மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் தொடக்கத் தில் ராசிக்கு 2-ல் இருக்கிறார். 9-ஆம் தேதி முதல் மிதுன ராசிக்கு மாறுகிறார். சுயசாரத் தில் (மிருகசீரிடம்) சஞ்சாரம். செவ்வாய்க்கு 3-ஆமிடம் நல்ல இடம். முன்னேற்றப் பாதையில் செல்லும் வழிவகைகள் அமையும். 10-ஆமிடத்தையும் 10-க்குடையவரையும் செவ்வாய் பார்க்கிறார். தொழில், உத்தியோகம் இவற்றில் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பாராட் டும் நன்மதிப்பும் உண்டாகும். 3-க்குடைய புதன் 6-ல் மறைந்தாலும் ஆட்சி, உச்சம் பெறுவதால் மறைவு பாதிக்காது. உடன்பிறந்த சகோதர- சகோதரிகள்வகையில் சில சுபச் செலவுகள் ஏற்படலாம். 10-ஆம் தேதி சனி வக்ரநிவர்த்தி பெறுகிறார். தொழில் துறையில் நிலவிய தேக்கநிலைகள் மாறும். செவ்வாய்க் கிழமை துர்க்கையம்மனுக்கு அரளிப்பூ சாற்றி வழிபடவும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இம்மாதம் 20-ஆம் தேதிவரை கன்னியில் இருக்கிறார். தொடக்கத்தில் சூரியன் சாரம், பிறகு சந்திரன் சாரம் பெறுகிறார். 5-ல் அவர் நீசம்பெற்றாலும் உச்சம்பெறும் புதன் அங்கு மாறியபிறகு சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் கிடைக்கி றது. பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலை மாறி வரவு- செலவுகள் உண்டாகும். இல்லறத் தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் உருவா கும். 12-க்குடைய செவ்வாய் 2-ல் மாறிய பிறகு அந்நிய தனமும் உங்கள் கையில் புரளும். ஒருசில கணவன்மார்களுக்கு வேலையில் திருப்தியற்ற நிலை விலகி நிம்மதி உண்டாகும். வேலையிலும் நல்ல மாற்றம் காணலாம். 10-க்குடைய சனி 9-ல் நின்று தர்மகர்மாதிபதி யோகமாக வழிநடத்தும். நவகிரகத்தில் சுக்கிரனை வழிபடவும்.

Advertisment

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 3-ஆம் தேதிமுதல் 4-ல் ஆட்சி, உச்சம்பெறுகிறார். தேகசுகம் நன்றாக இருக்கும். அட்டமத்துச்சனியால் கவலைகளையும் காரியத் தேக்கங்களையும் சந்தித்தவர்களுக்கு புதன் கன்னியில் இருக்கும் காலம் உத்தியோகத்தில் முன்னேற்றம் தென்படும். வேலையில் மாற்றம் கிடைப்பதும் நல்லதுதான்; ஏற்றுக்கொள்ளலாம். 5, 12-க்கு டைய சுக்கிரன் நீசம்பெறுவதால் பொருளா தாரத்தில் நெருக்கடி விலகும். சஞ்சலம் மறையும். சங்கடம் தீரும். 9-ஆம் தேதி செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சாரம். பணிபுரியும் இடத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். தாய்சுகம் தெளிவுபெறும். புதன்கிழமை சுதர்ஸன சக்கரத்தாழ்வாரை வழிபடவும். நெய்தீபமேற்றவும்.

கடகம்

Advertisment

கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் 3-ல் மறைவு. 2-ஆமிடம் வாக்கு, தனம், குடும்ப ஸ்தானம். பொருளாதாரத்தில் வரவு- செலவு இருந்தாலும் ஒரு நிம்மதியற்ற நிலைபோல உணர்வீர்கள். உழைப்பு அதிகம்; ஆனால் அதற்கேற்ற ஊதியம் இல்லையே என்று வருத்தப்படும் சூழல். ஆனால் 9-க்குடைய குரு பார்ப்பதால் தேவைகள் எப்படியோ கடைசி நேரத்தில் நிறைவேறிவிடும். அந்தவகையில் ஒரு ஆறுதல். 4-க்குடைய சுக்கிரன் 3-ல் நீசம் என்பதால் சில நேரத்தில் ஆரோக்கியத்தில் வைத்தியச் செலவுகளை சந்திக்கலாம்; பாதிப்பு நேராது. 10-ஆம் தேதிமுதல் சனி வக்ர நிவர்த்தி. அவர் 7, 8-க்குடையவர்; 7-ல் ஆட்சி. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திங்கட்கிழமை சிவ-ங்கத்திற்குப் பாலா பிஷேகம் செய்து வழிபடவும்.

t

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் 17-ஆம் தேதி வரை 2-ஆமிடத்தில் சஞ்சரிக்கிறார். அவரை 8-க்குடைய குரு பார்க்கிறார். 10-க்குடைய சுக்கிரனையும் குரு பார்க்கிறார். தொழில் இயக்கம் தடைப்படாது. அதேசமயம், பொருளாதாரத்திலும் நிறைவிருக்காது. குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையில் குறையேதுமில்லை. 9-க்குடைய செவ்வாய் 9-ஆம் தேதிமுதல் 11-ல் மாறுகிறார். 11-ஆமிடம் ஜெயம், லாப ஸ்தானம். அதன் பிறகு ஓரளவு பெருமூச்சு விடுமளவு காரிய நிலைகள் அமையும். 18-ஆம் தேதிமுதல் சூரியன் 3-ல் நீசமடைகிறார். அதன்பிறகு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவைப்படும். பிள்ளைகள்வகையில் நல்லவை தள்ளிப்போவது மனதுக்கு வருத்தமாக இருக்கும். குரு வக்ரநிவர்த்திக்குப் பிறகு நன்மைகள் அமையும். ஞாயிறுதோறும் நந்திக்கு நெய் தீபமேற்றி வழிபடவும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 3-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசியில் ஆட்சி. அது அவருக்கு உச்ச வீடும்கூட! எனவே கும்பிடப் போனவனுக்கு தெய்வம் குறுக்கே வந்தது மாதிரியான நிகழ்வு கள் உண்டாகும். பிள்ளைகளின் சுபநிகழ்வு, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பலன்களை சந்திக்கலாம். 7-ல் உள்ள குரு தம்பதிகளுக்குள் ஒற்றுமையையும் அன்யோன்யத்தையும் தருவார். 8-க்குடைய செவ்வாய் 11-ல் மாறியபின் உத்தியோகம், வேலையில் இடமாற்றம் ஏற்படும். தொழி-ல் சிறு விரயம் ஏற்பட்டு விலகும். புது முயற்சிகள் ஒப்பந்தமாகும். கணவன் அல்லது மனைவி மூலம் ஏதேனும் ஒரு தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. 5-ஆமி டத்து சனி எண்ணங்களையும் திட்டங்களை யும் செயல் வடிவமாக்குவார். புதன்தோறும் லட்சுமி நாராயணரை வழிபடவும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் இம்மாதம் 20-ஆம் தேதிவரை 12-ல் நீசம் பெறுகிறார். 3, 6-க்குடைய குரு பார்க்கிறார். ராசிநாதன் நீசம் பெறுவதால் உங்களுடைய செயல்பாடுகளில் ஒரு முட்டுக்கட்டை, தேக்கநிலை போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். இன்னும் ஒருசிலருக்கு பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறொரு வேலை தேடவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படலாம். சனியின் வக்ரநிவர்த்திக்குப்பிறகு தேகநலம் நன்றாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். என்றாலும் கடன்சுமை குறைந்தபாடில்லை. குரு 6-ல் நின்று 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் விரயங்களும் இருந்துகொண்டுதான் இருக்கும். செவ்வாய் 9-ல் சஞ்சாரம் செய்யும் காலம் பூமி, மனை வீடு சம்பந்தப்பட்டவகையில் நன்மைகள் நடக்கும். வியாழக்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு நெய்தீபமேற்றி வணங்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் மாத ஆரம்பத்தில் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 9-ஆம் தேதிமுதல் 8-ல் மறைகிறார். 3-க்குடைய சனி பார்க்கிறார். மந்தன்சேய் பார்த்திடவும் தீது; சேர்ந்திடவும் தீது என்பது சந்திரகாவிய விதி! என்றாலும் செவ்வாய்க்கு வீடு, கொடுத்த புதன் 11-ல் ஆட்சி. உச்சம் ஒருபுறம் கெட்டது நடந்தாலும், ஒருபுறம் அதைவிட ஒருபடிமேல் நன்மைகள் நடப்பது மனதுக்கு ஆறுதல் தரும், கவலைகள் மறையும். 7-க்குடைய புதன் உச்சம் பெறுவதாலும் புதன், குரு பார்ப்பதாலும் திரு மண சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவா கும். கணவன் அல்லது மனைவிக்கு உத்தியோக ரீதியான உயர்வுகள் கிடைக்கும். சிலநேரம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திணறலாம்; கவனம் தேவை. செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபடவும்.

தனுசு

தனுசு ராசிக்கு நடக்கும் ஏழரைச்சனியானது டிசம்பர் 2023-ல் முழுமையாக விலகுகிறது. 11-க்குடைய சுக்கிரன் 10-ல் நீசம்பெற்றாலும் 10-க்குடைய புதன் ஆட்சி, உச்சம். எனவே சுக்கிரன் நீசபங்கம் பெறுகிறார். உத்தியோகத் துறையில் பணிபுரிவோருக்கு ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. இதில் சந்திர தசையோ, சந்திர புக்தியோ நடப்பவர்களுக்கு உத்தியோகம் இழப்பதற்கான வாய்ப்போ அல்லது பணியில் அதிக பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்போ ஏற்படலாம். செவ்வாய் 7-ல் மாறி சனியின் பார்வையைப் பெறும் காலம் குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கலாம். எதிலும் பொறுமையுடனும் நிதானத்துட னும் எடுக்கும் முடிவு தனக்கும் தன்னைச் சார்ந் தோருக்கும் நன்மை தரும். சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

மகரம்

மகர ராசிநாதன் ஜென்ம ராசியில் ஆட்சி. 3-ஆமிடம், 7-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். சகோதரவழியில் நன்மைகள் உண்டாகும். ஏழரைச்சனி நடப்பதால் ஒருசிலர் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழும் சூழ்நிலையில் இருக்கலாம். அப்படி இல்லாமல் சேர்ந்துவாழும் இடத்தில் கணவன் அல்லது மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் அல்லது மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். 10-க்குடைய சுக்கிரன் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்தும். ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்திகள் நடந்தால் தொழில் முன்னேற்றம், ஊதிய உயர்வு, சொத்துகள் விற்பதன்மூலம் பணவரவு போன்றவற்றை சந்திக்கலாம். புதனும் 9-ல் மாறி குரு பார்வை யைப் பெறுவார். சஞ்சலமும் மறையும். சனிக் கிழமைதோறும் ஆஞ்சனேயருக்கு நெய்தீப மேற்றி வணங்கவும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைவுபெற்றாலும் ஆட்சி. 11-க்குடைய குரு 2-ல் இருப்பதால் பொருளாதாரத் தொல்லைகள் குறையும். 3-ஆமிடத்து ராகு மன தைரியம், தன்னம் பிக்கையைத் தரும். 9-க்குடைய சுக்கிரன் 8-ல் நீசம்பெறுவதாலும், தகப்பனார்காரகன் சூரியன் 8-ல் மறைவதாலும் சில நேரம் மன சஞ்சலம், சங்கடம் போன்றவற்றை சந்திக்க லாம். தகப்பனாருக்கு கண்டம் அல்லது மருத்துவச் செலவு ஏற்படலாம். ஏழரைச்சனியில் ஜனன ஜாதகத்தில் சந்திர தசையோ அல்லது சந்திர புக்தியோ நடந்தால் அல்லது குடும்பத் தில் சமராகு சந்திப்பு இருந்தால் மேற் கண்ட கெட்டபலனை சந்திக்கலாம். அப்படிப் பட்டவர்கள் திங்கட்கிழமையன்று சிவலிங்கத் திற்கு பாலாபிஷேகம் செய்யவும். ஒருமுறை சிவன் கோவிலில் ருத்ர ஹோமம் செய்து சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்யவும்.

மீனம்

"ஜென்ம ராமர் சீதையை சிறைவைத்து' என்பது பாடல். அதற்கிணங்க மீன ராசிக் காரர்களில் சிலர் நன்மைகளை சந்தித்தாலும் பலர் துயரங்களையும் துன்பங்களையும் சந்தித் துக்கொண்டு இருப்பதுதான் உண்மை. தேக நலத்தில் ஆரோக்கியக் குறைவு, வாகனவகையில் சேதாரம், இழப்பு, குடும்பத்தில் பிரச்சினை, பிள்ளைகள்வழியில் தொல்லைகள் போன்றவற்றை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். தேவையற்ற விரயம் போன்றவையும் நிம்மதி யைக் குலைக்கச் செய்யும். 11-ஆமிடத்துச் சனி வக்ரநிவர்த்திக்குப்பின் நிலைமைகள் சற்று கட்டுக்குள் வரலாம். விரயங்கள் குறையும். எதிர்பாராத சில காரியங்கள் நன்மையாக முடியும். 8-ஆமிடத்து கேது சஞ்சலத்தைத் தீர்பார் என்று எதிர்பார்க்கலாம். வியாழக் கிழமையன்று குருவுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி தீபமேற்றவும்.