வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு : மலரோன்(15)

/idhalgal/om/order-srimad-ramayana-inspired-by-valmiki-maharishi-collection-malaron-15

30-ஆவது சர்க்கம் இந்திரனின் தோல்விக்கான காரணம்

ராவணனுடைய மகன் மேகநாதன் பெரும் ஆற்றல்கொண்ட இந்திரனை வெற்றிகொண்டு தனது நகரத்திற்குக் கொண்டுசென்றதும், தேவர்கள் அனைவரும் பிரம்மாவை முன்னிருத்தி இலங்கையைச் சென்றடைந்தனர்.

பிரம்மா ஆகாயத்தில் நின்றபடியே, சகோதரர்களும் மகன்களும் சூழ அரியணையில் வீற்றிருந்த இராவணனிடம் இனிய சொற்களால் பேசலானார்.

"அன்புச்செல்வனே இராவணா, போர்க்களத்தில் உன் மகனது வீரத்தைக்கண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். உனக்கு நிகரான- ஏன் உன்னைவிட மேம்பட்ட வீரத்தை அவன் பெற்றிருக்கிறான்.

உன் மகனது பேராற்றலின் துணையுடன் உன்னுடைய வீரத்தினால் மூன்று உலகங்களையும் நீ வென்றுவிட்டாய். உனது சபதத்தை நிறைவேற்றிவிட்டாய். உன்னிடம் நான் மகிழ்வுடன் இருக்கிறேன்.

உன்னுடைய மகன் மேகநாதன் அளவற்ற ஆற்றலுடையவன். இனி இவன் இந்திரஜித் (இந்திரனை வென்றவன்) என்னும் பெயரால் உலகில் புகழடைவான்.

எவனுடைய உதவியைக்கொண்டு தேவர்கள் அனைவரையும் உன் கைப்பிடியில் அடக்கி வைத்துக்கொண்டாயோ, அத்தகைய இவன் மிகுந்த பலசாலியாகவும் எவராலும் வெல்லமுடியாதவனாகவும் ஆகப்போகிறான்.

தேவர் தலைவனான தேவேந்திரனை விடுவிப்பாய். அவனை விடுதலை செய்வதற்கு மாற்று உபகாரமாக தேவர்கள் என்ன தரவேண்டும் என்பதையும் கேட்பாய்'' என்றார்.

உடனே, எதிரிகளை வெற்றிகொள்ளும் மாவீரனான இந்திரஜித், "ஐயனே, தேவேந்திரனை விடுவிக்கவேண்டுமானால் எனக்கு சாகாவரம் தந்தருளவேண்டும்'' என்று கேட்டான். தொடர்ந்து அவன், "இவ்வுலகில் நாற்கால் பிராணிகள், வானத்தில் பறக்கும் பறவை கள் மற்றுமுள்ள பலமிக்க உயிரினங்கள், மரங்கள், புதர்கள், செடி கொடிகள், பாறைகள், மலைகள் ஆகிய எல்லாமே ஒன்றைக் கண்டு மற்றொன்று அஞ்சுகின்றன. அதனால் இந்த உலகில் எல்லாருக்கும் எல்லாவற்றையும் கண்டு அச்சம் இருக்கிறது'' என்றான்.

அப்போது பிரம்மா, "இவ்வுலகில் நிரந்தரமான வாழ்வென்பது நாற்கால் பிராணி, பறவைகள், ஆற்றல்கொண்ட பூதங்கள் போன்ற எவற்றுக்கும் இல்லை'' என்றார்.

இதைக்கேட்ட இந்திரஜித் என்னும் மேகநாதன், "நான் என் எதிரிகளை வெற்றிகொள்ள விரும்பி போர்க்களத்தில் இறங்குவதற்குமுன், மந்திரங்கள் கூறி அக்னி தேவனுக்கு ஆகுதிகள் கொடுப்பேன். அப்போது அந்த வேள்விக் குண்டத்திலிருந்து குதிரைகள் பூட்டிய ஒரு தேர் எழும்பி வரவேண்டும். அந்தத் தேரில் நான் இருக்கும்வரை எவராலும் என் உயிரைப் பறிக்கமுடியாதிருக்க வேண்டும். இதுவே நான் உறுதியாக் கேட்கும் வரம்'' என்றான்.

மேலும் அவன் பிரம்மதேவரிடம், "போரில் வெற்றிகொள்வதற்காக சங்கல்பம் செய்துகொண்டு நான் தொடங்கும் ஜெபம், ஹோமங்கள் முடிவுறாத நிலையில், போர் செய்தே ஆகவேண்டும் என்னும் இக்கட்டான சூழல் ஏற்பட்டால், அப்போது எனக்கு அழிவு ஏற்படலாம். ஐயனே, அனைவரும் தவம்செய்து அமரநிலை அடையவேண்டும் என்று பிரார்த்திக்கிறார் கள். ஆனால் நானோ என் வீரத்தால் அமர நிலையை அடையக் கேட்கிறேன்'' என்றான்.

பிரம்மதேவர் "அவ்வாறே ஆகட்டும்'' என்று கூறினார்.

இந்திரஜித்தால் விடுவிக்கப்பட்ட இந்திரனோடு தேவர்கள் தேவலோகம் சென்றனர்.

அயோத்தி அரண்மனையில், இராம பிரானுக்கு இந்த வரலாற்றை அகத்தியர் கூறிவருகிறார்: ராமா, இந்திரன் சிறைப்பட்ட தால், இந்திர உலகத்தவர்களின் இயற்கை யான ஒளி மங்கிப்போயிற்று. இந்திரன் மிகவும் கவலைகொண்டு தியானத்தில் ஆழ்ந்தான். அந்த பரிதாப நிலைய

30-ஆவது சர்க்கம் இந்திரனின் தோல்விக்கான காரணம்

ராவணனுடைய மகன் மேகநாதன் பெரும் ஆற்றல்கொண்ட இந்திரனை வெற்றிகொண்டு தனது நகரத்திற்குக் கொண்டுசென்றதும், தேவர்கள் அனைவரும் பிரம்மாவை முன்னிருத்தி இலங்கையைச் சென்றடைந்தனர்.

பிரம்மா ஆகாயத்தில் நின்றபடியே, சகோதரர்களும் மகன்களும் சூழ அரியணையில் வீற்றிருந்த இராவணனிடம் இனிய சொற்களால் பேசலானார்.

"அன்புச்செல்வனே இராவணா, போர்க்களத்தில் உன் மகனது வீரத்தைக்கண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். உனக்கு நிகரான- ஏன் உன்னைவிட மேம்பட்ட வீரத்தை அவன் பெற்றிருக்கிறான்.

உன் மகனது பேராற்றலின் துணையுடன் உன்னுடைய வீரத்தினால் மூன்று உலகங்களையும் நீ வென்றுவிட்டாய். உனது சபதத்தை நிறைவேற்றிவிட்டாய். உன்னிடம் நான் மகிழ்வுடன் இருக்கிறேன்.

உன்னுடைய மகன் மேகநாதன் அளவற்ற ஆற்றலுடையவன். இனி இவன் இந்திரஜித் (இந்திரனை வென்றவன்) என்னும் பெயரால் உலகில் புகழடைவான்.

எவனுடைய உதவியைக்கொண்டு தேவர்கள் அனைவரையும் உன் கைப்பிடியில் அடக்கி வைத்துக்கொண்டாயோ, அத்தகைய இவன் மிகுந்த பலசாலியாகவும் எவராலும் வெல்லமுடியாதவனாகவும் ஆகப்போகிறான்.

தேவர் தலைவனான தேவேந்திரனை விடுவிப்பாய். அவனை விடுதலை செய்வதற்கு மாற்று உபகாரமாக தேவர்கள் என்ன தரவேண்டும் என்பதையும் கேட்பாய்'' என்றார்.

உடனே, எதிரிகளை வெற்றிகொள்ளும் மாவீரனான இந்திரஜித், "ஐயனே, தேவேந்திரனை விடுவிக்கவேண்டுமானால் எனக்கு சாகாவரம் தந்தருளவேண்டும்'' என்று கேட்டான். தொடர்ந்து அவன், "இவ்வுலகில் நாற்கால் பிராணிகள், வானத்தில் பறக்கும் பறவை கள் மற்றுமுள்ள பலமிக்க உயிரினங்கள், மரங்கள், புதர்கள், செடி கொடிகள், பாறைகள், மலைகள் ஆகிய எல்லாமே ஒன்றைக் கண்டு மற்றொன்று அஞ்சுகின்றன. அதனால் இந்த உலகில் எல்லாருக்கும் எல்லாவற்றையும் கண்டு அச்சம் இருக்கிறது'' என்றான்.

அப்போது பிரம்மா, "இவ்வுலகில் நிரந்தரமான வாழ்வென்பது நாற்கால் பிராணி, பறவைகள், ஆற்றல்கொண்ட பூதங்கள் போன்ற எவற்றுக்கும் இல்லை'' என்றார்.

இதைக்கேட்ட இந்திரஜித் என்னும் மேகநாதன், "நான் என் எதிரிகளை வெற்றிகொள்ள விரும்பி போர்க்களத்தில் இறங்குவதற்குமுன், மந்திரங்கள் கூறி அக்னி தேவனுக்கு ஆகுதிகள் கொடுப்பேன். அப்போது அந்த வேள்விக் குண்டத்திலிருந்து குதிரைகள் பூட்டிய ஒரு தேர் எழும்பி வரவேண்டும். அந்தத் தேரில் நான் இருக்கும்வரை எவராலும் என் உயிரைப் பறிக்கமுடியாதிருக்க வேண்டும். இதுவே நான் உறுதியாக் கேட்கும் வரம்'' என்றான்.

மேலும் அவன் பிரம்மதேவரிடம், "போரில் வெற்றிகொள்வதற்காக சங்கல்பம் செய்துகொண்டு நான் தொடங்கும் ஜெபம், ஹோமங்கள் முடிவுறாத நிலையில், போர் செய்தே ஆகவேண்டும் என்னும் இக்கட்டான சூழல் ஏற்பட்டால், அப்போது எனக்கு அழிவு ஏற்படலாம். ஐயனே, அனைவரும் தவம்செய்து அமரநிலை அடையவேண்டும் என்று பிரார்த்திக்கிறார் கள். ஆனால் நானோ என் வீரத்தால் அமர நிலையை அடையக் கேட்கிறேன்'' என்றான்.

பிரம்மதேவர் "அவ்வாறே ஆகட்டும்'' என்று கூறினார்.

இந்திரஜித்தால் விடுவிக்கப்பட்ட இந்திரனோடு தேவர்கள் தேவலோகம் சென்றனர்.

அயோத்தி அரண்மனையில், இராம பிரானுக்கு இந்த வரலாற்றை அகத்தியர் கூறிவருகிறார்: ராமா, இந்திரன் சிறைப்பட்ட தால், இந்திர உலகத்தவர்களின் இயற்கை யான ஒளி மங்கிப்போயிற்று. இந்திரன் மிகவும் கவலைகொண்டு தியானத்தில் ஆழ்ந்தான். அந்த பரிதாப நிலையில் அவனைப் பார்த்த பிரம்மா, "இந்திரனே, முன்னர் செய்யத்தகாத ஒரு செயலைச் செய்தாய். அதன் விளைவுதான் இது'' என்றார்.

"தேவேந்திரா, நான் முன்னர் பல மனிதர்களைத் தோற்றுவித்தேன்.

அவர்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசுபவர்களாக- ஒருவர் போன்றே தோற்றமும் வயதும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் நிறத்திலும் தோற்றத்திலும் எந்தவிதமான வேற்றுமையும் இல்லை. அதனால் இந்த நிலையைக் குறித்து நான் ஆலோசனை செய்யத் தொடங்கினேன். அதனால் மக்களின் ஒவ்வொரு உறுப்பிலுமிருந்த சிறப்பு இயல்புகளை எடுத்து, அவர்களிடமிருந்து மாறுபட்ட தோற்றமுடைய ஒரு பெண்ணை உண்டாக்கினேன். அப்போது உருவத்திலும் குணத்திலும் எவ்வித குறையுமற்ற ஒரு பெண் உருவாக்கப்பட்டாள். அவளே அஹல்யா.

அஹல் என்றால் அழகின்மை. அழகின்மை யால் உலகில் இகழ்ச்சி ஏற்படுகிறது. எவளிடம் அழகின்மை காணப்படவில்லையோ அவள் அஹல்யா- குற்றமில்லாத பேரழகு பெற்றவள். எனவே அவளுக்கு அஹல்யா என்று பெயர் சூட்டினேன்.

அவளைத் தோற்றுவித்தபிறகு இவள் யாருக்கு மனைவியாவாள் எனும் கவலை எனக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் உன்னுடைய பதவி, அதிகாரம் காரணமாக என் அனுமதி பெறாமலேயே "இவள் எனக்குதான் மனைவியாவாள்' என்று உறுதியான எண்ணத்தை நீ கொண்டாய்.

கௌதம முனிவரிடம் ஒரு அடைக்கலப் பொருளாக அவளை நான் ஒப்படைத்தேன். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட அவள் பல்லாண்டுகளுக்குப் பிறகு என்னிடம் திரும்பத் தரப்பட்டாள். நான் கௌதமருடைய புலனடக்கத்தையும், தவப்பயனையும், பெருமையையும் அறிந்து, அவளை அவருக்கே மனைவியாகக் கொடுத்தேன். அறநெறியாளரான அந்த மகாமுனிவர் அவளுடன் இன்பமாக வாழத் தொடங்கினார். கௌதமருக்கே அவளை நான் தந்துவிட்டபடியால் தேவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

jj

மிகவும் கோபம்கொண்ட நீ அந்த முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று, அங்கே செந்தழல்போல ஒளிவீசிக்கொண்டிருந்த அவளைக் கண்டாய். கோபம், காமம் ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீ அவளை பலாத்காரம் செய்தாய்.

அவ்வாறு ஆசிரமத்தில் அவளுடன் நீ சேர்ந்திருக்கும்போதே அங்குவந்த மாமுனிவர் உன்னைப் பார்த்துவிட்டார். மிகுந்த சினமுற்ற அவர் உனக்கு சாபமளித்தார்.

"இந்திரனே, அறம் தவறுகிறோமே என்று சற்றும் அஞ்சாமல், என் மனைவியை நீ பலாத்காரம் செய்திருக்கிறாய். பிற பெண்களை பலாத்காரம் செய்யும் தீயநெறியை தேவர் தலைவனாகிய நீயே தொடங்கி வைத்திருக்கிறாய். இந்த தீயபழக்கம் மனிதர்களிடமும் வரப்போகிறது. எவனொருவன் இத்தகைய தீயவழியைக் கைக்கொண்டாலும் அந்த பாவத்தின் அரைப்பங்கு உன்னைவந்து சேரும்.

மேலும் நீ இப்போதிருக்கும் பதவியில் நிலைத்திருக்கப் போவதில்லை. இந்திர பதவிக்கு எவர் வந்தாலும் அவர்களும் அந்தப் பதவியில் நீடித்திருக்க மாட்டார்கள். எனது இந்த சாபம் இந்திர பதவிக்கு மட்டுமே பொருந்தும். நீ போரில் எதிரியிடம் அகப்பட்டுக்கொள்ளப் போகிறாய்' என்று சாபமளித்தார்.

மேலும் அவர் அகலிகையைப் பார்த்து, "அடக்கம் மறந்தவளே, என் ஆசிரமத்தின் அருகிலேயே எவர் கண்ணிலும் படாமல் இருக்கக் கடவாய். இளமையும் அழகிய தோற்றமும்கொண்ட நீ அவற்றைக் காப்பாற்றிக்கொள்ள எண்ணவில்லை. இனி உலகில் நீ மட்டுமே பேரழகு கொண்டவளாக இருக்கப்போவதில்லை. உன்னைப்போல் பலரும் தோன்றுவார்கள். உன் அழகு கண்டு இவனுக்கு மனத்தடுமாற்றம் ஏற்பட்டது. எனவே உனது பேரழகு மற்றவர்களையும் சென்றடையும். அதுமுதல் ஏராளமான மக்கள் பேரழகுடன் விளங்குவார்கள்' என்றார்.

அப்போது அகலிகை முனிவரைப் பார்த்து, "பிரம்மரிஷியே! தேவேந்திரன் தங்களைப்போல உருவமெடுத்து வந்து என்னைக் களங்கப்படுத்தி விட்டான். நான் மனமொன்றி இந்த செயலைச் செய்யவில்லை. உண்மையை உணராததால் இவ்வாறு நிகழ்ந்துவிட்டது. காமத்தினால் அல்ல. தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும்' என்று மிகவும் மன்றாடி வேண்டினாள்.

அப்போது கௌதம முனிவர், "வேத வித்துகளான அந்தணர்களைக் காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணுவானவர், இக்ஷ்வாகு பரம்பரையில் மனித உருவமேற்று பேராற்றல் பொருந்திய மாவீரனாகத் தோன்றுவார். இராமன் என்னும் பெயரில் பெரும் புகழடையப்போகும் அவர் கானகம் வருவார். அவரை எப்போது காண்கிறாயோ அப்போது நீ புனிதமடைவாய். உன்னால் இழைக்கப்பட்ட பெரும் களங்கத்தைத் தீர்த்து உன்னைத் தூய்மையாக்க வல்லவர் அவர்தான். அவரை வரவேற்று உபசரித்தபின் நீ மீண்டும் என்னிடம் வந்து சேர்வாய். பின்னர் என்னுடனேயே வாழ்வாய்' என்று கூறிய முனிவர் தன் ஆசிரமத்திற்குள் சென்றுவிட்டார். அவருடைய மனைவி மிகக் கடுமையான தவம் மேற்கொண்டாள்.

அந்த முனிவரின் சாபத்தால்தான் இவையனைத்தும் நிகழ்ந்தன. இந்திரனே, நீ செய்த மகா பாதகச் செயலை நினைத் துப் பார். அதன் விளைவாகத்தான் நீ எதிரியின் வசப்பட்டாய். இனி நீ உன் மனதை நிலைப்படுத்தி, விரைவில் வைஷ்ணவ வேள்வி புரிவாயாக. அந்த வேள்வியால் புனிதமாக்கப்பட்டபின் நீ தேவலோகத்தைப் பெறுவாய்.

தேவேந்திரனே, போரில் உன் மகன் அழியவில்லை. அவன் தன் பாட்டனா ரால் கடலுக்குள் கொண்டுசென்று வைக்கப் பட்டிருக்கிறான்'' என்று பிரம்மதேவர் கூறினார்.

அகத்தியர் இராமனுக்குக் கூறிவருகிறார்:

"இதைக்கேட்ட மகேந்திரன் வைஷ்ணவ வேள்வி செய்து மீண்டும் தேவலோகத்தை அடைந்து ஆட்சிபுரியத் தொடங்கினான். இந்திரனை வெற்றிகொண்ட மேகநாதனின் ஆற்றலைப் பற்றி உன்னிடம் கூறினேன். வல்லமை பொருந்திய தேவேந்திரனையே அவன் வென்றான் எனும்போது மற்ற உயிரினங்கள் பற்றி என்ன சொல்ல?''

அகத்தியருடைய இந்த சொற்களைக் கேட்டு இராமனும் லட்சுமணனும் வானரங்களும் அரக்கர்களும் "இந்த வரலாறு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது'' என்று வியந்து கூறினார்கள்.

அப்போது இராமன் அருகிலிருந்த விபீஷணனிடம், "முன்னர் ஒரு காலத்தில் நான் கண்களால் பார்த்த நிகழ்வுகளை மாமுனிவர் நினைவுபடுத்தி விட்டார்'' என்று கூறிவிட்டு, அகத்தியரைப் பார்த்து, "தாங்கள் கூறியது முற்றிலும் உண்மையே. இந்த விவரங்களை முன்னர் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்'' என்றான்.

அதற்கு அகத்தியர், "இராமனே, இவ்வாறு போரில் தேவராஜன் இந்திரனையும் வெற்றிகொள்ளும் மைந்தனின் துணையைப் பெற்ற இராவணன் உலகத்தை துன்புறுத்தும் முள்ளாக மாறிப்போனான்'' என்றார்.

31-ஆவது சர்க்கம் இராவணன் சிவனை வழிபடுதல்

ராமன் மிகவும் வியந்து அகத்திய முனிவரைப் பார்த்து வணக்கத்துடன் மீண்டும் கேட்டான். "ஐயனே, கொடியவனான இராவணன் உலகம் முழுவதும் சுற்றித்திரிந்து வெற்றிபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், மக்கள் அனைவருமே அவனை எதிர்த்துப் போரிடும் ஆற்றலற்றவர்களாக இருந்தார்களா? அந்த சமயத்தில் இவனை அடக்கக்கூடிய வீரம் பொருந்திய க்ஷத்திரிய மன்னன் அல்லது ஆட்சியிலிருந்த வேறு தலைவர்கள் எவரும் இல்லாமல் போய்விட்டார்களா? அல்லது அப்போதிருந்த மன்னர்கள் அனைவரும் ஆற்றல் இல்லாதவர்களாகவும் சஸ்திரப் பயிற்சியற்றவர்களாகவும் இருந்ததால் ஏராளமான மன்னர்கள் இராவணனால் தோற்கடிக்கப்பட்டார்களா?''

இராமனின் இந்தச் சொற்களைக்கேட்ட அகத்திய மாமுனி சற்றே புன்னகைத்து, பிரம்மதேவர் ஈஸ்வரனிடம் உரையாடுவதைப்போல இராமனுக்கு பதில்கூறத் தொடங்கினார்.

"மாமன்னனே, இராமனே... இவ்வாறு அனைத்து மன்னர்களையும் தாக்கி தோற்கடித்து இந்த பூவுலகைச் சுற்றிவந்தான் இராவணன். அவ்வாறு வந்தபோது தேவர் தலைநகரான அமராவதிக்கு ஒப்பான எழிலுடன் விளங்கிய மாகிஷ்மதி நகரத்தை அடைந்தான்.

அங்கே அக்னி பகவான் நித்தியவாசம் புரிந்துகொண்டிருந்தார். நகரை சுற்றிலும் அரண்போல நெருப்பு எரிந்துகொண்டி ருந்தது. அக்னி தேவனின் மகிமையால் அங்கு ஆட்சிசெய்துகொண்டிருந்த அர்ஜுனன் என்னும் மன்னன் அக்னிக்கு நிகரான பொலிவுடன் விளங்கினான். இராவணன் அந்த நகரை அடைந்தநாளில், ஹைஹய நாட்டு மன்னனும், பலம் பொருந்தியவனுமான அர்ஜுனன், தன் மனைவிகளுடன் நர்மதை நதியில் நீர் விளையாட்டு விளையாடுவதற்காகச் சென்றிருந்தான்.

மாகிஷ்மதி நகரத்திற்கு வந்த இராவணன் அங்கிருந்த அமைச்சர்களிடம், "உங்கள் மன்னன் அர்ஜுனன் எங்கே என்பதை உண்மையாகக் கூறுங்கள். நான் இராவணன். புகழ்பெற்ற உங்கள் அரசருடன் போர்புரிய வந்திருக்கிறேன். இப்போதே நீங்கள் சென்று நான் வந்திருக்கும் தகவலை மன்னனிடம் கூறுங்கள்'' என்றான்.

இதைக்கேட்ட அமைச்சர்கள், "மன்னர் அர்ஜுனன் தற்போது நகரில் இல்லை'' என்று கூறினர். அனைவரும் இவ்வாறு கூறியதும் இராவணன் அங்கிருந்து திரும்பி, இமயம் போன்ற மிகப்பெரும் தோற்றம்கொண்ட விந்திய மலையைச் சென்றடைந்தான். அதன் முகடுகள் மேகங்களைத் தொட்டுக்கொண்டிருந்தன. பூமியைப் பிளந்துகொண்டு மேலெழும்பி வந்ததைப்போல தோற்றமளித்த அந்த மலையின் ஆயிரக்கணக்கான சிகரங்கள் வானத்தை உரசிக்கொண்டிருந்தன.

அதன் குகைகளில் சிங்கங்கள் வசித்துக் கொண்டிருந்தன. உயர்ந்த அந்த சிகரங்களிலிருந்து பெருகிவந்த அருவிகள் ஒரு பெரும் கடலைப்போல ஆரவாரித்தன.

தேவர், தானவர், கந்தர்வர், அப்சரக் கூட்டங்கள், கின்னரர்கள் போன்றோர் தங்கள் பெண்மணிகளுடன் கேளிக்கை விளையாட்டில் ஈடுபட்டிருந்ததால் அந்தப் பகுதி தேவலோகம்போல களையுடன் விளங்கியது. நதிகளில் படிகம் போன்ற தூய்மையான நீர் பெருக்கெடுத்து ஓடியது.

விந்திய மலையின் பேரழகை ரசித்த வண்ணம் புண்ணிய நதியான நர்மதையை அடைந்தான் இராவணன். அந்த ஆறானது பாறைகளில் மோதிச்செல்லும் நீர்ப்பெருக்குடன் மேற்குக் கடலைநோக்கி சென்றுகொண்டிருந்தது. சூரியனின் வெப்பத்தினால் தாக்கப்பட்டு தாகத்தால் தவித்த எருமைகள், மான்கள், சிங்கங்கள், புலிகள், கரடிகள், யானைகள் போன்றவை ஆற்றின் ஓட்டத்தை தடுத்துக்கொண்டிருந்தன. எப்போதும் மதம்கொண்டு அகவும் சக்கரவாகம், காரண்டம், ஹம்சம், நீர்க்கோழி, ஸாரசம் போன்ற பறவைகள் அங்கு நிரம்பியிருந்தன.

நர்மதை நதி அன்புகொண்ட ஓர் இளம்பெண்ணைப்போல காணப்பட்டது. கரைகளில் வளர்ந்திருந்த அலர்ந்த மலர்களைக்கொண்ட மரங்களே அந்தப் பெண்ணின் அணிகலன்கள். இரட்டையாகக் காணப்பட்ட சக்கரவாகப் பறவைகளே அவளுடைய மார்பகங்கள். அன்னப்பறவைகளின் வரிசைகளே அவளது இடுப்பில் விளங்கும் முத்துமேகலை. வெண்மையான நுரைக் கூட்டத்தால் அவள் தூய வெண்ணிற ஆடை அணிந்திருப்பதுபோல் தோன்றியது. நீரில் மூழ்கிக் குளிப்பது, அவளைத் தீண்டுவதால் ஏற்படும் ஆனந்தத்திற்கு இணையாக இருந்தது. மலர்ந்த தாமரைகள் அவளது அழகிய கண்கள்.

இராவணன் புஷ்பக விமானத்திலிருந்து இறங்கி நர்மதையில் தலைமூழ்கி நீராடினான். அதன்பின்னர் முனிவர்கள் பலர் வசிப்பதும் மனதைக் கவர்வதுமான மணற்பாங்கான கரையில் அமைச்சர்களுடன் அமர்ந்தான். "இது கங்கையேதான்!' என்று போற்றிப் புகழ்ந்து, நர்மதையின் நீராடியதால் உண்டான பேரானந்தத்தை அனுபவித்தான். அவன் அங்கிருந்த தனது அமைச்சர்களைப் பார்த்துப் புன்னகைத்து, "வானத்தின் உச்சிக்கு வந்திருக்கும் ஆயிரக்கணக்கான கதிர்களைக்கொண்ட சூரியன் தன் வெப்பத்தைக் கக்குகிறான். ஆனால் நான் இங்கிருப்பதை அறிந்து, இங்குமட்டும் சந்திரனின் குளிர்ச்சியைத் தருகிறான். வாயுதேவன் என்னிடமுள்ள அச்சத்தால் மிகவும் கவனமாக, நர்மதையின் குளிர்ச்சி, மணம் ஆகியவற்றை சுமந்துவந்து நம் களைப்பைப் போக்குகிறான். சிறந்த தான இந்த நர்மதை ஆறு குதித்து விளையாடி நீராட அழைக்கிறது. அதன் அலைகளில் முதலைகள், மீன்கள், நீர்ப்பறவை கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அதனால் இந்த ஆறு அச்சம்கொண்ட பெண்ணைப்போல இந்த இடத்தில் நின்றுவிட்டதுபோல் தோன்றுகிறது.

போர்க்களத்தில் நீங்கள் அனைவரும் இந்திரனுக்கு நிகரான பகைவர் களின் ஆயுதங்களால் மிகவும் காயம்பட்டி ருக்கிறீர்கள். உங்கள் உடலில் சந்தனம் பூசியதுபோல ரத்தம் வடிந்துகொண்டி ருக்கிறது. எனவே நீங்கள் அனைவரும், மகாபத்மன் முதலான திசை யானைகள் மதம்கொண்டு கங்கையிலிறங்கி நீராடுவதைப்போல, இந்த சுகத்தைத் தரும் நர்மதையில் தலைமூழ்கி நீராடுவீர்களாக. இந்த நதியில் நீராடினால் உங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

நான் நர்மதையின் மணற்பாங்கான இந்த கரையில் பரமேஸ்வரனுக்கு பக்தியுடன் மலர்களை சமர்ப்பணம் செய்கிறேன்'' என்றான்.

இராவணன் இவ்வாறு கூறியதும் பிரஹஸ்தன், சுகன், சாரணன், மகோதரன், தூம்ராட்சன் முதலியோர் நர்மதையில் மூழ்கி நீராடினர். அரக்கர் தலைவனின் படைத் தலைவர்களான அவர்கள் நர்மதையில் குதித்து விளையாடி அதனை வேதனைப் படுத்தினார்கள். அவ்வாறு நீராடிவிட்டுக் கரையேறிய அரக்கர்கள், இராவணன் இறைவழிபாடு செய்ய மலர்களைக் கொண்டுவந்தனர்.

இதயத்தைக் கொள்ளைகொள்ளும், வெண்மேகம்போல் விளங்கிய அந்த மணல்மேட்டில் ஒரு முகூர்த்த காலத்திற்குள் மலையளவு மலர்களைக் கொண்டுவந்து குவித்துவிட்டனர். இவ்வாறு மலர்கள் சேகரிக்கப்பட்டவுடன், ஒரு மாபெரும் யானை கங்கையில் நீராட கம்பீரமாக இறங்கு வதுபோல, இராவணன் நர்மதையில் நீராடுவதற்காக இறங்கினான். சங்கல்பம் முதலானவற்றை முறைப்படி செய்துவிட்டு நீராடியபிறகு, மிகச்சிறந்த மந்திரங்களை ஜெபித்துவிட்டு ஆற்றிலிருந்து மேலேறி கரைக்கு வந்தான்.

பின்னர் ஈர ஆடைகளைக் களைந்து விட்டு வெண்மையான ஆடையை அணிந்து கொண்டான். மகாதேவன் வழிபாட்டுக்கு இரு கரங்களையும் கூப்பியவண்ணம் செல்லும் அவனை, உயிர்பெற்ற மலைகளானது அவனது நடையினால் இழுக்கப்பட்டு பின்தொடர்வதுபோல, எல்லா அரக்கர் களும் பின்தொடர்ந்தனர்.

இராவணன் எங்கு சென்றாலும் பொன்மயமான சிவலிங்க மூர்த்தம் ஒன்று அங்கே எடுத்துச்செல்லப்படும். மணல் மேடையில் அந்த லிங்கத் திருமேனியை நிலைநிறுத்தி, நறுமணப் பொருட்களாலும் மணம்வீசும் மலர்களாலும் அர்ச்சனை செய்தான். எந்த ஈஸ்வரன் ஆன்றோர்களின் துன்பங்களைப் போக்குகிறாரோலி எவரது நெற்றியில் பிறைச் சந்திரன் விளங்குகிறதோ அந்த சங்கர லிங்கத்தை நன்றாகப் பூஜித்த பின்னர், இராவணன் அந்த சிவலிங்கம் எதிரே பாடவும், கைகளை வீசி நடனமாடவும் தொடங்கினான்!

(தொடரும்)

om010422
இதையும் படியுங்கள்
Subscribe