சிங்கிரிக்குடி நரசிம்மர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட நாம் அங்கிருந்து நேர் மேற்கே 26 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை அடைந்தோம். தென்னகத்தில் நரசிம்மர் வழிபாடு அதிக அளவில் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன என்பதை கல்யாண் கீதா என்பவர் ஆய்வுசெய்து வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன என்றும், அதன்படி சுமார் 800 நரசிம்மர் கோவில்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். விஞ்ஞானரீதியில் உற்று நோக்கினால் பழங்காலத் தொன்மைகள் பதிந்திருப்பதை தெரிந்துகொள்ள முடியும்.
உக்கிரமான தெய்வங்கள்- வயல்களை, விவசாயப் பயிர்களை, கிராம மக்களை, அவர்கள் வசிக்கும் வீடுகளைப் பாதுகாக்கிறார்கள் என்ற நம்பிக்கை உண்டு. அதன் அடிப்படையிலும் நரசிம்மர் கோவில்களும் உருவாக்கப்பட்டுள்ளன. நரசிம்மரின் அருமை பெருமைகள், பராக்கிரமங்கள் அருளாசிகள் பற்றி பூவரசங்குப்பத்தில் தெரிந்துகொள்வோம்.
இரணியனின் தொல்லை பொறுக்காமல் சப்தரிஷிகளான அத்திரி, பரத்வாஜர், ஜமத்கினி, வசிஷ்டர், கவுதமர் கௌசிகர், காசிபர் போன்ற ரிஷிகள் வனத்திற்குச் சென்று மறைந்து வாழ்ந்தனர்.
இரண்ய வதம் முடிந்தபிறகு வனத்தைவிட்டு வெளியேவந்த அவர்கள் அனைவரும் மகாவிஷ்ணு விடம், "தாங்கள் எடுத்த நரசிம்ம அவதாரத்தை நாங்கள் பார்க்க முடியாமல் போய்விட்டது. எனவே அந்த அவதாரக் காட்சியை எங்களுக்கு காட்டவேண்டும்' என்று வேண்டினர்.
அவர்கள் ஆவலைப் பூர்த்திசெய்ய நரசிம்ம அவதாரத்தில் எட்டு இடங்களில் காட்சி கொடுத்தார். அதில் நடுவில் அமைந்துள்ள ஆலயம் தான் பூவரசங் குப்பம். அப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த இத்தலத்து மூலவரான லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். மற்ற கோவில்களில் கோபரூபத்தில் காட்சியளிப்பார். இங்கே மகாலட்சுமியை மடியில் அமர்த்தி, ஒரு கையால் அவரை அணைத்தபடி சாந்த முகத்துடன் காட்சியளிக்கிறார். நரசிம்மரின் மடியில் அமர்ந்துள்ள லட்சுமி தாயாரின் ஒரு கண் நரசிம்மரை உற்றுநோக்கும். மற்றொரு கண் பக்தர்களை பார்த்துக்கொண்டிருக்கும். இதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது.
கோபத்துடன் இரு
சிங்கிரிக்குடி நரசிம்மர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட நாம் அங்கிருந்து நேர் மேற்கே 26 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை அடைந்தோம். தென்னகத்தில் நரசிம்மர் வழிபாடு அதிக அளவில் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன என்பதை கல்யாண் கீதா என்பவர் ஆய்வுசெய்து வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன என்றும், அதன்படி சுமார் 800 நரசிம்மர் கோவில்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். விஞ்ஞானரீதியில் உற்று நோக்கினால் பழங்காலத் தொன்மைகள் பதிந்திருப்பதை தெரிந்துகொள்ள முடியும்.
உக்கிரமான தெய்வங்கள்- வயல்களை, விவசாயப் பயிர்களை, கிராம மக்களை, அவர்கள் வசிக்கும் வீடுகளைப் பாதுகாக்கிறார்கள் என்ற நம்பிக்கை உண்டு. அதன் அடிப்படையிலும் நரசிம்மர் கோவில்களும் உருவாக்கப்பட்டுள்ளன. நரசிம்மரின் அருமை பெருமைகள், பராக்கிரமங்கள் அருளாசிகள் பற்றி பூவரசங்குப்பத்தில் தெரிந்துகொள்வோம்.
இரணியனின் தொல்லை பொறுக்காமல் சப்தரிஷிகளான அத்திரி, பரத்வாஜர், ஜமத்கினி, வசிஷ்டர், கவுதமர் கௌசிகர், காசிபர் போன்ற ரிஷிகள் வனத்திற்குச் சென்று மறைந்து வாழ்ந்தனர்.
இரண்ய வதம் முடிந்தபிறகு வனத்தைவிட்டு வெளியேவந்த அவர்கள் அனைவரும் மகாவிஷ்ணு விடம், "தாங்கள் எடுத்த நரசிம்ம அவதாரத்தை நாங்கள் பார்க்க முடியாமல் போய்விட்டது. எனவே அந்த அவதாரக் காட்சியை எங்களுக்கு காட்டவேண்டும்' என்று வேண்டினர்.
அவர்கள் ஆவலைப் பூர்த்திசெய்ய நரசிம்ம அவதாரத்தில் எட்டு இடங்களில் காட்சி கொடுத்தார். அதில் நடுவில் அமைந்துள்ள ஆலயம் தான் பூவரசங் குப்பம். அப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த இத்தலத்து மூலவரான லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். மற்ற கோவில்களில் கோபரூபத்தில் காட்சியளிப்பார். இங்கே மகாலட்சுமியை மடியில் அமர்த்தி, ஒரு கையால் அவரை அணைத்தபடி சாந்த முகத்துடன் காட்சியளிக்கிறார். நரசிம்மரின் மடியில் அமர்ந்துள்ள லட்சுமி தாயாரின் ஒரு கண் நரசிம்மரை உற்றுநோக்கும். மற்றொரு கண் பக்தர்களை பார்த்துக்கொண்டிருக்கும். இதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது.
கோபத்துடன் இருந்த நரசிம்மர் லட்சுமி தாயாரின் விருப்பத்திற்கேற்ப சாந்தமுகத்துடன் காட்சியளிக்கிறார். நரசிம்மரின் கோபத்தை தணிக்க தாயார் அவரின் முகத்தை கனிவோடு பார்த்துக்கொண்டிருந்தார். நரசிம்மரின் கோப சுவாலைகள் முனிவர்கள்மீது தாக்கியது. அப்போது முனிவர்கள் தாயாரிடம் "தாங்கள்தான் நரசிம்மரின் கோபத்தைத் தணிக்கவேண்டும்' என்று வேண்டினர்.
அப்போது தாயார் நரசிம்மரை புன்னகை தவழும் முகத்துடன் நரசிம்மரைப் பார்க்க, அவரது கோபம் தணிந்தது.
மற்றொரு கண்ணால் முனிவர் களை கருணையுடன் பார்த்தார் தயார். அதன்படி இவ்வாலயத் திற்கு நரசிம்மரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்சுமி தாயாரின் கனிவான ஒரு கண் பார்வை செல்வ கடாட்சத்திற்குக் கொண்டுசெல்கிறது.
நரசிம்மர் அவதரித்த இடம் அகோபிலம் என்று அழைக் கப்படுகிறது. இது ஆந்திர மாநிலத்தில் உள்ளது. அதே போல் தமிழகத்திலுள்ள பூவரசங் குப்பம் ஆலயம் தெற்கு அகோபில மடம் என்று அழைக்கப்படுகிறது. நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியதால் ஆதிகாலத்தில் இங்கு ஒரு தூணையே நரசிம்மராக வழிபட்டுவந்துள்ளனர். அதன் பின்னர் பல்லவ மன்னன் காலத் தில் நரசிம்மருக்கு ஆலயம் எழுப்பி, அங்கே லட்சுமி நரசிம்மரை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
தற்போது அந்த தூண் ஹோம மண்டபம் பகுதியில் உள்ளது.
தீய சக்திகளை அழிக்க மகாவிஷ்ணு சில அவதாரங்கள் எடுத்துள்ளார். அவதார நோக்கம் முடிந்ததும் அந்த அவதாரமும் நிறைவு பெற்றுவிடும். அதன்படி இராமாவதாரம் எடுத்தார். இராவண வதம் முடிந்தபோது அவதாரமும் முடிவுக்கு வந்தது. கிருஷ்ணா அவதாரமும் கம்சனை வதம் செய்தபிறகு அந்த முடிவுக்கு வந்தது. ஆனால் நரசிம்ம அவதாரம் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒரு நொடியில் தோன்றி தனது பக்தன் பிரகலாதனுக்காக இரணியனை வதம்செய்த நரசிம்மர். அத்துடன் தன் அவதாரத்தை முடித்துக்கொள்ளவில்லை. அதன்பிறகு தன் பக்தன் பிரகலாதன் சீரும் சிறப்புமாக வாழ எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்தார். ராஜநீதிக்கான சாஸ்திரங்களை அவனுக்கு கற்றுக்கொடுத்தார். ஒரு நாட்டை ஆள்வதற்குரிய தகுதியை ஏற்படுத்தினார்.
அதன்பிறகு பிரகலாதனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகம் செய்துவைத்தார். தொடர்ந்து அவன் நல்ல அரசாட்சி நடத்த வழிகாட்டவும் பிரகலாதனுக்கு உறுதி யளித்தார். எனவே நரசிம்மர் ராஜ பரிபால னம் செய்ய உகந்தவர்.
இதன் அடிப்படை யிலேயே இக்காலத்தில் தேர்தலில் போட்டியிடு பவர்கள் இவ்வாலய இறைவனிடம் வந்து சரணடைந்து தாங்கள் வெற்றிபெற வேண்டுதல் செய்கிறார்கள். அரசுப் பணிகளில் இருப்பவர்கள் பதவி உயர்பெற இவ்வாலயத்தில் சிறப்புப் பூஜை செய்கிறார் கள். இதை மெய்ப்பிக்கும்வகையில் பல்லவர் கால அரசன் ஒருவன் இவ்வாலய இறைவனுக்கு கோவில் கட்டி மீண்டும் அரச பதவி அடைந்துள்ளான். எப்படி? சமண ஆதிக்கம் தலைதூக்கி இருந்த காலம். அப்போது நரஹரி என்ற வைஷ்ணவர் நரசிம்மரைப் பற்றிப் புகழ்ந்து மக்களிடம் பரப்புரை செய்துவந்தார். இதனைக்கேட்டு கோபமுற்ற சமண சமயத்தைச் சேர்ந்த பல்லவ மன்னன் ஒருவன் திருமண் (நாமம்) திருநீறுநெற்றியில் இட்டுக் கொள்பவர்களைப் பார்த்தால் மிகுந்த கோபமடைவான். அதன்காரணமாக பல கோவில்கள் இடிக்கப்பட்டன. இதனை எதிர்த்துக் குரல் கொடுத்துவந்தார். வைஷ்ணவர் நரஹரி. அவரின் செயல்பாடுகள் பல்லவ மன்னனின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. உடனே நரஹரியைக் கொல்வதற்கு ஆணையிட்டான். "என்னைக் கொல்ல ஆணையிட்ட உனக்கு பிரம்ம ஹத்தி தோஷம் பிடிக்கட்டும்; உன் உடல் அழுகட்டும்' என்று சாபமிட்ட நரஹரி காற்றோடு கலந்து கரைந்து போனாராம்.
இதனால் அந்த பல்லவ மன்னனுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்தது. உடல் வேதனையால் துடிக்க, மன்னனின் கெட்ட காலம் ஆரம்பித்தது. மன்னன் கொஞ்சம் கொஞ்சமாக பைத்தியம் பிடித்தவன் போலானான். அவன் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. நோய் முற்றி அவன் உடலில் புழுக்கள் நெளிந்தன. மன்னனின் மனைவி, மக்கள்கூட அவனை வெறுத்து ஒதுக்கினார்கள். இதனால் நாட்டைவிட்டு வெளியேறிய அந்த மன்னன் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து, ஒருநாள் தென்பென்னையாற்றின் வடகரையில் ஒரு பூவரச மரத்தடியில் தன் விதியை நொந்தபடி படுத்திருந்தான். அப்போது அவன் ஆணவம் அழிந்து அரசன் என்ற ஆதிக்க வெறி தணிந்தது தான். செய்த பாவங்களுக்காக கண்ணீர் விட்டு அழுதபடியே பிச்சைக்கார கோலத்துடன் மரத்தடியில் சோர்ந்து தூங்கிவிட்டான் மன்னன்.
அப்போது திடீரென ஒரு பூவரச இலை மரத்திலிருந்து உதிர்ந்து அவன்மீது விழுந்தது. கண் விழித்துப் பார்த்த மன்னன் தன்மீது விழுந்த அந்த பூவரசு இலையின் அதிர்வைக்கூட உடல் தாங்கமுடியாமல் வேதனைப்பட்டான். அந்த இலையை தன் உடலிலிருந்து நகர்த்த எண்ணி அதை கையில் எடுத்தான். அப்போது அந்த இலையின் நடுவில் லட்சுமி நரசிம்மர் உருவம் தெரிந்தது. பூவர இலையுள் புன்னகை பூக்க நரசிம்மரும் லட்சுமி அன்னையும் சேர்ந்து அந்த மன்னனுக்குக் காட்சி கொடுத்தனர்.
இதைக்கண்ட மன்னன் தன்னையும் அறியாமல் கைகூப்பி தொழுதான்; கண்ணீர் வடித்தான் அப்போது வானிலிருந்து ஒரு குரல், "மன்னா நீ செய்த பாவங்களுக்கு விமோசனமாக கோவில் கட்டுவதாக மனதால் நினைத்தாலே கோடிப்புண்ணியம் கிடைக்கும் நீ எத்தனையோ கோவில்களை இடித்திருக்கிறாய். அதற்குப் பிராயச்சித்தமாக இந்த பூவரச மரத்தடியிலேயே ஒரு கோவிலைக் கட்டு. அதுவே பிற்காலத்தில் பூவரசமங்கலம் என பெயர் பெறும். கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் உன் மனதில் எழுந்த கணமே உனக்கு விடிவுகாலம் பிறக்கும்' என கூறியது. அந்த மன்னன் கோவில் கட்ட முடிவுசெய்த மறுகணமே அவன் உடலில் புது தெம்பு உருவானது. நோய்கள் நீங்கப்பெற்று புது மனிதனாக மீண்டும் அரச பட்டம் பதவிகளைப் பெற்றான். குரல் ஒலித்த அதே இடத்தில் இவ்வாலயத்தை எழுப்பினான்.
அவனிடமிருந்த மத துவேஷம் மறைந்தது.
அந்த மன்னன் பூவரசு இலையில் கண்ட லட்சுமி நரசிம்மர் உருவத்தை அப்படியே செய்து கோவிலில் பிரதிஷ்டை செய்தான்.
அந்த சம்பவத்தின் பெயராலேயே இவ்வூருக்கு பூவரச மங்கலம் என்ற பெயர் உருவானது. காலப்போக்கில் மறுவி பூவரசங்குப்பம், லட்சுமி நரசிம்மர் என்ற பெயர் விளங்கிவருகிறது "தாயார் லட்சுமி அமிர்தத்துக்கு இணை யானவர் என்பதால், அவரை அமுதவல்லி என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். நான்கு கரங்களுடன் உள்ள லட்சுமி நரசிம்மர், இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் கொண்டு மறு கையால் லட்சுமி தாயாரை அணைத்தபடி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். இதுபோன்ற காட்சி அமைப்பு கள் வேறு எங்கும் இல்லை' என்கிறார் இவ்வாலய மூத்த அர்ச்சகர் பார்த்தசாரதி. இவ்வாலய இறைவனை 48 நாட்கள் விரதமிருந்து வழிபட்டால் கடன் பிரச்சினை தீரும்பதவி உயர்வு கிடைக்கும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். இவ்வாலயத்தில் உற்சவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜப் பெருமாள் காட்சிதருகிறார். பாஞ்சராத்திரி ஆகமப்படி இரண்டுகால பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்று மிக சிறப்பான விழா நடைபெறுகிறது.
தினசரி அன்னதானம் ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரம், தமிழ் வருடப் பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகாசி விசாகம் கருட சேவை, தை மாதம் 5-ஆம் தேதி தீர்த்தவாரி ஆகிய திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. ஆலயத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது.
அதைக் கடந்து உள்ளே சென்றால் வேப்ப மரத்தடியில் துர்க்கை, நாகர், சந்நிதிகள்.
அதனை ஒட்டி கோவில் தீர்த்தக்குளம். அதனருகில் நாமம் இட்ட விநாயகர். தென்மேற்கு மூலையில் கனகவல்லித் தாயாருக்கு தனிச் சந்நிதி. அருகில் சீதா, லட்சுமணர், ஆஞ்சனேயர் சமேத ஸ்ரீராமரை தரிசிக்கலாம்.
இவ்வாலயத்தில் வில்வமரம் தலவிருட்சமாக உள்ளது. ஆலயத்தின் வடமேற்கு மூளையில் ஆண்டாள், கருடாழ்வார், கொடிமரம் ஆகியவற்றை ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம், பூவரசங்குப்பம் நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவத் திருவிழா கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. 150 ஆண்டுகளுக்குப்பிறகு 32 அடி உயரமுள்ள தேரில் சாமியை அமரவைத்து தேரோட்டம் நடைபெற்றதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இதையொட்டி லட்சுமி நரசிம்மருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு, அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாலய லட்சுமி நரசிம்மரை தரிசித்து முடித்து, இவருக்கு நேர் நேர்க்கோட்டில் மேற்கே இவரை நோக்கி கிழக்கு முகமாக அமர்ந்து அருளாட்சி செய்யும் பரிக்கல் லட்சுமி நரசிம்மரையும் தரிசித்தே ஆகவேண்டும்.
அதற்குரிய முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை அடுத்த இதழில் பார்க்கப் போகிறோம்.
பூவரசங்குப்பம் ஆலயத் தொடர்புக்கு: 0413 2698191, 99435 30122.
அமைவிடம்: விழுப்புரம்- புதுச்சேரி சாலையில், வளவனூரிலிருந்து தெற்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆலயம்.