விநாயகருக்கு ஏன் முதல் வணக்கம்? -கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
விநாயகரை குழந்தை ஸ்வாமி என்கிறோம். இவரைப்பற்றி பெரியவர் நிறையக் கூறியிருக்கிறார். சிறு குழந்தை என்றால் துருதுரு என சதா ஓடிக் கொண்டேயிருக்கும். ஆனால் விநாயகர் என்ற குழந்தை ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும். பிள்ளை என்றாலே விநாயகர்தான். மரியாதை யாக பிள்ளையார் என்கிறோம். சிவபெரு மானின் படைகளுக்கு, பூத கணங்களுக்கு பிள்ளை யார்தான் தலைவர். அவரை விட மேலான தலைவர் கிடையாது. எனவே எல்லாவற்றுக்கும் முதல்வ ராக, முந்தியவராக இருப் பவர். விநாயகர் என்ற பதத்தில் நாயகர் என்பது தலைவரைக் குறிக்கும். வி என்பது ஒன்றை உயர்த்திக் காட்டுவதற்கும், நாயகன் இல்லாதவர் என்றும் குறிப்பிடும். இவருக்குமேல் ஒரு நாயகன் இல்லாதவர். எனவே விநாயகர் என்கி றோம். பிள்ளையாரை விக் நேச்வரர் என்கிறோம். நமக்கு வருகிற விக்னங்கள், தடைகள் என எல்லாவற்றையும் அழிப்ப வர். எனவே எந்த ஒரு காரியத்துக்கும் தடை வராமல் இருப்பதற்காக, முதலில் இவரை பிரார்த்தனை செய்கிறோம். முதல் பூஜை இவருக்குத்தான்.
இந்து மதத்தில் எண்ணற்ற தெய்வம் இருக்கிறதே என்ன காரணம்? -கே.எல். பகவதி, சென்னை.
கிறிஸ்துவ மதத்தை உண்டாக்கியவர் யார் எனக்கேட்டால், ஏசுநாதர் என்று கூறிவிடலாம். இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர் யார் எனக்கேட்டால் நபிகள் நாயகம் எனக் கூறிவிடலாம். அது சரி- இந்து மதத்தை உண்டாக்கியவர் யார் என்ற கேள்விக்கு பதிலே கிடையாது. இராமன், கிருஷ்ணன் என இவர்கள் அவதார புருஷர்கள். ஆனால் அவர்கள் இந்து மதத்தை ஸ்தாபிக்கவில்லை. பல ஆச்சார்யார்கள் தோன்றினார்கள். ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றி இந்து மதத்தையும், தர்மத்தையும், பக்தியையும் பரப்பினார்கள். ஆனால் அவர்களும் இந்து மதத்தை உண்டாக்க வில்லை. எனவே இந்து மதம் மிக அனாதி யானது. மிகப் பழமையானது. இது தோன்றிய காலத்தை யாரும் உறுதியாக கூற இயலாது. இந்து மதம் மக்களுக்கு, நீ இவரைத்தான் வணங்கவேண்டும் என எந்த கட்டுப்பாடு களையும் விதிக்காது. மத வணக்க சுதந்திரத் தன்மை உடையது. எனவே இத்தனை பழமையான மதத்தில் எண்ணற்ற தெய்வங்கள் இருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை.
பிரதோஷ கால நந்தி பூஜை என்றால் என்ன? -ஆர்.தீபக், சென்னை.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசியில் வருவது பிரதோஷகால பூஜையாகும். இது சூரிய உதயத்திற்குமுன் மூன்றே முக்கால் நாழிகையும், பின் மூன்றே முக்கால் நாழிகையும் கொண்டுள்ளது. மாலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் நடக்கும் பூஜையே பிரதோஷ பூஜையாகும்.
பிரதோஷ பூஜை தோன்றிய புராண வரலாற்றைச் சொல்லுங்களேன்... -கலைச்செல்வி, இராயபுரம்.
தேவேந்திரன் தனது வெள்ளை யானையான ஐராவதத்தில் வந்துகொண்டிருந்தான். அவனெதிரே வந்த துர்வாச முனிவர், அவனுக்கு ஒரு மலர் மாலையைப் பிரிசளித்தார். இந்திரனோ, அதை அலட்சியமாக வாங்கி யானையின் தலையில் வைத்துவிட்டார். அந்த யானையும் அந்த மலர் மாலையை வீசி, தன் காலில் போட்டு மிதித்துவிட்டது. இதனைக் கண்ட துர்வாசர் மிகக் கோபம்கொண்டு, இந்திரனின் அனைத்து செல்வங்களும் நீங்குமாறு சபித்துவிட்டார். உடனே அவனது செல்வங்கள் அனைத்தும் கடலுக்கடியில் போய்விட்டது. எனவே இந்த செல்வத்தை கடைந்தெடுக்க வாசுகி எனும் பாம்பைக்கொண்டு மலையைக் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. உடனே சிவபெருமான் நந்தியை அழைத்து அதனை திரட்டிக்கொண்டு வருமாறு பணித்தார். அதனைக்கொண்டு வந்த நந்தியப் பெருமான், அதனை சிவனிடம் கொடுக்க, சிவன் அதனை உண்டார். ஆனாலும் சிவன் அதனை விழுங்கிவிட்டால், சிவனுள் அடக்க மான பிரபஞ்சம் முழுவதும் அழிந்துவிடும். துப்பிவிட்டால், தேவர்கள் பாதிக்கப்படுவர். எனவே பார்வதிதேவி, சிவனின் தொண்டையைத் தடவ, ஆலகால விஷம் சிவனின் தொண்டையில் நின்றுவிட்டது. அப்போது நந்திக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம். நாம் நம் கைகளில் விஷத்தைக் கொண்டு வந்தோமே, ஒன்றும் ஆகவில்லையே எனத் தோன்ற, சிவன் அவரின் கைகளை முகர்ந்து பார்க்கச்சொல்ல, அதனை முகர்ந்த நந்திக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. சிவனும், நந்தியின் ஆணவத்தை அடக்கவே இவ்வாறு செய்தேன். கொஞ்சம் பச்சரிசி மாவும், வெல்லமும் சேர்த்துக்கொடு. சரியாகிவிடுவான் எனக் கூற பார்வதி அவ்வாறே கொடுக்க, நந்தி சரியாகிவிட்டார். இதனால்தான் பிரதோஷ காலத்தில் காப்பரிசி கொடுக்கும் வழக்கம் உண்டானது. இந்த நிகழ்வு ஒரு சனிக்கிழமை நடந்ததால் சனிப் பிரதோஷம் மிக முக்கியமானது. இவ்வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நின்று சிவன் நடனமாடுவதாக சாஸ்திரம் உண்டு. உங்கள் வாழ்வில் விஷம்போல எத்தனை துயரம் இருப்பினும், பிரதோஷம் அன்று நந்தியைப் பூஜித்து, சிவனை வணங்கி னால், அத்தனை துன்பத்தையும் சிவனே ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு மகிழ்வான வாழ்வளிப்பார். மேலும் பிரதோஷ வேளையில், அனைத்து தெய்வங்களும் சிவனை தரிசிப்பதாகக் கூறுவர். எனவே பிரதோஷகால சிவதரிசனம், அனைத்து தெய்வங்களின் ஆசியைத் தரும். நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவ நடனம் புரிவதால், நந்தி வழிபாடு முக்கியமாக கூறப்படுகிறது.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்வதேன்...? -ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
நமது கோவில்களில், ஆகம விதிப்படி, கோபுரங்களின் உச்சியில் கலசங்கள் இருக்கும். இந்தக் கலசங்களின்மேல், உச்சியில் கூரியமுனை மாதிரி ஒரு அமைப்பு இருக்கும். இந்தக் கூரியமுனை, வானில் நிலவும் உயிர் சக்தியை ஈர்த்துக்கொள்ளும். இந்த உயிர் சக்தியானது, கலசத்தில் உறைந் திருக்கும். இந்த உயிர் சக்தி நிறைந்த கலசத்தை, கோபுரத்தை நாம் தரிசிப்பதால், நமக்கு தெய்வ அருளும், புதுவித சக்தியும், மனதில் நிறைவும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். கோபுரத்தைத் தரிசித்தவுடன், உங்களில் அனேகர், ஒருவித சிலிர்ப்பு ஏற்படுவதை உணர்ந்திருப்பீர்கள். அதற்கு இந்த பிரபஞ்ச ஈர்ப்பு சக்தியே காரணமாகும். இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆன்மிக சொற்பொழிவாளர் பணம் வாங்கலாமா? -என். ஜானகிராமன், செல்வமருதூர், திசையன்வினை- நெல்லை.
உலகியல் வாழ்க்கை முறையில் சில விஷயங்களுக்கு பணம் கேட்கக்கூடாது என விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அவை ஜோதிடம், மருத்துவம், கோவில் அர்ச்சகர்கள், சொற்பொழிவாளர் என இன்னும் சிலவும் உள்ளது. விதிமுறைகள் சரிதான். பணம் கேட்கக்கூடாதுதான். ஆனால் கூடவே இன்னொரு விதியும் உள்ளது. அதை வசதியாக மறந்து விடுகிறார்கள். மேற்கண்ட சேவைகளை இலவசமாக பெறக் கூடாது. ஓசியில் பெற்றால் அது பலிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் சில சேவைகளை பெறும்போது, கண்டிப்பாக அதற்குரிய தொகையைக் கொடுத்துவிடுவது நல்லது. எல்லாம் சரிதான். மேற்கண்ட சேவை செய்பவர்களுக்கும், குடும்பம், பொறுப்பு என இருக்குமே! அவர்கள் செலவுக்கு என்ன செய்வார்கள் யோசியுங்கள்!
எதிர்மறை எண்ணங்கள் தோன்றாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? -கவிதா, ஆற்காடு.
ஒரு இடம் குப்பைக் கூளங்கள் நிரம்பி இருந்தால் என்ன வரும்? கெட்ட துர்நாற்றம், நோய்த் தொற்று, முகச்சுழிப்பு என ஏற்படும் இல்லையா... இதேபோல் மனம் குப்பையாக இருந்தால் கெட்ட எண்ணம், பொறாமை, பாவங்கள், மனத்தீ, என இவையாவும் நிறைந்து வழியும். இந்தக் கெட்ட எண்ணங்கள் மறைந்து, நல்ல எண்ணங்கள் வளர, மௌனமும், பட்டினியும் சிறந்த சாதனங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. உங்கள் இஷ்ட தெய்வத்துக்கு, முக்கிய நாட்களில் சிவராத்திரி, சஷ்டி, நவராத்திரி, ஏகாதசி என பட்டினி விரதம் இருக்க லாம். கூடவே வாய் பேசாமல் மௌன விரதமும் இருக்கலாம். இது இரண்டும் உங்களை தூய்மை மனது உடையவராக மாற்றிவிடும். விரத உபவாசம் தவிரவும், தினமும் அரைமணி நேரம் மௌனமாக தியானம் பண்ணுவது மிக மேன்மையான விஷயம் என மகாபெரியவர் கூறி அருளியுள்ளார்.
இயற்கையின் சீற்றம் எப்போது அடங்கும்? -பாரத், இராயபுரம்.
இயற்கையை நாம் சீண்டிப் பார்க்கும் போது, இயற்கை சீற்றம் ஏற்படுகிறது. இன்றைய காலத்தில் இயற்கையை நாம் என்ன பாடுபடுத்துகிறோம். ஒன்னா? இரண்டா? சொல்லிக் கொண்டே போகலாம். இருக்கிற பெரிய மரத்தையெல்லாம் வெட்டிப், புடுங்கிப் போட்டாயிற்று. குளத்தையெல்லாம் தூர்த்து பெரிய, பெரிய கட்டடம் கட்டியாச்சு. ஆறு, நதிகளை எல்லாம், மாசு நிறைய பெருகும்படி ஆக்கியாச்சு. காற்று முழுவதும் தூசு அடைய விட்டாச்சு. கடலையும் விட்டு வைக்கவில்லை. ஆங்காங்கே ஆயிலை பரப்பியாச்சு. இந்த லட்சணத்தில் இயற்கை சீற்றம் எப்போது அடங்கும் எனக் கேள்வி வேற! இயற்கை சீற்றம் இப்போதைக்கு அடங்காது. முதலில் நீங்க ஒழுங்கா இருங்க. நீர், நிலம், காற்று என எதனையும் விட்டுவைக்கல. அவை கோபம் வந்து கொந்தளிக்கிறது. நீர் சில சமயம் மழையாக பெய்து கெடுக்கிறது. அல்லது தண்ணீரை கண்ணில் காட்டாமல் ஆட்டம் காட்டுகிறது. காற்றில் மாசு நிறைந்து மக்கள் மூச்சு விடவே சிரமமாக இருக்கிறது. கடல் செம கோபம் கொண்டு, திடீரென்று பேக் அடித்துப் போய்விடுகிறது. அல்லது பொல்லாக் கோபத்தில் கொந்தளிக்கிறது. மக்கள் செய்த தீவினை, மக்களுக்கே இயற்கை சிற்றமாக திரும்புகிறது. மக்கள் ஒழுங்கானால், இயற்கையும் சகஜ நிலைக்குத் திரும்பும். முதலில் இந்த மாசுக் கட்டுப்பாடு வாரிய ஆபீசை இரண்டு வருஷத் துக்கு மூடி வையுங்கள். மாசு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்; இது உண்மை.