50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த குடும்பங்களில் வாரிசுகள் கூடுதலாக இருந்தும் பற்றும் பாசமும் அதிகரித்தே இருந்தன. 'தொகுதி'களை இழக்க நேரிடுமோ என்று அச்சங்கொள்ளு மளவிற்கு குடும்பம் சிறுத்துப்போன இன்றைய நிலையில் பழைய பாசம் + பந்த பாசம் ஆகியவை குறைந்து போனதே! மீண்டும் "அந்த நாள்' வருமா? -என்.ஜே.ராமன்,செல்வமருதூர் திசையன்விளை.

பழங்காலம் முதற்கொண்டு, கூட்டுக் குடும்பங்கள் தான் இருந்தன. அப்போதைய மனிதன், நீர் ஆதாரம் உள்ள இடங்களில் குழுக்களாகவே வாழ்ந்தான்.

அப்போதிருந்து ஒவ்வொரு வீட்டிலும், குறைந்தது பத்து குழந்தைகள் இருப்பார்கள். இது குறைந்த பட்ச கணக்கு. அதற்கு மேல்தான் பிள்ளை பிறக்கும். அப்புறம் எப்படி சண்டை இல்லாமல் வாழ்ந்தார்கள் என்று தோன்றுகிறது அல்லவா. அந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு குறிப்பிட்ட தொழில் இருக்கும். அந்த தொழிலை, அந்த குடும்பத்தினர் சேர்ந்து செய்வர். உழைப்பும் அனைவருக்குமானது. பலனும், பயனும் அனைவருக்குமானது. எனவே, அங்கு எந்த வேறுபாடான எண்ணங் களும் வர வாய்ப்பில்லை. மேலும் எவ்வளவு அதிகம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்களோ, அத்தனைக் கும் லாபம்தான். முதலில் எக்கச் சக்கமாக பிள்ளை பெற்றுக்கொள்ள, ஆணுக்கும் பெண்ணுக்கும் தெம்பு இருந்திருக்கிறதே அதைச் சொல்லுங்கள். எத்தனை பிள்ளை பெற்றாலும் அத்தனைக்கும் கஞ்சித் தண்ணீராவது கொடுத்து வளர்க்க முடிந்தது. இன்னும் ஒன்று, பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்தாலும், அவர்கள் உழைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனால்தான், சண்டை சச்சரவு இல்லாமல், ஒற்றுமையாக இருந்தார்கள்.

இப்போதைய காலத்தில் ஒரு பிள்ளை பெறுவதற்கே, ஆணுக்கும் பெண்ணிற்கும் பெரிய பிரச்சினையாகி விடுகிறது. அந்த ஒரு பிள்ளையையும் ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்து, யார் கிட்டயும் அண்டாமல், செல்லாமல் வளர்கிறது. இதில் பந்த பாசம் என்றால் கிலோ என்ன விலை என்று தான் கேட்கும்.

Advertisment

ss

எந்த ஒரு விஷயத்தையும் அந்தந்த காலகட்டத்திற்கு ஈடுகொடுத்து புரிந்துகொள்ளவேண்டும். நடப்பு யுகத்தில் உங்கள் ஆசை கனவில் வேண்டுமானால் நடக்கலாம். ப்ராக்டிக்கலாக சரிப்பட்டு வராது.

தானமும் தர்மமும் ஒன்றுதானே!? இதில் வேறு அர்த்தம் உள்ளதா!? விளக்கம் தருவீர்களா!? -எஸ்.ஆர்.ஹரிஹரன், சென்னை.

தானம்: பிரம்மாவிற்கு தேவர்கள், அசுரர்கள், மனுஷ்யர்கள் எல்லாருக் கும் ஒரே மாதிரி குழந்தைகள்தான். ஒரு முறை தேவர்கள், பிரம்மா விடம் சென்று எங்களுக்கு சுருக்க மாக உபதேசம் செய்யுங்கள் என்று பிரார்த்திக்க பிரம்மாவும் ஒரே வார்த்தையாக "த' என்று கூறினார். உடனே தேவர்கள் இந்திரியங்களை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள் என பதி லுரைக்க, பிரம்மாவும் சரிதான் என கூறி வழியனுப்பிவிட்டார். உடனே மனுஷ்யர்களும் உபதேசம் கேட்க அவர்களுக்கும் பிரம்மா "த' என்ற ஒற்றை வார்த்தை யைக் கூற, மனுஷ்யர்களும், கொடு, தானம் பண்ணு என்று அர்த்தம், எனக்கூற, பிரம்மாவும் சரி என அனுப்பிவிட்டார். அசுரர்களும் இவ்விதம் கேட்க, அவர்களுக்கும் "த' என ஒற்றை எழுத்தைக் கூற, தயையோடு இருங்கள் எனக் கூறுகிறீர்கள் என பதில் கூற, சரிதான் என்று பிரம்மா அனுப்பி வைத்துவிட்டார். மனிதர்களுக்கு தானம் செய்வது என்றால் மகா கஷ்டமான விஷயம். எனவே தான் மனிதர்களுக்கு தானம் கொடுக்கும்படி கூறப்பட்டுள்ளது. இந்த தானம் கொடுக்கும்போது, மன மலர்ச்சியுடனும், யாருக்கும் தெரியாமலும், அகங்காரம் இல்லாமலும் கொடுக்க வேண்டும். பகவத் கீதையில் தானத்தில் மூன்று விதங்கள் கூறப்பட்டுள்ளது. ஸாத்விக தானம்: துளி கூட பிரதி உபகாரம் எதிர் பாராமல் தகுந்த பாத்திரத் துக்கு, தகுந்த இடத்தில் தருவது. இது உத்தமமானது. ராஜஸ தானம்: தானம் செய்யும்போது கிடைக்கப் போகிற புண்ணியம், பிரதி உபகாரம், பொருள் போவதால் உள்ளூர மனக் கஷ்டம் என இவ்விதம் கொடுப்பது ராஜஸ்தானம். இது மத்திமம். தாமஸ தானம்: தகாத இடத்தில், தகாத காலத்தில், அவமானப்படுத்தி கொடுப்பது தாமஸ தானம். இது அதர்மமானது. இவ்வாறு தான வகையை ஸ்ரீகிருஷ்ணர் பிரித்துக் கூறியுள்ளார். தானம் செய்தோம் என்ற எண்ணத்தையே தானம் பண்ணிவிட வேண்டுமாம். அதாவது தானம் செய்வது பற்றி யாரிடமும் கூறக்கூடாது என்பதே இதன் பொருள். தானம் செய்தது பற்றி வெளியே கூறினால், அதனால் உண்டாகும் புண்ணியம் நமக்கு கிடைக்காது. இதுவெல்லாம் தானம் பற்றிய சில செய்திகளாகும். தர்மம்: தர்மம் என்பது, சமுதாயத்தில் மக்கள், அவரவர் வாழ்க்கைத் தேவையைப் பெற்று, சௌக்கியமாக, வாழ்வது. அது நேர்வழியில், நேர்மையாக வாழ்வது தர்மம் எனப்படும். யோசியுங்கள். வயலில் பயிர் விளைவிப்பவர். அத்தனை அரிசியையும் அவரே உண்பதில்லை. துணி நெய்கிறவர். அத்தனை துணியையும் அவரே உடுத்திக் கொள்வதில்லை. உப்பு காய்ச்சுகிறவர். அத்தனை உப்பையும் அவரே பயன்படுத்துவதில்லை. அவரவர் உழைப்பும், உற்பத்தியும் பிற மக்களுக்குத்தான் பயன்படு கிறது. இந்த உழைப்பை நேர்மையாக, கலப்பிடமில்லாமல் செய்வதே தர்மமாகும். தானம் மேலுலக வாழ்வுக்குரியது. தர்மம் நடைமுறையின் இல்வாழ்வுக்குரியது.

சிறுவயதில் பணிப்பெண் புகட்டிய ராம நாமத்தை வாழ்வில் கோடானு கோடி முறை உச்சரித்த காந்திஜி யின் அளவிற்கு தேசத்தியாகிகளின் பிரார்த்தனை ஈடாகவில்லை என்பதால் "காந்திஜி'யே தேசத்தந்தை என்றானார் என்ற வாக்குவாதம் சரியா? -ஆர்.ஜே.கல்யாணி, செல்வமருதூர் திசையன்விளை.

காந்தியும், ராமநாமமும் காந்திஜி கோடானகோடி ராமநாமம் ஜெபித்ததால்தான், அவர் தேசத்தந்தையாக வும் மகாத்மாவாகவும் ஆனார். அப்படி யானால் ராம நாமம் எத்தனை உயர்ந்தது. ராம நாமம் என்பது பத்ரம், சிவம் மற்றும் மங்களம். நிறைய யோகிகள், சித்தர்கள், முனிவர்கள் ராம நாமாவை ஜெபித்துக் கொண்டேயிருந்தனர். வால்மீகி முனிவர், ராமயாணத்தை எழுதும் முன்பு ராம நாமத்தை உச்சாடனம் செய்தார். மேலும், வியாசர், வசிஷ்டர், அகஸ்தியர், விஸ்வாமித்திரர், ராமானுஜர், வேதாந்த தேசிகர், ராகவேந்திரர், ரமணர், சிருங்கேரி சுவாமிகள், காஞ்சி பெரியவர் என அனைத்து மகா சித்தர்களும் ராம ராம ஜெயம் செய்தவர்கள். காயத்ரி மந்திரத்தை சொல்லக் கூடாதவர் கள் ராம நாமாவைக் கூறலாம். ராமநாமத்தை வெகு நம்பிக்கையுடன் கூறினால், அதனை ஆஞ்சனேயர் கேட்டுக்கொண்டிருப்பார் என்றும், உங்களின் வேண்டுதலை ஸ்ரீ ஆஞ்ச னேயர் நிறைவேற்றித் தருவார் என்பதும் உண்மை. ராம நாமம் பிறந்த கதை ஒருமுறை கிருணு எனும் மகரிஷி தவம் செய்து கொண்டிருந்தபோது அவருடைய கண்களில் வீரியம் பெருகியது. அதனை ஒரு பாம்பு புசித்துவிட்டது. அதனால் அதன் வயிற்றில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தையை வேடர்கள் அவனுக்கு ரிட்சன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். அவன் வேடர்களுடன் வளர்ந்ததால், வேடர் களைப் போல விலங்குகளைக் கொன்றும், வழிப்பறி செய்தும் வாழ்ந்து வந்தான். அவனுக்கு வேடர்குல பெண்ணை திருமணம் செய்தனர். பல பிள்ளைகள் பிறந்தனர். ஒரு நாள் சப்தரிஷிகள் காட்டிற்குள் செல்லும்போது, ரிட்சன் அவர்களை வழி மறித்து கொள்ளையடிக்க முயன்றான். அவர் களோ, நீ கொள்ளையடித்த பொருட்களை, உன் குடும்பத்தினருடன் பங்கு போட்டுக் கொள்கிறாய். அதுபோல் நீ செய்த பாவத்தை யும் அவர்கள் பங்கு போட்டுக்கொள்வார்களா என கேட்டுவிட்டு வா. நாங்கள் இங்கேயே இருக்கிறோம் எனக் கூறி அனுப்பினர். ரிட்சன், தனது குடும்பத்தாரிடம் இந்த சந்தேகக் கேள்வி குறித்து வினவ அவர்கள் கைகொட்டிச் சிரித்து, உன் வருமானம் மட்டுமே வேண்டும். அதனால் உண்டாகும் பாவங்களில் எங்களுக்கு பங்கு இல்லை எனக் கூறிவிட்டனர். இதைக் கேட்டதும் ரிட்சனின் மன இருள் அகன்றது. மகரிஷிகளிடம் வந்து, இனி என்னை நீங்கள்தான் காப்பாற்றவேண்டும் எனக் கதறினான். இனிமேல் நீ தினமும் "மரா' எனும் மந்திரத்தை உச்சரித்து வா' எனக் கூறிவிட்டு சென்றுவிட்டனர். அது முதல் ரிட்சன், ஓர் இடத்தில் அமர்ந்து, அந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தான். அவன் அமர்ந்த இடத்தில் புதரும் காடும், புற்றும் தோன்றிவிட்டது. சில காலம் சென்றபின் அம்மகரிஷிகள் "ரிட்சனே வெளியே வா' எனக்கூற ரிட்சனும் வெளியே வர, ரிஷிகள் அவனிடம், நாங்கள் கூறிய "மரா' நீ உச்சரிக்கும் பொழுது "ராம' என மாறிற்று. உன்னையறியாமல் ராம நாமம் உச்சரித்தால், உன் பாவம் அனைத்தும் நீங்கிற்று. இப்போது நீ மகா ஞானியானாய். மகரிக்ஷியாகவும் ஆகிவிட்டாய். இது உனக்கு இரண்டாவது பிறப்பாகும் என ஆசிர்வாதம் செய்துவிட்டு சென்றனர். எனவே இனிமேல் உன் பெயர் "வால்மீகி' என்று வழங்கட்டும் என்றனர். இந்த வால்மீகி முனிவர்தான் இராமாயணம் இயற்றினார். இது ஆதி காவியம் என்றழைக்கப்படுகிறது. இவர் ஆதி கவி என்றழைக்கப்படுகிறார். பார்வதி தேவி, சிவனிடம், விஷ்ணு சகஸ்ர நாமத்தை சுருக்கமாக கூறும்படி விண்ணப்பிக்க, சிவனும்

"ராம ராம ராமேதி, ரமே ராம மனோரமே

Advertisment

சஹஸ்ராம தத்துல்யம். ராம நாம மனோரமே.'

எனக்கூறி அருளினார். ஆக ராம நாமம் என்பது இத்துணை சிறப்புடையது. இராமயணத்தின் முழுச் சாரத்தையும் கொண்டுள்ளது. ஒரு பெண்மனி, குழந்தைப் பேறு வேண்டி, இடைவிடாது ராமஜெபம் செய்ய, அவருக்கு பிறந்த குழந்தை சதாசிவ பிரம்மேந்திரர் எனும் மிகப்பெரிய சன்யாசி ஆனார். ஆக, ராம ஜெபத்தை யார் வெகு நம்பிக்கையுடன் எப்போதும் உச்சரித்துக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள் மிக உன்னதம் அடைவார்கள் என்பதில் சந்தேக மில்லை. காந்திஜியின் மிக மேன்மைக்கு அவரின் இடைவிடாத ராம ஜெபமே காரணம் என்பது உண்மை.

ப்