1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன்- மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். இந்த மாதம் முழுவதும் வருமானத்திற்குக் குறைவிருக்காது. எதிர்பார்த்த தொகை வந்துசேரும். வியாபாரிகள் அடிக்கடி வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். போட்டி வியாபாரிகளால் இருந்துவந்த தொல்லைகள் மாறும். தொழிலதிபர்கள், தொழிலாளர்களால் பாதிப்பு ஏற்படாதவாறு அவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய மாதம். பிள்ளைகள்வழியில் எதிர்பார்த்த வரன்கள் வந்துசேரும். மாமன்- மைத்துனர் பகை நீங்கும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். உடல்நிலையில் இதுவரை இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் கல்வியில் நல்லவிதமாகத் தேர்வெழுதி உற்சாகமாக இருப்பார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிட்டும். ஒருசில அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்தபடி பொறுப்புகளைப் பெறுவார்கள். மக்கள் ஆதரவோடு வெற்றியும் பெறுவார்கள். அரசு ஊழியர்களின் பணிச்சுமை கூடும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்துசேரும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

Advertisment

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

sivan

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

Advertisment

மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். எனினும் உயர்ந்த மதிப்பெண்களைப்பெற கடுமையாக படிக்கவேண்டியது வரும். பெற்றோர்கள்வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலாளர்கள் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு, போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். ஒருசிலருக்கு வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். பிள்ளைகளின் திருமணத் தடைகள் நீங்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் வேலைக்காகத் தேர்வுசெய்யப்பட்டு கைநிறைய சம்பளம் பெறுவார்கள். தொல்லை கொடுத்துவந்த உறவினர்கள் விலகிச்செல்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு ஊழியர்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். அரசியல்வாதிகள் பொதுப்பணியில் மக்கள் பாராட் டைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இதுவரை வராமலிருந்த நிலுவைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வந்துசேரும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். குழந்தையில்லாத தம்பதியர் சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். கணவன்- மனைவி சண்டை நீங்கி ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்க ஆரம்பிப்பார்கள். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு வேலைப் பளு கூடும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை நல்ல விலைக்கு விற்பார்கள். வியாபாரிகளுக்கு விற்பனை கூடும். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் வந்து நீங்கும். வெளிநாட்டு கடிதத் தொடர்புகள் நல்ல செய்தியைக் கொண்டுவரும். வேலைதேடும் இளைஞர்கள் இந்த மாதம் நல்ல வேலையில் அமர்வார்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகும். சிலருக்கு கனவுத் தொல்லைகள் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்கள் எதிர் பார்த்தபடி தேர்வில் கேள்விகள் அமையும். நல்ல பதில் அளித்து சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். இதுவரை பாடாய்ப்படுத்திய உடல்நலக்கேடுகள் நீங்கும். சில பெற்றோர்கள், பிள்ளைகளுக்காக பண விஷயத்தில் உதவ முன்வருவார்கள். கடன் தொந்தரவுகள் நீங்கும். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகள், சிறு வியாபாரிகளின் போட்டியால் அதிகம் உழைக்க வேண்டிவரும். வெளிநாடு செல்லும் திட்டம் சிலருக்கு நிறைவேறும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த நிலுவைப் பணம் வந்துசேரும். பெண்கள் கணவரின் பாராட்டைப் பெறுவார்கள். பிள்ளைகள் பெற்றோர் சொல்படி நடப்பார்கள். சில அரசியல்வாதிகள் பொதுமக்கள் ஆதரவைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிர மணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். கல்வியில் உற்சாகம் ஏற்படும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சிலருக்கு உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் கூடலாம். பெற்றோர்வழியில் ஏற்பட்ட மனச்சங்கடங்கள் தீரும். இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் கைகூடும். சிலர் இழந்த சொத்தை மீட்பார்கள். புதிய வாகனம், வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். தொழிலதிபர்களின் நடவடிக்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வியாபாரிகள் விரும்பியபடி வியாபாரம் கூடுதலாக நடக்கும். வெளிநாடு சென்று திரும்பி வராத பிள்ளைகள் வந்து சேர்வார்கள். வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு வேலைக்கான உத்தரவுகள் வீடுதேடி வரும். அரசு ஊழியர்கள் எடுத்த காரியம் நிறைவேறும். அரசியல்வாதிகளில் சிலர் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இதுவரை தடைப்பட்டு வந்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடக்கும். மனதில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் நல்ல தீர்வுக்கு வரும். நீதிமன்ற வழக்கு உள்ளவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். இதுவரையிலும் வராமல் இழுபறியாக இருந்துவந்த பணவரவுகள் முயற்சிக்காமலேயே வந்துசேரும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும் நல்ல லாபத்தையும் பெறுவார்கள். வியாபாரிகள் கொள்முதல் செய்த சரக்குகள் அனைத்தும் விற்பனையாகும். சிலர் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். திருமணமாகி வெகுநாட்கள் கடந்தும் குழந்தைப் பேறில்லாத தம்பதியர் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அரசியல் பிரமுகர்கள் எதிர்பாராத உதவிகளை தலைமையிடம் பெறுவார்கள். அரசு ஊழியர்களுக்குப் பணியில் இருந்து வந்த தொல்லைகள் மாறும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வருவாயைவிட செலவுகள் கூடுதலாகும். கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். மாணவர்கள் கவனம் தவறா மல் படிப்பார்கள். மகனின் செயல்பாடு சரியில்லையே என்று வருத்தப்பட்ட சூழ்நிலை மாறும். பெற்றோர் சொல்லைக் கேட்டு பிள்ளைகள் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை தொடங்குவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உடல்நிலையில் இருந்து வந்த தொய்வுகள் மாறும். மருத்துவச் செலவுகள் குறையும். காணாமல்போன பொருட்கள் கிடைக்கும். அரசு ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். மேலதிகாரிகளின் தொல்லைக்கு ஆட்படலாம். குறிப்பாக கையூட்டு பெறுபவர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு ஆட்பட நேரிடலாம். இதுவரை வராமலிருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். கடிதத் தொடர்பில் அனுகூலமான செய்திகள் வந்துசேரும். அரசியல்வாதிகள் பொதுமக்கள் ஆதரவைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் செலவுகள் அதிகரிக்கும். அதற்கேற்ற வரவுகளும் வந்துசேரும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும். அதனால் உங்கள் செல்வாக்கும் வரவும் கூடும். கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேற்றுமை நீங்கும். நீங்கள் வாழமுடியாத ஏமாளி என்று எள்ளி நகையாடியவர்கள் உங்களை சரணடைவார்கள். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை துவங்குவார்கள். வியாபாரிகள் புதிதாக கிளை துவங்கி அதிக விற்பனையும் செய்வார்கள். அரசு ஊழியர்கள் பெறவேண்டிய நிலுவை பாக்கிகள் வந்துசேரும். பிரிந்து வாழும் தம்பதியர் வழக்கு இல்லாமலேயே ஒன்று சேர்வார்கள். தொழிலில் இருந்து வந்த போட்டியாளர்கள் விலகிவிடுவார்கள். பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்டு திருந்தி வருவார்கள். தூர தேசத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். மகான்களின் தரிசனம் கிட்டும். அரசியல்வாதிகளின் அணுகுமுறையை மக்கள் பாராட்டுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசல பதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சமூகத்தால் பிள்ளைகள் பாராட்டப்படும் செய்திகேட்டு பெற்றோர் மகிழ்ச்சி கொள்வர். இதுவரை உங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த உறவுகள் இனி ஆதரவாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து கூடுதல் உற்பத்தி யும் லாபமும் பெறுவார்கள். வியாபாரிகள் கொள்முதலை அதிகம்செய்து, அதிக லாபத்தையும் பெறுவார்கள். நல்ல வரன்கள் வீடுதேடி வரும். உடன்பிறந்தவர்கள் மத்தியில் இழுபறியாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். உயர்படிப்பிலுள்ள மாணவர்கள் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டு நல்ல சம்பளமும் பெறுவார்கள். இதுவரை வாட்டி வதைத்துவந்த பிணிகள் விலகும். உடல் ஆரோக்கியம் கூடும். தெய்வதரிசனம் செய்ய வெளியூர் செல்லும் திட்டம் நிறைவேறும். இளைஞர்கள் வெளிநாடு செல்லும் திட்டமும் நிறைவேறும். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.