ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். இந்த மாதம் முழுவதும் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நன்மையாகவும் லாபமாகவும் அமையும். தந்தைவழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு, வழக்கு வர வாய்ப்புள்ளது. இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியம் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகளுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். உழைப்புக்கேற்ற பலன் உடனே கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் வராது. அப்படியே செய்துவரவேண்டும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடி மாறுதல் கிடைக்கும். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்தபடி மேற்படிப்பு அமையும். ஒருசிலர் ராணுவத்துறையில் பணியாற்றச் செல்வார்கள். வியாபாரிகள் கொள்முதலில் அதிக முதலீடு செய்யக்கூடாது. மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பப் பெண்களால் கணவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். மாமன், மைத்துனர் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வரும். அயல்நாடு பயணம் உயர்வைத் தரும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள், எந்தக் காரியத்தையும் ஆர்வமுடன் செய்வீர்கள். அதனால் உற்றார்- உறவினர் மற்றும் வெளியிடத்திலும் மதிப்பு கூடும். இதுவரை உங்களை வாட்டிவதைத்த கடன் தொந்தரவு குறையும். சரியான வேலை கிடைக்காதோருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் வந்துசேரும். வீட்டில் இதுவரை இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தாய்- தந்தையர் பேச்சைக் கேட்டுப் பிள்ளைகள் நடப்பார்கள். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் பொறுமையாக செயல்பட வேண்டும். பொதுமக்கள் எதிர்ப்புகள் கிட்டும். இதனால் மேலதிகாரிகள் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உடன்பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும். கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும். வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவார்கள். இதுவரை வசூலாகாமலிருந்த பாக்கிகள் வசூலாகும். மாணவர்கள் உயர் படிப்பு எண்ணம் நிறைவேறும்.
அரசியலில் உள்ளவர்கள் எதிர் பாராத பதவிகளைத் தலைமையின் பாராட் டுடன் பெறு வார் கள். ஒருசில ருக்கு இது வரை இருந்து வந்த நோய் நீங்கும்.
அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20, 29; 14; 7, 25.
தவிர்க்க வேண்டிய தேதி: 8, 26; 9, 18.
வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எப்போதும் சிந்தித்து செயல்படுவீர்கள். இந்த மாதம் உங்களது சிந்தனைகளை செயலாக்கிக் காட்டுவீர்கள். கலைத்துறையில் பணியாற்றுபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வாய்ப்புகள் வந்துசேரும். எல்லாத் தரப்பு தொழில்புரிவோருக்கும் கூடுதல் வரவுகள் வரும். அதேபோல் கூடுதல் செலவுகளும் வந்துசேரும். பிள்ளைகளுக்கு கல்விக்கடன் எளிதாகக் கிடைக்கும். உங்களைவிட்டுப் பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். பிள்ளைகளால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும் மாதமிது. குடும்பத்தில் சுபகாரியங்கள் திட்டமிட்டபடி தடையில்லாமல் நடக்கும். தொழிலதிபர்கள் புதிய தொழில்களைத் தொடங்குவார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் எதிர்பார்த்தபடி வரும். உடல்நிலை சீராக இருக்கும். ஒருசிலருக்கு சிறுவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்களில் செல்வோர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வேலைப்பளு ஏற்படும். ஒருசிலருக்கு திடீரென கட்டாய மாறுதல் வரும். அது உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் வேலையில் சேர்வது நல்லது. அந்த மாறுதல் சிறப்பானதாக இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட போட்ட திட்டம் நிறைவேறும்.
அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 8, 17, 26; 29.
வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ராகு பகவான் ஆதிக்கம் பெற்ற நீங்கள் மனவுறுதி கொண்டவர். இந்த மாதம் நீங்கள் எடுத்துக்கொண்ட காரியம் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்தபடி உயர்படிப்பு கைகூடும். பெற்றோர்கள் ஆதரவு எப்போதும் உண்டு. உடல்நிலையை சற்று கவனித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ சிகிச்சை நல்ல பலன் தரும். பணவரவுகள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கும். அரசு ஊழியர் களுக்கு வரவேண்டிய சலுகைகள் கேட்காமலேயே வந்துசேரும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள் நிதானத்துடன் செயல்படவேண்டும். காவல்துறை வழக்குகள் வரும் வாய்ப்புள்ளது. வீட்டில் இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியம் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் அலுவலகத்தில் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்வார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பெண்கள் உயர்படிப்பு கைகூடும். இதுவரை விலகியிருந்த சொந்தம் உங்கள் வீட்டில் பெண் எடுக்க அல்லது கொடுக்க சம்மதித்தால் யோசித் துச் செய்யுங்கள். சில பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. தொழிலாளர்கள் கோரிக்கை களை முதலாளிகள் ஏற்பார்கள். ஒருசிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்க வேண்டிய தேதி: 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிர மணியர், துர்க்கையம்மன்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சமயோசிதமாகப் பேசும் திறமை உள்ளவர்கள். இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியம் இனிதே நடைபெறும். உடல்நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பமான சூழ்நிலைகள் மாறி, நல்லநிலைக்கு வரும். பிள்ளைகளின் உயர்கல்வி திட்டமிட்டபடி நடக்கும். இளைஞர்களுக்கு திடீர் திருமணம் நடைபெறும். சிலர் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். உடன்பிறந்த மூத்த சகோதரி உங்களுக்கு எதிராக வரக்கூடும். பூர்வீகச் சொத்துகளில் பிரச்சினைகள் வந்து நீங்கும். மாணவர்கள் பிடிவாத குணம் அதிகரித்து பெற்றோருக்கு சிரமத்தைக் கொடுக்கலாம். வியாபாரிகள் கூடுதலாகக் கொள்முதல் செய்துகொண்டால் நல்ல லாபம் வரும். வியாபாரம் சிறப் பாக நடக்கும். சில தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலையை நினைத்தபடி விரிவுபடுத்துவார்கள். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலைப்பளு கூடும். கலைத்துறையினர் ஏற்றம் பெறும் மாதமிது. ஒருசிலர் வண்டி வாகனத்தில் விபத்துகளை சந்திக்கும் நேரம். கவனமாகச் செல்லவேண்டும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.
வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். உங்களால் மற்றவர்கள் பயன் பெறுவார்கள். திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரி கள், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் பெறுவார்கள். ஹோட்டலில் பணி செய்வோர் திட்டமிட்டபடி தனியாகத் தொழில் துவங்க வாய்ப்புகள் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். இதுவரை சென்றுவர முடியாத தெய்வ தரிசனப் பயணம் தடையின்றி நடக்கும். பெற்றோர் உடல்நிலையில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்களை நேசித்த நண்பரைப் பிரியவேண்டியது வரும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். தொழிலாளர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். வெளியூர்ப் பயணம் செல்லும்போது கைப்பொருளை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். களவுபோகும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள்- தொழிலாளிகள் பிரச்சினை சுமுகமாக நீங்கும். லாபம் குறையாது. புதிய யுக்திகளைக் கையாண்டு தொழிற்சாலையில் உற்பத்தி பெருகும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். மாணவர்களின் உயர்படிப்பு திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்தபடி மாறுதல் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.
வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
கேது ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும் மாதமிது. எனினும் மற்றவர்கள் உங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக- கௌரவத்துக்காக கடன் வாங்கி செலவு செய்வீர்கள். அதனால் சிரமம் அடைவீர்கள். தொழிலதிபர்கள் நினைத்தபடி தொழிலை விருத்தி செய்வார்கள். வியாபாரிகளுக்கு மறைமுக எதிரிகளால் லாபம் குறையும். எனவே நிதானமான வியாபாரம் நன்மையைத் தரும். கணவன்- மனைவி ஒற்றுமை குறையக்கூடும். பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். வெளி வட்டாரத் தொடர்புள்ளவர்கள் தங்கள் காரியத்தில் வெற்றி பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டபடி பணிசெய்து பொதுமக்கள் பாராட்டைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் தற்காலிகமாக வேறு ஊருக்கு மாறுதலில் சென்று, மீண்டும் நினைத்த இடத்திற்கு வருவார்கள். எதிர் பார்த்தபடி அரசு சலுகைகள் கிடைக்கும். காவல்துறையில் பணிபுரிவோர் கூடுதல் வேலைப்பளுவைச் சந்திப்பார்கள். பிள்ளைகள், பெற்றோர் சொல்லைக் கேட்டு நடப்பார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.
தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.
வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சனி பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் வேலைகளை சுணக்கமின்றிச் செய்வீர்கள். இந்த மாதம் முழுவதும் பொருளாதாரம் உயரும். தடைப்பட்டு வந்த சுபகாரியம் நடைபெறும். விலகிச்சென்றவர்கள் வந்துசேர்வார்கள். தொழிற்சாலைகளில் தொழிலாளிகள் உண்மையோடு உழைப்பார்கள். தொழிலதிபர்- தொழிலாளி பிரச்சினை நீங்கும். வியாபாரிகள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். ஒருசிலர் புதிய வண்டி, வாகனம் வாங்குவார்கள். இதுவரை இருந்துவந்த நோய் உபாதைகள் குறையும். குழந்தைகள் பெற்றோர் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். வியாபாரிகளுக்கு அலைச்சலுக்கேற்றவாறு வருமானம் கூடும். அரசு ஊழியர்கள் உடன்பணிபுரிவோரின் ஒத்துழைப்பைப் பெறுவதோடு அதிகாரிகளின் பாராட்டை யும் பெறுவார்கள். தற்காலிகப் பணி நீக்கத்திலுள்ள அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும். அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய பாக்கிகளும் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்வி பயில்வார்கள். குழந்தையில்லா தம்பதியருக்கு இறையருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். பெண்களுக்கு வரவேண்டிய பூர்வீகச் சொத்துகள் வந்துசேரும். அரசியல் பிரமுகர்கள் சமூகத்தில் மதிப்பு, மரியாதை யுடன் வாழ்வார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.
வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். இதுவரை உங்களை வாட்டிவதைத்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறந்த சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். படித்து வேலையில்லாமல் உள்ள சில இளைஞர்கள் ராணுவம் போன்ற அரசு வேலைக்குச் செல்வார்கள். பணவரவுகள் கூடுதலாக இருக்கும். பிள்ளைகளுக்கான சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். மகான்களின் தரிசனம் கிட்டும். அரசியல் செல்வாக்கு கூடும். அவர்கள் புதுமனைப் புகுவிழா, திருமணம் போன்ற சுபகாரியங்களை தலைமையேற்று நடத்துவார்கள். ஆன்மிகச் சுற்றுலா செல்லலாம். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து கூடுதல் லாபம் பெறுவார்கள். வியாபாரிகளும் நல்ல லாபம் பெறுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசு ஊழியர்களுக்கு தடை, தாமதங்கள் விலகி, அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய நிலுவைத்தொகை (அரியர்ஸ்) கிடைக்கும். புதிய வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்விக்குச் செல்வார்கள். ஒருசிலருக்கு வெளிநாட்டுப் படிப்பு கைகூடும்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.
வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.