எதிர்காலம், சொந்த வீடு, ஆயுள், ஆரோக்கியம் பற்றிக் கூறவும். -சிவக்குமார், வடலூர்.
மகர லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். உங்கள் 8-ஆம் அதிபதி சூரியனை குரு பார்ப்பதால் நிறை ஆயுள் உண்டு. கிரக யுத்த ஜாதகம். சந்திரன், கேது, சூரியன், புதன் என நான்கு கிரகச் சேர்க்கை. எனவே ஒரு செயல் நன்றாகக் கூடி வரும்போது, அது பின்னுக்கு இழுக்கப் பட்டுவிடும். பூர்வபுண்ணியக் குற்றம் உள்ளது. இராமேஸ்வரம் சென்று, பித்ரு தோஷம் கழிப்பது நல்லது. உங்களுக்கு சொந்த வீடு அமைந்தாலும் நிலைப்பது கடினம். வேலையில் நிரந்தரமாக இருக்க இயலாது. உங்களுக்கு நரம்பு அல்லது வாயு சம்பந்தக் கோளாறுகள் இருக்கும். நடப்பு சந்திர தசை. இதில், அலைந்து திரிந்து செய்யும் ரியல் எஸ்டேட், தரகு, ஏஜென்ட் வேலை பார்க்கவும். அதுதான் சரிப்பட்டு வரும். திங்கட்கிழமைதோறும் சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்து வணங்கவும்.
சாதராண மனிதர் எந்த நிலையில் குரு அஸ்தஸ்தை அடைவார்? -எஸ். வஜ்ரவடிவேல், கோவை- 6.
சாதராண மனிதரும் தன்னுடைய அரிய பெரிய செயல்களால், உயர்ந்த குரு நிலையை சென்றடைகிறார்கள். திருமூலர், "நடமாடக் கோவில் நம்பர் கொன்றில் படமாடக் கோவில், பகவற்கதாமே' என்றார். மக்களுக்குச் செய்கிற தான தர்மங்கள், பகவானுக்குச் செய்கிற பூஜையாகும் என்பதே பொருள். எந்தவொரு மனிதரும் நல்ல குணம், நல்ல பழக்கம், கருணை, சாந்தம் கொண்டவராக இருந்து, மக்கட்பணியே மகேசன் பணி யென்றிருந்தால், மக்களுக்கு இயல்பாக அவரிடம் ஒரு ஈர்ப்பு வந்துவிடும். அளப்பரிய அன்பும் எளிமையும் இருக்கவேண்டும். மக்கள் தன்னிச்சையாக, "ஆஹா, இவர் ஒரு உத்தம ஆத்மா' என மனதிற்
எதிர்காலம், சொந்த வீடு, ஆயுள், ஆரோக்கியம் பற்றிக் கூறவும். -சிவக்குமார், வடலூர்.
மகர லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். உங்கள் 8-ஆம் அதிபதி சூரியனை குரு பார்ப்பதால் நிறை ஆயுள் உண்டு. கிரக யுத்த ஜாதகம். சந்திரன், கேது, சூரியன், புதன் என நான்கு கிரகச் சேர்க்கை. எனவே ஒரு செயல் நன்றாகக் கூடி வரும்போது, அது பின்னுக்கு இழுக்கப் பட்டுவிடும். பூர்வபுண்ணியக் குற்றம் உள்ளது. இராமேஸ்வரம் சென்று, பித்ரு தோஷம் கழிப்பது நல்லது. உங்களுக்கு சொந்த வீடு அமைந்தாலும் நிலைப்பது கடினம். வேலையில் நிரந்தரமாக இருக்க இயலாது. உங்களுக்கு நரம்பு அல்லது வாயு சம்பந்தக் கோளாறுகள் இருக்கும். நடப்பு சந்திர தசை. இதில், அலைந்து திரிந்து செய்யும் ரியல் எஸ்டேட், தரகு, ஏஜென்ட் வேலை பார்க்கவும். அதுதான் சரிப்பட்டு வரும். திங்கட்கிழமைதோறும் சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்து வணங்கவும்.
சாதராண மனிதர் எந்த நிலையில் குரு அஸ்தஸ்தை அடைவார்? -எஸ். வஜ்ரவடிவேல், கோவை- 6.
சாதராண மனிதரும் தன்னுடைய அரிய பெரிய செயல்களால், உயர்ந்த குரு நிலையை சென்றடைகிறார்கள். திருமூலர், "நடமாடக் கோவில் நம்பர் கொன்றில் படமாடக் கோவில், பகவற்கதாமே' என்றார். மக்களுக்குச் செய்கிற தான தர்மங்கள், பகவானுக்குச் செய்கிற பூஜையாகும் என்பதே பொருள். எந்தவொரு மனிதரும் நல்ல குணம், நல்ல பழக்கம், கருணை, சாந்தம் கொண்டவராக இருந்து, மக்கட்பணியே மகேசன் பணி யென்றிருந்தால், மக்களுக்கு இயல்பாக அவரிடம் ஒரு ஈர்ப்பு வந்துவிடும். அளப்பரிய அன்பும் எளிமையும் இருக்கவேண்டும். மக்கள் தன்னிச்சையாக, "ஆஹா, இவர் ஒரு உத்தம ஆத்மா' என மனதிற்குள் முடிவு செய்துவிட்டால், அப்போது ஒரு சாதாரண மனிதர் குரு நிலைக்கு உயர்ந்திட இயலும்.
"யாவர்க்குமாம் இறைவர்க்கொருப் பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரை தானே'
எனும் திருமூலர் கூற்றுப்படி இறைவனுக்கு இலை அர்ச்சனை, பசுவுக்குப் புல், ஏழைகளுக்கு அன்னம் என இவற்றையெல்லாம் கூறிவிட்டு, பொருளாக உபகாரம் செய்யாவிட்டாலும், இனிய சொற்களாவது பேசவேண்டுமென எடுத்துரைக்கிறார். இதிலிருந்து தெய்வம் மற்றும் ஐந்தறிவு, ஆறறிவு ஜீவன்கள் வரை, எவர் உண்மையான அன்போடு மத, இன வேறுபாடின்றி ஒன்றாக நடத்துகிறாரோ அவர் மனிதருள் மாணிக்கம். இந்த மாணிக்கங்களே, மனிதராக இருந்து குருவாக உயர்வார்கள்.
துளசிச் செடியின் முக்கியத்துவம் என்ன? -கவிதா, ஆற்காடு.
துளசிச்செடி என்பது புனிதமான ஒன்றாகும். எனவே தான் எக்காலத்திலும் வீடுகளில் சூரிய ஒளிபடுமிடத்தில், கிழக்குப் பக்க வாசலுக்கு நேராக துளசி மாடம் வைத்து வணங்குவர். துளசியில் கிருஷ்ண துளசி, லட்சுமி துளசி கருந்துளசி என மூன்றுவகைகள் உள்ளன. பொதுவாக கிருஷ்ண துளசியை வீட்டில் வளர்க்கும் வழக்கம் உள்ளது. துளசிச்செடி அருகில் தூய்மையாக உள்ளோர் மட்டுமே செல்லவேண்டும். வீட்டுக்கு விலக்கம் உள்ளோர் அருகில் சென்றால் செடி வாடிவிடும். முக்கியமான ஒன்று- வீட்டில் எதிர்காலத்தில் நிகழப்போகும் சில வேண்டாத விஷயங்களை வாடிப்போகும் துளசிச்செடி காட்டிக் கொடுத்துவிடும். மாலைநேரம், செவ்வாய், வெள்ளி, ஏகாதசியன்று துளசியைப் பறிக்கக்கூடாது. தினமும் விளக்கேற்றி வணங்க, லட்சுமி கடாடசம் கிடைக்கும். கிருஷ்ணர், தனது பூஜைக்கு, ஒரு துளசி பத்ரம் போதுமானது என்று கூறுகி றார். அக்காலத்தில் மக்கள் துளசி இலையை காதின் பின்பக்கம் வைத்துக்கொள்வர். இப்போது சிரிப்பார்கள். காதின் பின்புறம் அதிகமான உறிஞ்சும் சக்தி உள்ளது. இதனால் மருத்துவ குணமுடைய துளசியை காதின் பின்புறம் வைத்து, அதன் மருத்துவ சக்தியை உடல் உறிஞ்சும்படி பார்த்துக் கொண்டனர். பொதுவாக, கிருஷ்ண துளசியை வீட்டில் வளர்ப்போம். ஒருமுறை காஞ்சி மகாப்பெரியவரிடம் ஒரு அம்மாள் வந்து, தன் வீட்டில் துளசிச் செடி வளரவே மாட்டேன் என்கிறது என குறைபட்டுக் கொள்ள, பெரியவர், கருந்துளசி வளர்த்து வரச் சொன்னார். துளசிச்செடியை மூன்று முறை சுற்றும்போது-
"பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லபே
க்ஷீரோதமத நோத்யுதே
துளசி த்வாம் நமாம்யகம்'
என்று கூறிக்கொண்டே சுற்றவேண்டும்.
வீட்டில் கர்ப்பிணிப் பெண்கள் இருக்கும்போது வீடு கட்டலாமா? -சுரேஷ், திருத்தணி.
முற்காலத்தில் வீடு கட்டுவதென்பது இருக்கும் வீட்டுக்கு அருகில் அல்லது இருக்கும் வீட்டை இடித்துவிட்டுப் பெரிதாகக் கட்டுவார்கள். இதனால் ஏற்படும் சத்தம். கர்ப்பிணிக்கும், வயிற்றிலுள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என பயந்தனர். ஆனால் இப்போது பெரும்பாலானோர் அடுக்குமாடி குடியிருப்பு களையே வாங்குகின்றனர். கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும்போது வீடு கட்டலாமா? வாங்கலாமா எனும் கேள்வி எழுந்தால், அதற்கு பதில் கூடியமட்டும் தவிர்த்துவிடுங்கள் என்பதேயாகும். ஏனெனில் கர்ப்பிணிக் கென நிறைய செலவு செய்யும் நிலை கண்டிப்பாக உண்டு. அதே செலவு நேரத்தில், வீடு கட்டுவது எனும் இன்னொரு பெரிய செலவையும் இழுத்துக்கொள்ள வேண்டாம். அதனால் சற்று விழி பிதுங்கும் நிலை ஏற்படலாம். மேலாக ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ராசி, யோகமுண்டு. அதனால் குழந்தை பிறந்த பின்னர் வீடு கட்டும் விஷயத்தை ஆரம்பியுங்கள்.
இம்மை, மறுமையை ஒப்புக் கொள்ளும் சில மதங்கள், ஜென்மங்களை மறுப்பதேன்? -ஆர்.ஆர். கலியாணி, செல்வமருதூர்.
இம்மை- இந்த ஜென்மம், மறுமை- மறு ஜென்மம். உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே! இந்த ஜென்மத்தையும், மறு ஜென்மத்தையும் ஒப்புக்கொள்பவர்கள் ஜென்மங்களை மறுப்பதாக எவ்வாறு கூறமுடியும்?
ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே ஒழுக்கத்தினால மட்டுமே சிறப்புற முடிகிறது. நிஜம்தானே? -ஆர்.ஆர். உமா, நெல்லை.
நாத்திகம் பேசுவார் யார்? பரலோகம் இல்லை என்பவர்கள். ஆத்திகம் பேசுவோர் பரலோகம் உண்டு என்பவர்கள். நாத்திக வாதிகள் தங்கள் கண்ணால் கண்டதை மட்டுமே நம்புகிறவர்கள். அதாவது தெய்வம் உண்டெனில், இவர்கள் முன்னே வந்து நிற்கவேண்டும். அப்போதுதான் தெய்வம் இருக்கிறதென்று ஒப்புக்கொள்வார்கள். எல்லாருக்கும் முன்னால் தெய்வம் நேரில் வந்து நிற்குமா? எனவே தெய்வமே இல்லை எனக் கூறிவிடுவர். ஆத்திகவாதிகள், "இறைவன் எனும் பேருண்மையை மனதால், புத்தியால், இதயத்தால், உணர்வால் உணரவேண்டும் என்பர். இறைவனை நம்பும் ஆத்திகர்கள் கோவில் வளாகத்துக்குள்ளேயே மது குடிப்பதும், ஒழுக்கங்கெட்ட செயல்களைச் செய்வதையும், கொஞ்சம் அசந்தால் சாமியை எடுத்து கையோடு வெளிநாட்டிற்கு விற்பதையும் பார்க்கவும் கேட்கவும் செய்கிறோம். சில இடங்களில் நாத்திகர்கள் எனும் இறை மறுப்பாளர்கள், கல்வி, பெண்களின் முன்னேற்றம், அநீதியை எதிர்த்துப் போராடுதல், மிகக் கீழ்நிலையில் உள்ளவர்களையும் கைதூக்கி வாழ்வை மேம்படுத்த உதவுதல் என எத்தனையோ நல்ல காரியம் செய்கிறார்கள். ஆக, ஒரு மனிதன் ஆத்திகனா, நாத்திகனா என்பது முக்கியமல்ல. அவன் ஒழுக்கமான மனிதனா என்பதே கேள்வி. ஒரு மனிதன் தனிப்பட்டு, எவ்வித கொள்கைப் பிடிப்பு கொண்டவராகவும் இருக்கலாம். ஆனால் அவன் தர்மம் உடைய வனாக, ஒழுக்கநெறி கொண்டவனாக, மனதில் ஈரம் உள்ளவனாக இருந்தால் போதும். இராமாயணத்தைப் படித்துவிட்டு கோவிலை இடிக்காமலிருந்தால் போதும். அது எந்த மதக்கோவில், வழிபட்டுத் தலமாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆக, ஒழுக்கம்தான் ஆத்திகம், நாத்திகம் இரண்டையும் சிறப்புறச் செய்கிறது என்பது நிஜம்தான்.
சனிக்கிழமை முடிவெட்டக் கூடாது, புத்தாடைகள் அணியக்கூடாது என்கிறார்களே? -ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
முதலில் சனியைப்பற்றி நாரதரி டம் சிவபெருமான் கூறியதை அறிந்துகொள்ளுங்கள். "நாரதரே, சனி கிரகம் சாதாரண மானது என எண்ணக்கூடாது. சகல கிரகங்களுக்கும் அரசனைப் போன்றவன். சூரியனுடைய மகன். கறுத்த தேகம் உடையவன். சமுத்திரம் போன்ற அகன்ற பெருமை உடையவன். ஜடைமுடி தரித்தவன். வைரம் போன்ற கடினமான ரோமங்கள் உடையவன். அத்தகைய சனீஸ்வரனைக் கண்டு தேவர்கள், அசுரர்கள், சித்தர், வித்யாதரர், உரகர் என எல்லாருமே பயந்து, நடுங்குவர். அவனுடைய பார்வைபட்டால், வேரோடு அழிந்து போவர்'' எனக் கூறினார். ஆக, சனிபகவான் பார்வையென்பது ஒரு தீங்கான, பொசுக்கும் தன்மை கொண்டது. சனீஸ்வரனின் மனைவியால் இவர்கொண்ட சாபமிது. இத்தனை பெருமை கொண்ட சனிக் கிழமையில் முடிவெட்டக்கூடாது, புத்தாடைகள் தரிக்கக் கூடாது என்பது நியாயமான நம்பிக்கைதான்.