந்த சுயம்வரத்தில் உபேந்திரன், யோகேந்திரன், தனஞ்செயன் ஆகிய வேறுவேறு நாட்டு இளவரசர்கள் கலந்துகொண்டார்கள். அதில் முதலில் உபேந்திரன் ரூபாவதியிடம், தனக்கு எந்தவொரு விஷயத்திலும் அதன் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அறியக்கூடிய திறனிருப்பதாகக் கூறினான். இரண்டாவதாக வந்த யோகேந்திரன் தன்னிடம் தான் தயாரித்த அற்புத ரதம் இருப்பதாகவும், அது நிலம், நீர், ஆகாயம் என்று மூன்று வழியிலும் பயணம் செய்யக்கூடியது என்றும் கூறினான். மூன்றாவ தாக வந்த தனஞ்செயன் தான் உருவாக்கிய அற்புத வாள் ஒன்று தன்னிடம் இருப்பதாகக் கூறினான்.

d

இதையெல்லாம் கேட்ட ரூபாவதி தான் திருமணம் செய்யப்போவது யார் என்பதை மறுநாள் கூறுவதாகக் கூறிவிட்டு அந்தப்புரம் சென்றாள். ஆனால் மறுநாள் ரூபாவதி அரண்மனையில் எங்கு தேடியும் காணவில்லை என்னும் செய்தி வந்தது.

அப்போது இளவரசன் உபேந்திரன் தன் முக்கால ஞானத் திறனைக் கொண்டு, ரூபாவதி சில அரக்கர்களால் கடத்தப்பட்டு யாருமே எளிதில் செல்லமுடியாத மலையுச்சியில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அங்கு செல்வதற்கான வரைபடத்தையும் வரைந்து கொடுத்தான்.

இதைக்கேட்ட யோகேந் திரன் தன்னுடைய அதிசய ரதத்தின்மூலம் யாருமே செல்ல முடியாத அந்த மலைக்கோட்டைக்குச் செல்லமுடியும் என்று கூறினான்.

"வாள்போல் பகைவரை அஞ்சற்க

அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.'

-திருவள்ளுவர்

வாளைப்போல வெளிப் படையாகப் பகைமை காட்டும் பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் உறவினர்போல கூடவே இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு கட்டாயம் அஞ்சத் தான் வேண்டும்.

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த பழங்குடி'யினரா கிய தமிழர்களின் வீரத்தின் சின்னமாக விளங்குவது வாள். நம் இதிகாசங்களிலும் புராணங்களிலும் பழைய இலக்கியங்களிலும் பல இடங்களில் வாள் இடம்பெறுகிறது.

இராவணன் சிறந்த சிவபக்தன். "சந்திர ஹாசம்' என்ற வாளை சிவனிடமிருந்து பெற்றான். பறவையான ஜடாயுவுடன் போரிடும்போது போருக்குரிய அறநெறியைத் தன்னையறியாமல் மீறினான் இராவணன். உடலுறுப்பான அலகுகொண்டு போரிட்ட ஜடாயுவின் சிறகுகளைத் தன் சந்திரஹாச வாளால் வெட்டி வீழ்த்தினான். அவ்வகையில் அறம்தவறிப் போரிட்டதால் அதன்பின் அந்த வாள் தன் சக்தியை இழந்துவிட்டதென்று இராமாயணம் சொல்கிறது.

சிவபெருமான் இராவணனிடம் வாளைக் கொடுக்கும்போது, "தர்ம நியாயங்களுக்கு உட்பட்டுப் போரிடும் வரையில்தான் இந்த வாள் சக்தி உடையதாக இருக்கும்; என்றேனும் அதர்ம நெறியில் வாளைப் பிரயோகித்தால் அதன்பின் அதன் ஒளி மங்கி சக்தியை இழந்துவிடும்' என்று சொல்லியே கொடுத்தாராம்.

விக்ரமாதித்தன் கதையில் ஒரு சம்பவம். நள்ளிரவு வேலையில் வேதாளத்தை சுமந்து நடந்துகொண்டிருந்த விக்ரமாதித்தனிடம் வேதாளம் இந்தக் கதையை சொல்ல ஆரம்பித்தது.

"சந்திரசேனன் என்ற மன்னன் நாகபுரி என்ற நாட்டை ஆண்டுவந்தான். அவனுடைய மகளும் இளவரசியுமான ரூபாவதிக்குத் திருமணம் செய்துவைக்க ஒரு இளவரசனைத் தேடிக்கொண்டிருந்தான். இதையறிந்த ரூபாவதி தந்தை தேர்ந்தெடுக்கும் இளவரசனைத் திருமணம் செய்துகொள்ள முடியாதென்றும், எந்த இளவரசன் தன் திறமையை நிரூபிக்கி றானோ அவனையோ மணந்துகொள்வேன் என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டாள். அவளின் முடிவையேற்று சந்திரசேனன் மற்ற நாட்டு இளவரசர்களுக்கு தன் மகளின் சுயம் வரத்தில் பங்கேற்கும் அழைப்புவிடுத்தான்.

அந்த சுயம்வரத்தில் உபேந்திரன், யோகேந்திரன், தனஞ்செயன் ஆகிய வேறுவேறு நாட்டு இளவரசர்கள் கலந்துகொண்டார்கள். அதில் முதலில் உபேந்திரன் ரூபாவதியிடம், தனக்கு எந்தவொரு விஷயத்திலும் அதன் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அறியக்கூடிய திறனிருப்பதாகக் கூறினான். இரண்டாவதாக வந்த யோகேந்திரன் தன்னிடம் தான் தயாரித்த அற்புத ரதம் இருப்பதாகவும், அது நிலம், நீர், ஆகாயம் என்று மூன்று வழியிலும் பயணம் செய்யக்கூடியது என்றும் கூறினான். மூன்றாவ தாக வந்த தனஞ்செயன் தான் உருவாக்கிய அற்புத வாள் ஒன்று தன்னிடம் இருப்பதாகக் கூறினான்.

d

இதையெல்லாம் கேட்ட ரூபாவதி தான் திருமணம் செய்யப்போவது யார் என்பதை மறுநாள் கூறுவதாகக் கூறிவிட்டு அந்தப்புரம் சென்றாள். ஆனால் மறுநாள் ரூபாவதி அரண்மனையில் எங்கு தேடியும் காணவில்லை என்னும் செய்தி வந்தது.

அப்போது இளவரசன் உபேந்திரன் தன் முக்கால ஞானத் திறனைக் கொண்டு, ரூபாவதி சில அரக்கர்களால் கடத்தப்பட்டு யாருமே எளிதில் செல்லமுடியாத மலையுச்சியில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அங்கு செல்வதற்கான வரைபடத்தையும் வரைந்து கொடுத்தான்.

இதைக்கேட்ட யோகேந் திரன் தன்னுடைய அதிசய ரதத்தின்மூலம் யாருமே செல்ல முடியாத அந்த மலைக்கோட்டைக்குச் செல்லமுடியும் என்று கூறினான்.

அப்போது உபேந்திரனும், தனஞ்செயனும் யோகேந்திரனின் அந்த ரதத்தில் ஏறிக்கொண்டனர். உடனே அந்த ரதம் பறந்து அந்த மலையுச்சியை அடைந்தது. அங்கிருந்த அர்க்கர்கள் மூன்று இளவரசர்களையும் தாக்க முற்பட்டனர்.

அப்போது தனஞ்செயன் தன்னிடமிருந்த அற்புத வாளைக்கொண்டு அரக்கர்களுடன் சண்டையிட்டு வென்று, அங்கு சிறைவைக்கப்பட்டிருந்த ரூபாவதியை மீட்டான். பின்பு நால்வரும் அந்த ரதத்தில் நாகபுரிக்குத் திரும்பினர். இப்போது அம்மூன்று இளவரசர்களும் ஆளாளுக்கு தங்களுடைய திறனால்தான் இளவரசி மீட்கப்பட்டதாக கூறி தனக்குதான் ரூபாவதியை திருமணம் செய்யும் உரிமையுள்ளது என உரிமை கோரினர்.

விக்ரமாதித்தா... இந்த மூவரில் யாருக்கு உண்மையில் ரூபாவதியை மணந்துகொள்ள உரிமையுண்டு?'' என வேதாளம் கேட்டது.

"உபேந்திரன் மலையில் இளவரசி சிறைவைக்கப்பட்டிருப்பதையும், அங்கு செல்வதற்கான வழியை மட்டும் கூறினான்.

யோகேந்திரன் அந்த மலைக்குச் செல்ல தன் ரதத்தைக் கொடுத்து மட்டும் உதவினான்.

dd

ஆனால் தனஞ்செயன் தன் அற்புத வாளைக்கொண்டு வீரத்தோடு அத்தனை அர்க்கர்களுடன் சண்டையிட்டு அவர்களைக் கொன்று, இளவரசி ரூபாவதியை மீட்டான். தன்னை நம்பியவர்களை தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பவன்தான் சிறந்த மனிதன். எனவே இளவரசன் தனஞ்செயனே ரூபாவதியைத் திருமணம் செய்துகொள்ளும் தகுதியுடையவன்'' என்ற விக்ரமாதித்தனின் பதிலைக் கேட்டதும், வேதாளம் அவனது பிடியிலிருந்து தப்பிப் பறந்துசென்றது.

இராவணனைப்போல் அதர்ம நெறியில் வாழாமல், தனஞ்செயனைப்போல் இறை நம்பிக்கையோடு தர்மநெறியில் செயலாற்றுகின்ற மன்னர்களால் உருவாக்கப் பட்ட அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்றதொரு திருத்தலம்தான் ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீசர் திருக்கோவில்.

இறைவன்: புற்றிடங்கொண்டீசர்.

இறைவி: பூங்கோதை நாயகி.

ஆகமம்- பூஜை: திருமுறைநெறியில்.

புராணப் பெயர்: ஒற்றைக்கால் மண்டம்.

ஊர்: ஒத்தக்கால் மண்டபம்.

தலவிருட்சம்: வில்வமரம்.

தீர்த்தம்: நொய்யல் தீர்த்தம்.

சுமார் 866 ஆண்டுகள் பழமைவாய்ந்த தும், கொங்கு சோழ மன்னர்களால் கட்டப்பட்டதும், நொய்யல் ஆற்றின் தென்கரையில் அமையப்பெற்றதும், சோழ நாட்டிலுள்ள திருவாரூருக்கு நிகரான பெருமையோடு விளங்குவதும், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நான்குகால பூஜைகள் நடப்பதும், இன்னும் பல்வேறு சிறப்புக் களைப் பெற்றதொரு திருத்தலம்தான் புற்றிடங்கொண்டீசர் ஆலயம்.

"முற்றைக்கால் உலகெங்கும் முன்னே தோன்றி

மூவர்க்கும் தேவனாய் மூத்தார் தாமே

அற்றைக்கால் நீழற்கீழ் அமர்ந்த நால்வர்

அறநெறியைத் தாம்கேட்க அளித்தார் தாமே

பொற்றைக்கால் மேட்டதனைப் பொலிவாய் ஆக்கிப்

புற்றிடத்துக் கோயிலாக் கொண்டார் தாமே

ஒற்றைக்கால் மண்டபத்தின் ஓங்கு கோவில்

உறைவிடமாக் கொண்டருளும் உம்பர் தாமே.'

மகாவிஷ்ணு குருக்ஷேத்திரம் என்னும் இடத்தில் இந்திரன் முதலானவர்களுடன் சேர்ந்து செய்த யாகத்தில் தோன்றிய சிவதனுசுவைப் பயன்படுத்தி அனைவரை யும் வெற்றிகொண்டு, பராசக்திபுரம் என்னும் இடத்தை வந்தடைந்தார். களைப் பில் வில்லைத் தரையிலூன்றி, அதன்மீது தலைசாய்த்து உறங்கத் தொடங்கினார்.

அப்போது தேவர்கள் புற்றாக மாறி வில்லை அரித்தனர். வில்லில் நாண் அறுந்து, விஷ்ணுவின் தலை துண்டிக்கப்பட்டது. பயந்துபோன தேவர்கள் சிவனை வழிபட்ட னர். அப்போது அங்கு தோன்றிய சிவ பெருமான் விஷ்ணுவை மீண்டும் உயிர்ப்பித்தார். புற்றிலிருந்து உருவான பெருமான் என்பதால் புற்றிடங்கொண்ட பெருமான் என்ற பெயரோடு, பஞ்சபூதத் தலங்களில் பூமி தலமாகிய திருவாரூரில் அருள்பாலித்து வருகிறார் என்பது வரலாறு. இத்தகைய சோழ நாட்டுத் திருவாரூருக்கு நிகரான தலமாக கொங்கு நாட்டிலுள்ள சிறப்பானதொரு தலம்தான் ஒத்தக்கால் மண்டபம் சிவாலயம்.

கொங்கு நாட்டின் கோவைப் பகுதி பண்டைய நாட்களில் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தை அரணாகக்கொண்ட காடு சூழ்ந்த முல்லை நிலமாக இருந்த காரணத் தால், கால்நடை வளர்ப்பு சமுதாயமே மேலோங்கியிருந்தது. கால்நடைகளே செல்வமாகக் கருதப்பட்ட காலங்களில் அவற்றைக் காத்தல் பெரும்பணியாயிருந் தது. கால்நடைகளைக் கவர்தல், அவற்றைக் காத்தலின் பொருட்டு வீரர்கள் போரிடு வது இயல்பான நிகழ்வாயிருந்தது. அது போலவே கால்நடைகளைக் காட்டு விலங்குகளிடமிருந்தும் காப்பதற்காகக் காவல் வீரர்கள் விலங்குகளோடு சண்டையிட்டு விலங்குகளைக் கொல்லுத லும், சண்டையின் போது வீரர்கள் இறந்துபடுதலும் மிகுதியாக நிகழ்ந்தன. இவ்வகை வீரர்களுக்கு நடுகல் எடுப்பித்து வழிபடுதல் நாட்டார் மரபு.

dd

இவ்வகை நடுகற்கள் கோவைப் பகுதியில் புலிக்குத்திக்கல் என்றபெயரில் உக்கடம் பகுதியிலும், அதற்குத் தெற்கே ஒத்தக்கல், அதற்கும் தெற்கே சூலக்கல் என்ற பெயரில் வழங்கிவந்தது. இடைக் கால கொங்கு சோழரின் ஆட்சியின்கீழ் கொங்குப்பகுதி வந்தபின்னர் வேளாண்மை செழிப்புற்றது. கொங்குசோழர் ஆட்சிக்கு முன்புவரை கோவைப்பகுதி ஒரு நகரப் பகுதியாக இருந்திருக்கவில்லை. கோவைக்கருகிலுள்ள பேரூரே பெரியதொரு நகரமாக இருந்தது. கொங்கு நாட்டில் நாட்டுப் பிரிவுகளில் பேரூர் நாடும் ஒன்றாக இருந்தது.

கொங்குச் சோழர்கால கல்வெட்டுப்படி கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கோவைப்பகுதி கோவன்புத்தூர் என்று புதியதாக ஒரு ஊர் அமைக்கப்பட்டதாகவும், அது பேரூர் நாட்டில் இருந்ததாகவும் செய்தி காணப்படுகிறது.

காடழித்து ஊராக்கப்பட்ட கோவன்புத்தூர், நாயக்கர் காலத்திலும் காடுகள், கால்நடை வளர்ப்பு, கால்நடைகளை விலங்குகளிடமிருந்து காத்தல் ஆகிய கூறுகளைக் கொண்டிருந்தது. எனவே மேற்படி உக்கடம் புலிக்குத்திக் கல் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட நடுகல்லாகும். உக்கடம் நடுகல் மதுரைவீரன் சாமி என்ற பெயரில் வழிபடப்பட்டுவருகிறது. ஒருவகையில் வழிபாடு காரணமாகவே இந்த நடுகல் இதுவரை அழிவுக்குட்படாமல் ஒரு தொல்லியல் எச்சமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது எனலாம். அந்த 24 நாடு பிரிவுகளில் வாயரைக்கா நாடும் ஒன்று. இந்த வாயரைக்கா நாடு பிரிவில் வருவதுதான் (ஒத்தக்கல்) ஒத்தக்கால் மண்டபம். நூறு கால் மண்டபம், ஆயிரம் கால் மண்டபம் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதென்ன ஒற்றைக்கால் மண்டபம்?

காமதேனு பேரூருக்கு வந்த காலத்தில் பல தலங்களில் வழிபட்டதாக பேரூர் புராணம் சொல்கிறது. அந்தவகையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புற்றுக்குத் தானே பால் சொரிந்து வழி பட்டதாகத் தெரிகிறது.

அவ்விடத்தில் (நடுகல்) ஒத்தக்கல் வைத்தார்கள். அதுவே இரண்டு பெருவழிகள் சந்திக்கும் இடமாக ஒத்தக்கல் மண்டபம் என விளங்கி, நாளடைவில் மருவி ஒத்தக்கால் மண்டபம் என்றானது. இந்த வாயரைக்கா நாட்டில் ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு, பெரிய களந்தை, செஞ்சேரிமலை, பட்டணம் முதலான சிறப்புமிகு ஊர்கள் அடங்கும்.

கொங்கு நாட்டை ஆட்சிசெய்த சோழர்களில் ஒருவரான கரிகாற்சோழன் 36 பெரும் கோவில்களையும், 300-க்கும் மேற்பட்ட சிறிய கோவில்களையும் கட்டியதாக சோழன் பூர்வப் பட்டயம்மூலம் அறிகிறோம்.

கேரளாவிலிருந்து வேலந்தாவளம், ஒத்தக்கால் மண்டபம் வழியாக பல்லடம் செல்லும் பெருவழிப்பாதையும், அதைப்போல் கோவையிலிருந்து கிணத்துக்கடவு வழியாக பொழில் வாய்ச்சி (இன்றைய பொள்ளாச்சி) செல்லும் பெருவழிப்பாதையும் சந்திக்குமிடமான ஒத்தக்கால் மண்டபம் வரலாற்று சிறப்பு மிக்க மையமாக விளங்கியது. அதனால்தான் கொங்கு சோழ மன்னன் இவ்விடத்தை தேர்வுசெய்து புற்றிடங்கொண்டீசர் ஆலயத்தை நிர்மாணித்தான். சோழநாட்டிற்கும் கொங்கு நாட்டிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.

சோழநாட்டில் உள்ளதைப்போலவே கொங்கு நாட்டிலும் திருக்கோவில்களும், இறைவனது திருப்பெயர்களும் அமைந்துள்ளன. சோழநாட்டில் சிதம்பரம்- கொங்குநாட்டில் பேரூரிலுள்ள மேலைச் சிதம்பரம்; சோழநாட்டில் தஞ்சை- கொங்குநாட்டில் மேலத்தஞ்சை (மன்னீஸ்வரர்- அன்னூர்); சோழநாட்டில் வாலி வழிபட்டதலம் வட குரங்காடுதுறை என்றும், சுக்ரீவன் வழிபட்டது தென் குரங்குகாடுதுறை என்றும் வழங்கப்படுகின்றன. கொங்குநாட்டில் வாலி வழிபட்டதலம் வாலீஸ்வரம் இன்றைய சேவூர் மற்றும் கோவைக் குறிச்சி; சுக்ரீவன் வழிபட்ட தலம் குரங்குத்தளி இன்றைய பெரியபாளையம் ஆகும். சோழநாட்டில் திருப் பழனம் இருப்பதைப்போலவே கொங்குநாட்டில் பெரும்பழனநல்லூர் (பெருமாநல்லூர்) உண்டு. சோழநாட்டில் காலகாலேஸ்வரர் (திருக்கடவூர்); கொங்குநாட்டில் காலகாலேஸ்வரர் ஆலயம் (கோவில்பாளையம்). சோழநாட்டில் புற்றிடங்கொண்டீசர் (திருவாரூர்), கொங்கு நாட்டில் புற்றிடங்கொண்டீசர் ஒத்தக்கால் மண்டபம் என்ற முறையில உள்ளன.

பண்டைக்காலத்தில் காமதேனு வழிபட்ட சிறப்புக்குரியது புற்றிடங்கொண்டீசர் ஆலயம். இதன் பகுதியில் ஒரு நீரோடையும், சாம்பல் மேடு என்கிற மயானமும், வடபகுதியில் நவகோடி நாராயணப் பெருமாள் கோவிலும், அங்காள பரமேஸ்வரி ஆலயமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருகாலத்தில் சிறப்புடன் விளங்கிய புற்றிடங்கொண்டீசர் கோவில் கால மாற்றத்தாலும் முறையான பராமரிப் பில்லாததாலும் சிதிலடைந்து நின்றுவிட்டது. சுற்றியுள்ள பல ஊர் பக்தர்கள் ஒன்றுகூடி கோவிலின் நிலைகண்டு சிந்தித்தனர். முடிவில் திருக்கோவில் இறைவனையே தலைவராகக்கொண்டு, "நிறைநிலா வழிபாட்டு மன்றம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினர். முதல்கட்டமாக பாலாலயம் அமைத்து தெய்வத் திருமேனிகளை அங்கு எழுந்தருளச் செய்து வழிபடத் தொடங்கி னர்.

13-7-1990 அன்று திருப்பணிகள் தொடங்கப்பெற்று நிறைநிலா வழிபாட்டு மன்றத்தின் பெருமுயற்சியாலும், மெய்யன்பர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், தக்கார் மற்றும் நிர்வாகிகள் ஒத்துழைப்புடனும் 5-4-1995 அன்று திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடை பெற்றது. இதையடுத்து இரண்டாவது கும்பாபிஷேகம் 23-4-2007 அன்று நடைபெற்றது. 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மூன்றாவது திருநெறிய தீந்தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 6-2-2022 அன்று கோலாகலமாக நடைபெற்று பொலிவுடன் விளங்குகிறது.

சிறப்பம்சம்

ப் சிவராத்திரியன்று திருவாசக முற்றோதலுடன் நான்குகால பூஜைகள் நடைபெறும். இங்கு நடைபெறும் பிரதோஷ விழாவானது பிற சிவாலயங்களில் நடைபெறும் விழாவிலிருந்து மாறுபட்டதாகும். புற்றிடங் கொண்டீசருக்கு முற்றிலும் தமிழ்வேதப் பாடல்கள் மன்ற அன்பர்களால் இசைக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டுவருகிறது.

ப் இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை விண்ணப்பமாக எழுதி அதற்கென வைக்கப்பட்டுள்ள வேண்டுதல் பெட்டியில் இடுகின்றனர். அவை நாள்தோறும் மாலை 4.00 மணிக்கு, வேள்வி வழிபாட்டுடன் 1,008 மலர்தூவி அர்ச்சிக்கும் போற்றி வழிபாட்டின்போது இறைவனிடம் விண்ணப்பிக்கப்படுகின்றன. தேவாரத் திருமுறைகள்மூலம் விண்ணப்பிக்கும்போது வேலைவாய்ப்பு அமைய, திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் பெற, நோய் நொடி நீங்க என நியாயமான கோரிக்கைகள் எதுவாயினும் அதற்கு நல்ல பலன் கிடைப்பதாக பக்தர்கள் மனதாரக் கூறுகின்றனர்.

ப்இத்தலத்தில் ஆச்சரியமான சம்பவங்கள் பல நடந்துள்ளன. முதல் கும்பாபிஷேகத்தின்போது, பல ஆண்டுகள் பாலாலயத்தில் இருந்த மூலவரின் திருமேனியை மேலே எடுத்து புதியதாகக் கட்டப்பட்ட மூலாலயத்துக்கு கொண்டுசெல்லும்போது, பாலாலயமூர்த்திக்குக் கீழேயிருந்து ஒரு நல்ல பாம்பு வெளிவந்து ஆசீர்வதித்துச் சென்றது. இரண்டாவது கும்பாபிஷேகத்தின் போதும் வேள்விக்கு முன்புள்ள வேதிகையில் வந்த நல்ல பாம்பு வேதிகையைச் சுற்றிவந்தும், பின்பு அதற்குள்ளிருந்து எட்டிப் பார்த்தும், அதன்மூலம் புற்றிடங்கொண்டீசர் அருள்பாலித்த காட்சியும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "பலமுறை இவ்வாறு நடந்தாலும் நாகம் யாரையும் எந்த தொந்தரவும் செய்ததில்லை'' என்கிறார் ஆலயப் பிரதான அர்ச்சகரான பொன்முத்து. மேலும் அவர் கூறுகையில், "வடநாட்டில் உள்ளதுபோல் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பிராகாரத்திலுள்ள தீர்த்தலிங்கேஸ்வரர் நந்தி வாகனத்திற்கு அபிஷேகம் செய்து பூஜிக்கும்வகையில் அமைந்திருப்பது சிறப்பான ஒன்று'' என்றார்.

ப் இங்குள்ள பைரவர் மிகுந்த வரப்ரசாதி. எமனின் திசையான தென்திசை நோக்கி தனிச் சந்நிதிகொண்டு அருள்கிறார். தேய்பிறை அஷ்டமியில் சிறப்புப் பூஜை உண்டு.

திருக்கோவில் அமைப்பு: தென்திசை உயர்ந்தாற்போல் குமிட்டிபதி மலைப்பாறைகளுடன், வடதிசை தாழ்ந்தாற்போல் நொய்யல் நதி ஓட, இயற்கையே வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது இவ்வாலயம். கிழக்கு நோக்கியபடி ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது.

உள் நுழைவாயிலைக் கடந்தவுடன் மூலவர் புற்றிடங்கொண்டீசர் நாகாபரணத்துடன் அருள்பாலிக்கிறார். கோஷ்ட தெய்வங்கள் முறைப்படி உள்ளன.

மூலவர் சந்நிதியை அடுத்து வடபாகத்தில் பூங்கோதையம்மன் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. புன்னகை ததும்பும் முகத்துடன் கருணையே வடிவாக அபய ஹஸ்தம் காட்டி நின்ற கோலத்தில் அருளாட்சி புரிகின்றாள்.

சதாசர்வகாலம் ஈஸ்வர நாமம் ஒலித்துக் கொண்டிருக்கின்ற ஒத்தக்கால் மண்டபம் பூங்கோதை நாயகி சமேத புற்றிடங்கொண்டீசர் ஆலயத்திற்கு பிரதோஷநாளில் செல்வோம்; பிரகாச வாழ்வு வாழ்வோம். தொடர் வெற்றிகளைக் காண்போம்.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 3.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், புற்றிடங்கொண்டீசர் திருக் கோவில், ஒத்தக்கால் மண்டபம் (அஞ்சல்), மதுக்கரை வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம். பின்கோடு: 641 032.

பூஜை விவரங்களுக்கு: ஆலய பிரதான அர்ச்சகர் சிவ. பொன்முத்து, அலைபேசி: 99652 26274.

அமைவிடம்: கோவை- பொள்ளாச்சி பிரதான சாலையில், கோவையிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பேருந்து, நகரப் பேருந்து வசதி நிறைய உள்ளது.

படங்கள்: போட்டோ கருணா

om011022
இதையும் படியுங்கள்
Subscribe