34-ஆவது சர்க்கம் வாலி இராவணன் நட்பு
கார்த்தவீர்யார்ஜுனனிடமிருந்து விடுதலைபெற்ற இராவணன் சற்றும் அஞ் சாமல் உலகம் முழுவதையும் சுற்றிவந்தான்.
அரக்கனோ, மனிதனோ யாராக இருந்தா லும் சரி- மிகவும் பலசாலியென்று கேள்விப் பட்டுவிட்டால், உடனே அவனிடம் சென்று போருக்கு அழைப்பான்.
இந்தநிலையில் ஒருசமயம் வாலியால் ஆளப்பட்டு வந்த கிஷ்கிந்தைக்குச் சென்று வாலியைப் போருக்கு அழைத்தான்.
இராவணனைப் பார்த்து வாலியின் அமைச்சரான தாரன் என்பவன், அவனுடைய தந்தை சுஷேணன், இளவரசன் அங்கதன், சுக்ரீவன் முதலியோர் இராவணனி டம், "அரக்கர் தலைவனே! போரிட விரும்பும் உன்னை எதிர்த்து நிற்கும் ஆற்றல்கொண்ட வா- வெளியே சென்றிருக்கிறார். வானரர் களில் உன்னெதிரில் நிற்க வேறு யார் இருக்கிறார்கள்? இராவணா, நான்கு சமுத்திரங்களிலும் சந்தியாவந்தனம் செய்துவிட்டு, அனேகமாக இப்போது அவர் திரும்பிக்கொண்டிருக்கலாம். இரண்டு நாழிகைப் பொழுது நீ தங்கியிருந்தால் அவரைப் பார்க்கலாம்.
இங்கே சங்குகளைப்போல வெண்மை யாகக் குவிந்திருக்கும் எலும்புக் குவியல்களைப் பார். வாலியுடன் போர்புரியும் ஆவலுடன் வந்தவர்கள் அவருடைய வீரத்தினால் தோற்றுப்போய் மரணத்தைத் தழுவினர். இராவணனே, நீ தேவாமிர்தம் அருந்தியவ னாக இருந்தாலும் சரி- வாலியை சந்திக்கும் வரையில்தான் உன் உயிர் இருக்கும். அவரை சந்திக்கும் அந்தத் தருணம்தான் உன் வாழ்வின் இறுதி நொடியாக இருக்கும்.
விச்ரவஸின் மகனே, உலகிலேயே மிகவும் ஆச்சரியப்படத்தக்கவர் வாலி. சற்று பொறுத்திருந்து அவரைப் பார்த்துவிடு. அதன் பின் உன் உயிர் உன்னிடம் இருப்பது அரிது. அல்லது வெகுவிரைவில் உயிரைவிட நீ விரும்பினால் உடனே தெற்குக் கடற்கரையை நோக்கிச் செல். அங்கே அக்னியே உருவம் தரித்து நிற்பதுபோல் விளங்கும் வாலியைக் காண்பாய்'' என்றனர்.
உலகையே நடுங்கவைக்கும் இராவணன் தாரனை அச்சுறுத்திவிட்டு, புஷ்பக விமானத் திலேறி தெற்குக் கடற்கரைக்குச் சென்றான்.
அங்கு தங்கமலையைப் போன்றவனும், உதய சூரியன்போல் ஒளிவீசுபவனும், சந்தியா வந்தனத்தில் மனதை செலுத்திக்கொண்டி ருந்தவனுமான வாலியைக் கண்டு, கருமையான உடல்கொண்ட இராவணன் விமானத்திலிருந்து இறங்கி, வாலியைக் கட்டியிறுக்கும் நோக்கத்தில் ஓசையெழுப்பாமல் வேகமாக அவனை நோக்கிச் சென்றான்.
தற்செயலாக வாலி இராவணனை கவனித்துவிட்டான். இராவணனின் எண்ணத் தைப் புரிந்துகொண்டபோதிலும் வாலி சற்றும் கலங்கவில்லை. தீய எண்ணத்துடன் வந்திருக்கும் இராவணனைப் பார்த்தபிறகும், முயல்குட்டியைக் கண்ட சிங்கத்தைப் போலவும் பாம்பைக் கண்ட கருடனைப் போலவும் சற்றும் அவன் கவலை கொள்ள வில்லை. கண்டும் காணாதவன்போல இருந்தான் "என்னைக் கட்டியிறுக்கும் தீய நோக்குடன் வரும் இராவணனை கையிடுக்கில் அழுத்தி வைத்துக்கொண்டு மற்ற மூன்று கடல்களுக் கும் சென்று சந்தியாகால வழிபாடுகளை முடிப்பேன். என்னிடம் அகப்பட்டுக் கொண்ட இராவணனுடைய தொடைகள், கை- கால்கள், ஆடைகள் எல்லாம் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சி, கருடன் கொத்திச் செல்லும் பாம்பு தொங்கிக்கொண்டிருப் பதைப்போல அனைவரும் பார்ப்பார்கள்' என்று தன் மனதில் எண்ணிக்கொண்டு, மௌனமாக வைதீக மந்திரங்களை ஜெபித்தபடி நின்றான் வாலி.
பேராற்றலால் செருக்குற்றிருந்த வானரர் தலைவனும், அரக்கர் தலைவனும் ஒருவரை யொருவர் கட்டிப் பிணைப்பதில் ஆர்வத் துடன் இருந்தனர். அந்த நோக்கத்தை நிறை வேற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இராவணனின் மிக மெல்லிய காலடி ஓசைகளால், அவன் கைகளை அகலமாக விரித்து வைத்தபடி தன்னைப் பிடிக்க வருவதை உணர்ந்துகொண்ட வாலி, எதிர்முகமாகப் பார்த்துக்கொண்டிருந்தாலும் கருடன் ஒரு பாம்பை சட்டென்று தூக்கிச்செல்வதைப் போல இராவணனைக் கைப்பற்றினான். தன்னைப் பிடிக்கவந்த அரக்கர்கோனைத் தானே கைப்பற்றிய வாலி, அவனைக் கையிடுக் கில் அழுத்திவைத்துத் தொங்கவிட்டபடி வெகு வேகத்துடன் வானத்தைநோக்கிப் பறந்தான்.
வாலியின் கையிடுக்
34-ஆவது சர்க்கம் வாலி இராவணன் நட்பு
கார்த்தவீர்யார்ஜுனனிடமிருந்து விடுதலைபெற்ற இராவணன் சற்றும் அஞ் சாமல் உலகம் முழுவதையும் சுற்றிவந்தான்.
அரக்கனோ, மனிதனோ யாராக இருந்தா லும் சரி- மிகவும் பலசாலியென்று கேள்விப் பட்டுவிட்டால், உடனே அவனிடம் சென்று போருக்கு அழைப்பான்.
இந்தநிலையில் ஒருசமயம் வாலியால் ஆளப்பட்டு வந்த கிஷ்கிந்தைக்குச் சென்று வாலியைப் போருக்கு அழைத்தான்.
இராவணனைப் பார்த்து வாலியின் அமைச்சரான தாரன் என்பவன், அவனுடைய தந்தை சுஷேணன், இளவரசன் அங்கதன், சுக்ரீவன் முதலியோர் இராவணனி டம், "அரக்கர் தலைவனே! போரிட விரும்பும் உன்னை எதிர்த்து நிற்கும் ஆற்றல்கொண்ட வா- வெளியே சென்றிருக்கிறார். வானரர் களில் உன்னெதிரில் நிற்க வேறு யார் இருக்கிறார்கள்? இராவணா, நான்கு சமுத்திரங்களிலும் சந்தியாவந்தனம் செய்துவிட்டு, அனேகமாக இப்போது அவர் திரும்பிக்கொண்டிருக்கலாம். இரண்டு நாழிகைப் பொழுது நீ தங்கியிருந்தால் அவரைப் பார்க்கலாம்.
இங்கே சங்குகளைப்போல வெண்மை யாகக் குவிந்திருக்கும் எலும்புக் குவியல்களைப் பார். வாலியுடன் போர்புரியும் ஆவலுடன் வந்தவர்கள் அவருடைய வீரத்தினால் தோற்றுப்போய் மரணத்தைத் தழுவினர். இராவணனே, நீ தேவாமிர்தம் அருந்தியவ னாக இருந்தாலும் சரி- வாலியை சந்திக்கும் வரையில்தான் உன் உயிர் இருக்கும். அவரை சந்திக்கும் அந்தத் தருணம்தான் உன் வாழ்வின் இறுதி நொடியாக இருக்கும்.
விச்ரவஸின் மகனே, உலகிலேயே மிகவும் ஆச்சரியப்படத்தக்கவர் வாலி. சற்று பொறுத்திருந்து அவரைப் பார்த்துவிடு. அதன் பின் உன் உயிர் உன்னிடம் இருப்பது அரிது. அல்லது வெகுவிரைவில் உயிரைவிட நீ விரும்பினால் உடனே தெற்குக் கடற்கரையை நோக்கிச் செல். அங்கே அக்னியே உருவம் தரித்து நிற்பதுபோல் விளங்கும் வாலியைக் காண்பாய்'' என்றனர்.
உலகையே நடுங்கவைக்கும் இராவணன் தாரனை அச்சுறுத்திவிட்டு, புஷ்பக விமானத் திலேறி தெற்குக் கடற்கரைக்குச் சென்றான்.
அங்கு தங்கமலையைப் போன்றவனும், உதய சூரியன்போல் ஒளிவீசுபவனும், சந்தியா வந்தனத்தில் மனதை செலுத்திக்கொண்டி ருந்தவனுமான வாலியைக் கண்டு, கருமையான உடல்கொண்ட இராவணன் விமானத்திலிருந்து இறங்கி, வாலியைக் கட்டியிறுக்கும் நோக்கத்தில் ஓசையெழுப்பாமல் வேகமாக அவனை நோக்கிச் சென்றான்.
தற்செயலாக வாலி இராவணனை கவனித்துவிட்டான். இராவணனின் எண்ணத் தைப் புரிந்துகொண்டபோதிலும் வாலி சற்றும் கலங்கவில்லை. தீய எண்ணத்துடன் வந்திருக்கும் இராவணனைப் பார்த்தபிறகும், முயல்குட்டியைக் கண்ட சிங்கத்தைப் போலவும் பாம்பைக் கண்ட கருடனைப் போலவும் சற்றும் அவன் கவலை கொள்ள வில்லை. கண்டும் காணாதவன்போல இருந்தான் "என்னைக் கட்டியிறுக்கும் தீய நோக்குடன் வரும் இராவணனை கையிடுக்கில் அழுத்தி வைத்துக்கொண்டு மற்ற மூன்று கடல்களுக் கும் சென்று சந்தியாகால வழிபாடுகளை முடிப்பேன். என்னிடம் அகப்பட்டுக் கொண்ட இராவணனுடைய தொடைகள், கை- கால்கள், ஆடைகள் எல்லாம் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சி, கருடன் கொத்திச் செல்லும் பாம்பு தொங்கிக்கொண்டிருப் பதைப்போல அனைவரும் பார்ப்பார்கள்' என்று தன் மனதில் எண்ணிக்கொண்டு, மௌனமாக வைதீக மந்திரங்களை ஜெபித்தபடி நின்றான் வாலி.
பேராற்றலால் செருக்குற்றிருந்த வானரர் தலைவனும், அரக்கர் தலைவனும் ஒருவரை யொருவர் கட்டிப் பிணைப்பதில் ஆர்வத் துடன் இருந்தனர். அந்த நோக்கத்தை நிறை வேற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இராவணனின் மிக மெல்லிய காலடி ஓசைகளால், அவன் கைகளை அகலமாக விரித்து வைத்தபடி தன்னைப் பிடிக்க வருவதை உணர்ந்துகொண்ட வாலி, எதிர்முகமாகப் பார்த்துக்கொண்டிருந்தாலும் கருடன் ஒரு பாம்பை சட்டென்று தூக்கிச்செல்வதைப் போல இராவணனைக் கைப்பற்றினான். தன்னைப் பிடிக்கவந்த அரக்கர்கோனைத் தானே கைப்பற்றிய வாலி, அவனைக் கையிடுக் கில் அழுத்திவைத்துத் தொங்கவிட்டபடி வெகு வேகத்துடன் வானத்தைநோக்கிப் பறந்தான்.
வாலியின் கையிடுக்கில் சிக்கிக்கொண்ட இராவணன் தன் நகங்களால் பலமுறை வாலியைத் துன்புறுத்தினான். ஆனால் காற்றானது மேகக் கூட்டத்தை விரட்டிச் செல்வதைப்போல, இராவணனை சுமந்து கொண்டு பறந்தான் வாலி. இவ்வாறு இராவணன் தூக்கிச் செல்லப்படுவதைக் கண்ட அவனது அமைச்சர்கள் இராவணனை விடுவிப்பதற்காக பெருத்த ஆரவாரம் செய்தபடி பின்தொடர்ந்தனர். அரக்கர் கள் பின்தொடர்ந்துவர வானில் பறந்து கொண்டிருந்த வாலி, மேகங்கள் தொடரும் சூரியனைப்போல பேரொளியுடன் விளங்கி னான். அரக்க அமைச்சர்கள் எவ்வளவோ முயன்றும் வாலியின் அருகில்கூட நெருங்க முடியவில்லை. அவனுடைய கைகள், கால் களின் வேகத்தால் ஏற்பட்ட காற்றினால் தாக்கப்பட்டு களைப்புற்று நின்றுவிட்டார் கள்.
தாக்கப்பட்டு களைப்புற்று நின்றுவிட்டார் கள்.
செல்லும் வழியிலிருந்த மாபெரும் மலைகளே அவனுக்கு வழிவிட்டு விலகிச் சென்றன என்னும்போது, ரத்தமும் சதையும் கூடியவையும், இன்னும் நீண்டநாள் உயிர் வாழ வேண்டுமெனும் ஆசைகொண்டுள்ள வையுமான உயிரினங்களைப்பற்றி என்ன சொல்லமுடியும்? ஆகாயத்தில் பறக்கும் வாலியை ஆகாயத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பூதங்கள் போற்றிப் புகழ்ந்தார்கள்.
இவ்வாறு இராவணனை கையில் இடுக்கிப் பிடித்தபடி மேற்குக் கடற்கரைக்கு வந்த வாலி, அங்கு நீராடி சந்தியாகால வழிபாடுகளை முடித்துவிட்டு, இராவணனை சுமந்தபடி வடக்குக் கடற்கரை நோக்கிச் சென்றான். மனோவேகம், வாயுவேகம் கொண்ட வானரமான வாலி, பல்லாயிரம் யோசனை தூரத்தை எதிரியை சுமந்தபடியே கடந்துசென்று வடக்குக் கடற்கரையை அடைந்தான். அங்கு சந்தியா கால வழிபாடு களை முடித்துவிட்டு இராவணனை சுமந்து கிழக்குக் கடற்கரைக்குச் சென்றான் அங்கும் சந்தியாகால வழிபாடுகளை முடித்த இந்திரனின் அம்சமாகத் தோன்றிய வாலியானவன் கிஷ்கிந்தை நோக்கி வந்தான்.
நான்கு பெருங்டல்களிலும் சந்தியா வந்தனம் முடித்த வாலி இராவணனை சுமந்துவந்த களைப்பால் கிஷ்கிந்தையை ஒட்டியிருந்த பூங்காவில் இறங்கினான். அங்கு இராவணனை விடுவித்த வாலி அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து, "யாரப்பா நீ? எங்கிருந்து வருகிறாய்?'' என கேட்டான்.
வாலியின் செய்கையால் பெரும் வியப்பில் திளைத்த இராவணன் களைப்பினால் கண்கள் செருக வாலியைப் பார்த்து, "வானரத் தலைவனே, தேவேந்திரன்போல் பராக்கிரம் கொண்டவனே! அரக்கர் தலைவனான இராவணன் நான். உன்னுடன் போர்புரியும் விருப்பத்தோடு இங்கு வந்தேன். அந்த செயல் உன்னால் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
என்னவொரு வலிமை! வீரம்! என்னவொரு மிடுக்கு! ஏதோ விலங்கைக் கட்டியிழுத்துச் செல்வதைப்போல நான்கு திசைகளிலும் இருக்கும் கடல்களுக்கு என்னை அலைய வைத்தாய். வீரனே, என்னை சுமந்தபடி கொஞ்சமும் களைப்பில்லாமல் நான்கு கடல்களுக்கும் சென்றுவரக்கூடியவன் உன்னைத்தவிர வேறு யார்தான் இருப்பார்கள்?
வானரனே! இவ்வளவு வேகம் உலகில் மூன்று இடங்களில்தான் உண்டு. மனம், காற்று, கருடன் ஆகியவையே அவை. இப்போது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உன்னிடமும் பெரும் வேகம் இருக்கிறதென்பது விளங்கிவிட்டது.
வானரர்களில் உத்தமனே, உன் அளவற்ற வலிமையை நான் அனுபவித்து உணர்ந்து கொண்டேன். அதனால் அக்னிசாட்சியாக, நெடுங்காலம் நெருக்கமாக நிலைத்திருக்கும் உனது நட்புறவைப் பெற விரும்புகிறேன். மனைவி, மக்கள், நாடு, நகரம், போகம், ஆடை, உணவு ஆகிய எல்லாவற்றிலும் நம் இருவருக்கும் பொதுவான உரிமையிருக்கும்'' என்றான்.
பின்னர் அக்னி வளர்த்து இரு மன்னர்களும் சகோதர உறவையேற்று, ஒருவரையொருவர் மார்புறத் தழுவிக்கொண்டனர். அவ்விருவ ரும் கைகளைப் பற்றிக்கொண்டு மகிழ்ச்சி யுடன், குகைக்குள் செல்லும் இரு சிங்கங்கள் போன்று கிஷ்கிந்தைக்குள் நுழைந்தார்கள். வாலியின் தம்பியான சுக்ரீவனைப்போல மிக மரியாதையுடன் உபசரிக்க பட்ட இராவணன் அங்கு ஒரு மாதகாலம் தங்கியிருந்தான். பின்னர் மூன்று உலகங்களையும் பெயர்த்தெறிய விரும்பும் அவனுடைய அமைச்சர்கள் வந்து அவனை அழைத்துச்சென்றனர்.
(அகத்தியர் இராமனுக்குக் கூறிவருகிறார்).
"ஐயனே, வாலியினால் இராவணனின் கர்வம் அடக்கப்பட்டது. பின்னர் அக்னிசாட்சியாக சகோதரனாக ஏற்றுக் கொள்ளப்பட்டான் என்னும் இந்த நிகழ்ச்சி வெகு காலத்திற்குமுன் நிகழ்ந்தது. இராமபிரானே, வாலியிடம் எல்லையற்ற- நிகரற்ற வலிமை இருந்தது. விட்டில் பூச்சியை நெருப்பு எரிப்பது போல அது உன்னால் எளிதாகப் பொசுக்கப் பட்டது.
35-ஆவது சர்க்கம் அனுமன் பிறப்பு பின்னர் இராமபிரான் அகத்திய முனிவரைப் பார்த்து கைகளைக் கூப்பிய வண்ணம் மிகப் பணிவுடன், "முனிவரே, வாலி, இராவணன் ஆகிய இருவருடைய வலிமை நிகரில்லாதது என்பதில் சந்தேகமில்லைதான். ஆனால் இவ்விருவருடைய வலிமையும் அனுமனுக்கு ஈடாகாது என்பது என் கருத்து.
சூரத்தனம், செயல்திறன், உடல்வலிமை, மனவுறுதி, பராக்கிரமம், நீதி, அறிவுக் கூர்மை, இயல்பாகவே மரியாதை காட்டும் பண்பு என அனைத்தும் அனுமனிடம் குடிகொண்டிருந்தன.
சீதையைத் தேடிச் செல்லும்போது பெருங்கடலைப் பார்த்தவுடன் வானரர்கள் அனைவரும் திகைத்து நின்றுவிட்டனர். அவர் களுக்கு தைரியமூட்டி, நூறு யோசனை நீளமுடைய பெருங்கடலைத் தாவிக் கடந்தான் அனுமன். இலங்கையை நெருப்புக்கு இரை யாக்கி, அதன்மூலம் அதனை வென்றவனா னான். இராவணனின் அந்தப்புரத்திற்குச் சென்று சீதையைப் பார்த்து பேசவும் செய்தான். அவளுக்கு ஆறுதல் கூறினான்.
படைத்தலைவர்கள், மந்திரி குமாரர்கள், கிங்கரர்கள், இராவணனின் மகன் அட்ச குமாரன் போன்றோரை ஒருவனாகவே போரிட்டு வீழ்த்தினான். பின்னர் நாக பாசத்திலிருந்து தானாகவே விடுபட்டு, அவன் இராவணனை நடுக்கமுறச் செய்தான். உலகமே தீப்பற்றி எரிவதுபோல, அவன் வைத்த தீயினால் இலங்கை சாம்பலாக்கப்பட்டது. அனுமனின் செயற்கரிய செயல்களாக எந்த சாகசங்களைக் கேட்கிறோமோ அத்தகைய வீரச் செயல்களை காலதேவனோ, இந்திரனோ, விஷ்ணுவோ, வருணனோகூட செய்யவில்லை.
இவனுடைய தோள் வலிமையால் இலங்கை (வாக்களித்தபடி விபீஷணனுக்குக் கொடுக்க), சீதை, லட்சுமணன், வெற்றி, கோசல ராஜ்யம், மற்றும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் நான் அடைந்தேன். வானரத் தலைவன் சுக்ரீவனுக்கு நண்பனும் அமைச்சரும் என்றமுறையில் அனுமன் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால் சீதையின் இருப்பிடத்தை அறிந்து சொல்லும் ஆற்றல் வேறு எவருக்கு இருக்கும்?
வாலிக்கும் சுக்ரீவனுக்குமிடையே பகை உண்டானபோது, சுக்ரீவனுக்கு நன்மை செய்யும் நோக்கத்துடன் காட்டுத்தீ மரத்தை எரிப்பதுபோல அனுமன் வாலியை எரிக்காததற்கு என்ன காரணமென்று விளங்கவில்லை. அந்த காலகட்டத்தில் அனுமனுக்குத் தன் வலிமைபற்றித் தெரிந்தி ருக்கவில்லை என்று எண்ணுகிறேன். அதனால் தான் தன் உயிரைக் காட்டிலும் மேலாக மதித்த சுக்ரீவன் துன்பப்படுவதைப் பார்த்ததும் வாலி விஷயத்தில் எதுவும் செய்யமுடியாதவ னாக இருந்தான்.
அமரர்களால் வணங்கப்படுபவரே, அனுமனைப் பற்றிய இந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவாகக் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
யுக்தி வாதங்களோடுகூடிய இராமபிரானது பேச்சைக் கேட்ட அகத்திய முனிவர் அனுமனின் எதிரிலேயே பின்வருமாறு கூறத் தொடங்கினார்:
ரகுகுல உத்தமனே, அனுமனைப்பற்றி நீ கூறியவையெல்லாம் உண்மையே. வலிமை, அறிவு, வேகம் போன்றவற்றில் அனுமனுக்கு நிகரானவர் இல்லை. எதிரிகளை அடக்கும் ஆற்றல்கொண்டவனாக இருந்தும், எந்த முனிவர்களுடைய சாபம் வீணாகப் போகாதோ அவர்கள், "இவன் தன் வலிமையை அறியாமல் போகக்கடவது' என்று வெகு காலத்திற்கு முன்னரே சாபமிட்டுவிட் டார்கள். இராமனே, அவன் குழந்தையாக இருந்த காலத்திலேயே செய்த அரும்பெரும் செயல்களை விளக்கிக் கூறமுடியாது. அதைக் கேட்பதில் உனக்கு விருப்பமிருந்தால் நான் சொல்லப்போவதை கூர்ந்து கேட்பாயாக.
சூரியனால் கொடுக்கப்பட்ட வரத்தின் பயனாக, சுமேரு என்னும் பொன்மயமான மலையை இவனுடைய தந்தை கேசரி என்பவன் ஆட்சிபுரிந்து வந்தான். அவனுடைய பிரியமான பத்தினி அஞ்சனா என்பவள் வயிற்றிலிருந்து ஒரு மகவை வாயுதேவன் பிறக்கச் செய்தான். அஞ்சனாதேவி இவனைப் பெற்றெடுத்தபிறகு இவனது உடல் வண்ணம் நெற்பயிரின் முனைபோல சிவப்பாக இருந்தது.
ஒருநாள் பழங்களை சேகரித்து வருவதற்காக இல்லத்திலிருந்து புறப்பட்டு அடர்ந்த காட்டுக்குள் சென்றாள் அஞ்சனா தேவி. தாயைக் காணாததாலும், பசியைத் தாங்க இயலாததாலும், முன்பு சரவணப் பொய்கையில் பாலமுருகன் அழுததைப்போல இந்த குழந்தையும் அழுதது. அப்போது செக்கச்சிவந்த செம்பருத்திப்பூப்போல விளங்கிய உதயசூரியனைக் கண்டு, "இது ஒரு பெரிய பழம்போல இருக்கிறதே!' என்று, அதைப் பிடிக்கும் எண்ணத்துடன் சூரியனை நோக்கித் தாவினான். இளஞ்சூரியனை நோக்கி இளஞ்சூரியனே உருவெடுத்து வந்ததுபோல ஒரு குழந்தை! அனுமன் குழந்தைத்தனமாக இவ்வாறு தாவிச்செல்வதைக் கண்டு தேவர், தானவர், யக்ஷர்கள் போன்றோர் பெருவியப்பு கொண்டனர்.
இந்த வாயு குமாரன் வானத்தைக் கடந்துசெல்லும் மகத்தான வேகமானது வாயு, கருடன், மனம் ஆகியவற்றுக்குக்கூட இல்லை. குழந்தைப் பருவத்திலேயே இவ்வளவு வேகமாகச் செல்லும் ஆற்றல் உள்ளவன் இளமைப் பருவத்தை அடைந்ததும் எவ்வளவு வேகத்தை அடைவான்!
தன்னுடைய மகன் சூரியனை நோக்கிச் செல்வதைக்கண்ட வாயு, சூரியனின் கதிர்களால் மகன் எரிந்துபோகாமல் இருப்பதற்காக அவனைக் காப்பாற்றும் நோக்கில் பனிக்குவியலின் குளிர்ச்சியை சுமந்து அவனைப் பின்தொடர்ந்து வந்தான். இவ்வாறு தந்தையின் உறுதுணையாலும், குழந்தைத்தனத்தாலும் பல்லாயிரம் யோசனை தூரம் ஆகாயத்தில் உயரே சென்று சூரிய தேவனின் அண்மையை அடைந்தான். "இவன் சிறுகுழந்தை. நன்மை- தீமை அறியமாட்டான். எதிர்காலத்தில் இவனால் தேவர்களுக்குப் பல நன்மைகள் ஏற்படவிருக்கின்றன' என்றெண்ணிய சூரியபகவான் அவனை எரிக்காமல் விட்டார். எந்த நாளில் இவன் சூரியனைப் பிடிப்பதற்காகப் பாய்ந்து சென்றனோ, அந்த நாள் சூரியன் ராகுவால் கவ்வப்படவேண்டிய நாளாக இருந்தது. சூரியனுடைய தேரை தீண்டத் தொடங்கியிருந்த ராகுவின் மீது குழந்தை அனுமனின் கை பட்டவுடன், சூரிய- சந்திரர்களையே அடக்கிவைக்கும் ராகு மிகவும் அஞ்சி அங்கிருந்து ஓடிவிட்டான்.
சிம்ஹிகையின் மகனான ராகு மிகவும் ஆத்திரம் கொண்டு இந்திரனின் மாளிகைக்குச் சென்றான். அங்கு தேவர்களால் சூழப்பட்டிருந்த இந்திரனைக்கண்டு புருவங்களை நெறித்தபடி, "வலிமைவாய்ந்த விருத்திராசுரனைக் கொன்றவரே, என் பசியைத் தீர்த்துக்கொள்வதற்காக சூரிய- சந்திரர்களை எனக்களித்தீர்கள். ஆனால் இப்பொழுது வேறொருவனுக்கும் கொடுத்திருக்கிறீர்கள். இது எந்தவகையில் நியாயம்? இன்று அமாவாசை நாள். சூரியனைப் பிடிப்பதற்காக நான் அங்கு சென்றேன். இதனிடையில் வேறொரு ராகு வந்து வேகமாக அவரைக் கைப்பற்றிக்கொண்டான்'' என்றான்.
ராகு கூறியதைக்கேட்டு இந்திரன் மிகவும் கலக்கமடைந்தான். அவன் சிம்மாசனத்தை விட்டு சட்டென்று எழுந்தான். கயிலாய சிகரம்போல் ஒளிர்வதும், நான்கு தந்தங்கள் கொண்டதும், மதநீரைப் பெருக்கிக்கொண்டிருப்பதும், கண்கவரும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருப்பதும், உயரமானதும், பொன்மணிகளின் ஓசையால் ஆரவாரம் செய்துகொண்டிருப்பதுமான சிறந்த யானையான ஐராவதத்தின்மீது ஏறிக்கொண்ட இந்திரன், ராகு முன்னே செல்ல குழந்தை அனுமனும் சூரியதேவனும் இருந்த இடத்தைநோக்கிச் சென்றான். ஆனால் இந்திரனை விட்டுவிட்டு மிக வேகமாக முன்னே சென்றுவிட்டான் ராகு.
அப்போது மலைச் சிகரம் போன்ற பேருடல் கொண்ட ராகு விரைந்து வருவதை அனுமன் கண்டான். ராகு என்னும் பழத்தைப் பிடிப்பதற்காக சூரியனை விட்டுவிட்டு மீண்டும் ஆகாயத்தில் தாவினான் அனுமன்.
இராமச்சந்திரா, தன்னை நோக்கி ஓடிவரும் வானரக் குழந்தையைக் கண்டு, உடலின் முகப்பகுதி மட்டுமுடைய ராகு எதிர்திசையில் திரும்பி ஓடினான். இந்த இக்கட்டிலிருந்து இந்திரன்தான் தன்னைக் காப்பாற்றமுடியும் என்னும் நம்பிக்கையில் ராகு, "இந்திரா இந்திரா...'' என்று கூவினான். அவனது முதல் அழைப்பிலேயே அவனைப் புரிந்துகொண்ட இந்திரன், "பயப்படாதே, நான் இவனைக் கொன்றுவிடுகிறேன்'' என்று சொன்னான்.
இதனிடையே ஐராவத யானையைப் பார்த்த அனுமன், இதுவும் ஒரு மாபெரும் பழம்போல இருக்கிறதே என்று அதைப் பிடிப்பதற்காக ஓடினான்.
இந்திராணியின் கணவனான இந்திரன், வேகமாக தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த குழந்தையிடம் பெரிதாகக் கோபம் கொள்ள வில்லை. எனவே விரல் நுனிகளால் வஜ்ரா யுதத்தை விடுத்து அனுமனைத் தாக்கினான்.
வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட அனுமன் பூமி யில் ஒரு மலைமீது விழுந்தான். அதனால் அவ னுடைய இடப்பக்க கன்னம் பிளவுபட்டது.
தனது மகன் தாக்கப்பட்டு விழுந்தது கண்டு பரபரப்படைந்த வாயுவுக்கு இந்திரன் மீது மிகவும் கோபம் உண்டாயிற்று. அது எல்லா உயிர்களுக்கும் துன்பம் விளைவிப்ப தாக அமைந்தது. உலக பாலகனான வாயு உயிர்ப் பிராணிகளின் சுவாசமாக சஞ்சரிப்பதை நிறுத்திவிட்டு, தன் குழந்தையை எடுத்துக் கொண்டு ஒரு மலைக் குகையினுள் புகுந்து கொண்டான். இந்திரன் மழையைத் தடுத்து நிறுத்தி மக்களுக்குத் துன்பத்தைத் தருவதைப் போல, வாயு உயிர்களின் மலத்துவாரங்களை அடைத்துத் துன்புறுத்தினான். அதனால் அனைத்து உயிரினங்களும் வாய்விட்டுக் கதறியழுதன. வாயுதேவனுக்கு உண்டான கோபத்தால் அனைத்து உயிரினங்களின் சுவாசமும் நின்றுபோனது. மூட்டுகளில் நெகிழ்ச்சியில்லாமல் போனதால் அவை இயங்க முடியாமல் ஆயின. பிராணிகள் வெறும் கட்டைபோல அசைவற்றுக் கிடந்தன.
வாயுவின் கோபத்தின் விளைவாக மூன்று உலகங்களிலும் வேத பாராயணம், வேள்விகள், அறச்செயல்கள் என எதுவும் நடை பெறவில்லை. நரகத்தில் விழுந்துவிட்டதைப் போல அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்து கிடந்தார்கள். அப்போது துயரத்திலிருந்த உயிர்ப் பிராணிகள், கந்தர்வர், தேவர், அசுரர், மானிடர்கள் நலம்பெற விரும்பி பிரம்மதேவரிடம் ஓடிச் சென்று முறையிட்ட னர்.
மகோதரம் என்னும் வயிற்று நோயால் பீடிக்கப்பட்டவர்கள்போல பெருத்த வயிற்றுடன் தவித்துக்கொண்டிருந்த தேவர் கள் கைகூப்பி, "இறைவனே, தாங்கள் நான்கு விதமான உயிர்ப் பிராணிகளைப் படைத்தீர்கள். நாங்கள் உயிருடன் இருப்பதற்கான பொறுப்பை வாயுவிடம் தந்தீர்கள். நாங்கள் மூச்சு விடுவதற்கு அவரே ஆதாரமானவர். ஆனால் இப்போது அவர் அந்தப்புரப் பெண்ணைப்போல எங்கள் உடலுக்குள்ளேயே பதுங்கியிருக்கிறார். துன்பத்தில் ஆழ்ந்துள்ள நாங்கள் தங்களைச் சரணடைந்துள்ளோம். துக்கத்தைப் போக்குபவரே, வாயுவின் சஞ் சாரம் இல்லாததால் ஏற்பட்டுள்ள துன்பத்தை நீங்கள்தான் போக்கவேண்டும்'' என்று கூறி அழுதனர்.
அந்த கோரிக்கையைக் கேட்ட உயிர்களின் தலைவரும் காப்பாளருமான பிரம்மதேவர், "இதற்கொரு காரணம் உண்டு. வாயுதேவன் மிகக் கோபம்கொண்டு தடைசெய்த காரணத்தைக் கேளுங்கள். இந்திரன் ராகுவினுடைய சொல்லைக் கேட்டு வாயுகுமாரனைத் தாக்கி வீழ்த்தினான். அதனால் வாயுதேவன் கோபம் கொண்டிருக்கிறான். உடலற்றவனான வாயு உடலுக்குள் புகுந்துகொண்டு பரிபாலித்து வருகிறான். அவனது சஞ்சாரமில்லாத உடல் வெறும் கட்டைபோல ஆகிவிடுகிறது. வாயுதான் உயிர்களுக்குப் பிராணன். சுகத்தைக் கொடுப்பது. உலகம் முழுவதுமே வாயுதான். வாயுவினால் புறக்கணிக்கப்பட்ட உலகம் சுகத்தை அடையாது. வாயுதான் உலகத்தின் உயிர்மூச்சு. இப்போது வாயுவினால் புறக் கணிக்கப்பட்டுள்ள உயிரினங்கள் அனைத்தும் உயிரற்றவையாக வெறும் கட்டைபோலவும் சுவர்போலவும் உள்ளன.
அதிதியின் புதல்வர்களே, துன்பத்தைத் தந்துகொண்டிருக்கும் வாயு ஒளிந்துகொண்டி ருக்கும் இடத்திற்கு நாம் செல்வோம். வாயுவை சமாதானப்படுத்தினாலொழிய உலகத்தின் அழிவைத் தடுக்கமுடியாது'' என்றார்.
பின்னர் தேவர், கந்தர்வர், நாகர், குஹ்யர் முதலிய பிரஜைகளுடன் வாயுதேவன் மறைந் திருந்த இடத்திற்கு பிரம்மதேவர் சென்றார். சூரியன், அக்னி, தங்கம்போல் பிரகாசித்துக் கொண்டிருந்த குழந்தையை மடியில் வைத்துக் கொண்டிருக்கும் வாயுவைக் கண்டார். அந்த நிலையில் குழந்தையைப் பார்த்ததும் பிரம்மா வின் இதயத்தில் இரக்கம் கசிந்தது!
(தொடரும்)