1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த எண்ணின் நாயகன், ஆரவாரமும் ஆர்ப்பரிப் புத் தன்மையும் கொண்ட சூரியன். இந்த மாதம் உங்கள் எண்ணின் நாயகன் சற்றே அடக்கி வாசிக்கிறார். தனது சுயம்புத் தன்மையைக் குறைத்து அமைதி காக்கிறார். இது வரையில் முதன்மை முதன்மை என முதலிடத்திற்குவரத் துடித்துக்கொண்டிருந்த இந்த எண்காரர்கள், இந்த மாதம் சற்றே பின்தங்குவர். பதுங்குவது பாய்வதற்குதான் என காரணம் கூறுவார்கள். இதற்கு இன்னொரு காரணம் பண விஷயமுமாகும். சரளமாகப் பணவரவில்லாமல், "வரும்; ஆனால் வராது' என்றபடி கிறங்கடிக்கும். எது எப்படியிருப்பினும், தொழில் ஸ்தானம்- அதுசார்ந்த வேலைகள் நல்லமுறையில் கைகொடுக்கும். இன்னும் சொல்லப்போனால் மற்ற மாதங்களைவிட இந்த பங்குனியில் தொழில் நிலை எளிதாகவும் விரைவாகவும் கைகூடும். உங்கள் இளைய சகோதரி கல்வி அல்லது திருமணம் முடிந்து வெளிநாடு செல்லக்கூடும். தகவல் தொடர்புத் துறையினர் நல்ல அணுகூலம் பெறுவர். குறிப்பாக வெளியூர், வெளிநாடு சம்பந்த மேன்மை பெறுவார்கள். சிலரது பெற்றோர் வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டு அல்லது மனை சம்பந்தமான நற்செய்தி கிடைக்கும். வாரிசுகளால் செலவுண்டு. சிலரது தீய பழக்கம், வேண்டாத தொடர்புகள் பண விரயத்தைத் தரும். தம்பதிகளுக்குள் சற்று பிணக்கு ஏற்பட வாய்ப்புண்டு. திருமண விஷயம் நன்கு கூடிவரும்போது உங்களது மூத்த சகோதரர் சற்று வில்லங்கம் செய்வார். வேலை செய்வோர் பதவி உயர்வை அடைவர். அரசியல் வாதிகள் சற்று சறுக்கி பின் நிலையாவார்கள். கலைஞர்கள் மேன்மையும் சிறுமையும் கலந்து காண்பர். கவனம் தேவை: இந்த மாதம் உங்களைவிட உங்கள் எதிரிகள் பலமாக இருப்பார்கள். எனவே நீங்கள் அமைதி யாக இருப்பது தற்போதைக்கு நல்லது. இல்லையென்றால் அவமானத்தை சந்திக்க நேரிடும். சிலருக்கு அஜீரணக் கோளாறு, கணுக்கால் வலி, பேசியது மறந்துபோதல் போன்றவை ஏற்படலாம். அரசியல்வாதிகள் கண்டிப் பாகப் பொறுமை காக்கவேண்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.

Advertisment

பரிகாரம்: உத்தரகோசமங்கை நடராஜரை நேரில் அல்லது மனதால் நினைத்து வழிபடவும். வாய் பேச வியலாத குழந்தைகளுக்கு உதவுவது, வாய்ப்புண் மருந்து வாங்கிக் கொடுப்பது சிறந்த பரிகாரமாகும். முடிந்தால் ஒருமுறை சூரியனார் கோவில்சென்று வழிபடுங்கள். பங்குனி மாதம் 20, 21, 22-ஆம் தேதிகள் நல்ல விஷயங்களைக் கொண்டுவரும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அகன்ற அன்பும் ஆழ்ந்த அமைதியும்கொண்ட சந்திரனை எண் நாயகனாகக் கொண்டவர்கள் நீங்கள். இந்த மாதம் அரசு வேலை எதிர் பார்த்தவர்களுக்கு நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும். அரசியல்வாதி கள் பணத்தைத் தண்ணீராக செல வழிப்பதன்மூலம் நல்ல அதிர்ஷ்டம் பெறுவார்கள். புகழ் சற்று மெதுவாக வரும். சிலர் தங்கள் கைபேசியை செலவுசெய்து சரிசெய்ய வேண்டி யிருக்கும். இந்த எண்களில் பிறந்த குழந்தைகளின் தாயார் புதிய தொழில் அல்லது வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார். வீட்டில் பழுதுபார்க்கும் செலவுண்டு. வாரிசுகள் வெளிநாடு செல்லக்கூடும். சிலர் வேலையில் சிறுதூர அல்லது வெகுதூர இடமாற்றம் காண்பர். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் செலவும் அவமானமும் ஏற்படலாம். ஆன்மிக யாத்திரையில் கலந்துகொள்வீர்கள். உங்கள் தொழிலில் வெளிநாட்டு சம்பந்தம் காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில்புரிவோர் வெளி இன, வெளிநாட்டு வகையறாவினரிடம் தொழில் மேன்மையும் லாபமும் காண்பர். தொழில் லாபம் பெருக கையூட்டு கொடுக்கவேண்டி நேரும். கலைஞர்கள் தொழில் நிமித்தமாக மிக அலைச்சல் கொள்வர். இளைய சகோதரனின் திருமணம் எதிர்பார்த்ததைவிட அதிக செலவை ஏற்படுத்தி அல்லல்படுத்தும். உங்கள் மூத்த சகோதரி தொழில், வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்வார். உங்களது மாமனார்- மாமியார் இடம் மாறுவர். சிலருக்கு சற்று கலப்பு மருமகள் வருவாள். கவனம் தேவை: தாயாரின் உடல்நலனில் அக்கறை வேண்டும். எவ்வளவு பணம் வந்தாலும் அதற்குமேல் செலவழியும். தம்பதிகளுக்குள் கௌரவப் பிரச்சினை உண்டாகும். கைகள் அல்லது பாதத்தில் நரம்பு பிடித்துக் கொள்ளும் வாய்ப்புண்டு. நடைப்பயிற்சியின்போது எச்சரிக்கை தேவை.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: பௌர்ணமியன்று அம்பாளை வழிபடுவதும் கிரிவலம் செல்வதும் நன்று. தம்பதிகளாக வேலை செய்யும் கீழ்நிலைப் பணியாளர்களுக்கு, அவர்களது தேவையறிந்து மின்சார உபகரணங்கள் உங்கள் வசதிக்கேற்ப வாங்கிக்கொடுங்கள். பங்குனி மாதம் 23-ஆம் தேதி நல்லவை நடக்க வாய்ப்புண்டு.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

தீர்க்கமான சிந்தனையும் தார்மீக உணர்வும் கொண்ட குருவே உங்கள் எண்ணின் நாயகன். இந்த மாதம் உங்களது உயரிய யோசனைகளை செயலாக்கம் செய்யும்போது சற்று பின்னடைவை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழில், வேலையில் சிறு பின்னடைவு ஏற்படுவதால், அது உங்களது மனநிலையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும். தொழில், வேலையில் ஏற்படும் சறுக்கல் பிறகு சரியாகிவிடும். தொழில் பங்குதாரர் சற்றே சுணங்கி பிறகு சரியாகிவிடுவார். திருமணப் பேச்சுகளில் மணமக்களில் ஒருவரின் வேலை விஷயமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிறகு சரியாகும். உங்கள் கைபேசித் தகவல்கள் சற்று செலவை இழுத்துவிடும். கலைஞர்கள் தாங்கள் சார்ந்த துறையில் சிறு பிணக்கை எதிர்கொள்ள நேரிடும். தம்பதிகளுக்குள் மன வேறுபாடு ஏற்பட்டாலும், ஒற்றுமைக்கும் கெமிஸ்ட்ரிக்கும் குறையிருக்காது. மனை சம்பந்தமாக உங்கள் தந்தை புதிய யோசனைகளைக் கூறுவார். புதிய தொழில் தொடங்கும்போது சிறு தடை ஏற்பட்டு பிறகு சரியாகும். அரசியல்வாதிகள் ஆரோக்கியம் சம்பந்தமாக கவனமாக இருக்க வேண்டும். கல்வி, குழந்தைகள் நலன், விளையாட்டு, கலைத்துறை சார்ந்த அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏதேனும் வில்லங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது வரும் மருமகள் சற்று கலப்பு சார்ந்து வருவார். அல்லது மருமகனுடன் வாய் வார்த்தையில் சண்டை வரலாம். மாணவர்களுக்கு மறதி ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவார்கள். கவனம் தேவை: வாழ்க்கைத் துணையின் தொழிலில் கவனம் அவசியம். நீரிழிவு நோயுள்ள வர்கள் அதற்குரிய மருந்துகளை சரியான நேரத்திற்கு சாப்பிடவும். உங்கள் வாயில் கட்டுப்பாடாக இருங்கள். அது பேச்சாகவும் உணவாகவும் இருக்கலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபடவும். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை இந்த மாதம் வழிபடுவது நல்லது. பெண் குழந்தை களுக்கு இனிப்பு வாங்கிக்கொடுக்கவும். விளையாட்டில் ஆர்வமுள்ள பெண்களுக்கு தேவையைக் கேட்டறிந்து உதவுங்கள். இந்த மாதம் 26, 27, 28-ஆம் தேதிகளில் நன்மை நடக்கக்கூடும்.

ss

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எப்போதும் எதிர்மறை சிந்தனைகொண்ட ராகுவை எண்ணின் நாயகனாகக் கொண்ட வர்கள் நீங்கள். இந்த மாதம் திருமணம் நடக்கும். அதில் சற்று கலப்பிருக்கும். சிலருக்கு வேலை கிடைக்கும். அதில் வெளிநாட்டு சம்பந்தமுண்டு. நீண்டநாட்களாக சொந்தத் தொழில் தொடங்கலாமென யோசித்துக் கொண்டே இருந்தவர்கள் இந்த மாதம் சட்டென்று ஒரு தொழிலைத் தொடங்கி விடுவார்கள். அனேகமாக அந்தத் தொழில் பூமி அல்லது மின் உபகரணங்கள் சம்பந்தப் பட்டதாக இருக்கும். இந்த மாதம் உங்களைவிட உங்கள் வாழ்க்கைத்துணை அல்லது தொழில் பங்குதாரர் மிகவும் குறுக்குச்சால் ஓட்டுவார். குயுக்தி அதிகரிக்கும். எனவே அவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். அரசு வரி போன்ற செலவு வரும். இதனால் அரசு அதிகாரிகளிடம் சற்று முரண்டுபிடிக்கவேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் தங்களது செயற்கரிய செயல்களாலும், அரிய யோசனைகளாலும் தங்கள் பதவியைவிட்டு விலக நேரலாம். அரசு அதிகாரிகள் சிலர் இடமாற்றத்தை சந்திப்பர். இளைய சகோதரரால் சண்டை வந்து பின்னர் சரியாகும். தாய்மாமனுடன் பிணக்கு ஏற்பட்டு பிறகு சமாதானமாகும். கைபேசி செலவு தரும். தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்புத் துறையினர் சற்று குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாவர். ஒரு கோவிலுக்குப் போவதாக நினைத்து வேறு கோவிலுக்குப் போய்விடுவீர்கள். தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டி வரும். உங்களில் சிலரது மாமனார் காணாமல் போகும் வாய்ப்புண்டு. வீட்டுப் பத்திரம் போன்ற முக்கியமான ஆவணங்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். கவனம் தேவை: இந்த மாதம் உங்களைவிட உங்கள் எதிரில் இருப்பவர்கள் மிகுந்த ஏமாற்றுக் காரர்களாக நேரும். அதனால் கவனமாக- எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காலில் நரம்பு சுருட்டிக்கொண்டு மிகுந்த வலியைத் தரலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: மலைமீதிருக்கும் விநாயகரை வழிபடவும். இனிப்புகள் கொண்டு வணங்கி, பின் அதை விநியோகம் செய்யவும். பிற மத, இன இளம்பெண்களுக்கு அலங்காரப் பொருட்கள் வாங்கிக்கொடுக்கலாம். பங்குனி மாதம் 5-ஆம் தேதி நல்லவை கிடைக்கக்கூடும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அறிவு, சுறுசுறுப்புகொண்ட புதன் உங்கள் எண்ணின் நாயகனாவார். இந்த மாதம் இந்த சுறுசுறுப்பு, புத்திசாலித்தனம் சற்றே மங்கிப் போகும். சுருண்டு படுத்து பின் மெதுவாக விழிக் கும். ஆம்; இந்த மாதம் உங்கள் எண்ணின் நாயகன் நிலை சற்றே மந்தமாக உள்ளது. ஆனாலும் அதிக மோசமில்லை. இந்த மந்த அறிவு பண வரவைத் தடைசெய்யும். வேலையின்போது தவறான தகவல்களை அனுப்பிவிட்டு பின் அல்லல்பட நேரிடும். உங்களது பணியாட்கள், நீங்கள் எப்போதோ செய்த இன்னல்களைத் தற்போது நினைவுகூர்ந்து உங்களைப் பழி வாங்க முனைவார்கள். இதுபோல விஷயங்கள் நடந்தாலும், வாழ்க்கைத் துணைக்கு அரசு சார்பு டைய வேலை கிடைத்து இடம்மாறுவார். உங்கள் வாரிசுகள் மன வேறுபாடு கொள்ளக் கூடும். சிலர் தங்கள் தீய பழக்கத்திற்குக் கடன் வாங்குவார்கள். சிலபல இடையூறுகளுக்குப் பிறகு திருமணம் இனிதாக நிறைவேறும். மேலும் ஒரு விஷயம். "யார் எவ்வாறு போனா லும் பரவாயில்லை; எந்த பட்டணம் கொள்ளை போனாலும் நமக்கென்ன?' என்று, சிலர் உங்கள் திருமணத்தைப் பிடிவாதமாக நின்று நடத்திவிட்டுதான் மறுவேலை பார்ப்பீர்கள். "ஒரு திருமணத்திற்காக நம்மையெல்லாம் என்ன பாடுபடுத்திவிட்டான்' என்று சுற்றியுள்ளவர்கள் புலம்புவார்கள். "இப்போது திருமணமாகவில்லையென்றால் எப்போது நடக்கும்?' என நீங்கள் சாதாரணமாக நிற்பீர் கள். வேறுசிலர் வெளிநாடு போய்தான் தீர வேண்டுமென கள்ளத் தோணியில் ஏறியாவது கடல்கடக்க ஆரம்பித்துவிடுவீர்கள். இந்த மாதம் உங்களுக்கு அறிவுதான் சற்று சோம்பலாக இருக்கும். செயல்கள் சுறுசுறுப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: எல்லா எண்களும் அதிர்ஷ்ட எண்களே.

எச்சரிக்கை எண்கள்: பிறருக்கு எல்லா எண்களும் எச்சரிக்கை எண்களே.

பரிகாரம்: இந்த மாதம் கோவிலுக்குப் போவதற்கெல்லாம் நேரமிருக்காது. ஆனால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் எல்லா தெய்வங் களையும் வணங்குவார்கள். அவர்களது பாதுகாப்பு அவர்களுக்கு முக்கியம்தானே! பங்குனி மாதம் 22, 23, 24-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அழகுணர்ச்சியும் கலை ரசனையும்கொண்ட சுக்கிரனை எண்ணின் நாயகனாகக் கொண்டவர்கள் நீங்கள். இந்த மாதம் சில சிக்கல்களுடன் திருமணம் கைகூடும். வியாபாரிகள் இந்த மாதம் நிறைய கையூட்டு கொடுக்கவேண்டி வரலாம். கலைத் துறையினர் அதிகளவு கருப்புப் பணம் பெறுவர். சிலர் கைபேசி சார்ந்து கடன் வாங்குவீர்கள். இளைய சகோதரனின் உயர்கல்வி விஷயமாக இடமாறுதல், அலைச்சல், கடன் போன்றவை ஏற்படும். சில அரசு அதிகாரிகள் பதவி உயர்வும், இடமாறுதலும் பெறுவர். சில அரசியல்வாதிகளின் இலாகா மாறுதல் அவர்களுக்கு வெறுப்பைத் தரும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். உங்கள் தந்தையின் உடல்நலன் கவனிக்கப்பட வேண்டும். கல்வி சார்ந்த பணியில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். குத்தகை, ஏஜென்சி போன்ற தொழில் செய்பவர்கள் அதிக உழைப்பும், லாபமும், சற்று கடனும் பெறுவார்கள். வாரிசுகளின் கல்வி விஷயம் மகிழ்வைத் தரும். விளையாட்டுத்துறை, பொழுதுபோக்கு சார்ந்தவர்கள் பண வரவும் அதிர்ஷ்டமும் பெறுவர். வாரிசுகள் சம்பந்தமான நற்செய்தியுண்டு. சிலர் நாட்பட்ட நோய்க்கு தகுந்த மருந்தையும் மருத்துவவரையும் கண்டறிவர். சிலரின் மருமகன் கோபித்துக்கொண்டு வெளிநடப்பு செய்வார். தம்பதிகளுக்குள் ஆயிரம் சண்டை வந்தாலும் "கெமிஸ்ட்ரி' நன்கு ஒத்துப்போகும். கவனம் தேவை: இந்த மாதம் லஞ்சப் பணம் கொடுக்கும்போதும், வாங்கும்போதும் கவனமாக இருங்கள். அகப்பட்டுக்கொள்ளும் வாய்ப்புண்டு. அதிக அலைச்சல்கள், உஷ்ணம், வாயு சம்பந்த பிரச்சினைகள் வரலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எங்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: மலைமீதுள்ள பெருமாளையும் தாயாரையும் தரிசிப்பது நன்று. சிறுவர்களின் கல்வி செலவுக்கு உதவலாம். பங்குனி மாதம் 7, 8, 9-ஆம் தேதிகளில் சுப நிகழ்வுகள் நடக்கக்கூடும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் அமைதியான குணம்கொண்ட கேது உங்கள் எண்ணின் நாயகன். இந்த மாதம் உங்கள் முகம் அமைதியாக இருப்பினும், மனம் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும். எதிரிகள் மட்டுமல்லாது, உடன் பழகுகிறவர்களின் நிறை- குறையை நிறுத்துப் பார்த்து அலசி ஆராயும். இப்படி யோசித்து யோசித்து பல வேலைகளைத் தாமதப்படுத்துவீர்கள். தர்ம காரியத்துக்கு பணம் அனுப்ப யோசித்து, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நிறுத்திவிடுவீர்கள். கடனை செலுத்த ஏற்பாடு செய்துவிட்டு, பிறகு பின்வாங்கிவிடுவீர்கள். வியாபார விஷயத்தில் நீக்குப்போக்காக இல்லாமல், நல்ல விஷயத்தைக் கைநழுவ விடுவீர்கள். அரசு சார்ந்த கடன் கிடைக்கும் நேரத்தில், உங்களின் செயல் அதனைத் தடுத்துவிடும். சில அரசு ஒப்பந்தம் கைகூடும்போது கொஞ்சம் அமைதியாக இருந்து அதனைக் கையகப்படுத்தும் வழியைப் பார்க்கவேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை பண விஷயத்தில் உதவுவார். கலைத்துறை யினர் தங்களைப் பற்றிய விளம்பரம் வருமாறு அவர்களே ஏற்பாடு செய்வார்கள். அரசியல்வாதிகள் தங்களது செயலாற்றலை மிக பிரபலப்படுத்துவார்கள். கவனம் தேவை: எப்போதும் அமைதியாக இருக்கும் நீங்கள் இந்த மாதம் சற்று பரபரப்புடன் இருப்பது உங்களுக்கு சரிப்பட்டு வராத விஷயம். இதனால் பல விஷயங்கள் குளறுபடியாகும். பாதத்தில் வலி வர வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

பரிகாரம்: அரச மரத்தடியில் நாகர்களுக்கு நடுவே இருக்கும் கணபதியை வழிபடவும். சிறு வியாபாரிகள், தள்ளுவண்டிக் கடை வைத்திருப்போரின் தேவையைக் கேட்டறிந்து உதவுங்கள். பங்குனி மாதம் 25-ஆம் தேதி சிறப்பு தரக்கூடும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அழுத்தம் மற்றும் உழைப்பு குணம் கொண்ட சனிபகவான் உங்கள் எண்ணின் நாயகன். இந்த மாதம் சிலர் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும் விஷயமாக கடனுக்கு அலைவீர்கள். சிலபல தடைகளுக்குப்பின் கடன் கிடைக்கும். கடன் குளறுபடிக்கு நீங்கள் விண்ணப்பித்த தகவல் குறையும் ஒரு காரணமாகும். சிலர் தங்கள் தந்தை விஷயமாக இளைய சகோதரனுடன் கருத்து வேறுபாடு கொள்வர். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. கைபேசி, டாக்குமென்ட்ஸ் போன்றவை களவுபோகும் வாய்ப்புண்டு. வாடகைவீடு சம்பந்தமான வில்லங்கம் விரைந்து வரும். கருவுற்ற பெண்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும். வாகனம் பழுதுபார்க்கும் நிலையுண்டு. "அரசு வேலை வாங்கித் தருகிறேன்' என்று யாராவது சொன்னால் தயவுசெய்து மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் மருமகனின் வீடுபற்றிய கேள்விகள் உங்களை மனச் சோர்வு கொள்ளச் செய்யும். ரியல் எஸ்டேட் பிரிவினர் தவணைமுறை திட்டத்தின்மூலம் தங்கள் அடுக்குமாடி வீடுகளை விற்க முயல்வர். வீட்டில் சமையல் செய்யும்போது கவனம் தேவை. பயணங்களின்போதும், வீடு மாற்றும்போதும் தங்க நகைகள்மீது கவனம் இருக்கட்டும். அதுபோல காது அல்லது பாதம் பாதிக்கக்கூடும் அல்லது அடிபட நேரும். புது வேலையாட்களை நன்கு விசாரித்த பின்னர் நியமிக்கவும். கவனம் தேவை: இந்த மாதம் சிறுதூர, வெகுதூரப் பயணங்களில் உங்களையும், உங்கள் விலைமதிப்புள்ள பொருட்களையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். காதில் சிறு கட்டி ஏற்பட்டு வலி தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: குச்சனூர் சனிபகவானை தரிசிப்பது சிறப்பு. வீடு கட்டும் தொழிலாளர்களின் சிறு கடன்களை அடைக்க ஏற்பாடு செய்யுங்கள். பங்குனி மாதம் 24, 25, 26-ஆம் தேதிகளில் நல்லவையனைத் தும் கூடிவரும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

வீரமும் தீரமும் நிறைந்த செவ்வாய் உங்கள் எண்ணின் நாயகன். நல்ல காலத்திலேயே மிக தைரியம்கொண்ட எண்காரர்கள் நீங்கள். இந்த மாதம் "சாதாரணமாகவே ஆடுகிற கால்களுக்கு சலங்கை கட்டிவிட்ட' கதையாக, மிகவும் வேகம் காட்டுவீர்கள். இதில் எதிரிலுள்ளவர்கள் உங்களைவிட பலமானவராக இருந்தால் நீங்களும் சற்று தாக்கப்படும் வாய்ப்புண்டு. வெளிநாட்டுப் பணத்தைக் கையாளும் வாய்ப்பும் ஏற்படும். திருமணம் கூடிவரும். அதில் சற்று கலப்பிருக்கும். உங்களது இளைய சகோதரர் கோபித்துக்கொண்டு எங்காவது சென்று, பின்னர் திரும்ப வந்துசேர்வார். கைபேசி பழுதானால், அது சரிசெய்யுமளவுக்கு சிறிதாகவே இருக்கும். பணியாட்கள் வேலை அதிகமாக உள்ளது என முரண்டு பிடிப்பார்கள். சிலரது வாரிசுகள் உயர்கல்வி சம்பந்தமாக வெளிநாடு செல்வார்கள். பங்குகள் சில விரயத்தை சந்திக்கும். உங்களில் சிலர் பெரிய கடன் வாங்கி சிறு கடன்கள் பலவற்றை அடைத்துவிடுவீர்கள். கிறிஸ்துவ மத பங்குதாரர் வியாபாரத்தில் நன்கு ஒத்துழைப்பு தருவார். வீடு, வாகனம் விற்பனையின்போது ஏதோவொரு வில்லங்கம் வந்துசேரும். ஆன்மிக யாத்திரை, தெய்வ தரிசனம் கிடைக்கும். உங்கள் தொழிலில் கையாளும் தரவுகள், தகவல்கள், ரசீதுகள், காசோலைகள் என இவை சார்ந்த இனங்களில் ஒரு இடையூறு, தவறு இருக்கக்கூடும். எனவே தொழில்புரிவோர் இந்த மாதம் இரட்டிப்பு கவனத்துடன் இருத்தல் அவசியம். வேலை செய்பவர்களும் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் கவனமாக இருக்கவேண்டும். இல்லையெனில் இடையூறுகளை சந்திக்க நேரும். கவனம் தேவை: இந்த மாதம் முழுக்கவே உங்கள் செயல்களில் தீவிர கவனம் தேவை. கணக்கு சார்ந்த குளறுபடிகள் ஏற்பட்டாலும், மன உளைச்சலுக்குப்பின் சரியாகும். வயிறு அல்லது பாதம் இம்சை தரலாம். சிலருக்கு தோள்பட்டை எங்காவது இடித்துக்கொள்ளும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: சுவாமிமலை முருகனை வணங்கவும். பால்வாடி பள்ளிகளில் சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் நபர்களுக்கு தேவையைக் கேட்டறிந்து உதவிசெய்யவும். பங்குனி மாதம் 13, 14, 15-ஆம் தேதிகளில் நற்செய்தி கிடைக்கக்கூடும்.

செல்: 94449 61845