வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு : மலரோன்(16)

/idhalgal/om/order-srimad-ramayana-inspired-by-valmiki-maharishi-gallery-malaron-16

32-ஆவது சர்க்கம் இராவணன் பிடிபடுதல்

நர்மதை நதிக்கரையின் மணற்பரப்பில் இராவணன் சிவபூஜை செய்துகொண்டிருந்த இடத்திற்கு அருகிலேயே, மாகிஷ்மதி நகரத்தின் அரசனான கார்த்தவீர்யார்ஜுனன் தன் மனைவி களுடன் நீர் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஆயிரம் பெண் யானைகளுக்கிடையே ஓர் ஆண் யானைபோல, மங்கையர் கூட்டத்தினிடையே அரசன் அர்ஜுனன் பெருமையுடன் விளங்கினான்.

ஆயிரம் கரங்கள் கொண்டவன் அவன். அவற்றின் ஆற்றலை சோதித்துப் பார்க்க விரும்பிய அவன், தனது அத்தனை கரங்களா லும் நர்மதை நதியின் நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தினான். அவனது கரங்களால் தடுக்கப்பட்ட நர்மதையின் வெள்ளம் கரையைக் கடந்து, மலர்களால் சிவபூஜை செய்து கொண்டிருந்த இராவணன் அருகே சென்று, அங்கிருந்து எதிர்திசையில் ஓடத் தொடங்கியது. வெள்ளமானது மீன், முதலை, மகர மீன், ஆசனம் போன்றவற்றை இழுத்த படி பெருகியவண்ணம் இருந்தது. மழைக்காலம் போல வெள்ளம் புரண்டோடியது.

அந்த நீர்ப்பெருக்கு இராவணன் அர்ச்சித்துக் கொண்டிருந்த மலர்கள் அனைத் தையும் இழுத்துச்சென்றது. அப்போது இராவணனுடைய வழிபாடு அரைப்பகுதிதான் நிறைவு பெற்றிருந்தது. அவன் வழிபாட்டை நிறுத்திவிட்டு, மனதிற்குகந்த மனைவியாக இருந்தவள் எதிர்பாராமல் கணவனுக்கு எதிரியாகி விட்டதைப்போல காட்சிதரும் நர்மதை நதியைப் பார்த்தான். மேற்கிலிருந்து கிழக்கே ஓடும் வெள்ளத்தைப் பார்த்ததும் கடல் பொங்குகிறதோ என்று தோன்றியது. ஏனெனில் நர்மதை கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் நதி.

இந்த மாற்றத்தைக்கண்டு கரையோர மரங்களிலிருந்த பறவைகள் கலக்கம் கொள்ளவில்லை. ஏனெனில் மழைக்காலத்தின் போது காணப்படும் மாசுகள் இல்லாமல், அந்த நதி தன் இயற்கையான- தூய்மையான போக்கில் சென்றது. நெஞ்சில் சிறிதும் மாசற்ற ஒரு மங்கையைப்போல தூய்மையான அந்த ஆறு திசைமாறி ஓடுவதைப் பார்த்தான் இராவணன்.

வாய்திறந்து பேசாமல், வலக்கை விரல்களை சொடுக்கி சுக- சாரணர்களை சைகைமூலம் அழைத்து, வெள்ளத்தின் போக்கு திசைமாறும் காரணத்தை அறிந்து வருமாறு கட்டளையிட்டான்.

சகோதரர்களான சுக- சாரணர்கள் இராவணனின் கட்டளையை ஏற்று வான் வழியே மேற்கு திசை நோக்கிச் சென்றனர். அரை யோசனை தூரம் சென்றதும், அர்ஜுனன் பெண்களுடன் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதைக் கண்டனர்.

மிகப்பெரிய ஆச்சாமரம் போன்ற உருவம், நனைந்த தலைமுடி, போதை வெறியால் கண்களின் ஓரங்களில் ஏற்பட்ட செவ்வரிகள், காம வேட்கையால் குழம்பிய அறிவு என்னும் நிலையிலிருந்த அவன், தனது ஆயிரம் கரங் களால் நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தி யிருந்தான். ஆயிரம் பாதங்களால் மண்ணுல கைத் தாங்கி நிற்கும் மாமலை போன்ற உறுதியுடன், ஆயிரக்கணக்கான பெண் யானைகள் சூழப்பட்ட மாபெரும் ஆண் யானைபோல அவன் உயர்குல இளம் பெண்களால் சூழப்பட்டிருந்தான். காண்பதற்கரிய இந்தக் காட்சியைக் கண்ட சுக- சாரணர்கள் திரும்ப இராவணனிடம் வந்தனர்.

vv

"அரக்கர்களின் அரசரே! பெரிய மரம் போல தோற்றமளிக்கும் யாரோ ஒருவன் ஆற்றின் நடுவில் அணை கட்டியதுபோல, தன் கரங்களால் ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்து பல பெண்களுடன் விளையாடிக் கொண்டி ருக்கிறான். அவனுடைய ஆயிரம் கரங்களால் நீரோட்டம் நிறுத்தப் பட்டிருக்கிறது. அதனால் தான் கடல் பொங்கி ஆற்றில் புகுந்து எதிர்திசையில் ஓடி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துவதுபோல நிகழ்கிறது'' என்று கூறினர்.

அவர்கள் கூறிய தைக்கேட்ட இராவணன், "ஓ... அவன் அர்ஜுனன் தான்'' என்று கூறி, போர் வெறியுடன் அந்த திசையை நோக்கிச் சென்றான்.

கார்த்தவீர்யார்ஜுனனை நோக்கி இராவணன் சென்றபோது, அவனது வேகத்தில

32-ஆவது சர்க்கம் இராவணன் பிடிபடுதல்

நர்மதை நதிக்கரையின் மணற்பரப்பில் இராவணன் சிவபூஜை செய்துகொண்டிருந்த இடத்திற்கு அருகிலேயே, மாகிஷ்மதி நகரத்தின் அரசனான கார்த்தவீர்யார்ஜுனன் தன் மனைவி களுடன் நீர் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஆயிரம் பெண் யானைகளுக்கிடையே ஓர் ஆண் யானைபோல, மங்கையர் கூட்டத்தினிடையே அரசன் அர்ஜுனன் பெருமையுடன் விளங்கினான்.

ஆயிரம் கரங்கள் கொண்டவன் அவன். அவற்றின் ஆற்றலை சோதித்துப் பார்க்க விரும்பிய அவன், தனது அத்தனை கரங்களா லும் நர்மதை நதியின் நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தினான். அவனது கரங்களால் தடுக்கப்பட்ட நர்மதையின் வெள்ளம் கரையைக் கடந்து, மலர்களால் சிவபூஜை செய்து கொண்டிருந்த இராவணன் அருகே சென்று, அங்கிருந்து எதிர்திசையில் ஓடத் தொடங்கியது. வெள்ளமானது மீன், முதலை, மகர மீன், ஆசனம் போன்றவற்றை இழுத்த படி பெருகியவண்ணம் இருந்தது. மழைக்காலம் போல வெள்ளம் புரண்டோடியது.

அந்த நீர்ப்பெருக்கு இராவணன் அர்ச்சித்துக் கொண்டிருந்த மலர்கள் அனைத் தையும் இழுத்துச்சென்றது. அப்போது இராவணனுடைய வழிபாடு அரைப்பகுதிதான் நிறைவு பெற்றிருந்தது. அவன் வழிபாட்டை நிறுத்திவிட்டு, மனதிற்குகந்த மனைவியாக இருந்தவள் எதிர்பாராமல் கணவனுக்கு எதிரியாகி விட்டதைப்போல காட்சிதரும் நர்மதை நதியைப் பார்த்தான். மேற்கிலிருந்து கிழக்கே ஓடும் வெள்ளத்தைப் பார்த்ததும் கடல் பொங்குகிறதோ என்று தோன்றியது. ஏனெனில் நர்மதை கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் நதி.

இந்த மாற்றத்தைக்கண்டு கரையோர மரங்களிலிருந்த பறவைகள் கலக்கம் கொள்ளவில்லை. ஏனெனில் மழைக்காலத்தின் போது காணப்படும் மாசுகள் இல்லாமல், அந்த நதி தன் இயற்கையான- தூய்மையான போக்கில் சென்றது. நெஞ்சில் சிறிதும் மாசற்ற ஒரு மங்கையைப்போல தூய்மையான அந்த ஆறு திசைமாறி ஓடுவதைப் பார்த்தான் இராவணன்.

வாய்திறந்து பேசாமல், வலக்கை விரல்களை சொடுக்கி சுக- சாரணர்களை சைகைமூலம் அழைத்து, வெள்ளத்தின் போக்கு திசைமாறும் காரணத்தை அறிந்து வருமாறு கட்டளையிட்டான்.

சகோதரர்களான சுக- சாரணர்கள் இராவணனின் கட்டளையை ஏற்று வான் வழியே மேற்கு திசை நோக்கிச் சென்றனர். அரை யோசனை தூரம் சென்றதும், அர்ஜுனன் பெண்களுடன் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதைக் கண்டனர்.

மிகப்பெரிய ஆச்சாமரம் போன்ற உருவம், நனைந்த தலைமுடி, போதை வெறியால் கண்களின் ஓரங்களில் ஏற்பட்ட செவ்வரிகள், காம வேட்கையால் குழம்பிய அறிவு என்னும் நிலையிலிருந்த அவன், தனது ஆயிரம் கரங் களால் நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தி யிருந்தான். ஆயிரம் பாதங்களால் மண்ணுல கைத் தாங்கி நிற்கும் மாமலை போன்ற உறுதியுடன், ஆயிரக்கணக்கான பெண் யானைகள் சூழப்பட்ட மாபெரும் ஆண் யானைபோல அவன் உயர்குல இளம் பெண்களால் சூழப்பட்டிருந்தான். காண்பதற்கரிய இந்தக் காட்சியைக் கண்ட சுக- சாரணர்கள் திரும்ப இராவணனிடம் வந்தனர்.

vv

"அரக்கர்களின் அரசரே! பெரிய மரம் போல தோற்றமளிக்கும் யாரோ ஒருவன் ஆற்றின் நடுவில் அணை கட்டியதுபோல, தன் கரங்களால் ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்து பல பெண்களுடன் விளையாடிக் கொண்டி ருக்கிறான். அவனுடைய ஆயிரம் கரங்களால் நீரோட்டம் நிறுத்தப் பட்டிருக்கிறது. அதனால் தான் கடல் பொங்கி ஆற்றில் புகுந்து எதிர்திசையில் ஓடி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துவதுபோல நிகழ்கிறது'' என்று கூறினர்.

அவர்கள் கூறிய தைக்கேட்ட இராவணன், "ஓ... அவன் அர்ஜுனன் தான்'' என்று கூறி, போர் வெறியுடன் அந்த திசையை நோக்கிச் சென்றான்.

கார்த்தவீர்யார்ஜுனனை நோக்கி இராவணன் சென்றபோது, அவனது வேகத்தில் தூசிப் படலம் எழுப்பி சுழல் காற்று வீசியது. மேகங்கள் ஒரே ஒருமுறை இடியோசை எழுப்பி ரத்த மழையைப் பொழிந்தன.

மகோதரன், மகாபார்சுவன், தூம்ராட் சன், சுகன், சாரணர்களால் சூழப்பட்ட இராவணன், அர்ஜுனன் இருந்த இடத்தை நோக்கி விரைந்து சென்றான். கரிய நிறம் கொண்ட வலிமை வாய்ந்த இராவணன் சிறிது நேரத்திலேயே அர்ஜுனன் நீராடிக் கொண்டிருந்த இடத்தை அடைந்தான். அங்கு பெண்கள் சூழ விளங்கும் அர்ஜுனனைக் கண்டான். அவனைக் கண்டதும் கோபம் கொண்ட இராவணனின் கண்கள் செந்நிறம் பெற்றன.

தனது வலிமையின் செருக்கால் அர்ஜுன னின் அமைச்சர்களைப் பார்த்த இராவணன், "அமைச்சர்களே, நீங்கள் விரைந்துசென்று ஹேஹய நாட்டு மன்னனிடம், இராவணன் என்னும் திருப்பெயர் கொண்ட அரக்கனா கிய நான் போர்புரிவதற்காக வந்திருக்கிறேன் என்று தெரியப்படுத்துங்கள்'' என கூறினான்.

இராவணனின் சொற்களைக்கேட்ட அவர் கள் கைகளில் ஆயுதங்களைத் தாங்கி நின்றபடி, "இராவணா, எங்கள் மன்னருடன் போர்புரிய நீர் தேர்ந்தெடுக்கும் காலம் மிகச் சிறப்பாக இருக்கிறது! ஐயா, எங்கள் அரசர் காம விளையாட்டில் விருப்பம்கொண்டு பெண்கள் புடைசூழ நிற்கும் இந்த தருணத்தில் போர்புரிய அழைக்கிறீரே... பெண் யானைகளுக்கிடையே காமத்துடன் நிற்கும் ஆண் யானையுடன் போர்புரிய விரும்பும் புலிபோல, அர்ஜுனனோடு போர்புரியத் துணிந்துவிட்டீர்.

செல்லச் சிறுவனே, பத்து தலைகளை உடையவனே... இன்றிரவு முடியும்வரை காத்திருங்கள். அதன்பின்னர் உங்களுக்குப் போர் செய்வதில் விருப்பமிருந்தால் நாளைக் காலை களத்தில் அர்ஜுனனை சந்திக்கலாம்.

அல்லது போர் வேட்கையில் தவித்துக் கொண்டிருக்கும் நீர் காலம் கடத்தாமல் முதலில் எங்களுடன் போர் செய்யுங்கள். பின்னர் அர்ஜுனனுடன் போர் புரியலாம்'' என்றனர்.

அப்போது பசியோடிருந்த இராவணனின் அமைச்சர்கள் ஹேஹய மன்னரின் அமைச்சர் களைக் கொன்று தின்னத் தொடங்கினார் கள்.

அர்ஜுனனுடன் வந்தவர்களும் இராவண னின் அமைச்சர்களும் எழுப்பிய பெருங்குரல் நர்மதையின் கரையில் எழுந்தது. அர்ஜுனனுடைய போர் வீரர்கள் அம்பு, வல்லயம், ஈட்டி, முத்தலை சூலம், வஜ்ரம், கர்ஷணம் போன்ற ஆயுதங்களால் இராவணனையும் அவனுடன் வந்தவர்களையும் நாற்புறமும் சூழ்ந்து தாக்கத் தொடங்கினர். ஹைஹய மன்னனுடைய போர் வீரர்களின் தாக்குதல் பெருங்கடலின் பேரிரைச்சல்போல பயங்கர மாக இருந்தது.

பிரஹஸ்தன், சுகன், சாரணன் முதலான இராவணனின் மந்திரிகள் மிகவும் கோபம் கொண்டு, பெரும் ஆற்றல்வாய்ந்த கார்த்த வீர்யார்ஜுனனுடைய வீரர்களைக் கொல்லத் தொடங்கினர்.

இராவணனும் அவனது அமைச்சர்களும் தனது நாட்டு வீரர்களைக் கொல்லும் செய்தியை, கார்த்தவீர்யார்ஜுனனின் காப்பாளர்கள் அவனிடம் தெரிவித்தனர்.

அதைக்கேட்டதும் தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த பெண்களிடம், "அஞ்சாதீர் கள்' என்று கூறியவன், அனைவருடனும் சேர்ந்து ஒரு திசை யானையானது பெண் யானைகள் சூழ கங்கையில் நீராடிவிட்டுக் கரையேறி வருவதுபோல புதுப்பொலிவு டன் வந்தான். அவனது கண்கள் கோபத்தினால் சிவந்திருந்தன. அர்ஜுனன் என்னும் மாபெரும் நெருப்பு, ஊழிக்கால நெருப்புபோல பயங்கரமாக ஜொலித்தது.

தங்கத்தால் செய்யப்பட்ட அழகிய தோள்வளை அணியும் அர்ஜுனன் விரைந்து ஒரு கதாயுதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, நொடிப்பொழுதில் சூரியன் இருளை விரட்டுவதைபோல அரக்கர்களை விரட்டத் தொடங்கினான்.

மாபெரும் கதாயுதத்தை உயரே தூக்கிப் பிடித்து கருட பகவானின் வேகத்துடன் அவர் களைத் தாக்கினான். ஆனால், முன்னொரு காலத்தில் சூரியனின் பயணத்தைத் தடுத்து நிறுத்திய விந்தியமலைபோல், சிறிதும் கலங்காமல் உறுதியாக நின்ற பிரஹஸ்தன், உலக்கை ஆயுதத்தால் அர்ஜுனனை வழிமறித்து நிறுத்திவிட்டான்.

வெறிகொண்ட பிரஹஸ்தன் இரும்புப் பூண் கட்டப்பட்டிருந்த பயங்கர உலக் கையை வீசியெறிந்து, மேகம்போல கர்ஜனை செய்தான். பிரஹஸ்தன் கையிலிருந்து விடுபட்ட அந்த உலக்கையின் தலைப்பகுதி அசோக மலர்போன்று செக்கச் செவே லென்று, இலக்கினைத் தீயினால் பொசுக்கி விடுவதுபோல விளங்கியது.

தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த உலக்கையை, பேராற்றல் பொருந்திய அர்ஜுனன் சாமர்த்தியமாக செயல்பட்டுப் பயனற்றுப்போகச் செய்தான். பின்னர் அவன் 500 கைகளால் தூக்கும் மாபெரும் கதாயுதத்தைத் தூக்கிச் சுழற்றியபடியே பிரஹஸ்தனை நோக்கி ஓடினான். வேகமாக வந்த கதாயுதத்தால் தாக்கப்பட்ட பிரஹஸ்தன், இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட மலைபோல சிதறிப்போய் தரையில் விழுந்தான்.

பிரஹஸ்தன் வீழ்ந்துவிட்டதைக் கண்ட மாரீசன், சுகன், சாரணன், மகோதரன், தூம்ராடசன் ஆகியோர் போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டனர். பிரஹஸ்தன் மண்ணில் சாய்ந்ததையும், அமைச்சர்கள் ஓடியதையும் கண்ட இராவணன் வேகமாக வந்து கார்த்த வீர்யார்ஜுனனை எதிர்த்தான். பின்னர் ஆயிரம் கரங்கள்கொண்ட அரசனுக்கும், இருபது கரங்கள்கொண்ட அரக்கனுக்குமி டையே உரோம சிலிர்ப்பை உண்டாக்கும் கடுமையான போர் தொடங்கியது.

கொந்தளிக்கும் இரண்டு கடல்கள், அடித்தளம் ஆட்டம் கண்ட இரண்டு மலைகள், ஒளி சிந்தும் இரண்டு சூரியன்கள், சுட்டுப் பொசுக்கும் இரண்டு தீஜுவாலைகள், ஆற்றல்மிகுந்த இரண்டு யானைகள், ஒரு பசுவை அடைய போட்டியிடும் இரண்டு காளைகள், உரத்து கர்ஜிக்கும் இரு மேகங்கள்,

வலிமை செருக்குகொண்ட இரண்டு சிங்கங் கள், கோபம்கொண்ட ருத்ரன்- காலதேவன் போன்றவர்கள் என, இத்தகைய அரக்கனும் அர்ஜுனனுமாகிய அந்த இருவரும் கைகளில் கதாயுதத்தைத் தாங்கி ஒருவரையொருவர் பலமாகத் தாக்கிக்கொண்டார்கள்.

முன்னொருகாலத்தில் வஜ்ராயுதத்தின் பயங்கர தாக்குதலை மலைகள் தாங்கிக் கொண்டதைப்போல, அந்த மனிதனும் அரக்கனும் கதாயுதத்தின் தாக்குதலை சகித்துக்கொண்டார்கள். எல்லா திசை களிலும் இடியோசை எதிரொலிப்பதை போல, அவர்களது கதாயுதங்கள் தாக்கிக் கொண்டதால் ஏற்பட்ட பேரொலி அனைத்து திக்குகளிலும் எதிரொலித்தது.

பிரகாசமாக வீசிய மின்னல் ஒளியானது ஆகாயத்தைப் பொன்னிறமாக மாற்றி விடுவதைப்போல, இராவணனுடைய மார்பில் அர்ஜுனனுடைய கதாயுதம் தாக்கி அவன் மார்பைப் பொன்னைப் போல ஒளிவீசச் செய்தது. அவ்வாறே இராவணனால் பலமுறை அர்ஜுனன் தாக்கப்பட்ட அந்தக் காட்சி, ஒரு மாபெரும் மலைமேல் எரிகொள்ளி வானத்திலிருந்து விழுவதைப்போல இருந்தது.

இவ்வளவு பயங்கரமான போர் புரிந்தும் கூட அர்ஜுனன் களைப்படையவில்லை. இராவணனும் சோர்ந்துவிடவில்லை. முன்பு இந்திரன்- பலிச்சக்கரவர்த்தி இடையே நடந்த போரில் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கமுடியாமல் சம பலத்துடன் இருந்ததைப்போலவே இவர்களது போரும் இருந்தது.

இரண்டு காளைகள் தங்களது கொம்பு களாலும், இரண்டு யானைகள் தங்களது தும்பிக்கையினாலும் தாக்கிக்கொள்வதைப் போல மாவீரர்களான அர்ஜுனன் என்னும் மனிதனும், இராவணன் என்னும் அரக்கனும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்தநிலையில் கோபம்கொண்ட அர்ஜுனன் மூச்சையடக்கி இராவணனுடைய மார்பின்மேல் கதாயுதத்தை வீசினான். பிரம்மாவிடம் பெற்ற வரம் என்னும் கவசத்தினால் காப்பாற்றப்படும் இராவண னின் மார்பில் விழுந்த அந்த ஆயுதம் தன் சக்தியை இழந்து இரண்டு துண்டுகளாக தரையில் விழுந்தது. என்றாலும் அர்ஜுனனால் வீசப்பட்ட கதாயுதத்தின் தாக்குதலைத் தாங்கமுடியாமல் இராவணன் ஒரு வில் அளவு தூரம் பின்வாங்கி வேதனைக்குரல் எழுப்பியவாறு தரையில் அமர்ந்துவிட்டான்.

இராவணன் மிகவும் தளர்வடைந்திருப் பதைக் கண்ட அர்ஜுனன், கருடன் வேகமாக வந்து ஒரு பாம்பைத் தூக்கிச்செல்வதுபோல உடனே சென்று இராவணனைக் கைப்பற்றி னான். நாராயணன் பலிச் சக்கரவர்த்தியைக் கட்டியதைப்போல, கார்த்தவீர்யார்ஜுனன் தனது ஆயிரம் கரங்களாலும் இராவணனை இறுக்கமாகக் கட்டினான்.

இராவணன் கட்டப்பட்டதும் மகிழ்ச்சி யடைந்த சித்தர், சாரணர், தேவதைகள் போன்றோர், "உன் செயல் மகத்தானது' என்று கூறியபடியே மலர்மழை பொழிந்தனர்.

ஒரு மானை அடித்துக் கவ்விக்கொண்டு வரும் புலியைப்போலவும், ஒரு யானையை வென்று வசப்படுத்திய சிங்கம்போலவும் மகிழ்ச்சியடைந்த அர்ஜுனன் இடியோசை போல பேரொலி எழுப்பினான்.

இராவணன் பிடிபட்டதைக் கண்ட பிரஹஸ்தனுக்கு மயக்கம் வருவது போலாகிவிட்டது. அங்கிருந்த அரக்கர்களை அழைத்துக்கொண்டு இராவணனை விடுவிப்பதற்காக அர்ஜுனனுடன் போர் செய்ய அவனை நோக்கி ஓடினான். மழைக் காலம் வந்தவுடன் கடலின்மேல் கருமேகங் கள் திரள்வதைப்போல, அர்ஜுனனை எதிர்த்துச் சென்ற அரக்கர்களுடைய பலம் பெருகியது.

"அவரை விட்டுவிடு; விட்டுவிடு! நில் நில்!' என்று பலமுறை கூவிக்கொண்டே, உலக்கைகளையும் சூலங் களையும் அர்ஜுனன்மேல் எறிந்தான் பிரஹஸ்தன்.

எதிரிகளை வென்று வீழ்த்தும் அர்ஜுனன் சற்றும் கலக்கமடையாமல், தேவ எதிரிகளான அவர்கள் எய்த அஸ்திரங்களையெல்லாம், அவை தன்னைத் தாக்கு வதற்கு முன்னதாகவே தன் கரங்களால் பற்றினான்.

பின்னர் சூறைக்காற்று மேகக் கூட்டத்தைத் தாக்கி சிதற வைத்து ஓடச்செய்வதைப் போல, அரக்கர்களால் ஏவப்பட்ட வலிமை வாய்ந்த ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி காயப்படுத்தித் துரத்தினான்.

அரக்கர்களைத் துரத்திவிட்டு இராவண னைக் கைப்பற்றி, நண்பர்கள் சூழ்ந்துவர தனது நகரத்திற்குள் பிரவேசித்தான் கார்த்தவீர்யார்ஜுனன். இந்திரன்போல் பிரகாசித்த அவன்மேல் அந்தணர்களும் நகர மக்களும் அட்சதை, மலர்கள் தூவி வரவேற்றார்கள். பலிச்சக்கரவர்த்தியை அடக்கி கைதுசெய்து சென்ற இந்திரனைப் போல வந்த அர்ஜுனன் வெற்றிப்பொலிவு கொண்டவனாக நகரத்திற்குள் அடியெடுத்து வைத்தான்.

33-ஆவது சர்க்கம் இராவணன் விடுவிப்பு

இராவணனைக் கைப்பற்றுவதென்பது காற்றை வசப்படுத்த முயல்வதுபோல இயலாத செயல். ஆனால் அர்ஜுனனால் இராவணன் கைப்பற்றப்பட்ட இந்த அதிசயம்பற்றி தேவர்கள் பேசிக்கொண்டது புலஸ்தியரின் காதுகளில் விழுந்தது. அவர் கலங்காத மனமுடையவர். எனினும் தன் பேரனிடம் கொண்டிருந்த பேரன்பினால் நெஞ்சம் நடுங்கினார். மாகிஷ்மதியின் மன்னன் அர்ஜுனனைக் காண புலஸ்திய முனிவர் மண்ணுலகம் வந்துசேர்ந்தார்.

காற்றுக்கு நிகராகச் செல்லும் ஆற்றல்கொண்ட அவர் ஆகாய மார்க்கமாக மனோவேகத்துடன் மாகிஷ்மதி நகரை அடைந்தார். அமராவதி நகரத்தைப்போல பொலிவுடன் விளங்குவதும், மனமகிழ்ச்சியும் உடல் வலிமையும்கொண்ட மக்கள் நிறைந்ததுமான அந்த நகரத்திற்குள், தனது தலைநகர் அமராவதிக் குள் இந்திரன் செல்வதைப் போல முனிவர் பிரவேசித் தார். சூரியன் தனது கால் களால் நடந்து வருவதைப் போல ஆகாயத்திலிருந்து இறங்கிவருபவரும், ஆன்மப் பேரொளியால் பிறரது கண்களைக் கூசச் செய்பவருமான புலஸ்தியரை அர்ஜுனனுடைய பணியாளர் கள் கண்டுகொண்டு, அவனிடம் சென்று தெரிவித்தனர்.

பெரும் முனிவரான புலஸ்தியர் வந்திருப்பதை அறிந்துகொண்ட அர்ஜுனன், அவரை வரவேற்பதற்காக தலைக்குமேல் இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் அவரை நோக்கிச் சென்றான். ஒரு ஆன்மிக சான்றோரை வரவேற்க இந்திரன் செல்லும்போது, புரோகிதராக பிருகஸ்பதி உபசாரப் பொருட்களுடன் முன்னதாகச் செல்வதைப்போல, அர்ஜுனனுக்கு முன்னால் அவனுடைய புரோகிதர் அர்க்கியம், மதுபர்க்கம் ஆகிய உபசாரப் பொருட்களை எடுத்துச்சென்றார். உதய சூரியனைப்போல தேஜஸுடன் விளங்கிய முனிவரைக்கண்டு அர்ஜுனன் திகைத்துநின் றான். பிறகு, இந்திரன் பிரம்மதேவரை வணங்குவதைப்போல பணிவுடன் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினான்.

அர்ஜுனன் புலஸ்தியருக்கு பாத்தியம், அர்க்கியம், மதுபர்க்கம், பசு ஆகியவற்றை சமர்ப்பித்துவிட்டு, ஆனந்தப் பெருக்கினால் தழுதழுத்த குரலில், "அந்தணோத்தமரே, தங்களை தரிசிப்பது கிடைத்தற்கரிய பேறு. இன்று நான் தங்களைக் காணும் நற்பேறு பெற்றேன். அதனால் இந்த மாகிஷ்மதி நகரம் அமராவதிக்கு நிகராகிவிட்டது. ஐயனே, இப்போதுதான் எனக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. என்னுடைய விரதங்கள், அனுஷ்டானங்கள் நற்பலனைத் தந்திருக்கின்றன. எனது பிறவி பயனுடையதாகிவிட்டது. எனது தவம் தக்க பலனைத் தந்துள்ளது. காரணம், அனைத்து தேவர்களும் வணங்கும் தங்களது திருவடிகளை நானும் இன்று வணங்கும் பேறுபெற்றேன்.

பெருந்தகையே, இந்த நாடு, என்னுடைய பிள்ளைகள், எனது மனைவிகள், என்னைச் சார்ந்த உற்றார்- உறவினருடன் நான் உட்பட அனைவரும் தங்கள் கட்டளையை எதிர் நோக்கி நிற்கிறோம். என்ன செய்யவேண்டு மென ஆணையிடுங்கள்'' என்றான்.

அப்போது புலஸ்தியர் அர்ஜுனனுடைய நித்திய வேள்விகள், அறச்செயல்கள், மகன்களின் நலன்பற்றி விசாரித்துவிட்டு அவனிடம், "அரசனே, தாமரை இதழ்கள் போன்ற கண்கள் கொண்டவனே, முழுநிலவு போன்ற திருமுகமுடையவனே! பத்துத் தலைகொண்ட இராவணனையே நீ வென்றிருக்கிறாய் என்பதால், உன் ஆற்றலுக்கு அளவே இல்லை என்பது தெரிகிறது. யாரிடமுள்ள அச்சத்தினால் பெருங்கடலும் காற்றும்கூட தங்கள் கூச்சலை நிறுத்திவிட்டு அவன் ஆணைக்காகக் காத்திருக்கின்றனவோ, போர்க்களத்தில் எவராலும் வெல்லப்பட முடியாதவன் எவனோ- அத்தகைய எனது பேரனை நீ கட்டிக் கொண்டுவந்துவிட்டாய். இதனால் எனது செல்லக் குழந்தையின் புகழுக்குக் குறை ஏற்பட்டுவிட்டது. உன்னைதான் எல்லாரும் போற்றுகிறார்கள். இப்போது உன்னிடம் நான் யாசித்துக் கேட்கிறேன். இராவணனை விட்டுவிடு'' என்றார்.

புலஸ்தியருடைய இந்த வேண்டுகோளுக்கு மறுபேச்செதுவும் பேசாமல், அர்ஜுனன் அதனை ஏற்றுக்கொண்டான். பேரரசனான அவன் மகிழ்வுடன் இராவணனை விடுவித்தான். தேவர்களின் எதிரியான இராவணனை விடுவித்ததோடு, மிகச்சிறந்த அணிகலன்கள், மாலைகள், ஆடைகள் கொடுத்து கௌரவித்தான்.

பின்னர் அக்னிசாட்சியாக, "நம்முடைய நட்பு ஒருவருக்கொருவர் துயரம் தருவதற்குப் பயன்படுவதாக அமைந்துவிடக்கூடாது' எனும் நிபந்தனையுடன் நட்புறவு செய்துகொண்டான். பின் பிரம்மாவின் மகனான புலஸ்திய முனிவரிடம் விடைபெற்றுத் தன் இருப்பிடம் சென்றான்.

இவ்வாறு அர்ஜுனனால் விடுதலை செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்ட இராவணனை மார்புறத் தழுவிக்கொண்டார் புலஸ்திய முனிவர். ஆனால் தோல்வியைத் தழுவியிருந்த இராவணன் வெட்கப்பட்டான். பிரம்மாவின் மகனும் முனிவர்களில் சிறந்த வரருமான புலஸ்தியர் இராவணனை விடுவித்ததோடு பிரம்மலோகம் சென்றார்.

இவ்வாறு கார்த்தவீர்யார்ஜுனனால் தோற்கடிக்கப்பட்ட பலசாலியான இராவணன், புலஸ்தியரின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டான். இராமபிரானே, உலகில் வல்லவனுக்கு வல்லவன் உண்டு. அதனால் தனக்கு நன்மையை விரும்புகிறவன் மற்ற எவரையும் அவமதிக்கக்கூடாது.

ஆயிரம் கரங்கள் படைத்த கார்த்த வீர்யார்ஜுனனுடன் நட்புறவு பெற்ற அரக்கர் தலைவன் மீண்டும் செருக்குற்று, உலக மெங்கும் சுற்றிவந்து மன்னர்களை அழிக்கத் தொடங்கினான்.

(தொடரும்)

om010522
இதையும் படியுங்கள்
Subscribe