1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றி பெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை அடைவீர்கள். உங்களைவிட்டு விலகியிருக்கும் பிள்ளைகள் வந்துசேர்வார்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். அரசு ஊழியர்களுக்கு நினைத்தபடி மாறுதல் கிட்டும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று, விரும்பிய பாடப்பிரிவுகளைப் பெறுவார்கள். குழந்தைப் பேறில்லாத சில தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அரசியல் பிரமுகர்கள் பொது மக்களிடம் நல்ல மதிப்பும் மரியாதை யும் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
பொறுமையுடன் செயல்பட்டு காரியங் களை சாதிக்கவேண்டிய மாதம். பிள்ளை களால் பெருமைப்படுவீர்கள். தொல்லை கொடுத்துவரும் உடல்நிலையில் முன்னேற் றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாகும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களால் சில பிரச்சினைகளை சந்தித்து சுமுகத் தீர்வைக் காண்பீர்கள். லாபத்திற்குக் குறைவில்லை. வியாபாரிகளுக்கு பழைய நிலுவைகள் அனைத்தும் வந்துசேரும். வியாபாரத்திலும் நல்ல மேன்மையையும், லாபத்தையும் அடைவார்கள். தங்கவேலை செய்யும் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுவார்கள். குழந்தை பாக்கிய மில்லாத தம்பதியர் சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். இளைஞர் கள் தக்க வேலை வாய்ப்பைப் பெறுவார் கள். மகான்களின் தரிச னம் கிட்டும். தபாலி−ல் அனுகூலச் செய்திகளைப் பெறுவார்கள். அரசுப் பணியாளர்கள் உயரதி காரிகளின் பாராட் டைப் பெறுவார்கள். பெற்றோர்வழியில் மருத்துவச் செ
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றி பெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை அடைவீர்கள். உங்களைவிட்டு விலகியிருக்கும் பிள்ளைகள் வந்துசேர்வார்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். அரசு ஊழியர்களுக்கு நினைத்தபடி மாறுதல் கிட்டும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று, விரும்பிய பாடப்பிரிவுகளைப் பெறுவார்கள். குழந்தைப் பேறில்லாத சில தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அரசியல் பிரமுகர்கள் பொது மக்களிடம் நல்ல மதிப்பும் மரியாதை யும் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
பொறுமையுடன் செயல்பட்டு காரியங் களை சாதிக்கவேண்டிய மாதம். பிள்ளை களால் பெருமைப்படுவீர்கள். தொல்லை கொடுத்துவரும் உடல்நிலையில் முன்னேற் றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாகும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களால் சில பிரச்சினைகளை சந்தித்து சுமுகத் தீர்வைக் காண்பீர்கள். லாபத்திற்குக் குறைவில்லை. வியாபாரிகளுக்கு பழைய நிலுவைகள் அனைத்தும் வந்துசேரும். வியாபாரத்திலும் நல்ல மேன்மையையும், லாபத்தையும் அடைவார்கள். தங்கவேலை செய்யும் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுவார்கள். குழந்தை பாக்கிய மில்லாத தம்பதியர் சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். இளைஞர் கள் தக்க வேலை வாய்ப்பைப் பெறுவார் கள். மகான்களின் தரிச னம் கிட்டும். தபாலி−ல் அனுகூலச் செய்திகளைப் பெறுவார்கள். அரசுப் பணியாளர்கள் உயரதி காரிகளின் பாராட் டைப் பெறுவார்கள். பெற்றோர்வழியில் மருத்துவச் செலவுகள் கூடும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அரசியல் தலைவர்கள் பரபரப்பாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 16, 25.
வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் நினைத்தபடி அனைத்து நிலைகளிலும் நல்ல பலன்களைப் பெறுவார் கள். பொருளாதாரம் சீராக இருக்கும். பிரிந்துசென்ற சொந்தங்கள் வந்துசேரும். மாணவர்கள் உயர்கல்விக்குரிய மதிப்பெண் களைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் சில பிரச்சினை கள் வரலாம். மேலதிகாரிகளின் கண்டிப் புக்கு ஆளாகலாம். உடன்பிறந்தவர்கள் ஆதர வாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்துவரும் பிரச்சினைகள் அகலும். வழக்குகள் வெற்றி தரும். வியாபாரிகளுக்கு சக வியாபாரிகளால் இருந்துவரும் போட்டி கள் மறைந்து, அதிக லாபம் பெறுவார்கள். அரசியல் தலைவர்கள் நல்ல திட்டங்களை செயல்படுத்துவார்கள். பொதுமக்கள் ஆதரவு பெருகும்.
அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.
வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்தித்துவரும் தடை, தாமதங்கள் விலகும். திருப்தியான வரவுகள் உண்டு. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலதிபர்கள் நினைத்தபடி, தொழிலாளர்கள் ஒற்றுமை யோடு உற்பத்தியைப் பெருக்குவார்கள். காவல்துறையில் பணிபுரியும் சிலர் திடீர் மாறுதல்களைப் பெறுவார்கள். அரசு ஊழியர் கள் எதிர்பார்த்த மாறுதல் தள்ளிப்போகும். வியாபாரிகள் செய்த கொள்முதல் அனைத் தும் விற்பனையாகும். கலைத்துறையில் உள்ளவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திருமணப் பேச்சுகள் கைகூடும். உங்களை நேசிக்கும் ஒருவரை திடீரென்று பிரிய நேரலாம். பெற்றோர் வழியில் நிலவும் மருத்துவச் செலவுகள் குறையும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்று சேர்வார்கள். மாணவர்கள் கேட்ட இட ஒதுக்கீடுகளைப் பெறுவார்கள். கடிதத் தொடர்புகள் அனுகூலமாக அமையும். அரசியல் பிரமுகர்கள் தலைமையால் பாராட் டப்படுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களுக்கு நல்ல வருமானத் தைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். இதுவரை வீட்டில் தடைப் பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருட்களால் நல்ல விற்பனையை அடைவார்கள். வெளிநாடு செல்லும் எண்ணம் ஈடேறும். இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். வாகனப் பராமரிப்பு செலவுகள் கூடும். அரசு ஊழியர் கள் மேலதிகாரிகளால் பாராட்டப் படுவார்கள். நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். இதுவரை தொல்லை கொடுத்த நோய் விலகும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். சில மாணவர்கள் அரசாங்கப் பரிசுகளைப் பெறுவார்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்டுள்ள மருத்துவச் செலவுகள் குறையும். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டுப் புகழ்பெறுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.
வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த தேதிகளில் பிறந்த வர்களின் எண்ணங்கள் அனைத்தும் நடக்கும். மாணவர்கள் நல்ல மதிப் பெண்கள் பெற்று பெற் றோருக்குப் பெருமை சேர்ப் பார்கள். தகுந்த வருமானம் வருவதால் மாதம் முழுவதும் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒருசிலர் பெற்றோருக்காக கூடுதல் மருத்துவச்செலவு செய்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறை விருக்காது. வெளிநாட்டிலி−ருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தொழிலதி பர்கள் புதிய தொழிற்சாலை கள் துவங்குவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்த இடத் திற்கு மாறுதலை அடைவார்கள். மேலதிகாரி களின் ஒத்துழைப்பு கூடும். வியாபாரிகள் போட்டி வியாபாரிகளால் சிரமத்தை அடைவார்கள். பிரிந்துசென்ற நண்பர்கள் வந்துசேர்வார்கள். புதிய கடன் வாங்கும் திட்டம் நிறைவேறும். குடும்ப சீர்திருத்தம் ஏற்படும். நீங்கள் எதிர்பாராத உறவினர் கள் வந்துசெல்வார்கள். சில தம்பதியர் கருத்து வேற்றுமையால் பிரியக்கூடும். அரசியல் வாதிகளுக்கு நன்மைகள் கிட்டும்.
அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.
வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் காரியத் தடைகள் ஏற்படும். பின்பு அனைத்து செயல்களிலும் வெற்றி காண்பீர்கள். பண வரவுக்குக் குறைவில்லை. பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். மனைவியின் சேமிப்பு தக்க நேரத்தில் கைகொடுக்கும். புதிய வீடுகட்டும் திட்டம் சிலருக்குக் கைகூடும். பிள்ளைகளால் பெருமைகள் சேரும். ஒருசில பிள்ளைகள் உயர் பதவியில் அமர்வார்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள்மூலம் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு விற்பனை பெருகும்; மந்த நிலை மாறும். பழ வியாபாரிகள் நல்ல விற்பனையோடு கூடுதல் லாபத்தையும் அடைவார்கள். ஒப்பந்தத் தொழில்புரிவோரும் நல்ல லாபத்தை அடைவார் கள். மாணவர்கள் புதிய சிந்தனையோடு கல்வியைத் தொடங்குவார்கள். ஒரு சிலருக்கு இதுவரை விற்பனையாகா மல் இருந்துவந்த சொத்துகள் விற்பனையாகும். அரசியல்வாதிகள் புதிய நட்புகளால் உயர்வடைவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.
தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.
வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இதுவரை குடும்பத்தில் குழப்பம் விளைவித்த உறவினர்கள் விலகிச் செல்வார்கள். குழந்தையில்லாத தம்பதி யருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். சுற்றித் திரிந்த பிள்ளைகள் பெற்றோர் வழிகாட்டு தல்படி வேலைக்குச் செல்வார்கள். பிள்ளை களால் இருந்துவரும் தொல்லைகள் நீங்கும். தொழிலதிபர்கள் தொழிலை விரிவுபடுத்தும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகள், மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உங்களை வாட்டிவதைத்த பிணி, பீடைகள் விலகும். எதிரிகளும் நண்பர் களாக மாறிவிடுவார்கள். அரசு ஊழியர் கள் எதிர்பார்த்தபடி மாறுதல் காண்பார் கள். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு திருட்டுப்போன பொருட்கள் கிடைத்துவிடும். அரசியலி−ல் உங்களுக்கெதிராக செயல்பட்ட வர்கள் தலைமையால் மாற்றப்படுவார்கள். புதிய பொறுப்புகள் சிலருக்கு வந்துசேரும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.
வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் இந்த மாதம் அதிர்ஷ்ட பாக்கியங்களைப் பெறுவார்கள். இவர்கள் யோகத்தில் கணவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக் கும். கலைத்துறையில் வாய்ப்பு தேடும் பெண்களுக்கு நல்லவாய்ப்பு கிட்டும். காலம் கடந்துவந்த திருமணம் இனிதே நடைபெறும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம்மூலம் நல்ல லாபங்களைப் பெறுவார்கள். வெளிநாடுகளில் கிளைகள் துவங்கும் திட்டம் நிறைவேறும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். வியாபாரி கள் போட்டி வியாபாரத்தைத் தவிர்க்கவும். எப்போதும்போல் வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிட்டும். அரசு ஊழியர்கள் சிலர் வேலைப்பளு காரணமாக விருப்ப ஓய்வில் செல்வார்கள். வழக்குகள் சாதகமாகும். சகோதரர்களிடையே நிலவும் சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். கணவன்- மனைவி ஒற்றுமைகூடும். அரசியல் வாதிகள் எச்சரிக்கையாகப் பயணம் செல்லவேண்டும். புதிய பதவிகள் தேடிவரும்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.
வணங்கவேண்டிய தெய்வம்: திருச் செந்தூர் முருகன்.
செல்: 94871 68174