செப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

/idhalgal/om/numerical-benefits-september

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் பார்ப்பதற்கு எளிமையானவர். ஆனால் செயல்களில் மிக வேகமாக இருப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்களையே தரும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் விலகும். இதுவரை உங்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். உடல்நலன் தேறும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்- வாங்க−ல் எவ்வித இடையூறும் வராது. கொள்முதல் அனைத்தும் விற்றுவிடும். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். ஒருசிலர் புதிய வீடுகட்டிக் குடிபோவார்கள். வெளிநாடு சென்று இதுவரை திரும்பி வராதவர்கள் வந்து சேர்வார்கள். அரசு ஊழியர்களுக்கு பணிபுரியும் இடத்தில் இருந்துவரும் பிரச்சினைகள் விலகும். வேலையில் இடையில் நின்ற பணியாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்வார்கள். மாதம் முழுவதும் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக ஊக்கம் செலுத்தவேண்டிய மாதம். அரசியல்வாதிகள் எண்ணப்படி அனைத்தும் நிறைவேறும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். வீட்டில் இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். இளைஞர்கள் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். உங்களைப் பிரியமாக நேசித்த ஒருவரைப் பிரியவேண்டி வரலாம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வணங்கி வருவீர்கள். ஆலய வழிபாடுகள் செய்வீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். மனைவி கேட்ட சமையல் கருவிகளை வாங்கிக் கொடுப்பீர்கள். அரசு ஊழியர்கள் தடைப்பட்ட பதவி உயர்வை அடைவார்கள். வழக்குகள் சாதகமாகும். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஒற்றுமையால் கூடுதல் லாபம் பெறுவார்கள். இதுவரை இருந்து வந்த பங்காளிகள் சண்டை முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துகளி−ருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்கள், புதிய நிறுவனங் களில் சேரும் எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். இந்த மாதம் முழுவதும் சொந்தபந்தங்களால் நல்ல பலனை அடைவீர்கள். அரசியல் பிரமுகர்களுக்கு நல்

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் பார்ப்பதற்கு எளிமையானவர். ஆனால் செயல்களில் மிக வேகமாக இருப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்களையே தரும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் விலகும். இதுவரை உங்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். உடல்நலன் தேறும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்- வாங்க−ல் எவ்வித இடையூறும் வராது. கொள்முதல் அனைத்தும் விற்றுவிடும். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். ஒருசிலர் புதிய வீடுகட்டிக் குடிபோவார்கள். வெளிநாடு சென்று இதுவரை திரும்பி வராதவர்கள் வந்து சேர்வார்கள். அரசு ஊழியர்களுக்கு பணிபுரியும் இடத்தில் இருந்துவரும் பிரச்சினைகள் விலகும். வேலையில் இடையில் நின்ற பணியாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்வார்கள். மாதம் முழுவதும் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக ஊக்கம் செலுத்தவேண்டிய மாதம். அரசியல்வாதிகள் எண்ணப்படி அனைத்தும் நிறைவேறும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். வீட்டில் இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். இளைஞர்கள் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். உங்களைப் பிரியமாக நேசித்த ஒருவரைப் பிரியவேண்டி வரலாம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வணங்கி வருவீர்கள். ஆலய வழிபாடுகள் செய்வீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். மனைவி கேட்ட சமையல் கருவிகளை வாங்கிக் கொடுப்பீர்கள். அரசு ஊழியர்கள் தடைப்பட்ட பதவி உயர்வை அடைவார்கள். வழக்குகள் சாதகமாகும். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஒற்றுமையால் கூடுதல் லாபம் பெறுவார்கள். இதுவரை இருந்து வந்த பங்காளிகள் சண்டை முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துகளி−ருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்கள், புதிய நிறுவனங் களில் சேரும் எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். இந்த மாதம் முழுவதும் சொந்தபந்தங்களால் நல்ல பலனை அடைவீர்கள். அரசியல் பிரமுகர்களுக்கு நல்ல பதவிகள் வரும்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்கள் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இருக்கும். அன்றாட வேலைகளை விரைவாகவும் சிறப்பாகவும் செய்வீர்கள். உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள் நல்ல நேரத்தில் கைகொடுப்பார் கள். பண நிலையில் இருந்துவரும் மந்தம் மாறி நல்ல வருவாயைப் பெறுவீர்கள். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக் கும். வேலைதேடும் இளைஞர்களுக்கு தூரதேசத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் வந்துசேரும். வாராக் கடன்கள் வசூலாகும். சொத்துப் பிரிவினையில் இருந்துவரும் தகராறு கள் நீங்கும். மனைவி வழியில் நிலவும் பகை மாறும். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். வியாபாரிகள் கொள்முதல் செய்த சரக்குகள் விற்றுத் தீரும். தொல்லை கொடுத்துவரும் வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டத்தில் தாமதம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள். தலைமையி−ருந்து வரும் திடீர் அழைப்பு சாதகமாக இருக்கும்.

jjj

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் சிந்தித்து செயல்படும் காரியங்களில் வெற்றி காண்பீர்கள். புத்திசாதுரியத்துடன் செயல்பட்டால் பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம். வாகனம், வீடு வாங்கும் திட்டம் மாத முடிவில் நிறைவேறும். பிறருக்கு ஜாமின் கொடுத்தீர்களானால் அதற்கான சிரமத்தை நீங்கள் அடைவீர்கள். எதிலும் எச்சரிக்கை தேவை. பிரிந்து சென்ற கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். குழந்தைப்பேறு இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். வியாபாரிகள் அதிகம் கொள்முதல் செய்து நல்ல லாபத்தை அடையலாம். கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்வோர் கவனமாக செயல்படவேண்டும். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஒற்றுமையால் கூடுதல் உற்பத்தியை அடைவார்கள். அரசுப் பணியாளர்களுக்கு திடீரென இடமாற்றம் ஏற்படலாம். தூர தேசத்தி−ருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். உங்களை நேசித்த ஒருவர் பிரிந்து செல்லக்கூடும். பெற்றோர் வழியில் செலவுகள் வரும். அரசியல்வாதிகள் நினைத்தபடி காரியங்கள் நடக்கும். மாணவர் கள் கல்வியில் உயர்வார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தும். உங்களுக்குத் தொல்லை கொடுத்துவரும் பிரச்சினைகள் யாவும் ஓடிவிடும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட மனவருத்தங்கள் மாறும். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. வருமானம் அளவோடு இருக்கும். சிக்கனமான வாழ்க்கை வாழ்வீர்கள். கண்களில் நோய் வந்து மறையும். மாணவர்கள் எதிர்வரும் தேர்வில் வெற்றிபெற கடுமையாகப் படிக்கவேண்டும். பெற்றோர் கடுமைகாட்டாமல் படிக்கச் சொல்லவேண்டும். வியாபாரிகள் போட்டி களை சமாளித்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் வெளிநாடு களில் புதிய கிளை தொடங்கும் திட்டம் நிறைவேறும். பெற்றோர் களுக்காக செய்துவரும் மருத்துவச் செலவுகள் குறையும். புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டம் நீண்ட இழுபறிக்குப்பிறகு முடிவடையும். வெளிநாடு செல்லும் திட்டம் சிலருக்கு ஈடேறும். அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். சகோதரர்கள் மத்தியில் இருந்துவரும் பிரச்சினைகள் நீங்கி ஒன்றுபடுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும் நீங்கள் சிந்திக்காமல் செய்த காரியத்தில்கூட நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பெற்றோர் களுக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். கடலி−ல் மீன்பிடித்தொழில் செய்பவர்கள் அபரிமிதமான வருவாயைப் பெறுவார்கள். திருமணப் பேச்சுகள் தள்ளிச்செல்கிறதே என்ற கவலைக்கு நல்ல தீர்வு கிட்டும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடியும். பிள்ளைகளால் பெருமைகள் கிட்டும். வருத்தத்தைக் கொடுத்த பிள்ளைகள் திருந்தி வருவார்கள். மாணவர்கள் கல்வி உயரும். தொழிலதிபர்கள் வியாபாரப் போட்டியைச் சந்திக்கவேண்டி வரும். புதிய ஒப்பந்தங்களை யோசித்துச் செய்யவேண்டும். வியாபாரிகளுக்கு விற்பனையிலுள்ள மந்தநிலை மாறும். பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். எனவே ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். சகோதரர்கள் பகை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இளைஞர்கள் திடீர் வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். சிலருக்கு இராணுவத்தில் சேரும் வாய்ப்புகள் வரும். அரசியல் பிரமுகர்களின் கவலைகள் மாறும். புதிய வாய்ப்புகள் வந்துசேரும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் புதிய பொருட்கள் வாங்கும் திட்டம் நிறைவேறும். உறவு களுக்குள் திருமணம் நடப்பதில் இருந்து வரும் தடைகள் நீங்கும். பெற்றோர்வழியில் மருத்துவச் செலவுகள் கூடும். வருவாய் இரட்டிப்பாக இருக்கும். தொல்லை கொடுத்து வரும் எதிரிகள் விலகிச் செல்வார்கள். பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். வியாபாரிகள் நல்ல விற்பனையைப் பெறுவார்கள். கலைத் தொழிலி−ல் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வுபெற்று பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பார்கள். அரசு ஊழியர்களுக்குப் பணிச்சுமை கூடும். சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். குறிப்பாக பெண் ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கை தேவை. தொழிலதிபர்கள் உற்பத்தி பெருகி, நல்ல வருவாயையும் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டபடி காரியங்கள் சாதகமாக நடக்கும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

தடைப்பட்டுவரும் காரியங்கள் அனைத் தும் இந்த மாதம் இனிதே நடந்தேறும். தொழி−ல் போட்டியாக இருந்து வீண் இடையூறு செய்பவர்கள் பலமிழந்து ஓடிவிடுவார்கள். புதிய வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். மாமன், மைத்துனர் வழியில் நிலவும் தொடர்பகை நீங்கும். தாய்- தந்தையருக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். வாகனம் வாங்கும் திட்டம் ஈடேறும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். தடைப்பட்டுவரும் சுபகாரியப் பேச்சுகள் நல்லமுறையில் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். சில்லரை வியாபாரிகள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். திடீர் அதிர்ஷ்டம் வந்துசேரும். மாணவர்கள் எதிர்வரும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கடந்த காலத்தில் உங்களிடம் உதவிபெற்று நன்றி மறந்தவர்கள் மீண்டும் வருவார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். கம்ப்யூட்டர் தொழில் படித்தவர்கள் புதிய வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். அரசு ஊழியர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல் கிட்டும். அரசியல் பிரமுகர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை தரும். கண்ணியம் கொண்டவர்கள் நல்ல பொருளாதாரத்தை அடைவார்கள். நயவஞ்சகத் தன்மையுள்ள ஒருசிலர் பெரும் சிரமத்தை அடைவார்கள். பிள்ளைகள்வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தூர தேசத்தி−ருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். வேலைதேடும் இளைஞர்கள் சிரமத்திற்குப் பின்பு வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் மந்தநிலை உள்ளதால் கடுமையாகப் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். வியாபாரிகள் புதிய வியாபாரிகளின் வருகையால் நெருக்கடியை சந்திப்பார்கள். தொழிலதிபர்கள் தொழிலாளர்கள் ஒற்றுமையால் கூடுதல் உற்பத்தியைப் பெறுவார்கள். உற்பத்திப் பொருள் சந்தையில் நல்ல லாபத்தைத் தரும். ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன் தொழில் செய்வோர் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். பெற்றோர்கள்வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். இணைபிரியாதிருந்த நண்பரைப் பிரியவேண்டி வரலாம். கல்லூரி நடத்துபவர்கள் சிலர் கல்லூரிப் பிரச்சினைகளில் வழக்குகளை சந்திக்கநேரும். அரசியல் பிரமுகர்கள் புத்துணர்வோடு செயல்பட்டு, தலைமையால் பாராட்டப்படுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச் செந்தூர் முருகன்.

செல்: 94871 68174

om010919
இதையும் படியுங்கள்
Subscribe