ஏற்கெனவே சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மரை தரிசித்த நாம், அவருக்கு நேர்க் கோட்டில் மேற்கே அமைந்திருந்த பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மரை இரண்டாவதாக தரிசித்து அவரது பெருமைகளை அறிந்து கொண்டோம். அடுத்து இவருக்கும் நேர் மேற்கே பரிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மரை தரிசித்து முடிப்பதன் மூலம் பக்தர்களின் வேண்டுதல்கள், கோரிக் கைகள் முழுமைபெறும் என்ற அசையாத நம்பிக்கை உள்ளது. அதன் அடிப்படையில் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் குறித்த பெருமை களை- வரலாறுகளை- அவர் பக்தர்களைக் காத்தருளும் நிகழ்வுகளை காணப் போகிறோம்.
நரசிம்மரைப் பற்றி 18 புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. நரசிம்ம அவதாரம் என்பது மகாவிஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரம் என்பது அனைவரும் அறிந்தது. இரணியனிடமிருந்து தனது பக்தன் பிரகலாதனைக் காப்பாற்றுவதற்காகத் தோன்றிய அவதாரம். அந்த அவதார மகிமையினால் கவரப்பட்டவர்கள் பல்லவ மன்னர்கள். இவர்கள் பல நரசிம்மர் கோவில்களை உருவாக்கினார்கள். அப்படிப் பட்ட ஆலயங்களில், கடுமையான பிரம்மச் சரிய விரதமிருந்து பூஜை செய்துவருகிறார் கள் அர்ச்சகர்கள்.
தென்னகத்தின் நரசிம்மர் வழிபாடு அதிகமாக இருந்ததற்கு ஏராளமான சான்று கள் உள்ளதாக கல்யாண் கீதா என்பவர் பெரிய அளவில் ஆய்வுசெய்து வெளிப்படுத்தி யுள்ளார். அதில் குறிப்பாக தென்னகப் பகுதியான ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் நரசிம்மருக்கு அதிக அளவு கோவில்கள் எழுப்பியுள்ளனர். மேலும் "கூகுள்' மேப்மூலம் இப்பகுதியில் மட்டும் சுமார் 800 நரசிம்மர் கோவில்கள் உள்ளன. விஞ்ஞானரீதியில் இதை கவனித்தால், இதில் பழமைவாய்ந்த தொன்மை பொதிந்திருப்பதை புரிந்துகொள்ளமுடியும். உக்கிர தெய்வமான நரசிம்மர் கிராமங்களை, அதன் எல்லைகளை, விவசாய வயல் களை, வீடுகளைக் காக்கும் கடவுள் என்ற நம்பிக்கையில் அவ்வாலயங்கள் நிறுவப்பட்டுள்ளன. நரசிம்மர் வழிபாடு நடந்ததற்கான இலக்கியச் சான்றுகளும் ஏராளம்.
இரணியன், பிரகலாதன் வரலாற்றை கடுவன் இளவெயி னானர், என்ற புலவர் பரிபாடலில் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் சங்க இலக்கிய காலத்திலேயே நரசிம்மர் வழிபாடு தமிழகத்தில் இருந்துள்ளது. நரசிம்ம அவதாரம் பற்றி முதன்முதலில் முழுமையாக சொன்னவர் கம்பன். அடுத்து திருத்தக்கத்தேவர். இவர் தனது சீவக சிந்தாமணியில் இரணியன் குறித்து "தெம்மிறை எய்தி னான்' என்று போற்றியுள்ளார். அவருக்கு நரசிம்மர் நேரடியாகக் காட்சிக்கொடுத்தார் என்றும் இலக்கிய வரலாற்றில் கூறப்பட்டுள் ளது ஆதிசங்கரர் ஒரு தீ விபத்தில் சிக்கிக்கொள்ள, அவரது கரம் தீயால் பாதிக்கப்பட்டபோது லட்சுமி நரசிம்மரை வேண்டி துதிக்க, அவரை நரசிம்மர் காப்பாற்றியதாக வரலாறுகள் உள்ளன. அதை மெய்ப்பிக்கும்வகையில் ஆதிசங்கரர், "கராபலம்ப ஸ்தோத்திரம்' என்னும் துதி பாடியுள்ளார்.
அதன்பிறகு பல்லவர் காலத்தில் நரசிம்ம பக்தி மேலும் மேலும் வளர்ந்தது. பல்லவ மன்னர்கள் நரசிம்ம அவதாரத்தின்மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். இதன்காரணமாக அவர்கள் தங்கள் பெயர்களை சிம்மவர்மன், சிம்ம விஷ்ணு, நரசிம்ம வர்மன், ராஜசிம்மன், மகேந்திரவர்மன். என நரசிம்ம பகவான் பெயர் தங்களுக்கு சூட்டிக்கொண்டனர். தொண்டை மண்டலப் பகுதியில் பல்லவர்கள் ஆட்சி பறந்து விரிந்திருந்த பகுதி முழுவதும் நரசிம்மரின் அளவற்ற பக்தி நெறியைப் பரப்பினார்கள். புதிய புதிய நரசிம்மர் கோவில்களையும் எழுப்பினார்கள். நரசிம்மரை வணங்கினால் வெற்றி, புகழ், சிறப்பு, அளவற்ற பலன்கள் கிடைக்கும். துன்பம், பாவங்கள் நீங்கும். இவர்களைப் பின்பற்றி சோழர்களும் தங்களது வீரத்தை நிலைநாட்ட நரசிம்மர் வழிபாட்டை ஆதரித்துள்ளனர். நாயக்க வம்சர்களின் ஆட்சிக் காலத்தில் நரசிம்மர் வழிபாடு தமிழகத்தில் மேலும் பிரபலம் அடைந்துள்ளது. இவர்கள் பல பாகவத மேளாக்கள் நடத்தி, அதன்மூலம் பிரகலாதன் சரித்திரம், நரசிம்ம அவதாரம் ஆகியவற்றை நாட்டிய நாடகமாகவும். அரங்கேற்றப்பட்டு தமிழக மக்களிடையே கொண்டுசென்றுள்ள னர். இதன்மூலம் நரசிம்ம வழிபாடு தமிழக மெங்கும் பரவியது என்கிறார் கல்யாண் கீதா.
அப்படிப்பட்ட நரசிம்மர் பரிக்கல் கிராமத் தில் லட்சுமி நரசிம்மராக ஆட்சிசெய்து வருகிறார். இவ்வூரில் பரிகலா சுரனை நரசிம்மர் வதம் செய்தார். அதனடிப்படையில், அஸ்வம் என்றால் குதிரை. பாஷாணம் என் றால் கல். இதை இணைத்து பரிகலப்புரம் என்று பெயர் உருவாகி, பின்பு மக்கள் பேச்சு வழக்கில் மருவி பறிக்கல் என்று அழைக் கப்படுகிறது. இந்த ஊரில் நடைபெற்ற புனித தன்மைகள் கொண்டநிகழ்வுகனின் அடிப் படையில், தன் மரபின் வழிவரும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இப்பகுதியை ஆட்சிசெய்த வசந்தராஜன் என்ற மன்னன் இவ்வாயத்தை முதல்முதலில் எழுப்பியுள் ளார். இதற்கான புராணகால சம்பவத்தை அறிந்துகொள்ளவேண்டும் அல்லவா? திருவதிகை (பண்ருட்டி அருகே உள்ளது.
இப்பகுதியில் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி கோட்டையை அமைத்து ஆட்சிசெய்து வந்தனர் அரக்கர் வம்சத்தைச் சேர்ந்த தாரகட்சன், கமலாட்சன், வித்யுன் மாலி ஆகிய சகோதரர்கள். இவர்கள் தேவர்கள், முனிவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் துன்புறுத்திவந்தனர்.
இந்த மூன்று அரசர்களுக்கும் தளபதியாக இருந்தவன் பரிகலாசுரன். இவன் மனித உடலும் குதிரை முகமும் கொண்டவன். இவனது கொடுமைகள் தாங்க முடியாத முனிவர்கள் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் அந்த அசுரர் களையும் அவர்களது முப்புரக் கோட்டையையும் எரித்து சாம்பலாக்கினார். (அப்போது மகாவிஷ்ணு அம்பாக இருந்து சிவபெருமானுக்கு உதவி செய்ததாக திருவதிகை புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்து அசுரர்களின் தளபதியான பரிகலா சுரன் தப்பித்து பஞ்ச கிருஷ்ண ஆரண்யம் என்று சொல்லக்கூடிய வனப்பகுதி (தற்போது திரு முதுகுன்றம் என்று அழைக்கப்படும் விருத்தாசலம்) சென்று மறைந்துகொண்டான், அப்போது இப்போதைய பரிக்கல் பகுதியை ஆட்சிசெய்துவந்து வசந்த ராஜன் எனும் குறுநில மன்னன் திருமால்மீது மிகவும் பக்தி கொண்டவர். இந்தப் பகுதியில் நரசிம்மப் பெருமாளுக்கு ஆலயம் எழுப்புவதற்கான பணிகளை செய்துகொண்டிருந்தார். அப்போது எதிரிகள் படையெடுத்து வந்து தாக்காத வாறு தனது ஆட்சிக்கு உட்ப்பட்ட பகுதிகளில் நான்கு புறமும் காவலுக்கு வீரர்களை நிறுத்திவைத்திருந்தார் அதில் ஒரு பிரிவினரை கோவில் திருப்பணியில் ஈடுபடச்செய்தார் மன்னர். இதைப் பயன்படுத்திக் கொண்ட பரிகலாசுரன் தன் மாயப்படைகளுடன் இப்பகுதிக்கு வந்து குதிரைகளையும், ஆடு, மாடு, கன்றுகள், மனிதர்கள் என அனைவரையும் கொடூரமாக அழித்தான். வசந்தரராஜ மன்னரின் உற்றார்- உறவினர்களை எல்லாம் அழித்தான். இதைக் கண்டு சந்தோஷமாக ஆலயம் எழுப்பும் இந்த நல்ல நேரத்தில் இப்படிப்பட்ட சம்பவங்களா? என்று வேதனையடைந்த மன்னன் ஆலயப் பணியைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு தனது ராஜகுரு வாமதேவரிடம் சென்று ஆலோசனை கேட்டார். வாமதேவர் வேறொரு இடத்தில் ஆலயம் எழுப்புமாறு மனுசாஸ்திர முறைகளை எழுதிக்கொடுத்தார். அதோடு மன்னன் வசந்தராஜன் கையில் கங்கணம் ஒன்றைத் தயாரித்துக் கட்டினார்.
மன்னர் எல்லாருடனும் அமர்ந்து யாகம் நடத்தினால் பரிகலாசுரனால் இடையூறுகள் ஏற்படும். அதனால் வசந்தராஜன் தனித்திருந்து யாகம் செய்ய வேண்டும் என்று கூறி, அவரின் பாதுகாப்பு கருதி அவருக்கு அமிர்தராஷ்ர எனும் மந்திரங்களை போதித்து, யாகம் நடைபெறும் இடத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில் ஒரு புதர் அமைத்து, அதற்குள் மன்னனை அமரவைத்து, அங்கிருந்த படி யாகத்தினை நடத்த கூறினார். அப்போது "எந்த இடையூறுகள் ஏற்பட்டாலும் அந்த மந்திரங்களை உச்சரிப்பதை நிறுத்தக்கூடாது. மனதை, ஒரே நிலையில் நிலைநிறுத்தி மந்திரங்களைக் கூறிக்கொண்டே யாகத்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார் ராஜகுரு.
அதன்படி மன்னன் யாகத்தைத் தொடர்ந்தார் அப்போது அங்கு படையெடுத்து வந்த அசுரன் பரிகலாசுரன் ராஜகுரு வாம தேவரைப் பார்த்து, "நானே கடவுள் என்னை வணங்கி சரணடைந்தால் உங்களை அழிக்காமல் மன்னித்து விட்டுவிடுவேன்' என்று எச்சரித்தான். ஆனால் வாமதேவர், "நரசிம்மரே முழுமுதற் கடவுள். அவரின் திருவடியில் நீ விழுந்து மண்டியிடு. உனக்கும் உன் கூட்டத்திற்கும் நரசிம்ம பகவானால் மோட்சம் கிடைக் கும்' என்று கூறினார். இதைக் கேட்டு கோபமடைந்த பரிகலாசுரன் யாகத்தை சிதைக்க முற்பட்டான். சர்வ சக்திகொண்ட தனது கோடாரியால் யாகம் செய்துகொண்டிருந்த வசந்த ராஜ மன்னரின் தலையை பிளந்தான். அப்போது மன்னரின் உடலிலிருந்து பெரும் குருதி வெளிப்பட்டது. அதிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்துவந்த நரசிங்கப் பெருமாள் பரிகலாசுரனை இரண்டாகப் பிளந்தார். அவனையும் அவனது படைகளையும் துவசம்செய்து அழித்தார் .
அதன்பிறகு நரசிங்கப் பெருமாளின் அருளால் மன்னன் வசந்தராஜன் உயிர்த்தெழுந்தார். அவர் நரசிம்மர் பெருமாளின் அகோர விஸ்வரூபத்தைக் கண்டுமகிழ்ந்தார். "பக்தர்களைக் காத்தருளும் பகவானே, அடியேனுக்கு அருள்புரிந்தீர்கள். இது நான் செய்த பாக்கியம். அதோடு என்னோடு யாகத்தில் ஈடுபட்டு அசுரனால் உயிரிழந்த ராஜகுரு உட்பட அனைவரையும் உயிர்பெறச் செய்யவேண்டும்.' அதோடு தாங்கள் தாயார் திருமகளுடன் இணைந்து கோபம் குறைந்த சாந்தமூர்த்தியாக எங்களுக்கு காட்சி தரவேண்டும். வரும்காலத்தில் உங்களை இங்கு வணங்க வரும் பக்தர்களுக்கும் அருள்புரியவேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார் மன்னன். அதன்படியே கோபம் குறைந்த சாந்தமூர்த்தியான லட்சுமி நரசிம்மர் அனைவரையும் உயிர்பித்துக் கொடுத்தார்.
பரிகலாசுரனை நரசிம்மர் அழித்த இந்த இடம் பரிகலபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் காலப்போக்கில் மருவி பரிக்கல் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்திலுள்ள லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் பல்வேறு எதிர்ப்புகள், தடைகள் தகர்த்தெழியப்படுகின்றன. மனபயம் உள்ளவர்கள் தைரியம் அடைவார்கள். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் நடத்திவைக்கிறார் லட்சுமி நரசிம்மர்.
இவ்வாலயத்தில் நரசிம்மர், லட்சுமி தாயாரை ஒரு கையால் அணைத்தபடி சந்தோஷத்துடன் காட்சியளிக்கிறார்.
அதனால் இவ்வாலயத்திற்கு திருமணத்தடை ஏற்படும் ஆண்- பெண் அனைவரும் வந்து வணங்கிட திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுகிறது. படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாதவர்கள். வேலையில் பதவி உயர்வு கிடைக்கப் பெறாதவர்கள் விரதமிருந்து இவ்வாலய லட்சுமி நரசிம்மருக்கு நெய் விளக் கேற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். வேலை கிடைக்கும். பணியில் உள்ளவர் களுக்கு பதவி உயர்வு நிச்சயம். அதோடு ஆலயத்திலுள்ள பக்த ஆஞ்சனேயருக்கு முன்பாக நெல்லைப் பரப்பி, அதில் தங்கள் குறைகளை எழுதி வழிபட்டால் பக்தர்களின் நியாயமான அனைத்து குறைகளையும் நிறைவேற்றித் தருகிறார் என நம்பிக்கையோடு கூறுகின்றனர் பக்தர்கள். மேலும் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர். ஆலய அர்ச்சகர்கள்.
கடந்த காலத்தில் இந்த ஊரில் ஒரு விபரீதம் ஏற்பட்டது அந்த காலகட்டத்தில் கிராமங்களில் கூரை வீடுகளே ஏராளமாக இருந்தன. அப்போது திடீரென ஒருநாள் இந்த கிராமத்தில் வீடுகள் தீப்பற்றி எரிந்தன. பொதுமக்கள் செய்வதறியாது துடித்தனர். தீ, கிராமம் எங்கும் பரவியது. பொதுமக்கள் தீயை அணைக்க முடியாமல் திகைத் தனர். உடனே ஆலய இறைவனிடம் கூடி வந்து வணங்கி முறையிட்டனர். என்னே அதிசயம்! அனைத்து வீடுகளிலும் எரிந்து தீ அப்படியே அணந்ததுவிட்டதாம். தன் பக்தர்களின் துன்பங்களை துடைப்பதில் முதன்மை தெய்வமாக விளங்கிவருகிறார் லட்சுமி நரசிம்மர் என்கிறார்கள் பரிக்கல் கிராம மக்கள்.
இவ்வளவு கீர்த்திபெற்ற பரிக்கல் லட்சுமி நரசிம்மரை, கர்நாடக மாநில மாத்வர் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குலதெய்வமாக வந்து வழிபட்டு செல்கிறார்கள். அவர்களின் குடும்பங்களில் திருமணம் உட்பட அனைத்து சுப நிகழ்ச்சி களை நடத்துவதற்குமுன்பு இங்குவந்து வழிபாடு நடத்தியபிறகு குடும்பங்களில் சுப நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், ஆலய வழிபாட்டு முறையில் ஒரு சிறப் புள்ளது. பக்தர்களே தயாரித்த பானகத்தை லட்சுமி நரசிம்மருக்கு நெய்வேத்தியம் படைக்கிறார்கள். இந்த பானகம் கோவிலிலேயே தயார்செய்து நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
சர்வ வல்லமை படைத்த சிங்கிரிக்குடி, பூவரசன் குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று லட்சுமி நரசிம்மர், ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள இறைவனை தரிசனம் செய்தால் அபரிமிதமான பலன்களை அள்ளித்தருவார் என்கிறார்கள் ஆலைய அர்ச்சகர்கள்.
முதலில் சிங்கிரிக்குடி, அடுத்து பூவரசன் குப்பம், மூன்றாவதாக பரிக்கல், ஆலயத்தை அடைந்து லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்துமுடிக்க வேண்டும் என்ற வழிமுறை காலம் காலமாக வகுக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்களும் முறையாகக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. அதன்படி நாங்களும் மூன்று கோவில்களையும் வழிபாடு செய்து முடித்துள்ளோம். இறைவன் அருள் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்கிறார் கள் கடலூர் மாவட்டம் நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, செங்கமேடு செல்வராணி, செந்தமிழ், பிரீத்தி, யாஸ்வின், கொடிக்களம் சிவசங்கரி, விஜயசாரதி, கலா ராணி ஆகியோர். இவர்களைப்போல் ஏராளமான பக்தர்கள் தினசரி மூன்று ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்து செல்கிறார்கள். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இங்குவந்து லட்சுமி நரசிம்மரை வழிபட்டு தங்கள் வேண்டுதல்களை முன்வைத்து வேண்டுகி றார்கள். அவர்களது வேண்டுதல்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கிறார் லட்சுமி நரசிம்மர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிக்கல் கோவில் புனரமைப்பு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன, விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்கள் கோவில் திருப்பணியில் தங்களது பங்களிப்பையும் செலுத்தலாம்.
அமைவிடம்: பூவரசன் குப்பம் ஆலயத்திலிருந்து விழுப்புரம் வழியாக 29 கிலோமீட்டர். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம்- உளுந்தூர்பேட்டை இடையிலுள்ள கெடிலம், பேருந்து நிறுத்தத்திலிருந்து மேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம். அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.