பிப்ரவரி மாத எண்ணியல் பலன்கள்-ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

/idhalgal/om/numerological-benefits-february

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் எந்த காரியத்தைச் செய்தாலும் நன்மையாகவும் லாபமாகவும் அமையும். சிலருக்கு தந்தைவழி உறவினர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டு வழக்கும் வரும் வாய்ப்புள்ளது. எனவே பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். இதுவரைத் தடைப்பட்டுவந்த சுபகாரியம் இந்த மாதம் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகளுக்கு நல்லவரன்கள் வந்துசேரும். பணவரவுகளில் ஏமாற்றமில்லை. உழைப்புக்கேற்ற பலன் உடனே கிடைக்கும். செய்துவரும் தொழிலை அப்படியே செய்துவரவேண்டும்; விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் வராது. அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடி மாறுதல் கிடைக்கும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்தபடி மேற்படிப்பு அமையும். ஒருசிலர் இராணுவத்துறையில் பணியாற்றச் செல்வார்கள். சிலருக்கு விருப்பத் திருமணம் நடக்கும். வியாபாரிகள் கொள்முதலில் அதிக முதலீடு செய்யக்கூடாது. மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பப் பெண்களால் கணவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். மாமன், மைத்துனர் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வரும். அயல்நாட்டுப் பயணம் உயர்வைத் தரும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

numbers

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எந்த காரியத்தையும் ஆர்வமுடன் செய்வீர்கள். அதனால் உற்றார்- உறவினர் மற்றும் வெளியிடத்திலும் மதிப்பு கூடும். இதுவரை உங்களை வாட்டிவதைத்த கடன் தொந்தரவு குறையும். உழைக்கும் நோக்கம் இருந்தாலும் சரியான வேலை கிடைக்காத உங்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் வந்துசேரும். வீட்டில் இதுவரை இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகள் தாய்- தந்தை பேச்சைக்கேட்டு நடப்பார்கள். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் பொறுமையாகச் செயல்படவேண்டும். பொதுமக்கள் எதிர்ப்புகள் வரும். இதனால் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உடன்பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும். வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவார்கள். இதுவரை வசூலாகாமலிருந்த பாக்கிகள் வசூலாகும். மாணவர்களின் உ

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் எந்த காரியத்தைச் செய்தாலும் நன்மையாகவும் லாபமாகவும் அமையும். சிலருக்கு தந்தைவழி உறவினர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டு வழக்கும் வரும் வாய்ப்புள்ளது. எனவே பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். இதுவரைத் தடைப்பட்டுவந்த சுபகாரியம் இந்த மாதம் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகளுக்கு நல்லவரன்கள் வந்துசேரும். பணவரவுகளில் ஏமாற்றமில்லை. உழைப்புக்கேற்ற பலன் உடனே கிடைக்கும். செய்துவரும் தொழிலை அப்படியே செய்துவரவேண்டும்; விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் வராது. அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடி மாறுதல் கிடைக்கும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்தபடி மேற்படிப்பு அமையும். ஒருசிலர் இராணுவத்துறையில் பணியாற்றச் செல்வார்கள். சிலருக்கு விருப்பத் திருமணம் நடக்கும். வியாபாரிகள் கொள்முதலில் அதிக முதலீடு செய்யக்கூடாது. மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பப் பெண்களால் கணவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். மாமன், மைத்துனர் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வரும். அயல்நாட்டுப் பயணம் உயர்வைத் தரும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

numbers

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எந்த காரியத்தையும் ஆர்வமுடன் செய்வீர்கள். அதனால் உற்றார்- உறவினர் மற்றும் வெளியிடத்திலும் மதிப்பு கூடும். இதுவரை உங்களை வாட்டிவதைத்த கடன் தொந்தரவு குறையும். உழைக்கும் நோக்கம் இருந்தாலும் சரியான வேலை கிடைக்காத உங்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் வந்துசேரும். வீட்டில் இதுவரை இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகள் தாய்- தந்தை பேச்சைக்கேட்டு நடப்பார்கள். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் பொறுமையாகச் செயல்படவேண்டும். பொதுமக்கள் எதிர்ப்புகள் வரும். இதனால் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உடன்பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும். வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவார்கள். இதுவரை வசூலாகாமலிருந்த பாக்கிகள் வசூலாகும். மாணவர்களின் உயர்கல்வி எண்ணம் நிறைவேறும். அரசியலில் உள்ளவர்கள் எதிர்பாராத பதவிகளை தலைமையின் பாராட்டுடன் பெறுவார்கள். ஒருசிலருக்கு இருந்துவந்த நோய் நீங்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 2, 11, 20, 29; 14; 7, 25.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 26; 9, 18.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எப்போதும் சிந்தித்து செயல்படுவீர்கள். இந்த மாதம் உங்களது சிந்தனைகளை செயலாக்கிக் காட்டுவீர்கள். கலைத்துறையில் பணியாற்றுபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வாய்ப்புகள் வந்துசேரும். எல்லா தரப்பு தொழில்புரிவோருக்கும் இந்த மாதம் கூடுதல் வரவுகள் வரும். அதேபோல் கூடுதல் செலவுகளும் வரும். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக எளிதாகக் கடன் கிடைக்கும். உங்களை விட்டுப் பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். பிள்ளைகளால் பெற்றோர் மகிழ்ச்சி அடையும் மாதம். குடும்பத்தில் சுபகாரியங்கள் திட்டமிட்டப்படி நடக்கும். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உழைப்பாலும், தங்கள் உழைப்பாலும் புதிய தொழில்களைத் தொடங்குவார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் எதிர்பார்த்தபடி வரும். உடல்நிலை தெம்பாக இருக்கும். ஒருசிலருக்கு சிறுவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகனங்களில் பொறுமையாகச் செல்ல வேண்டும். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வேலைப்பளு கூடும். ஒருசிலருக்கு கட்டாய மாறுதல் திடீரென வரும். அது உங்களுக்குப் பிடிக்கா விட்டாலும் வேலையில் சேர்வது நல்லது. அந்த மாறுதல் சிறப்பானதாக இருக்கும். ஒருசிலருக்கு வீடு கட்டும் திட்டம் நிறைவேறும்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9; 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 8, 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

ராகு பகவானின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் மனவுறுதி அதிகம் கொண்டவர். இந்த மாதம் எடுத்துக்கொண்ட காரியம் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். இந்த எண்ணில் பிறந்த மாணவர்கள் சிலர் தேர்வில் முதல் மதிப்பெண்களைப் பெற்று பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி உயர்படிப்பும் கைகூடும். பெற்றோர் ஆதரவு எப்போதும் உண்டு. உடல்நிலையை சற்று கவனித்துக்கொள்ளவேண்டும். பணவரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு வரவேண்டிய சலுகைகள் கேட்காமலேயே வந்துசேரும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள் கவனமாகச் செயல் படவேண்டும். சிலருக்கு காவல்துறை வழக்குகள் வரும் வாய்ப்புள்ளது. வீட்டில் இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரியம் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் அலுவலகத்தில் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்வார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பெண்கள் உயர்படிப்பு கைகூடும். இதுவரை விலகியிருந்த சொந்தம் உங்கள் வீட்டில் பெண் எடுக்க அல்லது கொடுக்க முன்வந்தால் யோசித்துச் செய்யுங்கள். சில பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. தொழிலாளர்கள் கோரிக்கைகளை முதலாளிகள் ஏற்று உரிய வசதியும் செய்வார்கள். ஒருசிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர் மற்றும் துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சமயோசிதமாகப் பேசும் திறமையுள்ளவர்கள். இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரியம் இனிதே நடைபெறும். உடல்நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பமான சூழ்நிலைகள் மாறி, நல்ல நிலைமைக்கு வரும். பிள்ளைகளின் உயர்கல்வி திட்டமிட்டப்படி நடக்கும். திருமணமாகாமல் உள்ள இளைஞர்களுக்கு திடீர் திருமணம் நடக்கலாம். அது காதல் திருமணமாகவும் இருக்கக்கூடும். சிலர் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். சிலரது உடன்பிறந்த மூத்த சகோதரி எதிராக வரக்கூடும். பூர்வீகச் சொத்துகளில் பிரச்சினைகள் வந்து நீங்கும். மாணவர்களின் பிடிவாத குணம் அதிகரித்து பெற்றோருக்கு சிரமத்தைக் கொடுக்கலாம். வியாபாரிகள் கொள்முதல் கூடுதலாக செய்துகொண்டால் நல்ல லாபம் கிட்டும். வியாபாரம் சிறப் பாக நடக்கும். தொழிலதிபர்கள் சிலர் தங்கள் தொழிற்சாலையை நினைத்தபடி விரிவுபடுத்தலாம். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வேலைப்பளு கூடும். கலைத்துறையினர் ஏற்றம் பெறும் மாதம். சிலர் வாகன விபத்துகளை சந்திக்க நேரும். கவனமாகச் செல்லவேண்டும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்த உங்களால் மற்றவர்கள் பயன்பெறுவார்கள். இந்த மாதம் நீங்கள் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள். ஹோட்டல் தொழில் செய்வோருக்கு தனியாக தொழில் துவங்கும் வாய்ப்பு கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். இதுவரை சென்றுவரமுடியாத தெய்வ தரிசனப் பயணம் தடையின்றி நடக்கும். பெற்றோர் உடல்நிலை காரணமாக மருத்துவச் செலவுகள் வரும். உங்களை நேசித்த நண்பரைப் பிரிய நேரலாம். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். தொழிலாளர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். வெளியூர்ப் பயணம் செல்லும்போது கைப்பொருளை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். தொழிலதிபர்கள்- தொழிலாளிகள் பிரச்சினை வந்து சுமுகமாக நீங்கும். லாபம் குறையாது. புதிய யுக்திகளைக் கையாண்டு உற்பத்தியைப் பெருக்குவீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுகூடுவீர்கள். மாணவர்கள் உயர்படிப்பு திட்டம் நிறைவேறும். அரசாங்க ஊழியர்களுக்கு மனதுக்கு தெம்பளிக்கும் வகையில் மாறுதல் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் கேதுவின் ஆதிக்கம் உள்ளவர். உங்கள் செயலால் மற்றவர்கள் பயன்பெறும் மாதம். பணப்புழக்கம் அதிகரிக்கும். எனினும், மற்றவர்கள் உங்களைப் பாராட்டவேண்டும் என்பதற்காக- கௌரவத்துக்காக கடன்வாங்கி செலவு செய்வீர்கள். அதனால் சிரமத்தை அடைவீர்கள். தொழிலதிபர்கள் தொழிலை விருத்தி செய்வீர்கள். வியாபாரிகள் மறைமுக எதிரிகளால் லாபம் குறையும் நிலையை அடைவார்கள். நிதானமான வியாபாரம் நன்மை தரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக்குறைவு வரக்கூடும். பிள்ளைகள் உதவியாக இருப் பார்கள். இதுவரை தடைப்பட்டுவந்த சுப காரியம் இனிதே நடக்கும். வெளிவட்டாரத் தொடர்புள்ளவர்களின் காரியம் வெற்றிபெறும். அரசியல் பிரமுகர்கள் திட்ட மிட்டபடி வேலைகளைச் செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் தற்காலிக மாக வேறு ஊருக்கு மாறுதலில் சென்று மீண்டும் நினைத்த இடத்திற்கு வருவார்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்தபடி சலுகைகள் கிடைக்கும். காவல்துறையில் பணிபுரிவோர் கூடுதல் வேலைப்பளுவை சந்திப்பார்கள். புதிதாகத் திருமணமான தம்பதியர் இருவீட்டாராலும் போற்றப்படுவார்கள். இதுவரை பெற்றோருக்கு அடங்காமல் இருந்துவந்த பிள்ளைகள், பெற்றோர் சொல்லைக் கேட்டு நடப்பார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எப்போதுமே வேலைகளை சுணக்கமின்றிச் செய்வீர்கள். இந்த மாதம் முழுவதும் பொருளாதாரம் உயரும். தடைப்பட்டுவந்த சுபகாரியம் நடைபெறும். விலகிச்சென்றவர்கள் வந்து சேர்வார்கள். மற்றவர்களுக்காக செலவு செய்யும் நீங்கள் இந்த மாதம் குடும்பத்தாரையும் நினைப்பீர்கள். தொழிற்சாலைகளில் தொழிலாளிகள் உண்மையோடு உழைப்பார்கள். எனவே தொழிலாளி பிரச்சினை மாறும். வியாபாரிகள், எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். நோய் உபாதைகள் குறையும். உங்கள் பேச்சைக் கேட்காமலிருந்த பிள்ளைகள் இனி நல்லபடியாக நடப்பார்கள். வியாபாரிகள் அலைச்சலை சந்தித்தாலும், அதற்கேற்ப வருமானம் கூடும்.

அரசு ஊழியர்கள் உடன்பணிபுரிவோரின் ஒத்துழைப்பைப் பெறுவதோடு அதிகாரி களின் பாராட்டையும் பெறுவார்கள். தற்காலிகப் பணி நீக்கத்திலுள்ள அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிட்டும். வரவேண்டிய பாக்கிகளும் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டப்படி உயர்கல்வியை அடைவார்கள். குழந்தை இல்லையே என்று ஏங்கும் தம்பதியருக்கு இறைவன் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். பெண்களுக்கு பூர்வீகச் சொத்துகள் வந்துசேரும். அரசியல் பிரமுகர்கள் சமூகத்தில் மதிப்பு, மரியாதை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். இதுவரை உங்களை வாட்டிவதைத்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறந்த சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சிலர் வெளிநாடு செல்லும் திட்டம் இனிதே நிறைவேறும். படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள சில இளைஞர்கள் ராணுவம் போன்ற அரசுத்துறைகளுக்குச் செல்வார்கள். பெண்கள் குடும்பத்தாரால் பாராட்டப்படுவார்கள். பணவரவுகள் கூடுத லாக இருக்கும். பிள்ளைகளுக்கான சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். மகான்களின் தரிசனம் கிட்டும். அரசியல் செல்வாக்கு கூடும். ஆன்மிக சுற்றுலா செல்லலாம். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து கூடுதல் லாபம் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசு ஊழியர்கள் பணியை சிறப்பாகச் செய்வார்கள். இதுவரை ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகி, அரசாங்கத்தில் வரவேண்டிய பாக்கி நிலுவைகள் (அரியர்ஸ்) தாமதமின்றிக் கிடைக்கும். புதிய வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.

கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்விக்குச் செல்வார்கள். சிலருக்கு வெளிநாட்டுப் படிப்பு கைகூடும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச் செந்தூர் முருகன்.

இதையும் படியுங்கள்
Subscribe