சான்றோர் நிறைந்த தொண்டை மண்டலத்தில் புகழ்மிக்க சிவாலயங்கள் பல உள்ளன. அவற்றுள் பூனை பூஜித்த விசேஷ திருத்தலமும் உண்டு. கிராதமார் ஜாலபுரம் என்று அழைக்கப்பட்ட இப்பழம்பதி தற்போது "வில்லிப்பாக்கம்' என்று வழங்கப்பெறுகிறது. பூனையோடு வேடுவனும், கங்காதேவியும், மற்ற தேவர்களும்கூட இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.
உலகோரது பாவங்களைப் போக்கி புண்ணியமளிக் கும் கங்காதேவி ஒருசமயம் திருக்கயிலாயத்தில் கயிலாய நாதரை வணங்கி, "பகீரதனுக்காக என்னைப் பூவுலகில் பிரவகிக்கக் கட்டளையிட்டீர். அதன்படியே காசி க்ஷேத்திரத்தில் நதி வடிவில் பாய்ந்து, என்னுள் மூழ்கி எழுவோருக்கெல்லாம் அவர்கள் செய்த பாவங்களைப் போக்கி புண்ணியமளிக்கிறேன். ஆனால் அவர்களின் பாவங்களை நான் ஏற்றுத் துன்புறுகிறேன். அந்தப் பாவங்களைக் களைந்திட அருள்புரியவேண்டும்'' என வேண்டினாள். அதற்கு சிவபெருமான், "காஞ்சி மாநகரின் தென்கிழக்கு திசையில் ஐந்து காத தூரத்தில் ஒரு திருக்குளமும், அதற்கருகே தானேதோன்றிய மகாலிங்க மும் உள்ளன. அங்குசென்று நீராடி, அந்த மகாலிங்கத்தைப் பூஜித்து பாவங்களிலிருந்து விமோசனமடைவாய்'' என அருள் மொழிந்தார்.
அதன்படி கங்கை இங்குவந்து, தாமரை கள் நிறைந்த புண்டரீக புஷ்கரணியில் நீராடி, இத்தல சிவ லிங்கத்தை வழிபட்டு, பேரானந்தமும் பெரு மகிழ்வும் அடைந் தாள். மேலும் பாவங் கள் நீங்கி புண்ணிய மும் பெற்றாள்.
முன்னொரு காலத்தில் இமயத்தில் ஈசன், கிரிராஜன் குமாரியான மலைமகளைத் திருமணம் செய்யும்போது, அனைத்து தேவர்களும், ரிஷிகளும், ஏனைய அனைவரும் ஈசனது திருமண வைபவத்தைக் கண்டு அருள்பெற்றிட இமயமலைக்கு வந்தனர். இதனால் இமயம் பாரம் தாங்காமல் அழுந்த, தென்புலம் மேலெழும்பியது. இதன்காரணமாக உலகின் சகல ஜீவராசிகளும் பயமுற்றன. சிவனார் அகத்திய முனிவரை அழைத்து, தென்திசை சென்று பூமியின் பாரத்தை சமன் படுத்த கட்டளையிட்டார்.
அதன்படி அகத்தியர், தனது கமண்டலத்தில் பாண லிங்கங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு தென்திசை நோக்கிப
சான்றோர் நிறைந்த தொண்டை மண்டலத்தில் புகழ்மிக்க சிவாலயங்கள் பல உள்ளன. அவற்றுள் பூனை பூஜித்த விசேஷ திருத்தலமும் உண்டு. கிராதமார் ஜாலபுரம் என்று அழைக்கப்பட்ட இப்பழம்பதி தற்போது "வில்லிப்பாக்கம்' என்று வழங்கப்பெறுகிறது. பூனையோடு வேடுவனும், கங்காதேவியும், மற்ற தேவர்களும்கூட இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.
உலகோரது பாவங்களைப் போக்கி புண்ணியமளிக் கும் கங்காதேவி ஒருசமயம் திருக்கயிலாயத்தில் கயிலாய நாதரை வணங்கி, "பகீரதனுக்காக என்னைப் பூவுலகில் பிரவகிக்கக் கட்டளையிட்டீர். அதன்படியே காசி க்ஷேத்திரத்தில் நதி வடிவில் பாய்ந்து, என்னுள் மூழ்கி எழுவோருக்கெல்லாம் அவர்கள் செய்த பாவங்களைப் போக்கி புண்ணியமளிக்கிறேன். ஆனால் அவர்களின் பாவங்களை நான் ஏற்றுத் துன்புறுகிறேன். அந்தப் பாவங்களைக் களைந்திட அருள்புரியவேண்டும்'' என வேண்டினாள். அதற்கு சிவபெருமான், "காஞ்சி மாநகரின் தென்கிழக்கு திசையில் ஐந்து காத தூரத்தில் ஒரு திருக்குளமும், அதற்கருகே தானேதோன்றிய மகாலிங்க மும் உள்ளன. அங்குசென்று நீராடி, அந்த மகாலிங்கத்தைப் பூஜித்து பாவங்களிலிருந்து விமோசனமடைவாய்'' என அருள் மொழிந்தார்.
அதன்படி கங்கை இங்குவந்து, தாமரை கள் நிறைந்த புண்டரீக புஷ்கரணியில் நீராடி, இத்தல சிவ லிங்கத்தை வழிபட்டு, பேரானந்தமும் பெரு மகிழ்வும் அடைந் தாள். மேலும் பாவங் கள் நீங்கி புண்ணிய மும் பெற்றாள்.
முன்னொரு காலத்தில் இமயத்தில் ஈசன், கிரிராஜன் குமாரியான மலைமகளைத் திருமணம் செய்யும்போது, அனைத்து தேவர்களும், ரிஷிகளும், ஏனைய அனைவரும் ஈசனது திருமண வைபவத்தைக் கண்டு அருள்பெற்றிட இமயமலைக்கு வந்தனர். இதனால் இமயம் பாரம் தாங்காமல் அழுந்த, தென்புலம் மேலெழும்பியது. இதன்காரணமாக உலகின் சகல ஜீவராசிகளும் பயமுற்றன. சிவனார் அகத்திய முனிவரை அழைத்து, தென்திசை சென்று பூமியின் பாரத்தை சமன் படுத்த கட்டளையிட்டார்.
அதன்படி அகத்தியர், தனது கமண்டலத்தில் பாண லிங்கங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு தென்திசை நோக்கிப் புறப்பட்டார். வழியில் சிவபூஜைக்குரிய காலத்தில் தனது கமண்டலத்திலுள்ள பாண லிங்கங்களை ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து (நிறுவி) பூசனை புரிந்துவந்தார். காஞ்சிபுரத்தை அடைந்து ஏகம்பனை வழிபட்டு, பின் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை வழிபட்டார். அதைத் தொடர்ந்து தெற்குநோக்கி நடந்தார். ஒரு வில்வ வனத்தையடைந்தார்.
அப்போது உச்சிவேளை வந்தது. சிவ பூஜைக் குரிய நேரம். தீர்த்தம் வேண்டி சுற்றிலும் பார்த்தார். அங்கு வில்வக்காட்டில் ஒரு தடாகம் தென்பட்டது. அதில் நீராடிவிட்டு, அங்கிருந்த கொன்றை மரத்தடிக்குச் சென்று பார்க்க, ஒரு தான்தோன்றி லிங்கத்தைக் கண்டார். அந்த லிங்கத்தைப் பூஜித்து மகிழ்ந்தார். தான் அங்கு வந்ததன் அடையாளமாக காசி விஸ்வநாதரையும் அருகில் பிரதிஷ்டை செய்தார் அகத்திய மாமுனி.
தான் வழிபட்ட லிங்கம் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட வேண்டுமென இறைவனிடம் பிரார்த்தனைசெய்து, பிரியாவிடை பெற்றார் கும்பமுனி.
இந்த சரிதையை நாரதர் கூற, திருமால், பிரம்மா, தேவேந்திரன் மற்றும் சந்திரன் ஆகியோர் கேட்டறிந்தனர்.
கயிலாயத்தின் வாயில் காப்பாளராகத் திகழும் நந்திதேவருக்கு இரண்டு சீடர்கள் உண்டு. ஒருவன் காந்தன்; மற்றொருவன் மகா காந்தன். இவ்விருவரும் நந்திதேவரின் நித்திய சிவபூஜைக் குரிய திரவியங்களை சேகரித்துத் தருவது வழக்கம். அப்படி ஒருநாள் பூவுலகில் ஒரு தடாகக் கரையில் வெண் மந்தாரைச் செடிகள் இருப்பதைக் கண்டனர்.
உடனே அங்குசென்று அந்த மந்தாரை மலர்களைப் பறித்தபோது, மலர்கள் தவறி நீரிலும், தடாகக் கரையிலும் விழுந்தன. கரையில் விழுந்த பூக்கள் கிளிகளாகவும், நீரில் விழுந்த பூக்கள் நீர்வாழ் இனங்களாகவும் மாறின. இதைக்கண்டு வியந்து, மீண்டும் மீண்டும் மலர்களைப் பறித்து, நீரிலும் கரையிலும் வீசி விளையாடினர்.
நந்திதேவர் தனது பூஜைக்கு மலர்கள் இல்லாமல் போகவே கோபமுற்று, நேராகத் தனது சீடர்கள் இருக்கும் இடத்திற்கே வந்தார். சீடர்களில் ஒருவனான காந்தன் பூனைபோல் விழிப்பதையும், மகா காந்தன் பூப்பறிக்கும் துரட்டுக் கோலை ஏந்தி விழித்துக்கொண்டு நிற்பதையும் கண்டு, காந்தனைப் பூனையாகவும், மகா காந்தனை வேடுவனாகவும் ஆகும்படி சபித்தார்.
இருவரும் அஞ்சி நடுங்கி நந்தியெம் பெருமானை வணங்கி, சாபவிமோசனம் வேண்டி நின்றனர்.
நந்திதேவர் மனமிரங்கி, "பூலோகத்தில் காஞ்சி மாநகருக்கு தென்கிழக்கில் ஐந்துகாத தூரத்தில் புண்டரீக புஷ்கரணி என்ற தீர்த்தமும், அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வர லிங்கமும் உள்ளது. அங்குசென்று ஒருவரையொருவர் அறியாமல் தீர்த்தத்தில் நீராடி, அகத்திய லிங்கத் தைப் பூஜித்து, அங்கு சிறிது காலம் தங்க வேண்டும். அப்போது சிவலிங்கத்தின் அருகில் ஒரே காலத்தில் நீங்கள் இருவரும் சந்திக்கும்பொழுது உங்கள் சாபம் நீங்கும்'' என்று அருள்புரிந்தார்.
அதன்படி இருவரும் பூவுலகில் பூனையும், வேடுவனுமாகத் தோன்றி, தீர்த்த நீராடி, ஒருவரையொருவர் அறியாமல் அகத்தீசரை பூஜித்து வந்தார்கள். ஒரு நாள் காந்தன் பொழுது விடியும் முன்னமே ஸ்நானம் செய்து, சிவபூஜை செய்துகொண்டிருந்தான். அச்சமயம் வேடுவனான மகா காந்தன் நீராடி விட்டு, புஷ்பங்களோடு சிவலிங்கத்தின் அருகில் வந்தபோது, பூனை இருப்பதைக் கண்டு கோபமுற்று, பூனையை நோக்கி அம்பை விடுத்தான்.
வேடன் தொடுத்த அம்பு பூனைமேல் படாமல் சிவலிங்கத்தின்மீது பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட வேடுவனும், பூனை யும் உடனே சுய உருவத்தை அடைந்தனர்.
நடுக்கமுற்ற இருவரும், சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டு, ரட்சிக்க வேண்டினர். ஈசனும் திருவருள் புரிந்தார்.
அதுமுதற்கொண்டு இத்தல ஈசர் கிராத மார்ஜாலீஸ்வரர் (கிராதன்- வேடுவன்; மார்ஜாலம்- பூனை) என அழைக்கப் பெற்றார். இப்பதி "கிராதமார்ஜாலபுரம்' என வழங்கப்பெற்றது. இத்தல புராண வரலாறுகள் யாவும் கல்வெட்டின் வாயிலாகக் கிடைக்கப் பெற்றவையாகும்.
மேலும், திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன் ஆகியோரும் இத்தலப் பெருமானைப் பூஜித்துப் பேறு பெற்றுள்ளனர்.
சாலையை ஒட்டி ஆலயம் பிரம்மாண்ட மாக அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய தோரணவாயில். அதனுள் நுழைந்திட நேராக வாகனக் கொட்டடியும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன. கிழக்கு நோக்கியவாறு இறைவன் சந்நிதி. முன்னே பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்திதேவர். அடுத்ததாக 32 கால் மண்டபம் அழகிய சிற்பங்களோடு அழகூட்டுகிறது. எதிர்ப்புறம் தென்முகம்கொண்ட அம்பிகை சந்நிதி ஒரு சுற்றுடன் உள்ளது. கருவறையுள் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறாள் அன்னை முத்தாம்பிகை. வடமொழியில் ஸ்ரீ மௌக்திகாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள்.
32 கால் மண்டபம் கடந்து நேராகச் செல்ல, மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்னும் அமைப்பில் சுவாமி சந்நிதி அமைந்துள் ளது. மூலஸ்தானத்தில் கிராதமார்ஜாலீஸ்வரர் சுயம்பு வடிவாய் அருள்பாலிக்கிறார். அகத்தீஸ் வரர் என்றும் போற்றப்படுகின்றார்.
இரண்டு பிராகாரங்கள்கொண்ட இவ் வாலயத்தின் உள் பிராகாரத்தை வலம் வருகிறோம். முதலில் சப்தமாதர்கள் கணபதி யுடன் குடிகொண்டுள்ளனர். கணபதி, தட்சிணாமூர்த்தி என கோஷ்ட மாடங்களில் கலையெழில் மிகுந்த தெய்வச் சிலைகளைக் கண்ணுறுகிறோம். தட்சிணாமூர்த்திக்கு அருகில் சிவனின் 64 ரூபங்களில் ஒன்றான ஏகபாதமூர்த்தியின் சிற்பம் கருவறை வெளிச் சுவரில் அற்புதமாகப் புடைக்கப்பட்டுள்ளது. தென்மேற்குத் தல கணபதி தனியே சந்நிதி கொண்டுள்ளார். அடுத்தபடியாக மேற்குத் திருமாளிகை பத்தியில் இத்தல சிவனைப் பூஜிக்கும்படியாக கங்கையும், எதிரில் வேடுவனும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளனர்.
அருகே பூனையும் உள்ளது. இவர்களுக்கு முன்னே சிவலிங்கமும் அம்பிகை சிலையும் உள்ளன.
அடுத்ததாக காசிவிஸ்வநாதர் அன்னை விசாலாட்சியுடன் கோவில் கொண்டுள்ளார். துர்க்கை இங்கு ஆறு கரங்களைக்கொண்டு ஷட்கர துர்க்கையாக எழில் கொஞ்சுகிறாள். கந்தனும் இங்கு தனியே சந்நிதிகொண்டு அருள்புரிகிறார்.
அமைதியும் தூய்மையும் ஒருங்கே பெற்ற கோவில். இங்கு சென்றால் ஆத்மசுகம் கிடைப்பது உறுதி.
கருவறைச் சுவர்களில் சோழர்கால பழந் தமிழ்க் கல்வெட்டுகள் ஏராளமாய்க் காணப் படுகின்றன. புராணப் பெருமைமிகுந்த இத்தலம் தேவாரத்தில் இடம்பெற்றிருக்கக்கூடும் என்பது தமிழறிஞர்களின் கூற்றாகும்.
இங்கு இரண்டு விசேஷங்கள் உண்டு. இக் கோவிலில் எப்போதும் ஒரு பூனை இருந்து கொண்டே இருக்கும். தினமும் இறைவனுக்குப் படைத்த சாதத்தை அப்பூனை உண்பதற்கு வைக்கிறார் அர்ச்சகர்.
அதுபோல் இக்கோவிலைத் தூய்மை செய்பவர்கள் இன்றுவரை வேடுவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வியப்புக்குரியதாகும்.
இங்கு இரண்டாம் கரிகால் சோழனால் திருப்பணிகள் பல செய்யப்பட்டுள்ளது.
சூனாம்பேடு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த வர்கள் இவ்வாலயத்தை நிர்வகித்துவருகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூனாம்பேடு ஜமீன் வழிவந்தவர்களால் திருப்பணி செய்து, குடமுழுக்கு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
தல தீர்த்தமாக புண்டரீக புஷ்கரணியும், தல விருட்சமாக சரக்கொன்றையும் திகழ்கின்றன. அனைத்து சிவாலய விசேடங்களும் இங்கு சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் மாசி மகத்தன்று சுவாமி திருவீதி யுலாவும், சமுத்திரத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
தினசரி இரண்டுகால பூஜைகள் நடத்தப்படு கின்றன. தினமும் காலை 7.00 மணிமுதல் 11.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலய நடை திறந்திருக்கும்.
முற்பிறவிச் சாபங்களையெல்லாம் களைந்திடும் இப்பெருமானை அகத்தியச் சித்தர் வழிபட்டதால், தீராத நோய்களையும் தீர்த்துவைக்க வல்லவராவார். மாங்கல்ய பலம்கூட்டி, தீர்க்க சுமங்கலியாக வாழவைப்ப வள் இத்தல நாயகி. வாய் பேசமுடியாத விலங்குகளால் ஏற்படும் தோஷங்களைத் தீர்த்து வைத்திடும் தலம் வில்லிப்பாக்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
சென்னை- புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், கடப்பாக்கத்திற்கு அடுத்துவரும் வெண்ணங்குபட்டிலிருந்து சூனாம்பேடு செல்லும் சாலையில், ஆறு கிலோமீட்டர் தூரத்தில், சூனாம்பேட்டிற்குமுன்பு வில்லிப் பாக்கம் அமைந்துள்ளது. மதுராந்தகம், செய்யூர், மரக்காணம், மேல்மருவத்தூர் ஆகிய இடங்களிலிருந்து சூனாம்பேடு வர பேருந்து வசதியுள்ளது.